புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவியர் புகழேந்தியின் உயிரோட்டமுள்ள ஓவியங்கள்
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
மனமெங்கும்
வேதனைகளும் வலிகளுமாய்க் கதறியழ, வெடித்துக் கிளம்பும் துன்பப் பேராற்றில்
மூழ்கி, இனியும் எமக்கான வெளிச்சம் எங்கிருந்தேனும் கிளம்பாதா என வாழ்வின்
இறுதிக் கணங்களிலும் நம்பிக்கையைத் தேடிக் களைத்து - சிதைபட்டு,
சின்னாபின்னமாகி - அவலத்தின் கொடுமையான சாட்சிகளாகி நிற்கும் தமிழீழ
மக்களின் உறைந்த கணங்களை மீண்டும் பதிவு செய்திருக்கிறார் ஓவியர்
புகழேந்தி. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் தமிழீழ மக்களதும்
உணர்வுகளை, ஒரு உடன்பிறந்தானாய் உள்வாங்கும், அவர் படைத்த �- எரியும்
வண்ணங்கள், உறங்கா நிறங்கள், அதிரும் கோடுகள், புயலின் நிறங்கள் வரிசையில்
� பாளம் பாளமாய் இதயங்கள்
கதறியழ, நடந்து முடிந்த வன்னிப் பேரவலத்தை,
உலகின் முன் ஓவியங்களின் வழி, வேதனைகளின் பதிவுகளாய் மட்டுமன்றி, இனியும்
தொடர்ந்தேயாக வேண்டிய ஓர்மத்தின் வெளிப்பாடாகவும் காட்டுகிறது - `உயிர்
உறைந்த நிறங்கள்’ - தமிழீழத்தின் ஓர் இரத்தப் ஓடுக்கப்பட்டு, வதைபட்டு -
இனியும் வேண்டாம் அடக்குமுறை வாழ்வு என கிளர்ந்தெழுந்த ஒரு சுதந்திரப்
போராட்டம் - தன்னாட்சியும் தகுதியும் மிக்கதொரு விடுதலைப் போராய்ப்
பரிணமித்து, உரியதொரு தலைமையையும் பெற்று, பெருமையும் வீறும் கொண்டெழுந்த
நிலையில் � திட்டமிட்டுச் சூழ்ந்த பேரினவாதமும், அதற்குத் துணையான
பிராந்திய �- சர்வதேச சக்திகளும் கூட்டாய்ப் பின்னிய சதிவலைக்குள்,
தமிழீழமும் மக்களும் கண்டிருக்கும் குருதி தோய்ந்த வரலாற்றுச் சரிவை - தன்
தூரிகையால் உள்ளக் குமுறல்களோடு சொல்லியிருக்கும் புகழேந்தியின் உணர்வுகள்,
`மனிதம்’ பற்றிய பெரும் கேள்விகளை தட்டி எழுப்புகின்றன.
1
அருகே, உயிர்காற்றுக்காய் ஏங்கித் தவிக்கும் சோதரர்களின் குரல்கள் தமிழக
மண்ணை எட்டியபோதும், `எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள்’ என தமிழீழ மக்கள்
கதறியபோதும் - ஒருபுறம் உயிர்க்கொடை தந்தும் உயிரோடு எரிந்தும்
தமிழகம் சிலிர்ந்த வேகமும்,
மறுபுறம் - சீறும் எழுச்சியை தணித்த அரசியற்
சதுரங்கங்களும் - கண்முன்னே
வரலாறாய் நிகழ்ந்த காலப் பகுதிகளில் �- `என்றும்
உங்களோடு
இருப்போம்’
எனத்
தோழமையுடன்
கிளம்பும்
குரல்களில்
வலிதானதாய் ஒலிக்கிறது புகழேந்தியின் ஓவியக் குரல்.
தமிழீழத்தைக் காணமுன்பு, அவர் காட்டிய வர்ண வெளிப்பாடுகள், எவ்வளவுக்
கெவ்வளவு தமிழீழ மக்களது
உணர்வலைகளை தன்னாக்கம் செய்து நின்றதோ,�
அதனின்றும் இன்னும் நெருக்கத்துடன், அவர் தமிழீழம் கண்டு திரும்பிய பின்
படைத்திருக்கும் `உயிர் உறைந்த நிறங்கள்’
-
அவர்
நேரில் கண்ட அம்மண்ணின்
வளமான வாழ்வு,
வேதனைகளின் சாக்காடாய் இன்று உயிர் தொலைத்து நிற்பதை �
விழிகசியும் ஈரத்துடன் சொல்லிச் செல்கிறது.
பேரினவெறியின் கால்களில் மிதிபட்டுக் கதறிய தமிழினத்தை, தமிழ்ப் பெண்களின்
உயிர்ச் சுவடுகளையும் கிழித்தெறிந்த இனவாத அரக்கத்தனத்தை `பெண்ணின் சிதைவு’
உளம்கொதிக்க பதிவு செய்கிறது.
வாழ்ந்த இடம் விட்டு, அகதிகளாகி, எங்கே காப்பிடம் என்று ஓடியும் ஒதுங்கியும்
அவலப்பட்ட தமிழினம், `தகர்க்கப்பட்டது எங்கள் வீடுகள் மட்டுமல்ல, நான் போற்றிய
நாடுமன்றோ’ எனக் கதறுவதை `வெறி’யும்
`அலைவு’ம்
வெளிப்படுத்துகின்றன.
அடிமைத்தனத்தின் வெட்கம் சுமந்த வாழ்வின் நீட்சியாய், இன்று வதை முகாம் வாழ்வை
தந்திருக்கும் எதிரியை ‘அலைவு’ இன்னும் சுட்டி நிற்கிறது.
2
கடற்கரை மணல் நடுவே,
பதுங்கு குழிகளே வாழ்வாகி - கண்முன்னே
உறவுகளையும் நட்புக்களையும் நாளாந்தம் பறிகொடுத்த மனவெடிப்பைச் சொல்கின்றன
`பதுங்கு குழி’ , `பெருமூச்சு’ ஓவியங்கள். விமானக் குண்டுகளும், ஆட்லறிகளும்
பதுங்கு குழிகளைத் தாக்க,
அவையே
சாக்குழிகளாகவும் ஆனதைச் சொல்கிறது
`நாங்கள் புதைபடாத குழிகளும் உண்டு . . .’
புகழேந்தி - `யாழ்.
வெளியேற்றம்’
பற்றி வரைந்த ஓவியம் - இன்று `வன்னி
வெளியேற்றம்’ ஆகி - `சிறகு விரித்து விதையொன்று அலையும் முளைக்க ஒரு பிடி மண்
தேடி . . .’ செல்கிறது.
`பிணவாடை வீசும் தென்திசைக் காற்றில் அசோக மரத்துக் கிளைகள் துளிர்த்தன`
என்னும் ‘வல்வைப் படுகொலையும்’,
`புதைக்கப்பட்ட
கடைசிச் சொற்கள் வேர்களாய்
நீளும், எம் தூரிகை கேட்டும் - மவுனம் காக்கும் மனச்சாட்சிக்கு முன்பு எரியும்
முழங்கிக்
காட்டும்’
என்னும்
`செம்மணி’யும்
-
இற்றைவரை
முள்ளிவாய்க்காலிலும், பொக்கணையிலும் மாறிப் போகாதிருப்பதை; சிங்கள இனவாதம்
இன்னும் அசுரத்தனமாய் வேகம் கொள்வதை �- ஒப்பீடு செய்கின்றன.
முள்ளிவாய்க்காலில்,
திரும்பிய பக்கங்கங்களெல்லாம் பிணக்
குவியல்களாக,
சடலங்கள் வீதிகளெங்கும் நிறைந்து கிடந்ததை - கண்களில் நீர் வழியக் காட்டும்
`முள்ளியவளை மே 17, 2009’ - ‘நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலானது, இருபதாயிரம்
தமிழ் உயிர்களா?, உலகின் மனச்சாட்சியா?’ என நியாய ஆவேசங் கொள்கிறது.
தம் வாழ்வின் இறுதிவரை -� விடுதலையே உயிர்மூச்சாய்
சுமந்து
நின்று
களமாடிய மாவீரரைப் போற்றும், `விதைக்கப்பட்டவர்கள்’ - `நாளைய மானுடப் பிஞ்சு
முகங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம்’ என - வணங்கி
3
தானீன்ற சேயின் உடல் முழுதும் காயங்களின் வலி கதறித் துடிக்க வைத்தாலும் -
`இவள் கவலை, ஒரு குழந்தையின் எதிர்காலம் அல்ல, ஒரு தாய் மண்ணின் எதிர்காலம்’
என்ற ‘களம்’ - ‘விடியும் எம் வாழ்வு’ என ஏங்கி நிற்கும், தமிழ்த்தாயைப் போற்றுகிறது.
உலகின் பரப்புகளில் எத்தனை கதைகள் உலாவினாலும் - எமக்கான வாழ்வை
நம்பிக்கையுடன் தொடக்கி வைத்து கரம் பிடித்த, நாளையும் வழி தொடரும் என்ற பெரும்
எதிர்பார்ப்பை எமக்குள் ஆழ வேரூன்றிய எம் தலைவன் `பிரபாகரன்’ தோற்றத்தை �-
‘மறுக்கப்பட்ட மனித விடுதலை தெற்கில் ஒரு புள்ளியாய் முளைத்தது’ என்று,
போராட்டத்தின் அடித்தளம் மனிதத்திற்கான தேடலே என உலகெங்கும் ஓங்கிச்
சொல்கிறது ஒரு ஒவியம்.
இழப்பதற்கு ஏதுமில்லை என்றபோதும்,
உறுதி தொடரும் உறவுகளை -
`உதறுவதற்கு இன்னும் ஓரிரு கனவுகள்’ என்கிறது `பயணம் தொடரும்’ பதிவு.
நாளை விடியும் என்ற நம்பிக்கை மட்டுமே எம்மை வாழவைக்கும் என்பதை `எந்த
இன்றுக்கும் உண்டு நாளை’ என்கிறார் புகழேந்தி. `வீழும் அருவி ஆறாய் விரியும்’ என்னும்
`விடிந்தேதான் ஆகவேண்டும் இரவு’ என்னும் படைப்பும்
- இருளகற்றும்
நாளைய வெளிச்சத்திற்கான நம்பிக்கையையும் உறுதியையும் பாய்ச்சி நிற்கின்றன
பார்ப்பவர் உள்ளங்களில்.
ஒருபுறம், வன்னிப் பெருநிலப்பரப்பில் வேதனைகளையும் வலிகளையும் சொல்லும்
புகழேந்தியின் படைப்புக்கள் � மறுபுறம், எத்துணை இழப்புக்களின்றும் நிமிர்ந்தேயாக
வேண்டிய அவசியத்தையும் சுட்டுவது, தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் வாழ்க்கைக்கான
வேட்கையைத் தட்டி எழுப்புகிறது.
4
படைப்பாளன்
என்பவன் -
தனியே
பதிவுகளோடு
நின்று விடாமல்,
மக்களை வழிசெலுத்தும் பாதைகளின் பங்குதாரனாகவும் நின்றாக வேண்டும் என்ற
வேண்டுகையை புகழேந்தியின் ஓவியங்கள் தெளிவுடனே எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு ஒவியனாக மட்டுமல்லாது,
தமிழீழ
விடுதலைப் போராட்டத்தை, அதன்
தலைமையை, தமிழீழ மக்களை மனதார நேசிக்கும்,
விசுவாசிக்கும் ஒரு கலைப்
போராளியாக � தன்னை மீண்டும் அழுத்தத்துடன் பதிவு செய்கிறார் புகழேந்தி.
அவரது இந்தப் படைப்புக்கள் � ஒரு வரலாற்றுப் பதிவு என்ற நிலை கடந்து,
உலகின் மனச்சாட்சியை, நேர்மையை தட்டிக்கேட்கவும், ஒரு கலைத்துவ படைப்பாக்கத்தின்
சாதாரண
பார்வையாளரை
மட்டுமல்லாது
புலமையாளர்களையும்,
கலாரசிகர்களையும், ராஜதந்திரிகளையும் ஈர்த்து - ஈழத்தமிழினம் கண்ட அவலம் வழியே
அவர்தம் எதிர்காலம் பற்றிய உரத்த சிந்தனைகளை எழுப்பவும் - பயன்படுத்தப்பட்டே
ஆகவேண்டியது அவசியம்.
உலகின் பார்வை இன்று ஈழத்தமிழினம் பால் திரும்பி வரும் சூழலில், � உரிமைப்
போராட்டத்தின் தர்க்க நியாயங்களை எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்லும் கலை ஊடகப்
பணிகளில் � புகழேந்தியின் ஓவியங்களும் பாரிய தூண்டு விசையாய் அமைவது திண்ணம்.
பல்கும் போராட்டப் பாதைகளில் புகழேந்தியின் ஓவியப் பாதையும் பலமிக்கதாக அமைய
இக் கட்டுரையின் ஆக்கம் : அருணன்
வேதனைகளும் வலிகளுமாய்க் கதறியழ, வெடித்துக் கிளம்பும் துன்பப் பேராற்றில்
மூழ்கி, இனியும் எமக்கான வெளிச்சம் எங்கிருந்தேனும் கிளம்பாதா என வாழ்வின்
இறுதிக் கணங்களிலும் நம்பிக்கையைத் தேடிக் களைத்து - சிதைபட்டு,
சின்னாபின்னமாகி - அவலத்தின் கொடுமையான சாட்சிகளாகி நிற்கும் தமிழீழ
மக்களின் உறைந்த கணங்களை மீண்டும் பதிவு செய்திருக்கிறார் ஓவியர்
புகழேந்தி. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் தமிழீழ மக்களதும்
உணர்வுகளை, ஒரு உடன்பிறந்தானாய் உள்வாங்கும், அவர் படைத்த �- எரியும்
வண்ணங்கள், உறங்கா நிறங்கள், அதிரும் கோடுகள், புயலின் நிறங்கள் வரிசையில்
� பாளம் பாளமாய் இதயங்கள்
கதறியழ, நடந்து முடிந்த வன்னிப் பேரவலத்தை,
உலகின் முன் ஓவியங்களின் வழி, வேதனைகளின் பதிவுகளாய் மட்டுமன்றி, இனியும்
தொடர்ந்தேயாக வேண்டிய ஓர்மத்தின் வெளிப்பாடாகவும் காட்டுகிறது - `உயிர்
உறைந்த நிறங்கள்’ - தமிழீழத்தின் ஓர் இரத்தப் ஓடுக்கப்பட்டு, வதைபட்டு -
இனியும் வேண்டாம் அடக்குமுறை வாழ்வு என கிளர்ந்தெழுந்த ஒரு சுதந்திரப்
போராட்டம் - தன்னாட்சியும் தகுதியும் மிக்கதொரு விடுதலைப் போராய்ப்
பரிணமித்து, உரியதொரு தலைமையையும் பெற்று, பெருமையும் வீறும் கொண்டெழுந்த
நிலையில் � திட்டமிட்டுச் சூழ்ந்த பேரினவாதமும், அதற்குத் துணையான
பிராந்திய �- சர்வதேச சக்திகளும் கூட்டாய்ப் பின்னிய சதிவலைக்குள்,
தமிழீழமும் மக்களும் கண்டிருக்கும் குருதி தோய்ந்த வரலாற்றுச் சரிவை - தன்
தூரிகையால் உள்ளக் குமுறல்களோடு சொல்லியிருக்கும் புகழேந்தியின் உணர்வுகள்,
`மனிதம்’ பற்றிய பெரும் கேள்விகளை தட்டி எழுப்புகின்றன.
1
அருகே, உயிர்காற்றுக்காய் ஏங்கித் தவிக்கும் சோதரர்களின் குரல்கள் தமிழக
மண்ணை எட்டியபோதும், `எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள்’ என தமிழீழ மக்கள்
கதறியபோதும் - ஒருபுறம் உயிர்க்கொடை தந்தும் உயிரோடு எரிந்தும்
தமிழகம் சிலிர்ந்த வேகமும்,
மறுபுறம் - சீறும் எழுச்சியை தணித்த அரசியற்
சதுரங்கங்களும் - கண்முன்னே
வரலாறாய் நிகழ்ந்த காலப் பகுதிகளில் �- `என்றும்
உங்களோடு
இருப்போம்’
எனத்
தோழமையுடன்
கிளம்பும்
குரல்களில்
வலிதானதாய் ஒலிக்கிறது புகழேந்தியின் ஓவியக் குரல்.
தமிழீழத்தைக் காணமுன்பு, அவர் காட்டிய வர்ண வெளிப்பாடுகள், எவ்வளவுக்
கெவ்வளவு தமிழீழ மக்களது
உணர்வலைகளை தன்னாக்கம் செய்து நின்றதோ,�
அதனின்றும் இன்னும் நெருக்கத்துடன், அவர் தமிழீழம் கண்டு திரும்பிய பின்
படைத்திருக்கும் `உயிர் உறைந்த நிறங்கள்’
-
அவர்
நேரில் கண்ட அம்மண்ணின்
வளமான வாழ்வு,
வேதனைகளின் சாக்காடாய் இன்று உயிர் தொலைத்து நிற்பதை �
விழிகசியும் ஈரத்துடன் சொல்லிச் செல்கிறது.
பேரினவெறியின் கால்களில் மிதிபட்டுக் கதறிய தமிழினத்தை, தமிழ்ப் பெண்களின்
உயிர்ச் சுவடுகளையும் கிழித்தெறிந்த இனவாத அரக்கத்தனத்தை `பெண்ணின் சிதைவு’
உளம்கொதிக்க பதிவு செய்கிறது.
வாழ்ந்த இடம் விட்டு, அகதிகளாகி, எங்கே காப்பிடம் என்று ஓடியும் ஒதுங்கியும்
அவலப்பட்ட தமிழினம், `தகர்க்கப்பட்டது எங்கள் வீடுகள் மட்டுமல்ல, நான் போற்றிய
நாடுமன்றோ’ எனக் கதறுவதை `வெறி’யும்
`அலைவு’ம்
வெளிப்படுத்துகின்றன.
அடிமைத்தனத்தின் வெட்கம் சுமந்த வாழ்வின் நீட்சியாய், இன்று வதை முகாம் வாழ்வை
தந்திருக்கும் எதிரியை ‘அலைவு’ இன்னும் சுட்டி நிற்கிறது.
2
கடற்கரை மணல் நடுவே,
பதுங்கு குழிகளே வாழ்வாகி - கண்முன்னே
உறவுகளையும் நட்புக்களையும் நாளாந்தம் பறிகொடுத்த மனவெடிப்பைச் சொல்கின்றன
`பதுங்கு குழி’ , `பெருமூச்சு’ ஓவியங்கள். விமானக் குண்டுகளும், ஆட்லறிகளும்
பதுங்கு குழிகளைத் தாக்க,
அவையே
சாக்குழிகளாகவும் ஆனதைச் சொல்கிறது
`நாங்கள் புதைபடாத குழிகளும் உண்டு . . .’
புகழேந்தி - `யாழ்.
வெளியேற்றம்’
பற்றி வரைந்த ஓவியம் - இன்று `வன்னி
வெளியேற்றம்’ ஆகி - `சிறகு விரித்து விதையொன்று அலையும் முளைக்க ஒரு பிடி மண்
தேடி . . .’ செல்கிறது.
`பிணவாடை வீசும் தென்திசைக் காற்றில் அசோக மரத்துக் கிளைகள் துளிர்த்தன`
என்னும் ‘வல்வைப் படுகொலையும்’,
`புதைக்கப்பட்ட
கடைசிச் சொற்கள் வேர்களாய்
நீளும், எம் தூரிகை கேட்டும் - மவுனம் காக்கும் மனச்சாட்சிக்கு முன்பு எரியும்
முழங்கிக்
காட்டும்’
என்னும்
`செம்மணி’யும்
-
இற்றைவரை
முள்ளிவாய்க்காலிலும், பொக்கணையிலும் மாறிப் போகாதிருப்பதை; சிங்கள இனவாதம்
இன்னும் அசுரத்தனமாய் வேகம் கொள்வதை �- ஒப்பீடு செய்கின்றன.
முள்ளிவாய்க்காலில்,
திரும்பிய பக்கங்கங்களெல்லாம் பிணக்
குவியல்களாக,
சடலங்கள் வீதிகளெங்கும் நிறைந்து கிடந்ததை - கண்களில் நீர் வழியக் காட்டும்
`முள்ளியவளை மே 17, 2009’ - ‘நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலானது, இருபதாயிரம்
தமிழ் உயிர்களா?, உலகின் மனச்சாட்சியா?’ என நியாய ஆவேசங் கொள்கிறது.
தம் வாழ்வின் இறுதிவரை -� விடுதலையே உயிர்மூச்சாய்
சுமந்து
நின்று
களமாடிய மாவீரரைப் போற்றும், `விதைக்கப்பட்டவர்கள்’ - `நாளைய மானுடப் பிஞ்சு
முகங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம்’ என - வணங்கி
3
தானீன்ற சேயின் உடல் முழுதும் காயங்களின் வலி கதறித் துடிக்க வைத்தாலும் -
`இவள் கவலை, ஒரு குழந்தையின் எதிர்காலம் அல்ல, ஒரு தாய் மண்ணின் எதிர்காலம்’
என்ற ‘களம்’ - ‘விடியும் எம் வாழ்வு’ என ஏங்கி நிற்கும், தமிழ்த்தாயைப் போற்றுகிறது.
உலகின் பரப்புகளில் எத்தனை கதைகள் உலாவினாலும் - எமக்கான வாழ்வை
நம்பிக்கையுடன் தொடக்கி வைத்து கரம் பிடித்த, நாளையும் வழி தொடரும் என்ற பெரும்
எதிர்பார்ப்பை எமக்குள் ஆழ வேரூன்றிய எம் தலைவன் `பிரபாகரன்’ தோற்றத்தை �-
‘மறுக்கப்பட்ட மனித விடுதலை தெற்கில் ஒரு புள்ளியாய் முளைத்தது’ என்று,
போராட்டத்தின் அடித்தளம் மனிதத்திற்கான தேடலே என உலகெங்கும் ஓங்கிச்
சொல்கிறது ஒரு ஒவியம்.
இழப்பதற்கு ஏதுமில்லை என்றபோதும்,
உறுதி தொடரும் உறவுகளை -
`உதறுவதற்கு இன்னும் ஓரிரு கனவுகள்’ என்கிறது `பயணம் தொடரும்’ பதிவு.
நாளை விடியும் என்ற நம்பிக்கை மட்டுமே எம்மை வாழவைக்கும் என்பதை `எந்த
இன்றுக்கும் உண்டு நாளை’ என்கிறார் புகழேந்தி. `வீழும் அருவி ஆறாய் விரியும்’ என்னும்
`விடிந்தேதான் ஆகவேண்டும் இரவு’ என்னும் படைப்பும்
- இருளகற்றும்
நாளைய வெளிச்சத்திற்கான நம்பிக்கையையும் உறுதியையும் பாய்ச்சி நிற்கின்றன
பார்ப்பவர் உள்ளங்களில்.
ஒருபுறம், வன்னிப் பெருநிலப்பரப்பில் வேதனைகளையும் வலிகளையும் சொல்லும்
புகழேந்தியின் படைப்புக்கள் � மறுபுறம், எத்துணை இழப்புக்களின்றும் நிமிர்ந்தேயாக
வேண்டிய அவசியத்தையும் சுட்டுவது, தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் வாழ்க்கைக்கான
வேட்கையைத் தட்டி எழுப்புகிறது.
4
படைப்பாளன்
என்பவன் -
தனியே
பதிவுகளோடு
நின்று விடாமல்,
மக்களை வழிசெலுத்தும் பாதைகளின் பங்குதாரனாகவும் நின்றாக வேண்டும் என்ற
வேண்டுகையை புகழேந்தியின் ஓவியங்கள் தெளிவுடனே எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு ஒவியனாக மட்டுமல்லாது,
தமிழீழ
விடுதலைப் போராட்டத்தை, அதன்
தலைமையை, தமிழீழ மக்களை மனதார நேசிக்கும்,
விசுவாசிக்கும் ஒரு கலைப்
போராளியாக � தன்னை மீண்டும் அழுத்தத்துடன் பதிவு செய்கிறார் புகழேந்தி.
அவரது இந்தப் படைப்புக்கள் � ஒரு வரலாற்றுப் பதிவு என்ற நிலை கடந்து,
உலகின் மனச்சாட்சியை, நேர்மையை தட்டிக்கேட்கவும், ஒரு கலைத்துவ படைப்பாக்கத்தின்
சாதாரண
பார்வையாளரை
மட்டுமல்லாது
புலமையாளர்களையும்,
கலாரசிகர்களையும், ராஜதந்திரிகளையும் ஈர்த்து - ஈழத்தமிழினம் கண்ட அவலம் வழியே
அவர்தம் எதிர்காலம் பற்றிய உரத்த சிந்தனைகளை எழுப்பவும் - பயன்படுத்தப்பட்டே
ஆகவேண்டியது அவசியம்.
உலகின் பார்வை இன்று ஈழத்தமிழினம் பால் திரும்பி வரும் சூழலில், � உரிமைப்
போராட்டத்தின் தர்க்க நியாயங்களை எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்லும் கலை ஊடகப்
பணிகளில் � புகழேந்தியின் ஓவியங்களும் பாரிய தூண்டு விசையாய் அமைவது திண்ணம்.
பல்கும் போராட்டப் பாதைகளில் புகழேந்தியின் ஓவியப் பாதையும் பலமிக்கதாக அமைய
இக் கட்டுரையின் ஆக்கம் : அருணன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உரிமைப்
போராட்டத்தின் தர்க்க நியாயங்களை எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்லும் கலை ஊடகப்
பணிகளில் � புகழேந்தியின் ஓவியங்களும் பாரிய தூண்டு விசையாய் அமைவது திண்ணம்.
பல்கும் போராட்டப் பாதைகளில் புகழேந்தியின் ஓவியப் பாதையும் பலமிக்கதாக அமைய
போராட்டத்தின் தர்க்க நியாயங்களை எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்லும் கலை ஊடகப்
பணிகளில் � புகழேந்தியின் ஓவியங்களும் பாரிய தூண்டு விசையாய் அமைவது திண்ணம்.
பல்கும் போராட்டப் பாதைகளில் புகழேந்தியின் ஓவியப் பாதையும் பலமிக்கதாக அமைய
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|