புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Jenila
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2016 - புத்தாண்டு பலன்கள் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 9:43 am

First topic message reminder :

2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 QaOgEnJhQMyU3VH1JQE0+newrasi

வளமாக இருக்க போகும் ராசிகள்: 
ரிஷபம் - மிதுனம் - மகரம் - மீனம்

முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:
கடகம் - சிம்மம் - கன்னி - தனுசு

இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்:
மேஷம் - துலாம் - விருச்சிகம் - கும்பம்


நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி (1.1.2016) கிருஷ்ணபக்ஷ சப்தமியும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்ய நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2016 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.



உத்திர நக்ஷத்ரம் கன்னி ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - சந்தாண பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

இந்த ஆண்டு சிவனுக்கும் சாஸ்தாவிற்கும் அய்யனாருக்கும் உகந்த நக்ஷத்ரமான உத்திரநக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் 



லகனதிபதி ராசிநாதன் புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான பரமனையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். மன்மத வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானதாகும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 


நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.
ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரையாதிபதி சூரியனுடன் இணைந்தும் - தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தைரியஸ்தானத்திலும் -  தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தானத்திலும் சுக களத்திர சப்தமாதிபதி குரு லக்னத்திலும் - பஞ்சம ரண ருண ரோகாதிபதி சனி தைரிய ஸ்தானத்திலும் - லாபாதிபதி சந்திரன் லக்னத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனும் - செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.


தொடரும்................



நன்றி :  4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) 





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 6:57 pm

2016 மகர ராசிப்பலன்கள் !
 2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Maharamமகரம்: கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்டுப்கு இலக்கணமாகத் திகழும் மகர ராசி அன்பர்களே!
கிரகநிலை:    
குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் ராகு பாக்கிய ஸ்தானத்திலும் சனி பகவான் லாப ஸ்தானத்திலும் கேது தைரிய வீரிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது அஷ்டம ஆயுள்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தொழில்  ஸ்தானம் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ரண ருண ரோக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  அயன சயன போக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் பாக்கிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  ராசி -   சப்தம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் -  நவம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத துன்பமும், தொல்லையும் உண்டாகும். அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்கியம் கெடலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள்  மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவ பூர்வ மான அறிவு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் எளிதாக  பணி களை  செய்து முடிப்பார்கள். செயல் திறன்  அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். 

இந்த வருடம் ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் சேரும் மார்க்கமும் உண்டு. 
வாகன போக்குவரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.உங்களின் பொருளாதாரத்தில் மேல் நிலையைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை  உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொது நலத்  தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.  பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய  சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு  கிடைக்கும். அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள் முடிவடையும். கடுமையாக உழைத்து  எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு  ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.  வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான  குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும்,  அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள்.  அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும்  ஆண்டாகவும் இது அமைகிறது.
உத்யோகஸ்தர்களுக்கு,
உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின்  முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின்  அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன்  வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள்.
தொழிலதிபர்களுக்கு,
வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை  விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக்  கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும்.  
பெண்களுக்கு,
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில்  இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.  நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணிஇடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.

மாணவர்களுக்கு,
மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக  மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். ஆசிரியரிடம் மரியாதை சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.

கலைஞர்களுக்கு,
கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள்  உயரும்.

அரசியல்வாதிகளுக்கு,
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.  

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 6:58 pm

2016 கும்ப ராசிப் பலன்கள் !


2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Kumbam
கும்பம்:எவ்வளவு கடினமான நேரத்திலும், எதையும் திடமான சிந்தனையுடன் செயல்படுத்திவரும் கும்ப ராசி அன்பர்களே!!
கிரகநிலை:   குருபகவான் ஸப்தம ஸ்தானத்திலும் ராகு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும் கேது தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது ஸப்தம  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பாக்கிய  ஸ்தானம் -  ராசி -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது ராசிக்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஸப்தம  ஸ்தானம் -  லாப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் அஷ்டம ஆயுள்  வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  அயன சயன போக  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  நவம பார்வையால்  சுக ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் யாரிடமும் பழகும் போதும் கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கும்.  எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து  செல்வது நல்லது.  வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க  நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். 

இந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். சிறு விவசாயிகள் முதல் பெரிய நிலச்சுவான்தார்கள் வரை தங்கள் விவசாய விளைநிலங்களில் முன் எப்போதும் கண்டிராத வகையில் அதிக தானிய மகசூல் பெற்று பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவார்கள். கோயில்களில் பூஜைகள் நடத்திவரும் அர்ச்சகர்கள் இறைபணி செய்வதால்  கிடைக்க வேண்டிய நற்பலன்களை இந்த ஆண்டு பரிபூரணமாக பெற்று சிறப்பான வாழ்வு வாழ்வார்கள். நெருப்பை வைத்து செய்யக்கூடிய தொழில் எதுவாக இருந்தாலும், அத்தொழிலை செய்பவர்கள் சிறப்பான முறையில் செயலாற்றி தொழில் அபிவிருத்தியும், பொருளாதார மேன்மையும் அடைவார்கள். மருத்துவ துறையில் பணிபுரிபவர்கள், தங்கள் தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கல்.
வீட்டடி மனை விற்பனை செய்பவர்களும், அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த வகைகளிலிருந்து கைக்கு வந்து சேரும். நற்செயல்களால் புகழ் உண்டாகும். பசு, பால், பாக்கிய இனங்கள் பல்கி பெருகும். குலதெய்வ அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சில சமயம் தனக்குத்தானே எதிரி என்ற நிலையில் உங்களது செயல்கள் நிதானமின்றி நடந்து விடும். கணவன் மனைவி இருவரது உறவு சார்ந்த முறையில் நன்னிலைகள் உண்டாகும்.

உடல் பலம் பெற்று, ஆயுள் அபிவிருத்தி அடையும். தந்தை வழி சார்ந்த இனங்களில் அனுகூல குறைவு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகள் நிறையவே வந்து சேரும். ஆதாயங்கள் சேமிக்கும் வகையில் வாய்ப்புகள் உருவாகும். குலதெய்வ வழிபாடுகளில் நிறைவேறாத நேர்த்திகடன் நேர்ந்து கொண்டபடி நிறைவேற்றும் வழிவகைகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு,
விவசாயத்துறை சார்ந்த அரசு ஊழியர்கள், தேயிலை, காப்பி, ஏலக்காய் போன்ற தனியாருக்கு சொந்தமான எஸ்டேடுகளில் மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகள் தகுந்த கவனம் செலுத்தி உற்பத்தியை பெருக்குவார்கள். ராணுவத்தில் உயர்பதவி வகிப்பவர்கள் துறை சார்ந்தவர்களிடம் நற்பெயர் பெறுவார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில், கண்காணிப்பாளர்களாக பணிபுரிபவர்கள் பலவகை நிர்வாக சீர்கேடுகளை கண்டுபிடித்து அதனை சரிசெய்யும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.
கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அரசு, அதிகாரிகளின் கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான நெறிமுறைகளை உருவாக்கி அதனை தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்துவார்கள். மின்சாரத்துறை அதிகாரிகள், அரசுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகளை கடுமையான முறையில் வசூல் செய்வார்கள். மனம் மிகுந்த சந்தோஷத்துடனும், பொருளாதார வரவுகள் தேவைக்கு தகுந்தாற்போலவும் சிரமம் இல்லாது கிடைக்கும். தனியார் துறையில் உள்ளவர்கள் வருமானம் கூடப்பெறுவர். சிற்றின்ப விஷயங்களில் மனம் அலைக்கழிக்கப்பட்டு பின்பு தெய்வ அருளால் நல்ல நிலைமை உருவாகும். புத்திரர்களால் சில இடையூறுகள் வந்து விலகும். பெண்களேடு எதிரித்தனத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. உத்தியோகம் சார்ந்த வெளியூர் பயணங்கள் உயர்வைத்தரும்.
தொழிலதிபர்களுக்கு,
மின்பொருள் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புபவர்கள் தொழிலி முன்னேற்றம் அடைவர். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் ஏற்படும் போட்டிகளாலும் பொறாமைகளாலும் சில சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதால் நிதானமாக செயல்பட்டு வருவது நல்லது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வோர் புதிய பணியாளர்களை நியமனம் செய்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். பழங்கள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் இறைச்சி வகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள், பங்குகளில் கடன் பெற்று முன்னேற்றம் காண்பர். மனம் தைரியமாகவும், செயல்கள் உற்சாகமாகவும், நண்பர்களின் உதவியும் நிறையவே உண்டாகும். நோயற்ற வாழ்க்கையும், குடும்பத்தில் ஒற்றுமையும் திகழும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.
வியாபாரிகளுக்கு,
உணவுப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்னும் மூலதனத்தை பெருக்கி முன்னேற்றம் காண்பார்கள். ஸ்டவ், கேஸ் அடுப்பு வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். சிலர் தங்கள் தொழில் சார்ந்த பாதுகாப்புக்காக சங்கம் போன்றவை வைத்து செயல்படும் வழிவகைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கைகளும், சமூகத்தில் தேவையான அந்தஸ்தும், தைரியமாக செயல்பாடுகளும் நல்ல பெயரை உருவாக்கும். சிறுதொழில் மூலமாக உற்பத்தி செய்ய்பபடும் உணவுப் பொருட்களை பெருமளவில் வாங்கி விற்பனை செய்து சாதனை நிகழ்த்துவார்கள். வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தினை தகுந்த இடங்களில் முதலீடு செய்து எதிர்கால வாழ்விற்கு பாதுகாப்பு தேடிக் கொள்வார்கள்.
மாணவர்களுக்கு,
மருத்துவம், ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் விதத்தை, சமூக சூழ்நிலைகளை உணர்ந்து திட்டமிட்டு உருவாக்குவார்கள்.  விலங்கியல் துறை சார்ந்த மருத்துவப்படிப்பு பயிலும் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களால் படிப்பில் உதவியும், உறவினர்களால் மதிக்கப்பெறும்  நன்னிலைகளும் உருவாகும். கோயில்கள், வீடுகளில் பூஜை முறைகலுக்கு தேவையான சடங்குகளைப் பற்றிய குருகுல கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்து ஆன்மீகப் பணிகளில் சிறந்து விளங்குவார்கள். புதிய வகை வாகன வாய்ப்புகள் உண்டாகும். ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பலம் தருவதாக இருக்கும்.
பெண்களுக்கு,
அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் இலக்கை திறம்பட செய்து சிறப்பு பெறுவார்கள். காவல்துறை பணியிலுள்ளவர்கள் புதிய சலுகை பெறும் வகையில் பணியை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள். விவசாய கூலி வேலை செய்பவர்கள், தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு பெறுவர். தொழில்நுட்ப கல்வி பயின்று புதிதாக பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். சிறு தொழில் நடத்துவோர் நல்ல வருமானம் பெறுவர். திருமண வயதை அடைந்தவர்கள் குருவின் அருளால் திருமணம் நடக்கும்  வாய்ப்பு பெறுவார்கள். தெய்வ வழிபாடுகளும், உறவுமுறை சார்ந்த பெண்களால் புதிய நட்புகளும் உருவாகும்.

கலைஞர்களுக்கு,
மண்பாண்டங்கள் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். திரைத்துறை கலைஞர்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவர்.  சிற்பக்கலைஞர்கள் வேலை வாய்ப்பும், பொருளாதார வசதியும் பெறுவார்கள். வீடு,  மனை, வாகனங்கள் போன்றவை உயர்வுதரும் வகையில் உருவாகும். நகைத் தொழில் செய்வோருக்கு இது நல்ல காலம். ஓவியர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். உடல்நலமும், மனவளமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு,
அரசின் நல்ல திட்டங்களை ஆதரிக்கும் நிலையில் உள்ள மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் கட்சி சார்ந்த நடவடிக்கைகளை வளர்த்துக் கொள்ளவும், சகல தரப்பின் ஆதரவும் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ள பெண் அரசியல்வாதிகள் தங்களது ஆர்வம் மிக்க செயல்பாடுகளால் பொதுமக்களிடமும், நிர்வாக அமைப்பினரிடமும் நியாயமான பணி வாய்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: மேற்கு - வடகிழக்கு - தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 6:59 pm

2016 மீன ராசிப் பலன்கள் !


2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 3 Meenamமீனம்:  பரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே!!
கிரகநிலை:  குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் ராகு ஸப்தம ஸ்தானத்திலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது ராசியிலும் இருக்கிறார்கள். 
08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  அயன சயன போக  ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ரண ருண ரோக  ஸ்தானம் -  தொழில்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் ஸப்தம  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  லாப  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  ராசி -   நவம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

இந்த பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி   போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும்.  நெருக்க மானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும்.  பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. 

நீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். உபதேச தொழில் புரிபவர்களும், ஆன்மீக பலம் பெற்று பாமர மனிதனுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவரிகளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவார்கள்.

பணவரவு இவ்வாண்டு நன்றாகவே அமையும். குரு வழிபாடு செய்தால் அவர் உங்களுக்கு நன்மையையே தருவார்.  இவ்வாண்டு நீங்கள் தர்மம் செய்யும் ஆண்டாக கருத வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுங்கள். ஏழை சுமங்கலி பெண்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் ஆடை எடுத்துக் கொடுங்கள். இந்த தர்மத்தின் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் வருவது நிச்சயமாக தடுக்கப்படும்.
சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சனை வந்தாலும் தர்மம் தலை காத்து விடும். வக்கீல் தொழில் புரிபவர்கள், தாங்கள் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்புகல் உருவாகும். பொன், பொருள் சேர்க்கையும், உணவுத் தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இயந்திர வகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். ஆனால் உங்களிடமிருந்து அதை பெற எண்ணலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு,
அரசு அதிகாரிகள் செயல்பாடுகல் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள். பிறரிடம் ஒப்படைக்காமல் கவனமாக இருங்கள். பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும். இவ்வாண்டு இரட்டிப்பு போனஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தொழிலதிபர்களுக்கு,
தங்கள் கம்பெனிக்கு புதிய கிளைகள் தொடங்கவே, இருக்கும் இடத்தை விஸ்தரிப்பு செய்யவோ தற்சமயம் ஏற்ற காலம். சாக்லெட், பிஸ்கட் வகை உற்பத்தி செய்பவர்கள் புதிய பெயர்களுடன் உற்பத்தி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். நவரத்தினக்களால் உருவாக்கப் பெற்ற ஆபரணங்களை உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர் பெற்று சிறப்பு பெறுவர். சமையல் எண்ணெய் தொழிலில் மிகப்பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்கள் அரசிடமிருந்து சிறந்த சேவைக்கான விருது பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
வியாபாரிகளுக்கு,
பேக்கரி, வாசனைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மருந்து விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை செய்பவர்கள் வியாபார மேன்மை பெறுவர். நாட்டு மருந்து கடை நடத்துபவர்கள் தங்கல் வியாபாரம் செழிக்கப் பெறுவர். சமையல் பொடி, ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனையாளர்கள் நல்ல லாபம் பெறுவர். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து விலகும். தெய்வ வழிபாடுகள் ஆன்ம பலத்தை கொடுக்கும். சுபகாரிய செலவினங்கள் உண்டாகும்.
மாணவர்களுக்கு,
சமையல் கலை, இயந்திரங்களை கையாளும் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். ஆன்மீகம், கலை, யோகாசனக் கல்வி பெறும் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். சக நண்பர்களிடம் வாக்கு வாதங்களும், விளையாட்டு செயல்பாடுகளும் ஏற்படாமல் தவிர்த்துக் கொண்டால் நன்மை உண்டாகும். சகோதரர்களால் தகுந்த உதவி கிடைக்கும். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.
பெண்களுக்கு,
 அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். மகளின் சுய உதவிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், சிறு தொழில்கள் மூலம் முன்னேற்றம் காண்பர். புத்திர வகையில் இவர்களுக்கு பெண் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும். உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறவும், உங்களுக்குக் தரவேண்டிய சீர்முறைகளும் கிடைக்க வழி உண்டு.சிறுதொழில் நிர்வாகம் செய்பவர்கள் நற்பெயர் பெறுவர். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்.
கலைஞர்களுக்கு,
இசை, நடிப்பு கலைஞர்கள் பிறருக்கு கலைகளை கற்றுத்தருவதன் மூலம் புகழும், பொருளாதார மேன்மையும் பெறுவர். மரப் பொருட்களில் அலங்கார பொருட்கள் செய்பவர்களுக்கு புதிய வரவேற்பு கிடைக்கும். வாகன பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகல் தரும் துன்பம் விலகும். நகைத் தொழிலாளர், சிற்பக் கலைஞர்கள் ஏற்றம் பெறுவர். வியர்கள் இவ்வாண்டு பரிசு பெறுவதற்கான  வாய்ப்புண்டு. எனவே உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கல்.
அரசியல்வாதிகளுக்கு,
அரசியல் பணிகள் தவிர மற்ற பிற விஷயங்களான உறவினர், நண்பர்கல் அல்லாத பிற நபர்களின் பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வர்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
அனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக