புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:21

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
132 Posts - 55%
heezulia
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
9 Posts - 4%
prajai
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_m10 அழகர் விழாவுக்கு 1000 வயது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் விழாவுக்கு 1000 வயது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 29 Apr 2014 - 6:54



"அழகர் மலை', சங்க இலக்கியம் முதல் இன்றைய அறிஞர் பெருமக்கள் வரை இதன் சிறப்பை பலவாறாகப் பெருமைபட பாடி வைத்துள்ளனர். மதுரைக்கு வடக்கே 21.கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அழகர்மலை. இங்குள்ள கோயிலின் பெயராலேயே இவ்வூர், "அழகர்கோவில்' என அழைக்கப்படுவது தனித்துவமிக்கது.

அந்த மலை கடல் மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16,838 ஏக்கர் பரப்பளவில், பசுமை மிக்க சோலைகளாய் விரிந்து, ஆண்டு முழுவதும் ரம்யமாய் காட்சியளிக்கிறது. சங்க இலக்கியமான பரிபாடலில் இளம் பெருவழுதி, இத்தலத்தை " இருங்குன்றம்' என்றும், திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் "பழமுதிர்சோலை' என்றும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "திருமால் குன்றம்' என்றும், மகாபாரதத்தில் வியாசமுனிவர், "விருஷபாத்ரி' என்றும், ஆழ்வார்களின் பாசுரங்களில் "திருமாலிருஞ்சோலை' என்றும் வெவ்வேறு பெயர்களால் பாடி வைக்கப்பட்ட பெருமை இம்மலைக்கு உண்டு.

இதன் உச்சியில் "இராக்காயி அம்மன்' கோயில் உள்ளது. இங்கு உற்பத்தி ஆகும் நதி "சிலம்பாறு' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இதனை, "நூபுர கங்கை' என்று பாடி வைத்தார். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் சிறப்புமிக்க தலமாக இந்த அழகர்கோயில் திகழ்ந்துவருகிறது.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இம்மலையில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்ததற்குச் சான்றாக, இம்மலையின் கீழ்க்கோடியில் தெற்குச் சரிவில் இயற்கையாக அமைந்திருக்கும் குகை தளத்தில் கல் படுக்கைகளும், "தமிழ் பிராமி' எழுத்தில் அமைந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா ஒன்பது நாட்கள் "சித்ரா பௌர்ணமி விழா' எனக் கொண்டாடப்படுகிறது. ஊர் முழுக்க வேடிக்கை, பந்தல், ஆட்டம், பாட்டம் என இந்த விழாவையொட்டி ஊரே களைகட்டியிருக்கும். இதனை ராஜராஜ சோழன் (காலம் கி.பி. 1011) கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

அழகர் கோயில் ஏழு பிராகாரங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய அளவிலானது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள முதல் பிராகார மேற்குச் சுவரின் வெளிப்பக்கமாகக் காணப்படும் ஒரு பழைமையான கல்வெட்டு பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (காலம் கி.பி.1192) காலத்தைச் சேர்ந்ததாகும்.

ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சித்ரா பௌர்ணமி தினத்தன்று அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. மதுரையில் நாயக்க வம்ச ஆட்சி வரும் வரை அழகர் கோயிலிலிருந்து கிளம்பும் சுந்தர்ராஜப் பெருமாள் அலங்காநல்லூர், சம்பகுளம், வயலூர், விட்டங்குளம் வழியாக தேனூர் சென்று அங்குள்ள வைகையாற்றில் எழுந்தருள்வதும், பின்னர் அங்கிருந்து வண்டியூர் சென்று தங்கியிருந்து அழகர் மலைக்குத் திரும்புவதுமே தொன்று தொட்டு வரும் வழக்கமாக நீடித்திருந்தது.

மேலும், மதுரை மீனாட்சி- சொக்கநாதர் திருக்கல்யாண வைபவமும், அதனையடுத்து தேரோட்டமும் காலம் காலமாக மாசிமாதத்தில்தான் நடைபெற்று வந்தன. தைமாதம் மக நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி மாசி மகவிழா 48 நாட்கள் நடைபெறும். திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை இந்த விழாவின்போதுதான் மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நிகழ்ந்தன.

இந்த இருவிழாக்களும் முதன்முதலாக மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் (காலம் கி.பி.1623 - 1659) மாற்றி அமைக்கப்பட்டு சைவ, வைணவ விழாக்கள் ஒன்றாகச் சங்கமித்து ஒற்றுமை வேரூன்ற வழிவகுக்கப்பட்டது. அதன்படி தொன்றுதொட்டு மாசிமாதம் நடந்து வந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் சித்திரை மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. அதுபோல கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக தேனூர் செல்வதை மாற்றி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மூணுமாவடி,தல்லாகுளம், ஆழ்வார்புரம் வழியாக வைகையாற்றில் இறங்கும் விழாவாகப் பயணப்பாதை மாற்றியமைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இவ்விழாக்கள் ஒருங்கிணைந்த "சித்திரைத் திருவிழா'வாக மதுரை மாநகரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுந்தர்ராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படும் முன்னரே அழகர் கோயிலில் திருவிழா துவங்கிவிடும். அதன் தொடர்ச்சியாக, நான்காம் திருவிழா நாளான்று கொண்டப்ப நாயக்கன் மண்டபத்திலிருந்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்படுவார்.

வைகையில் இறங்குவதற்கு முன்பும், பின்பும் ஏராளமான திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து தரிசனம் தந்த பின் ஒன்பதாம் திருவிழா நாளான்று மறுபடியும் மலைக்கு அழகர் திரும்பி விடுவார்.

வழக்கம் போல், இந்த ஆண்டும் எதிர்வரும் 14.05.2014 ஆம் நாள் புதன்கிழமை சித்திரை பௌர்ணமி தினத்தில் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் காலை இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வரை வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று அழகரின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்ந்திருப்பர்.

இராஜகோபுர வாசலில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சந்நிதானம் உள்ளது. இவரே அழகரின் காவல் தெய்வம். இந்த சுவாமிக்கு உருவ வழிபாடு என தனியாக இல்லாமல், கோபுர வாசல் நிலைக்கதவுகளையே சந்தனம் சாத்தி வழிபட்டுவருகின்றனர். இந்த சந்நிதியில் பொய் சாட்சியம் சொல்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இதனால் இவ் வட்டாரத்தில் பல சிக்கலான வழக்குகளைக்கூட இந்த சந்நிதி முன்பு பேசித் தீர்த்துக் கொள்கின்றனர்.

கோயில் கருவறை பிரணவ வடிவில் வட்ட வடிவில் எழிலான கோலத்தில் அமைந்துள்ளதை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருவறையைச் சுற்றி ஏழு கல் சாளரங்கள் அமைத்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் அதி அற்புதமான சிற்ப வேலைப்பாடமைந்த கலைச்சின்னங்களாகக் காட்சி அளிக்கின்றன.

கருவறையை அடுத்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த மகா மண்டபம் ""முனையதரையன் மண்டபம்'' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இம் மண்டப சிற்ப வேலைப்பாடுகள் காலங்கள் கடந்தும் பேர் சொல்லி நிற்கும் நுட்பமானவை.

மூன்றாம் பிரகார திருப்பணிகள் திருமலை நாயக்கர் (காலம் கி.பி. 1623 - 1659) காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. அவரது காலத்தில் திருப்பணி நடைபெறும் இடங்களில் தவறாமல் அவரது முழு உருவச் சிலையை தமது தேவியருடன் அமைக்கிற வழக்கம் அவரால் கடைப்பிடிக்கப்பட்ட மரபாகும். அதன்படி இப்பிரகாரத்தில் நான்கு இடங்களில் அவரது உருவச் சிலைகள் அமைந்துள்ளன. அழகர் கோயிலின் கட்டடக் கலையும், சிற்ப வேலைப்பாடுகளும் உலகத் தரத்தில் அமைந்தவை.

[thanks] வெ.கணேசன் @ தினமணி [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக