புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10கோயிலுக்குக் காவல் யார்? Poll_m10கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10 
42 Posts - 63%
heezulia
கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10கோயிலுக்குக் காவல் யார்? Poll_m10கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10கோயிலுக்குக் காவல் யார்? Poll_m10கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10கோயிலுக்குக் காவல் யார்? Poll_m10கோயிலுக்குக் காவல் யார்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலுக்குக் காவல் யார்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 3:48 pm



கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி ஆலயம், மறுபடியும் பரபரப்புச் செய்திகளில் அடிபடுகிறது. ஆலயத்தின் ரகசிய அறைகளில் ஆண்டாண்டு காலமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நகைகள்குறித்த வழக்கில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ‘அமிகுஸ் கூரியாஸ்' (நீதிமன்ற ஆலோசகர்), விலைமதிப்பு மிக்க நகைகள், கலைப்பொருள்கள் களவாடப்பட்டிருப்பதாகவும், நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் காணப்படுவதாகவும் அறிக்கை அளித்திருக்கிறார். இது தொடர்பாக, ஆலய நிர்வாகமும் கேரள அரசும் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் பணித்திருக்கிறது.

பத்மநாப சுவாமி கோயிலை யார் நிர்வகிக்க வேண்டும் என்ற விவாதம் பொது அரங்கில் நடைபெறத் தொடங்கிவிட்டது. ஆலய நகைகளின் மதிப்பை அறிந்துகொள்வதற்காக 2011-ல் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றமே நியமித்தது. அந்தக் குழுதான் மொத்தம் ஆறு அறைகளில் இருந்த நகைகளில் ஐந்து அறை நகைகளைத் திறந்துபார்த்து மதிப்பிட்டது. ஆறாவது அறை திறக்கப்படுவது நல்லதல்ல என்று பிரஸ்னம் கூறியதால், அது திறக்கப்படவில்லை.

2012-ல் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை நீதிமன்ற ஆலோசகராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இப்போதைய நிர்வாகக் குழுவுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகக் குழுவை நியமிக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.

ஆலயத்தின் நகைகளையும் அரிய கலைப்பொருள்களையும் பாதுகாப்பாக எப்படி வைத்திருப்பது என்பது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு மட்டுமல்ல, நாட்டின் எல்லாக் கோயில்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. சில ஆண்டுகளுக்கு முன்னால், திருப்பதி வேங்கடேஸ்வரர் ஆலய நகைகள்குறித்தும் இதே போல ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போதுதான், ஆலயத்தின் நகைகளைக் கணக்கெடுத்துப் பதிவுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயில்களுக்கு வரும் வருமானத்தையும் காணிக்கையையும் வரவில் வைக்காமல் மறைப்பது, ஆலயத்தின் சொத்துகளி லிருந்து வர வேண்டிய வாடகை, வட்டி போன்றவற்றை வசூலிக் காமல் மெத்தனம் காட்டுவது, திருட்டுகளுக்குத் துணைபோவது என்று ஆலயத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தவறுகளைச் செய் கின்றனர். அரசும் நீதித் துறையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கோயிலின் பூஜை, சம்பிரதாயங்களில் அரசு தலையிட முடியாதுதான். ஆனால், வரவு - செலவுக் கணக்கை முறையாக எழுத வேண்டும்; கோயிலின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசு சொல்வதிலும், கோயில் நகைகளையும் சொத்துகளையும் சூறையாட அனுமதிக்கக் கூடாது என்று தடுப்பதிலும் தவறேதும் இல்லை.

இந்தியாவை விடக் குறுகிய கால பாரம்பரியத்தைக் கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகள், தங்கள் கலாச்சாரப் பெருமைகளைப் பாதுகாக்கும் விதங்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பத்மநாப சுவாமி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களின் சொத்துகளைக் காப்பதற்கு முறையான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியம். அதைவிட முக்கியமானது, இதுபோன்ற பாரம்பரியச் சொத்துகளைப் பாதுகாப்பதில் நமக்கு உள்ள அக்கறைதான்.


[thanks] தி இந்து [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக