புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
48 Posts - 46%
heezulia
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_m10ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்! - இன்று ஆசிரியர் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Sep 2017 - 7:59

ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்!  - இன்று ஆசிரியர் தினம் H3n36I7DRN6pUnWctCow+untitled


உயிரினை உலகிற்கு படைக்கும் அன்னை முதல் அதிசயம்.
சான்றோனாக்கி உலகிற்கு அர்ப்பணிக்கும் தந்தை இரண்டாம்
அதிசயம்.
-
உலகை ஆளஉருவாக்கும் பள்ளிச்சாலையில், சொல்லாலும்,
எழுத்தாலும் என்றும் நம்முன் நிற்கும்ஆச்சர்யமும்,
அதிசயமும்தான் ஆசிரியர்கள்.
-
தோள்மீதும், மடிமீதும் தவழ்ந்த குழந்தைக்கு, புதிய அவதாரம்
எடுக்கும் பெற்றோர்கள்-ஆசிரியர்கள். வசப்படாத வார்த்தைகளை
ஒழுங்குபடுத்தி, அகப்படாத எழுதுகோலினை கைகளில் அழகு
படுத்தி, மிரண்டு பார்க்கும் உலகினை எளிதாய்ப் புரியவைத்த
அற்புதங்கள் ஆசிரியர்கள்.
-
உடைகளை நேர்த்தியாக்கி, கலையும் தலைமுடியை அன்புக்
கரங்களால் கோதி, மழலைசொற்களின் மழையில் மகிழ்ந்து
வாழ்பவர்கள். ஆதலால்தான் சின்னக் குழந்தைகளின் ஒவ்வொரு
குறும்பும் அவர்களின் பார்வைக்கு விளையாட்டாகவே தெரிகிறது.
-
மலரும் அற்புதம்

வீட்டினுள் செய்கின்ற குறும்புகளெல்லாம் வகுப்பறை நுழையும்
ஆசிரியரின் வலதுகை ஆட்காட்டி விரல் அவரின் உதட்டின்
முன்னால் நிற்க மொத்த வகுப்பு அறையும் நிசப்தமாய்ப்
பார்க்கின்ற போது, இந்த உலகின் அளப்பரியஆச்சரியம்
ஆசிரியர்தானே.

விடுமுறை நாட்களில் நாலு குழந்தை களை உட்கார வைத்து,
நான் தான் பத்மா டீச்சர், நான் சொல்ற மாதிரி நீங்க நடக்கணும்,
புரிஞ்சதா?என ஒரு வீட்டிற்குள்ளோ, தெருவிலோ, கிராமங்களில்
ஏதோ ஒரு மரத்தடியிலோ அரங்கேறுமே ஒரு பள்ளிக்கூடம்,
அப்பொழுதுதான் ஆசிரியத்தின் அற்புதம் மலர ஆரம்பிக்கும்.

இவையெல்லாம் ஆரம்ப பள்ளிக்கூடத்தின் அறிகுறிகள்.
அங்கே மனப்பாடம் செய்த உயிர், மெய், உயிர்மெய்
எழுத்துக்களோடு, ஆங்கிலமும், மனனம் செய்த தமிழ்
மூதாட்டியின் ஆத்திச்சூடி யும், கொன்றை வேந்தனும், தெய்வப்
புலவரின் திருவள்ளுவமும், ஓரெண்டா ரெண்டு என்று தொடங்கி
தலைகீழாய்ச் சொல்லிப் பார்த்த 16ம் வாய்ப்பாடும் கல்விக்கு
தந்த அஸ்திவாரங்கள்.

மனதில் உழுபவர்கள்

படங்களைப் பார்த்து மட்டுமே மகிழ்ந்துபோகும் குழந்தைப்
பருவத்தில் கல்வியின் அடிப்படையினை ஆழமாய் மனதில்
உழுபவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.

ஒவ்வொரு குழந்தை யும், நாம் சொல்வதைப் புரிந்து கற்றுக்
கொள்வதை விட, செயல்பாடுகளை கவனித்து அதையே திரும்பச்
செய்து கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி கற்றுத்
தருவதோடு தங்களது வாழ்க்கை மூலம் அவர்களுக்கு
வழிகாட்டியாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள்.
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லாம்
ஆசிரியர் அல்லர் என்பது ஜெர்மன் நாட்டு அறிஞர் கதேயின்
கருத்து.

வகுப்பறைக்குள் நுழைகின்றபோது, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும்
ஒரு சினிமாவில் ஹீரோவைப் பார்க்கின்ற உற்சாகத்தை
உருவாக்குகின்றவர்கள்தான் ஆசிரியர்கள்.சொல்லிக் கொடுப்பதைக்
காட்டிலும் நடத்தியதை மனதில் புரியும்படி செய்வதைக்காட்டிலும்,
வாழ்வின் வெற்றித்தருணங்களுக்கு அடிகோலிடும் ஆசிரியர்கள்தான்
நம்மை புருவம் உயர்த்திப் பார்க்க வைப்பவர்கள். அதனால்தான்,
நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்
பட்டிருக்கிறேன் என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.

ஒவ்வொரு மாணவனுக்கும் கனவுகள் உண்டு. அந்த கனவுகளை
லட்சியமாக்கும் வல்லமை கொண்டவர்கள் ஆசிரியர்கள்.
சாதாரண மாணவனை சாதனையாளனாக்குபவர்கள்.
சிவசுப்பிரமணிய ஐயர் என்னும் ஆசிரியரின் உற்சாகமான
வகுப்பறை தாண்டியநிகழ்வுதான் அப்துல் கலாம் என்னும்
மாணவனுக்குள் விமானியாகவேண்டும் என்ற சிறகுகள் முளைக்க
வைத்தது.

மகாத்மா காந்தி சத்தியசோதனை யில் தனது ஆசிரியர்
கிருஷ்ண சங்கர பாண்டியாவை நன்றியுடன் நினைக்கின்றேன்
என்ற வரிகளால் அலங்கரிக்கிறார். எனவே, "பாடப்புத்தகம் தாண்டி
சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்கள் பிற்காலத்தில் மாணவர்கள்
எழுதும் புத்தகத்திற்குள் இருப்பார்கள்".

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Sep 2017 - 7:59

பெருமையும், தனித்துவமும்


ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நுாலகம். ஆசிரியரிடம் பழகும்
மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும்
தனித்துவமும் கிடைக்கும்.'அரியவற்று ளெல்லாம் அரிதே
பெரியாரைப்பேணித் தமராக் கொளல்'என்ற அய்யன்
திருவள்ளுவரின் வரிகள், ஒருவர் அடையும் பேறு தம்மைவிட
மூத்த அறிவுடைய ஞான குருக்களை போற்றி சுற்றமாகக் கொளல்
வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

கல்வி கற்கின்ற காலம் முதல் வாழ்வில் எல்லாக் காலங்களிலும்
அறிவால் உயர்ந்து வழிநடத்தும் ஆசிரியர்கள்தான் வாழ்க்கையில்
கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷங்கள்.


குருகுல பயிற்சி

பண்டைய குரு குலப் பயிற்சியில் மாணவர்களின் மதிப்பீடு
அவர்களின் குருவின் பெயரால்தான் அமையும். ஆதலால்,
ஒவ்வொரு குருவும் தங்களை தங்களது பண்புகளால் உயர்த்தினர்.
அத்தகைய குருக்களை அவையில் வைத்துஅலங்கரித்த
மன்னர்கள்தான் உயர்ந்தனர். சிறந்தனர்.

இன்றைய சூழலில், ஆசிரியர்கள்மாணவர்களுக்கு உலகைப்
புரிந்து கொள்ளும் அறிவியல் கல்வி, உறவினர்களோடும்,
நண்பர்களுடனும் நடந்து கொள்ள வேண்டிய பண்புகள், உள்ளத்தை
தெளிவாக்கும் ஆன்மிகம், போட்டி தேர்வுகளில் வெல்ல பொது
அறிவு என பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறையை ஒரு ஆசிரியர்
அமைத்துத் தந்து ஒவ்வொரு மாணவனும் பள்ளியை விட்டு வெளியை
வரும் போது கூட்டுப் புழுவிலிருந்து வெளியேறும் ஒரு வண்ணத்துப்
பூச்சிபோல் பன்முகத்தலைவனாக இந்த உலகிற்கு அறிமுகப்
படுத்துகிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Sep 2017 - 8:00


அடையாளம் காட்டுபவர்

உண்மையில் ஒரு மாணவனை, தன்னை யார் என்று அடையாளம்
காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக
இருப்பவர் தான் ஆசிரியர். யுத்தகளத்தில் நின்றிருந்த அர்ச்சுனனுக்கு,
கிருஷ்ணர் போல், சச்சின் டெண்டுல்கரை அடையாளப்படுத்திய
ராமகாந்த் ஆச்ரேகர் போல், தமிழகத்தின் தங்கமகன்
மாரியப்பனுக்கு சத்தியநாராயணன் போல், அடையாளம் காட்டுவது
அவர்களின் தனிச் சிறப்பு.

உயிருற்ற கருவறைக்கும், உயிரின் முடிவில் கல்லறைக்கும் இடையில்
வாழ்வை உன்னதமாய் கற்றுக்கொள்ளுமிடம் வகுப்பறை.
அவ்வகுப்பறை மலர்களின்தோட்டக்காரர்கள் தான் ஆசிரியர்கள்.

அவர்கள் நம்பிக்கை வேர்களை ஒவ்வொருவர் மனதிலும் விதைத்து,
விடாமுயற்சியென்னும் நீர் பாய்ச்சி, ஊக்கமென்னும் உரம் தந்து,
பண்புமிக்க மாணவப் பூக்களை உலகிற்களிப்பவர்கள்.எந்த ஒரு
குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள்.
அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை,
அவனது குண நலன்களை மாற்ற முடியாது என்ற புகழபெற்ற
கிரேக்க அனுபவ மொழியைத் தாரக மந்திரமாய் கொண்டவர்கள்தான்
ஆசிரியர்கள்.

முன்மாதிரி ஆசிரியர்

இந்த நாள், நம் தமிழ் மண்ணிலே திருத்தணி அருகே உள்ள
சர்வபள்ளி கிராமத்தில் 1888ல் பிறந்து இந்து, புத்த, ஜெயின்
மதங்களில் இலக்கியத் தத்துவங்களையும் மேற்கத்திய
சிந்தனையாளர்களின் தத்துவங்களையும் கற்று, தனது
சொற்பொழிவுகளால் இந்தியா சுதந்திர மடைய
உறுதுணையாயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்.
தான் மேற்கொண்ட ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி,
ஆசிரியர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்ந்து,
தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து,
ஒரு மாபெரும் தத்துவமேதையாக இவ்வுலகிற்கு தன்னை வெளிப்
படுத்திய டாக்டர் ராதாகிருஷ்ணனின்வழியில், அர்ப்பணிப்பு
உணர்வோடு, இந்த தேசத்தின் நலன் கருதி உழைக்கின்ற ஒவ்வொரு
ஆசிரியருக்கும் நமது நன்றிகளை காணிக்கையாக்கிடுவோம்.

எத்தனையோ பயணங்களை கடந்து செல்லும் நமக்கு, நாம் படித்த
பள்ளிகளைக் கடக்கின்ற போது பசுமை நினைவுகள் மனதில்
ஆக்சிஜனேற்றும். எத்தனை புதிய மனிதர்களைச் சந்தித்தாலும்
இன்னும் ஆச்சர்யம், நம்மை உயர்த்த துாணாய், துணையாய்,
ஏணியாய், அறிவின் கலங்கரை விளக்காய் நின்ற நம் ஆசான்களே.

இந்நாளில் அவர்கள் ஆரோக்கியத்துடன், ஆனந்தமாய் வாழ
நன்றியோடு பிரார்த்திப்போம். என்றும் நமது ஆசிரியம் என்னும்
ஆச்சர்யத்திற்கு விழுதுகளாவோம்.ஆசிரியர் போற்றுதும்!
ஆசிரியம் போற்றுதும்!
-
------------------------------------------
-ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.,துணை
ஆணையர்(நுண்ணறிவு பிரிவு)காவல் துறை, சென்னை
நன்றி - தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 5 Sep 2017 - 8:48

என்னை ஆளாக்கி உருவாக்கிய எந்தன் அனைத்து ஆசிரியர்களுக்கும் எந்தன் வணக்கம்.

என்னை பொறுத்த வரையில் ,ஆசிரியராக நான் மதிப்பது,
எனக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்கள்.
வேலை செய்த இடத்தில ஆசிரியராக இருந்து என்னை வழி நடத்திய , மூத்தோர்கள்,
மற்றும் நண்பர்கள் ,பெற்றோர்கள் அடங்குவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 5 Sep 2017 - 13:24

நாட்டின் உயர்ந்த பதவிகளில் இருப்பவர் யாராக இருந்தாலும் சரி , அவர் பிரதமராக இருக்கலாம் அல்லது ஜனாதிபதியாகவும் இருக்கலாம் , ஆள் , அம்புகள் புடைசூழ காரிலே செல்லும்போது , எதிரே சாலையில் , அவருக்குக் கற்பித்த ஆசிரியர் , நடந்துவரும்போது , காரை நிறுத்தச்சொல்லி , அவரது காலிலே விழுந்து வணங்குவர் .

இந்தப் பெருமை வேறு தொழிலுக்குக் கிடையாது . தான் கற்பித்த மாணவன் , தனக்கு மேலே போய்விட்டானே என்ற பொறாமை கொள்ளும் நெஞ்சமும் எந்த ஆசிரியருக்கும் இருக்காது . எனவேதான் இதை Noble Profession என்று சொன்னார்கள்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 5 Sep 2017 - 19:45

:வணக்கம்: :வணக்கம்: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 5 Sep 2017 - 22:27

டீச்சர்ஸ் டே ,
வாழ்த்துகள் கூறவேண்டியது --நம் மனைவிமார்களுக்கே .
வாழ்நாளில் வேறு எவரிடமும் இவ்வளவு லெக்ச்சர்களும்
போதனைகளும் கேட்டதில்லை.
கட்செவியில் வந்தது -என் சொந்த சரக்கல்ல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 6 Sep 2017 - 10:07

T.N.Balasubramanian wrote:டீச்சர்ஸ் டே ,
வாழ்த்துகள் கூறவேண்டியது --நம் மனைவிமார்களுக்கே .
வாழ்நாளில் வேறு எவரிடமும் இவ்வளவு லெக்ச்சர்களும்
போதனைகளும் கேட்டதில்லை.
கட்செவியில் வந்தது -என் சொந்த சரக்கல்ல

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247454

சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக