புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
1 Post - 1%
bala_t
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
1 Post - 1%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
284 Posts - 42%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
6 Posts - 1%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
5 Posts - 1%
manikavi
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 18 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:10 am

பொறுப்பை தந்த மரம் வளர்ப்பு!
எங்கள் வீட்டுக்கு அருகில், அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளி வளாகத்திற்குள், நூறு மரக்கன்றுகளை வளர்க்க திட்டமிட்டனர். 'அதற்கு பராமரிப்பு செலவு அதிகம் ஆகுமே...' என்று, கையை பிசைந்தார், தலைமையாசிரியர். அப்போது, ஒரு ஆசிரியர், 'நூறு மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடமே இதை ஒப்படைக்கலாம்; அதனால், பெரிய அளவில் செலவு வராது...' என்றார். அதன்படி, ஒவ்வொரு மரமும், ஒரு மாணவன் வசம் ஒப்படைக்கப்பட்டது. நூறு மாணவர்களுக்கும், மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, நாள் தவறாமல், அதற்கு தண்ணீர் ஊற்றினர்.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட, சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து, அவரவர் மரங்களுக்கு, தண்ணீர் ஊற்றிச் சென்றனர். சில மாணவர்கள், வித்தியாசமான முறையில் யோசித்து, தங்கள் பெற்றோரிடம் சொல்லி, ஒரு மண்பானையை வாங்கி வந்து, அதில், சிறு ஓட்டை போட்டு, அதில் பஞ்சு திரியை திணித்து, பானையில் தண்ணீர் ஊற்றி, சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி, மரம் வளர்க்கின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த நூறு மாணவர்களுமே, படிப்பில் சுமாராக இருந்தவர்கள். மரம் வளர்ப்பு பணியை, அவர்களிடம் கொடுத்த பின், மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தவர்கள், தற்போது, படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண்கள் பெற ஆரம்பித்து விட்டனர்.
தங்கள் பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையே என்ற மனச்சுமை பெற்றோருக்கு குறைய, பள்ளியோ பசுஞ் சோலையாக மாறி வருகிறது. மரம் வளர்ப்பு பணியை கொடுத்த ஆசிரியரை, அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.
—ஆர். பிரபு, கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:11 am

வேண்டும் சொந்தங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன், நோய்வாய்ப் பட்டிருந்த என் உறவினர் இறந்து விட்டார்; அவருக்கு, குழந்தைகள் கிடையாது. உயிருடன் இருக்கும் போது, உறவினர் யாரையும் மதிக்க மாட்டார்; அவர் மனைவியும், சொந்த பந்தங்களிடம் நெருங்கி பழக மாட்டார்.

உறவினர் இறந்ததை கேள்விப்பட்ட சொந்தங்கள் எல்லாரும் ஒன்று கூடி, இறுதி சடங்கை, மிகச் சிறப்பாக செய்தனர்; மேலும், ஒவ்வொருவரும் ஒரு வேலையை தாங்களாகவே இழுத்துப் போட்டு, பதினைந்தாம் நாள் காரியத்தையும் வெகு சிறப்பாக செய்தனர்.

இதையெல்லாம் பார்த்த, உறவினரின் மனைவி, மிகவும் நெகிழ்ந்து போனார்.

'இப்படிப்பட்ட அருமையான உறவுகளையெல்லாம், என் கணவர் பேச்சை கேட்டு, ஒதுக்கி, உறவுகளின் அருமை புரியாமல் இருந்து விட்டேனே...' என, கண்ணீர் விட்டு அழுதார்.

உறவினர்களை அனுசரித்து, அவர்களோடு கூடி வாழ்ந்தால், வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். அவர்கள் தான், நாம் துன்புறும் காலங்களில், துடிதுடித்து ஓடி வந்து, நம் துயர்களை களைவர்!

மருத.வடுகநாதன், வேதாரண்யம்,நாகை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:13 am

krishnaamma wrote:வேண்டும் சொந்தங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன், நோய்வாய்ப் பட்டிருந்த என் உறவினர் இறந்து விட்டார்; அவருக்கு, குழந்தைகள் கிடையாது. உயிருடன் இருக்கும் போது, உறவினர் யாரையும் மதிக்க மாட்டார்; அவர் மனைவியும், சொந்த பந்தங்களிடம் நெருங்கி பழக மாட்டார்.

உறவினர் இறந்ததை கேள்விப்பட்ட சொந்தங்கள் எல்லாரும் ஒன்று கூடி, இறுதி சடங்கை, மிகச் சிறப்பாக செய்தனர்; மேலும், ஒவ்வொருவரும் ஒரு வேலையை தாங்களாகவே இழுத்துப் போட்டு, பதினைந்தாம் நாள் காரியத்தையும் வெகு சிறப்பாக செய்தனர்.

இதையெல்லாம் பார்த்த, உறவினரின் மனைவி, மிகவும் நெகிழ்ந்து போனார்.

'இப்படிப்பட்ட அருமையான உறவுகளையெல்லாம், என் கணவர் பேச்சை கேட்டு, ஒதுக்கி, உறவுகளின் அருமை புரியாமல் இருந்து விட்டேனே...' என, கண்ணீர் விட்டு அழுதார்.

உறவினர்களை அனுசரித்து, அவர்களோடு கூடி வாழ்ந்தால், வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். அவர்கள் தான், நாம் துன்புறும் காலங்களில், துடிதுடித்து ஓடி வந்து, நம் துயர்களை களைவர்!

மருத.வடுகநாதன், வேதாரண்யம்,நாகை.
மேற்கோள் செய்த பதிவு: 1243355

இது போல உதவுபவர்கள் இன்னும் இருக்கிறார்களா?...............ஆச்சர்யமாக உள்ளது....இது போல் இருப்பவர்களால் தான் மழை பொழிகிறது என்று எண்ணுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:15 am

கொடுத்து மகிழ்!

நான், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளியில், மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில், 'பிறருக்கு கொடுத்து மகிழ்வித்து மகிழ்' என்ற தினத்தை அனுசரிப்போம். இந்நாட்களில், மாணவர்களிடமிருந்து, மிகச் சிறிய அளவிலான பங்களிப்பை பெற்று, அதை, தேவையானவர்களுக்கு அளிப்போம்.

பெரும்பாலும், மாணவர்களிடம் இருந்து, ஒரு பிடி பருப்பு, அரிசி மூட்டை வாங்குவதற்காக ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை, பங்களிப்பாக பெறுவோம். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பது போல, சேகரிக்கப்பட்ட பொருட்களை, மாதம் ஒருமுறை, முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் மற்றும் சிறார் இல்லங்களுக்கு அளித்து வருகிறோம்.

சில சமயங்களில், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் போன்ற கல்வி உபகரணங்களை கூட மாணவர்களிடமிருந்து பெற்று, சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு கொடுத்து உதவுகிறோம்; இதற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இளம் வயதிலேயே, 'பிறரை மகிழ்வித்து தாமும் மகிழ்வோம்' என்ற நன்மதிப்பீடுகளை, இளநெஞ்சங்களில் பதிய வைப்பதில், நாங்கள் மகிழ்கிறோம்.

இதைப்போல, வசதி படைத்த, பல தனியார் பள்ளிகள், தங்களது மாணவர்களை ஈடுபடுத்தி, தங்களால் இயன்ற உதவியை செய்யலாமே!

— கே.ரவிக்குமார், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:16 am

ஓட்டலில் சாப்பிட போகிறீர்களா...

சமீபத்தில், சென்னையில் பல கிளைகளை கொண்ட, பிரபல உணவகத்திற்கு சாப்பிட சென்றோம்.
அங்கு, தற்செயலாக சமையல் அறையை எட்டிப் பார்த்த போது, இட்லி தட்டில், நூல் துணிக்கு பதிலாக, பிளாஸ்டிக் பேப்பரில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுப்பதை கவனித்தேன்.

விசாரித்த போது, பெரும்பாலான உணவகங்களில், இப்படித் தான் செய்வதாக கூறினர். உணவு பொருட்களை மடித்துக் கொடுக்கவும், வாழை இலைக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர் தான் பயன்படுத்துகின்றனர்.

குறைந்தபட்சம், தொழில் தர்மம் கூட இல்லாத நிலையில், நாம் தான், நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை, வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
— பிரேமா கார்த்திகேயன்,குளத்தூர்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:20 am

மனைவியை மதியுங்கள்!

என் அலுவலக தோழி, கணவர் மற்றும் குழந்தைகளை, கண் போல் காப்பாள். அவர்கள் விருப்பப்பட்டு கேட்கும் உணவு வகைகளை செய்து கொடுத்து விட்டு தான், அலுவலகத்துக்கு கிளம்புவாள். கணவர், பணி ஓய்வு பெற்ற போது, வீடு வரை வந்து, விட்டுச் சென்ற அலுவலக ஊழியர்களை அன்புடன் உபசரித்து, வீட்டில் பெரிய விருந்து வைத்து, அவரை சந்தோஷப்படுத்தினாள். அத்துடன், மன சோர்வு அடையாமல், கணவரை அனுசரித்து நடந்தாள்.

ஆனால், சமீபத்தில் அவள் பணி ஓய்வு பெற்று, உடன் பணிபுரிந்த ஊழியர்கள், அவளை வீடு வரை கொண்டு வந்த போது, ஒப்புக்கு கூட, அவர்களை, 'வாங்க...' என்று அழைக்கவில்லை, அவள் கணவர். மாறாக, ஹாலில், அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். தோழியே உடன் வந்தவர்களை வரவேற்று, டீ, டிபன் கொடுத்து உபசரித்து அனுப்பினாள். இதைக் கண்ணுற்ற எனக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது.

ஐயா கணவன்மார்களே... நீங்கள் ஓய்வு பெறும் நாளில், உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்குமோ, அப்படித்தான், உங்கள் மனைவிமார்களுக்கும் இருக்கும். ஓடி ஓடி உழைத்தவள், ஓய்வு பெறும் நாளில், நீங்களும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்; அவளையும் சக மனுஷியாக நினைத்து, மற்றவர் முன்னிலையில் மரியாதையுடன் நடத்துங்கள். அந்த ஒரு நாளிலாவது, அவள் சந்தோஷப்படும்படி நடந்து கொள்ளுங்கள்!

— இந்திராணி தங்கவேல், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:21 am

சுத்தத்தை, பணத்தால் வாங்க முடியுமா?

வங்கியில் லோன் வாங்கி, சென்னையில் வீடு கட்டியிருந்தார், என் உறவினர் ஒருவர். அவ்வீட்டை, வாடகைக்கு விட உள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அச்சமயம், என் நெருங்கிய நண்பர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். ஆன்மிகவாதியான அவர், அனைவரையும் வசீகரிக்க கூடிய பேச்சாற்றல் உள்ளவர். அதனால், புது வீட்டுக்கு சிபாரிசு செய்து, குடியமர்த்தினேன்.

இரண்டு ஆண்டு முடிந்து, வீட்டை காலி செய்தார், நண்பர். வீட்டை பார்ப்பதற்கு போனபோது, சமையலறை எண்ணெய் பிசுக்காகவும், கழிப்பறை கறை பிடித்தும், அசிங்கமாக காட்சி அளித்தது.

நண்பரிடம், 'இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளீர்களே...' என்றதற்கு, 'நேரம் இல்ல... நானே, என் குழந்தைகளின் படிப்புக்காகத் தான் வந்துள்ளேன்; வீட்டை சுத்தம் செய்வதற்கு அல்ல...' என்று சொன்னதுடன், 'இதற்காக, முன் பணத்தை வேண்டுமானாலும் கழித்துக் கொள்ளட்டும்; பணம் ஒரு பொருட்டல்ல...' என்றார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சுத்தத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா?

வாடகைக்கு குடி வருபவர்களே... வாடகைக்கு வீடு விடுவோரும், கடன் வாங்கி, வீடு கட்டி தான் வாடகைக்கு விடுகின்றனர் என்பதை புரிந்து, சொந்த வீடு போல் நினைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்!

—சங்கர நாராயணன், மாடம்பாக்கம்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:21 am

மிலிட்டரி அலெர்ட்!

பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்திருந்த நேரம்... பக்கத்து கிராம திருவிழாவுக்கு சென்றிருந்தேன். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர், முதியவர் ஒருவருக்கு மாலை, சால்வை அணிவித்து, கவுரவித்தனர். கூடவே, அவரது காலில் விழுந்து, ஆசி பெற்றனர். அதில் ஒரு மாணவி பேசும் போது, 'அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டுல இவர் மணியடிச்சு, சாமி கும்பிடுவார்; அந்நேரம் சரியா எழுந்து, தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்போம். தேர்வு நாட்களை குறித்துவெச்சு, எங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.

'யாருக்காவது தேர்வு மையங்களுக்கு போறதுல சிக்கல் இருந்தா, உடனே, டவுன்ல இருந்து ஆட்டோ வரவழைச்சு, அனுப்பி வைப்பார். தேர்வு முடியுற வரைக்கும், அக்கறை காட்டி விசாரிச்சு, ஊக்கமளித்தமைக்கு நன்றி தாத்தா...' என்றாள்.

அகமகிழ்ந்து அதை ஏற்ற அம்முதியவர், எழுந்து, 'நீங்க எல்லாரும் என் பேரப் புள்ளைங்க; உங்களுக்கு உதவுறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அன்று, நாட்டுக்காக ராணுவத்துல உழைச்சேன்; இன்று, நம்ம கிராமத்துக்காக உழைக்கிறேன். ஆண்டவன் ஆயுளை கொடுத்தான்னா, இன்னும் உதவ காத்திருக்கேன்...' என்றார் சுருக்கமாக!
திரண்டிருந்த மக்கள், நெகிழ்ச்சியுடன் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

வயதாகி விட்டால், வீண் கதை பேசி, அண்டை அயலாரை வம்புக்கிழுத்து நேரம் போக்கும் ஒரு சில முதியோர்களுக்கு மத்தியில், இம்முதியவர், சிறந்த முன்னுதாரணம்!

—பொன்.குமரவேல், ராஜபாளையம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:33 am

'டி.வி' தொடர் தயாரிப்பாளர்களே...

சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான, 'இரு மின்மினி பூச்சிகளின் கதை' என்ற தலைப்பில், குழந்தைகளின் சுட்டித்தனங்களை, ஒலிபரப்புகிறது. இத்தொடரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வமாக பார்க்கின்றனர்.

இத்தொடரில், குழந்தை கதாபாத்திரம் ஒன்று, பள்ளி செல்ல பிடிக்காமல், விடுமுறை எடுப்பதற்காக, வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற பல காரணங்களை சொல்லியும், பெற்றோர் விடுப்பு எடுக்க சம்மதிக்காததால், மின்சார, 'பியூஸ்' கட்டையை பிடுங்கி ஒளித்து வைத்து விட்டு, 'தண்ணீர் வரவில்லை; குளிக்க முடியவில்லை... அதனால், பள்ளிக்கு செல்லவில்லை...' என்று கூற, குழந்தையின் அம்மாவும், 'சரி... விடுப்பு எடுத்துக் கொள்...' என சம்மதிக்கிறாள்; குழந்தையும், மகிழ்ச்சியாக பள்ளி செல்லாமல், வீட்டில் விளையாடுகிறது.
இத்தொடரை பார்த்த என் உறவினர் வீட்டுக்குழந்தை, விடுப்பு எடுப்பதற்காக, மின்சார, 'ப்யூஸ்' கட்டையை பிடுங்கி, கையில் வைத்திருந்ததைக் கண்ட பெற்றோர், அதிர்ச்சி அடைந்து, குழந்தையிடம் இருந்த கட்டையை வாங்கி, அறிவுரை வழங்கினர்.

குழந்தைகள் மூலமாக என்ன கருத்துகளை கூறினாலும், மற்ற குழந்தைகளுக்கு, விரைவில் சென்றடையும். இக்காலத்தில், பெரியவர்களை விட, குழந்தைகள் மிக கூர்மையாக இருப்பதால், சீக்கிரம் அந்த செயல்களை செயல்படுத்தி பார்ப்பர்; இது, பல இன்னல்களை ஏற்படுத்தும்.

இதுபோன்ற தேவையற்றவைகளை தவிர்த்து, பயனுள்ள தொடர்களை தயாரிக்குமாறு, பெற்றோராகிய நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

சி.கே.மரகதம், பீளமேடு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:34 am



குறிப்பறிந்து உதவுங்கள்!

என் தோழிக்கு, நான்கு பெண் குழந்தைகள்; கணவனை இழந்த அவள், மூன்று பெண்களுக்கு எப்படியோ கஷ்டப்பட்டு திருமணத்தை நடத்தி முடித்தாள். நான்காவது மகளுக்கு திருமணம் செய்ய போதுமான நிதி இல்லாததால், திருமணம் தள்ளிக் கொண்டே சென்றது.

இந்நிலையில், தன் பெண்ணுக்கு நல்ல வரன் வரவே, திருமணம் நிச்சயித்து இருந்தாள்; ஆனால், பெரிய அளவில் சீர் செய்ய முடியாத நிலையில், திணறிக் கொண்டிருந்தாள்.
அவளின் கஷ்டத்தை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, 'எப்படி இருந்தாலும், திருமண பரிசு கொடுக்கத் தான் போகிறோம்; அது, தோழிக்கு உதவும் வகையில் இருக்கட்டுமே...'என்று தீர்மானித்து, நாங்களே பாத்திரங்களில் இருந்து, பர்னிச்சர் வரை, மணப்பெண், குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களையும், வாங்கினோம்.

மண்டபத்தில், அந்த சீர்வரிசை அடுக்கப்பட்டிருந்த போது, சந்தோஷத்தில் என் தோழிக்கு வார்த்தைகளே வரவில்லை.அனைவருக்கும், கண்ணீர் மல்க, கைகூப்பி நன்றி தெரிவித்தாள்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, பரிசுப் பொருட்களை வழங்க இருப்போர், குறிப்பறிந்து கூடிப்பேசி உதவலாமே!

— இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக