புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 28, 2014 10:17 am

First topic message reminder :

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
ரமணி


இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.

01. Pantoum: பாண்டி
Pantoum - Wikipedia, the free encyclopedia


இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w

இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup

*****

இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:

வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

*****

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
(நாற்சீர்ப் ’பாண்டி’)

’பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!

’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!

பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!

யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!

தேரும் வாழ்வில் தேடியே ஞான
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
’பாரத பூமி பழம்பெரும் பூமி’!

--ரமணி, 27/12/2014

குறிப்பு:
முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.

*****

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1

வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2

உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3

துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5

--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115

*****


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 12:03 am

எனக்கு புரியவில்லை, ஆனால் கவிதைகள் படிக்க நன்றாக உள்ளது!



தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 05, 2015 6:52 pm

10. Sonnet: சானட்

பதினான்கு அடிகளில் அமையும் சின்னப் பாடலான சானட் ஆங்கில யாப்பின்
முக்கிய வகைகளில் ஒன்றாக அது தோன்றிய நாள்தொட்டு விளங்கி வருகிறது.
இத்தாலிய இலக்கியத்தில் 12-13-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி Petrarch என்ற
கவிஞரால் பிரபலமான இந்த சானட் வடிவத்தை ஆங்கிலத்தில் Sir Thomas Wyatt
என்பவர் 15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிமுகப் படுத்தினார். ஆங்கில
இலக்கியத்தில் இன்று வரை, புகழ் பெற்ற கவிஞர்களில் பெரும்பாலோர் சானட்
வடிவத்தில் கவிதைகள் புனைந்துள்ளனர்.

இத்தாலிய சானட் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றி William Shakespeare
ஆங்கிலத்தில் தம் புகழ்பெற்ற 154 சானட்களை எழுதினார். இப்படியாக, சானட்
ஆங்கிலத்தில் இரண்டு வடிவங்களில் எழுதப் படுகிறது: Italian or Petrarchan format,
and English or Shakespearean format.

சானட் யாப்பு வடிவின் புகழுக்கு முக்கிய காரணம், அந்த வடிவத்தில் கவிதை
புனைவதில் உள்ள சவால்தான். பதினாலு வரிகளில் கவிஞன் தன் கருத்தை,
உள்ளுணர்வை, இயற்கை சார்ந்த உருவகங்களோடு வாசகரிடம் கொண்டு
சேர்க்கவேண்டும். சானட் கவிதைக் கருத்தாகக் காதல், போர், மரணத்துவம்,
மாற்றம், துன்பம் போன்றவை அமையலாம். இந்த உரிப் பொருள்களில் கவிஞன்
பொதுவாக ஒரு தனிமை உணர்வு எழுமாறு கவிதைகள் புனைவான். (இதனால்
தான் தமிழில் பாரதியார் தமிழில் தான் எழுதிய சானட் கவிதைக்குத்
’தனிமை இரக்கம்’ என்று தலைப்பிட்டார் போலும்.)

முதலில் ஆங்கில சானட் வகைகளின் இலக்கணத்தைப் பார்ப்போம்.
பின்னர் இவற்றைத் தமிழ் மரபில் அறிமுகப்படுத்தும் முறைகளை ஆராய்வோம்.

இரண்டு வடிவத்திற்கும் பொதுவில் உள்ள கூறுகள் இவை:

1. ஐந்து (லகு-குரு) சீர் கொண்ட அடிகள், அதாவது iambic pentameter

2. முதல் எட்டு அடிகளில் கவிதையின் மையக் கருத்து இயற்கை உருவகங்களுடனும்
  மற்ற கவிதை அணிகளுடனும் அறிமுகப் படுத்தப்பட்டு விவரிக்கப்படும்.

3. ஒன்பதாம் அடியில் volta (turn) என்னும் திருப்பம் இருக்கும்.
  இந்தத் திருப்பம் கவிதைக் கருத்திலோ, செய்தியிலோ, காட்சியிலோ,
  ஒலியிலோ அல்லது வேறொரு கூறிலோ இருக்கலாம்.

4. முடிவுரையாக ஒரு செய்தி வாசகனுக்கு அறிவுறுத்தப்படும்.
  அது பொதுவாக முதற் சொன்ன உரிப்பொருள்/உணர்வின்
  இப்போதைய நிலையெனக் கவிஞன் கருதுவதாக இருக்கும்.

Italian or Petrarchan sonnet

1. Octave எனப்படும் முதல் எட்டு அடிகள் கவிதைக் கருவை
  விதைத்து வளர்க்கும், .

2. Sestet எனப்படும் இறுதி ஆறு அடிகள் மேற்சொன்ன
  திருப்பத்தை ஏற்படுத்திக் கவிதையை முடித்துவைக்கும்.

3. Rhyme scheme for ocatave: abba, abba
4. Rhyme scheme for the sestet: cde, cde or cdc, dcd

English/Shakespearean/Elizebethan sonnet

1. Quartrains எனப்படும் நான்கு அடிகளை உடைய பத்திகள்
  மூன்றுடன் இறுதியாக ஒரு rhyming couplet என்னும் இயைபுடன்
  கூடிய இரண்டு அடிகள்.

2. Quartrain 1 மையக் கருத்தைத் தொடங்கிவைக்கும்.
 Quartrain 2 அதனை விரிக்கும்.
 Quartrain 3 -இன் முதல்வரியில் முன் சொன்னதற்கு
  மாறாக ஒரு திருப்பம் தொடங்கிச் சொல்லப்படும்.
 Final rhyming couplet முடிவுரையாக அமையும்.

3. Rhyme scheme: abab, cdcd, efef, gg

ஆங்கில சானட் உதாரணங்கள்

ஆங்கில இலக்கியத்திலுள்ள இரண்டு சானட்களைக் கொஞ்சம் ஆராய்வோம்.
முதலில், ஸ்டெல்லா என்ற தன் (உருவகக்) காதலிக்காக
ஒரு கவிதை எழுத முயல்வதில் தாம் படும் பாட்டை விவரிக்கும்
Sir Philip Sidney-யின் இத்தாலிய வகை சானட்.

இந்தப் பாடலின் ஒன்பதாம் அடியில் வரும் திருப்பத்தையும்
அதன் பின் முடிவாக வரும் இறுதி அடியையும் நோக்குக.

Sir Philip Sidney: Italian sonnet form
"Loving in truth..."

Loving in truth, and fain in verse my love to show,
That the dear she might take some pleasure of my pain,
Pleasure might cause her read, reading might make her know,
Knowledge might pity win, and pity grace obtain,
I sought fit words to paint the blackest face of woe:
Studying inventions fine, her wits to entertain,
Oft turning others' leaves, to see if thence would flow
Some fresh and fruitful showers upon my sunburned brain.

But words came halting forth, wanting Invention's stay;
Invention, Nature's child, fled stepdame Study's blows;
And others' feet still seemed but strangers in my way.
Thus, great with child to speak, and helpless in my throes,
Biting my truant pen, beating myself for spite:
"Fool," said my Muse to me, "look in thy heart, and write."

ரத்தினச் சுருக்கமாகப் பாடல் உரைநடை வடிவில் கீழே:
Sidney - Astrophil and Stella - Sonnets 1-27

Loving, and wishing to show my love in verse,
So that Stella might find pleasure in my pain,
So that pleasure might make her read, and reading make her know me,
And knowledge might win pity for me, and pity might obtain grace,
I looked for fitting words to depict the darkest face of sadness,
Studying clever creations in order to entertain her mind,
Often turning others’ pages to see if, from them,
Fresh and fruitful ideas would flow into my brain.

But words came out lamely, lacking the support of Imagination:
Imagination, nature’s child, fled the blows of Study, her stepmother:
And the writings (‘feet’) of others seemed only alien things in the way.
So while pregnant with the desire to speak, helpless with the birth pangs,
Biting at my pen which disobeyed me, beating myself in anger,
My Muse said to me ‘Fool, look in your heart and write.

*****

கவிஞன் தன்னுள் பார்த்தே எழுதினால்தான் அது கவிதையாகும்
என்று ஸிட்னி சொன்னாரா? கீழ்வரும் பாடலில் ஷேக்ஸ்பியர்
தாம் எழுதும் கவிதை என்றும் நிற்கும் அதை ’நீவிர்’
என்றும் படிப்பீர்கள் என்று (செருக்குடன்?) சொல்கிறார்.

William Shakespeare: English/Shakespearean sonnet form
Shall I compare thee to a summer’s day?

Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date:

Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimm’d;
And every fair from fair sometime declines,
By chance, or nature’s changing course untrimm’d;

But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow’st,
Nor shall death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;

So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

இந்தப் பாடலில் வரும் ’நான்’ என்பவர் பாடல் வரிகளைச் சொல்லும் ஸ்பீக்கர்,
பாடல் வரிகளை எழுதியவர், அதாவது கவிஞர் என்ற இரு நோக்கிலும்,

பாடல் குறிக்கும் ’நீ/நீவிர்’ என்பவர் ஒரு பெண் (கவிஞரின் காதலி?) அல்லது
ஆண் (கவிஞரின் புரவலர்) அல்லது வாசகர்களாகிய நாம் என்ற மூன்று
நோக்கிலும் கவிதையைப் படித்துப் பார்த்தால், புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.
அதுதான் ஷேக்ஸ்பியர்.

இந்தப் பாடல் பற்றி ஆராயும் விளக்கத்தை இங்கே காண்க:
Sonnet 18

ஆங்கிலத்திலோ, தமிழிலோ சானட் எழுத முயல்வோர் அவசியம் இந்த இரு
பாடல்களையும் படித்துப் புரிந்துகொண்டு இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு
எழுதவேண்டும்.

சானட்களுக்கென்றே ஓர் வலைதளம்:
Sonnet Central
Shakespeare's Sonnets
Analysis of Shakespeare's Sonnets and Paraphrase in Modern English

தமிழில் இந்த சானட் வடிவத்தை அமைப்பது பற்றி இனி ஆராய்வோம்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 12, 2015 7:19 am

தமிழில் சானட்
முதல் முயற்சிகள்

’பரிதிமாற் கலைஞர்’ என்று அறியப்படும் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்
அவர்களும் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை யவர்களும் சேர்ந்து ’ஞானபோதினி’
என்னும் இதழை 1897-ஆம் ஆண்டில் தொடங்கி, அதை 1904 வரை வெளியிட்டனர்.

இந்த இதழில் சாஸ்திரியார் தனிப்பாசுரங்களாக நேரிசை ஆசிரியப்பா வடிவில்
பதினாலடிப் பாடல்களை எழுதி வெளியிட்டுவந்தார். இவை பின்னர் அவரால்
’தனிப்பாசுரத்தொகை’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன.

இந்தப் பாசுரங்களைக் கண்ட ஜி.யு.போப் அவர்கள் அவற்றை ஆங்கிலத்தில்
சானட் வடிவில் அமைத்தார். தமிழ்ப் பாசுரங்களும் போப்பின் ஆங்கில அமைப்பும்
1901-ஆம் ஆண்டில் 'TANI-PACURA-TOGAI: A Book of Sonnets in Tamil with English Echoes'
என்னும் தலைப்பில், முன்வந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டன.

இந்தப் புத்தகத்தை இங்கே தரவிறக்கலாம்:
http://www.scribd.com/doc/60952750/A-Book-of-SONNETS-in-TAMIL-and-English-by-Suriya-Narayana-Sastri-Rare-TAMIL-Book

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் ’தனிமை இரக்கம்’ என்ற பெயரில்
தன் மனைவிக்கு எழுதிய பதினாலடிக் கவிதை மதுரை விவேகபாநு இதழில்
1904-ஆம் ஆண்டு வெளிவந்தது.

பாரதியின் பாடலும் சாஸ்திரியாரின் முதற் பாடலும் கீழே:

தனிமை இரக்கம்
(நேரிசை ஆசிரியப்பா)

குயிலனாய்! நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?

--பாரதியார்

*****

1. கடவுள்
(நேரிசை ஆசிரியப்பா)

எங்கணும் விளங்குறு மிறைவனே! எண்குணந்
தங்கிய வொருபெருந் தலைவனே! ஒப்புயர்
வில்லா தோங்கிய வீசனே! என்றும்
எல்லாந் தானா யிலகிடும் பொருளே!
இன்பமொ டெழிலு மன்புட னருளும்
நண்ணிய நாதனே! புண்ணிய முதலே!
உருவுடை யாயோ? உருவிலி யேயோ?
உருவரு விலாயோ? உடையையோ? உணர்கிலேன்.
என்னண மெளியே னின்னை யண்முகோ?
உன்னுமா றறியேன்; உணருமா றறியேன்.
பண்ணுமா றறியேன்; பாடுமா றறியேன்.
வணங்குமா றறியேன்; வாழ்த்துமா றறியேன்;
இணங்கி மென்னையு மெடுத்துக்
காத்தல் வேண்டும் பூத்துநின் னருளே.

--’பரிதிமாற் கலைஞர்’

1. GOD
(English rendition in sonnet form)

My God! filled with Thy glorious Majesty
 Are earth and heaven; Thy loving saints declare
 Thine eight-fold attributes. Beyond compare,
Lord of the Universe exalted, Thee

In every creature immanent, I see!
 All bliss, all love, all grace, all beauty fair,
 Flow forth from Thee, Fount of all virtue rare!
Thy Form,--Thy formless Self--reveal to me!

How may I, faint and frail, approach Thy feet?
 How worshipping in lowly homage bow?
 Beyond my struggling thought's conception Thou!
How utter Thee? How sing Thy praises meet?

O let Thy grace reveal'd around me shine!
Draw near to take and guard me ever thine!

--G.U.Pope

*****

சானட் வடிவின் தமிழ்ப் பெயர்

தமிழில் சானட் வடிவத்திற்கு உகந்த பெயரென்ன?

பாரதியாரும் சாஸ்திரியாரும் தம் பதினான்கடிக் கவிதையை சானட் உருவில்
எழுதினாலும், அந்த வடிவத்திற்குத் தமிழில் பெயரிடவில்லை.

சானட் என்பததற்குத் தமிழ்ப் பெயராக ’ஈரேழ்வரிப்பா’ என்றொரு பெயரை
இணையத்தில் உள்ள தமிழ் அகராதிகளில் காணலாம்:

http://tamilagarathi.our24x7i.com/english-tamil-dictionary-search-word_s_1736.jws
http://www.tamillexicon.com/define/S:621

கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள், சானட்டின் இத்தாலிய, ஆங்கில வடிவம்
இரண்டையும் குறிப்பதாக ’இருநான்கிருமூன்று’ என்னும் பெயரைப் பரிந்துரைக்கிறார்.
’இருபா இருபஃது’ என்பதுபோல் எண்ணிக்கை வைத்துப் பெயர் தரும் வழக்கம்
தமிழில் இருப்பதால், இந்தப் பெயரை அவர் பரிந்துரைக்கிறார்.

சானட் என்னும் ஆங்கிலப் பெயரின் மூலம் sonetto என்னும் இத்தாலியச் சொல்லாகும்.
இந்தச் சொல்லின் பொருள் ’ஒரு சிறிய பாடல்’ என்பதே.
http://www.etymonline.com/index.php?term=sonnet

’ஈரேழ்வரிப்பா, இருநான்கிருமூன்று’ போன்ற பெயர்கள் தம்மளவில் சிறப்பாக இருந்தாலும்
அவை சானட் உருவின் பதினான்கு அடிகளைக் குறிப்பதாக உள்ளனவே தவிர, அவற்றில்
சானட் என்னும் பெயரில் உள்ளதுபோல் அது ஒரு சிறிய பாடல் என்ற குறிப்பு இல்லை.

எனவே, sonetto என்னும் இத்தாலியச் சொல்லை ஆங்கிலத்தில் எடுத்தாண்ட போது
அவர்கள் அதை fourteen-line-song போன்ற பெயரில் குறிக்காமல் சானட் என்றே
எடுத்தாண்டதால், நாமும் இந்தப் பெயரை ஓர் திசைச்சொல்லாகக் கருதி, தமிழில்
சானட் என்றே அழைக்கலாம். மற்றவிரு பெயர்களையும் விழைவோர் பயன்படுத்தலாம்
எனக் கொள்வோம்.

*****

தமிழ் மரபில் சானட் அமைப்பு

ஆங்கில மரபு இலக்கணக் கூறுகளாகிய அடியிறுதி இயைபுகளையும், அளவொத்த அடிகளையும்,
தமிழ் மரபின் அடி-தளை-தொடை-வாய்பாடு யாப்பிலக்கணக் கூறுகளையும் உள்ளடக்கியே
தமிழ் சானட் எழுத வேண்டும்.

அங்ஙனம் எழுதும் அடிகளில் ஆங்கில மரபில் உள்ள கவிதை மையக்கரு அறிமுகம்,
விரிப்பு, திருப்பம், இயற்கை சார்ந்த உருவகம் போன்ற அணிகள் முதலிய இலக்கியக்
கூறுகளைத் தவறாமல் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கவேண்டும்.

தமிழ் சானட் எழுதப் பயன்படும் மரபுப் பா/பாவின வகைகள்
(ஏதேனும் விட்டுப்போயிருந்தால் அன்பர்கள் சேர்க்கவும்)

இரண்டடிச் செய்யுள்
குறள் வெண்செந்துறை (அளவொத்த அடிகள்)

மூன்றடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
ஆசிரியத் தாழிசை (அளவொத்த அடிகள்)

நான்கடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
தரவு கொச்சகக் கலிப்பா (அளவடி)
கலிவிருத்தம் (அளவடி)
கலித்துறை (நெடிலடி)
கட்டளைக் கலித்துறை (நெடிலடி)
ஆசிரிய விருத்தம் (ஆறு சீரும் அதற்கு மேலும்)
கட்டளைக் கலிப்பா (எட்டு சீர்கள்)

ஆறடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)

எட்டடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
தரவுக் கொச்சகக் கலிப்பா (அளவடி)

மேற்சொன்ன விவரங்களைக் கொண்டு தமிழ் சானட் வகைகளை இப்படி அமைக்கலாம்.
தமிழ் மரபில் குறித்த இடங்களில் எதுகை-மோனைகள் அடிகளில் அமையவேண்டும்.

*****

இத்தாலிய சானட் வகை
முதல் எட்டடிகளின் இயைபுத் திட்டம்: abba, abba
இறுதி ஆறடிகளின் இயைபுத் திட்டம்: cde-cde/cdc-dcd
திருப்பம் ஒன்பதாம் அடியில் (ஆறடிச் செய்யுளின் முதல் அடியில்)

இத்தாலிய சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு
கீழ்வரும் சேர்க்கைகளில்,  அமைக்கலாம்.

அளவியல் இத்தாலிய சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)
1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா
2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா
3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

நெடிலடி இத்தாலிய சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)
1. இரண்டு கலித்துறை + ஒரு கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
2. இரண்டு கட்டளைக் கலித்துறை + ஒரு கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
3. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
4. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

விருத்த இத்தாலிய சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)
1. இரண்டு ஆசிரிய விருத்தம் + ஒரு ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
2. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
3. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை
4. இரண்டு கட்டளைக் கலிப்பா + ஒரு கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை

*****

ஆங்கில சானட் வகை
முதல் மூன்று நாலடிச் செய்யுளின் இயைபுத் திட்டம்: abab, cdcd, efef
இறுதி இரண்டடியின் இயைபுத் திட்டம்: gg
திருப்பம் ஒன்பதாம் அடியில் (மூன்றாம் நாலடிச் செய்யுளின் முதல் அடியில்)
முடிவுரை இறுதி இணையடிச் செய்யுளில்.

ஆங்கில சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு
கீழ்வரும் சேர்க்கைகளில்,  அமைக்கலாம்.

அளவியல் ஆங்கில சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)
1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை
2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை
3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை
4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
5. மூன்று கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
6. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை

நெடிலடி ஆங்கில சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)
1. முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
2. மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
3. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
4. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை

விருத்த ஆங்கில சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)
1. மூன்று ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
2. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
3. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை
4. மூன்று கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை

*****

மேலே கொள்கையளவில் உருவாக்கிய சானட் வகை வடிவங்களை அறிஞர்களும் அன்பர்களும்
செயலளவில் முயன்று பார்த்து உதாரணங்கள் தந்து இந்த வடிவம் தமிழில் முறைப்படி
அமைய வலிமை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் என்னளவில் முடிந்ததை முயல்கிறேன்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Apr 20, 2015 7:58 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா


இ1. காலம் என்னும் குழந்தை
(இத்தாலிய சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா
இயைபு: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


கையில் உள்ளதைக் கைவிடும் முன்னம்
பையில் எட்டிப் பார்க்கும் பழக்கம்
இன்றே வேண்டும் என்றும் முழக்கம்
இன்னமும் குழந்தை யென்றே உன்னும்!
சொக்கும் வானிருள் சொப்புகள் மின்னும்
இக்கணம் உள்ளது இன்றைய வழக்கம்!
உலகினில் உயிர்மெய் ஒலியின் முழக்கம்
பலவகை யாகப் பரிபவச் சின்னம்!

கோலம் என்றும் குழந்தை யென்றே
காலம் ஆடும் கானம் பண்டே!
ஞாலம் பயிலும் ஞானம் சிரித்தே
வண்ணத் துயிர்மெய் வளியை மென்றே
மண்ணை யுண்டே மரத்தை யுண்டே
உண்ணும் எண்ணமும் உண்மை விரித்தே.

--ரமணி, 12/03/2015

குறிப்பு:
சொக்கும் வானிருள் ... பரிபவச் சின்னம்!
வானில் உள்ள மீன்கள் முதல் மண்ணில் மெய்யில் வாழும் உயிர்கள் வரை
எல்லாவிதமான, இறுதியில் அவமானம்/இகழ்ச்சி என்றே கைவிடப்படும்
சின்னங்கள் யாவும் காலக் குழந்தையின் விளையாட்டுச் சொப்புகள்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 30, 2015 8:23 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை

ஆ1. மழலைச் செல்வம்
(அளவியல் ஆங்கில சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா)

செந்நெல் இதழ்கள் செப்பும் மழலை!
என்னை மறந்தே இறைவச மானேன்!
கரும்பு வண்ணக் கருவிழிச் சுழலை
விரும்புதல் கொள்ளும் வெகுளி யானேன்.

வண்ணப் பூச்சியின் மலர்தா வல்போல்
கண்கள் அலையக் கண்துளிர்த் தேநான்
என்னுள் கொண்டேன் ஏக்கம்: என்மேல்
மின்னல் வீழ்ந்துள் விழிப்புறு வேனோ?

என்னிடம் குறையிலை இல்லைய வரிடம்
சின்னக் குழந்தை சிறுமியோ சிறுவனோ
இருவரும் விழைந்தே சென்றன வருடம்
கருவரம் உண்டெனக் கணித்தது வெறுமனோ?

என்னுள் உயிரொன் ரேறும் காலம்
இன்றோ என்றோ வென்றெம் ஓலம்!

--ரமணி, 07/03/2015

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 02, 2015 7:51 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை

ஆ2. குடும்பக் குமிழிகள்
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

அப்பாவின் குட்டியென்றே ஆகிநின்றேன் அப்போதே
எப்போதும் அம்மாவே என்றிருந்தேன் சின்னாளே
தப்பாமல் எதிலும் தலைநீட்டும் அப்பாவே
ஒப்பாரி யம்மாவே ஒப்பவிலை பின்னாளே.

கல்யாணம் ஆனதுமே கடமைகளாய்க் கதித்தனவே
இல்லாளும் அன்னையாரும் இன்முகமே வேட்டனரே
நல்விதமா யிருகுழந்தை நலம்தந்தான் விதித்தவனே
பல்லாண்டு வாழ்ந்தனரே பாட்டிதாத்தா வீட்டினிலே.

ஆயினநாள் இன்றுநாங்கள் அறுபதினும் நனியெனவே!
தாயன்புப் பிள்ளையவன் தந்தையன்புச் சேயிழையும்
போயினரே திருமணத்தில் புக்கவரும் தனியெனவே!
நோயற்ற வாழ்வெனினும் வாயற்ற ஆவினமே!

கூட்டுக் குடும்பமொன்று குமிழிகளாய்ப் பிரிந்ததுவே
காட்டாற்று வெள்ளத்தில் கதியற்றே உடைந்ததுவே.

--ரமணி, 12/03/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 04, 2015 8:15 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

இ2. மருள்மலர்
(அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

வானின்று வரர்தூவும் மலர்களிலே ஒருமலரோ
கானின்று விகசித்தே கருவண்டு சூழ்-இனமோ
நானென்றன் முற்பிறப்பில் நற்கரும வாழ்வினிலோ
ஆனின்று உய்விக்கும் அறுமுகனாய் ஒருமகனோ
தேனுண்டு கண்ணுறங்கும் தெய்வீகத் திருமுகமோ
தானுண்டு தனக்குள்ளே தனதென்று வாழ்மனமோ
ஊணுண்டு உலவுகின்ற உயிரெனவே வாழ்முனமே
மானொன்று பார்ப்பதுபோல் மலர்விழிகள் உருவகமே!

அரவொன்று தீண்டியதோ அடிவயிற்றில் நஞ்செனநான்
உரமின்றிக் குமைகின்றேன் உயிர்பெற்ற உறவினிலே
வரமொன்று கேட்டேனே வகையின்றிக் கேட்டேனோ
நரம்பியலில் கோளாறால் நாளங்கள் துஞ்சுவதாம்
உருவமுண்டு மிழலையுண்டு உளஞ்சொல்லும் திறனிலையே
கருகமணிக் கோவையெனக் கனகமாலை வேட்டேனோ?

--ரமணி, 19/03/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 07, 2015 8:17 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா

இ3. கணிணிச் செயலியும் புதுக்கவிதையும்
(அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

சொற்பலவும் சேர்ப்பதிலே தொட்டுவரும் குற்றென்றோ ... ... [குற்று = குறை; syntax error]
பற்பலவாம் குறியீடு பக்கமொன்று தப்புதலோ ... ... [error in punctuation]
சொற்பொருளை ஆய்ந்தெழுதித் தொட்டதிலே தப்பெனவோ ... ... [semantical error]
சற்றோடி என்செயலி தத்திநிற்கும் வெற்றென்றே! ... ... [செயலி = computer program]

என்றிருக்கும் போதிவண்நான் எத்தனை யோவிதமாய்த்
தன்னளவில் நன்கியங்கித் தக்கபலன் தந்திடவே
இன்றுபல வேசெயலி எண்ணியெழு துந்திறனைக்
குன்றெனவே என்வசத்தில் கொள்கணினிக் கோவிதன்நான். ... ... [கோவிதன் = நன்குணர்ந்தோன், expert]

இத்தனையொ ழுங்கிருந்தும் ஏன்கவிதை யாப்பினிலே
வித்தகனாய் ஆகாமல் மீக்கூரும் ஓசையற
தெத்துசொல்லே எண்ணமதைச் செப்புவதாய் வாக்கியமே
குத்துடைத்துத் தொங்கவிட்டுக் கூறிடுதல் காப்பெனவே ... ... [காப்பு = அணி]
சொத்தையைப்பு துக்கவிதைச் சொர்ணமலர்ப் பூசையென
எத்தனைநாள் இன்னும்நானும் ஏமாறும் பாக்கியமோ?

--ரமணி, 24/03/2015

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 18, 2015 7:59 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை

ஆ3. மரபே இதயம்!
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

நாளெல்லாம் பாடுபட்டால் நாலுவரிக் கவிதைவரும்
கோளொன்றும் குணமொன்றும் குறியெனவே கொண்டமர்ந்தேன்
வாளென்றே இலக்கணத்தால் வகையில்லா எதுகைவரும்
நீளில்லா மோனைவரும் நிலையெல்லாம் விண்டெறிந்தேன்
தாளொன்றும் தலையொன்றும் சார்வதிலே தளைதட்ட
வேளொன்று வினையொன்று விளைவொன்று வந்ததுவே
ஆள்வினையை விட்டிடாமல் அரும்பொருளைக் களைகட்டக்
கேள்விஞானம் கல்விஞானம் கேவலமாய் நின்றதுவே.

பேசாமல் புதுக்கவிதைப் பேரினிலே எழுதிடவோ?
கூசாமல் சொற்றொடரைக் குறைத்திடவோ மழுங்கிடவே?
ஏசாமல் படிப்போரும் இருக்கையிலே பழுதுறுமோ?
வீசாமல் தரித்துநின்றால் விளையாதோ ஒழுங்கெனவே?

இதயமென்று துடித்தொன்று இயங்கிடுமே வேரெனவே
எதையுமிங்கு மரபினிலே எழுதுவதே சீரெனவே.

[கோள் = கொள்கை, கோட்பாடு; நீள் = ஒளி; நிலை = இடம்;
தாள்-தலை = உறுசீரின் முடிவும் வருசீரின் முதலும்; வேள் = விருப்பம்;
ஆள்வினை = முயற்சி; வீசாமல் = விரித்துநீட்டாமல்.]

--ரமணி, 10/04/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 26, 2015 8:53 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை

இ4. எந்திரப் புலமைவேலை ஏன்தோழி!
(அளவியல் இத்தாலிய சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

அந்தியின் வண்ணங்கள் அழகினை விரிக்கும்
மந்திரம் மேவும் மாலன்கை யாழி!
வந்துநீ காண வழியிலையே தோழி!
சிந்தனை யெல்லாம் திருவிரல் அரிக்கும்
விந்தைகள் புரிந்தவை விசைகளில் தரிக்கும்
எந்திரப் புலமைவேலை ஏனோ தோழி?
உந்துதல் பலவாக உதிர்ந்திடும் ஊழி
தந்திரம் எல்லாம் தகவென வரிக்கும்!

பெண்ணெனும் இயல்பின் பெற்றிமை உள்ளுவாய்
பெண்மையின் மென்மையைப் பெரிதும் வஞ்சித்தே
வண்ணங்கள் இழந்தே வாடுதல் விடுதோழி!
பெண்மையாய்ப் பொலியும் பேற்றினைக் கொள்ளுவாய்
உண்மையில் நீசெயும் ஊழியம் சிந்தித்தே
வண்மையால் வந்துசேரும் வளங்கொள்ள இதுநாழி!

[ஆழி = சக்கரம்; விசை = கணினி விசைப்பலகை விசைகள்;
ஊழி = வாழ்நாள்]

--ரமணி, 11/04/2015

*****


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக