புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
30 Posts - 54%
heezulia
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
1 Post - 2%
jairam
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
1 Post - 2%
சிவா
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
1 Post - 2%
Manimegala
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
12 Posts - 4%
prajai
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
3 Posts - 1%
jairam
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_m10மயிலாடுதுறை மகா புஷ்கரம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை மகா புஷ்கரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Sep 25, 2017 8:28 am

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா ? என்று அந்தக்கால சோழநாட்டு" பெருசுகள் " சொல்லும் போதெல்லாம் எதை நினைத்து இப்படிப் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள் என்று நினைப்பதுண்டு . இப்போதுதான் புரிந்தது அவர்களின் இத்தனைப் பெருமையெல்லாம் இன்றுடன்(24/9/17)முடிவடையும் மஹா புஷ்கரம் குறித்தே இருக்கலாமோ என்று . 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாயூரத்தில் நடைபெறும் மகா புஷ்கரம் இந்த ஆண்டும் நடைபெற்றது .
எங்கெல்லாம் கோலாகலமும் , குதூகலமும் ,கொண்டாட்டமும் நிகழ்கிறதோ அங்கேயெல்லாம் தவறாமல் செல்வது என் வழக்கம் .அப்போதுதானே அத்தகைய உணர்வுகள் நமக்கும் இலவசமாகக் கிடைக்கும் .நம்மைச் சுற்றி ஆயிரம் மனிதர்கள் உற்சாகத்துடன் இருக்கும் போது நம்மால் உற்சாக உணர்வில்லாமல் இருக்கயியலுமா ?கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நானும் மயிலாடுதுறை சென்ற வெள்ளிக்கிழமை (22/9/17)சென்றேன் .
சனிக்கிழமையும் , ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் தாளாது
என்பது அறிந்த விஷயம் தானே .
புதுச்சேரியில் இருந்துபுறப்பட்டு நான் பிறந்த சிதம்பரத்தைத் தாண்டி கொள்ளிடம் பாலத்தை கடக்கும் போதே மனம் கனக்கத் தொடங்கியது , இத்தனைபெரிய நதி எப்படி வறண்டு கிடக்கிறது .வரும் அத்தனை நீரையும் கொள்ளுமிடம் என்பதால் தானே அதை கொள்ளிடம் என்றார்கள் .
இப்போதோ எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நீர் வந்ததற்கு சாட்சியாக நதியெங்கும் செடிகள் அல்ல சிறிய மரங்களே மண்டிக்கிடக்கிண்டன .மிக சிறிய அளவிலேயே நீர் ஓடிக்கொண்டிருக்கிறது .

நடந்தாய் வாழி காவேரி‘ என்கிறது சிலப்பதிகாரம்
ஆனால் நான் பார்த்ததோ
வறண்டாய் வாழி காவேரியைத் தான்
காவேரியில் வெள்ளப் பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று பெயர்.ஆனால் பல ஆண்டுகளாக நமக்கு மிகையாக தண்ணீர் கிடைக்காததால் கொள்ளிடத்தில் முழுவதுமாக நீர் ஓடவில்லை .
இவ்வாறுசோகக் காட்சிகளைப்பார்த்தபடியே ஒருவழியாக மயிலாடுதுறை துலாக்கட்டத்தை அடைத்தேன் .
அன்றும் ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம் இருந்தது , சீராக ஓடிக்கொண்டிருந்த இடுப்பளவு காவிரி நீரில் ஆற்றில் அமைந்திருந்த அணைத்தது புண்ணிய நதிகளின் பெயர்களில் அமைந்த 9 கிணறுகள் , அத்தனையும் பத்திரமாக இருந்தது .
நானும் முழுகி முழுகி எழுந்தேன் ,அத்தனை கிணற்றிலும்
கையில் இருந்த குவளையினால் நீரை எடுத்து மேலே ஊற்றிக்கொண்டேன் .ஆற்றில் குளிப்பது ஒரு அற்புத அனுபவம் தான் உடலைச் சுற்றி ஒரு சமமான விசை அழுத்தம் கொடுப்பது அநுபவிக்கும் போது தெரியும் .
மேலும் அந்த காவேரி நீர் எங்கிருந்து எங்கே வந்தது ?
எத்தனை தூர பயணம் ,எத்தனை பிரதேசம் ,எத்தனை மனித உணர்வுகள் எதனை கலாச்சாரம் அத்தனையும் தாங்கி வந்த காவேரியின் பாதையை நினைவு கூர்ந்தேன் .
காவிரியின் மொத்தநீளம் 800 கி.மீ. இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலு ம், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும் பாய்கிறது
ஆனால் இந்த பிரிவினையெல்லாம்இப்போது வந்துதானே ?
கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்று கிறது
கர்நாடக மாநிலத்தில்ஹேமாவதி, ஹேரங்கி, லட்சு மண தீர்த்தம், கபினி, சுவர்ண வதி என்ற பெயரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பல நதிகள் காவிரியுடன் வந்து கலக்கின்றன.
ஹேமாவதி, சுவர்ண வதி என்பதெல்லாம் குறிப்பது தங்கம் எனும் பொன்னையயே ஆகும் .எனவேதான் காவேரியும்
பொன்னி என்று செல்லமாக தமிழ் நாட்டில் வழங்கப்பெறுகிறது .தாமிரபரணி என்பது தாமிரத்தக் கொண்டுவருவதுபோல ,காவேரி பொன்னைதமிழ் நாட்டுக்கு கொண்டு வருகிறது
பொன்னியின் செல்வன் படிக்காத தமிழன் உண்டா ?
அந்த நெடுங் கதையே காவேரியின் கொடையான வீராணம் கரையில் இருந்து தானெத் தொடங்குகிறது .
பொன்னியின் செல்வன் என்று கல்கி ராஜராஜனை குறிப்பிட்டாலும் , அதை எழுதிய கல்கியும் பொன்னி நதிக்கரை செல்வர்தான் .
துலாக்கட்டத்தில் பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் பாட்டில்கள் விற்பனை சக்கைப் போடுபோட்டுக் கொண்டு
இருந்தது .நானும் ஒரு பாட்டில்வாங்கி எல்லோரையும் போல அனைத்து கிணறுகளின் நீரை நிரப்பிக்கொண்டேன் .
பிறகு ஆற்றின் கரையில் அமைந்துள்ள பெரிய பந்தலில் குளித்த களைப்புத்தீர அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன் .அப்போது புஷ்கரம் பற்றி பெரியவர் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார் .
ஈரேழு உலகத்தில் உள்ள மூன்றரை கோடி தீர்த்தத்திற்கு அதிபதியானவர் புஷ்கரன் என்பவர். இவர் பிரம்ம தேவனின் கரங்களில்அமிர்த கலசமாக இருப்பவர். குருபகவான் பிரம்மாவை நோக்கி தவம் செய்தார். பிரம்மன் குருதேவனின் தவத்தினை கண்டு மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
குருபகவான், பிரம்ம தேவனின் கரங்களில் இருக்கும் அமிர்த கலசத்தினை கேட்டார். அந்த அமிர்த கலசத்துக்குத் தான் புஷ்கரம் என்று பெயர். பிரம்மா புஷ்கரனை குருவுடன் செல்லும்படி கூறினார்.குருபகவான், பிரம்ம தேவனின் கரங்களில் இருக்கும் அமிர்த கலசத்தினை கேட்டார். அந்த அமிர்த கலசத்துக்குத் தான் புஷ்கரம் என்று பெயர். பிரம்மா புஷ்கரனை குருவுடன் செல்லும்படி கூறினார்.

ஆனால் புஷ்கரன் என்னும் தேவதை பிரம்ம தேவனை விட்டு செல்ல மறுக்கிறார். இதற்காக தன் வாக்கினை காப்பாற்ற பிரம்மா, புஷ்கரனிடம் ஒரு ஆலோசனை கூறுகிறார். அதாவது குருபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது (குருப்பெயர்ச்சி), குரு எந்த ராசியில் இருக்கிறாறோ அங்கும் அடுத்த ராசிக்கு செல்லும் போதும் 13 நாட்கள் இருந்து விட்டு மீண்டும் தன்னிடம் வந்துவிடும்படி கூறினார் பிரம்மதேவன். பிரம்மதேவனின் வாக்கை காப்பாற்ற புஷ்கரன் சம்மதித்து குருபகவானிடம் சேர்கிறார்.

குருபகவான் எந்த ராசிக்கு மாறுகிறாரோ அந்த ராசியின் நதி எதுவோ அங்கு வந்து புஷ்கரன் தேவதை (அமிர்தகலசம்) தங்குவார். புஷ்கரன் தங்கும் காலமே அந்த நதியின் புஷ்கரமாக கருதப்படுகிறது.

பிரம்ம தேவனின் அருளாலும், குருபகவானின் பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும் போது 66 கோடி தீர்த்தங்களும் அந்த நதியில் கலப்பதாக ஐதீகமும், நம்பிக்கையும் ஆகும்.

குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். துலாம் ராசிக்கான நதி காவிரி நதியாகும். கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பாயும் காவிரி நதியினை போற்றும் வகையில் இந்த வருடம் காவேரி புஷ்கரம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்வாறு புராணக்கதையை விரிவாகக் கூறிக்கொண்டிருந்த அவரின் பேச்சை பலரும் ஆர்வமுடன் கவனித்து வந்தனர் .

மயிலாடுதுறையில் இருக்கும் துலாக் கட்டத்தில் இருந்து
காவேரி கடலில் கலக்கும் பூம்புகார் கொஞ்ச தூரம் தான் .
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப் பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென் று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரி குடாக் கடலில் கலக்கிறது
காவிரி நதி பாயும் கரையோ ரங்களில் வடகரையில் 53-ம் தென்கரையில் 127-ம் ஆக 190 பாடல் பெற்ற சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளன. (274 பாடல் பெற்றவை)
108 வைணவ தேசங்களில் பெரும்பான்மையான ஆலயங்கள் காவிரி நதிக்கரை யோரத்தில் அமைந்துள்ளது.
190 சிறந்த ஆலயங்கள் காவேரியின் நதிக்கரையில் அமைந்துள்ளதே வரலாற்றில் காவேரிக் கரை பெற்றிருக்கும் முக்கிய இடத்தை காண்பிக்கிறது .கோயில்களை கட்டியவர்கள் அப்போதைய மன்னர்களே .
அந்த ஊர்கள் அப்போது மக்கள் கூடும் முக்கிய நகரங்களாக
இருந்திருக்கிறது . தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் அந்த நாளைய மாயவரத்தில் அம்மைமயில் உருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம்.
இங்கு அம்மையின் வேண்டுகோளுக்காக இறைவன் மயில்

உருக் கொண்டு தாண்டவமாடினார். இதற்குக் கௌரீதாண்டவம்என்றுபெயர். தலம்
கௌரீதாண்டவபுரமாயிற்று.அதுவே மயிலாடுதுறை
எனப்பெயப்பெற்றது இறைவன் பெயர் மாயூரநாதர். கல்வெட்டுக்களும் தேவார மும் மயிலாடுதுறையார், மயிலாடுதுறையரன் எனக் குறிக்கின்றன. இறைவியின் பெயர் அஞ்சல்நாயகி, அபயாம்பிகை என்பன. தீர்த்தம் காவிரியில் இடப தீர்த்தத் துறை விசேடம். துலாமாதம் முழுவதும் இங்கு நீராட்டு விழா நடைபெறும். 1 372 of 1907, 2 380 of 1907, 3 376 of 1907, 4 377 of 1907.
இத்தலத்தைப்பற்றிப் படியெடுக்கப்பட்டதாகப் பதினாறு கல்வெட்டுக்கள் உள்ளன. பணிசெய்த அரசர்கள் குலோத்துங்கன் I, இராசாதிராசன் II, குலோத்துங்கன் III, இராஜராஜன் III, சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவர்களாவர். இக்கல்வெட்டுக் களால் நிலம் பொன் அளிக்கப்பெற்றமை அறியப்பெறுகின்றன. இறைவன் திருமயிலாடுதுறை உடையார்(372 of 1907) எனவும் குறிக்கப்பெறுவர்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கல்லணை கட்டினான். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை.நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்.இவ்வாறு தமிழர் வரலாற்றில் கலந்துவிட்ட காவேரி இலக்கியத்திலும் பெருவாரியாகப் பேசப்படுகிறது .
கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடா முடியி னுள் கங்கை இருக்கிறாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என்றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான்.
“கங்கையிற் புனிதமாய கா விரி” என்கிறார் ஆழ்வார்ஒருவர்
சிலப்பதிகாரத்தில் இளங்கோ வடிகள்
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!” என்கிறார் .
“காவிரி நடை பயின்று வருகின்ற வழி யெல்லாம் கழனிகள் எல் லாம் பச் சைப் பசுங் கம்பளங்கள் போல் திகழ் கின்றன. புனல் பெருகும் வழி யெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ் சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய, இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டி னரான இளங்கோவடி களும், கம்பனுக்கு இணையாக
ரசித்தி ருக்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கவுதம புத்தர் அடிச்சுவட்டில் என்ற ஒரு அரிய பயண நூல் வந்திருந்தது அதன் பின்னர்
எழுத்தாளர் சிட்டி , எழுத்தாளர்தி.ஜானகிராமனுடன் இணைந்து ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற ஒரு அற்புதமான பயண நூல்ஒன்றை காவேரி கரையெங்கும் பயணித்து எழுதினர் .
இத்தனை சிறப்பு பெற்ற இலக்கியத்திலும் ,வரலாற்றிலும் ,பண்பாட்டிலும் , ஆன்மீகத்திலும் பின்னிப்பிணைந்த காவேரியில் பல லக்ஷம் மக்கள் இன்னமும் கூடுவதில் வியப்பில்லை எனவேத தோன்றுகிறது .
இப்போது 2017 இல் கூடிய மகா ப்யஷ்காரனிபோல் அதற்க்கு முந்திய 144 வருடங்களுக்கு முன்பும் கூடியிருக்கும் அவைகள் பின் நோக்கிச் சென்றால் ,1873,1729 ,1585 1441,1292,1153,1011ஆகிய வருடங்களிலும் நடந்திருக்கும் .
1011 என்றால் 1012 வரை இராஜராஜன் மாமன்னராக இருந்த காலகட்டம் .1014 வரை இராஜராஜன் ,இராஜேந்திரனுடன்
இணைந்தே வாழ்ந்திருக்கிறார் .

வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும் – (பட்டினப்பாலை ( 5 – 7 )
என்று புகழ்ந்து பாடுகிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் புலவர். அந்த காவிரி, இன்றைக்கும் கர்நாடக எல்லை வரை வற்றாத ஜீவநதியாகவே இருக்கிறது. தான் பொய்க்கவில்லை. ஆனால் மிழ்நாட்டில் மட்டும்
பொய்த்துப் போய் விட்டது.
யாரைத்தான்குறை சொல்வதோ என்ற ஏக்கத்துடன் அன்று இரவே சில ஆலயங்களுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பினேன்
அண்ணாமலை சுகுமாரன்
24/9/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Sep 25, 2017 8:29 am

மயிலாடுதுறை மகா புஷ்கரம்  A0ghJmJhTNKlz8mGeYXX+2
மயிலாடுதுறை மகா புஷ்கரம்  KfpvftFVTLao0A48HQht+3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:26 pm

மயிலாடுதுறை மகா புஷ்கரம்  103459460 மயிலாடுதுறை மகா புஷ்கரம்  3838410834
-
இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.

குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக