புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமன் உள்நாட்டுப் போர்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:08 pm

First topic message reminder :

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:05 pm

ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது அல்கொய்தா

ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் உட்பட 300 சிறைக்கைதிகளை விடுவித்தனர்.

ஹாத்வார்த் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அல்கொய்தா மூத்த தலைவர்களில் ஒருவரான காலித் பாதார்பி என்பவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இன்று இந்த சிறைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள் சிறையை உடைத்து தங்கள் தலைவர் காலித் பாதர்பி உட்பட 300 பேரை விடுவித்தனர். சிறைச்சாலைக்குள் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு சிறைக்காவலர்கள் மற்றும் ஐந்து சிறைக்கைதிகள் பலியாகினர்.

ஹாத்வார்த் மாகாணத்தில் உள்ள சிறையில் மட்டுமின்றி மாகாண தலைநகரான முகல்லாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திலும், வங்கி கிளை மற்றும் போலீஸ் தலைமையகத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே போர் பதற்றத்தால் அச்சத்தில் இருக்கும் அங்குள்ள மக்கள், தற்போதைய சிறை தகர்ப்பு சம்பவத்தால் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது நினைவுகூறத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:06 pm

ஏமனில் சிக்கியுள்ள இலங்கை மக்களை மீட்க உதவுகிறது இந்தியா

ஏமனில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களை மீட்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஷியா கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனில் உள்ள இலங்கை நாட்டு மக்களை மீட்டுக்கொண்டு வர இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம், சானாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் சர்வதேச இமிகிரேஷன் அமைப்பு ஆகியவற்றின் மூலம் கோரிக்கை விடுத்தது.

அதேபோல்,ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் போது அங்குள்ள இலங்கை நாட்டவர்களையும் மீட்க வேண்டும் என்ற இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பி பெரேரா இந்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்தார். இதை இந்திய அரசும் உடனடியாக ஏற்றுக்கொண்டது.

ஏமனில் 75-100 இலங்கை நாட்டு மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் மாணவர்களும் உள்ளடங்குவர். ஏமனில் நிலவும் குழப்பமான சூழலால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களை மீட்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது.




ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 10:04 pm

ஏமனில் அதிபர் மாளிகையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

ஏமனில் அதிபர் மாளிகையை ஷியா கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆடெனில் உள்ள அதிபர் மாளிகையை கடும் சண்டைக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

சவுதி அரேபிய படைகள் வான் வழித்தாக்குதல்களை நடத்தி வந்த போதும், இன்று அதிபர் மாளிகையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மாளிகையில்தான் தற்போது சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ள அதிபர் ஹாதி ஆட்சிப் பீடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 11:49 pm

2வது கட்டமாக ஏமனில் இருந்து 400 பேரை மீட்கும் முயற்சியில் கடற்படை கப்பல் தீவிரம்

ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள சில மணி நேரங்களில் அடுத்த கட்டமாக கடற்படை கப்பல் மூலம் மேலும் 400 பேரை மீட்கும் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.

அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அல் ஹொடெய்டா துறைமுகத்தை கடந்த அக்டோபர் மாதம் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்துறைமுக நகரிலிருந்து தான் 400 இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்கப்படும் 400 இந்தியர்களும் ஐ.என்.எஸ். சுமித்ரா கடற்படை கப்பல் மூலம் ட்ஜிபவ்ட்டி நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதற்காக ஏமன் கடற்பகுதியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டிருக்கும் சுமித்ரா கப்பல், துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

அந்நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற விரும்பினால் உடனடியாக அல் ஹொடெய்டா துறைமுகத்துக்கு விரைந்து செல்லுமாறு ஏமனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அங்கிருந்து வெளியேற விரும்பும் அனைவரும் 12 மணி நேரத்தில் பாதுகாப்பாக ட்ஜிபவ்ட்டி நகருக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும், பின்னர் 2 இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் மற்றொரு போர்கப்பலான ஐ,என்.எஸ். மும்பை ஏடன் நகரில் சிக்கியுள்ள 250 இந்தியர்களை மீட்க விரைந்து கொண்டிருக்கிறது. அங்கு தான் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு தரப்புக்கும் இடையே உக்கிரமான சண்டை நடைபெற்றது. இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக அந்நாட்டில் சிக்கி தவித்துவரும் 4000 இந்தியர்களில் 750 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:09 pm

சனாவிற்கு செல்ல ஏர்-இந்தியாவிற்கு அனுமதி, 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்படுவர் என நம்பிக்கை

ஏமன் தலைநகர் சனாவிற்கு செல்ல ஏர்- இந்தியா விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, எனவே 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

அவர்களை மீட்பதற்காக முதல் கட்டமாக ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ என்ற போர்க்கப்பல், ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மூலம் 40 தமிழர்கள் உள்பட 358 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ஏமனில் இருந்து மீட்கப்படுபவர்கள் ஜிபோட்டி மூலம் இந்தியாவிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான படை வான்வழி தாக்குதல் நடத்தியதை அடுத்து விமானங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவிற்கு செல்ல ஏர்- இந்தியா விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, எனவே 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஏர் இந்தியா விமானங்கள் சனா நகருக்கு செல்வதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சனாவிற்கு செல்வதற்கு அனுமதி மறுப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விமானம் இயக்கப்படவில்லை. தற்போது ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு பெரும் நிவாரணமாக இந்திய விமானங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியை உறுதிபடுத்தி உள்ள மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், சனாவில் இருந்து ஜிபோட்டிக்கு இரண்டு முறை பயணம் செய்ய இந்தியாவின் இரண்டு விமானங்கள் முயற்சி செய்யும். கடந்த இரண்டு நாட்களாக விமானங்கள் சனாவிற்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள அனுமதி நல்ல முறையில் அமைந்தால், நாம் ஏமனில் இருந்து இன்று 500க்கு மேற்பட்ட இந்தியர்களை வெளியே கொண்டுவர முடியும். என்று கூறியுள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்திய விமானங்கள் மஸ்கட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் அனுமதியின்படி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.




ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:12 pm

ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்?

உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்து உள்ள ஏமனில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சுக்கள் 100-க்கும் மேற்பட்டோர்கள் சிக்கிஉள்ளனர். அவர்கள் சம்பளத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்புவதா அல்லது வாங்கிய கடனை அடைக்க கூடுதல் சம்பளத்தில் சேர்ந்த வேலையில் தொடர்ந்து நீடிப்பதா என்ற சூழ்நிலையில் மிகவும் கடுமையான முடிவை எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்திய அரசு ஏமனில் சிக்கிஉள்ள இந்தியர்களை 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்கள் நர்சுகளே.

ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரை தங்கள் வசம் கொண்டுவந்து உள்ளனர். அவர்களை தடுக்கும் விதமாக சவுதி அரேபியா தலைமையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டான ஒரு சங்கடத்திற்கு இந்திய மருத்துவ தொழிலாளர்கள் எதிர்க்கொண்டு உள்ளனர். ஏமனில் சிக்கி தவிப்பர்கள் பெரும்பாலானோர் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அதிகளவு கடன் வாங்கி படிக்க வைத்து தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு பணத்தை சம்பாதிப்பதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

கடன்கள் வாங்கி படிக்கும் அவர்கள், கூடுதல் கட்டணம் இடைத்தரகர்களுக்கும் கட்டி வெளிநாட்டில் வேலை பெறுவதற்காக கூடுதல் கடன் அடைகின்றனர். இதற்கிடையே நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு ஆள் எடுப்பதை தடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

ஏடனில் உள்ள அல்-நாஹிப் மருத்துவமனையில் வேலை செய்துவரும் இந்திய ஆண் நர்சு ஜாய் பேசுகையில், "நான் தற்போது இங்குதான் தங்கிஉள்ளேன்," என்று தொலை பேசியில் தெரிவித்துஉள்ளார். ஏமனில் சிக்கிதவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்தியா தீவிரமாக இறங்கி உள்ளது. ஏடனில் இருந்து கடந்த செவ்வாய் அன்று இந்திய கடற்படை விமானம் 349 இந்தியர்களுடன் வெளியேறியது. ஆனால் ஜாய் இந்திய கப்பலில் ஏற கூடாது என்று முடிவு எடுத்துவிட்டார்.

"இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரபலமான மருத்துவமனை நர்சுக்கு ஒருமாதம் சம்பளமாக 400 அமெரிக்க டாலர்கள் வழங்கும். ஆனால் தங்கும் இடம் மற்றும் உணவு மிகவும் அதிகவிலையாக இருக்கும். ஆனால் ஏமன் எனக்கு மிகவும் நன்றாக உள்ளது. என்னால் எனது சம்பளத்தை வங்கியில் சேமிக்க முடியும்" என்று ஜாய் கூறிஉள்ளார். வேலையில் அனுபவம் இல்லாத நிலையில், நல்ல இடத்தில் வேலை கிடைக்க சுமார் லட்சக்கணக்கில் இடைத்தரகருக்கு பணம் கொடுத்து உள்ளார். ஜாய் தற்போது மாதத்திற்கு 600 அமெரிக்க டாலர்கள் (ரூ. 37000) சம்பளமாக பெறுகிறார். ஜாய்க்கு அங்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை இலவசம் ஆகும். தன்னால் பெற்றோருக்கு பணம் அனுப்ப முடியும், கல்வி கடனை அடைக்க முடியும். என்று கூறி உள்ளார்.

ஏடனில் இருந்து கப்பல் மூலம் இந்தியா மக்களை வெளியேற்றிய நிலையில், சனாவில் இருந்தும் மக்களை விமானம் மூலம் வெளியேற்றி உள்ளது. தொடர்ந்து சவுதி தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்துவதால் கூடுதல் விமானங்கள் அங்கு செல்ல முடியவில்லை. கேரளாவில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி மையங்கள் சுமார் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. ஊள்ளூரில் வழங்கப்படும் ஊதியம் வருத்தம் அளிக்கக்கூடிய நிலையில், கூடுதல் ஊதியம் பெறவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். கேரளாவில் நர்சுகளுக்கு தொடக்க ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. வயது மூப்பு மற்றும் அனுபவம் அதிகமாக இருந்தால் வருமானமானது ரூ. 25 ஆயிரமாக அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கு மிகவும் கடும் போட்டி உள்ளது. இதற்கிடையே வேலைக்கு செல்ல விரும்புவர்களிடம் அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பு எனகூறி கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரம் கொச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஏஜெண்ட் நிறுவனம் ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். ஊழல், சதிதிட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றி பெயரில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கி உள்ளது. நிறுவனம் சுமார் 1200 நர்சுகளை துபாய்க்கு வேலைக்கு செல்லை எடுத்து உள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 19.5 லட்சம் வரையில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது சட்டமுறை கட்டணத்தை விட 100 மடங்கு அதிகமாகும்.

இந்திய தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் நிபந்தனைகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களால் வெளிநாடுகளுக்கு நர்சுகள் பணியமர்த்தப்படுவதற்கு மத்திய அரசு தடைவிதித்து உள்ளது. மே மாதத்தில் இருந்து இரண்டு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே கேரளாவில் செயல்பட அனுமதி அளிக்கப்படும். சாதாரண கட்டணம் மற்றும் இராஜதந்திர வழிகளில் நாடுகளில் லஞ்சத்தை தடுப்பது ஆகியவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.




ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:12 pm

ஏமனில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 519 பேர் உயிரிழப்பு - ஐ.நா. அறிவிப்பு

உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 519 பேர் உயிரிழந்தனர் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011–ம் ஆண்டு முதல் அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையை பிடிப்பதற்கு, அதிபர் ஆதரவு படையினருடன் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அவர்களுடன் கரம் கோர்த்துள்ள முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கடந்த சில நாட்களாக கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்கள் வலுவான நிலைக்கு முன்னேறியதை தொடர்ந்து அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதி, சவுதி அரேபியாவுக்கு தப்பினார்.

இந்த நிலையில், ஏடனில் கடுமையான தாக்குதல் நடத்தி, அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் இதை உறுதி செய்தனர். இந்த தாக்குதலின்போது 18 சிவிலியன்கள் உள்பட 44 பேர் கொல்லப்பட்டனர். ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வந்ததை கட்டுப்படுத்துவதற்கு சவுதி கூட்டுப்படைகள் மேற்கொண்ட முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

நாட்டின் அதிபரான அப்த்–ரபு மன்சூர் ஹாதி தலைநகர் சனாவில் இருந்து வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து உள்ளார். மேலும், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் அவர் சவுதி அரேபியாவைக் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரேபியா, ஏமனில் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிராக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 9 அரபு நாடுகள் ஏமன் அதிபருக்கு ஆதரவாக இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவுடன் கைகோர்த்து உள்ளது. அங்கு இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 519 பேர் உயிரிழந்தனர் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது. இவர்களில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர். சவுதி அரேபியா தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தாலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் நடந்த போரில் 1,700 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் வேலரி அமோஸ் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்




ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:23 pm

சிரியாவின் பாதையில் போகிறதா ஏமன்?

உள்நாட்டுப் போர் எனும் சாபம் ஏமன் நாட்டையும் விட்டுவைக்க வில்லை. ஏமனின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே மோதல் முற்றிவிட்டதால் அங்கு வாழும் மக்களுக்குச் சொல்ல முடியாத துயரம் தொடங்கிவிட்டது.

வெவ்வேறு ஆயுதக் குழுக்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத ஏமன் அரசு, உதவிக்கு அழைத்ததால் ‘வளைகுடா கூட்டுறவு கவுன்சில்’ என்ற அமைப்பில் உள்ள நாடுகள் தங்களுடைய ராணுவங்களுடன் உதவிக்குச் சென்றுள்ளன. இந்த நாடுகளுக்கு சவூதி அரேபியா தலைமை தாங்குகிறது. ஏமனில் உள்ள ஹவுதி புரட்சிப் படைகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா வான் தாக்குதலை நடத்துகிறது. எகிப்து, ஜோர்டான் போன்ற அரபு நாடுகளும் பாகிஸ்தான், சூடான் ஆகியவையும் உதவிவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தத் தாக்குதலுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்க அரசு செய்துவருகிறது.

தன்னுடைய போட்டியாளரான ஈரானின் செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே சவூதி அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. தன்னுடைய நட்பு நாடான சவூதி அரேபியாவுக்காகவும் போட்டிக் குழுக்களின் தாக்குதலால் நசுக்கப் பட்டிருக்கும் ஏமனின் இடைக்கால அரசுக்காகவும் அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது. ஏமனின் இடைக்கால அரசுக்கு எதிராகத் தாக்குதலை நடத்திவரும் ஹவுதிகளுக்கு ஈரான் பண உதவியும் ஆயுத உதவியும் அளிப்பதாக சவூதி அரேபியாவும் அதன் தோழமை நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

ஹவுதிகள் ஜைதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஏமனை நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர் அப்துல்லா சாலேவுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள்தான் அவர்கள். இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டபோது ஹவுதிகளுக்கு அதில் பிரதிநிதித்துவமோ, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவமோ தராமல் ஒதுக்கிவைக்கப்பட்டனர். அதனாலேயே அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராட ஆரம்பித்தார்கள்.

ஏமன் தலைநகரம் சானா உட்பட நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஹவுதிகள் மட்டுமல்ல, அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கில் அரசுக்கு எதிராக, அன்சர் அல்-ஷாரியாவுடன் இணைந்து அல்-காய்தா நடத்தும் தாக்குதலும் ஏமனுக்குத் தலைவலியாக உருவாகி யிருக்கிறது. ஹவுதிகளுக்கு எதிராக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நடத்தும் தாக்குதல், மறைமுகமாக அல்-காய்தாவுக்குத்தான் வலுவை அளிக்கும்.

ஏமன் மக்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். இடைக்கால அரசின் செயல்படாத தன்மையால் மக்களிடையே ஒற்றுமையும் ஏற்படவில்லை, நாட்டிலும் அமைதி திரும்பவில்லை. பொருளாதாரமும் வலுவிழந்துகொண்டுவருகிறது. எனவே, அரசை எதிர்க்கும் குழுக்கள் வலுவடைந்துவருகின்றன. தெற்குப் பகுதியில் ஹவுதிகள் தங்களை வலுப்படுத்திக்கொண்டு தங்களுடைய செல்வாக்கை வலுப்படுத்தியிருந்தார்கள். அரசு அவர்களைச் சமமாக நடத்தியிருந்தால், பிரச்சினை இந்த அளவுக்குப் பூதாகாரமாக ஆகியிருக்காது. இப்போதோ சவூதி தலையிட்டுவிட்டதால் எதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

சிரியாவில் வெவ்வேறு குழுக்கள் தங்களுடைய பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு மற்ற குழுக்களுடன் சண்டையிட்டுவருவதைப் போல் ஏமனின் நிலையும் ஆகிவிட்டது. அரபு வசந்தத்தின் மூலம் துளிர்த்த ஜனநாயக நம்பிக்கையை இந்த உள்நாட்டுப் போர் துடைத்தெறிந்துவிட்டதுதான் அவலம்!



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 3:14 am

ஏமன் போர், சவுதி அரேபியாவிற்கு ராணுவஉதவி குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் விவாதம்

ஏமனில் அரசு தரப்பிற்கும் - கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் சண்டை தீவிரம்அடைந்து உள்ளநிலையில் சவுதி அரேபியாவின் நெருக்கடி தொடர்பாக முடிவு எடுக்க பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் விவாதம் தொடங்கி உள்ளது.

ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. தீவிரவாதிகளும் ஏடன் நகரில் முன்னேறி வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவஉதவி அளிக்க வேண்டும் என்று அதன் நட்பு நாடான சவுதிஅரேபியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் தடைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை கிளர்ச்சியாளர்க்கு எதிரான போரில் இறங்க வேண்டும் என்று சவுதி அரேபியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில் நடைபெறும் போரில் சவுதி அரேபியாவிற்கு உதவிசெய்வது தொடர்பாக முடிவு எடுக்க பாகிஸ்தானின் விவாதத்தை தொடங்கி உள்ளது. முக்கிய முடிவினை எடுப்பதற்கு பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவிற்கு உதவிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததைஅடுத்து சிறப்பு பாராளுமன்ற கூட்டம் தொடங்கி உள்ளது. சிறப்பு கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி காவாஜா ஆசிப், ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் சேரவேண்டுமா என்பது தொடர்பாக விவாதம் நடத்த தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

பாகிஸ்தான் மந்திரி தனது கொள்கைஅறிக்கையில், ஏமன் விவகாரத்தில் அரசியல் மற்றும் ராஜதந்திர அணுகுமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். “பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இவ்விவகாரத்தில் ஆழமான விவாதமானது அரசு ஒரு முக்கியமான முடிவினை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்.” பிரதமர் நவாஸ் செரீப் அண்டைய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக துருக்கியும் சென்றார். இதுதொடர்பாக கூடுதல் ஆலோசனைக்காக பிறநாடுகளுக்கும் சென்றார். சவுதி அரபியா விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவ வீரர்களை கேட்டு உள்ளது. நட்பு நாடான சவுதி அரேபியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்பட்டால், தனது நட்பு நாட்டின் பாதுகாப்புக்காக கூட்டணி நாடுகளுடன் பாகிஸ்தான் கைகோர்க்கும் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் ஆசிப் தெளிவு படுத்தினார்.

காலை பாராளுமன்றம் தொடங்கியபோது, அவையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இல்லை, இலங்கை அதிபர் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர் அவைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் பிரதமர் நவாஸ் செரீப் அவைக்கு வருவரையில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சவுதிக்கு உதவி செய்வது தொடர்பாக பாகிஸ்தான் விரைவில் முடிவு எடுக்க உள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 3:15 am

ஏடனில் கடந்த 24 மணிநேரங்களில் நடைபெற்ற சண்டையில் 53 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனில் கடந்த 24 மணிநேரங்களில் நடைபெற்ற சண்டையின்போது 53 பேர் உயிரிழந்தனர் என்று ராணுவ மற்றும் மருத்துவ துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.

ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் கிளர்ச்சியாளர்களின் பல்வேறு நிலைகள் அழிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அங்கு இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. இந்தநிலையில் ஏமனில் ஏற்கனவே தாக்குதல் நடத்தி வரும் அல்கொய்தா தீவிரவாதிகள், அங்குள்ள 2–வது பெரிய ராணுவ தளமான முகல்லா தளத்தில் திடீர் தாக்குதல் நடத்தி, முகல்லா நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

தொடர்ந்து அங்கு இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனில் கடந்த 24 மணிநேரங்களில் நடைபெற்ற சண்டையின்போது 53 பேர் உயிரிழந்தனர் என்று ராணுவ மற்றும் மருத்துவ துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன. பொதுமக்களில் 17 பேரும், அதிபர் மன்சூர் ஹதியின் படைவீரர்கள் 10 பேரும் சண்டையில் பலியாகினர் என்று மருத்துவதுறை தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதேபோல் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்ற சண்டையில் பலர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அங்கு இரதரப்பு இடையே சண்டை நீடித்து வருவதாகவும், கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரை பிடிக்க தீவிரம் காட்டிவருவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏமனில் உள்நாட்டுப்போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து உள்ளது. ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையை பிடிப்பதற்கு, அதிபர் ஆதரவு படையினருடன் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அவர்களுடன் கரம் கோர்த்துள்ள முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கடந்த சில நாட்களாக கடுமையாக சண்டையிட்டனர். கிளர்ச்சியாளர்கள் வலுவான நிலைக்கு முன்னேறியதை தொடர்ந்து அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதி, சவுதி அரேபியாவுக்கு தப்பினார். அப்போது ஏடனில் கடுமையான தாக்குதல் நடத்தி, அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கடந்த 2-ம் தேதி கைப்பற்றினர். ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் இதை உறுதி செய்தனர்.

ஏடன் நகரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வந்ததை கட்டுப்படுத்துவதற்கு சவுதி கூட்டுப்படைகள் மேற்கொண்ட முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக