புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க
Page 10 of 12 •
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
18 .12 .2017
இது ஒரு புதிய முயற்சி.
ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.
ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.
காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.
அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.
அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.
அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.
அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.
ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.
என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி
"என் வீரத்தின் மீதாணை"
இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.
தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.
அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.
அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.
காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.
அரசி : வரச்சொல் சபைக்கு.
காவலாளி : உத்தரவு.
ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?
அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.
சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.
புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.
அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?
புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.
அரசி : ஏனப்படி?
புலவர் : காரணம் புரியவில்லை
அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?
புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.
அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.
புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.
அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]
ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?
புலவர் : இதே ஊர்.
ப்ரதம தளபதி : பெயர்?
புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.
ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?
புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு
ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?
புலவர் : இல்லை
ப்ரதம தளபதி : சகோதரர்?
புலவர் : அனாதை
ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?
புலவர் : எமக்குத் தொழில் கவிதை.
ப்ரதம தளபதி : அடுத்து?
புலவர் : ஆண்டவன் தொண்டு
ப்ரதம தளபதி : இதற்கு முன்?
புலவர் : பிறப்பால் ஊமை.
ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?
புலவர் : கலைவாணியின் அருளால்.
ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.
புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?
ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.
புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.
அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,
அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.
புலவர் : அரசி
அரசி : ஆட்சிக்கிலக்கணம்?
புலவர் : ஆணவமற்ற அரசு.
அரசி : புலவனின் உரிமை?
புலவர் : சுதந்திரப் பறவை.
அரசி : இதயத்தை மகிழ்விப்பது?
புலவர் : குழந்தையின் மழலை
அரசி : வேதனை தருவது?
புலவர் : நண்பனின் பிரிவு.
அரசி : நட்புக்குயர்வு?
புலவர் : இடுக்கண் களைவது.
அரசி : எண்ணக்கூடாதது ?
புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]
அரசி : பொருளில்லாதவர்க்கு?
புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.
அரசி : அருளில்லாதவர்க்கு?
புலவர் : எவ்வுலகமுமில்லை.
அரசி : எங்கும் வேண்டுவது?
புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.
அரசி : உயர்வுக்கு வழி?
புலவர் : உண்மையும், சத்தியமும்.
ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?
புலவர் : கவிஞனின் காவியம்
அரசி : அழிந்து விடுவது?
புலவர் : நிலையற்ற செல்வம்
ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?
புலவர் : பேச்சைக் குறைப்பது.
ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?
புலவர் : பொன்னேட்டில் இருப்பது.
அரசி : புவியாள்பவர் முடிவு?
புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?
புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?
புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்
தளபதி : கேட்கத் தகாதது ?
புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.
ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?
புலவர் : அடக்கமில்லாமை
அரசி : அதற்குதாரணம் ?
புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.
ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி
பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.
அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.
அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.
புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
புலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.
ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.
புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.
அரசி : எப்படி?
புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.
ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.
புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.
தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.
புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.
Heezulia
18 .12 .2017
இது ஒரு புதிய முயற்சி.
ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.
ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.
காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.
அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.
அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.
அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.
அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.
ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.
என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி
"என் வீரத்தின் மீதாணை"
இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.
தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.
அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.
அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.
காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.
அரசி : வரச்சொல் சபைக்கு.
காவலாளி : உத்தரவு.
ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?
அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.
சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.
புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.
அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?
புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.
அரசி : ஏனப்படி?
புலவர் : காரணம் புரியவில்லை
அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?
புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.
அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.
புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.
அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]
ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?
புலவர் : இதே ஊர்.
ப்ரதம தளபதி : பெயர்?
புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.
ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?
புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு
ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?
புலவர் : இல்லை
ப்ரதம தளபதி : சகோதரர்?
புலவர் : அனாதை
ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?
புலவர் : எமக்குத் தொழில் கவிதை.
ப்ரதம தளபதி : அடுத்து?
புலவர் : ஆண்டவன் தொண்டு
ப்ரதம தளபதி : இதற்கு முன்?
புலவர் : பிறப்பால் ஊமை.
ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?
புலவர் : கலைவாணியின் அருளால்.
ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.
புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?
ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.
புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.
அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,
அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.
புலவர் : அரசி
அரசி : ஆட்சிக்கிலக்கணம்?
புலவர் : ஆணவமற்ற அரசு.
அரசி : புலவனின் உரிமை?
புலவர் : சுதந்திரப் பறவை.
அரசி : இதயத்தை மகிழ்விப்பது?
புலவர் : குழந்தையின் மழலை
அரசி : வேதனை தருவது?
புலவர் : நண்பனின் பிரிவு.
அரசி : நட்புக்குயர்வு?
புலவர் : இடுக்கண் களைவது.
அரசி : எண்ணக்கூடாதது ?
புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]
அரசி : பொருளில்லாதவர்க்கு?
புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.
அரசி : அருளில்லாதவர்க்கு?
புலவர் : எவ்வுலகமுமில்லை.
அரசி : எங்கும் வேண்டுவது?
புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.
அரசி : உயர்வுக்கு வழி?
புலவர் : உண்மையும், சத்தியமும்.
ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?
புலவர் : கவிஞனின் காவியம்
அரசி : அழிந்து விடுவது?
புலவர் : நிலையற்ற செல்வம்
ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?
புலவர் : பேச்சைக் குறைப்பது.
ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?
புலவர் : பொன்னேட்டில் இருப்பது.
அரசி : புவியாள்பவர் முடிவு?
புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?
புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?
புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்
தளபதி : கேட்கத் தகாதது ?
புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.
ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?
புலவர் : அடக்கமில்லாமை
அரசி : அதற்குதாரணம் ?
புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.
ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி
பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.
அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.
அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.
புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
புலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.
ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.
புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.
அரசி : எப்படி?
புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.
ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.
புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.
தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.
புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
31.03.2018
படம் : பெண்மணி அவள் கண்மணி 1988
பேசினவங்க :
மேனேஜரம்மா - மனோரமா
பெரியவர் - விசு
சேகரின் அம்மா - கமலா காமேஷ்
சுதா - அருணா [கல்லுக்குள் ஈரம் ஹீரோயின்]
சேகர் - இளவரசன்
Heezulia
படம் : பெண்மணி அவள் கண்மணி 1988
பேசினவங்க :
மேனேஜரம்மா - மனோரமா
பெரியவர் - விசு
சேகரின் அம்மா - கமலா காமேஷ்
சுதா - அருணா [கல்லுக்குள் ஈரம் ஹீரோயின்]
சேகர் - இளவரசன்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
17.04.2018
மொத்தமா அனுப்பினா, பெரிய பதிவா இருக்கு, அனுப்ப முடியாதுன்னு சொல்லிருச்சு. என்னவோ போங்க. இது 12 நிமிஷ ஸீன். 5 நிமிஷத்துக்கு மேலா இருக்கிற ஸீன் வசனங்களை அனுப்ப முடியாது, அனுப்ப கூடாது போலியே. நீளமா எழுதினா படிக்க மாட்டாங்கன்னு ஈகரையில இப்படி ஒரு கட்டுப்பாடு போல. குட்டி குட்டியாத்தான் அனுப்பணும் போல. அதனால இதை நா..............லு பாகங்களா பிரிச்சு அனுப்புறேன்.
முதல் பாகம்
கோர்ட் ஸீன்
சாட்சி கூண்ட்ல இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் நிக்கிறார். டிஃபென்ஸ் லாயர் வரதராஜன் கூண்டு பக்கத்தில வந்து நிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் : இன்ஸ்பெக்டர் ஸா........ர், ஸ்டேஷனுக்கு ஒரு phone கால் வந்ததுன்னு சொன்னீங்களே..........., அது யார்கிட்ட இருந்து வந்துது?
இன்பெக்டர் : அத நான் விஜாரிக்கல.
டிஃபென்ஸ் லாயர் : [கிண்டலா]விஜாரிக்கலயாம்.
கோர்ட்ல உக்காந்திருந்த பார்வையாளர்கள் சிரிக்கிறாங்க. அரசாங்க வக்கீல் முழிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் :ஏன் சார் விஜாரிக்கல?
இன்ஸ்பெக்டர் : ஸ்டேஷனுக்கு பொதுவாவே இந்த மாதிரி அனாமத்து கால்ஸ் நெறை........ய வருது. அதுலேயும் இது கொல சம்பந்தப்பட்டதுங்கறதால, ஒடனடியா ஸ்பாட்டுக்கு போயி, சம்பந்தப்பட்ட உயிர காப்பாத்துறதுதான் முக்கியம். அதனால தகவல் குடுத்தவர பத்தி விசாரிச்சு நேரத்த வீணாக்க நான் விரும்பல.
டிஃபென்ஸ் லாயர் : நல்................ல பாலிஸி, நல்ல பாலிஸி. இதுலல்லாம் நான் ஒண்ணும் தப்பே............. சொல்ல முடியாது.
டிஃபென்ஸ் லாயர் அப்பப்போ, விக்ஸ் இன்ஹேலர் மூக்கில வச்சு உறிஞ்சுகிறார்.
டிஃபென்ஸ் லாயர் : அது சரி இன்ஸ்பெக்டர் சார், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் உள்ள காயங்களை வைத்து பார்க்கும்பொழுது, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அப்டீன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது. நீங்க கைப்பற்றின ஆயுதம் ஒண்ணு. சரி, அந்த மேற்பட்ட ஆயுதங்கள் என்னாச்சு.............?
இன்ஸ்பெக்டர் : ஸ்பாட்ல எனக்கு வேறெதுவும் கெடக்கல.
டிஃபென்ஸ் லாயர் : மாயமா மறஞ்சு போயிருச்சா?
இன்ஸ்பெக்டர் : நான் அங்க போறதுக்குள்ள, குற்றவாளி அதைல்லாம் மறச்சு வச்சிர்கலாம்.
டிஃபென்ஸ் லாயர் : வீட்ல கொண்டு போயி வச்சுட்டு வந்துர்க்கலாம்ங்கறீங்க.
அரசாங்க வக்கீல் எந்திருச்சு நிக்கிறார். “I object this your honour. Defense லாயரின் இந்த கிண்டல, நான் வன்மையா கண்டிக்கிறேன்.”
டிஃபென்ஸ் லாயர் : உண்மைகளைல்லாம் நல்லா கிண்டி கெளர்றதுக்குத்தான் மறுவிஜாரணைக்கே உத்தரவிட்ருக்காங்க. அப்டீங்கறத நான் பப்ளிக் ப்ராஸக்யூட்டருக்கு ஞாபகபடுத்த விரும்புறேன் யுவர் ஆனர்.
ஜட்ஜ் : அப்ஜெக் ஷன் ஓவர் ரூல்ட்.
அரசாங்க வக்கீலை தெனாவட்டா பாத்துகிட்டே விக்ஸ் உறிஞ்சுறார், டிஃபென்ஸ் லாயர்.
டிஃபென்ஸ் லாயர் : இன்ஸ்பெக்டர் சார், கொலை நடந்த எடத்ல கைரேகைகள்லாம் இருந்துதுன்னு நீங்க சொன்னீங்க. அது யாருடைய கைரேகன்னு சொல்ல முடியுமா?
இன்ஸ்பெக்டர் : எல்.......லாமே குற்றவாளியோட கைரேகதான்.
டிஃபென்ஸ் லாயர் : குற்றம் சாட்டப்பட்டவர்டைய கைரேகன்னு சொல்றீங்க, அ?
இன்ஸ்பெக்டர் அமைதியா நிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் : எந்தெந்த எடத்ல கைரேககள் இருந்துது? அத சொல்ல முடியுமா?
இன்ஸ்பெக்டர் : செவுத்துல ரெண்டு மூணு எடத்துல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ம்ம்ம்
இன்ஸ்பெக்டர் : வாசகதவுல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ம்ம்ம்
இன்ஸ்பெக்டர் : பாத்ரூம் கதவ்ல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ம்ம்ம்
இன்ஸ்பெக்டர் : அப்றம்................ TVல கூட இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : TVல குறிப்...பா எந்த எடத்ல கைரேக இருந்துது?
இன்ஸ்பெக்டர் : On Off ஸுச்சுல.
டிஃபென்ஸ் லாயர் : ஸோ அவர் TVய இயக்கியிருக்காருன்னு நீங்க சொல்றீங்க.
இன்ஸ்பெக்டர் கொஞ்சம் யோசிச்சு : ஆமா.
டிஃபென்ஸ் லாயர் : நீங்க போனபோ அந்த ட்டீவி ஆன்ல இருந்ததா இல்ல ஆஃப்ல இருந்ததா?
இன்ஸ்பெக்டர் யோசிச்சு : ஆஃப்ல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ஸோ அவர்தான் ஆஃப் பண்ணீர்கணும்னு நீங்க சொல்றீங்க.
இன்ஸ்பெக்டர் அமைதியா நிக்கிறார். அரசாங்க வக்கீல் இன்ஸ்பெக்டரை பாக்குறார்.
டிஃபென்ஸ் லாயர் : இன்ஸ்பெக்டர் சார், சாதாரணமா கொல நடக்குற எடங்கள்ல ட்டீவியோ இல்ல ரேடியோவோ இருந்துதுன்னா, இந்த கொலகாரங்க கொல செய்யப்பட்றவங்க கூச்சல் வெளீல கேக்ககூடாதுங்றதுக்காக, ட்டீவியையோ ரேடியோவையோ ஆன் செஞ்சு பெருஸ்............ஸா வக்கிறது வழக்கம் இல்லியா?
இன்ஸ்பெக்டர் : ஆமா.
டிஃபென்ஸ் லாயர் : ஆனா நீங்க போனபோது கொல நடந்த எடத்துல ட்டீவி ஆஃப் செய்யப்பட்ருக்கு. அதுவும் கொலைகாரன் கையாலயே ஆஃப் செய்யப்பட்ருக்குனு நீங்கதான் சொல்றீங்கல்லியா?
கொஞ்சம் நேரம் பேச்சு இல்ல.
டிஃபென்ஸ் லாயர் : தேட்ஸால் யுவர் ஆனர்.
- தொடரும்
Heezulia
மொத்தமா அனுப்பினா, பெரிய பதிவா இருக்கு, அனுப்ப முடியாதுன்னு சொல்லிருச்சு. என்னவோ போங்க. இது 12 நிமிஷ ஸீன். 5 நிமிஷத்துக்கு மேலா இருக்கிற ஸீன் வசனங்களை அனுப்ப முடியாது, அனுப்ப கூடாது போலியே. நீளமா எழுதினா படிக்க மாட்டாங்கன்னு ஈகரையில இப்படி ஒரு கட்டுப்பாடு போல. குட்டி குட்டியாத்தான் அனுப்பணும் போல. அதனால இதை நா..............லு பாகங்களா பிரிச்சு அனுப்புறேன்.
முதல் பாகம்
கோர்ட் ஸீன்
சாட்சி கூண்ட்ல இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் நிக்கிறார். டிஃபென்ஸ் லாயர் வரதராஜன் கூண்டு பக்கத்தில வந்து நிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் : இன்ஸ்பெக்டர் ஸா........ர், ஸ்டேஷனுக்கு ஒரு phone கால் வந்ததுன்னு சொன்னீங்களே..........., அது யார்கிட்ட இருந்து வந்துது?
இன்பெக்டர் : அத நான் விஜாரிக்கல.
டிஃபென்ஸ் லாயர் : [கிண்டலா]விஜாரிக்கலயாம்.
கோர்ட்ல உக்காந்திருந்த பார்வையாளர்கள் சிரிக்கிறாங்க. அரசாங்க வக்கீல் முழிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் :ஏன் சார் விஜாரிக்கல?
இன்ஸ்பெக்டர் : ஸ்டேஷனுக்கு பொதுவாவே இந்த மாதிரி அனாமத்து கால்ஸ் நெறை........ய வருது. அதுலேயும் இது கொல சம்பந்தப்பட்டதுங்கறதால, ஒடனடியா ஸ்பாட்டுக்கு போயி, சம்பந்தப்பட்ட உயிர காப்பாத்துறதுதான் முக்கியம். அதனால தகவல் குடுத்தவர பத்தி விசாரிச்சு நேரத்த வீணாக்க நான் விரும்பல.
டிஃபென்ஸ் லாயர் : நல்................ல பாலிஸி, நல்ல பாலிஸி. இதுலல்லாம் நான் ஒண்ணும் தப்பே............. சொல்ல முடியாது.
டிஃபென்ஸ் லாயர் அப்பப்போ, விக்ஸ் இன்ஹேலர் மூக்கில வச்சு உறிஞ்சுகிறார்.
டிஃபென்ஸ் லாயர் : அது சரி இன்ஸ்பெக்டர் சார், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் உள்ள காயங்களை வைத்து பார்க்கும்பொழுது, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அப்டீன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது. நீங்க கைப்பற்றின ஆயுதம் ஒண்ணு. சரி, அந்த மேற்பட்ட ஆயுதங்கள் என்னாச்சு.............?
இன்ஸ்பெக்டர் : ஸ்பாட்ல எனக்கு வேறெதுவும் கெடக்கல.
டிஃபென்ஸ் லாயர் : மாயமா மறஞ்சு போயிருச்சா?
இன்ஸ்பெக்டர் : நான் அங்க போறதுக்குள்ள, குற்றவாளி அதைல்லாம் மறச்சு வச்சிர்கலாம்.
டிஃபென்ஸ் லாயர் : வீட்ல கொண்டு போயி வச்சுட்டு வந்துர்க்கலாம்ங்கறீங்க.
அரசாங்க வக்கீல் எந்திருச்சு நிக்கிறார். “I object this your honour. Defense லாயரின் இந்த கிண்டல, நான் வன்மையா கண்டிக்கிறேன்.”
டிஃபென்ஸ் லாயர் : உண்மைகளைல்லாம் நல்லா கிண்டி கெளர்றதுக்குத்தான் மறுவிஜாரணைக்கே உத்தரவிட்ருக்காங்க. அப்டீங்கறத நான் பப்ளிக் ப்ராஸக்யூட்டருக்கு ஞாபகபடுத்த விரும்புறேன் யுவர் ஆனர்.
ஜட்ஜ் : அப்ஜெக் ஷன் ஓவர் ரூல்ட்.
அரசாங்க வக்கீலை தெனாவட்டா பாத்துகிட்டே விக்ஸ் உறிஞ்சுறார், டிஃபென்ஸ் லாயர்.
டிஃபென்ஸ் லாயர் : இன்ஸ்பெக்டர் சார், கொலை நடந்த எடத்ல கைரேகைகள்லாம் இருந்துதுன்னு நீங்க சொன்னீங்க. அது யாருடைய கைரேகன்னு சொல்ல முடியுமா?
இன்ஸ்பெக்டர் : எல்.......லாமே குற்றவாளியோட கைரேகதான்.
டிஃபென்ஸ் லாயர் : குற்றம் சாட்டப்பட்டவர்டைய கைரேகன்னு சொல்றீங்க, அ?
இன்ஸ்பெக்டர் அமைதியா நிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் : எந்தெந்த எடத்ல கைரேககள் இருந்துது? அத சொல்ல முடியுமா?
இன்ஸ்பெக்டர் : செவுத்துல ரெண்டு மூணு எடத்துல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ம்ம்ம்
இன்ஸ்பெக்டர் : வாசகதவுல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ம்ம்ம்
இன்ஸ்பெக்டர் : பாத்ரூம் கதவ்ல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ம்ம்ம்
இன்ஸ்பெக்டர் : அப்றம்................ TVல கூட இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : TVல குறிப்...பா எந்த எடத்ல கைரேக இருந்துது?
இன்ஸ்பெக்டர் : On Off ஸுச்சுல.
டிஃபென்ஸ் லாயர் : ஸோ அவர் TVய இயக்கியிருக்காருன்னு நீங்க சொல்றீங்க.
இன்ஸ்பெக்டர் கொஞ்சம் யோசிச்சு : ஆமா.
டிஃபென்ஸ் லாயர் : நீங்க போனபோ அந்த ட்டீவி ஆன்ல இருந்ததா இல்ல ஆஃப்ல இருந்ததா?
இன்ஸ்பெக்டர் யோசிச்சு : ஆஃப்ல இருந்துது.
டிஃபென்ஸ் லாயர் : ஸோ அவர்தான் ஆஃப் பண்ணீர்கணும்னு நீங்க சொல்றீங்க.
இன்ஸ்பெக்டர் அமைதியா நிக்கிறார். அரசாங்க வக்கீல் இன்ஸ்பெக்டரை பாக்குறார்.
டிஃபென்ஸ் லாயர் : இன்ஸ்பெக்டர் சார், சாதாரணமா கொல நடக்குற எடங்கள்ல ட்டீவியோ இல்ல ரேடியோவோ இருந்துதுன்னா, இந்த கொலகாரங்க கொல செய்யப்பட்றவங்க கூச்சல் வெளீல கேக்ககூடாதுங்றதுக்காக, ட்டீவியையோ ரேடியோவையோ ஆன் செஞ்சு பெருஸ்............ஸா வக்கிறது வழக்கம் இல்லியா?
இன்ஸ்பெக்டர் : ஆமா.
டிஃபென்ஸ் லாயர் : ஆனா நீங்க போனபோது கொல நடந்த எடத்துல ட்டீவி ஆஃப் செய்யப்பட்ருக்கு. அதுவும் கொலைகாரன் கையாலயே ஆஃப் செய்யப்பட்ருக்குனு நீங்கதான் சொல்றீங்கல்லியா?
கொஞ்சம் நேரம் பேச்சு இல்ல.
டிஃபென்ஸ் லாயர் : தேட்ஸால் யுவர் ஆனர்.
- தொடரும்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
17.04.2018
2ஆம் பாகம்
டிஃபென்ஸ் லாயர் அப்டி சொல்லிட்டு போய் உக்கார்றார். யுவர் ஆனர் எதையோ எழுதுறாங்க. பார்வையாளர்களுக்கிடையே சலசலப்பு. அரசாங்க வக்கீல் முழிச்சுகிட்டு, அங்கயும் இங்கயும் பாத்துட்டு உக்காந்திருக்கார். ஜட்ஜ் எழுதி முடிச்சுட்டு, டிஃபென்ஸ் வக்கீல்ட்ட, “இனி, டிஃபென்ஸ் தரப்பு சாட்சியை ஆஜர்படுத்தலாம்.” னு சொல்றார்.
டிஃபென்ஸ் லாயர் : எனது தரப்பின் முதல் சாட்சியாக சொப்னா லாட்ஜ் மேனேஜர் திரு ராமலிங்கத்தை விஜாரிக்க அனுமதி கோருகிறேன் யுவர் ஆனர்.
ஜட்ஜ் தலையாட்டி : பர்மிஷன் கிராண்டட்.
ராமலிங்கம் சாட்சி கூண்டுல வந்து நிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் : நீங்க எங்க சார் வேல பாக்றீங்க?
ராமலிங்கம் : சொப்னா லாட்ஜில மேனேஜரா வேல பாக்குறேன் சார்.
டிஃபென்ஸ் லாயர் : மிஸ்டர் பிரபாகர உங்க்ளுக்கு தெரியுமா?
ராமலிங்கம் : தெரியுங்க.
டிஃபென்ஸ் லாயர் : எப்டி தெரியும்? தொழில் மொறைலயா, ஒறவு மொறைலயா இல்ல நட்பு மொறைலயா?
ராமலிங்கம் : தொழில் மொறைலதான் சார். அவர் அடிக்கடி எங்க லாட்ஜுக்கு வருவாரு. ரூம் எடுத்து தங்குவாரு.
எதிர் சாட்சி கூண்டில நிக்கிற ப்ரபாகரன் ஒண்ணும் புரியாத மாதிரி பாவம்போ................ல, ராமலிங்கம் சொல்றதை கேட்டுட்டு நிக்கிறாரு.
டிஃபென்ஸ் லாயர் : தங்கி என்ன பண்ணுவாரு.............?
ராமலிங்கம் : [தயங்கி] அதெப்டீங்க நா....................
டிஃபென்ஸ் லாயர் : ஓ ஒங்க லாட்ஜ் அந்த மாதிரி லாட்ஜா?
ராமலிங்கம் ஒண்ணும் சொல்லல.
டிஃபென்ஸ் லாயர் : ஸோ அந்த மாதிரி தொழில் மொறைல ஒங்க ரெண்டு பேருக்கும் .................
ராமலிங்கம் இடை மறிச்சு : அப்டீல்லாம் ஒண்ணுமில்லேங்க. நான் ரூம் குடுப்பேன். அத்தோட சரி.
டிஃபென்ஸ் லாயர் : தனியாத்தான் வருவாரா?
ராமலிங்கம் : தனியாதான் வருவாரு. ஆனா தனியா தங்கமாட்டாரு.
அரசாங்க வக்கீலுக்கு என்ன செய்றதுன்னே தெரியாம தேமேன்னு தவிச்சுட்டு உக்காந்திருக்காரு.
டிஃபென்ஸ் லாயர் : சம்பவம் நடந்த அன்னிக்கி மிஸ்டர் ப்ரபாகர் ஒங்க லாட்ஜுக்கு வந்தாரா?
ராமலிங்கம் : ஆமாங்க.
டிஃபென்ஸ் லாயர் : எத்தன மணிக்கி?
ராமலிங்கம் : வழக்கமா பத்து மணிக்கி வருவாரு. அன்னிக்கி எட்டு மணிக்கே வந்துட்டாரு. எனக்கே ஆச்சரியமா இருந்துது.
ப்ரபாகர் திகைத்து பாக்றான்.
டிஃபென்ஸ் லாயர் : ரூமெடுத்து தங்கினாரா?
ராமலிங்கம் : ஆமாங்க.
அரசாங்க வக்கீல் கோபமா எந்திரிச்சு : ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர். சம்பவம் நடந்த அன்னிக்கி குற்றவாளி அந்த லாட்ஜுக்கு போயிருக்காரு தவிர, அங்க தங்கல. டிஃபென்ஸ் லாயர் இந்த வழக்க திச திருப்ப பாக்றாரு.
டிஃபென்ஸ் லாயர் : கரெக்ட்டு திச திருப்பத்தான் பாக்றேன். போன தடவ தப்பா...............ன தெசல போன இந்த கேஸ இந்த தடவ சரியா.............ன தெசல திருப்ப பாக்குறேன். மிஸ்ட்டர் ப்ராஸிக்யூட்டர், போன தடவ டிஃபென்ஸ் தரப்புக்கு போதிய அவகாசம் தரப்படல, அப்டீ..............ங்கற காரணத்தினாலதான், இந்த கேஸ் மறு விஜாரணைக்கு வந்திருக்கு. அத நான் உங்களுக்கு ஞாபகபடுத்த விரும்புறேன்.
ஜட்ஜ் : அப்ஜெக் ஷன் ஓவர்ரூல்ட்.
டிஃபென்ஸ் லாயர் : கேட்டியா உக்காரு. [ராமலிங்கத்தை பார்த்து] மிஸ்டர் ராமலிங்கம், சம்பவம் நடந்த அன்னக்கி மிஸ்டர் ப்ரபாகர் உங்க லாட்ஜ்ல ரூமெடுத்து தங்கினாருனு சொன்னீங்கள, எத்ன மணி வரைக்கும் தங்கி இருந்தாரு?
ராமலிங்கம் : ராத்ரி ஒம்போதர மணி வரைக்கும் சார்.
டிஃபென்ஸ் லாயர் : ஓ... ஒம்போதர மணி வரைக்கும்.
ராமலிங்கம் : ஆமா சார்.
டிஃபென்ஸ் லாயர் : அதாவது ஒம்போது அடிச்சு முப்பது நிமிஷம் வரைக்கும்.
ராமலிங்கம் : ஆமா
டிஃபென்ஸ் லாயர் : அதா.......வது பத்தடிக்கிறதுக்கு முப்பது நிமிஷம் முன்னாடி வரைக்கும்.
ராமலிங்கம் : ஆமா
டிஃபென்ஸ் லாயர் : அதாவது...............
ஜட்ஜ் : மிஸ்டர் வரதராஜன், நான் புரிஞ்சுகிட்டேன்.
டிஃபென்ஸ் லாயர் : உங்களுக்கு புரியலியோன்னுதான் நான் எடுத்து எடுத்து சொன்னேன்.
ஜட்ஜ் : ஒரு தடவ சொன்னா போதும்.
டிஃபென்ஸ் லாயர் : தேடிஸ் ஆ.........ல் யுவர் ஆனர்.
ஜட்ஜ் : மிஸ்டர் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர், சாட்சிய நீங்க குறுக்கு விசாரணை செய்யலாம்.
PP எந்திருச்சு வர்றார்.
PP : மிஸ்டர் ராமலிங்கம், போன தடவ விஜாரணையில, குற்றவாளி உங்க லாட்ஜுக்கு வந்து, மோகன பத்தி விஜாரிச்சாருன்னு மட்டும்தான் சொன்னீங்க. ஆனா இந்த தடவ, அவர் ரூமெடுத்து தங்கியிருந்தாருன்னு சொல்றீங்க. அப்போ போன தடவ நீங்க சொன்னத, இப்போ நீங்களே பொய்யின்னு சொல்றீங்களா?
ராமலிங்கம் : அதெப்டிங்க? போன தடவ நீங்க ப்ரபாகர் வந்தாரான்னு மட்டும்தான் கேட்டீங்க. வந்தார்னு சொன்னேன். தங்கியிருந்தாரான்னு நீங்க கேக்கலியே. அதனால நானும் சொல்லல.
PP : நீங்க சொல்றது உண்மயா இருந்தா, லாட்ஜ்ல தங்கியிருந்ததுக்கு அடையாளமா, ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டிருக்கணுமே, போட்ருக்காரா?
ராமலிங்கம் : இப்டி வந்து தங்றவங்க யாரும் ரிஜிஸ்டர்ல கையழுத்து போடல சார். [ஜட்ஜை ஒரு தடவை பாத்துட்டு, PPட்ட குனிஞ்சு] நீங்க கூடதான் எத்னையோ தடவ வந்து தங்கியிருக்கீங்க. உங்ககிட்ட என்னிக்யாவது கையழுத்து கேட்ருக்கேனா?
டிஃபென்ஸ் லாயருக்கு ஆச்சரியம். பப்ளிக் அசடு வழியிறார். பார்வையாளர்கள் சிரிக்கிறாங்க.
PP : கேட்ட கேள்விக்கு மட்....டும் பதில் சொன்னா போதும். அது மட்டும் போதும். அவ்ளவே போதும். த த த தடிஸ் ஆல் யுவர் ஆனர்.
தன் இடத்தில போய், தலை குனிஞ்சு உக்கார்றார். டிஃபென்ஸ் சுத்துமுத்தும் பாக்கிறார்.
டிஃபென்ஸ் PP யை பார்த்து மெதுவா : டேய், ஓங்கொழந்தக்கு காது குத்துனதுலேருந்து கல்யாணம் பண்ற வரைக்கும் அண்ணா அண்ணான்னு ஏவ்வீட்டுக்கு ஓடி வருவே. இந்த எடத்துக்கு என்ன விட்டு நீ மட்டும் தனீ.................யா போய்ருக்கே.
- தொடரும்
Heezulia
2ஆம் பாகம்
டிஃபென்ஸ் லாயர் அப்டி சொல்லிட்டு போய் உக்கார்றார். யுவர் ஆனர் எதையோ எழுதுறாங்க. பார்வையாளர்களுக்கிடையே சலசலப்பு. அரசாங்க வக்கீல் முழிச்சுகிட்டு, அங்கயும் இங்கயும் பாத்துட்டு உக்காந்திருக்கார். ஜட்ஜ் எழுதி முடிச்சுட்டு, டிஃபென்ஸ் வக்கீல்ட்ட, “இனி, டிஃபென்ஸ் தரப்பு சாட்சியை ஆஜர்படுத்தலாம்.” னு சொல்றார்.
டிஃபென்ஸ் லாயர் : எனது தரப்பின் முதல் சாட்சியாக சொப்னா லாட்ஜ் மேனேஜர் திரு ராமலிங்கத்தை விஜாரிக்க அனுமதி கோருகிறேன் யுவர் ஆனர்.
ஜட்ஜ் தலையாட்டி : பர்மிஷன் கிராண்டட்.
ராமலிங்கம் சாட்சி கூண்டுல வந்து நிக்கிறார்.
டிஃபென்ஸ் லாயர் : நீங்க எங்க சார் வேல பாக்றீங்க?
ராமலிங்கம் : சொப்னா லாட்ஜில மேனேஜரா வேல பாக்குறேன் சார்.
டிஃபென்ஸ் லாயர் : மிஸ்டர் பிரபாகர உங்க்ளுக்கு தெரியுமா?
ராமலிங்கம் : தெரியுங்க.
டிஃபென்ஸ் லாயர் : எப்டி தெரியும்? தொழில் மொறைலயா, ஒறவு மொறைலயா இல்ல நட்பு மொறைலயா?
ராமலிங்கம் : தொழில் மொறைலதான் சார். அவர் அடிக்கடி எங்க லாட்ஜுக்கு வருவாரு. ரூம் எடுத்து தங்குவாரு.
எதிர் சாட்சி கூண்டில நிக்கிற ப்ரபாகரன் ஒண்ணும் புரியாத மாதிரி பாவம்போ................ல, ராமலிங்கம் சொல்றதை கேட்டுட்டு நிக்கிறாரு.
டிஃபென்ஸ் லாயர் : தங்கி என்ன பண்ணுவாரு.............?
ராமலிங்கம் : [தயங்கி] அதெப்டீங்க நா....................
டிஃபென்ஸ் லாயர் : ஓ ஒங்க லாட்ஜ் அந்த மாதிரி லாட்ஜா?
ராமலிங்கம் ஒண்ணும் சொல்லல.
டிஃபென்ஸ் லாயர் : ஸோ அந்த மாதிரி தொழில் மொறைல ஒங்க ரெண்டு பேருக்கும் .................
ராமலிங்கம் இடை மறிச்சு : அப்டீல்லாம் ஒண்ணுமில்லேங்க. நான் ரூம் குடுப்பேன். அத்தோட சரி.
டிஃபென்ஸ் லாயர் : தனியாத்தான் வருவாரா?
ராமலிங்கம் : தனியாதான் வருவாரு. ஆனா தனியா தங்கமாட்டாரு.
அரசாங்க வக்கீலுக்கு என்ன செய்றதுன்னே தெரியாம தேமேன்னு தவிச்சுட்டு உக்காந்திருக்காரு.
டிஃபென்ஸ் லாயர் : சம்பவம் நடந்த அன்னிக்கி மிஸ்டர் ப்ரபாகர் ஒங்க லாட்ஜுக்கு வந்தாரா?
ராமலிங்கம் : ஆமாங்க.
டிஃபென்ஸ் லாயர் : எத்தன மணிக்கி?
ராமலிங்கம் : வழக்கமா பத்து மணிக்கி வருவாரு. அன்னிக்கி எட்டு மணிக்கே வந்துட்டாரு. எனக்கே ஆச்சரியமா இருந்துது.
ப்ரபாகர் திகைத்து பாக்றான்.
டிஃபென்ஸ் லாயர் : ரூமெடுத்து தங்கினாரா?
ராமலிங்கம் : ஆமாங்க.
அரசாங்க வக்கீல் கோபமா எந்திரிச்சு : ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர். சம்பவம் நடந்த அன்னிக்கி குற்றவாளி அந்த லாட்ஜுக்கு போயிருக்காரு தவிர, அங்க தங்கல. டிஃபென்ஸ் லாயர் இந்த வழக்க திச திருப்ப பாக்றாரு.
டிஃபென்ஸ் லாயர் : கரெக்ட்டு திச திருப்பத்தான் பாக்றேன். போன தடவ தப்பா...............ன தெசல போன இந்த கேஸ இந்த தடவ சரியா.............ன தெசல திருப்ப பாக்குறேன். மிஸ்ட்டர் ப்ராஸிக்யூட்டர், போன தடவ டிஃபென்ஸ் தரப்புக்கு போதிய அவகாசம் தரப்படல, அப்டீ..............ங்கற காரணத்தினாலதான், இந்த கேஸ் மறு விஜாரணைக்கு வந்திருக்கு. அத நான் உங்களுக்கு ஞாபகபடுத்த விரும்புறேன்.
ஜட்ஜ் : அப்ஜெக் ஷன் ஓவர்ரூல்ட்.
டிஃபென்ஸ் லாயர் : கேட்டியா உக்காரு. [ராமலிங்கத்தை பார்த்து] மிஸ்டர் ராமலிங்கம், சம்பவம் நடந்த அன்னக்கி மிஸ்டர் ப்ரபாகர் உங்க லாட்ஜ்ல ரூமெடுத்து தங்கினாருனு சொன்னீங்கள, எத்ன மணி வரைக்கும் தங்கி இருந்தாரு?
ராமலிங்கம் : ராத்ரி ஒம்போதர மணி வரைக்கும் சார்.
டிஃபென்ஸ் லாயர் : ஓ... ஒம்போதர மணி வரைக்கும்.
ராமலிங்கம் : ஆமா சார்.
டிஃபென்ஸ் லாயர் : அதாவது ஒம்போது அடிச்சு முப்பது நிமிஷம் வரைக்கும்.
ராமலிங்கம் : ஆமா
டிஃபென்ஸ் லாயர் : அதா.......வது பத்தடிக்கிறதுக்கு முப்பது நிமிஷம் முன்னாடி வரைக்கும்.
ராமலிங்கம் : ஆமா
டிஃபென்ஸ் லாயர் : அதாவது...............
ஜட்ஜ் : மிஸ்டர் வரதராஜன், நான் புரிஞ்சுகிட்டேன்.
டிஃபென்ஸ் லாயர் : உங்களுக்கு புரியலியோன்னுதான் நான் எடுத்து எடுத்து சொன்னேன்.
ஜட்ஜ் : ஒரு தடவ சொன்னா போதும்.
டிஃபென்ஸ் லாயர் : தேடிஸ் ஆ.........ல் யுவர் ஆனர்.
ஜட்ஜ் : மிஸ்டர் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர், சாட்சிய நீங்க குறுக்கு விசாரணை செய்யலாம்.
PP எந்திருச்சு வர்றார்.
PP : மிஸ்டர் ராமலிங்கம், போன தடவ விஜாரணையில, குற்றவாளி உங்க லாட்ஜுக்கு வந்து, மோகன பத்தி விஜாரிச்சாருன்னு மட்டும்தான் சொன்னீங்க. ஆனா இந்த தடவ, அவர் ரூமெடுத்து தங்கியிருந்தாருன்னு சொல்றீங்க. அப்போ போன தடவ நீங்க சொன்னத, இப்போ நீங்களே பொய்யின்னு சொல்றீங்களா?
ராமலிங்கம் : அதெப்டிங்க? போன தடவ நீங்க ப்ரபாகர் வந்தாரான்னு மட்டும்தான் கேட்டீங்க. வந்தார்னு சொன்னேன். தங்கியிருந்தாரான்னு நீங்க கேக்கலியே. அதனால நானும் சொல்லல.
PP : நீங்க சொல்றது உண்மயா இருந்தா, லாட்ஜ்ல தங்கியிருந்ததுக்கு அடையாளமா, ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டிருக்கணுமே, போட்ருக்காரா?
ராமலிங்கம் : இப்டி வந்து தங்றவங்க யாரும் ரிஜிஸ்டர்ல கையழுத்து போடல சார். [ஜட்ஜை ஒரு தடவை பாத்துட்டு, PPட்ட குனிஞ்சு] நீங்க கூடதான் எத்னையோ தடவ வந்து தங்கியிருக்கீங்க. உங்ககிட்ட என்னிக்யாவது கையழுத்து கேட்ருக்கேனா?
டிஃபென்ஸ் லாயருக்கு ஆச்சரியம். பப்ளிக் அசடு வழியிறார். பார்வையாளர்கள் சிரிக்கிறாங்க.
PP : கேட்ட கேள்விக்கு மட்....டும் பதில் சொன்னா போதும். அது மட்டும் போதும். அவ்ளவே போதும். த த த தடிஸ் ஆல் யுவர் ஆனர்.
தன் இடத்தில போய், தலை குனிஞ்சு உக்கார்றார். டிஃபென்ஸ் சுத்துமுத்தும் பாக்கிறார்.
டிஃபென்ஸ் PP யை பார்த்து மெதுவா : டேய், ஓங்கொழந்தக்கு காது குத்துனதுலேருந்து கல்யாணம் பண்ற வரைக்கும் அண்ணா அண்ணான்னு ஏவ்வீட்டுக்கு ஓடி வருவே. இந்த எடத்துக்கு என்ன விட்டு நீ மட்டும் தனீ.................யா போய்ருக்கே.
- தொடரும்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
17.04.2018
3ஆம் பாகம்
டிஃபென்ஸ் கேஸை வாதாட எந்திரிக்கிறார் : யுவர் ஆனர், எனது தரப்பின் இரண்டாவது சாட்சியாக, MLA பாளயத்தை விசாரிக்க அனுமதி கோருகிறேன்.
டிஃபென்ஸ் : மிஸ்டர் பாளயம்
MLA : ம்ம்ம்
டிஃபென்ஸ் : நீங்க என்ன தொழில் பண்றீங்க?
MLA : அ, இருவதாயிரம் ஓட்டு வித்யாசத்ல ஜெயிச்சுகிறேன். என்ன பாத்து இன்னமா கேள்வி கேட்டே கண்ணு? அ............ அரசியல்.
டிஃபென்ஸ் : அ......., இதோ நிக்கிறாரே இவர உங்ளுக்கு தெரியுமா?
MLA கண்ணாடிய கழட்டி பாத்துட்டு : ஓ ............ தெரியுமே.
கண்ணாடிய மாட்டிகிறார்.
டிஃபென்ஸ் : எப்டி தெரியு...ம்?
MLA : எப்டி தெரியாம பூடும்? அவரு தொழிற்சங்க தலைவரு. அந்த மொறைல தெரியும். அப்றம் சொப்னா லாட்ஜ்ல வேற அப்பப்போ கண்டுகுவோம்.
டிஃபென்ஸ் : நீங்களும் சொப்னா லாட்ஜுக்கு அடிக்கடி போவீங்களா?
MLA ப்ரபாகரனை பாத்துட்டே : அ.....
டிஃபென்ஸ் : எதுக்காக போனீங்க?
MLA : ஒரு வசதிக்காக.
டிஃபென்ஸ் : என்ன வசதி?
MLA : த........... பொதுமக்களுடைய வசதிக்காக. என்ன அங்க பலபேரு பல விதமா பாக்க வருவாங்க.
டிஃபென்ஸ் : அ, சம்பவம் நடந்த அன்னக்கி, இவர அங்க சந்திச்சீங்களா?
MLA : அ
டிஃபென்ஸ் : எங்க சந்திச்சீங்க?
MLA : சொப்னா லாட்ஜ்லதான்.
டிஃபென்ஸ் : எத்ன மணிக்கி சந்திச்சீங்க?
MLA : நைட் ஒரு எட்டேகால் இருக்கும்மா?
டிஃபென்ஸ் : அ, சந்திச்சி அவர்கிட்ட பேசினீங்களா?
MLA : எங்கப்பா அங்க பேசுறதுக்கு நேரம் இருக்கு? பேசுற எடமா அது? அவரு அவர் வசதிக்காக வந்திருக்காரு. நான் ஏவ்வசதிக்காக போய்ருக்கேன். வணக்கம் சார், அப்டீன்னாரு. அத்தோட சரி.
டிஃபென்ஸ் : மறுபடியும் எத்தன மணிக்கு அவர சந்திச்சீங்க?
MLA தலைய சொரீரார் : அப்பால நைட் ஒரு ஒம்போ........தர மணீருக்கும் அவர் வெளிய போம்போது பாத்தேன்.
டிஃபென்ஸ் : ஒங்க வசதீல்லாம் முடிஞ்சதுகப்புறம்.
MLA : அஹ............. [இல்லேன்னு தலையாட்றார்] Gapலயே.
டிஃபென்ஸ் : சாதாரணமா எத்தன மணிக்கி உங்க வசதி முடியும்?
MLA : அது முன்னபின்ன இருக்கும்.
டிஃபென்ஸ் : த த த தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
MLA : இதெல்லாம் எனக்கு தெரியாதுபா. அவ்ரு வெளிய போனதமட்டுந்தான் நான் பாத்தேன்.
டிஃபென்ஸ் : இது ஜட்ஜோட வசதிக்கு.
MLA : அ [ஜட்ஜை கும்ப்ட்றார்]
ஜட்ஜ் : மிஸ்டர் பப்ளிக் பிராஸிகியூட்டர், நீங்க சாட்சிய குறுக்கு விசாரண பண்ணலாம்.
PP எந்திருச்சு வர்றார் : மிஸ்டர் பாளயம்
MLA : அ..............
PP : நீங்க எந்த கட்சீன்னு சொன்னீங்க?
MLA : அ............ ஊதா கட்சி
PP : தேர்தல் சமயத்ல நீங்க மஞ்சள் கட்சில தீவிரமா இருக்கிறதாக பேப்பர்ல படிச்சேனே.
MLA : ஊதா கட்சிகாரர்கள், என்னை விலைக்கு வாங்கி விட்டார்கள்.
[மேடைல நின்னு பேசுற மாதிரி பேசுறார்]
PP : இது கோர்ட்டு
MLA : ஓஹோ, இது ஒயரமான எடத்ல ஏறி நின்னாலே, அந்த புத்தி வந்துர்துபா.
PP : ஸோ நீங்க பணத்துக்காக என்னவேண்ணாலும் செய்வீங்க, அப்டித்தானே?
MLA : ம்ம், [வக்கீல் பக்கத்ல குனிஞ்சு], சில்றைக்குல்லாம் பண்றதில்ல. பண்டலுக்கு மட்டும் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
பார்வையாளர்கள் சிரிக்கிறாங்க.
PP : இப்ப நான் சொல்றேன். குற்றவாளிகிட்ட பணத்த வாங்கிகிட்டு பொய் சாட்சிதான் சொல்ல வந்த்ரிக்கீங்க. ஒத்துகிறீங்களா?
MLA : அஃஅ, ஒத்துக்க மாட்டேனே. அரசியல்தாம்மா எனக்கு வைத்து பொழப்பு. கோர்ட்ல பொய் சாட்சி சொல்றவன், பிசாசு.
PP : சரி, சம்பவம் நடந்தன்னிக்கி, சொப்னா லாட்ஜ்ல ப்ரபாகர சந்திச்சதா சொன்னீங்களே, எங்க சந்திச்சீங்க?
MLA : முன்பகுதி, ரிஜப்ஜன்.
PP : அதுக்கப்புறம் எங்க போனாரு, என்ன செஞ்சாருன்னு ஒங்க்ளுக்கு தெரியுமா, அ?
MLA : தெரியாதுப்பா. ஒம்பதர மணிக்கு அவரும், சப்பின்ஸ்பெக்டரம்மாவும் ஒண்ணா வெளிய போனாங்க, அத்தான் தெர்யும்.
PP : சப்பின்ஸ்பெக்டரம்மாவா?
MLA : அஃஅ, வித்யாம்மா, கேட்டுபாரு, இல்லேன்னு சொல்ல சொல்லு.
சாட்சி கூண்டில நின்ன ப்ரபாகர் முழிக்கிறான். தலை குனியுறான். இன்னொரு சாட்சி கூண்டில நின்ன இன்ஸ்பெக்டரும் முழிச்சுட்டு நிக்கிறார். பார்வையாளர்களுக்குள்ள சலசலப்பு.
PP : நீங்க பொய் சொல்றீங்க. சம்பவத்தன்னிக்கி ப்ரபாகர், ஓம்பத்ர மணி வரைக்கும் சொப்னா லாட்ஜ்ல இருந்தாருன்னு சொன்னீங்களே, அது பொய். அவரும், சப்பின்ஸ்பெக்டர் வித்யாவும் ஒண்ணா வெளியில போனாங்கன்னு சொன்னீங்களே, அதுவும் பொய். எல்லாமே கட்டுக்கத. நீங்க பணத்த வாங்கிகிட்டு, பொய் சாட்சிதான் சொல்ல வந்த்ருக்கீங்கன்னு நான் சொல்றேன். [ஜட்ஜை பார்த்து] தடிஸ் ஆல் யுவர் ஆனர்.
- தொடரும்
Heezulia
3ஆம் பாகம்
டிஃபென்ஸ் கேஸை வாதாட எந்திரிக்கிறார் : யுவர் ஆனர், எனது தரப்பின் இரண்டாவது சாட்சியாக, MLA பாளயத்தை விசாரிக்க அனுமதி கோருகிறேன்.
டிஃபென்ஸ் : மிஸ்டர் பாளயம்
MLA : ம்ம்ம்
டிஃபென்ஸ் : நீங்க என்ன தொழில் பண்றீங்க?
MLA : அ, இருவதாயிரம் ஓட்டு வித்யாசத்ல ஜெயிச்சுகிறேன். என்ன பாத்து இன்னமா கேள்வி கேட்டே கண்ணு? அ............ அரசியல்.
டிஃபென்ஸ் : அ......., இதோ நிக்கிறாரே இவர உங்ளுக்கு தெரியுமா?
MLA கண்ணாடிய கழட்டி பாத்துட்டு : ஓ ............ தெரியுமே.
கண்ணாடிய மாட்டிகிறார்.
டிஃபென்ஸ் : எப்டி தெரியு...ம்?
MLA : எப்டி தெரியாம பூடும்? அவரு தொழிற்சங்க தலைவரு. அந்த மொறைல தெரியும். அப்றம் சொப்னா லாட்ஜ்ல வேற அப்பப்போ கண்டுகுவோம்.
டிஃபென்ஸ் : நீங்களும் சொப்னா லாட்ஜுக்கு அடிக்கடி போவீங்களா?
MLA ப்ரபாகரனை பாத்துட்டே : அ.....
டிஃபென்ஸ் : எதுக்காக போனீங்க?
MLA : ஒரு வசதிக்காக.
டிஃபென்ஸ் : என்ன வசதி?
MLA : த........... பொதுமக்களுடைய வசதிக்காக. என்ன அங்க பலபேரு பல விதமா பாக்க வருவாங்க.
டிஃபென்ஸ் : அ, சம்பவம் நடந்த அன்னக்கி, இவர அங்க சந்திச்சீங்களா?
MLA : அ
டிஃபென்ஸ் : எங்க சந்திச்சீங்க?
MLA : சொப்னா லாட்ஜ்லதான்.
டிஃபென்ஸ் : எத்ன மணிக்கி சந்திச்சீங்க?
MLA : நைட் ஒரு எட்டேகால் இருக்கும்மா?
டிஃபென்ஸ் : அ, சந்திச்சி அவர்கிட்ட பேசினீங்களா?
MLA : எங்கப்பா அங்க பேசுறதுக்கு நேரம் இருக்கு? பேசுற எடமா அது? அவரு அவர் வசதிக்காக வந்திருக்காரு. நான் ஏவ்வசதிக்காக போய்ருக்கேன். வணக்கம் சார், அப்டீன்னாரு. அத்தோட சரி.
டிஃபென்ஸ் : மறுபடியும் எத்தன மணிக்கு அவர சந்திச்சீங்க?
MLA தலைய சொரீரார் : அப்பால நைட் ஒரு ஒம்போ........தர மணீருக்கும் அவர் வெளிய போம்போது பாத்தேன்.
டிஃபென்ஸ் : ஒங்க வசதீல்லாம் முடிஞ்சதுகப்புறம்.
MLA : அஹ............. [இல்லேன்னு தலையாட்றார்] Gapலயே.
டிஃபென்ஸ் : சாதாரணமா எத்தன மணிக்கி உங்க வசதி முடியும்?
MLA : அது முன்னபின்ன இருக்கும்.
டிஃபென்ஸ் : த த த தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
MLA : இதெல்லாம் எனக்கு தெரியாதுபா. அவ்ரு வெளிய போனதமட்டுந்தான் நான் பாத்தேன்.
டிஃபென்ஸ் : இது ஜட்ஜோட வசதிக்கு.
MLA : அ [ஜட்ஜை கும்ப்ட்றார்]
ஜட்ஜ் : மிஸ்டர் பப்ளிக் பிராஸிகியூட்டர், நீங்க சாட்சிய குறுக்கு விசாரண பண்ணலாம்.
PP எந்திருச்சு வர்றார் : மிஸ்டர் பாளயம்
MLA : அ..............
PP : நீங்க எந்த கட்சீன்னு சொன்னீங்க?
MLA : அ............ ஊதா கட்சி
PP : தேர்தல் சமயத்ல நீங்க மஞ்சள் கட்சில தீவிரமா இருக்கிறதாக பேப்பர்ல படிச்சேனே.
MLA : ஊதா கட்சிகாரர்கள், என்னை விலைக்கு வாங்கி விட்டார்கள்.
[மேடைல நின்னு பேசுற மாதிரி பேசுறார்]
PP : இது கோர்ட்டு
MLA : ஓஹோ, இது ஒயரமான எடத்ல ஏறி நின்னாலே, அந்த புத்தி வந்துர்துபா.
PP : ஸோ நீங்க பணத்துக்காக என்னவேண்ணாலும் செய்வீங்க, அப்டித்தானே?
MLA : ம்ம், [வக்கீல் பக்கத்ல குனிஞ்சு], சில்றைக்குல்லாம் பண்றதில்ல. பண்டலுக்கு மட்டும் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
பார்வையாளர்கள் சிரிக்கிறாங்க.
PP : இப்ப நான் சொல்றேன். குற்றவாளிகிட்ட பணத்த வாங்கிகிட்டு பொய் சாட்சிதான் சொல்ல வந்த்ரிக்கீங்க. ஒத்துகிறீங்களா?
MLA : அஃஅ, ஒத்துக்க மாட்டேனே. அரசியல்தாம்மா எனக்கு வைத்து பொழப்பு. கோர்ட்ல பொய் சாட்சி சொல்றவன், பிசாசு.
PP : சரி, சம்பவம் நடந்தன்னிக்கி, சொப்னா லாட்ஜ்ல ப்ரபாகர சந்திச்சதா சொன்னீங்களே, எங்க சந்திச்சீங்க?
MLA : முன்பகுதி, ரிஜப்ஜன்.
PP : அதுக்கப்புறம் எங்க போனாரு, என்ன செஞ்சாருன்னு ஒங்க்ளுக்கு தெரியுமா, அ?
MLA : தெரியாதுப்பா. ஒம்பதர மணிக்கு அவரும், சப்பின்ஸ்பெக்டரம்மாவும் ஒண்ணா வெளிய போனாங்க, அத்தான் தெர்யும்.
PP : சப்பின்ஸ்பெக்டரம்மாவா?
MLA : அஃஅ, வித்யாம்மா, கேட்டுபாரு, இல்லேன்னு சொல்ல சொல்லு.
சாட்சி கூண்டில நின்ன ப்ரபாகர் முழிக்கிறான். தலை குனியுறான். இன்னொரு சாட்சி கூண்டில நின்ன இன்ஸ்பெக்டரும் முழிச்சுட்டு நிக்கிறார். பார்வையாளர்களுக்குள்ள சலசலப்பு.
PP : நீங்க பொய் சொல்றீங்க. சம்பவத்தன்னிக்கி ப்ரபாகர், ஓம்பத்ர மணி வரைக்கும் சொப்னா லாட்ஜ்ல இருந்தாருன்னு சொன்னீங்களே, அது பொய். அவரும், சப்பின்ஸ்பெக்டர் வித்யாவும் ஒண்ணா வெளியில போனாங்கன்னு சொன்னீங்களே, அதுவும் பொய். எல்லாமே கட்டுக்கத. நீங்க பணத்த வாங்கிகிட்டு, பொய் சாட்சிதான் சொல்ல வந்த்ருக்கீங்கன்னு நான் சொல்றேன். [ஜட்ஜை பார்த்து] தடிஸ் ஆல் யுவர் ஆனர்.
- தொடரும்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
17.04.2018
4ஆம் பாகம்
ஜட்ஜ் எதையோ எழுதுறாங்க. டிஃபென்ஸ் லாயரை பார்க்கிறார். அவர் எந்திரிக்கிறார்.
டிஃபென்ஸ் : எனது தரப்பில் கடைசி சாட்சி, சப் இன்ஸ்பெக்டர் வித்யா.
ஜட்ஜ் : எஸ் ப்ரொஸீட்.
வித்யா சாட்சி கூண்டில வந்து நிக்கிறா. சத்தியம் செய்ய புத்தகம் நீட்டப்படுது.
வித்யா : சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை.
வித்யா குனிஞ்சிட்டு நிக்கிறா.
டிஃபென்ஸ் : [அவளை பார்க்காமலே அமைதியாக] நீங்க எங்க வேல பாக்றீங்க?
வித்யா : A3 நீலாங்கர ஸ்டேஷன்ல.
டிஃபென்ஸ் : உங்க அப்பா பேரு?
வித்யா : கமலநாதன், ரிடயர்ட் ஐஜி.
ரெண்டு பேருமே ஒர்த்தரை ஒர்த்தர் பாக்காமயே, குனிஞ்சு நின்னு பேசிக்கிறாங்க.
டிஃபென்ஸ் : உங்களுக்கு கல்யாணம் ஆய்ருச்சா?
வித்யா : ம்
டிஃபென்ஸ் : உங்க புருஷன் பேரு?
வித்யா : ப்ரேம்குமார்
டிஃபென்ஸ் : அவர் எங்க வேல செய்றாரு?
வித்யா : நான் வேல பாக்குற அதே ஸ்டேஷன்ல, இன்ஸ்பெக்டரா இருக்காரு.
டிஃபென்ஸ் : [சட்டுன்னு திரும்பி வித்யாவை பார்த்து] ஒரு ஐஜியோட டாட்டர். ஒங்க கணவர் ஒரு போலீஸ் அதிகாரி. நீங்களே போலீஸ் ஸ்டேஷன்ல வேல செய்றீங்க. நீங்க போலீஸ்க்கு எதிரா சாட்சி சொன்னா, அதனுடைய விளைவுகள் என்னன்னு உங்க்ளுக்கு தெரியுமா?
வித்யா : [அவளும் அப்பதான் வக்கீலின் முகத்தை பார்த்து பதில் சொல்றா] தெரியும்.
டிஃபென்ஸ் : தெரியுமா?
கோர்ட்ல உக்காந்திருக்கிற ஒவ்வொரு முக்கியாமானவங்க மூஞ்சியை எல்லாம் ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’னு ம்யூஸிக்கோடு காட்றாங்க.
டிஃபென்ஸ் : மிஸ்டர் ப்ரபாகர ஒங்க்ளுக்கு தெரியுமா?
வித்யா : தெரியும்.
டிஃபென்ஸ் : எப்டி தெரியும்?
வித்யா : என் சகோதரியோட கணவர்.
டிஃபென்ஸ் : சம்பவம் நடந்த அன்னிக்கி, நீங்க அவர சந்திச்சீங்களா?
வித்யா : சந்திச்சேன்.
டிஃபென்ஸ் : எங்க சந்திச்சீங்க?
வித்யா : சொப்னா லாட்ஜ்ல.
டிஃபென்ஸ் : எத்தன மணிக்கி?
வித்யா : எட்டேகால் மணிக்கி.
டிஃபென்ஸ் : நீங்க அங்க எதுக்காக போனீங்க?
வித்யா : ரெய்டுக்காக.
டிஃபென்ஸ் : நீங்க ரெய்டுக்கு போனீங்கங்கறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?
வித்யா : லாட்ஜ் ரிஜிஸ்டர்ல நோட்டு எழுதிருக்கேன். தவிர எங்க ஜென்ரல் டைரில என்ட்ரி போட்ருக்கேன்.
டிஃபென்ஸ் : அன்னிக்கி ஏதாவது கேஸ் கெடச்சுதா?
வித்யா : ஆறு பேர அரெஸ்ட் பண்ணிர்க்கேன்.
டிஃபென்ஸ் : எத்தன மணிக்கு ரெய்டு முடிச்சீங்க?
வித்யா : எட்ர மணிக்கி.
டிஃபென்ஸ் : சரி, எட்டேமுக்கா மணிக்கி எங்கே இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?
வித்யா பதில் சொல்லல. குனிஞ்சிட்டு நிக்கிறா. அவ என்ன சொல்ல போறான்னு ஜட்ஜுலே இருந்து எல்லாரும் அவளையே உத்து பாத்துட்டு உக்காந்திருந்தாங்க. வித்யா பதில் சொல்லாம குனிஞ்சி நிக்கிறா.
டிஃபென்ஸ் : ஒம்போது மணிக்கு எங்க இருந்தீங்க?
நோ பதில்
டிஃபென்ஸ் : ஒம்போதேகால் மணிக்காவது எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?
மறுபடியும் முக்கியமானவங்க மூஞ்சியெல்லாம் ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ வித்யாட்ட இருந்த எந்த பதிலும் வர்லியே.
டிஃபென்ஸ் : நீங்க ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு நிரபராதிய காப்பாதறதுதான் ஒங்க கடம. நீங்க மௌனம் சாதிச்சீங்கன்னா, அனாவசியமா என்னோட கட்சிக்காரரோட உயிர் போய்ரும். உண்மய ஒத்துக்கோங்க. அன்னிக்கி ரெய்டூங்கற போர்வைல நீங்க சொப்னா லாட்ஜுக்கு போனதே, மிஸ்டர் பிரபாகர சந்திக்கத்தான். ஒங்களோட ரெய்டு எட்ர மணிக்கு முடிஞ்சு போய்டுச்சு. ஆனா ஒம்பதர மணி வரக்கும், நீங்க அங்க இருந்திருக்கீங்க. நீங்களும், பிரபாகரும் ஒண்ணா வெளிய போனத, மிஸ்டர் பாளயம் பாத்ருக்றாரு. ஸோ, எட்ரலேருந்து ஒம்போதர வரைக்கும், சொப்னா லாட்ஜ்ல, ரூம் நம்பர் 31ல நீங்களும், பிரபாகரும் ஒண்ணா தங்கியிருந்திருக்கீங்க. அப்புடீன்னு நான் சொல்றேன்.
அப்பவும் வித்யாட்ட இருந்து நோ பதில். மறுபடியும் ‘டொய்ங், டொய்ங், டொய்ங்’. ஜட்ஜ் கண்ணாடிய கழட்றாங்க.
டிஃபென்ஸ் : தட்ஸ் ஆல், [gap] ............. யுவர் ஆனர்.
ஜட்ஜ் கண்ணாடியை மாட்டிகிட்டாங்க. ஒரு பெருமூச்சு.
ஜட்ஜ் : பப்ளிக் பிராஸிக்யூட்டர், சாட்சிய குறுக்கு விசாரண செய்யலாம்.
PP எந்திரிச்சு “யுவர் ஆனர், [வித்யா பக்கத்ல வர்றார். வித்யாவை பாக்குறார். திரும்பி டிஃபென்ஸ் லாயரையும் பாக்குறார்.] அப்புறமா, “இனிமே சாட்சிய குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது, அவங்க புருஷன்தான் யுவர் ஆனர்.” னு சொல்லிட்டு தன் இருக்கையில் போய் உக்கார்றார்.
பார்வையாளர்கள் சலசலக்கிறாங்க.
இப்ப சொல்றீங்களா, என்ன படம், யார் யார் பேசியிருக்காங்க? விடை சொல்லலேன்னாலும் பரவாயில்லப்பா. என்னோட மற்ற பதிவுகள் மாதிரியே இதையும் கஷ்ட்................டப்பட்டு எழுதியிருக்கேன். எப்டி இருக்கூன்னாவது சொல்லுங்களேன்.
Heezulia
4ஆம் பாகம்
ஜட்ஜ் எதையோ எழுதுறாங்க. டிஃபென்ஸ் லாயரை பார்க்கிறார். அவர் எந்திரிக்கிறார்.
டிஃபென்ஸ் : எனது தரப்பில் கடைசி சாட்சி, சப் இன்ஸ்பெக்டர் வித்யா.
ஜட்ஜ் : எஸ் ப்ரொஸீட்.
வித்யா சாட்சி கூண்டில வந்து நிக்கிறா. சத்தியம் செய்ய புத்தகம் நீட்டப்படுது.
வித்யா : சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை.
வித்யா குனிஞ்சிட்டு நிக்கிறா.
டிஃபென்ஸ் : [அவளை பார்க்காமலே அமைதியாக] நீங்க எங்க வேல பாக்றீங்க?
வித்யா : A3 நீலாங்கர ஸ்டேஷன்ல.
டிஃபென்ஸ் : உங்க அப்பா பேரு?
வித்யா : கமலநாதன், ரிடயர்ட் ஐஜி.
ரெண்டு பேருமே ஒர்த்தரை ஒர்த்தர் பாக்காமயே, குனிஞ்சு நின்னு பேசிக்கிறாங்க.
டிஃபென்ஸ் : உங்களுக்கு கல்யாணம் ஆய்ருச்சா?
வித்யா : ம்
டிஃபென்ஸ் : உங்க புருஷன் பேரு?
வித்யா : ப்ரேம்குமார்
டிஃபென்ஸ் : அவர் எங்க வேல செய்றாரு?
வித்யா : நான் வேல பாக்குற அதே ஸ்டேஷன்ல, இன்ஸ்பெக்டரா இருக்காரு.
டிஃபென்ஸ் : [சட்டுன்னு திரும்பி வித்யாவை பார்த்து] ஒரு ஐஜியோட டாட்டர். ஒங்க கணவர் ஒரு போலீஸ் அதிகாரி. நீங்களே போலீஸ் ஸ்டேஷன்ல வேல செய்றீங்க. நீங்க போலீஸ்க்கு எதிரா சாட்சி சொன்னா, அதனுடைய விளைவுகள் என்னன்னு உங்க்ளுக்கு தெரியுமா?
வித்யா : [அவளும் அப்பதான் வக்கீலின் முகத்தை பார்த்து பதில் சொல்றா] தெரியும்.
டிஃபென்ஸ் : தெரியுமா?
கோர்ட்ல உக்காந்திருக்கிற ஒவ்வொரு முக்கியாமானவங்க மூஞ்சியை எல்லாம் ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’னு ம்யூஸிக்கோடு காட்றாங்க.
டிஃபென்ஸ் : மிஸ்டர் ப்ரபாகர ஒங்க்ளுக்கு தெரியுமா?
வித்யா : தெரியும்.
டிஃபென்ஸ் : எப்டி தெரியும்?
வித்யா : என் சகோதரியோட கணவர்.
டிஃபென்ஸ் : சம்பவம் நடந்த அன்னிக்கி, நீங்க அவர சந்திச்சீங்களா?
வித்யா : சந்திச்சேன்.
டிஃபென்ஸ் : எங்க சந்திச்சீங்க?
வித்யா : சொப்னா லாட்ஜ்ல.
டிஃபென்ஸ் : எத்தன மணிக்கி?
வித்யா : எட்டேகால் மணிக்கி.
டிஃபென்ஸ் : நீங்க அங்க எதுக்காக போனீங்க?
வித்யா : ரெய்டுக்காக.
டிஃபென்ஸ் : நீங்க ரெய்டுக்கு போனீங்கங்கறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?
வித்யா : லாட்ஜ் ரிஜிஸ்டர்ல நோட்டு எழுதிருக்கேன். தவிர எங்க ஜென்ரல் டைரில என்ட்ரி போட்ருக்கேன்.
டிஃபென்ஸ் : அன்னிக்கி ஏதாவது கேஸ் கெடச்சுதா?
வித்யா : ஆறு பேர அரெஸ்ட் பண்ணிர்க்கேன்.
டிஃபென்ஸ் : எத்தன மணிக்கு ரெய்டு முடிச்சீங்க?
வித்யா : எட்ர மணிக்கி.
டிஃபென்ஸ் : சரி, எட்டேமுக்கா மணிக்கி எங்கே இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?
வித்யா பதில் சொல்லல. குனிஞ்சிட்டு நிக்கிறா. அவ என்ன சொல்ல போறான்னு ஜட்ஜுலே இருந்து எல்லாரும் அவளையே உத்து பாத்துட்டு உக்காந்திருந்தாங்க. வித்யா பதில் சொல்லாம குனிஞ்சி நிக்கிறா.
டிஃபென்ஸ் : ஒம்போது மணிக்கு எங்க இருந்தீங்க?
நோ பதில்
டிஃபென்ஸ் : ஒம்போதேகால் மணிக்காவது எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?
மறுபடியும் முக்கியமானவங்க மூஞ்சியெல்லாம் ‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ வித்யாட்ட இருந்த எந்த பதிலும் வர்லியே.
டிஃபென்ஸ் : நீங்க ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு நிரபராதிய காப்பாதறதுதான் ஒங்க கடம. நீங்க மௌனம் சாதிச்சீங்கன்னா, அனாவசியமா என்னோட கட்சிக்காரரோட உயிர் போய்ரும். உண்மய ஒத்துக்கோங்க. அன்னிக்கி ரெய்டூங்கற போர்வைல நீங்க சொப்னா லாட்ஜுக்கு போனதே, மிஸ்டர் பிரபாகர சந்திக்கத்தான். ஒங்களோட ரெய்டு எட்ர மணிக்கு முடிஞ்சு போய்டுச்சு. ஆனா ஒம்பதர மணி வரக்கும், நீங்க அங்க இருந்திருக்கீங்க. நீங்களும், பிரபாகரும் ஒண்ணா வெளிய போனத, மிஸ்டர் பாளயம் பாத்ருக்றாரு. ஸோ, எட்ரலேருந்து ஒம்போதர வரைக்கும், சொப்னா லாட்ஜ்ல, ரூம் நம்பர் 31ல நீங்களும், பிரபாகரும் ஒண்ணா தங்கியிருந்திருக்கீங்க. அப்புடீன்னு நான் சொல்றேன்.
அப்பவும் வித்யாட்ட இருந்து நோ பதில். மறுபடியும் ‘டொய்ங், டொய்ங், டொய்ங்’. ஜட்ஜ் கண்ணாடிய கழட்றாங்க.
டிஃபென்ஸ் : தட்ஸ் ஆல், [gap] ............. யுவர் ஆனர்.
ஜட்ஜ் கண்ணாடியை மாட்டிகிட்டாங்க. ஒரு பெருமூச்சு.
ஜட்ஜ் : பப்ளிக் பிராஸிக்யூட்டர், சாட்சிய குறுக்கு விசாரண செய்யலாம்.
PP எந்திரிச்சு “யுவர் ஆனர், [வித்யா பக்கத்ல வர்றார். வித்யாவை பாக்குறார். திரும்பி டிஃபென்ஸ் லாயரையும் பாக்குறார்.] அப்புறமா, “இனிமே சாட்சிய குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது, அவங்க புருஷன்தான் யுவர் ஆனர்.” னு சொல்லிட்டு தன் இருக்கையில் போய் உக்கார்றார்.
பார்வையாளர்கள் சலசலக்கிறாங்க.
இப்ப சொல்றீங்களா, என்ன படம், யார் யார் பேசியிருக்காங்க? விடை சொல்லலேன்னாலும் பரவாயில்லப்பா. என்னோட மற்ற பதிவுகள் மாதிரியே இதையும் கஷ்ட்................டப்பட்டு எழுதியிருக்கேன். எப்டி இருக்கூன்னாவது சொல்லுங்களேன்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
17.04.2018
அது சரி....................., நீங்க நாலு பாகங்களையும் படிச்சிட்டீங்களா? ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு நாளைக்கு படிப்பீங்கன்னுல நெனச்சேன்.
clue வேணுமா? எந்த பாகத்துக்கு? சரி சரி, கொடுக்குறேன். இதுவும் விசு படம்தான்.
Heezulia
நான் பட்ட கஷ்டம்ல்லாம் வீணா போச்சு போலியே. அவ்ளோ..................பெருசா எழுதியிருக்கேனே.விடை சொல்லலேன்னாலும் பரவாயில்லப்பா. என்னோட மற்ற பதிவுகள் மாதிரியே இதையும் கஷ்ட்................டப்பட்டு எழுதியிருக்கேன். எப்டி இருக்கூன்னாவது சொல்லுங்களேன்.
அது சரி....................., நீங்க நாலு பாகங்களையும் படிச்சிட்டீங்களா? ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு நாளைக்கு படிப்பீங்கன்னுல நெனச்சேன்.
clue வேணுமா? எந்த பாகத்துக்கு? சரி சரி, கொடுக்குறேன். இதுவும் விசு படம்தான்.
Heezulia
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பிலிம் நியூஸ் ஆனந்தன் அப்படினு ஒருத்தர் இருக்காங்கனு கேள்வி பட்டிருக்கேன்...ஆனால் இங்க நீங்க தாங்க Heezulia ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017
17.04.2018
ஃபிலிம் ந்யூஸ் ஆனந்தன், சினிமா உலகத்தில அவர் சொந்த அனுபவங்களையும், அங்க நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் எழுதினாராம்.
நான் நெட்ல இருக்கிறதைதானே மேக்கப் போட்டு அனுப்புறேன். மத்த விஷயங்களை மேக்கப் போட்டு அனுப்பலாம். ஆனா youtubeல வர்றதை அப்படியே காப்பி செஞ்சுதானே எழுத முடியும். அப்டித்தான் நானும் எழுதியிருக்கேன்.
நன்றி ரமேஷ்.
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1266435ரா.ரமேஷ்குமார் wrote:பிலிம் நியூஸ் ஆனந்தன் அப்படினு ஒருத்தர் இருக்காங்கனு கேள்வி பட்டிருக்கேன்...ஆனால் இங்க நீங்க தாங்க Heezulia ...
ஃபிலிம் ந்யூஸ் ஆனந்தன், சினிமா உலகத்தில அவர் சொந்த அனுபவங்களையும், அங்க நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் எழுதினாராம்.
நான் நெட்ல இருக்கிறதைதானே மேக்கப் போட்டு அனுப்புறேன். மத்த விஷயங்களை மேக்கப் போட்டு அனுப்பலாம். ஆனா youtubeல வர்றதை அப்படியே காப்பி செஞ்சுதானே எழுத முடியும். அப்டித்தான் நானும் எழுதியிருக்கேன்.
நன்றி ரமேஷ்.
Heezulia
- Sponsored content
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 12
|
|