புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
62 Posts - 57%
heezulia
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
104 Posts - 59%
heezulia
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மீன் தோணி Poll_c10மீன் தோணி Poll_m10மீன் தோணி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் தோணி


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 09, 2016 2:52 pm

தமிழ்நாட்டில் உள்ள தலபுராணங்கள் பெரும்பாலும் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கடல்கோள் குமரிக் கண்டத்தில்தான் நடந்தது என்பதற்கு இது ஒரு முக்கியமான சான்றாகும்.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப் படுகிறது. அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.

சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தோணி வந்தடைந்த இடம் என்பதால் ‘தோணிபுரம்’ என்று அழைக்கப்பட்டதாகச் ‘சீர்காழித் தலபுராணம்’ கூறுகிறது.

தமிழ்நாட்டுத் தலபுராணங்கள் பெரும்பாலும் தோணி தங்கள் ஊரையே வந்தடைந்தது என்று கூறுகின்றன.

கடல்கோளிலிருந்து தப்பித்தவர்கள் பல்வேறு இடங்களில் குடியேறினர். பிற்காலத்தில் குடியேறிய ஊரைப் பெருமைப்படுத்தத் தோணி வந்தடைந்த இடம் தம் ஊரே என்றனர். இது மனித இயல்பே.

இந்த அடிப்படையில் திருப்புறம்பயத்தின் கணேசர், ‘பிரளயம் காத்த விநாயகர்’ எனப்படுகிறார். (ஜகதீச ஐயர், South Indian Shrines, P.75)

பிரளயத்திலிருந்து மனிதர்களைக் காத்தது நந்தி என்கிறது ‘திருப்பெண்ணாகட வரலாறு’ (ப.12).

பிரளயத்தில் அழியாமல் இருந்தது நாககிரி என்கிறது ‘திருச் செங்கோட்டுப் புராணம்’ (1.2.6) நாககிரி திருச்செங்கோட்டில் இருக்கிறது.

சதபதப் பிரமாணத்தில் (1.8.1-10) பிரளயத் தொன்மம் இடம்பெற்றிருக் கிறது. மனு, வைகறை வழிபாட்டிற்காக ஆற்று நீரில் அங்கசுத்தி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய கையில் ஒரு மீன் அகப்பட்டது. அந்த மீன் மனுவிடம், ‘‘ஒரு பெரிய பிரளயம் வரப் போகிறது. அதில் உயிர்களெல்லாம் அழிந்துவிடும். இப்போது நீ என்னைக் காப்பாற்றினால் அப்போது நான் உன்னைக் காப்பாற்றுவேன்’’ என்றது.

மீனை ஒரு கலயத்தில் விட்டார் மனு. அது பெரிதாயிற்று. மனு அதைக் குளத்தில் விட்டார். அது குளத்தளவு பெரிதாயிற்று. எனவே அவர் அதைக் கடலில் விட்டார்.

‘‘நீ ஒரு தோணியைச் செய். நான் தக்க நேரத்தில் வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்’’ என்று அந்த மீன் கூறியது.

குறிப்பிட்ட நாளில் பிரளயம் உண்டாயிற்று. வாக்களித்தபடியே அந்த மீன் வந்தது. அது பிரமாண்டமாக இருந்தது. அதன் தலையில் ஒற்றைக் கொம்பு இருந்தது.

தோணியைக் கொம்பில் கட்டச் சொன்னது மீன். மனு அவ்வாறே செய்தார் தோணியை மீன் இழுத்துக்கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம் கூறுகிறது.

மகாபாரதத்தில் இக்கதை சிறிது மாற்றத்துடன் காணப்படுகிறது. அதில் வைவசுத மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.

பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் அக்கதையில் சொல்லப்படுகிறது.

கப்பலில் நூஹ் (நோவா) அவர்களோடு அவருடைய மூன்று ஆண் மக்களும் மூன்று பெண் மக்களும் ஆக ஏழு பேர்களே ஏறினர் என்று அக்முஸ் என்பவர் கூறியிருக்கிறார். (அப்துற் றஹீம், நபிமார்கள் வரலாறு, முதல் பாகம், ப.230)

நோவா தம் புதல்வர்கள் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகிய ஏழு பேருடன் பேழைக்குள் நுழைந்ததாக பைபிளும் கூறுகிறது (தொடக்க நூல் 7.13)

பாகவத புராணம் பிரளய காலத்தில் மனு தோணி ஏறிய இடம் தென்னிந்தியா என்றும் அந்த மனுவின் பெயர் சத்திய விரதன் என்றும், அவன் திராவிட வேந்தன் என்றும், மனுவின் கையில் மீன் சிக்கிய இடம் மலையமலையில் ஊற்றெடுத்து வரும் கிருதமாலை என்னும் நதி என்றும் கூறுகிறது. (8.24.13) வைகை நதிக்குக் கிருத மாலை என்ற பெயரும் உண்டு.

இச்சான்று பிரளயத் தொன்மத்தைத் தமிழர்களோடு மிக நெருக்கமாக்கி வைக்கிறது. மச்ச புராணத்திலும் இத்தொன்மம் சிறு வேறுபாடுகளுடன் காணப்படுகிறது.

சத்திய விரதன் என்ற ராஜரிஷி கிருதமாலா நதியில் வழிபட்டபோது மீன் அகப்பட்டதாக இப்புராணமும் கூறுகிறது.

இதில் வரும் மீன், ‘‘பிரளயம் உண்டாகும்போது நம் ஆக்கினையால் ஓர் இடம் வரும். அதில் நீ சத்த இருடிகளுடனும் (ஏழு முனிவர்கள்) ஓஷதிகளுடனும் (மருந்துக்குரிய பூண்டுகள்) ஏறுக’’ என்று கூறுகிறது.

இந்த அரசனே வைவச்சுத மனு என்னும் திருமால் இந்த அவதாரத்தில் மநு, பூதேவி, ஓஷதிகளை இரட்சித்தார் என்றும், மநு தவம் செய்த இடம் ‘மலையம்’ என்றும் மச்ச புராணம் கூறுகிறது. ‘மலையம்’ என்பது பொதிகை மலையைக் குறிக்கும்.

மனுக் குலத்தின் தந்தையை மனு என்று கூறுவது இந்திய மரபு. இஸ்லாமியத் தொன்மத்தின்படி ஆதம் மனுக் குலத்தின் முதல் மனு ஆவார். ஆதம் வழி வந்தவர்களில் நோவா அவர்களுடன் தப்பித்தவர்கள் தவிர மற்ற அனைவரும் பிரளயத்தில் அழிந்துவிட்டனர்.

இப்போதிருக்கும் மனுக் குலம் நோவா அவர்கள் வழிவந்ததாகும். எனவே நோவா இரண்டாம் ஆதம் என்று அழைக்கப்படுகிறார். அதாவது நோவாவும் ஒரு மனுவே.

மேலே காட்டிய சான்றுகளிலிருந்து குமரிக் கண்டத்தை அழித்த பிரளயமே தொன்மமாகிப் பல்வேறிடங்களில் பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

தொன்மம் கப்பலை மீனாக்கிவிட்டது. தொன்மத்தின் இயல்பு இது.நோவா கட்டிய கப்பல் மீன் வடிவத்தில் அமைந்திருக்கலாம்.

தொன்மத்தின்படி மீனால் தப்பித்தவர்கள் என்பதால் அவர்கள் மீனைக் குலக்குறி (Totem) ஆகக் கொண்டிருக்கலாம். மீனைக் குலக்குறியாகக் கொண்ட பாண்டியர்கள் அவர்கள் வழிவந்தவர்களாக இருக்கலாம். இதனாலேயே சேர, சோழ, பாண்டியர் மூவரிலும் பாண்டியர்களே பழமையானவர்கள் என்று சிலர் கருதுகின்றனர்.

நன்றி தமிழ் ஹிந்து.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக