புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by T.N.Balasubramanian Today at 7:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm
» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm
» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm
» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm
» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm
» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm
» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm
» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm
» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm
» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm
» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by T.N.Balasubramanian Today at 7:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm
» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm
» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm
» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm
» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm
» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm
» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm
» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm
» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm
» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm
» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
nive123 |
| |||
Anthony raj |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
nive123 |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதை மாறிய பழமொழிகள்..
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள்.
சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன.
சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு.
இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது.
பழமொழியின் திரிபு :
"வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும்.
"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.
புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும்.
இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது.
மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள்.
புழக்கத்தில் பழமொழிகள் :
"ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.
"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
"களவும் கவறும் மற” அல்லது "களவும் கத்தும் மற” என்ற தொடரே, "களவும் கற்றுமற” என முரண்பட்டு நிற்கிறது. களவாகிய திருட்டை செய்து பின் மறந்து விட வேண்டும் என்ற பொருளிலேயே இன்று வரை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். 'கத்து' என்ற சொல் 'பொய்' 'சூது' 'கயமை' போன்ற பொருளை குறிக்கிறது. களவாகிய திருட்டையும், கயமையாகிய பொய் சூதையும் மறந்து விட வேண்டும் என்பற்கான பழமொழியே இது.
தாயும் பிள்ளையும் :
"சேல் (விழி) அகட்டும் (அலைபாயவிடும்) பெண்ணை நம்பாதே”தான் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே” என்றாகி போனது.
"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்” என்ற பழமொழி கூட 'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற தொடர் கூட விருந்து படைக்க திங்கள், புதன், வெள்ளி என்ற மூன்று நாட்களையும், மருந்து உட்கொள்ள ஞாயிறு, செவ்வாய், வியாழன் என்ற மூன்று நாட்களையும் நம் முன்னோர் பயன்படுத்தியதை குறித்து வந்தது. சனிக்கிழமையை "சனி நீராடு” என்று கூறி எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நாளாக கொண்டனர்
'பாத்திரமறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. "பாத்திறம் (பா+திறம்) அறிந்து பிச்சையிடு” என்று தான் இருந்திருக்கிறது. புலவர்களும், பாணர்களும், அரசர்களை, வள்ளல்களை புகழ்ந்து பாடி பொருளுதவி (பிச்சை) பெற்று வாழ்க்கை நடத்தி வந்த சூழலில் அவர்களின் "பா”த்திறம் (பாட்டுத்திறன்) அறிந்து அதற்கேற்றாற்போல் பொருளுதவி செய்திட வலியுறுத்தி வந்ததே இப்பழமொழி.
அகத்தின் அழகு :
"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான்” -'சூடு' என்று திரிந்து போனது. மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்ததை இப்பழமொழி உணர்த்தியது.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம்.நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும், நம் முன்னோர்களுக்கு நமது 'முகமே' கருவியாக பயன்பட்டிருக்கிறது.
நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு 'நாக்கு', மண்ணீரலுக்கு உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து சிகிச்சை அளித்தனர். இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நம் முன்னோர்களின் பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில் பயணிக்க செய்வோம்.
கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
முதுகலை தமிழாசிரியர்,
ராமநாதன் செட்டியார் மேல்நிலை பள்ளி,
புதுவயல்.
83445 50111.
-- தினமலர்
[You must be registered and logged in to see this image.]
பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள்.
சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன.
சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு.
இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது.
பழமொழியின் திரிபு :
"வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும்.
"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.
புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும்.
இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது.
மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள்.
புழக்கத்தில் பழமொழிகள் :
"ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.
"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
"களவும் கவறும் மற” அல்லது "களவும் கத்தும் மற” என்ற தொடரே, "களவும் கற்றுமற” என முரண்பட்டு நிற்கிறது. களவாகிய திருட்டை செய்து பின் மறந்து விட வேண்டும் என்ற பொருளிலேயே இன்று வரை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். 'கத்து' என்ற சொல் 'பொய்' 'சூது' 'கயமை' போன்ற பொருளை குறிக்கிறது. களவாகிய திருட்டையும், கயமையாகிய பொய் சூதையும் மறந்து விட வேண்டும் என்பற்கான பழமொழியே இது.
தாயும் பிள்ளையும் :
"சேல் (விழி) அகட்டும் (அலைபாயவிடும்) பெண்ணை நம்பாதே”தான் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே” என்றாகி போனது.
"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்” என்ற பழமொழி கூட 'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற தொடர் கூட விருந்து படைக்க திங்கள், புதன், வெள்ளி என்ற மூன்று நாட்களையும், மருந்து உட்கொள்ள ஞாயிறு, செவ்வாய், வியாழன் என்ற மூன்று நாட்களையும் நம் முன்னோர் பயன்படுத்தியதை குறித்து வந்தது. சனிக்கிழமையை "சனி நீராடு” என்று கூறி எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நாளாக கொண்டனர்
'பாத்திரமறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. "பாத்திறம் (பா+திறம்) அறிந்து பிச்சையிடு” என்று தான் இருந்திருக்கிறது. புலவர்களும், பாணர்களும், அரசர்களை, வள்ளல்களை புகழ்ந்து பாடி பொருளுதவி (பிச்சை) பெற்று வாழ்க்கை நடத்தி வந்த சூழலில் அவர்களின் "பா”த்திறம் (பாட்டுத்திறன்) அறிந்து அதற்கேற்றாற்போல் பொருளுதவி செய்திட வலியுறுத்தி வந்ததே இப்பழமொழி.
அகத்தின் அழகு :
"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான்” -'சூடு' என்று திரிந்து போனது. மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்ததை இப்பழமொழி உணர்த்தியது.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம்.நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும், நம் முன்னோர்களுக்கு நமது 'முகமே' கருவியாக பயன்பட்டிருக்கிறது.
நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு 'நாக்கு', மண்ணீரலுக்கு உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து சிகிச்சை அளித்தனர். இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நம் முன்னோர்களின் பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில் பயணிக்க செய்வோம்.
கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
முதுகலை தமிழாசிரியர்,
ராமநாதன் செட்டியார் மேல்நிலை பள்ளி,
புதுவயல்.
83445 50111.
-- தினமலர்
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
அருமை. வெகு நாட்களாக புரியாமலே இருந்தது. இன்று புரிந்து கொண்டேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான பகிர்வு + பதிவு.


- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015



Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2