புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
3 Posts - 2%
jairam
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
7 Posts - 2%
jairam
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமன் உள்நாட்டுப் போர்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:08 pm

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:09 pm

ஏமனில் சவுதி தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் - ரஷியா, ஈரான் வலியுறுத்தல்

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷியா மற்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன. தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷியா மற்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஏமன் விவகாரம் தொடர்பாக ஈரான் அதிபர் ஹாசன் ரெளஹானியிடம், ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் பேசியுள்ளார். "உடனடியாக ஏமனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும், நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்." என்று புதின் கேட்டுக் கொண்டதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜவாத் ஜாரிப்பும், ஏமனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பிராந்தியத்தில் மேலும் உறுதியைக் குலைப்பதாகவே இருக்கும், கடந்த சிலமாதங்களாக பெரும் தாக்குதல் காரணமாக கடும் வன்முறை ஏற்பட்ட பின்னர் ஹவுதி கையில் சிக்கியுள்ளது. என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், ஏமனில் ராணுவ நடவடிக்கையை உடனடியாக சவுதி நிறுத்த வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம். என்று கூறினார். இதற்கிடையே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான்தான் பயிற்சி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை தெக்ரான் மறுத்து உள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:10 pm

ஏமனில் சவுதி அரேபிய விமானங்கள் குண்டு வீச்சு இந்தியர்கள் வெளியேற்றம்

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் மன்சூர் காதி அதிபராக உள்ளார். இவருக்கு எதிராக ஷியா பிரிவினர் ஹூதி என்ற புரட்சி படையை உருவாக்கி அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தலைநகர் சனாவில் இருந்து அதிபர் காதி வெளியேறி ஏடன் நகரில் உள்ள மாளிகை யில் குடியேறினார். இந்த நிலையில் அந்த மாளிகை மீது புரட்சி படையினர் திடீரென குண்டு வீச்சு நடத்தினர். இதற்கிடையே புரட்சி படையின் பாது காப்பு மந்திரியை சிறை பிடித்தனர்.இந்த நிலையில் புரட்சிப் படையினரை முறியடித்து ஏமன் நாட்டை காப்பாற்ற சவுதி அரேபியா முன் வந்தது. அதை தொடர்ந்து நேற்று ஏமன் தலைநகர் சனா மற்றும் புரட்சி படையினர் வசம் இருக்கும் பகுதிகளில் சவுதி அரேபியாவின் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குண்டு வீசி தக்குதல் நடத்தின

அதில் புரட்சிப் படையின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. மேலும் சவுதி அரேபியாவின் 1 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர் கள் ஏமனில் குவிக்கப் பட்டுள்ளனர்.

இவர்களுடன் கத்தார் ஜோர்டான், குவைத், பக்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.

தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால் ஏமனில் தங்கி பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

ஏமனில் 3,500 இந்தியர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் தலைநகர் சனா மற்றும் ஏடன் உள்ளிட்ட பெரிய நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது அவர்கள் ஏமனில் உள்ள அல்-ஹூடியா துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இந்தியா திரும்புகின்றனர்.

புரட்சி படையினரின் தாக்குதலை தொடர்ந்து ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் எந்த நாட்டுக்கு சென்றார் என திட்ட வட்டமாக தெரிவிக்க வில்லை.எகிப்து நாட்டிற்கு சென்று இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். ஆனால் அதிபர் ஹாதி சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி அரேபியா அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏடன் நகரில் இருந்து வெளியேறிய அவர் தலைநகர் ரியாத்தை சென்றடைந்தாக கூறப்பட்டுள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2015 5:14 pm


கிளச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் லட்சக்கணக்கான
ராணுவ வீரர்களையும் ஏமனுக்கு அனுப்ப சவுதி தயாராகி
வருகிறது. தொடர்ந்து ஏமனில் நெருக்கடி நிலவுவதால்,
அங்கு பணியாற்றி வரும் இந்தியர்களை மீட்க கப்பல்களை
அனுப்ப உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்களை உடனடியாக
வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டில் 3,500 இந்தியர்கள் வசித்து வருவதாகக் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்நிலையில், தலைநகர் சனாவில் மட்டும்
2,500 இந்தியர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அதில் பெரும்பாலானோர் செவிலியர்களாகப் பணிபுரிந்து
வருகின்றனர். அந்நாட்டை விட்டு புறப்படத் தேவையான
சிறப்பு உதவிகளை சனாவில் உள்ள இந்திய தூதரகம் அளிக்கும்
என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை 00-967-734 000 658
மற்றும் 00-967-734 000 657 என்ற அவரச தொடர்பு எண்ணில்
தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தூதரகம்
தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 12:06 pm

ஏமனில் சவுதி அரேபியாவின் தாக்குதலுக்குக் காரணமான ஹவுத்திகள் யார்?

ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் மீது சவுதி அரேபியா நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர்.

ஹவுத்திகள் யார்?

ஹவுத்திகள், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள். இவர்கள் வடமேற்கு ஏமன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவானார்கள் என்பது பற்றி டவ்சன் பல்கலைக் கழக பேராசிரியர் சார்ல்ஸ் ஷ்மிட்ஸ் ஒரு முறை எழுதிய போது 1990-ம் ஆண்டுகளில் ஷபாப்-அல்-முமானின் (Believing Youth)என்ற குழுவிலிருந்து ஹவுத்தி கிளர்ச்சி படை உருவானதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பெரும்பாலும் ஷியா இஸ்லாமியத்தின் ஸயாதி கிளைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளாக ஏமனை ஆதிக்கம் செலுத்தி வந்தப் பிரிவாகும் இது. ஆனால் 1960-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சிவில் யுத்தத்திற்குப் பிறகு ஏமன் நாட்டு அரசால் இவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

2003-ம் ஆண்டு இராக் நாட்டின் மீது அமெரிக்கா தனது படையெடுப்பை நடத்த Believing Youth குழுவின் தலைவர்களில் ஒருவரான ஹுசைன் அல்-ஹவுத்தி அமெரிக்காவை கடுமையாக எதிர்த்ததோடு அப்போது ஏமன் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேயை கடுமையாக விமர்சித்தார் ஹுசைன் அல் ஹவுத்தி.

இதனையடுத்து ஹவுத்தியின் ஆதரவாளர்கள் அரசுப்படைகளுடன் மோதிய போது ஏமன் படைகளால் ஹவுத்தி கொல்லப்பட்டார். அதன் பிறகு இந்த அமைப்பு இவரது பெயருக்கு மாறியது.

ஆனாலும் இவரது மரணம் கிளர்ச்சிப் போக்கை மாற்றிவிடவில்லை. இவரது உறவினரான 33-வயது அப்துல் மாலிக் ஹவுத்தி தற்போது தலைவராக உள்ளார்.

பேராசிரியர் ஷ்மிட்ஸ் மேலும் இவர்கள் எப்படி சக்தி வாய்ந்த இயக்கமாக உருமாறினார்கள் என்பதை எழுதும் போது, அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்குள் நுழைந்த ஹவுத்திகள், மாணவ செயல்வீரர்கள் நிலையிலிருந்து கிளர்ச்சியாளர்களாக உருப்பெற்றனர். இவர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறையும் தொடர்ந்தது.

தொடர் சண்டைகளுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு அரசுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அதிபர் சலேவுக்கு எதிராக பெரிய ஆர்பாட்டங்கள் அடுத்த ஆண்டே எழுந்த போது ஹவுத்திகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தது.

இதனைப் பயன்படுத்தி வடமேற்குப் பகுதியில் பெருமளவு கட்டுப்பாட்டை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. மேலும் அதிபர் சலே ஆட்சியிலிருந்து இறங்கிய பிறகு தேசிய உரையாடல் மாநாட்டில் பங்கு பெற்றனர்.

2012-ஆம் ஆண்டு ஐ.நா.வின் அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு ஹாதி அதிபர் பதவி நாற்காலியில் அமர்ந்தார். அது முதல் ஹாதிக்கு பிரச்சினைகள் தொடங்கின. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் இயக்கம் தலைதூக்கியிருந்தது. அல்-காய்தா ஒரு புறம். இதனை விட ராணுவத்தில் பல தலைகள் முன்னாள் அதிபர் சாலேவுக்கு மறைமுக ஆதரவு அளித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தங்களது முந்தைய ‘முந்தைய வெற்றி’-யை மனதில் இறுத்தி தங்களது செயல்பாட்டை ஹவுத்திகள் இன்னும் இறுக்கினர். அரசுப் படைகளின் உதவியுடனேயே ஹவுத்திகள் ஏமன் தலைநகர் சனாவை நெருங்கினர்.இந்த வாரத்தில் சனாவில் தீவிர சண்டை மூண்டது.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 12:06 pm

இது இஸ்லாமியத்தின் உட்பிரிவு மோதலா?

இந்தக் கேள்விக்கு ஆம்/இல்லை என்று இருபதில்களும் பொருந்தும். ஹவுத்திகள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது சன்னி பிரிவினருக்கு எதிராக. ஏமன் நாட்டின் ஷியா சிறுபான்மையினரை பிரதிநித்துவம் செய்வதான கருத்தின் அடிப்படையில் அவர்கள் இயங்குவதாகக் கூறுகின்றனர். ஏமன் நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 35% ஷியா பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எதார்த்தம் மிகவும் சிக்கலானது. ஸயாதி ஷியா பிரிவினர் மற்ற ஷியா இஸ்லாம் பிரிவிலிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். மைய நீரோட்ட ஷியா இஸ்லாமியம் 12 இமாம்களை அங்கீகரிக்கிறது என்றால் இவர்கள் 5 இமாம்களையே அங்கீகரிக்கின்றனர். இன்னொரு புரியாத புதிர் என்னவெனில் ஸயாதி ஷியா இஸ்லாமியம் இறையியல் ரீதியாக சன்னி இஸ்லாமியத்துடன் நெருக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.

இங்கு இன்னொரு புரியாத புதிரையும் குறிப்பிடுவது அவசியம், ஏமனை 12 ஆண்டுகள் ஆண்ட அதிபர் சலே, ஸயாதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதே. இவரையும் ஹவுத்திகள் தாக்கினர். ஆனால், அதிகாரத்திலிருந்து இறங்கிய பிறகு ஹவுத்திகளுடன் இவர் நட்புறவு கொண்டுள்ளார் என்ற சந்தேகமும் பரவலாக இருந்து வருகிறது.

ஆகவே, இந்த கிளர்ச்சிப்படையின் நோக்கம் பற்றி ஆய்வாளர்கள் கூறும் போது முழுதும் ஷியா-சன்னி உட்போராக இதனை பார்க்க முடியாது என்கின்றனர்.

ஸயாதி அடையாளம் மற்றும் பொருளாதார அதிருப்தி ஆகியவற்றினால் இவர்கள் ஒன்று திரண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கிளர்ச்சிப்படைக்கு போதிய ஆதரவு இருப்பதற்குக் காரணம், ஏமன் மேட்டுக்குடியினருக்கு எதிரான ஒரு இயக்கமாக இதனை மக்கள் பார்ப்பதே என்று மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள சில்வனா டோஸ்கா என்பவர் கூறுகிறார்.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 12:07 pm

இந்த விவகாரத்தில் ஈரானின் பங்கு என்ன?

சவுதி அரேபியா மற்றும் பிற சன்னி இஸ்லாமிய நாடுகள் ஈரானின் உதவி ஹவுத்திகளுக்கு இருப்பதை மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றனர். ஆனால் ஹவுத்திகள் இதனை மறுத்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், சவுதி, ஏமன், மற்றும் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் பேசிய போது, அனைவரும் ஒருகுரலில் ஈரான், ஹவுத்திகளுக்கு பணம், பயிற்சி, ஆயுதம் அளிப்பதாக குற்றம்சாட்டினர்.

இருந்தாலும் ஈரானின் உதவி பற்றி உறுதியாக ஒன்றும் கூற முடியவில்லை.

இதில் அமெரிக்காவின் நலன் என்னவென்பதையும் தெளிவாக கணிக்க முடியவில்லை. காரணம் ஏமனில் அமெரிக்காவின் பெரிய கவலை அல்-காய்தாவே.

ஈரான் உதவி ஹவுத்திகளுக்கு கிடைப்பதை சற்றே ஏமன், சவுதி அரேபியா ஊதிப்பெருக்கக் காரணம் அமெரிக்க உதவியைப் பெறவே.

தற்போதைய சன்னி ஆதரவு ஏமன் அரசு கவிழ்ந்தால், சவுதி அரேபியாவின் உதவியுடன் வாழ்ந்து வரும் ஏமன் நாடு அதனை இழக்கும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும்.

எது எப்படியிருந்தாலும் ஏமன் நாட்டை ஒரு மிகப்பெரிய பிரச்சினை சூழ்ந்துள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

[இந்தக் கட்டுரை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆடம் டெய்லர் என்பாரால் எழுதப்பட்டது.
தமிழில்: ஆர்.முத்துக்குமார்]




ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 12:09 pm

ஏமன் தலைநகரில் விடிய, விடிய குண்டுமழை ஏதன் நகரில் இருந்து தூதர்கள் வெளியேற்றம்

அரபு நாடான ஏமன் நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். நாட்டின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பல இடங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர்.

அவர்களுக்கு எதிராக சவுதி அரேபிய கூட்டணி படை வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அதற்கு மத்தியிலும் அவர்கள் முன்னேறி வருகிறார்கள்.

ஏமனின் துறைமுக நகரான ஏதனிலிருந்து சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்களையும், தூதரக அதிகாரிகளையும் பாதுகாப்புடன் வெளியேற்றும் நடவடிக்கையை சவுதி கடற்படை தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தலைநகர் சனாவில் விடிய விடிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதன் சேத விவரம் தெரிய வரவில்லை.

இதற்கிடையே சவுதி அரேபிய மன்னர் சல்மானை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஏமனில் சவுதி அரேபியா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைக்கு தனது முழுமையான ஆதரவை தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தை மூலம் ஏமனில் அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 12:10 pm

வெளியேறும் மக்கள்

ஏடனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுகின்றனர். வெள்ளிக்கிழமை காலை முதல் நடந்த இரண்டாம் கட்ட தாக்குதலால் அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்கின்றனர்.

ஹவுத்திக்கு ஆதரவு, சவுதிக்கு எதிர்ப்பு: ஈரான்

ஹவுத்தி ராணுவத்தின் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதல்கள் மற்றும் படையெடுப்பு நடவடிக்கை ஏமனின் வருங்கால நிலைமையை மோசமானதாக்கும் என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

அதே சமயம். சவுதி அரேபியா நடத்தும் போருக்கு உதவ எகிப்து போர் கப்பல்கள் ஏடனுக்கு விரைந்துள்ளது.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சனாவை, ஹவுத்தி கிளர்ச்சிப் படை கைப்பற்றியது. அதிபர் மன்சூர் ஹதி துறைமுக நகரான ஏடனுக்கு தப்பிச் சென்று அந்த நகரை ஏமனின் தலைநகராக அறிவித்தார். கடந்த வாரம் ஏடன் மீதும் ஹவுத்தி கிளர்ச்சிப் படை தாக்குதலை தொடங்கியது.

கிளர்ச்சிப் படை முன்னேறி வரும் நிலையில் அதிபர் மன்சூர் ஹதியும் அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து ஏமனுக்கு அருகில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ளன. அந்த நாடுகளின் தலைவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்த ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை ஆதரித்து வருகின்றனர்.

அதேநேரம் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்தப் பின்னணியில் அதிபர் மன்சூர் ஹதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் ஏமனுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:13 pm

உள்நாட்டுப் போர் மேகம் சூழ்ந்துள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்டுவர சிறப்பு விமானங்கள், கப்பல்: சுஷ்மா அறிவிப்பு

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் ஆண்கள், பெண்கள் என சுமார் 3500 இந்தியர்கள் தங்கியுள்ளனர். பெண்களில் பலர் நர்ஸ்களாகவும், ஆண்களில் பலர் அலுவலகப் பணியாளர்களாகவும், கூலி தொழிலாளிகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.

அரேபிய நாடுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடான ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா நேற்று முன்தினம் வான்வழி தாக்குதலை தொடங்கியது.

இதனால், அங்கு வாழும் இந்தியர்களை ஏமனில் இருந்து வெளியேற்ற அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் முயன்று வருகின்றது. அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள 24 மணிநேர அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருகட்டமாக சுமார் 80 இந்தியர்கள் தலைநகர் சனாவில் இருந்து ஏமனி ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று ட்ஜிபவுட்டி நகரை வந்தடைந்தனர்.

இந்நிலையில், ஏமன் அரசுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு நாளைக்கு 3 மணிநேர காலக்கெடுவில் அங்குள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்தார்.

இதேபோல், சுமார் 1500 பேரை ஏற்றிவரக்கூடிய கப்பலை ஏமனுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஏமன் உள்நாட்டுப் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக