புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
285 Posts - 42%
heezulia
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Mon Oct 12, 2015 11:09 pm

First topic message reminder :

தோல்வி கண்டு துவளாதே!!!


"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும்  "முடியாதது"
ஆகி விடும்!!!

நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!

முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!

முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!

முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???

வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!

எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!

எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!

போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???

                                 - பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Oct 24, 2015 11:57 pm

விலைநிலம்

விளைநிலத்தின்
பொருள் தொலைந்தது...
பொருள் தேடலில்...
- விலைநிலம் !!!



எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 7:18 am

ஆம் உண்மை தான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Nov 18, 2015 3:29 am

இயந்திர இதயம்

இயந்திரம் இதயமாகி விட்டதால்
இதயம் இயந்திரமாகி விட்ட
காலம் இது !!!

வானளாவிய கட்டிடங்கள்
வாகன நெரிசல்
வார இறுதி சொகுசுகள்
வசதி தேடியே வாழ்வு ...
நாசுக்காக நகர்கிறது
நவீன நகர வாழ்க்கை ...!!!

நாவிற்கடியில்
நற்றமிழைப் புதைத்து விட்டு
நா நுனியில் வேற்று மொழி
தேடிப் பிழைக்கிறது
நாகரிகம் !!!

அன்னையாக மாறிவிட்ட
ஆயாக்கள் மத்தியில்
அலுவல்களில் தொலைந்த
அன்னையின் அன்பைத்
தேடுகின்றன குழந்தைகள் !!!

அன்றாட வாழ்வில்
ஆடம்பரம் சேர்க்க
அல்லல் படும் தந்தையிடம்
அரை நொடி சிரிப்பும்
அரிதாகி விட்டது !!!

அன்னை தந்தை அரவணைப்பு
கானல் நீராகி விட்டது
கணிணி மடியில்
கண்மூடுவோர் மத்தியில் !!!

மடியில் கணிணி வைத்து
கொஞ்சிய வேகம் இன்று
மகப்பேறு மருத்துவரிடம்
கெஞ்சும் சோகம் நன்றோ???

முதியோர் இல்லம் வெளியே;
குழந்தைகள் காப்பகம்
வீட்டிலேயே;
இல்லம் இன்னும் வரவில்லை
இவர்களுக்கு மட்டும் !!!

சவ ஊர்வலம் மறைந்து
ஊர்தியில் வலம் வருகின்றன
சவங்கள்...
சுமக்க ஆளின்றி
சுமையாகிப் போன
இவை உண்மையில்
இப்போது தனிப்பிணம் தான் !!!

அமைதியான வாழ்வில்
அடிப்படைத் தேவை மறைந்து
ஆடம்பரத் தேவையே
அடிப்படை ஆகிவிட்டது !!!

புரிதல் எல்லாம்
பிரிதலில் மட்டுமே
நிகழ்கிறது ...
நீதிமன்ற வளாகம்
நிறைகிறது ...
பிரிதல் அன்யோன்யத்தில் !!!

தனக்கோ பிறர்க்கோ
ஒதுக்காத நேரம் ...
வாழ்வியல் நம்மை ஒதுக்க
நாம் ஒதுக்கிய நேரமே !!!

விஞ்ஞானம் தந்த விரைவுகள்
நேரம் குறையவே...
நெஞ்சில் இருக்கும்
ஈரம் குறையவோ???

மழலை மொழியில் கூட
மயங்காத மனம் தேடும் பணம்
மண்ணுக்குள் போகும் வரை
மன அமைதி தருமோ???

உறவுகள் தொலைத்து
வரவுகள் தேடும் வாழ்வில்
உறவாக வருவது
வெறுமை மட்டுமே !!!

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Nov 18, 2015 3:30 am

தமிழ்

தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!

பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே !!!

நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே !!!

இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே !!!

முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே !!!

தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே !!!

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே !!!

தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே !!!

காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே !!!

நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே !!!

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Nov 18, 2015 3:31 am

மீண்டும்...
மீண்டும்...
மனம் தேடுகிறது...

கருவறையில்
கண்மூடி
கண்ட தவம்...

தாய் மடியில்
தவழ்ந்த
தருணங்கள்...

தந்தை விரல்
பிடித்து நடந்த
தடங்கள்...

தாத்தா பாட்டியிடம்
கதை கேட்ட
இரவுகள்...

படிப்பில் மூழ்கிய
பள்ளிப் பருவம்...

கனவுகள் துள்ளிய
கல்லூரி நாட்கள்...

முதல் மாத சம்பளம்
வாங்கிய நிறைவு...

திருமண நிகழ்வுகளில்
அரும்பிய வெட்கம்...

குழந்தையின் சிரிப்பில்
குழைந்த மனம்...

கடனில்லா வாழ்வில்
கணநேர உறக்கம்...

பழுத்தபின்
உதிரத் துடிக்கும்
மனமுதிர்ச்சி...

வளங்கொழிக்கும்
வயல்வெளி இயற்கை...

மனிதம் வாழும்
நாகரிக வாழ்க்கை...


- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Nov 18, 2015 3:32 am

விளை(லை)நிலம்

முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது

கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது

வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது

வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது

பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது

நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது

களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீரா ஆச்சுது

வாயக்கட்டி வயித்தக்கட்டி
விளைச்ச பூமி
வீட்டைக்கட்டி விலையைக்கூட்டி
விற்பனையாகுது சாமி

பணத்த தின்னா செரிக்குமா???
பட்டினி சாவுதான் குறையுமா???

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Nov 18, 2015 3:33 am

காதல்

மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...

காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...

விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...

இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...

கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...

உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...

இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...

இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...

இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...

மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்...
மன்மதக் கனவுகள்...

இதழ் வியர்க்கும் வரை
இதயத்தில் காதல் நிலைக்க
விழையும் வேட்கைகள்...

கடைவிழி வழி மடை திறந்த
காதல் வெள்ளத்தில்
கரைசேர முயலும்
என் காளைத்தனமும்...
உன் கோழைத்தனமும்...

கண்கள் வழி பேசிய
முரண்பாட்டு மௌனங்கள் -
காதல் புதினங்கள்;புனிதங்கள்...

விழி ஈர்ப்பும் இதழ் நீர்ப்பும்
விளையாடிய தருணங்கள்...

படிக்கப் படிக்கப் புரியாத
இதழ் கொண்ட வரிகள்...

தேகப்பிழையில் தோய்த்த
தேடலில் வாய்த்த
அந்திப் பிழைகள்...

தேக மோகத்தில்
வேக வைத்த
வெண்ணிற இரவுகள்...

கற்றைக் கூந்தல்
ஒற்றி எடுத்த
கார்கால நீர்த்துளிகள்...

காலடித் தடங்களைக்
களவாடிய
கடல் அலைகள்...

காதல் பற்றிய தருணம்
காதலைப் பற்றி
காகிதம் தாண்டி எழுதிய
பாத வரிப்பள்ளங்கள்...

நிறைவாக...
நிகழ்வுகள் சுமந்த நினைவுகள்
நின்றாடும் நிகழ்காலம்
நிகழ்ந்த வண்ணமே நீள
யாசித்த பொழுதுகள்...

- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Nov 18, 2015 6:09 am

அருமையான கவிதை ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு மணிகளாய் தெரிகின்றன .
வெங்கடேசன் அவர்களே... நன்றி ..நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





மெய்பொருள் காண்பது அறிவு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Nov 18, 2015 8:32 am

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!!



எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 18, 2015 8:53 pm

எல்லாமே அருமை பா வெ

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக