புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 1 of 15 •
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
மரடோனா ஆவாரா மெஸ்ஸி?- உலகக் கோப்பை கால்பந்து அலசல்
2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணிதான் சாம்பியன் ஆகும் என்று கருதப்படும் சூழ்நிலையில் நாம் அர்ஜெண்டீனா அணியை மறந்து விடலாகாது.
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டீனா அணியில் இந்த முறையும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.
எஃப் பிரிவில் அர்ஜெண்டீனாவுடன் ஈரான், நைஜீரியா, மற்றும் புதிதாக தகுதி பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா ஆகிய அணிகள் உள்ளன. இதில் போஸ்னியா-ஹெர்செகோவினா அணி பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டதாகவே உலகக் கோப்பை கால்பந்து அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணி 1978, 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது. ஆனால் குரூப் மட்டத்தைத் தாண்டிச் சென்றதில்லை.
நைஜீரியா அணி 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் 2002 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முதல் நிலையைக் கடக்க முடியாமல் வெளியேறியது.
ஆகவே இந்தப் பிரிவில் அர்ஜெண்டீனா அணி மீதே அனைவரது கவனமும் உள்ளது. நட்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்ஸி, ஏஞ்செல் டி மரியா, செர்ஜியோ அகிரோ, மற்றும் கொன்சாலோ ஹிகுவைன் ஆகியோர் உள்ளனர்.
2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா மோசமாக ஆடிய பிறகே பயிற்சியாளர் பேடிஸ்டாவிடமிருந்து பொறுப்புகளைப் பெற்ற அலெயாண்ட்ரோ சபெல்லா அணிக்கு ஒரு ஸ்திரத் தன்மையை கொடுத்திருக்கிறார்.
இவர் செய்த பெரிய விஷயம் என்னவெனில் வந்தவுடன் மெஸ்ஸியை கேப்டனாக்கினார். சபெல்லா பொறுப்பேற்கும் முன்னர் 16 போட்டிகளில் ஒன்றுமே செய்யாத மெஸ்ஸி அதன் பிறகு 21 ஆட்டங்களில் 20 கோல்களை அடித்து பார்முக்கு வந்துள்ளார்.
பார்சிலோனா அணிக்காக சாம்பியன்ஸ் லீகில் ஆடும் மெஸ்ஸி அங்கு ஆடும் ஆட்டத்திறனை தன் சொந்த அணிக்கு ஆடும்போது வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த முறை 1986ஆம் ஆண்டு மரடோனா செய்ததை மெஸ்ஸி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
களத்தில் 5 வீரர்கள் முன்களத்திலும் 3 வீரர்கள் நடுக்களத்திலும் 2 வீரர்கள் பேக்கி நிலையிலும் ஆடவைக்கப்படும் பாரம்பரிய கால்பந்து உத்தி முறையையே சபெல்லா கடைபிடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்தும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராக டீகோ மரடோனா இருந்தார். ஆனாலும் அவரால் அணியை ஒருமுகப்படுத்தி கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0- 4 என்று படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. ஆகவே இந்த முறை எப்படியும் அரையிறுதி வரை முன்னேறி ஆட்டத்தை மேலும் மேம்படுத்தினால் 3வது உலகக் கோப்பையை அர்ஜெண்டீனா வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. இது இந்த அணிக்கு முதல் உலகக் கோப்பை. ஆனாலும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இவர்கள் கலக்கிய கலக்கு பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 30 கோல்களை அடித்துள்ள இந்த அணி வெறும் 6 கோல்களையே வாங்கியுள்ளது. உண்மையில் கிரீஸ் அணிதான் தகுதி பெற்றிருக்கவேண்டும், இந்த அணியும் கிரீஸ் அணியும் ஒரே புள்ளிகள்தான் ஆனால் கோல் வித்தியாச அடிப்படையில் போஸ்னியா-ஹெர்செகோவினா தகுதி பெற்றது. இந்த அணியின் மிக முக்கிய வீரர் சீகோ (Zeko) இவர் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர். போஸ்னியா-ஹெர்செகோவினா அணிக்கு சீகோ 35 கோல்களை அடித்துள்ளார். அதில் 10 கோல்கள் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகளில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியின் கோல் கீப்பர் அஸ்மிர் பெகோவிச் மிகப்பெரிய கோல் கீப்பர் என்று கருதப்படுபவர்.
இந்தப் பிரிவிலிருந்தும் 2014 உலகக் கோப்பை கால்பந்து விறுவிறுப்பான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்
2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணிதான் சாம்பியன் ஆகும் என்று கருதப்படும் சூழ்நிலையில் நாம் அர்ஜெண்டீனா அணியை மறந்து விடலாகாது.
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டீனா அணியில் இந்த முறையும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.
எஃப் பிரிவில் அர்ஜெண்டீனாவுடன் ஈரான், நைஜீரியா, மற்றும் புதிதாக தகுதி பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா ஆகிய அணிகள் உள்ளன. இதில் போஸ்னியா-ஹெர்செகோவினா அணி பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டதாகவே உலகக் கோப்பை கால்பந்து அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணி 1978, 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது. ஆனால் குரூப் மட்டத்தைத் தாண்டிச் சென்றதில்லை.
நைஜீரியா அணி 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் 2002 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முதல் நிலையைக் கடக்க முடியாமல் வெளியேறியது.
ஆகவே இந்தப் பிரிவில் அர்ஜெண்டீனா அணி மீதே அனைவரது கவனமும் உள்ளது. நட்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்ஸி, ஏஞ்செல் டி மரியா, செர்ஜியோ அகிரோ, மற்றும் கொன்சாலோ ஹிகுவைன் ஆகியோர் உள்ளனர்.
2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா மோசமாக ஆடிய பிறகே பயிற்சியாளர் பேடிஸ்டாவிடமிருந்து பொறுப்புகளைப் பெற்ற அலெயாண்ட்ரோ சபெல்லா அணிக்கு ஒரு ஸ்திரத் தன்மையை கொடுத்திருக்கிறார்.
இவர் செய்த பெரிய விஷயம் என்னவெனில் வந்தவுடன் மெஸ்ஸியை கேப்டனாக்கினார். சபெல்லா பொறுப்பேற்கும் முன்னர் 16 போட்டிகளில் ஒன்றுமே செய்யாத மெஸ்ஸி அதன் பிறகு 21 ஆட்டங்களில் 20 கோல்களை அடித்து பார்முக்கு வந்துள்ளார்.
பார்சிலோனா அணிக்காக சாம்பியன்ஸ் லீகில் ஆடும் மெஸ்ஸி அங்கு ஆடும் ஆட்டத்திறனை தன் சொந்த அணிக்கு ஆடும்போது வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த முறை 1986ஆம் ஆண்டு மரடோனா செய்ததை மெஸ்ஸி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
களத்தில் 5 வீரர்கள் முன்களத்திலும் 3 வீரர்கள் நடுக்களத்திலும் 2 வீரர்கள் பேக்கி நிலையிலும் ஆடவைக்கப்படும் பாரம்பரிய கால்பந்து உத்தி முறையையே சபெல்லா கடைபிடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்தும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராக டீகோ மரடோனா இருந்தார். ஆனாலும் அவரால் அணியை ஒருமுகப்படுத்தி கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0- 4 என்று படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. ஆகவே இந்த முறை எப்படியும் அரையிறுதி வரை முன்னேறி ஆட்டத்தை மேலும் மேம்படுத்தினால் 3வது உலகக் கோப்பையை அர்ஜெண்டீனா வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. இது இந்த அணிக்கு முதல் உலகக் கோப்பை. ஆனாலும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இவர்கள் கலக்கிய கலக்கு பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 30 கோல்களை அடித்துள்ள இந்த அணி வெறும் 6 கோல்களையே வாங்கியுள்ளது. உண்மையில் கிரீஸ் அணிதான் தகுதி பெற்றிருக்கவேண்டும், இந்த அணியும் கிரீஸ் அணியும் ஒரே புள்ளிகள்தான் ஆனால் கோல் வித்தியாச அடிப்படையில் போஸ்னியா-ஹெர்செகோவினா தகுதி பெற்றது. இந்த அணியின் மிக முக்கிய வீரர் சீகோ (Zeko) இவர் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர். போஸ்னியா-ஹெர்செகோவினா அணிக்கு சீகோ 35 கோல்களை அடித்துள்ளார். அதில் 10 கோல்கள் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகளில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியின் கோல் கீப்பர் அஸ்மிர் பெகோவிச் மிகப்பெரிய கோல் கீப்பர் என்று கருதப்படுபவர்.
இந்தப் பிரிவிலிருந்தும் 2014 உலகக் கோப்பை கால்பந்து விறுவிறுப்பான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகப் போருக்கு பிறகு உருகுவே சாம்பியன்
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. போர் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்தப்பட்டது. ஐரோப்பா கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் உலகப் போரால் பெரும் நாசம் ஏற்பட்டதன் காரணமாக 1950 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரால் இரு உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கால்பந்து ஆர்வலர்கள் மிகுந்த நாடான பிரேசிலில் உலகக் கோப்பையை நடத்தும்போது அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் நம்பியதும் அங்கு போட்டியை நடத்தியற்கு காரணம் ஆகும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தொடர்ச்சியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஜுலியஸ் ரிமெட்டை கௌரவிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பைக்கு ஜூலியஸ் ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.
பிரிட்டன் அணிகள் பங்கேற்பு
இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக பிரிட்டனில் இருந்து அணிகள் பங்கேற்றன. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான உருகுவே ஐரோப்பாவில் நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்த நிலையில், தென் அமெரிக்க கண்டத்துக்கு மீண்டும் உலகக் கோப்பை வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பங்கேற்றது.
இந்தியா விலகல்
போட்டிக்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானித்தல்) இறுதி செய்யப்பட்ட பிறகு சில அணிகள் விலகின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் வெறும் காலோடு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதி மறுத்ததால், இந்தியா போட்டியிலிருந்து விலகியது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் 4 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாகும்.
முந்தைய உலகக் கோப்பையில் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், நிதி திரட்டுவதற்காகவும், போட்டியில் பங்கேற்கும் எல்லாஅணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து 0-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைய, அதன் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த ஸ்பெயின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
உருகுவே 8-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. அந்த ஆட்டத்தில் உருகுவேயின் ஷியாப்பினோ 4 கோல்களை அடித்தார். மற்ற இரு பிரிவுகளிலிருந்து ஸ்வீடன், பிரேசில் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்த உருகுவே, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்தது. அதேநேரத்தில் பிரேசில் 7-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும், 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் வீழ்த்தியது. இதனால் பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.
உருகுவே சாம்பியன்
இந்தப் போட்டியில் பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் உருகுவே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில், பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் பிரைகா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கோலடித்து ஸ்கோரை சமன் செய்த உருகுவே, மேலும் ஒரு கோலை போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
2 லட்சம் ரசிகர்கள்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள எஸ்டாடியா டூ மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் சாம்பியனாகும் என்ற கனவோடு சுமார் 2 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரேசில் தோல்வி கண்டது அந்நாட்டு ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதன்மூலம் 2-வது முறையாக கோப்பையை வென்ற உருகுவே, பங்கேற்ற இரு போட்டிகளிலும் கோப்பையை வென்றஒரே அணி என்ற பெருமையைப் பெற்றது.
உருகுவேயின் நாயகன்
1950-ல் உருகுவே அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அந்த அணியின் ‘இன்சைடு’ ஸ்டிரைக்கரான ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோதான். 1925-ல் உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் பிறந்த ஷியாபினோ, தனது 17-வது வயதில் பெனாரோல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். 19-வது வயதில் உருகுவே அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
இவரால் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களைக் கொண்டுள்ள அணிகளுக்கு எதிராக கோலடிக்க முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கிய ஷியாபினோ 1950-களில் தலைசிறந்த ‘இன்சைடு’ ஸ்டிரைக்கர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1950 உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, இறுதியாட்டத்தில் உருகுவே அணி பின்தங்கியிருந்தபோது சமநிலையை எட்டுவதற்கான கோலையும் அடித்து வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தார்.
1954 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஷியாபினோ, ஹங்கேரிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் காயமடைய, உருகுவே அணி தோல்வி கண்டது. இதன்பிறகு ஏசி மிலன் அணிக்கு விளையாடுவதற்காக 72 ஆயிரம் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்த 6 மாதங்களில் இத்தாலி அணிக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஷியாபினோ, ஏசி மிலன் அணி இத்தாலி லீக்கில் 3 முறை பட்டம் வெல்லவும், 1958 ஐரோப்பிய கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவும் முக்கியக் காரணமாக இருந்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
உலகக் கோப்பை வரலாற்றில் 1970 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அந்த இரு உலகக் கோப்பைகளிலும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை. இதேபோல் 1930-ல் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவேயும், 1938-ல் கோப்பையை வென்ற இத்தாலியும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை.
1950 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 22
மொத்த கோல்கள் - 88
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4
ரெட் கார்டு - 0
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 13,37,000
டாப் ஸ்கோர்
அடீமிர் (பிரேசில்) - 9 கோல்கள்
ஜுவான் ஷியாபினோ (உருகுவே) - 5 கோல்கள்
எஸ்டானிஸ்லாவ் (ஸ்பெயின்) - 5 கோல்கள்
சிகோ (பிரேசில்) - 4 கோல்கள்
டெல்மோ ஜாரா (ஸ்பெயின்) - 4 கோல்கள்
ஒமர் மிகெஸ் (உருகுவே) - 4 கோல்கள்
அல்சிடெஸ் ஜிக்கியா (உருகுவே) - 4 கோல்கள்
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. போர் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்தப்பட்டது. ஐரோப்பா கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் உலகப் போரால் பெரும் நாசம் ஏற்பட்டதன் காரணமாக 1950 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரால் இரு உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கால்பந்து ஆர்வலர்கள் மிகுந்த நாடான பிரேசிலில் உலகக் கோப்பையை நடத்தும்போது அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் நம்பியதும் அங்கு போட்டியை நடத்தியற்கு காரணம் ஆகும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தொடர்ச்சியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஜுலியஸ் ரிமெட்டை கௌரவிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பைக்கு ஜூலியஸ் ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.
பிரிட்டன் அணிகள் பங்கேற்பு
இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக பிரிட்டனில் இருந்து அணிகள் பங்கேற்றன. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான உருகுவே ஐரோப்பாவில் நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்த நிலையில், தென் அமெரிக்க கண்டத்துக்கு மீண்டும் உலகக் கோப்பை வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பங்கேற்றது.
இந்தியா விலகல்
போட்டிக்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானித்தல்) இறுதி செய்யப்பட்ட பிறகு சில அணிகள் விலகின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் வெறும் காலோடு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதி மறுத்ததால், இந்தியா போட்டியிலிருந்து விலகியது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் 4 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாகும்.
முந்தைய உலகக் கோப்பையில் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், நிதி திரட்டுவதற்காகவும், போட்டியில் பங்கேற்கும் எல்லாஅணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து 0-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைய, அதன் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த ஸ்பெயின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
உருகுவே 8-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. அந்த ஆட்டத்தில் உருகுவேயின் ஷியாப்பினோ 4 கோல்களை அடித்தார். மற்ற இரு பிரிவுகளிலிருந்து ஸ்வீடன், பிரேசில் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்த உருகுவே, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்தது. அதேநேரத்தில் பிரேசில் 7-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும், 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் வீழ்த்தியது. இதனால் பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.
உருகுவே சாம்பியன்
இந்தப் போட்டியில் பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் உருகுவே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில், பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் பிரைகா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கோலடித்து ஸ்கோரை சமன் செய்த உருகுவே, மேலும் ஒரு கோலை போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
2 லட்சம் ரசிகர்கள்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள எஸ்டாடியா டூ மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் சாம்பியனாகும் என்ற கனவோடு சுமார் 2 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரேசில் தோல்வி கண்டது அந்நாட்டு ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதன்மூலம் 2-வது முறையாக கோப்பையை வென்ற உருகுவே, பங்கேற்ற இரு போட்டிகளிலும் கோப்பையை வென்றஒரே அணி என்ற பெருமையைப் பெற்றது.
உருகுவேயின் நாயகன்
1950-ல் உருகுவே அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அந்த அணியின் ‘இன்சைடு’ ஸ்டிரைக்கரான ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோதான். 1925-ல் உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் பிறந்த ஷியாபினோ, தனது 17-வது வயதில் பெனாரோல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். 19-வது வயதில் உருகுவே அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
இவரால் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களைக் கொண்டுள்ள அணிகளுக்கு எதிராக கோலடிக்க முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கிய ஷியாபினோ 1950-களில் தலைசிறந்த ‘இன்சைடு’ ஸ்டிரைக்கர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1950 உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, இறுதியாட்டத்தில் உருகுவே அணி பின்தங்கியிருந்தபோது சமநிலையை எட்டுவதற்கான கோலையும் அடித்து வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தார்.
1954 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஷியாபினோ, ஹங்கேரிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் காயமடைய, உருகுவே அணி தோல்வி கண்டது. இதன்பிறகு ஏசி மிலன் அணிக்கு விளையாடுவதற்காக 72 ஆயிரம் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்த 6 மாதங்களில் இத்தாலி அணிக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஷியாபினோ, ஏசி மிலன் அணி இத்தாலி லீக்கில் 3 முறை பட்டம் வெல்லவும், 1958 ஐரோப்பிய கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவும் முக்கியக் காரணமாக இருந்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
உலகக் கோப்பை வரலாற்றில் 1970 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அந்த இரு உலகக் கோப்பைகளிலும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை. இதேபோல் 1930-ல் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவேயும், 1938-ல் கோப்பையை வென்ற இத்தாலியும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை.
1950 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 22
மொத்த கோல்கள் - 88
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4
ரெட் கார்டு - 0
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 13,37,000
டாப் ஸ்கோர்
அடீமிர் (பிரேசில்) - 9 கோல்கள்
ஜுவான் ஷியாபினோ (உருகுவே) - 5 கோல்கள்
எஸ்டானிஸ்லாவ் (ஸ்பெயின்) - 5 கோல்கள்
சிகோ (பிரேசில்) - 4 கோல்கள்
டெல்மோ ஜாரா (ஸ்பெயின்) - 4 கோல்கள்
ஒமர் மிகெஸ் (உருகுவே) - 4 கோல்கள்
அல்சிடெஸ் ஜிக்கியா (உருகுவே) - 4 கோல்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரேசிலுக்கு எதிராகக் கோலடிக்கிரார் உருகுவே ஸ்டிரைக்கர் ஷியாபினோ.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
1950 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை குறிக்கும் வகையில் ரியோ டி ஜெனிரோவில் வரையப்பட்ட ஓவியம் குறித்து விளக்கம் அளிக்கிறார் அதனை வரைந்த ஓவியர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பையை தக்கவைத்தது இத்தாலி
3-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1938-ம் ஆண்டு ஜூன் 4 முதல் 19 வரை பிரான்ஸில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பா கண்டத்துக்கு வழங்கியதால் கோபமடைந்த தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும், ஆர்ஜென்டீனாவும் போட்டியை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக ஸ்பெயின் அணி பங்கேற்கவில்லை.
நடப்பு சாம்பியன் இத்தாலிக்கும், போட்டியை நடத்திய பிரான்ஸுக்கும் நேரடித்தகுதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 அணிகளில் ஐரோப்பாவில் இருந்து 11 அணிகளும், அமெரிக்க கண்டத்திலிருந்து பிரேசில், கியூபா அணிகளும், ஆசிய கண்டத்தில் இருந்து டச் ஈஸ்ட் இண்டிஸும் (தற்போதைய இந்தோனேசியா) பங்கேற்றன. உலகக் கோப்பை வரலாற்றில் ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் இருந்து குறைவான அணிகள் பங்கேற்ற போட்டி இதுதான்.
ஆஸ்திரியா விலகல்
ஆஸ்திரியா, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தபோதிலும், ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகியது. ஆஸ்திரிய வீரர்கள் சிலர் ஜெர்மனிக்காக உலகக் கோப்பையில் விளையாடினர். ஆனால் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான மத்தியாஸ் சைன்டீலர் ஒன்றிணைந்த (ஜெர்மனி, ஆஸ்திரியா) அணிக்காக விளையாட மறுத்துவிட்டார்.
ஆஸ்திரியா பங்கேற்காததால், முதல் போட்டியில் அந்த அணியை எதிர்த்து விளையாடவிருந்த ஸ்வீடன் முதல் சுற்றில் விளையாடாமலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 1938 உலகக் கோப்பையில் விளையாடிய கியூபா, டச் ஈஸ்ட் இண்டிஸ் அணிகள் அதன்பிறகு தற்போது வரை உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. 1938 உலகக் கோப்பையில் முதல்முறையாக போலந்து, நார்வே அணிகள் ஆடின. அதன்பிறகு 1994 வரை நார்வேயும், 1974 வரை நெதர்லாந்தும் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை.
முந்தைய உலகக் கோப்பையைப் போன்றே இந்தப் போட்டியும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் ஹங்கேரி, ஸ்வீடன், பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஹங்கேரி 5-1 என்ற கோல் கணக்கல் ஸ்வீடனை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில பிரேசிலை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. இத்தாலியை வீழ்த்திவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பிரேசில் பயிற்சியாளர், அரையிறுதியில் அதன் முன்னணி வீரர் லியோனிடாஸுக்கு ஓய்வு கொடுத்ததும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. பிரேசில் அணி 3-வது இடத்தையும், ஸ்வீடன் அணி 4-வது இடத்தையும் பிடிக்க, இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றது.
16 ஆண்டுகள் நடப்பு சாம்பியன்
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1950-ல் மீண்டும் உலகக் கோப்பை நடத்தப்பட்டது. இதனால் 1934, 1938-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற இத்தாலி அணி தொடர்ந்து 16 ஆண்டுகள் உலக சாம்பியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குத் தெரியுமா?
1938 உலகக் கோப்பை போட்டியில்தான் போட்டியை நடத்திய பிரான்ஸும், நடப்பு சாம்பியனான இத்தாலியும் தகுதிச்சுற்றில் விளையாடாமல் பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் அணிக்கும், நடப்பு சாம்பியனுக்கும் நேரடித்தகுதி வழங்குவது 1938-ல் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் அணிக்கு இன்றளவிலும் நேரடித்தகுதி வழங்கப்பட்டாலும், நடப்பு சாம்பியனுக்கு நேரடித்தகுதி வழங்கும் நடைமுறை 2006 உலகக் கோப்பையோடு கைவிடப்பட்டது.
பை-சைக்கிள் 'கிக்'கால் புகழ் பெற்றவர்
1938 உலகக் கோப்பையில் பெரிதும் பேசப்பட்டவர் பிரேசில் வீரர் லியோனிடாஸ் டா சில்வாதான். அந்த உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்த அவர், போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து தனது அணிக்கு 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி தேடித்தந்தார்.
பிரேசிலுக்காக 23 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தலைசிறந்த ஸ்டிரைக்கராக திகழ்ந்ததோடு, தனது பை-சைக்கிள் கிக்கால் (தற்போது சிசர் கட் அல்லது ஓவர் ஹெட் கிக் என அழைக்கப்படுகிறது) உலக அளவில் பிரபலமடைந்தார்.
கறுப்பு வைரம் அல்லது ரப்பர் மேன் என்றழைக்கப்பட்ட லியோனிடாஸ், ரியோ அணிக்காக கால்பந்து விளையாடத் தொடங்கினாலும், சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது உருகுவே அணிக்காக விளையாடினார். அவர் முதல் ஆட்டத்திலேயே இரு கோல்களை அடித்தார். அடுத்த ஓர் ஆண்டில் பிரேசில் அணிக்கு தாவிய அவர், பிரேசில் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார்
1938 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 18
மொத்த கோல்கள் - 84
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4.67
ரெட் கார்டு - 4
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4,83,000
டாப் ஸ்கோர்
லியோனிடாஸ் (பிரேசில்) - 7 கோல்கள்
ஜியூலா ஸென்கெல்லர் (ஹங்கேரி) - 6 கோல்கள்
சில்வியோ பயோலா (இத்தாலி) - 5 கோல்கள்
3-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1938-ம் ஆண்டு ஜூன் 4 முதல் 19 வரை பிரான்ஸில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பா கண்டத்துக்கு வழங்கியதால் கோபமடைந்த தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும், ஆர்ஜென்டீனாவும் போட்டியை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக ஸ்பெயின் அணி பங்கேற்கவில்லை.
நடப்பு சாம்பியன் இத்தாலிக்கும், போட்டியை நடத்திய பிரான்ஸுக்கும் நேரடித்தகுதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 அணிகளில் ஐரோப்பாவில் இருந்து 11 அணிகளும், அமெரிக்க கண்டத்திலிருந்து பிரேசில், கியூபா அணிகளும், ஆசிய கண்டத்தில் இருந்து டச் ஈஸ்ட் இண்டிஸும் (தற்போதைய இந்தோனேசியா) பங்கேற்றன. உலகக் கோப்பை வரலாற்றில் ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் இருந்து குறைவான அணிகள் பங்கேற்ற போட்டி இதுதான்.
ஆஸ்திரியா விலகல்
ஆஸ்திரியா, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தபோதிலும், ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகியது. ஆஸ்திரிய வீரர்கள் சிலர் ஜெர்மனிக்காக உலகக் கோப்பையில் விளையாடினர். ஆனால் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான மத்தியாஸ் சைன்டீலர் ஒன்றிணைந்த (ஜெர்மனி, ஆஸ்திரியா) அணிக்காக விளையாட மறுத்துவிட்டார்.
ஆஸ்திரியா பங்கேற்காததால், முதல் போட்டியில் அந்த அணியை எதிர்த்து விளையாடவிருந்த ஸ்வீடன் முதல் சுற்றில் விளையாடாமலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 1938 உலகக் கோப்பையில் விளையாடிய கியூபா, டச் ஈஸ்ட் இண்டிஸ் அணிகள் அதன்பிறகு தற்போது வரை உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. 1938 உலகக் கோப்பையில் முதல்முறையாக போலந்து, நார்வே அணிகள் ஆடின. அதன்பிறகு 1994 வரை நார்வேயும், 1974 வரை நெதர்லாந்தும் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை.
முந்தைய உலகக் கோப்பையைப் போன்றே இந்தப் போட்டியும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் ஹங்கேரி, ஸ்வீடன், பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஹங்கேரி 5-1 என்ற கோல் கணக்கல் ஸ்வீடனை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில பிரேசிலை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. இத்தாலியை வீழ்த்திவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பிரேசில் பயிற்சியாளர், அரையிறுதியில் அதன் முன்னணி வீரர் லியோனிடாஸுக்கு ஓய்வு கொடுத்ததும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. பிரேசில் அணி 3-வது இடத்தையும், ஸ்வீடன் அணி 4-வது இடத்தையும் பிடிக்க, இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றது.
16 ஆண்டுகள் நடப்பு சாம்பியன்
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1950-ல் மீண்டும் உலகக் கோப்பை நடத்தப்பட்டது. இதனால் 1934, 1938-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற இத்தாலி அணி தொடர்ந்து 16 ஆண்டுகள் உலக சாம்பியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குத் தெரியுமா?
1938 உலகக் கோப்பை போட்டியில்தான் போட்டியை நடத்திய பிரான்ஸும், நடப்பு சாம்பியனான இத்தாலியும் தகுதிச்சுற்றில் விளையாடாமல் பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் அணிக்கும், நடப்பு சாம்பியனுக்கும் நேரடித்தகுதி வழங்குவது 1938-ல் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் அணிக்கு இன்றளவிலும் நேரடித்தகுதி வழங்கப்பட்டாலும், நடப்பு சாம்பியனுக்கு நேரடித்தகுதி வழங்கும் நடைமுறை 2006 உலகக் கோப்பையோடு கைவிடப்பட்டது.
பை-சைக்கிள் 'கிக்'கால் புகழ் பெற்றவர்
1938 உலகக் கோப்பையில் பெரிதும் பேசப்பட்டவர் பிரேசில் வீரர் லியோனிடாஸ் டா சில்வாதான். அந்த உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்த அவர், போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து தனது அணிக்கு 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி தேடித்தந்தார்.
பிரேசிலுக்காக 23 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தலைசிறந்த ஸ்டிரைக்கராக திகழ்ந்ததோடு, தனது பை-சைக்கிள் கிக்கால் (தற்போது சிசர் கட் அல்லது ஓவர் ஹெட் கிக் என அழைக்கப்படுகிறது) உலக அளவில் பிரபலமடைந்தார்.
கறுப்பு வைரம் அல்லது ரப்பர் மேன் என்றழைக்கப்பட்ட லியோனிடாஸ், ரியோ அணிக்காக கால்பந்து விளையாடத் தொடங்கினாலும், சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது உருகுவே அணிக்காக விளையாடினார். அவர் முதல் ஆட்டத்திலேயே இரு கோல்களை அடித்தார். அடுத்த ஓர் ஆண்டில் பிரேசில் அணிக்கு தாவிய அவர், பிரேசில் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார்
1938 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 18
மொத்த கோல்கள் - 84
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4.67
ரெட் கார்டு - 4
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4,83,000
டாப் ஸ்கோர்
லியோனிடாஸ் (பிரேசில்) - 7 கோல்கள்
ஜியூலா ஸென்கெல்லர் (ஹங்கேரி) - 6 கோல்கள்
சில்வியோ பயோலா (இத்தாலி) - 5 கோல்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி
2-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1934-ம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10-ம் தேதி வரை இத்தாலியில் நடைபெற்றது. இதுதான் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை.
உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததன் எதிரொலியாக 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன் உருகுவே மறுத்துவிட்டது. இன்றளவிலும் நடப்பு சாம்பியன் விளையாடாத ஒரே உலகக் கோப்பை இத்தாலியில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பைதான்.
இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முறையாக தகுதிச்சுற்று நடத்தப்பட்டது. இத்தாலி அணியும் தகுதிச்சுற்றில் விளையாடியே பிரதான சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடிய ஒரே உலகக் கோப்பை இதுதான். இதன்பிறகு நடைபெற்ற எல்லா உலகக் கோப்பைகளிலுமே போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நேரடித்தகுதி பெற்றது.
2-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1934-ம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10-ம் தேதி வரை இத்தாலியில் நடைபெற்றது. இதுதான் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை.
உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததன் எதிரொலியாக 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன் உருகுவே மறுத்துவிட்டது. இன்றளவிலும் நடப்பு சாம்பியன் விளையாடாத ஒரே உலகக் கோப்பை இத்தாலியில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பைதான்.
இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முறையாக தகுதிச்சுற்று நடத்தப்பட்டது. இத்தாலி அணியும் தகுதிச்சுற்றில் விளையாடியே பிரதான சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடிய ஒரே உலகக் கோப்பை இதுதான். இதன்பிறகு நடைபெற்ற எல்லா உலகக் கோப்பைகளிலுமே போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நேரடித்தகுதி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதல் ஆப்பிரிக்க அணி
32 நாடுகள் பங்கேற்ற தகுதிச்சுற்று, கண்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டன. தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெரு மற்றும் சிலி அணிகள் தகுதிச்சுற்றில் இருந்து விலகியதால் ஆர்ஜென்டீனாவும், பிரேசிலும் தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
ஐரோப்பாவில் இருந்து 12 அணிகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், ஆர்ஜென்டீனா, அமெரிக்கா ஆகிய 3 அணிகளும், ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து அணியும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றன. இதன்மூலம் உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றது எகிப்து.
10 புதிய அணிகள்
முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய 6 அணிகள் மட்டுமே 2-வது உலகக் கோப்பையில் விளையாடின. எஞ்சிய அணிகளான இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா, ஸ்வீடன், ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, எகிப்து ஆகிய 10 அணிகளும் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடின. எகிப்து அணி இந்த உலகக் கோப்பைக்கு பிறகு 1990-வரை உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 1990-ல் மீண்டும் இத்தாலியில் உலகக் கோப்பை நடைபெற்றபோதுதான் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. முதல் உலகக் கோப்பை உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் 2-வது உலகக் கோப்பை போட்டி இத்தாலியின் 8 நகரங்களில் நடைபெற்றது.
பெனால்டி ஷூட் இல்லாத நாக் அவுட்
இந்த உலகக் கோப்பை நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்படவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி டிராவில் முடிந்தால், வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் டிராவானால், வெற்றியைத் தீர்மானிக்க அடுத்த நாளில் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை நடத்திய இத்தாலி அணி தனது முதல் ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முதல் உலகக் கோப்பையில் தென் அமெரிக்கா நாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் 2-வது உலகக் கோப்பையில் எந்த அமெரிக்க அணியும் முதல் சுற்றை தாண்டவில்லை.
ஐரோப்பா ஆதிக்கம்
2-வது சுற்றுக்கு ஐரோப்பிய அணிகள் மட்டுமே முன்னேறின. உருகுவே அணி போட்டியில் பங்கேற்காதது, முதல் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவரும், அதிக கோலடித்தவருமான கில்லர்மோ போன்றவர்கள் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்ததால் அந்த அணி முழுமையாக மாற்று ஆட்டக்காரர்களோடு ஆடியது ஆகியவையும் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியற்கு காரணம்.
ஆக்ரோஷமான காலிறுதி
இத்தாலி-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு பிறகும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மிக ஆக்ரோஷமாக ஆடப்பட்ட இந்த ஆட்டத்தில் இரு அணி தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஸ்பெயின் கோல் கீப்பர் ரிக்கார்டோ சமோராவால், வெற்றியைத் தீர்மானிப்பதற்காக மீண்டும் நடத்தப்பட்ட மாற்று காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. அதேநேரத்தில் ஸ்பெயின் வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்தில் சிக்கி காலை முறித்துக் கொண்ட இத்தாலி வீரர் மரியோ பிஸியோலோ, தன் வாழ்நாள் முழுவதும் கால்பந்து விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இத்தாலி சாம்பியன்
பின்னர் நடைபெற்ற மாற்று காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 3 ஸ்பெயின் வீரர்கள் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து நடைபெற்ற அரையிறுதியிலும் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவைத் தோற்கடித்த இத்தாலி, தனது இறுதிச்சுற்றில் செக்கோஸ்லோவேகியாவை சந்தித்தது. அந்த அணி தனது அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 80 நிமிடங்கள் முடிந்திருந்தபோது செக்கோஸ்லோவேகியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் இத்தாலி கோலடிக்க, வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் 95-வது நிமிடத்தில் கோலடித்த இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது. இதன்மூலம் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற வரலாற்றைப் படைத்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலக்கியவர்கள்
1934 உலகக் கோப்பை போட்டியில் இத்தாலியின் ராய்முன்டோ ஆர்சி, ஏஞ்ஜெலோ ஷியாவியோ, கியூசெப்பி மெஸ்ஸா ஆகியோர் தங்களின் அபார ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர். ஸ்பெயின் கோல் கீப்பர் ரிக்கார்டோ சமோரா, செக்கோஸ்லோவேகியாவின் ஸ்டிரைக்கர் ஆல்ட்ரிச் நிஜெட்லி ஆகியோரும் அந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத வீரர்கள் ஆவர்.
குறைந்தபட்ச கோல் சாதனை
இத்தாலி அணி 5 போட்டிகளில் விளையாடி 3 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. இது உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற அணிகள் வாங்கிய குறைந்தபட்ச கோல் சாதனையாக இருந்தது. 1966-ல் இங்கிலாந்தும், 1994-ல் பிரேசிலும் இந்த சாதனையை சமன் செய்தன. ஆனால் 1998, 2006, 2010-ம் ஆண்டுகளில் முறையே சாம்பியனான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகள் தலா இரு கோல்களை மட்டுமே வாங்கி, எதிரணியிடம் குறைந்தபட்ச கோல் வாங்கிய அணி என்ற புதிய சாதனையை படைத்தன.
இறுதியாட்டத்தில் இரு முறை ஆடியவர்
2-வது உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணிக்காக விளையாடிய மிட்பீல்டர் லூயிஸ் மான்டி, முதல் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடினார். அதில் ஆர்ஜென்டீனா இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இதன்மூலம் இரு அணிகளுக்காக இரு உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
1934 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
17 மொத்த ஆட்டங்கள்
70 மொத்த கோல்கள்
4.12 ஒரு போட்டிக்கு சராசரி கோல்
1ரெட் கார்டு, 0 ஓன் கோல்
3,95,000 மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
டாப் ஸ்கோர்
5 கோல்கள்: ஆல்ட்ரிஜ் நெஜெட்லி (செக்கோஸ்லோவேகியா)
4 கோல்கள்: ஏஞ்ஜெலோ ஷியாவியோ (இத்தாலி)
4 கோல்கள்: எட்மன்ட் கானென் (ஜெர்மனி)
3 கோல்கள்: ராய்முன்டோ ஆர்சி (இத்தாலி)
3 கோல்கள்: லியோபால்ட் கீல்ஹோல்ஸ் (ஸ்விட்சர்லாந்து)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவையனைத் திலும் விளையாடிய ஒரே அணி பிரேசில். அதற்கடுத்தபடியாக இத்தாலி, ஜெர்மனி ஆகியவை தலா 17 முறையும், ஆர்ஜென்டீனா 15 முறையும், மெக்ஸிகோ 14 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தலா 13 முறையும், பெல்ஜியம், ஸ்வீடன், செர்பியா/யூகோஸ்லேவியா, உருகுவே ஆகியவை தலா 11 முறையும் உலகக் கோப்பையின் பிரதான சுற்றில் விளையாடியுள்ளன.
வரலாற்று நாயகன் கியூசெப்பி மெஸ்ஸா
இத்தாலி கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவர் கியூசெப்பி மெஸ்ஸா. 1934-ல் இத்தாலி அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்.
இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவரான மெஸ்ஸா, 1927-ம் ஆண்டு தனது 17-வது வயதில் மிலன் அணிக்காக ஸ்டிரைக்கராக விளையாடத் தொடங்கினார். 1929-30 சீசனில் இத்தாலி லீக்கில் 33 கோல்களை அடித்த அவர், அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதேபோன்று மேலும் இரு முறை சாதனை படைத்த அவர், 1930-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ஆடியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்தார். அறிமுகப் போட்டியிலேயே இரு கோல்களை அடித்த அவர், 1939 வரை கொடிகட்டிப் பறந்தார்.
தாய்நாட்டுக்காக 53 சர்வதேச போட்டிகளில் 33 கோல்களை அடித்ததோடு, 1934-ல் இத்தாலி உலகக் கோப்பையை வெல்லவும் முக்கியக் காரணமாக இருந்தார். 1938-ல் பிரான்ஸில் நடைபெற்ற 3-வது உலகக் கோப்பையில் மெஸ்ஸா தலைமையிலான இத்தாலி கோப்பையை வென்றது.
இதன்பிறகு காயத்தால் அவதிப்பட்ட மெஸ்ஸா, 1939-ல் ஏசி மிலன் அணிக்காக இத்தாலி லீக்கில் விளையாட ஆரம்பித்தார். இதன்பிறகு ஜுவென்டஸ் மற்றும் வர்சி அணிகளுக்காக சிறப்பு அழைப்பு வீரராக விளையாடிய அவர், 1945-ல் அட்லாண்டா கிளப்புக்காக ஆடினார். அதோடு அவருடைய கால்பந்து பயணம் முடிந்தது.
இத்தாலி சீரி ஏ லீக்கில் மட்டும் 440 போட்டிகளில் விளையாடி 269 கோல்களை அடித்த மெஸ்ஸா 1979-ம் ஆண்டு தனது 69-வது வயதில் காலமானார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 15
|
|