புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
32 Posts - 53%
ayyasamy ram
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
26 Posts - 43%
M. Priya
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
75 Posts - 64%
ayyasamy ram
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
4 Posts - 3%
Rutu
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
3 Posts - 3%
prajai
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
2 Posts - 2%
Jenila
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
1 Post - 1%
manikavi
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_m10தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 2:55 am

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) 220px-Thomas_Edison2
தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931)

தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன். இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார்.



தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 2:56 am

பலதுறைப் புலமை வாய்ந்த புத்தமைப்பாளராக விளங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்திலுள்ள மிலான் நகரில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் மூன்று மாதங்கள் மட்டும் முறையாக கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியர் இவரை மூளை வளர்ச்சி குன்றியவர் என்று கருதினார்.

எடிசன் கண்டுபிடித்த முதல் சாதனம் ஒரு மின்வாக்குப் பதிவுக் கருவி (Electric Vote Recorder) ஆகும். இதனை இவர் தமது 21 ஆம் வயதிலேயே கண்டுபிடித்தார். ஆனால், இக்கருவி விற்பனையாகவில்லை. அதன் பின்பு இவர் எளிதில் விற்பனையாகக் கூடிய கருவிகளைக் கண்டு பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். வாக்குப் பதிவுக் கருவியைக் கண்டுபிடித்த பிறகு மிக விரைவிலேயே சீர்திருந்திய "இருப்புக் கணக்குக் குறியீட்டு முறை" (Stock Ticket System) ஒன்றைக் கண்டுபிடித்தார். இதனை அவர் 40,000 டாலருக்கு விற்பனை செய்தார். இது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். தொடர்ந்து அடுத்தடுத்து பல புதிய கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவற்றின் மூலம் எடிசன் விரைவிலேயே பெருஞ் செல்வமும் புகழும் ஈட்டினார். இவர் கண்டுபிடித்த சாதனங்களில் சாதனங்களில் மிகச் சிறந்தது "ஒலிப் பதிவு முறை இசைப் பெட்டி" (Phonograph) ஆகும். இதற்கு இவர் 1877 ஆம் ஆண்டில் புத்தாக்க உரிமை பெற்றார். ஆனால், இதைவிட உலகுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது இவர் கண்டுபிடித்த வெண்சுடர் ஒளி வீசி எரிகிற விளக்குக் குமிழ் (Incandescent Light Bulb) ஆகும். இதை இவர் 1879 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

மின் விளக்கு முறையினை முதலில் கண்டுபிடித்தவர் எடிசன் அன்று. சில ஆண்டுகளுக்கு முன்பே மின்சுடர் விளக்குகள் (Electric Arc Lamps) மூலமாகப் பாரிஸ் நகரில் தெருக்களுக்கு விளக்கு வசதி செய்யப்பட்டது. ஆனால், எடிசனின் மின் குமிழும், அவர் கண்டுபிடித்த மின்விசை வழங்கீட்டு முறையும், நடைமுறையில் வீடுகளில் மின் விளக்கைப் பயன்படுத்துவதற்கு வழி செய்தன. இவர் தொடங்கின நிறுமம் 1882 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் வீடுகளுக்கு வழங்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன் பின்பு இல்லங்களில் மிக விரைவாகப் பரவியது.

தனியார் இல்லங்களுக்கு மின்விசையைக் கொண்டு செல்வதற்கான முதலாவது வழங்கீட்டு நிறுமத்தை நிறுவிய தன் வாயிலாக ஒரு மாபெரும் தொழிலின் வளர்ச்சிக்கு எடிசன் அடித்தளம் அமைத்தார். இன்று, இந்த மின் விசையைப் பயன்படுத்துவது மின்விளக்கு மட்டுமன்று, தொலைக்காட்சி முதல் சலவை எந்திரம் வரையில் ஏராளமான வீட்டுச் சாதனங்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. மேலும், எடிசன் நிறுவிய மின் வழங்கீட்டு இணை வனத்திலிருந்து (Distri bution Network) மின் விசை கிடைத்ததன் காரணமாக, தொழில் துறையினர் மின்சாரத்தைப் பயன்படுத்துவது பெருமளவுக்கு ஊக்குவிக்கப்பட்டது.

திரைப்பட ஒளிப்படக்கருவிகள் (Motion Picture Cameras) திரைப்பட ஒளிருருப் படிவக் கருவிகள் (Projectors) ஆகியவற்றை மேம்படுத்துவதில் எடிசன் மிகப் பெரிய பங்கு பெற்றார். தொலைபேசியில் இவர் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்தார். (தொலைபேசியில் கார்பனை ஒளிபரப்பீட்டுக் கருவியாக இவர் பயன்படுத்தியதன் மூலம், கேட்கும் ஓசை அதிகத் தெளிவாக இருந்தது. தந்திப் பொறி (Telegraph), தட்டச்சுப் பொறி (Typewriter) ஆகியவற்றில் இவர் சிறப்பான மாறுதல்களைச் செய்தார். உரைப்பதிவுப் பொறி (Dictating Machine) படியெடுப்புப் பொறி (Mimeograph Machine), சேமக் கலம் (Storage Battery) ஆகியவை இவர் கண்டுபிடித்த மற்றச் சாதனங்களாகும். மொத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப் புத்தமைப்புகளுக்கு இவர் புத்தாக்க உரிமை பெற்றார். இது உண்மையிலேயே வியப்பூட்டும் எண்ணிக்கையாகும்.

எடிசன் இவ்வாறு அதிசயிக்கத்தக்க வகையில் புத்தாக்கத் திறன் வாய்ந்தவராக விளங்கியதற்கு, அவர் தமது தொழில் வாழ்வின் தொடக்கத்திலேயே நியூஜெர்சி மாநிலத்திலுள்ள மென்லோ பார்க் என்னுமிடத்தில் ஒரே ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவியது ஒரு முக்கிய காரணம் எனலாம். இந்த ஆய்வுக் கூடத்தில் தமக்கு உதவி புரிவதற்காக இவர் திறமை வாய்ந்த உதவியாளர்களை நியமித்திருந்தார். பல தொழில் நிறுவகங்கள் நிறுவியுள்ள பெரிய ஆய்வுக் கூடங்களுக்கு இந்த ஆராய்ச்சிக் கூடம் ஒரு முன் மாதிரியாக அமைந்தது. தேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து பணியாற்றக்கூடிய, அனைத்துக் கருவிகளையும் கொண்ட நவீன ஆராய்ச்சிக் கூடத்தை எடிசன் அமைத்தது அவருடைய மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் புத்தாக்க உரிமை பெற்றிருக்க முடியாது.

எடிசன் ஒரு புத்தமைப்பாளராக மட்டும் இருக்கவில்லை. அவர் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபட்டார். ஏராளமான தொழில் நிறுமங்களை அமைத்தார். இந்த நிறுமங்களில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்கியது பொதுமின் நிறுமம் (General Electric Company) ஆகும்.

எடிசன், மனப்பாங்கின்படி ஒரு துறை குறை தீர்த்த விஞ்ஞானியாக இருக்கவில்லை. எனினும், அவர் 1882 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பைச் செய்தார். "காற்றில்லாத வெற்றிடத்தில், இரு கம்பிகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிராத போதிலும், அந்தக் கம்பிகளுக்கிடையே ஒரு மின்னோட்டத்தைப் பாயும்படி செய்யலாம்" (Edision Effect) என அழைக்கப் படுகிறது. இந்த விளைவு, முக்கியமான கோட்பாட்டுக்கு கருத்தாக மட்டும் அமையாமல், நடைமுறையில் பெருமளவுக்குப் பயன்படக்கூடியதாக அமைந்தது. இந்த விளைவின் அடிப்படையில் விரைவிலேயே "வெற்றிடக் குழல்" (Vacum Tube) உருவாக்கப்பட்டது. அத்துடன், மின்னியல் தொழில் (Electronics Industry) தோன்றுவதற்கும் இது வழி வகுத்தது.

எடிசனின் வாழ்நாளில் பெரும்பகுதியில் அவருடைய கேட்குந் திறன் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமது வியக்கத்தக்க கடும் உழைப்பின் மூலம் அவர் அந்தக் குறைபாட்டை ஈடுசெய்து கொண்டார். எடிசனின் முதல் மனைவி இளமையிலேயே இறந்து விட்டார். அவர் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர் மறுமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. நியூஜெர்சி மாநிலத்தில் வெஸ்ட் ஆரஞ்சு என்னுமிடத்தில் 1931 ஆம் ஆண்டில் எடிசன் காலமானார்.

எடிசனின் திறமை குறித்து எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமேயில்லை. உலகில் முன்பு எப்போதும் தோன்றியிராத மாபெரும் புத்தமைப்பாக்க மேதை அவர் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அவரது கண்டு பிடிப்புகளில் பெரும்பாலானவை மற்றவர்களால் 30 ஆண்டுகளுக்குள்ளாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற போதிலும், அவர் கண்டுபிடித்த பயனுள்ள கண்டு பிடிப்புகளின் எண்ணிக்கை உண்மையிலேயே மலைப்பூட்டுகிறது. எனினும், அவருடைய கண்டுபிடிப்புகளைத் தனித்தனியாக நோக்கும்போது, அவற்றுள் எதுவும் உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றாது. உதாரணமாக, வெண்சுடர் ஒளிவீசி எரிகிற விளக்குக் குமிழ் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட போதிலும், நவீன வாழ்வில் ஈடுசெய்ய முடியாததாக இல்லை. உண்மையைக் கூறின், முற்றிலும் வேறுபட்ட அறிவியல் தத்துவத்தில் அடிப்படையில் செயற்படும் உமிழொளி விளக்குக் குமிழ்கள் (Flouresent Light Bulbs) இன்று மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வெண்சுடர் ஒளிவீசும் விளக்குக் குமிழ் இல்லாது போனால் கூட நாம் பாதிக்கப்பட போவதில்லை. மின் விளக்குகள் பயனுக்கு வராதிருந்த காலத்திலுங்கூட, மெழுகுவர்த்திகளும், எண்ணெய் விளக்குகளும், ஆவி விளக்குகளும் பொதுவாக மன நிறைவளிக்கத்தக்க ஒளி ஆதாரங்களாகக் கருதப்பட்டு வந்தன.

ஒலிப்பதிவு இசைப்பெட்டி ஒரு புதுமையான சாதனம் என்பது உண்மையே. எனினும், அது வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றைப் போன்ற நமது அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறமுடியாது. மேலும், அண்மை ஆண்டுகளில் ஒலியைப் பதிவு செய்வதற்காகக் காந்த நாடா ஒலிப்பதிவுக் கருவி (Magnetic Tape Recorder) போன்ற முற்றிலும் வேறுபட்ட முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று ஒலிப்பதிவு இசைப் பெட்டியோ இசைத் தட்டு இயக்கு கருவியோ (Record Player) இல்லாவிட்டாலுங்கூட, ஒரு வேறுபாடும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எடிசன் பெற்ற புத்தாக்க உரிமைகளில் பல, மற்றவர்கள் ஏற்கனவே கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகளில் சீர்திருத்தங்கள் செய்து பெற்றவையாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் உதவியாக இருந்தபோதிலும், வரலாற்றில் புரட்சிகரமான மாறுதல் உண்டாக்கும் அளவுக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.

ஆனால், எடிசனின் கண்டுபிடிப்புகளில் எந்த ஒரு தனிக் கண்டுபிடிப்பும் அளப்பரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லையென்ற போதிலும், அவர் ஒரேயொரு கண்டுபிடிப்பை மட்டும் செய்ததுடன் நின்று விடாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்தார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.



தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 3:09 am

படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm 's Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டு பிடித்தது கால் பந்தளவு!

‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.

திரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!



தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 11, 2015 10:02 pm

விரிவான பதிவு. பயனுள்ள பதிவு. தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) 3838410834 தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) 103459460 தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 10:43 pm

அருமையான பதிவு சிவா..........ரொம்ப நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 12, 2015 12:45 pm

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) 1604870_871869426205182_8256003420769726772_n



தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக