புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
127 Posts - 54%
heezulia
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
9 Posts - 4%
prajai
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_m10இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 7:26 am

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி! QDw5ts6YTFWH9F5dGmZg+141
-
அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைக் கணக்கில் கொள்வார்கள்;
ராஜதந்திரிகள் அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொள்வார்கள்.
அதுபோல, உடனடி அறிவியல் சாதனைகளைவிட, அடுத்தடுத்த
தலைமுறை சாதனைகளுக்கு வித்திடுபவரை அறிவியல் ராஜதந்திரி
எனலாம். அத்தகையவர் தான் எம்.ஜி.கே.மேனன்.

மங்களூரில் 1928, ஆக. 28-இல் பிறந்தார் கோவிந்தகுமார்.
(இவரே பின்னாளில் எம்.ஜி.கே. மேனன்). அவரது தந்தை மாவட்ட
நீதிபதியாகப் பணியாற்றியவர். 1942-இல் மெட்ரிக் பள்ளி தேர்ச்சி
பெற்ற கோவிந்தகுமார், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில்
பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

கோவிந்தகுமார் இளைஞனாக இருந்தபோது, அவரது தந்தையின்
அழைப்பை ஏற்று, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சிவி.ராமன்
ஜோத்பூர் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். அவரை நெருங்கியிருந்து
பார்த்த கோவிந்தகுமாருக்கு அவரே ஆதர்ஷ நாயகனாகிவிட்டார்.

அப்போது, கோவிந்தகுமாரின் படிப்பை விசாரித்த ராமன்,
“மேற்படிப்புக்கு அறிவியலைத் தேர்ந்தெடு. இயற்பியலில் நீ பெரிய
ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்’ என்று ஆசீர்வதித்தார்.
அதன்படியே கோவிந்தகுமார் தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்
கொண்டார். பிறகு மும்பையிலுள்ள ராயல் அறிவியல் இன்ஸ்டிட்யூட்டில்
எம்.எஸ்சி. இயற்பியல் படித்தார்.

கோவிந்தகுமார் புகைப்படக்கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
எனவே, புகைப்பட பிலிம்களைக் கழுவும் போட்டோ கரைசலை
உருவாக்கும் முயற்சியில் அவர் 1949-இல் ஈடுபட்டார். அது நுண்துகள்
இயற்பியல் (Particle Physics) ஆய்வுகளுக்கும், அண்டக்கதிர்
(Cosmic Rays) ஆய்வுகளுக்கும் அவரை பின்னாளில் இட்டுச் சென்றது.

பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த கோவிந்தகுமார்,
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.எஃப்.பாவெல்லின் வழிகாட்டுதலில்
அண்டக்கதிர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1953-இல் இயற்பியலில்
பிஎச்.டி. பட்டமும் பெற்றார்.

பிரிஸ்டலில் பயிலும்போது, அங்கு தத்துவவியல் படித்த மாணவி
இந்துமதி படேலை காதலித்து மணம் புரிந்தார்.

அப்போதுதான் இந்தியாவில், அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி
நிறுவனம் (TIFR- Tata Institute of Fundamental Research)
துவங்கியிருந்தது. அதில் 1955-இல் இணைந்தார் கோவிந்தகுமார்.

அங்கு, வளிமண்டலத்துக்கு அப்பால் விஞ்ஞானிகளுக்குத் தேவையான
கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களை மிகப் பெரிய
அளவில் தயாரிக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதுவே விண்வெளித்
துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டமாகும்.

தவிர, துகள் இயற்பியல், அண்டக்கதிர்கள் குறித்த ஆராய்ச்சிகளிலும் அவரது
கவனம் குவிந்தது. பூமிக்கடியில் மிகவும் ஆழமான பகுதியில் அண்டக்கதிர்கள்
எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்விலும் சக விஞ்ஞானி பி.வி.ஸ்ரீகாந்தன்
உதவியுடன் கோவிந்தகுமார் ஈடுபட்டார். கோலார் தங்கவயல் சுரங்கத்தில்
ஆழமான பகுதியில் அண்டக்கதிர்களைச் செலுத்தி அதன்மூலம் வெளியான
நியூட்ரினோக்களை அவர்கள் ஆராய்ந்தனர்.

தனது ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு,
தலைமைப்பண்பு ஆகிய குணங்களால் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் மிகக்
குறுகிய காலத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் அவர்
நியமிக்கப்பட்டார். அவரை விஞ்ஞானிகள் “கோகு’ என்று அன்புடன் அழைத்தனர்.

நுண்துகளான நியூட்ரினோக்கள் தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய
முடிவுகளை கோகு குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்களிடையே மோதலின்போது
உருவாகும் புதிய நுண்துகளான மியான் (Muon) 1965-இல் கண்டறியப்பட்டது.
இது 1965-ஆம் வருடத்திய சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் இது
ஆய்வறிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அறிவியல் உலகிற்கு பேரிழப்பாக, விஞ்ஞானி
ஹோமி பாபா விமான விபத்தில் (1966) இறந்தார். டாடா ஆராய்ச்சி நிறுவனத்தின்
நிர்வாகக் குழு தலைவரான ஜே.ஆர்.டி.டாடா, உடனடியாக “கோகு’வை பாபாவின்
இடத்தில் நியமித்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 7:26 am


நோபல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் “கோகு’வை தனது ராமன் ஆராய்ச்சிக்
கழகத்தில் (RRI) பணிபுரிய அழைத்து வந்தார். 1970-இல் ராமன் மறைந்தவுடன்
அந்நிறுவனம் ஸ்தம்பித்தது. அப்போது விஞ்ஞானிகள் பலரது வேண்டுகோளை
ஏற்று அந்நிறுவனத்தின் பொறுப்பையும் “கோகு’ ஏற்றார். ராமனின் புதல்வரும்
வானொலி விண்ணியல் விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் சந்திரசேகர்
“கோகு’வின் வேண்டுதலின் பேரில் ராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் பொறுப்பை
ஏற்றார்.

அதேபோல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக
இருந்த விக்ரம் சாராபாயும் 1971-இல் திடீரென மரணமடைந்தார். அதையடுத்து,
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “கோகு’வை இஸ்ரோ தலைவராகப்
பொறுப்பேற்கச் செய்தார். தவிர அகமதாபாத்தில் இயங்கும் இயற்பியல் ஆராய்ச்சி
ஆய்வகத்தின் (PRL) இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.

இஸ்ரோவின் தலைவராக 1972 ஜனவரி முதல் அதே ஆண்டு செப்டம்பர்
வரையிலான 9 மாதங்களே இருந்தபோதும், அங்கு தனது முத்திரையை ஆழப்
பதித்தார் “கோகு’.

எனினும், இஸ்ரோவுக்கு முழுநேரமாக கவனம் கொடுக்கும் விஞ்ஞானியே
தகுதியானவர் என்று கூறிய “கோகு”, மிக விரைவில் அப்பதவிக்கு சதீஷ் தவானைத்
தேர்வு செய்து 1972-இல் நியமித்தார். மேலும் விஞ்ஞானி யு.ஆர்.ராவை இயற்பியல்
ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநராகவும் நியமித்தார்.

பிரதமரின் அறிவியல் ஆலோசகர், அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக்குழு
தலைவர், திட்டக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் அரசுடன் இணைந்து
பணியாற்றிய “கோகு’, அரசாங்கத்தில் அறிவியலின் செல்வாக்கை உறுதிப்படுத்தினார்.

உலக அளவில் பல அறிவியல் அமைப்புகளில் கெüரவ உறுப்பினராக உள்ள மேனன்,
பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1960),
பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் (1970), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968),
பத்மவிபூஷண் 1985), உலக அறிவியல் அகாதெமியின் அப்துஸ் சலாம் பதக்கம் (1996)
உள்ளிட்ட பல கெüரவங்களை மேனன் பெற்றுள்ளார்.

1989-90 இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அறிவியல், தொழில்நுட்பத் துறை
அமைச்சராகவும் மேனன் பணியாற்றியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும்
(1990- 1996) அவர் இருந்துள்ளார்.

தனது 88-வது வயதிலும், அறிவியல் சார்ந்த பணிகளில் சளைக்காமல் ஈடுபட்டு
வருகிறார் மேனன். அவரைக் கெüரவிக்கும் வகையில், 2008-இல் கண்டுபிடிக்கப்பட்ட
புதிய சிறுகோளான ஆய்டிராய்டு 7564-க்கு “கோகு மேனன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

————————————-
– வ.மு.முரளி
இளைஞர் மணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 5:57 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 5:58 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக