புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
16 Posts - 3%
prajai
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
4 Posts - 1%
jairam
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_m10இறந்த பின்னும் உலகை ரசிக்க! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த பின்னும் உலகை ரசிக்க!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 8:16 am

இறந்த பின்னும் உலகை ரசிக்க! P28

''இருக்கும் வரை ரத்த தானம்.

இறந்த பின் கண் தானம்!’
என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது மிகவும் குறைவுதான். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும், நெருங்கிய உறவு இறந்த துக்கத்தில் உடன் இருப்பவர்கள் உடனே அதுபற்றி யோசிக்காததுமே இதற்குக் காரணங்கள். கூடவே, கண்தானம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன' என்கிறார் கண் டாக்டர் அருள்மொழிவர்மன்.

''கண்ணின் மேல்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுதான், கருவிழி எனப்படும் கார்னியா. இதன் உதவியால்தான் நம்மால் பார்க்க முடிகிறது. விபத்து, வயது மற்றும் கூர்மையான பொருட்கள் தாக்குவது போன்ற காரணங்களால் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வையே சிலருக்குப் பறிபோகலாம். இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் மட்டும்தான். இறந்த ஒருவரின் கருவிழிகளை, பாதிக் கப்பட்டவருக்குப் பொருத்து வதன் மூலம், பலருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வழி செய்யலாம். 1905ஆம் ஆண்டு 'முதல் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை’ நடந்தது. உலக அளவில் இதுவரை 49 லட்சம் பேர் கருவிழிப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். தானம் செய்யப்படும் கண் மூலம் தங்களுக்கு பார்வை கிடைக்கும் என இவர்கள் காத்திருக்கிறார்கள்.

கண் தானம்


இறந்தவரின் கண்களை எடுத்து, பார்வை வேண்டி காத்திருக்கும் இருவருக்குப் பொருத்தி உலகைப் பார்க்க வைப்பதே கண்தானம். கண்தானம் செய்ய விரும்புபவர்கள், உயிருடன் இருக்கும்போதே கண் வங்கியை அணுகி, தங்கள் கண்களை தானமாகத் தருவதற்கான, உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். தன்னுடைய விருப்பத்தைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் கண் வங்கிக்கு தகவல் கொடுக்க முடியும்.

ஒருவரின் உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்துக்குள், அவரது கண்களை எடுத்துவிட வேண்டும். இதற்கான வழிமுறைகள்:

இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். மின்விசிறியை இயக்கக்கூடாது. இறந்தவரின் தலையை, ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி, படுக்கவைக்க வேண்டும்.

அருகில் இருக்கும் கண் வங்கிக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒப்புதல் மற்றும் இரண்டு சாட்சிகள் இருந்தால் மட்டுமே, கண் தானம் செய்ய முடியும்.

கண்ணை தானமாகப் பெறும்போது, நோய்த்தொற்று உள்ளதா என்பதை அறிய இறந்தவரின் ரத்தம் சிறிதளவு சேகரிக்கப்படும்.

கண் தானம் அளிக்கும் அறுவை சிகிச்சையால் இறுதிச்சடங்கு பாதிக்கப்படுமா?


இறுதிச்சடங்கில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. கண்களை ஆபரேஷன் மூலம் எடுப்பதற்கு 20 நிமிடங்களாவது ஆகும். மேலும், கண் தானம் செய்தால் கண்ணில் குழி விழுவது போன்ற எந்தப் பாதிப்பும் இருக்காது.

யாரெல்லாம் கண் தானம் செய்யக் கூடாது?

மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், ரத்தப் புற்றுநோய், ரேபீஸ், மூளையில் ட்யூமர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற இயலாது. ஆனால் ஆஸ்துமா, காசநோய், உயர் ரத்த அழுத்தத்தால் இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற முடியும்.

கண் தானத்துக்குப் பிறகு ஒருவருடைய விழிகள் மற்றவருக்கு எப்படிப் பொருத்தப்படுகிறது?

கருவிழிகள்தான் கண் தானத்தின்போது அதிகமாக எடுக்கப்படும். கருவிழிகளை மற்றொரு நோயாளிக்குப் பொருத்த, குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். அதில் நோயாளியின் தேவைக்கு ஏற்ப கருவிழிகள் பொருத்துவது மாறுபடும்.

கண் தானத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்?


அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க வேண்டும். கருவிழிகளை மட்டும் எடுப்பது, முழு கண்களையும் எடுப்பது என கண் தானத்தில் இரண்டு வகைகள் உண்டு.

கண் தானத்துக்குப் பிறகு, கண்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன?


முன்பெல்லாம் தானம் பெற்ற கண்களை, சில நாட்களுக்குள் மற்றவர்களுக்குப் பொருத்திட வேண்டும். ஆனால் தற்போது அதிகபட்சம் 28 நாட்கள் வரை கண் விழிகளைப் பாதுகாப்பாக வைக்க முடியும்.

ஒரு கண் விழியில் இருந்து இரண்டு லேயர்களைப் பிரித்து எடுக்கலாம். அது இரண்டு கண் நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது. இப்படி ஒரு கண் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு பார்வை கிடைக்கும். அதுவே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனை!

விகடன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 18, 2014 10:35 am

இறந்த பின்னும் உலகை ரசிக்க! 3838410834 சூப்பருங்க



இறந்த பின்னும் உலகை ரசிக்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇறந்த பின்னும் உலகை ரசிக்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இறந்த பின்னும் உலகை ரசிக்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 18, 2014 5:19 pm

இறந்த பின்னும் உலகை காண்போம்
இருக்கும் போது - கண் தானத்திற்கு பதிவு செய்வோம்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக