புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
31 Posts - 53%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
2 Posts - 3%
சிவா
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
1 Post - 2%
Manimegala
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
1 Post - 2%
jairam
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
13 Posts - 4%
prajai
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
9 Posts - 3%
Jenila
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
3 Posts - 1%
jairam
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாளும் ஒரு அழகின் அலை Poll_c10நாளும் ஒரு அழகின் அலை Poll_m10நாளும் ஒரு அழகின் அலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:10 pm

நாளும் ஒரு அழகின் அலை

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 1

Shivah shakthya yukto yadi bhavati shaktah prabhavitum
Na chedevam devo na khalu kusalah spanditumapi;
Atas tvam aradhyam Hari-Hara-Virinchadibhir api
Pranantum stotum vaa katham akrta-punyah prabhavati

ஸிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

சக்தி, உன்னுடன் இணைந்திருந்தால் தான் ஈசன் இவ்வுலகைப் படைத்து ரட்சித்து இயங்க வைக்க முடியும்.

பிரம்மா விஷ்ணு, சிவன் மூவரும் துதிக்கின்ற உன்னை முன் ஜன்மத்தில் புண்ணியம் செய்திராவிட்டால் துதிக்கவும் வணங்கவும் முடியுமா என்ன..

பாராயண பலன்:எடுத்த நல்ல காரியங்கள் நிறைவேறும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:10 pm

நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஆனந்த லஹரி ஸ்லோகம் 2

Taniyamsam pamsum tava carana-pankeruha-bhavam
Virincih sanchinvan virachayati lokan avikalam;
Vahaty evam Shaurih katham api sahasrena shirasaam
Harah samksudy'ainam bhajati bhajati bhasito'ddhalama-vidhim.
தநீயாம்ஸம் பாம்ஸீம் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷித்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்
அம்பிகே...உன் பாதத்தில் இருக்கும் துகள்களில் இருந்து பிரம்மா இந்த உலகத்தைப் படைக்கிறார்..அந்த பாத தூளியை வைத்தே விஷ்ணுவானவர் ஆதிசேஷன் மூலமாக உலகினைத் தாங்குகிறார்..உன்னுடைய பாததூளியைத் தான் சிவனும் விபூதியாகப் பூசிக் கொண்டு உலகையே பஸ்பமாக அழிக்கும் ஆற்றலைப் பெறுகிறார்.
.
தேவி..உன் பாத தூளி தான் இந்த உலகின் இயங்கும் தன்மைக்குக் காரணம்..

பாராயணம் செய்வதால் வசீகரிக்கும் சக்தி அதிகரிக்குமாம்...


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:12 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 3

Avidyanam antas-timira-mihira-dweeppa-nagari
Jadanam chaitanya-stabaka-makaranda-sruti jhari
Daridranam cinta-mani-gunanika janma-jaladhau
Nimadhanam damshtra mura-ripu-varahasya bhavati.

அவித்யானா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரி
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரி
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதெள
நிமக்னாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி

அம்பிகே அறியாமை என்னும் இருட்டினை அகற்றும்சூரியனைப் போன்றும்,கற்பக மரத்தின் பூவிலுல்ல மகரந்தப்பொடி எப்படி அறிவிலிகளுக்கு புத்தி வெளிச்சம் தருவதைப் போன்றும், ஏழ்மையில் இருப்பவர்க்ளுக்கு நற்செல்வம் வழங்கும் சிந்தாமணி ரத்தினக்கல்லைப் போன்றும் இந்தப் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு உதவிய விஷ்ணுவின் பிரளய காலத்து வராக அவதாரத்தின் கோரைப் பல்லைப் போலவும் பயன் தருவது எது தெரியுமா...உன்னுடைய பாத தூளி..

சகல ஐஸ்வர்யமும் செளபாக்யமும் இந்தஸ்லோக பாராயணம் தரும்.

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:13 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 4

ஒரு நண்பர் என்னிடம்,”.எனக்கு எதுக்குமே பயமே கிடையாது ஓய்… ரொம்ப தைர்யசாலி.. ஒரு தடவை ஒரு காட்டுக்குப் போயிருந்தப்ப க்ரூப்லருந்து பிரிஞ்சு போய்ட்டேனா ஒரு சிங்கம் வந்தது. தனியா சண்டை போட்டுட்டு…. அது அசந்த சமயத்துல…..”

‘அடப்பாவி..கொல்லவே செஞ்சுட்டீரா’

‘அதான் இல்லை..ஓடி வந்துட்டேனாக்கும்..”

ஏனெனில் பயம்.. அது தாக்கி விடுமே உயிரை எடுத்து விடுமே என மரண பயம்..

மரணம் என்றாவது வரும் எனத் தெரிந்தாலும் அதைப்பற்றி பயமில்லாது இருப்பவர் வெகு சொற்பமே..

அந்த மரணபயம் ஏற்படும் போது அம்பிகையின் பாத கமலங்களைப்பற்றினால் அவள் அபயம் கொடுத்து மரண பயத்தைப் போக்கிவிடுவாள், பக்தர்களுக்கு வேண்டியதற்கு மேலேயே வாரி வழங்குவாள்..

என ஆதிசங்கரர் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்…

***

த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வாரபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள

Tvad anyah paanibhyam abhaya-varado daivataganah
Tvam eka n'aivasi prakatita-var'abhityabhinaya;
Bhayat tratum datum phalam api cha vancha samadhikam
Saranye lokanam tava hi charanaveva nipunav.

**




அம்பிகையே…மற்ற தேவர்க்ளும் தெய்வங்களும் அபயம் என முத்திரை தான் காட்டுகிறார்கள்.. நீ ஒரு அபிநயமும் புரிவதில்லை..ஏனெனில் உன் பாதகமலங்களை வணங்கினாலே போதும்..வேண்டிய வரம் கொடுப்பாயல்லவா…

**

இந்த ஸ்லோக பாராயணம் சகல பாக்கியங்களையும் கொடுக்கும்

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 03, 2014 10:21 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 5

**
Haris tvam aradhya pranata-jana-saubhagya-jananim
Pura nari bhutva Pura-ripum api ksobham anayat;
Smaro'pi tvam natva rati-nayana-lehyena vapusha
Muninam apyantah prabhavati hi mohaya mahatam.
**
ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன ஸெளபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயந-லேஹ்யேந வபுஷா
முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்
**

அம்பிகே...உன்னைத் தொழுததால் தான் மஹாவிஷ்ணு மோகினியாக வடிவம் கொண்டு சிவனையே மயக்கினார்...

ரதியின் விழிக்ளுக்கு மட்டும் தெரியும் மன்மதனும் கூட உன்னைத் தொழுததால் தான் பெரிய முனிவர்கள் மனதிலும் மோகத்தை உண்டு பண்ணும் சக்தியைப் பெற்றான்..

**

இந்த ஸ்லோகப் பாராயணம் தோஷங்கள் விலகிசாதனைகள் புரிய வைக்கும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 03, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 6

**

தான்நோக்குங்கால் நில நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்….

அர்த்தம் நேர் அர்த்தம் தான்.. அதாவது காதலன் பார்க்கும் போது கொஞ்சம் வெட்கப்பட்டு தரையை நோக்குவாள் காதலி..அதுவே காதலன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால், கொஞ்ச்ம் மெல்ல தாழ்ந்திருந்த குடை இமைகளை விரித்து காதலனைப் பார்த்து மென்னகை புரிவாள்…சரி எழுதியவர் அந்தக்கால மனுஷர்..அந்தக்கால காதலிகளா இருக்கலாம்..விடுங்க..

என்ன சொல்ல வருகிறேன்.. அந்தப்பார்வை….சாதாரண பெண்ணின் பார்வை…

அம்பிகையின் பார்வை என்ன செய்கிற்து…

**

ஒரு ஆள்..யார்கண்ணுக்கும் தெரிய மாட்டார். அவர் கிட்ட என்ன இருக்கிறது தெரியுமா….கரும்பினால் ஆன வில்..அதற்கு நாண் என்ன தெரியுமா.. வண்டுகள் அப்படியே தொடர் சங்கிலியாய் இருக்குமாம்..

அப்புறம் என்னவாம்..ஐந்து மலர்களால் செய்யப் பட்ட அம்புகள்…

என்னென்ன மலர்கள்..தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை கடைசியா குவளை….இத வெச்சிருக்கற ஆளின் பெயர் மன்மதன்..மற்ற பெயர்கள்…வசந்தன்,, அனங்கன், மாறன், கரும்பன்..இன்னும் உண்டு..

இவரோட அஞ்சு மலர்களை வச்சு எய்தா என்னப்பா ஆகும்..?

தாமரை மார்பைத் தாக்கினால் உன்மத்தம் என்னும் போதை நிலை;

அசோகம் உதட்டுகளைத் தாக்கினால் துணையை நினைத்துப் புலம்ப வைக்கும்;

முல்லை..கண்களைத் தாக்கி உறங்க விடாது;

மாம்பூ தலையைத் தடவி காதல் பித்து கொள்ள வைக்கும்;

குவளை மலர்க்கணை- இதை நீலோத்பலம் என்றும் சொல்வர்…அது என்ன செய்யும்…ஒரு வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி எப்படியோ இந்தக் குவளை மலர் மற்ற மலர்க்கணைகளால் படும் அவஸ்தையை விட ஒரு படிமேல் சென்று விரக தாபத்தின் எல்லைக்குக் கூட்டிச் சென்று உணர்விழக்க வைக்குமாம்…

கொஞ்சம் இயல்பாகச் சொல்லப் பார்த்தால்:

அந்தக்காலமாயிருந்தால் அரசகுமாரி கொஞ்சம் அக்கம்பக்கம் பார்த்து யாருமில்லை எனத் துணிவு கொண்டு “அன்பரே சற்றே கொஞ்சம் அருகில் வாரும்” எனச் சொல்ல வைப்பதும் மன்மதனின் வேலை தான்..

இந்தக்காலத்தில் “ஏன்னா… பையனுக்கு அந்தக் கார்ட்டூன் டிவிடி போட்டுட்டீஙகளா.. அவன் பார்த்துக்கிட்டே தூங்கிடுவான்.. நீங்க வாங்களேன் உள்ளே” எனச் சொல்லவைப்பதும் மன்மதனின் வேலை தான்..

இப்படி உலகில் எல்லாரையும் பாடாய்ப் படுத்தும் மன்மதன் தன் வலிமையை எங்கிருந்து பெற்றான் தெரியுமா..அம்பிகையின் அருட்கண் பார்வையினால் தான்..

அதைத் தான் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்…

Dhanun paushpam maurvi madhu-kara-mayi pancha visikha
Vasantaha samanto Malaya-marud ayodhana-rathah;
Tatha'py ekah sarvam Himagiri-suthe kam api kripaam
Apangat te labdhva jagadidam Anango vijayate

**

தனு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸிதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே

மலர்களினால் ஆன வில், வண்டுகளின் வரிசை கொண்ட நாண்; அம்புகளும் மலர்கள்;;காலம் இளவேனிற்காலம்; தென்றல் காற்றே தேர்… இவையெல்லாம் கொண்டவன் மன்மதன்.. அவனோ அம்பிகே, உனது கடைக்கண் பார்வையின் வலிமையால் இந்த உலகையே ஜெயிக்கிறான்..

**
மன்மதனுக்கு கரும்பு வில்லும் மலரால் ஆன வில்லும் உண்டு எனக் கொள்ளலாம்..

**
ஆண்கள் பெண்களிடம் இருக்கும் குறை நீக்கி புத்திர பாக்கியம் பெற இந்த ஸ்லோக பாராயணம் அருள் செய்யும்..

**



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 03, 2014 10:24 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 7

நண்பரின் மகள் நண்பருடன் என் வீட்டிற்கு வந்திருந்தாள்…குட்டிப் பெண்..என்னை முத்ன் முதலாகப் பார்க்கிறாள்..எனில் பேசவும் இல்லை..கொஞ்சம் மின்னல் மாதிரிப் புன்னகை.. ஷணப் பொழுதில் தோன்றி மறைந்து விட்டது.

.அதற்காக சும்மா இருக்கவில்லை நான்…

ஹை.. உன் பெயரென்ன..உன்னோட சாம்பல்கலர் அரக்குபார்டர் பட்டுப் பாவாடை ரொம்ப நன்னா இருக்கே..உன்னோட அந்த க் கருநீலமேல்சட்டையும் பொருத்தமா இருக்கே….குட்டிப் பொட்டு ஜோரா இருக்கு… கனகாம்பரப் பூ எப்போதுமே அழகுதான் அது உன் தலையில சிரிக்குது… நீயும் நன்னா சிரிக்கறே..வா என் பக்கத்திலே..

குட்டிப் பெண் சகஜமாகி என்னருகில் வந்து உட்கார்ந்து விட்டது…

இன்றைய ஸ்லோகத்தில்…அம்பாளின் அழகை வர்ணித்து எழுந்தருளும்படி சொல்கிறார் ஆதிசங்கரர்..

**
Kvanat-kanchi-dama kari-kalabha-kumbha-stana-nata
Pariksheena madhye parinata-sarachandra-vadana;
Dhanur banan pasam srinim api dadhana karatalaii
Purastad astam noh Pura-mathitur aho-purushika.

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா

அழகாய் கலகலவென ஒலியெழுப்பும் சதங்கைகள் கொண்ட ஒட்டியாணத்தை இடையில் அணிந்திருப்பவளும்,யானையின் மத்தகம் போன்ற ஸ்தனங்களால் சற்றே வளைந்த சிறிய இடை உள்ளவளும்,சரத்காலத்துப் பூர்ண சந்திரனைப் போன்ற முகம் கொண்டவளும்,கரும்புவில், மலரம்பு, பாசம், அங்குசம் தரித்தவளும திரிபுரத்தை எரித்த சிவனைக் கணவனாக வாய்க்கப் பெற்றவளுமான பராசக்தியே, அம்பிகையே.. எங்கள் எதிரில் காட்சியளிப்பாயாக
*

பகைமையை அழிக்கும் இந்த ஸ்லோக பாராயணம்,..


myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 5:46 pm

நாளும் ஒரு அழகின் அலை 103459460 
myimamdeen
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் myimamdeen

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 03, 2014 6:16 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 8

****

“நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்”

“சரி இத எதுக்கு என்கிட்ட சொல்ற”

“இது என்னன்னு உனக்குத் தெரியுமா மனசாட்சி”

“தெரியுமே. இதையெல்லாம் வச்சுக்கிட்டு வைரமுத்து ஒரு படத்தில பாட்டுல்லாம் எழுதியிருக்காரு..”

“அப்புற்ம்”

“ சுஜாதா அஞ்சுகதை எழுதியிருக்கார்”

“வேற”

“ஹேய் படுத்தாத.. ஆமாம்.. எஸ்.பி ஷைலஜா கமல் கிட்ட திட்டு வாங்குவார்…பஞ்ச பூதம் நா நீ சொன்னது..அத விட்டுட்டு அந்தம்மா பூதம்னு முகபாவம் காட்டுதுன்னு..”

“ஓகே.. இப்பவாவது சரியா சொன்னியே..பஞ்ச பூதங்கள் கொண்டது இந்த உலகு.. அம்பிகையின் சக்தி இந்த உலகில் இல்லாத இடம் கிடையாது. அப்புறம அம்பாளைத் தொழுது வழிபடும் முறைகள் உனக்குத் தெரியுமோ”

“எனக்கு எப்படிடாப்பா தெரியும்...உனக்குத் தெரிஞ்சது தான் தெரியும்…

நீ என்ன பண்றே காலங்கார்த்தால குளிச்சுட்டு அரக்கப் பரக்க பேண்ட் சொக்கா போட்டுக்கிட்டு டை கட்டிக்கிட்டே பூஜை ரூம் வந்து எல்லா சாமிகளையும் ஒரு பார்வை பார்த்துட்டு ஷண நேரம் கண்ணை மூடித்தெறந்து டபக்குன்னு ஹாலுக்கு போய் வீட்டுக்காரி வச்சுருக்கற ப்ரேக்ஃபாஸ்ட முழுங்கி  ஷீ போட்டுக்கிட்டு ஆஃபீஸ் ஓடற

..லீவ் நாள்ல அந்த ஷண நேர்ம் கொஞ்சம் ரெண்டு செகண்டா மாறும்..உன்க்குத் தெரிஞ்சது இவ்ளவு தான்”

“சரி சரீ ஈ.. அம்பாளை வழி படறதுக்குப் பல வழிமுறை உண்டு..ஸ்ரீ சக்ரம் என்ற யந்திர வடிவிலோ, அல்லது விக்ரஹ வடிவிலோ அம்பாளை மந்திர் பூர்வமாக நிலை நிறுத்தி வழிபடலாம்

….மானசீகமாகவும் பூஜை செய்து வழிபடலாம்..இந்தமானசீக பூஜை எல்லாம் எல்லாராலும் செய்ய முடியாது..மகா யோகிகளால் மட்டுமே அம்பாளை மனதில் தியானித்து அருள்பெற இயலும்\

ஸ்ரீசக்ர பூஜை, மானஸ பூஜை இதெல்லாம் பண்ணுவதற்கு எல்லாராலும்முடியாது”

“ஏதோ புரிஞ்சுண்ட மாதிரி சொல்ற..ஆமா இதைத் தான் இன்றைய ஸ்லோகம் சொல்கிறதா”

“”ஆமாம்..கதம்ப மரங்கள்னு இங்க வருது.. அது என்னன்னுகொஞ்சம் தேடிப் படிச்சுப் பார்த்தால் இந்த கதம்ப மரங்கள்ளாம் என்ன பண்ணும் தெரியுமோ..வானில் மேகங்கள் வந்தாலே புஷ்பிக்க ஆரம்பிச்சுடுமாம்..”

“இஸிட்”

“யா.,..கற்பக விருட்சங்களால் நிறைந்த சோலை- அதாவது வேண்டிய வரங்களைக் கொடுக்கும் கற்பக மரங்கள் நிறைந்த சோலை..அப்புறம் இந்த கதம்ப மரங்கள் உள்ள காடு. கடம்ப மரம்னும் சொல்லலாமான்னு தெரியலை..”

“சரி சரி.ஸ்லோகத்துக்கும் அர்த்தத்துக்கும் வா..மக்கள் அடுத்த போஸ்டுக்குப் போய்டப் போறாங்க..”

**

Sudha-sindhor madhye sura-vitapi-vati parivrte
Mani-dweepe nipo'pavana-vathi chintamani-grhe;
Shivaakare manche Parama-Shiva-paryanka-nilayam
Bhajanti tvam dhanyah katichana chid-ananda-laharim.

ஸிதா ஸிந்தோர்-மத்த்யே ஸிரவிடபி-வாடீ-ப்ரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலையாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த-லஹரீம்

தாயே அம்பிகே.! அமுதக் கடலின் நடுவில் கற்பக விருட்சங்கள் அமைந்த மணித்வீப எனச் சொல்லப் படும் ரத்தினங்களைப் போல ஜ்வலிக்கும் தீவில்கதம்ப மரங்கள் நிறைந்ததும் சிந்தாமணிகளால் ஆனதுமான அரண்மணையில் மங்களகரமான மஞ்சத்தில் சதாசிவன் மடியில் அமர்ந்தவளான உன்னை, ஞானக் கடலலையாக இருக்கும் உன்னை -வழிபட புண்ணியம் செய்தவர்களாலேயே முடியும்..

**

மகாசக்தியை தியானிக்கும் முறைகளை ஸ்ரீவித்யா என்றுசொல்வர்.

***

Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக