புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_m10 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:44 am

 வாஸ்கோடகாமாவின் வெறியாட்டம்! SGDJaX8TEu5kvIIAkUu6+p30a

இத்தனை நாட்களாகக் கனவு கண்ட இந்தியா​வைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் குதித்தார் வாஸ்​கோடகாமா. அது, கண்ணனூர் என்னும் காலிகட் துறைமுகம் அருகில் இருக்கிறது என்று அறிந்துகொண்டார். காலிகட் மன்னர் சாமோரினை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பாவ்லோவையும் கறுப்பு மூர் ஒருவனையும் அனுப்பிவைத்தார். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்ட மன்னர், அவர்கள் அரபு உள​வாளிகள் என்று சந்தேகித்தார். வாஸ்கோடகாமாவே அரண்​மனைக்குச் சென்றார். அவரை யாரும் வரவேற்கவில்லை. போர்த்துக்கீசிய மன்னரிடம் இருந்து கடிதம் கொண்டுவந்து இருப்​பதாகச் சொன்னார் வாஸ்கோடகாமா. அதன்பிறகு​தான், மன்னரைச் சந்திக்க ஏற்பாடு ஆனது. மன்னருக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டும். ஆசனத்தில் உட்காரக் கூடாது. கை நீட்டிப் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா.

சாமோரின் மன்னர், வாஸ்கோடகாமாவை வரவேற்று போர்ச்சுக்கல் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அரண்மனையின் அறை ஒன்றில் தங்கி இருக்க வாஸ்கோடகாமாவுக்கு உத்தரவு இட்டார் மன்னர். இதற்கிடையில், போர்த்துக்கீசியர்கள் மன்னருக்கு எதிராக சதி செய்ய வந்தவர்கள் என்று மன்னரை நம்பவைத்து, வாஸ்கோடகாமாவைக் கைது செய்ய ரகசிய ஏற்பாடு நடந்தது. எதிர்பாராமல் வாஸ்கோடகாமா கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கப்பல்கள் சிறைப்பிடிக்கப்​பட்டன.

தாங்கள் உளவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வாஸ்கோடகாமா போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில், மூன்று கப்பல்களும் உடனே கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்யப்பட்டார் வாஸ்கோடகாமா. அந்த அவமானம் அவருக்குள் ஆறாத வடு போல் உறைந்தது.

அந்தக் கடல் பயணத்தில்தான் அவர்கள் கோவாவை அடைந்தனர். அங்கே, உள்நாட்டுப் பிரச்னை தலைதூக்கி இருப்பதை அறிந்து, அதை தாங்கள் தலையிட்டு முடிப்பதாக நுழைந்த வாஸ்கோடகாமா, கோவாவைத் தன் வசமாக்கிக்கொண்டார். இந்தியாவில் போர்த்துக்கீசியர்களுக்கான அடித்தளமாக கோவா உருவாக்கப்பட்டது. நாடு திரும்பலாம் என்று முடிவு செய்த வாஸ்கோடகாமா, நிறையப் பொன்னும் வெள்ளியும் வாசனைத் திரவியங்களும் கப்பலில் ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்கல் கிளம்பினார். நோயுற்ற வாஸ்கோடகாமாவின் சகோதரன் பாவ்லோ நடுக்கடலில் இறந்துபோனான்.

1499-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வாஸ்கோடகாமாவின் கப்பல், லிஸ்பன் நகரை அடைந்தது. வெற்றிகரமாகத் திரும்பி வந்த கப்பல்களை அரசரே முன்னின்று வரவேற்றார். அவரோடு துணைக்குச் சென்ற 150 பேரில் 50-க்கும் குறைவானவர்களே நாடு திரும்பினர். மற்றவர்கள், வழியிலேயே இறந்துபோய் கடலில் வீசி எறியப்பட்டு இருந்தனர். வாஸ்கோடகாமாவுக்கு 'டான்’ பட்டம் அளிக்கப்பட்டதோடு, பணமும் பதவியும் அவரது தலைமுறைக்குத் தரப்பட வேண்டிய கௌவரமும் அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான கடல் வழி பற்றிய வரைபடத்தைப் பார்த்த மேனுவல் மன்னர், உலகமே இனி தன் கையில் என்று துள்ளிக் குதித்தார். அடுத்த கடல் பயணத்துக்கு உத்தரவிட்டார்.

1501-ல் புறப்பட்ட இந்தப் பயணத்தில் வாஸ்கோடகாமா செல்லவில்லை. அந்தக் கப்பலுக்குக் கேப்டனாக பெத்ரோ அல்வாரஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். 1502-ல் தனது இரண்டாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை 13 கப்பல்கள், 5 துணைக் கப்பல்கள், நிறைய ஆயுதங்கள், போர் வீரர்கள் என்று யுத்தக் களத்துக்குச் செல்வது போல சென்றார். கடலில் எதிர்ப்பட்ட வணிகக் கப்பல்களைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளை அடித்தார். இந்தக் கடற்பயணம் பழிதீர்க்கும் யாத்திரை போலவே இருந்தது. தன்னை அவமதித்த சாமோரின் அரசனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, பீரங்கி மூலம் காலிகட் நகரைத் தரைமட்டமாக்கி ஊரையே கொள்ளை அடித்தார் வாஸ்கோடகாமா. காலிகட் நகரம் இயங்கும் என்று உத்தரவிட்ட வாஸ்கோடகாமா, மன்னரின் செல்வங்கள் மற்றும் முக்கிய வணிகர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்.

கோவாவில் தனது பிரதிநிதிகளை நியமித்து விட்டு, பெரும் செல்வத்துடன் லிஸ்பன் திரும்பினார் வாஸ்கோடகாமா. இரண்டாவது கடற்பயணத்தில் அவர் ஒரு கடற்கொள்ளையனைப் போல நடந்துகொண்டார். போர்த்துக்கீசியர்களின் கையில் இந்தியாவின் வணிகம் ஏகபோகம் ஆகத் தொடங்கியது. வாஸ்கோடகாமா, கடல் வாழ்வில் இருந்து ஒதுங்கி வசதியான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிரபு போல செல்வாக்கோடு வாழத் தொடங்கினார். ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

இந்தியாவின் வைஸ்ராயாக வாஸ்கோடகாமா நியமிக்கப்பட்டார். புதிய கௌரவத்துடன் 1524-ம் ஆண்டு தனது 56-வது வயதில் 14 பெரிய கப்பல்களில் 3,000 போர் வீரர்களுடன் தனது மூன்றாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை, அவரது இரண்டாவது பிள்ளை எஸ்தவான், மூன்றாவது மகன் பவுலோ இருவரும் உடன் சென்றனர். கோவாவுக்கு வந்து, பதவி ஏற்றுக்கொண்ட வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். தன்னை அவமதித்த ராஜ்ஜியத்தை அடக்கி ஒடுக்கிய சந்தோஷத்துடன், தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுத்தார். மறைமுகமாக அவரை எதிர்த்த எதிரிகளை ஒழித்துக் கட்டியதோடு, வாசனைத் திரவியங்களின் மொத்த வணிகமும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுடன் செயல்படத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராமல் கழுத்தைச் சுற்றிக் கொப்பளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். படுக்கையில் வீழ்ந்த வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கொச்சியில் மரணம் அடைந்தார். எந்த இந்தியாவைக் காண வேண்டும் எனத் துடிப்புடன் கடல்பயணம் செய்தாரோ, அதே இந்தியாவில் அவர் இறந்துபோனார். அவரது உடல் உரிய கௌரவத்துடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த உடலின் மிச்சம், 1880-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஜாதிய ஒடுக்குமுறை, அதிகாரத் துஷ்பிரேயோகம், மதச் சண்டை ஆகியவற்றால் இந்தியா பிளவுபட்டு இருப்பதை, வாஸ்கோடகாமா சரியாக உணர்ந்து கொண்டார். அந்தப் பிரச்னைகளைத் தனக்குச் சாதமாக்கிக்கொண்டு இந்தியாவை தனது பிடிக்குள் எளிதாகக் கொண்டு வர அவரால் முடிந்தது.

மிளகு மற்றும் சந்தனம் உள்ளிட்ட பொருட் களுக்காகத் தொடங்கிய கடல் பயணம், நாடு பிடிக்கும் சண்டையாக மாறியதே வரலாறு. இதில், அதிக இழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது இந்தியாதான்.

கடந்த 300 ஆண்டுகளுக்குள் போர்த்துக்கீசியரும் பிரெஞ்சு, டச்சுக்காரர்களும், கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியாவின் இயற்கை வளங்களையும், தங்கம், வெள்ளி, வைரங்களையும் கொள்ளையிட்டு, கப்பல் கப்பலாகக் கொண்டுசென்றனர். இந்தியா திட்டமிட்டு வறுமை நாடாக உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்துவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை வணிகம். இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் காலத்தால் மாறாத உண்மை.

ஏதேதோ பெரும் கனவுகளுடன் வந்த வாஸ்கோடகாமா இந்தியாவின் வைஸ்ராயாக ஆட்சி செய்தது எவ்வளவு காலம் தெரியுமா? மூன்றே மாதங்கள்தான். அலை போல எழுவதும் வீழ்வதுமான இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை, வாஸ்கோடகாமாவுக்கு கடல் நிச்சயம் உணர்த்தி இருக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக