புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
306 Posts - 42%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
6 Posts - 1%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
5 Posts - 1%
manikavi
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 17 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:15 am

krishnaamma wrote:இதுவல்லவோ பொறுப்புணர்ச்சி!

சமீபத்தில், உறவினரின் வீட்டுக்கு செல்லும் போது, ஒரு பள்ளியின் அருகில், சிறு வேனில், தர்பூசணி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். பழம் வாங்கலாம் என நினைத்து, அருகில் சென்ற போது, பள்ளி மாணவர்கள் போல் இரண்டு சிறுவர்கள் பழங்கள் விற்பதை கண்டு ஆச்சரியமடைந்து, அவர்களைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்ன பதில், என் மனதை, மிகவும் நெகிழச் செய்தது.

அவர்கள் இருவரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் படிக்கும் சகோதரர்கள்; அப்பா, கட்டட வேலை மற்றும் 'பெயின்ட்' அடிக்கும் தொழிலாளி; அம்மா வீட்டு வேலை செய்பவர். வாரம் முழுவதும், உழைத்து சம்பாதித்து, மகன்களை காப்பாற்றி, படிக்க வைக்கும் தங்கள் பெற்றோருக்கு ஒரு நாளாவது ஓய்வு கொடுக்கலாம் என்று, இந்த சகோதரர்கள், விடுமுறை நாட்களில், இது போன்று வியாபாரம் செய்வதாக கூறினர்.

அவர்களது உயர்ந்த நோக்கத்தை தெரிந்து கொண்ட கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், குறைந்த வாடகைக்கு, இவர்களுக்கு வேன் கொடுத்து உதவுகிறார். இதுபோன்ற பிள்ளைகள் இருந்து விட்டால், முதியோர், பிச்சைக்காரர்களாக மாற மாட்டார்கள்.

கே.சசிகுமார், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1240880

எல்லாம் சரி, ஆனால் அந்த இடத்தில் இருக்கும் வட்டம் மாவட்டம் ஆட்களால் தொந்தரவு வராமல் இருக்க வேண்டுமே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:15 am

நித்திரை போன யாத்திரை!

மூன்று மாதங்களுக்கு முன், உறவினர்களுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் ஹரித்துவார் என திட்டமிட்டிருந்தோம். எங்களுடன் வந்த இளம்பெண் ஒருவர், சரியான, 'செல்பி' பைத்தியம். போகும் இடம் எல்லாம், 'செல்பி' எடுத்து, யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல், திரிவேணி சங்கமம் கூடும், முப்பெரி அணையை ஒன்றிணைக்கும் இடத்தில், 'செல்பி' எடுக்க முயன்ற போது, ஆற்றில் தவறி விழுந்து விட்டாள்.

உடனே, நாங்கள் கூக்குரலிட்டு, எப்படியோ அவளை காப்பாற்றி, டில்லி கொண்டு வந்து, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க, இரு நாட்கள், எங்கள் அனைவரின் நித்திரையும் போய் விட்டது. பின், ஒரு வழியாக, அவளுக்காக, எங்கள், 'புரோகிராமை' குறைத்து, விரைவில் ஊர் வந்து சேரும்படி ஆயிற்று.

செல்பி பிரியர்களே... எங்காவது நாலு பேருடன் சேர்ந்து பொது இடங்களுக்கோ, புனித யாத்திரைக்கோ போகும்போது, உங்கள், 'செல்பி' பித்தத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். அதில், ஏதாவது கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மட்டுமல்ல, கூட வரும் அனைவரும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சி.எஸ்.ராஜேஸ்வரி, குனியமுத்தூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:17 am

krishnaamma wrote:நித்திரை போன யாத்திரை!

மூன்று மாதங்களுக்கு முன், உறவினர்களுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் ஹரித்துவார் என திட்டமிட்டிருந்தோம். எங்களுடன் வந்த இளம்பெண் ஒருவர், சரியான, 'செல்பி' பைத்தியம். போகும் இடம் எல்லாம், 'செல்பி' எடுத்து, யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல், திரிவேணி சங்கமம் கூடும், முப்பெரி அணையை ஒன்றிணைக்கும் இடத்தில், 'செல்பி' எடுக்க முயன்ற போது, ஆற்றில் தவறி விழுந்து விட்டாள்.

உடனே, நாங்கள் கூக்குரலிட்டு, எப்படியோ அவளை காப்பாற்றி, டில்லி கொண்டு வந்து, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க, இரு நாட்கள், எங்கள் அனைவரின் நித்திரையும் போய் விட்டது. பின், ஒரு வழியாக, அவளுக்காக, எங்கள், 'புரோகிராமை' குறைத்து, விரைவில் ஊர் வந்து சேரும்படி ஆயிற்று.

செல்பி பிரியர்களே... எங்காவது நாலு பேருடன் சேர்ந்து பொது இடங்களுக்கோ, புனித யாத்திரைக்கோ போகும்போது, உங்கள், 'செல்பி' பித்தத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். அதில், ஏதாவது கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மட்டுமல்ல, கூட வரும் அனைவரும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சி.எஸ்.ராஜேஸ்வரி, குனியமுத்தூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1240882

ரொம்ப சரி .............அதனால் தான் நான் இது போன்ற பயணங்களை தவித்துவிடுவேன்.........போகவேண்டும் என்று ஆசை இருந்தாலும், என்னால் அவர்களுக்கு கஷ்டம் வந்துவிடக் கூடாது என்று தவிர்த்துவிடுவேன் புன்னகை.........எங்க பாட்டி சொல்வார், " உபகாரமாக இல்லாவிட்டாலும் பரவா இல்லை, ஆனால் உபத்திரவமாய் இருக்கக் கூடாது " என்று.....அதைத்தான் நான் கடைப் பிடிக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:19 am

இது ஒரு சேவையா?

வெளிநாட்டில் பணிபுரியும் என் தம்பிக்கு, வரன் தேடி, தனியார் திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சில வாரங்களுக்கு முன் சென்றிருந்தோம். அங்கே, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'சிறப்பு' கவனம் செலுத்துவதாகவும், பதிவுக் கட்டணம் குறைவு என்றும் கூறியிருந்தனர்.

எங்களுக்கு தகுந்த சில வரன்களை தேர்வு செய்து, அப்பெண்களின் விவரம் கேட்ட போது, 'நீங்க, வெளிநாட்டுல வேலைன்னு சொல்ல வேணாம்; சொந்த வீடு, சுயதொழில் என்று சொல்லுங்க; பையனின் புகைப்படத்தை, 'கிராபிக்ஸ்' செய்து, இன்னும் அழகாக, இளமையாக கொண்டு வாங்க...' என்று, பல தந்திர யுக்திகளை எங்களிடம் கூறினர்.

நம்மிடம் கூறுவது போல தானே பெண் வீட்டாரிடமும் கூறியிருப்பர் என்று எண்ணி அதிர்ச்சியடைந்தோம். மேலும், அருகில் இருந்த மற்றொருவர், இன்னொருவரிடம் பேசியதும் காதில் விழுந்தது...

'மனசுக்கு பிடிக்கலன்னா, கெட்ட கனவா நினைச்சு, பிரிஞ்சிட சொல்லுங்க; உங்க பொண்ணுக்கு வேற இடம் அமையாமலா போயிடும். நமக்கு தெரிந்த பெரும்புள்ளியை வைச்சு, நகைய நாங்க மீட்டுத் தர்றோம்...' என்று, கட்டப்பஞ்சாயத்து செய்ததைக் கண்டு, மிரண்டு போனோம்!
கிடைக்கும் கமிஷனுக்காக, எதையும் செய்யத் துணியும், இதுபோன்ற திருமண தகவல் மையங்கள் மீது கவனமாக இருங்கள்!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:22 am

krishnaamma wrote:இது ஒரு சேவையா?

வெளிநாட்டில் பணிபுரியும் என் தம்பிக்கு, வரன் தேடி, தனியார் திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சில வாரங்களுக்கு முன் சென்றிருந்தோம். அங்கே, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'சிறப்பு' கவனம் செலுத்துவதாகவும், பதிவுக் கட்டணம் குறைவு என்றும் கூறியிருந்தனர்.

எங்களுக்கு தகுந்த சில வரன்களை தேர்வு செய்து, அப்பெண்களின் விவரம் கேட்ட போது, 'நீங்க, வெளிநாட்டுல வேலைன்னு சொல்ல வேணாம்; சொந்த வீடு, சுயதொழில் என்று சொல்லுங்க; பையனின் புகைப்படத்தை, 'கிராபிக்ஸ்' செய்து, இன்னும் அழகாக, இளமையாக கொண்டு வாங்க...' என்று, பல தந்திர யுக்திகளை எங்களிடம் கூறினர்.

நம்மிடம் கூறுவது போல தானே பெண் வீட்டாரிடமும் கூறியிருப்பர் என்று எண்ணி அதிர்ச்சியடைந்தோம். மேலும், அருகில் இருந்த மற்றொருவர், இன்னொருவரிடம் பேசியதும் காதில் விழுந்தது...

'மனசுக்கு பிடிக்கலன்னா, கெட்ட கனவா நினைச்சு, பிரிஞ்சிட சொல்லுங்க; உங்க பொண்ணுக்கு வேற இடம் அமையாமலா போயிடும். நமக்கு தெரிந்த பெரும்புள்ளியை வைச்சு, நகைய நாங்க மீட்டுத் தர்றோம்...' என்று, கட்டப்பஞ்சாயத்து செய்ததைக் கண்டு, மிரண்டு போனோம்!
கிடைக்கும் கமிஷனுக்காக, எதையும் செய்யத் துணியும், இதுபோன்ற திருமண தகவல் மையங்கள் மீது கவனமாக இருங்கள்!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
மேற்கோள் செய்த பதிவு: 1240884

மிகவும் அதிச்சியாக இருக்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:10 am

பொறுப்பை தந்த மரம் வளர்ப்பு!
எங்கள் வீட்டுக்கு அருகில், அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளி வளாகத்திற்குள், நூறு மரக்கன்றுகளை வளர்க்க திட்டமிட்டனர். 'அதற்கு பராமரிப்பு செலவு அதிகம் ஆகுமே...' என்று, கையை பிசைந்தார், தலைமையாசிரியர். அப்போது, ஒரு ஆசிரியர், 'நூறு மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடமே இதை ஒப்படைக்கலாம்; அதனால், பெரிய அளவில் செலவு வராது...' என்றார். அதன்படி, ஒவ்வொரு மரமும், ஒரு மாணவன் வசம் ஒப்படைக்கப்பட்டது. நூறு மாணவர்களுக்கும், மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, நாள் தவறாமல், அதற்கு தண்ணீர் ஊற்றினர்.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட, சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து, அவரவர் மரங்களுக்கு, தண்ணீர் ஊற்றிச் சென்றனர். சில மாணவர்கள், வித்தியாசமான முறையில் யோசித்து, தங்கள் பெற்றோரிடம் சொல்லி, ஒரு மண்பானையை வாங்கி வந்து, அதில், சிறு ஓட்டை போட்டு, அதில் பஞ்சு திரியை திணித்து, பானையில் தண்ணீர் ஊற்றி, சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி, மரம் வளர்க்கின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த நூறு மாணவர்களுமே, படிப்பில் சுமாராக இருந்தவர்கள். மரம் வளர்ப்பு பணியை, அவர்களிடம் கொடுத்த பின், மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தவர்கள், தற்போது, படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண்கள் பெற ஆரம்பித்து விட்டனர்.
தங்கள் பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையே என்ற மனச்சுமை பெற்றோருக்கு குறைய, பள்ளியோ பசுஞ் சோலையாக மாறி வருகிறது. மரம் வளர்ப்பு பணியை கொடுத்த ஆசிரியரை, அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.
—ஆர். பிரபு, கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:11 am

வேண்டும் சொந்தங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன், நோய்வாய்ப் பட்டிருந்த என் உறவினர் இறந்து விட்டார்; அவருக்கு, குழந்தைகள் கிடையாது. உயிருடன் இருக்கும் போது, உறவினர் யாரையும் மதிக்க மாட்டார்; அவர் மனைவியும், சொந்த பந்தங்களிடம் நெருங்கி பழக மாட்டார்.

உறவினர் இறந்ததை கேள்விப்பட்ட சொந்தங்கள் எல்லாரும் ஒன்று கூடி, இறுதி சடங்கை, மிகச் சிறப்பாக செய்தனர்; மேலும், ஒவ்வொருவரும் ஒரு வேலையை தாங்களாகவே இழுத்துப் போட்டு, பதினைந்தாம் நாள் காரியத்தையும் வெகு சிறப்பாக செய்தனர்.

இதையெல்லாம் பார்த்த, உறவினரின் மனைவி, மிகவும் நெகிழ்ந்து போனார்.

'இப்படிப்பட்ட அருமையான உறவுகளையெல்லாம், என் கணவர் பேச்சை கேட்டு, ஒதுக்கி, உறவுகளின் அருமை புரியாமல் இருந்து விட்டேனே...' என, கண்ணீர் விட்டு அழுதார்.

உறவினர்களை அனுசரித்து, அவர்களோடு கூடி வாழ்ந்தால், வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். அவர்கள் தான், நாம் துன்புறும் காலங்களில், துடிதுடித்து ஓடி வந்து, நம் துயர்களை களைவர்!

மருத.வடுகநாதன், வேதாரண்யம்,நாகை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:13 am

krishnaamma wrote:வேண்டும் சொந்தங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன், நோய்வாய்ப் பட்டிருந்த என் உறவினர் இறந்து விட்டார்; அவருக்கு, குழந்தைகள் கிடையாது. உயிருடன் இருக்கும் போது, உறவினர் யாரையும் மதிக்க மாட்டார்; அவர் மனைவியும், சொந்த பந்தங்களிடம் நெருங்கி பழக மாட்டார்.

உறவினர் இறந்ததை கேள்விப்பட்ட சொந்தங்கள் எல்லாரும் ஒன்று கூடி, இறுதி சடங்கை, மிகச் சிறப்பாக செய்தனர்; மேலும், ஒவ்வொருவரும் ஒரு வேலையை தாங்களாகவே இழுத்துப் போட்டு, பதினைந்தாம் நாள் காரியத்தையும் வெகு சிறப்பாக செய்தனர்.

இதையெல்லாம் பார்த்த, உறவினரின் மனைவி, மிகவும் நெகிழ்ந்து போனார்.

'இப்படிப்பட்ட அருமையான உறவுகளையெல்லாம், என் கணவர் பேச்சை கேட்டு, ஒதுக்கி, உறவுகளின் அருமை புரியாமல் இருந்து விட்டேனே...' என, கண்ணீர் விட்டு அழுதார்.

உறவினர்களை அனுசரித்து, அவர்களோடு கூடி வாழ்ந்தால், வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். அவர்கள் தான், நாம் துன்புறும் காலங்களில், துடிதுடித்து ஓடி வந்து, நம் துயர்களை களைவர்!

மருத.வடுகநாதன், வேதாரண்யம்,நாகை.
மேற்கோள் செய்த பதிவு: 1243355

இது போல உதவுபவர்கள் இன்னும் இருக்கிறார்களா?...............ஆச்சர்யமாக உள்ளது....இது போல் இருப்பவர்களால் தான் மழை பொழிகிறது என்று எண்ணுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:15 am

கொடுத்து மகிழ்!

நான், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளியில், மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில், 'பிறருக்கு கொடுத்து மகிழ்வித்து மகிழ்' என்ற தினத்தை அனுசரிப்போம். இந்நாட்களில், மாணவர்களிடமிருந்து, மிகச் சிறிய அளவிலான பங்களிப்பை பெற்று, அதை, தேவையானவர்களுக்கு அளிப்போம்.

பெரும்பாலும், மாணவர்களிடம் இருந்து, ஒரு பிடி பருப்பு, அரிசி மூட்டை வாங்குவதற்காக ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை, பங்களிப்பாக பெறுவோம். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பது போல, சேகரிக்கப்பட்ட பொருட்களை, மாதம் ஒருமுறை, முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் மற்றும் சிறார் இல்லங்களுக்கு அளித்து வருகிறோம்.

சில சமயங்களில், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் போன்ற கல்வி உபகரணங்களை கூட மாணவர்களிடமிருந்து பெற்று, சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு கொடுத்து உதவுகிறோம்; இதற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இளம் வயதிலேயே, 'பிறரை மகிழ்வித்து தாமும் மகிழ்வோம்' என்ற நன்மதிப்பீடுகளை, இளநெஞ்சங்களில் பதிய வைப்பதில், நாங்கள் மகிழ்கிறோம்.

இதைப்போல, வசதி படைத்த, பல தனியார் பள்ளிகள், தங்களது மாணவர்களை ஈடுபடுத்தி, தங்களால் இயன்ற உதவியை செய்யலாமே!

— கே.ரவிக்குமார், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:16 am

ஓட்டலில் சாப்பிட போகிறீர்களா...

சமீபத்தில், சென்னையில் பல கிளைகளை கொண்ட, பிரபல உணவகத்திற்கு சாப்பிட சென்றோம்.
அங்கு, தற்செயலாக சமையல் அறையை எட்டிப் பார்த்த போது, இட்லி தட்டில், நூல் துணிக்கு பதிலாக, பிளாஸ்டிக் பேப்பரில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுப்பதை கவனித்தேன்.

விசாரித்த போது, பெரும்பாலான உணவகங்களில், இப்படித் தான் செய்வதாக கூறினர். உணவு பொருட்களை மடித்துக் கொடுக்கவும், வாழை இலைக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர் தான் பயன்படுத்துகின்றனர்.

குறைந்தபட்சம், தொழில் தர்மம் கூட இல்லாத நிலையில், நாம் தான், நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை, வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
— பிரேமா கார்த்திகேயன்,குளத்தூர்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக