புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 2:54 am

அந்த நாளில்....
-
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 UpwUeJsGT0aWO8CpAiWq+tblcatroon_2288454772

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:16 pm


தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி- வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4 முழு அடைப்புப் போராட்டத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற் போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா, தவ்ஹித் ஜமாத், தமிழ் தேசியப் பேரியக்கம் (மணியரசன்), பால் முகவர்கள் சங்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, தற்சார்பு விவசாய சங்கம், அணுஉலைக்கான எதிர்ப்பு இயக்கம் ஆகிய பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததின் பேரில், தமிழகத்தில் வணிகப் பெருமக்கள் வருமான நட்டத்தைப் பற்றிக் கவலைப் படாமல், தாங்களாகவே கடைகளை மூடி, முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்து விட் டனர்.

இது மக்கள் போராட்டத்தின் வெற்றி, பொதுநலன் கருதும் வணிகப் பெருமக்களின் வெற்றி இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க., விக்கிரம ராஜாவின் வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்க வில்லை.

ஆளும் கட்சி காவல் துறையை ஏவிவிட்டு, நேற்று இரவில் அனைத்து மாவட் டங்களிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சி களின் நிர்வாகிகளைக் கைது செய்தனர். இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் காவல்துறையினர் ம.தி.மு.க. நிர்வாகிகளையும், போராட் டத்தில் ஈடுபட்டவர்களையும் தாக்கியதோடு கைது செய் தனர்.

தமிழகம் முழுவதிலும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளைச் சேர்ந் தவர்களை காவல்துறையினர் அடித்தும், உதைத்தும் காவல் துறை வாகனங்களில் ஏற்றி கைது செய்துள்ளனர்.

அரசின் அடக்குமுறையை மீறி முழு அடைப்பு வெற்றி பெற்றது என்றால், முழு மதுவிலக்கு ஒன்றுதான் தமிழ்நாட்டை காக்கும் என்பதற்கான மக்களின் பிர கடனம்தான் போராட்டத்தின் வெற்றி.

டாஸ்மாக் மதுக்கடைகள், ஒயின்ஷாப்புகளின் மது நச்சு வெள்ளமாகப் பாய்ந்து தமிழ்நாட்டை நாசம் செய் கிறது.முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகமே கொந்தளிக்கிறது. கோடானுகோடித் தாய் மார்கள் மதுக்கடைகளை ஒழிக்க வீறுகொண்டு எழும் நிலை ஏற்பட்டு விட்டது.தமிழ்நாட்டுக்கு ஏற்பட இருக்கும் அழிவைத் தடுக்கவே வீரத் தியாகி சசிபெருமாள் உயிர்ப்பலியானார். அவரைச் சாகடித்தது மட்டும் அல்லாமல், கடுகு அளவும் ஈவு இரக்கம் இல்லாமல் சசிபெருமாளின் மகனையும், மகளையும் கைது செய்தது ஜெயலலிதா அரசு.

நேற்று (3-தேதி), சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற முயன்றபோது, காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கினர்.முதலமைச்சர் ஜெயலலிதா, வழிபாட்டுத் தலங்கள் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், மது பார்களை மூடப்போவதாகவும், மது விற்பனை நேரத்தை குறைக்கப் போவதாகவும் தமிழக மக்களை குறிப் பாக தாய்மார்களை ஏமாற்று வதற்காக ஒரு திட்டத்தைத் தயாரித்துள் ளார். அதனை அறிவிக்க உள்ளார்.
மதுக்கடைகளின் விற் பனை நேரத்தைக் குறைப்பது என்பது பொதுமக்களை ஏமாற்றவும், மது பாட்டில் களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரங் களில் அவற்றைக் குடிகாரர்களிடம் அதிக விலைக்கு விற்பதற்கும் இந்த எற்பாடு.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்கப் போகும் நடவடிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அனைத்து மதுக்கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண் டும்.

தாய்மார்களே, டாஸ்மாக் கடைகளை அகற்ற வீறுகொண்டு போராடுங்கள்! எனது அன்பு மாணவக் கண்மணிகளே உங்கள் வாழ்வையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நாசமாக் கும் டாஸ்மாக் கடைகளை, ஒயின்ஷாப்களை அடியோடு அகற்ற போர்க்கோலம் பூணுங்கள்!

முழு அடைப்புப் போராட் டத்துக்கு ஆதரவு தந்த அரசியல் கட்சிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், மனித உரிமைகள் அமைப்பு களுக்கும், கடைகளை மூடிய வணிகப் பெருமக்களுக்கும் ஆதரவு தந்த மாணவச் செல்வங்களுக்கும், பொது மக்களுக்கும், போராட்ட அழைப்பு விடுத்த அரசியல் இயக்கங்களின் சார்பில் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:17 pm

பூரண மது விலக்கு கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் ஆயிரகணக்கான பேர் கைது

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.தே.மு.தி.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ,வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையொட்டி பஸ் நிலையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்

இன்று பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. ஆட் டோக்களும் ஓடின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வில்லை. ரெயில் களில் இன்று கூட்டம் அதிகம் இருந்தது.தமிழ்நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.பெரும்பாலான நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பல ஊர்களில் வழக்கம் போல் கடைகள் திறந்தும் இருந்தன.

மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை, சூனாம்பேடு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடை ஷட்டரை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் உடைந்த ஷட்டரின் வழியாக வெடிகுண்டை வீசி தப்பிச் சென்று விட்டனர்.

தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரகணக்கான பேர் கைது செய்யபட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் அரசு பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:22 pm

தமிழக போலீஸ்: ஸ்காட்லாண்ட் யார்டா...டாஸ்மாக் ஸ்குவாடா?

சென்னை: ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறையை லண்டனின் 'ஸ்காட்லாண்ட் யார்டு' போலீசுக்கு இணையாக மதித்த காலமெல்லாம் மலையேறி, இன்று 'டாஸ்மாக் ஸ்குவார்ட்' என்று அழைக்கும் நிலைக்கு தமிழக காவல்துறை தள்ளப்பட்டு விட்டதே என வேதனைக் குரல்கள் எழுந்துள்ளன.

மதுவிலக்கு கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.கடந்த மாதங்களில் பாமக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் மதுவிலக்கு போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி, காந்தியவாதி சசிபெருமாள் மார்த்தாண்டத்தில் செல்போன் டவர் மீது ஏறி நின்று பலமணி நேரம் மதுவிலக்குப் போராட்டம் நடத்தி இறுதியில் ரத்த வாந்தியெடுத்து மரணமடைந்தார். அந்த மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மதுவிலக்குக்கு ஆதரவான போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒருபகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் நடத்திய மதுவிலக்குப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. அந்தப் போராட்டம் தொடர்பாக போலீசார் வைகோ உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வுகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு நடத்தி வரும் 6000 த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடச் சொல்லி, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து போராட வைத்துள்ளன.

ஆனால் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விடுத்துள்ள அறிக்கையில், சசிபெருமாள் மரணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன என்றும்,இது அருவருக்கத்தக்கது என்றும், கல்விக் கூடங்கள்,கோவில்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(செவ்வாய்) மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த பந்த் வெற்றிகரமாக நடந்துவிடக் கூடாது என்றும், டாஸ்மாக் கடைகள் முன்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் திரண்டு விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக காவல்துறை நேற்று(திங்கள்) இரவிலிருந்தே பாதுகாப்பிற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு போலீசாரை நிறுத்தி இருக்கிறது. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக, அதை விற்பதற்கும் தாராளமாகக் குடிப்பதற்கும் பாதுகாப்பு வழங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்து பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக அறிவுக் கூர்மையும்,பலமும் கொண்ட காவல்துறையாக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று சாராயம் குடிக்கவும் டாஸ்மாக் கடையில் சாராயம் விற்கவும் பாதுகாப்பு வழங்கிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறதே என்று பொதுமக்கள் வேதனையுடன் பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் தமிழக காவல்துறையை இந்த அவல நிலைக்கு தள்ளியதற்கு தமிழக அரசு மீதும் மக்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் அதிருப்தியை போக்குவதற்கான ஒரே நடவடிக்கை என்ன என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதனை செயல்படுத்துவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:29 pm

அடிதடி இல்லாமல் அமைதியாக நடந்த முழு அடைப்பு போராட்டம்!

அரியலூர்: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்தவித அடிதடியும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது முழு அடைப்பு போராட்டம்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 4ஆம் தேதி (இன்று) முழு அடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மற்றும் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, பல்வேறு இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடித்து, உதைத்து கைது செய்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடந்திருக்கிறது. அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சில போரட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பெயரளவுக்கு நடைபெற்றது. இருப்பினும், இதனால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடியிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அதேசமயம், போக்குவரத்து எந்த ஒரு தடையும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் இயங்கியதால் பயணிகள் பாதிக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் காலையில் பயத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த கடைகள் திறக்கப்பட்டன. அங்கும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றிருப்பது, முழு அடைப்பு போராட்டம் இங்கு வெற்றி பெற்றிருப்பதாகவே இருக்கிறது.

இதன் மூலம் இந்த பகுதி மக்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:30 pm

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுவிலக்கு போராட்டம் நடத்தி கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவியரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

" மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராடி காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மதுவுக்கு எதிராக போராடிய போது மாணவ மாணவவியரை காவல்துறையினர் லத்தியால் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:31 pm


வைகோ அறைகூவல் ஆபத்தானது: மாணவர்களை எச்சரிக்கும் ராமதாஸ்!

சென்னை: மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட வேண்டும் என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அறைகூவல் விடுப்பது ஆபத்தானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், "மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தார்.

இந்நிலையில் வைகோ அறைகூவல் குறித்து மாணவர்களை எச்சரித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்புகள் போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப்படும் விதம் கவலை அளிக்கிறது.

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் திட்டமிட்டு மக்கள் மீது மதுவைத் திணித்து சீரழித்து விட்டன. மது அரக்கனின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தான் கடந்த 35 ஆண்டுகளாக நான் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகிறேன். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு மக்கள், குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது மாணவர்களும் மதுவுக்கு எதிராக போராடத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி தான். ஆனால், மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி, அவர்களின் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக சித்தரிக்கவும், போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி திசை திருப்பவும் முயற்சிகள் நடப்பதை மாணவர் சமுதாயம் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசு மக்கள் நலனில் சற்றும் அக்கறை இல்லாத அரசாகும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தியபோதே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்கும். ஆனால், மதுவிலக்கில் அக்கறை இல்லாத தமிழக அரசு மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திலும் சமூக விரோத சக்திகளை ஊடுருவச் செய்து வன்முறையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த தமிழக அரசு தயங்காது. சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அறவழியில் தொடங்கிய போராட்டத்தில் திட்டமிட்டு வன்முறையை புகுத்தி, அதைக் காரணம் காட்டி மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது. மாணவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், காவல்துறையும் எவ்வாறு கையாளும் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும்.

சென்னையில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர்களை காவல்துறையினர் இரும்புக் கம்பிகளால் தாக்கி காயப்படுத்தியிருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலில் பல மாணவர்களின் எலும்புகள் முறிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் நோக்கமாகவும் உள்ளது. இந்நோக்கம் அறவழியில் எட்டப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். இது தான் மதுவிலக்குக்காக தமது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தேசத்தந்தை காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். கடந்த 2008ஆம் ஆண்டில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பிலும், 2012 ஆம் ஆண்டி கட்சியின் சார்பிலும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை அனைத்தும் காவல்துறையிடம் அனுமதி பெற்று தான் அறவழியில், அமைதியாக நடத்தப்பட்டன. ஆனால், இப்போது ‘‘மதுக்கடைகளை அறவழியில் போராடி மூட முடியாது; மற வழியில் போராடித் தான் மூட மூடியும். ஆகவே, மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட வேண்டும்’’ என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அறைகூவல் விடுப்பது ஆபத்தானது ஆகும்.

தமிழகத்தில் கள் கூடாது என்பதற்காக தமது தோட்டத்திலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியவர் தந்தை பெரியார். ஆனால், அவரது வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சியின் முன்னணி தலைவர்கள் மது ஆலைகளை நடத்துகிறார்கள். மதுவிலக்குக்குக் முன்னோட்டமாக மது ஆலைகளை ஏன் மூடக்கூடாது? என்று கேட்டால் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு மது ஆலைகள் மூடப்பட்டு விடும் என்று ‘பொது அறிவு’டன் பேசுகிறார்கள். தங்களிடம் உள்ள குறைகளை மறைப்பதற்காக அப்பாவி மாணவர்களை போராட்டம் நடத்த தூண்டிவிடுகிறார்கள்.

களத்தில் இறங்கி போராடும் மாணவர்கள் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். படிக்கும் காலத்தில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்காலமும் பாழாகி விடும். சென்னையில் போராட்டம் நடத்திய மாணவியின் வயிற்றை காவல் உதவி ஆணையர் ஒருவர் பூட்ஸ் காலால் உதைக்கும் படம் இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகியிருப்பது கண்ணீரை வரவழைக்கிறது. அம்மாணவிக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்?

மதுக்கடைகளுக்கு எதிரான மாணவர்களின் உணர்வுகளை பா.ம.க. மதிக்கிறது. ஆனால், மதுக்கடைகளை மூடுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஒருபுறம் அறவழியில் போராடி வரும் பா.ம.க., மறுபுறம் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 604 மதுக்கடைகளை மூட வைத்திருக்கிறது. அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் விரைவில் மூடப்படக் கூடும். எனவே, மாணவர்கள் அரசின் அடக்குமுறைக்கு இரையாகி கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக்கூடாது. செல்பேசி கோபுரங்கள் மீது ஏறி போராட்டம் நடத்துவது ஆபத்தானது என்பதால் அத்தகைய போராட்டங்களையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதியாக பா.ம.க. போராடி மதுவிலக்கை வெகுவிரைவில் சாத்தியமாக்கும்.

அதேநேரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அரசு மூட வேண்டும். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; அவர்களின் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.





மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:33 pm

மதுவிலக்குப் போராட்டம்: மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டர்!

கோவை: கோவையில் நடந்த மதுவிலக்குப் போராட்டத்தில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீராமபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை, குடியிருப்புகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிவாழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

எனவே அதை தமிழக அரசு உடனே அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 25 மாணவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் கீதா தலைமையிலான போலீசார், மாணவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர். அதற்கு மாணவர்கள் மறுக்கவே கைது செய்வதாக கூறினார்.

உடனே மாணவ, மாணவிகள் 25 பேரும் கைகளை இணைத்துக் கொண்டு தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பெண் போலீசார், மாணவிகளை கடுமையாக தாக்கி வேனில் ஏற்ற முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நியாயமான காரணத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை போலீசார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாகப் பொதுமக்களும் களத்தில் குதித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசார் பொதுமக்களிடம் இருந்து மாணவர்களை தனியாக பிரித்து கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாலை, மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு போராட்டத்தில் மாணவர்களின் கை, இன்ஸ்பெக்டர் முத்து மாலையின் நெஞ்சில் பட்டது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக பேஸ்மேக்கர் பொருத்தி இருந்தார். அதன்மேல் மாணவர்களின் கை பட்டதும் முத்து மாலை சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு நிலவியது.

அங்கு இருந்த போலீசார் மயக்கமடைந்த இன்ஸ்பெக்டர் முத்து மாலையை மீட்டு அங்கிருந்த வேனில் ஏற்றி, அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 25 மாணவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு, அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக பாப்ப நாயக்கன் பாளையம் – காந்திபுரம் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஆதரவோடு போராட்டம் நடந்ததும்,போரட்டத்தில் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்ததும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:34 pm

மதுவிலக்கு: நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து தீர்வு காண விஜயகாந்த் வேண்டுகோள்!

சென்னை: உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் போராட்டங்களை பார்த்து மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, இன்று நடைபெறுகின்ற முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுக அரசினுடைய காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கின்ற பெயரில், நேற்று இரவோடு இரவாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயக ரீதியில், அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டங்களில் இதுபோன்ற அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்வதில்லை. போராட்டத்தில் ஈடுபடும்போது கைதுசெய்யப்படுவதே ஜனநாயக நெறியாகும்.

ஆனால் அதிமுக அரசு போராட்டத்திற்கு முன்பே தேமுதிகவினர் மீதுள்ள அச்சம் காரணமாக முழுஅடைப்பு போராட்டம், மக்கள் போராட்டமாகமாறி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவே கைது செய்துள்ளதாக கருதுகிறேன். அப்படி இல்லையெனும்பட்சத்தில் உடனடியாக அனைவரையும் அதிமுக அரசு விடுதலை செய்யவேண்டும்.

இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம், தேமுதிக ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறேதுமில்லை.

அதிமுக ஆட்சியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிலிருந்து, காவல்துறை வரை அனைவரும் ஒட்டுமொத்தமாக பொய்யான தகவல்களையே நீதிமன்றங்களுக்கு அளித்துவருகிறார்கள்.

டாஸ்மாக் மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு 500 மதுக்கடைகளை மூடிவிட்டோமென்றும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறதென்றும், அரசு சார்பில் பொய்யான தகவல்கள் நீதிமன்றங்களில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காவல்துறையோ மதுவினால் ஏற்படும் கொலை, கொள்ளை, அடிதடி, விபத்து போன்றவற்றை மறைத்து, நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக தெரியவருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், வழிபாட்டு தலங்கள் அருகிலும், பள்ளிகளின் அருகிலும் இருக்கின்ற டாஸ்மாக் மதுக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியும், பொய்யான காரணங்களைக்கூறி நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை இந்த அதிமுக அரசு பொருட்படுத்தாமல், நீதிமன்றத்தையே ஏமாற்றும் போக்கில் செயல்படுகிறது.

மேன்மைதாங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள்.

எனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:44 pm

போராட்டம் நடத்துவோருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வன்முறையை கையாளாமல் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று மதுவிலக்கு போராட்டத்தினருக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஊழியர்களின் பாதுகாப்பை உணர்ந்து சேதாரங்களை தவிர்க்க, டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில் போராட்டம் வலுத்துள்ளது. மதுவிலக்குக்காக போராடுபவர்கள் டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை புரிந்துகொண்டு வன்முறையைத் தவிர்த்து அறவழியில் போராட வேண்டும்.

தமிழகம் முழுவதும் 6,856 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அவை அனைத்தையும் காவல் துறையினர் பாதுகாப்பது சாத்தியமற்றது.

எனவே, போராட்டம் நடைபெறும் இடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை உணர்ந்து சேதாரங்களை தவிர்க்க, டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக