புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
72 Posts - 53%
heezulia
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_m10காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கா முட்டை - விமர்சனம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 09, 2015 12:16 am

First topic message reminder :


காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 9b637037-ecc2-4e2c-af69-3b053e746f43_S_secvpfநடிகர் : ரமேஷ் திலகநாதன்
நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் : மணிகண்டன் எம்
இசை : ஜி வி பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு : மணிகண்டன் எஸ்

ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதை எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதையொட்டி செல்லும் கதைதான் காக்கா முட்டை.

படத்தில் இரண்டு சிறுவர்கள் சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களது தாயாக ஐஸ்வர்யா. ஜெயிலில் இருக்கும் தனது கணவரை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்று ஐஸ்வர்யா முயற்சிகள் எடுத்து வருகிறார்.

எனினும் படத்தின் பெரும்பாதி இரண்டு சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரை சுற்றியே பயணிக்கிறது. எந்த இடத்திலும் சற்றும் தொய்வில்லாமல் இவர்களது நடிப்பு கதையை தூக்கி நிறுத்தியிருக்கிறது. படத்தில் எந்த இடத்திலும் சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமாக காட்சிகளில் பதிந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல், இவர்களுடைய நண்பர்களாக வரும் சிறுவர்களும் எதார்த்தம் மீறாமல் நடித்து கைதட்டல் பெறுகிறார்கள். முகம் நிறைய மேக்கப்பை பூசிக்கொண்டு நடிகைகளுக்கு மத்தியில், ஐஸ்வர்யா அழுக்கு முகத்தோடும், நல்ல நடிப்போடும் படம் முழுக்க கம்பீரமாய் வலம் வந்திருக்கிறார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதி.

இதுவரையிலான படங்களில் மிகவும் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த ஜோ மல்லூரி, இந்த படத்தில் சிறுவர்களோடு சேர்ந்து சிறுவனாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், சூது கவ்வும் ரமேஷ், யோகி பாபு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணிகண்டன் தனது முதல் படத்தில் மிக அழுத்தமான பதிவை தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கிறார் என்றால் மிகையாகாது. வெளிவருவதற்கு முன்பே பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் காக்கா முட்டை இவருக்கு சினிமாவில் ஒரு எனர்ஜியை கொடுத்திருக்கிறது என்று நம்பலாம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரொம்பவும் திறமையோடு வேலை வாங்கியிருக்கிறார் என்பது திரையில் பார்க்கும் காட்சிகள் மூலம் தெரிகிறது. இவருடைய பலமே படத்தின் திரைக்கதைதான். எந்த இடத்திலும் படம் போரடிக்கிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கச்சிதமாக இருக்கிறது. பின்னணி இசையும் அபாரம். மணிகண்டன் ஒளிப்பதிவில் சென்னையை அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

மொத்தத்தில் ‘காக்கா முட்டை’ அழகு.


மாலைமலர்




காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Fri Jun 12, 2015 2:05 pm

நன்றி விமந்தனி !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 12, 2015 2:43 pm

எல்லோரும் பார்த்துட்டு எனக்கு கதை சொல்லுங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 12, 2015 8:28 pm

காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 WLVDTWURShaNW7hVTVyg+p10d
-
குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்குக் கதை சொன்ன,
அதுவும் உலகமயமாக்கலின், உணவு அரசியலின், விளிம்பு
நிலை மக்களின் வாழ்வியலை மனதுக்கு நெருக்கமாகச்
சொன்ன 'காக்கா முட்டை’... நம் சினிமா!
-
விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 12:33 pm

seltoday wrote:" உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது , ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம் " - கன்பூசியஸ்.


இணையத்தின் உதவியால் உலக சினிமா ஓரளவிற்கு பரிச்சயமான சூழலிலும் தமிழ் சினிமா, இன்னமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான காதல்களைச் சொல்வதிலும் , டூயட் பாடுவதிலும் ,ஓப்பனிங் சாங் வைப்பதிலும் , பஞ்ச் டயலாக் பேசுவதிலும் ,ஒரே அடியில் ஒன்பது பேரை காற்றில் பறக்க விடுவதிலும் , காமெடி என்ற பெயரில் கழுத்தை அறுப்பதிலும் , திரைக்கதையில் கவனம் செலுத்தாமலும் , முக்கியமாக கதையே இல்லாமல் படமெடுப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் சூழலில் ' காக்கா முட்டை' திரைப்படம் பலவிதமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.


தமிழ் சினிமா மீது பல வருடங்களாகவே இரு விசயங்கள் மீது கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்று சிறுவர்களை சிறுவர்களாக திரையில் காண்பிக்காதது. மற்றொன்று திரையில் பெண்களுக்கு முக்கியத்துவமே கொடுக்காமல் இருப்பது. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் , பெண்களுக்கும் ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். பல திரைப்படங்களில் முக்கிய திருப்பங்கள், சிறுவர் / சிறுமிகளால் ஏற்படும் வகையில் திரைக்கதை பின்னப்பட்டிருக்கும். வண்ணப்படங்களின் வருகைக்குப் பிறகு இந்த இரு பிரிவினரும் முக்கியத்துவத்தை இழந்ததன் காரணம் பிடிபடவில்லை . எவ்வளவோ வளர்ந்து விட்டதாகவும் , உலகத் தொழிற்நுட்பங்களை எல்லாம் இங்கே பயன்படுத்துவதாகவும் சொல்லிக் கொண்டாலும் இந்த நிலை இன்னமும் மாறவில்லை. சிறுவர் படங்கள் என்ற பெயரில் பெரிவர்கள் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்களை நடிக்க வைத்து காதலையும் , வன்முறையையும் திணித்த கொடுமையும் சமீப காலங்களில் இங்கே நடந்தது.!சிறுவர்களை ஓரளவிற்கு சிறுவர்களாக காதலில் , வன்முறையில் ஈடுபடாதவர்களாக காட்டியதற்காகவே ' காக்கா முட்டை ' யை கொண்டாடலாம். ஏதோ ஒரு திரைப்படத்தின் பாதிப்பாக இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்காலாம். ஆனாலும் எடுக்கப்பட்ட விதம் வெகு இயல்பு. ஒரு தமிழ்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வரும் போது முதன் முதலாக மிக லேசாக உணரவைத்தது இந்த காக்கா முட்டை . எல்லா விசயங்களையும் நேர்மறையாகவே காட்சிப்படுத்திய விதம் சிறப்பு .


போகிற போக்கில் கடந்து செல்கிற அதிகம் கவனம் பெறாத எளிய மக்களின் வாழ்க்கை இத்திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சென்னைவாசிகளே கவனிக்காத வாழ்க்கை. முதல் இரண்டு காட்சிகளே இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்பதைச் சொல்லி விடுகிறது. பெரும்பாலான வீடுகளில் தவறாமல் இடம்பெறும் பருப்பு சாம்பாரை அந்தக் கரண்டியில் எடுத்து தட்டில் ஊற்றுவது அவ்வளவு அழகு. சிறிய காட்சி என்றாலும் இது போல யதார்தத்தைக் காண்பிக்க வேண்டும். சிறுவனுக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருப்பதும் அதன் மூலம் குடுப்பதினரால் லேசாக கேலி செய்யப்படுவதும் , காலப் போக்கில் இந்தப் பழக்கம் மாறிவிடுவதும் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிற்றூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் காக்காவின் முட்டையைப் பார்த்ததில்லை ; இந்தத் திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. படத்திற்கு காக்கா முட்டை என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுவதால் படத்துடன் எளிதாக ஒன்றிவிட முடிகிறது. சரக்கு ரயிலிருந்து சிதறி தண்டவாளங்களில் விழுந்த நிலக்கரித்துண்டுகளை சேகரித்து பழைய இரும்பு கடையில் எடைக்குப் போடும் பழக்கம் இருப்பதை இத்திரைப்படம் பதிவு செய்கிறது. இத்திரைப்படம் முழுவதுமே நாம் கடந்து போகிற எளிதில் கவனம் பெறாத நிறைய விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


தங்களின் எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சி , துன்பம் , துயரம் என்று எல்லாவற்றையுமே இயல்பாக கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அந்தச் சிறவர்களின் அப்பா ஜெயிலுக்கு போனதற்காக யாரும் இவர்களின் குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் இந்த மக்களையும் சுரண்டி பிழைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இயக்குநர் காட்சிப்படுத்துகிறார். சிறுவர்கள் இருவரும் வெறும் கால்களுடன் படம் முழுக்கவே மேடு , பள்ளம் , குப்பை , கூவம் , ரயிலடி , சாலை என்று நடந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நாமும் நடக்கிறோம். இவர்களின் வாழ்வைப் போலவே திரைப்படமும் எந்த இடத்திலும் தேங்கவேயில்லை. சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை புரிந்து கொண்டு காட்சிகளின் மூலமே நிறைய விசயங்களை வெளிப்படுத்துகிறார். இந்த சிறுவர்கள் அணியும் பொருத்தமில்லாத வெளுத்துப்போன ஆடைகள் , அன்றாட வாழ்வில் இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்று நிறையவே உண்மைக்கு நெருக்கமாக பதிவுசெய்யப்படுகின்றன.


ஏழ்மையான சூழலில் வாழ்ந்தாலும் தங்களின் சுயமரியாதையை இழக்காமல் வாழும் இந்த மக்களின் ( சிறுவர்களின் ) மீது மரியாதையை வரவழைக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. திரைப்படக் காட்சிகள் வெகு இயல்பாக கட்டமைக்கப்பட்டிருந்தாலும் நுட்பமாக அரசியல் பேசுகின்றன. அவரவர் புரிதலுக்கு ஏற்ப இதைப் புரிந்து கொள்ளலாம். உலக வணிகமயமாக்கலின் தாக்கம் பிட்சாவை குறியீடாக வைத்து விவரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் அவ்வளவு எளிதாக வணிகமயமாக்கல் முன் வைக்கும் நவீன வாழ்விற்கு நகர்ந்து விட முடியாது என்பதையே இத்திரைப்படத்தின் கடைசி வசனம் " பிட்சா நல்லாவே இல்லடா , ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு " உணர்த்துகிறது. விவசாய சூழலில் பிறந்து வளர்ந்த ஒருவர் இன்றைய வாழ்வு முன் வைக்கும் முதன்மை வேலையான குளுகுளு அறையில் இருந்த இடத்திலிருந்தே வேலை பார்க்கும் மென்பொறியாளர் பணியை மிகுந்த உழைப்பிற்கு , சிரமங்களுக்கு பிறகு அடைந்த பிறகு "சே ! இதுக்கு விவசாயமே பார்க்கலாம் " என்று நினைக்கிறார்கள் .நினைப்பதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களில் கணிசமான எண்ணிக்கையில் 'இயற்கை விவசாயம் ' பார்க்க கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நாகரிக வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டு தீண்டாமையை கைவிடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருவதை இத்திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது . பாரம்பரிய உடை என்று சொல்லிக் கொள்ளும் வேட்டியை கூட எல்லா இடங்களிலும் கட்டிக் கொள்ளும் உரிமையை ஒரு போராட்டத்திற்கு பிறகு தான் பெற முடிந்தது. போராடாமல் யாருக்கும் எதுவும் கிடைக்காது போல.


சில்ரன் ஆப் கெவன் உள்ளிட்ட சில திரைப்படங்களை நினைவுபடுத்தினாலும் இது ஒரு யதார்த்த சினிமா . இத்திரைப்படம் உலக சினிமாவா ? தெரியாது . ஆனால் , அசலான இந்திய சினிமா. உலகின் வேறுபகுதிகளில் வசிப்பவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கும் போது இந்திய முகத்தைத் தெரிந்து கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் பொருளாதார தீண்டாமைக்கு உலக நாடுகள் என்ன பதில் வைத்திருக்கின்றன. தெரியவில்லை.


ஒரு வாழ்வனுபவம் அழகாக நேர்மறையாக அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெ.செல்வராஜ்
www.jselvaraj.blogspot.in


சிறந்த விமர்சனம் செல்வா! பாராட்டுக்கள்!



காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 12:48 pm

seltoday wrote:எனது பெயர் தான் ஜெ.செல்வராஜ் . எனது சொந்த கட்டுரைகளையே அதிகம் பதிவிடுகிறேன். சரிங்க இனி சரி செய்து கொள்கிறேன்.  ஆனாலும் எனது பதிவை கமெண்ட் பகுதியில் பதிவிடுவதால் நிறைய பேர் வாசிக்காமலே போய் விடும் சூழல் உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1144330

நன்றி ராஜ், அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், எல்லோரும் படித்து பின்தான் பின்னுட்டம் போடுவோம், கண்டிப்பாக உங்கள் பதிவை எல்லோரும் படிப்பார்கள், அதற்கு மேலே , உங்கள் பதிவை மேற்கோள் காட்டி பதிவு போட்ட சிவாவே சாக்ஷி புன்னகை............

.
.
நீங்க கூர்ந்து பார்த்திர்கள் என்றால், சில படங்களுக்கு 2 - 3 விமரிசனகள் கூட இங்கு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.............. ஆனால் தொடர் பதிவு போல இருக்கும்.......ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு கொள்கை இருப்பது போல, நம் தளத்தில் , ஒரு விஷயத்துக்கு  ஒரு திரி , அதாவது,  ஏதாவது ஒன்றை பற்றி நாம் எழுத  ஆரம்பித்தால் அது பற்றின முழு விவரங்களும் ஒரே திரி இன் கீழ் அடங்க வேண்டும் என்று கொள்கை இருக்கு. அதனால் தான் நான் இணைத்தேன்............

இது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்..ஓகே வா?

புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராஜ் புன்னகை.............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தொடர்ந்து உங்கள் மேலான பதிவுகளை இடுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 1:01 pm

krishnaamma wrote:
seltoday wrote:எனது பெயர் தான் ஜெ.செல்வராஜ் . எனது சொந்த கட்டுரைகளையே அதிகம் பதிவிடுகிறேன். சரிங்க இனி சரி செய்து கொள்கிறேன்.  ஆனாலும் எனது பதிவை கமெண்ட் பகுதியில் பதிவிடுவதால் நிறைய பேர் வாசிக்காமலே போய் விடும் சூழல் உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1144330

நன்றி ராஜ், அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், எல்லோரும் படித்து பின்தான் பின்னுட்டம் போடுவோம், கண்டிப்பாக உங்கள் பதிவை எல்லோரும் படிப்பார்கள், அதற்கு மேலே , உங்கள் பதிவை மேற்கோள் காட்டி பதிவு போட்ட சிவாவே சாக்ஷி புன்னகை............

.
.
நீங்க கூர்ந்து பார்த்திர்கள் என்றால், சில படங்களுக்கு 2 - 3 விமரிசனகள் கூட இங்கு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.............. ஆனால் தொடர் பதிவு போல இருக்கும்.......ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு கொள்கை இருப்பது போல, நம் தளத்தில் , ஒரு விஷயத்துக்கு  ஒரு திரி , அதாவது,  ஏதாவது ஒன்றை பற்றி நாம் எழுத  ஆரம்பித்தால் அது பற்றின முழு விவரங்களும் ஒரே திரி இன் கீழ் அடங்க வேண்டும் என்று கொள்கை இருக்கு. அதனால் தான் நான் இணைத்தேன்............

இது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்..ஓகே வா?

புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராஜ் புன்னகை.............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தொடர்ந்து உங்கள் மேலான பதிவுகளை இடுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


பாராட்டுக்கள் அக்கா!
அழகாக நம் தளத்தின் விதிமுறையை எடுத்துக் கூறியுள்ளீர்கள். அன்பு மலர்



காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 1:17 pm

சிவா wrote:
krishnaamma wrote:
seltoday wrote:எனது பெயர் தான் ஜெ.செல்வராஜ் . எனது சொந்த கட்டுரைகளையே அதிகம் பதிவிடுகிறேன். சரிங்க இனி சரி செய்து கொள்கிறேன்.  ஆனாலும் எனது பதிவை கமெண்ட் பகுதியில் பதிவிடுவதால் நிறைய பேர் வாசிக்காமலே போய் விடும் சூழல் உள்ளதே !
மேற்கோள் செய்த பதிவு: 1144330

நன்றி ராஜ், அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், எல்லோரும் படித்து பின்தான் பின்னுட்டம் போடுவோம், கண்டிப்பாக உங்கள் பதிவை எல்லோரும் படிப்பார்கள், அதற்கு மேலே , உங்கள் பதிவை மேற்கோள் காட்டி பதிவு போட்ட சிவாவே சாக்ஷி புன்னகை............

.
.
நீங்க கூர்ந்து பார்த்திர்கள் என்றால், சில படங்களுக்கு 2 - 3 விமரிசனகள் கூட இங்கு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.............. ஆனால் தொடர் பதிவு போல இருக்கும்.......ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு கொள்கை இருப்பது போல, நம் தளத்தில் , ஒரு விஷயத்துக்கு  ஒரு திரி , அதாவது,  ஏதாவது ஒன்றை பற்றி நாம் எழுத  ஆரம்பித்தால் அது பற்றின முழு விவரங்களும் ஒரே திரி இன் கீழ் அடங்க வேண்டும் என்று கொள்கை இருக்கு. அதனால் தான் நான் இணைத்தேன்............

இது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்..ஓகே வா?

புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராஜ் புன்னகை.............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தொடர்ந்து உங்கள் மேலான பதிவுகளை இடுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


பாராட்டுக்கள் அக்கா!
அழகாக நம் தளத்தின் விதிமுறையை எடுத்துக் கூறியுள்ளீர்கள். அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1144674

மிக்க நன்றி சிவா புன்னகை................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 8:55 am

காக்கா முட்டை ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ; மணிகண்டன் !
இசை; ஜி .வி .பிரகாஷ் குமார் !
சரியான படத்திற்கு சரியான தேசிய விருது வழங்கிய தேர்வுக் குழுவிற்கு நன்றி .இயக்குனர் மணிகண்டன் அவர்கள் படத்தை சிற்பி சிலை செதுக்குவது போல செதுக்கி வெற்றி பெற்றுள்ளார் .மக்களை முட்டாளாக்கும் பேய்ப்படமும் மசலாப்படமும் எடுக்கும் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம்.
இந்தப்படத்தில் குத்துப்பாட்டு இல்லை . வெட்டுக் குத்து இல்லை சண்டைக்காட்சி இல்லை ,கவர்ச்சி நடிகை நடனம் இல்லை .நடிகையின் சதையை நம்பாமல் நல்ல கதையை நம்பி படம் எடுத்துள்ளனர் .பாராட்டுக்கள் .நம்பமுடியாத கதாநாயகன் துதி இல்லாத நல்ல படம்
படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து படத்தோடு ஒன்றி விடுகிறோம் .இயக்குனரின் வெற்றி .சென்னையில் சேரியில் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டி உள்ளார் .
கணவன் குற்றம் செய்து விட்டு சிறையில் இருக்கிறான் .மாமியா இரண்டு மகன்களை வளர்க்கும் தாயாக நடிகை ஐஸ்வர்யா சிறப்பாக நடித்து உள்ளார் .அல்ல பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.இரண்டு சிறுவர்களை மையமாக வைத்து கதை நகர்கின்றது.
கணவன் சிறையில் இருப்பதால் மனைவி வேலைக்கு சென்று மகன்கள் இருவரையும் வயதான மாமியாவையும் வளர்த்து வருகிறாள் .கோழி முட்டை சாப்பிட வழி இல்லை .சிறுவர்கள் அம்மா போடும் சோறில் கொஞ்சம் சட்டை பையில் வைத்து எடுத்துச் சென்று காக்காக்கு வைத்து காகா என்று கத்த காக்கா மரத்தில் இருந்து வந்ததும் மரத்தில் ஏறி காக்கா முட்டையைப் பார்க்கிறான். மூன்று உள்ளன .மூன்றையும் எடுக்காமல் தனக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று போதும் .ஒன்று காக்கைக்கு இருக்கட்டும் என்று வைத்து விடுகிறான் எடுத்து வந்து காக்கா முட்டையை இருவரும் குடிக்கின்றனர் .அதில் இருந்து அவர்கள் பெயர் பெரிய காக்கா முட்டை ,சின்ன காக்கா முட்டை என்று ஆகின்றது .காக்கா இருக்கும் மரம் ,சிறுவர்கள் விளையாடும் இடம் . ஒருவர் விலைக்கு வாங்கியதும் . காக்காக்கள் வாழும் மரத்தை அறுக்கும்போது சிறுவர்கள் கலங்கி விடுகின்றனர் . காக்காக்கள் எங்கு வாழும் என்று வருந்துகின்றனர் . நெகிழ்ச்சியான காட்சி.
தம்பிக்கு இரவு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது .அதை கேலி செய்யும் போது மனம் வருதுகின்றான்.
சிறுவர்கள் தொலைக்காட்சிப் பார்த்து நடிகரின் சிம்புவின் ரசிகர்கள் ஆகிறார்கள் .சிம்பு வந்து திறந்து வைக்கும் பீசா கடையை வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்து . பீசா சாப்பிட வேண்டும் என்று ஆசை பிறக்கின்றது .ஏழைச் சிறுவர்கள் அம்மாவிடம் கேட்டுப் பார்க்கிறார்கள் .
அம்மாவோ சிறையில் உள்ள கணவனை வெளியில் எடுக்க வழக்கறிஞருக்கு பணம் செலவு செய்து துன்பத்தில் வாழ்கிறாள். அம்மா பீசா விலை ரூபாய் 300 என்றவுடன் வாங்கித் தர மறுக்கிறாள் அவர்களாகவே பணம் சேர்த்து பீசா வங்கிச் சாப்பிட முடிவு செய்கின்றனர்.தொடர்வண்டிப் பாதையில் சிந்திக் கிடக்கும் கரிகளை எடுத்து வந்து கடையில் போட்டு பணம் வாங்கி சேர்க்கின்றனர்.
ஆயா பேரன்களின் பீசா ஆசை போக்க தோசை சுட்டு அதை பீசா போலவே அலங்கரித்து தருகிறாள் .பேரன்கள் தின்று விட்டு பீசா போல நூல் வரவில்ல்லை என்கின்றனர் .கெட்டுப் போனால்தான் நூல் வரும் என்கிறாள் .
நல்ல சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு பீசா கடைக்கு செல்வோம் என்று முடிவு செய்து .நல்ல சட்டை வாங்க கடைக்கு சென்று பார்க்கின்றனர் .அதுவும் பெரிய கடை அதிலும் உள்ளே விட மாட்டார்கள் என்று கருதி .சட்டை எடுத்து விட்டு நிற்கும் பணக்கார சிறுவனுக்கு பானி பூரி வாங்கிக் கொடுத்து,பணமும் கொடுத்து சட்டை வாங்கிக் கொண்டு வந்து .போட்டுக் கொண்டு மறுபடியும் பீசா கடைக்கு செல்கின்றனர் .
அப்போதும் காவலாளி உள்ளே விட மறுக்க இந்த சண்டையை வெளிய வந்து பாரத்த பணியாளர் சிறுவனைஓங்கி அடிக்க ,அதை சேரி சிறுவர்கள் திருடிய அலைபேசியில் படம் பிடிக்க .அந்தப்படமே பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ,ஊடங்களில் ஒளிபரப்பாக, விவாதிக்கப் படுகிறது. பிரச்சனை பெரிதாகின்றது என்பதை உணர்ந்த பீசா கடை முதலாளி காவல் அதிகாரி மூலம் சிறுவர்களை வரவழைத்து ஊடகங்களையும் வரவழைத்து வரவேற்று பீசா தருகிறார் .சிறுவர்கள் பீசாவை தின்றுப் பார்த்து விட்டு ஆயாவின் தோசை நன்றாக இருந்ததே .பீசா நன்றாக இல்லையே என்கின்றனர் .படம் முடிகின்றது .இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நல்ல முடிவு.
சிறுவர்களின் ஆயாவாக வரும் பாட்டி மிக நன்றாக நடித்து உள்ளார் ஆயா இறந்து விட்ட காட்சியின் போது படம் பார்க்கும் அனைவரின் கண்ணும் கலங்கி விடுகிறது .சிறுவர்கள் பீசாவிற்காக சேர்த்து வைத்து இருந்த பணத்தை ஆயாவின் இறுதிச் சடங்கிற்கு தருகின்றனர் .
. இயக்குனர் மணிகண்டன் போகிறபோக்கில் படத்தில் பல செய்திகள் சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .வசனம்ஆனந்த் அண்ணாமலை எழுதி உள்ளார் .நன்று .பாடல்கள் இசை பின்னணி இசை யாவும் நன்று .பாடல்கள் .முத்துகுமார் .ராஜ்குமார் எழுதி உள்ளனர் .பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றன .
கருப்பு என்று யாரையும் ஒதுக்காதீர்கள் . உலகில் பிறந்த யாவரும் சமம் .ஏழை பணக்காரன் பாகுபாடு ஒழிய வேண்டும் .
தொலைக்காட்சி வரும் முன் ஏழைகள் நிம்மதியாக வாழ்ந்தனர் . தொலைக்காட்சி வரும் விளம்பரங்கள் நுகர்வு கலாசாரத்தை பரப்பி ஏழை சிறுவர்களின் மனதில் துன்பம் .
உலகமயம் ஏழைகளை வாட்டி வதைக்கிறது .பணக்காரச் சிறுவர்களைப் பார்த்து ஏழைச் சிறுவர்கள் மனம் ரணமாகிறது . சேரி வாழ்வில் இன்னும் விடியவில்லை .
படம் முடிந்து விட்டுக்கு வந்தபின்னும் படம் பற்றிய நினைவுகள் மனதை வருடுகின்றன .இதுதான் இயக்குனர் மணிகண்டன் வெற்றி . வறுமை வாழ்க்கையைப் பற்றி படம் தயாரித்து தனுஷும் வெற்றிமாறனும் பணக்காரன் ஆகி விட்டனர் .
படம் முடிந்ததும் நான் உள்பட பலரும் எழுந்தி நின்று கரஒலி தந்தோம் .படத்தில் துளி கூட ஆபாசம் இல்லை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய நல்ல படம் .
முடிவாக நூடுல்ஷ் தடை செய்தது போல பீசாவும் தடை செய்தால் நன்று என்று தோன்றியது .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 12:11 pm

காக்கா முட்டை  - விமர்சனம் - Page 3 3838410834 விமரிசனத்திற்கு நன்றி , படம் பார்க்கவேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக