புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! ...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து இருந்ததை என்னால் உணரமுடிந்தது.
நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை வெளேர் என்கிற மிக அழகிய உடையுடன், கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.
பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.
தொடரும்....
இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! ...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து இருந்ததை என்னால் உணரமுடிந்தது.
நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை வெளேர் என்கிற மிக அழகிய உடையுடன், கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.
பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1332275lakshmi palani wrote:நன்றி க்ரிஷ்னாம்மா. என்னுடைது மாக் என்பதால் கீ போட்டில் தமிழ் அடிக்கிரேன். தனி மடலுக்கு நன்றி. கதை அருமையாக இருக்கு. இன்று தான் தமிழ் அடிக்க பழகினேன்.
ம்ம்.. மிக அருமை லக்ஷ்மி.... புதிதாக அடிப்பதால் எழுத்துப் பிழைகள் உள்ளன... பார்த்து பொறுமையாக அடியுங்கள்.... எனக்கும் நேரம் எடுக்கிறது இந்த முறை இல் அடிக்க...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.. என்று நான் கேட்டுக்கொண்டிருந்தேன். உனக்கே தெரியும் நம் குடும்பமே ஆசீர்வதிக்கப் பட்டது என்று. அது என் தாத்தாவால். அதனால் தான் நானும் நீயும் இங்கிருக்கிறோம். நம் அப்பா அம்மாக்களும் நல்ல லோகங்களில் இருக்கிறார்கள். நீ வந்த வழியும் உன்னுடையது தானே தவிர அதில் நான் செய்தது எதுவும் இல்லை. அவர் அவர் கர்மாப் படி நடக்கிறது அவ்வளவு தான். நீ செய்த தான தருமங்களும் உதவிகளும் உனக்கு இத்தனை உயரிய இடத்தைக் கொடுத்துள்ளது. நான் அப்படி என்ன செய்து விட்டேன் என்று நீ கேட்கலாம். பொன்னான உன் நேரத்தை பிறருக்காக செலவழித்தாய். நிறைய பேருக்கு சமைக்க கற்றுக்கொடுத்தாய், எந்த பிரதி பலனும் எதிர் பாராமல். இந்த 'பிரதி பலன் பாராமல் ' செய்வது என்பது தான் மிக மிக முக்கியம்.
எல்லாவற்றுக்கும் நாம் பிரதி பலனை எதிர் பார்க்கக்கூடாது. நீ எதை நினைத்து அப்படி செய்தாயோ எனக்கு த் தெரியாது..ஆனால் அதன் பலன் சிறுக சிறுக சேர்ந்து, உனக்கு நிறைய புண்ணியத்தை சேர்த்துக் கொடுத்திருக்கிறது.' என்று புன்னகையுடன் சொன்னான்.
‘சரி, நீ என்ன செய்தாய்’ என்று கேட்டான். ‘நம் பெரிய அத்தை, பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்த சமையல் கலையை செவ்வனே கற்றுக்கொண்டேன். அதை ஊரார் உலகாருக்கு கற்றுக்கொடுத்தேனே அல்லாது வேறு எதுவும் செய்யவில்லை நான்’ என்றேன்.
'பிரதி பலன் எதிர் பாராமல் செய்தால் அதன் பலனே வேறு என்று சொன்னேன் அல்லவா, அது தான் இது' என்றான்.
‘வாஸ்த்தவம் தான். நான் ஆசை ஆசையாகத்தான் சொல்லிக் கொடுத்தேனே அல்லாது எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. நிறைய குழந்தைகள் வெளிநாடுகளுக்கு போய் சம்பாதிக்க வேண்டிய நிலை. பசங்க முதலில் போய்விடுகிறார்கள். கொஞ்சம் செட்டில் ஆனதும் வாய்க்கு ருசியாக வேண்டி இருக்கு. இங்குள்ள பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் ஒன்றும் சமைக்கத்தெரியாது என்று சொல்லாமல்
( அதற்காக கல்யாணம் தடை படக்கூடாது என்று மறைத்து) கல்யாணம் செய்துவிடுகிறார்கள். அங்கு போனதும் இவள் தானே ஷோவை மானேஜ் செய்யவேண்டும். அப்ப என்ன செய்வது?... அங்கு தான் நான் உதவினேன். பாவம் அந்த பெண் குழந்தைகளும் என்ன செய்வார்கள்? 9 - 10 படிக்கும்பொழுதிலிருந்து, நீ ஒழுங்காக படித்தால் போறும் இந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மா சொல்வார்கள். அது அப்படியே பழகி, பிறகு டிகிரி வேலை என்று வந்ததும் கூட இவர்கள் கையைக் காலை அசைப்பது இல்லை. பெற்றவளும், சரி போகட்டும் போகட்டும் என்று விட்டு விடுவாள்.
அப்புறம் கல்யாணம் நிச்சயம் ஆனபிறக்காவது இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதுவும் இல்லை. திடீரென்று வெளிநாட்டுக்கு போனதும், சுத்தமான சமையல் ரூம் இவர்களை வரவேற்கும். கல்யாணம் பண்ணிக்கொண்டு போன பையன் நாக்கு செத்திருப்பான். அவன் உடனேயே, “மல்லிபூ இட்லி, மணக்கும் சாம்பார்” என்று டி . ஆர். ராமச்சந்திரன் அன்பே வா படத்தில் சொல்வான் பார் அது போல ஜொள்ளுடன் சொல்லக் காத்திருப்பான். நம்ப பெண்கள்.... இவர்களுக்கு கடலை பருப்புக்கு துவரம் பருப்புக்கு கூட வித்தியாசம் தெரியாது... அவ்வளவுதான்...பிரச்சனை ஆரம்பம்... நெட் தான் இருக்கிறதே … தேடுவார்கள் ... கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்வார்கள்., அப்போ என்னால் முடிந்த அளவிற்கு நான் பலருக்கு கற்றுக் கொடுத்தேன் . அவ்வளவுதான். சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்களே அது போல இருக்கிறது என் புண்ணியக் கணக்கு என்றும் சொல்லலாம் தானே?'... என்று கேட்டேன். 'ஆமாம்' என்பது போல தலையை அசைத்தான்.
‘ம்ம்...இது நான் எதிர் பார்க்காத ஒன்று. அத்தனைச் சின்ன சின்ன உதவிக்கு இத்தனை உயர்வா?’..என் கண்கள் பனித்தன. 'நீயே தானே சொன்னாய் , சிறுதுளி பெருவெள்ளம் என்று'... அது தான் நடந்திருக்கிறது. என்று புன்னகைத்தான். 'இத்தனை புண்ணியத்தை வைத்துக் கொண்டு நீ எந்த லோகத்தில் வேண்டுமானாலும் சில காலம் தங்கி வரலாம். அல்லது வேண்டிய , விரும்பிய பிறப்பெடுக்கலாம். ஏதாவது யோசித்தாயா? ' என்றான்.
தொடரும்....
எல்லாவற்றுக்கும் நாம் பிரதி பலனை எதிர் பார்க்கக்கூடாது. நீ எதை நினைத்து அப்படி செய்தாயோ எனக்கு த் தெரியாது..ஆனால் அதன் பலன் சிறுக சிறுக சேர்ந்து, உனக்கு நிறைய புண்ணியத்தை சேர்த்துக் கொடுத்திருக்கிறது.' என்று புன்னகையுடன் சொன்னான்.
‘சரி, நீ என்ன செய்தாய்’ என்று கேட்டான். ‘நம் பெரிய அத்தை, பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்த சமையல் கலையை செவ்வனே கற்றுக்கொண்டேன். அதை ஊரார் உலகாருக்கு கற்றுக்கொடுத்தேனே அல்லாது வேறு எதுவும் செய்யவில்லை நான்’ என்றேன்.
'பிரதி பலன் எதிர் பாராமல் செய்தால் அதன் பலனே வேறு என்று சொன்னேன் அல்லவா, அது தான் இது' என்றான்.
‘வாஸ்த்தவம் தான். நான் ஆசை ஆசையாகத்தான் சொல்லிக் கொடுத்தேனே அல்லாது எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. நிறைய குழந்தைகள் வெளிநாடுகளுக்கு போய் சம்பாதிக்க வேண்டிய நிலை. பசங்க முதலில் போய்விடுகிறார்கள். கொஞ்சம் செட்டில் ஆனதும் வாய்க்கு ருசியாக வேண்டி இருக்கு. இங்குள்ள பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் ஒன்றும் சமைக்கத்தெரியாது என்று சொல்லாமல்
( அதற்காக கல்யாணம் தடை படக்கூடாது என்று மறைத்து) கல்யாணம் செய்துவிடுகிறார்கள். அங்கு போனதும் இவள் தானே ஷோவை மானேஜ் செய்யவேண்டும். அப்ப என்ன செய்வது?... அங்கு தான் நான் உதவினேன். பாவம் அந்த பெண் குழந்தைகளும் என்ன செய்வார்கள்? 9 - 10 படிக்கும்பொழுதிலிருந்து, நீ ஒழுங்காக படித்தால் போறும் இந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மா சொல்வார்கள். அது அப்படியே பழகி, பிறகு டிகிரி வேலை என்று வந்ததும் கூட இவர்கள் கையைக் காலை அசைப்பது இல்லை. பெற்றவளும், சரி போகட்டும் போகட்டும் என்று விட்டு விடுவாள்.
அப்புறம் கல்யாணம் நிச்சயம் ஆனபிறக்காவது இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதுவும் இல்லை. திடீரென்று வெளிநாட்டுக்கு போனதும், சுத்தமான சமையல் ரூம் இவர்களை வரவேற்கும். கல்யாணம் பண்ணிக்கொண்டு போன பையன் நாக்கு செத்திருப்பான். அவன் உடனேயே, “மல்லிபூ இட்லி, மணக்கும் சாம்பார்” என்று டி . ஆர். ராமச்சந்திரன் அன்பே வா படத்தில் சொல்வான் பார் அது போல ஜொள்ளுடன் சொல்லக் காத்திருப்பான். நம்ப பெண்கள்.... இவர்களுக்கு கடலை பருப்புக்கு துவரம் பருப்புக்கு கூட வித்தியாசம் தெரியாது... அவ்வளவுதான்...பிரச்சனை ஆரம்பம்... நெட் தான் இருக்கிறதே … தேடுவார்கள் ... கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்வார்கள்., அப்போ என்னால் முடிந்த அளவிற்கு நான் பலருக்கு கற்றுக் கொடுத்தேன் . அவ்வளவுதான். சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்களே அது போல இருக்கிறது என் புண்ணியக் கணக்கு என்றும் சொல்லலாம் தானே?'... என்று கேட்டேன். 'ஆமாம்' என்பது போல தலையை அசைத்தான்.
‘ம்ம்...இது நான் எதிர் பார்க்காத ஒன்று. அத்தனைச் சின்ன சின்ன உதவிக்கு இத்தனை உயர்வா?’..என் கண்கள் பனித்தன. 'நீயே தானே சொன்னாய் , சிறுதுளி பெருவெள்ளம் என்று'... அது தான் நடந்திருக்கிறது. என்று புன்னகைத்தான். 'இத்தனை புண்ணியத்தை வைத்துக் கொண்டு நீ எந்த லோகத்தில் வேண்டுமானாலும் சில காலம் தங்கி வரலாம். அல்லது வேண்டிய , விரும்பிய பிறப்பெடுக்கலாம். ஏதாவது யோசித்தாயா? ' என்றான்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுவரை யோசிக்கவில்லை, ஆனால் இப்பொழுது யோசித்துவிட்டேன் .இங்கு என் மாமாவைப் பார்த்ததும், நானும் இங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன். இங்கே என்ன குறைவு?.... மனதுக்கு சந்தோஷமான வேலை எதையாவது செய்துக்கொண்டு இங்கிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு. அதையே அவனிடம் வெளிப்படுத்தினேன்.
'ம்ம்.. ஒன்றும் பிரச்சனை இல்லை மா. தாராளமாக நீ இங்கு இருக்கலாம். உன் கணக்கில் நிறைய வரவு இருக்கிறது. இங்கு மேலும் நீ புண்ணியம் சம்பாதிக்கலாம். பொறுமையாக செலவு செய்யலாம். எப்பொழுது இது போதும் என்று தோன்றுகிறதோ, அப்பொழுது அடுத்த பிறவி பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்' என்றான்.
'இங்கு நான் செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது. அதிகம் பேர் இங்கு இருப்பதேயே விரும்புகிறார்கள். எனவே, எனக்கும் நீ உதவினார் போல இருக்கும். உன்னைப் போல VIP யாக வருபவர்களை நாங்கள் உபயோகித்துக்கொள்ள, வேலைக்கு வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. எனவே, தாராளமாய் நீ இங்கிருக்கலாம், எங்களுக்கு உதவலாம்' என்றான்.
‘எனக்கு அதெல்லாம்விட முக்கியமானது நீ தான். மறுமுறை உன்னை இழக்க நான் விரும்பவில்லை' என்றேன். ‘அதற்காகவே நான் இங்கிருப்பேன் ' என்று புன்னகைத்தேன். பிறகு, ‘சரி நான் கிளம்பட்டுமா’ என்று கேட்டேன். "ம்ம்.. ஒருமுறை எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து விட்டு வா. மேலும் ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று தோன்றினால் சொல் உடனே செய்யலாம் "..என்றான். இங்கே கூட நிறைய சமைக்க வேண்டும் தானே, நான் அங்கு போய் ஏதாவது உதவி செய்கிறேன் என்றேன். ‘இங்குமா No problem, எதுவேண்டுமானாலும் செய்’ என்றான்.
சிரித்தவாறே...ஆமாம் டா, என் கையைப்பார் கரண்டியைப்போல ரேகை ஓடுகிறது, நான் அன்னபூரணி தெரியுமா? என்றேன்.
பிறகு, 'எனக்கு அந்த அம்யூஸ்மென்ட் பார்க்கெல்லாம் பார்க்க வேண்டாம். திருப்பதி பெருமாளைத்தான் சேவிக்கணும். அதுவும் ஜருகண்டி இல்லாமல், 1 வாரம் 10 நாள் அங்கேயே உட்கார்ந்து கொண்டு எல்லா சேவைகளையும் பார்க்கணும். அலுக்க அலுக்க என்றேன்."... நான் அவ்வாறு சொன்னதுதான் தாமதம். "என்னது ?...திருப்பதி பெருமாளா ?...இங்கேயா?..." என்றான் ... " ஆமாம் எல்லாம் இருக்கு என்றாயே, அவர் இல்லையா?” என்றேன் ஏமாற்றமாய் .... 'இல்லை' என்றான்.
அவன் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தன. ‘அடாடா...முதலில் நான் அதை கவனிக்கிறேன். நீ எதோ தபோவனம், கோவில் என்றெல்லாம் சொன்னதும் நான் உடனே 108 திவ்யதேசங்களையும் இங்கே நிம்மதியாய் சேவிக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ..." என்று மேலும் பேசுவதற்குள் ...'ஹேய், நீ இதையே இங்கு செய்யலாம்டி"...என்று சந்தோஷமாய் கூவினான். எனக்கு இத்தனை நாள் தோன்றவே இல்லையே இது' என்று சந்தோஷமாய் சொன்னான்.
நான் ஏற்பாடு செய்கிறேன். தத்ரூபமாய் அங்குள்ளது போலவே இங்கும் செய்யலாம். சந்தோஷமாய் எல்லோரும் சேவிக்கலாம். இன்னும் இங்கிருந்து நீ கிளம்பவே இல்லை, அதற்குள் இத்தனை பெரிய ப்ரொஜெக்ட்க்கு வழி சொல்லிவிட்டாய்..போ..போய் நன்கு சுற்றிப் பார். என்னென்ன தோன்றுகிறதோ, அவளிடம், அது தான் உன் மீராவிடம் சொல்லு. அவள் குறித்து வைத்துக் கொள்வாள்.
பிறகு நாம் டிஸ்கஸ் செய்யலாம்...சந்தோஷம் தானே” என்று கேட்டான். மீராவை நிமிர்ந்து பார்த்து கண்களாலேயே உத்தரவிட்டான். அவளும் தலையை ஆட்டினாள். நானும் மிகவும் சந்தோஷமாய் தலையை ஆட்டினேன். திருப்பதி லட்டு, வடை, தோசை என்று சொல்லிக்கொண்டே போன என்னைக் என்னை கையமர்த்தி, எல்லாம் உண்டு போ என்றான்.
நான் கீழே விழுந்து அவனை சேவித்து விடை பெற்றேன். எத்தனை எத்தனை வருடங்களாகிறது உன்னை சேவித்து...என்ன ஒன்று இப்பவும் நீ அப்படியே இருக்கிறாய், நான் தான் கிழவியாகிவிட்டேன்' என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். எனக்கு பொன்னியின் செல்வனில் கரிகாலன் , வந்தியத்தேவனிடமும் பல்லவ இளவலிடமும் பேசும்போது சொல்வாரே. 'எப்பொழுதும் இளமையாக இருக்கவேண்டும் என்றால் , இளவயதில் இறக்கவேண்டும். நம்மில் யாருக்கு அவ்வாறு கொடுத்து வைத்துள்ளதோ' என்று... அது தான் நினைவுக்கு வருகிறது இப்பொழுது. இள வயதில் நீ போய்விட்டதால் அப்படியே இருக்கிறாய், என்னைப்பார் கிழவியாகிவிட்டேன் என்று சிரித்தேன்.
அப்பொழுது தான் ஒன்று நான் கவனித்தேன், நான் கீழே விழுந்து சேவித்தே பல வருடங்கள் ஆகிவிட்டன, என் இடுப்பு வலியால். இங்கு எனக்கு அந்த உபாதை இல்லாததால் நன்றாக விழுந்து சேவிக்க முடிந்தது. ஆஹா, இதை நாம் கவனிக்கவே இல்லையே என்றும் தோன்றியது. அது தான் இங்குள்ள பெரியவர்கள் ஜாலியாக விளையாடுகிறார்கள். உடல் உபாதை , மூப்பு இரண்டும் இல்லாவிட்டால் என்ன குறை நமக்கு? மூப்பு கூட தேவலாம், இந்த உடல் உபாதைகள் தான் மிக மோசம் என்று தோன்றியது எனக்கு.
"ஹலோ!" என்று என் முகத்தின் முன்னே சொடுக்கு போட்டான் என் மாமா. எங்கே கனவுலகில் சஞ்சரிக்கிறாய்? என்றான்... ஓன்றும் இல்லை, நான் கிளம்புகி றேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். மீராவும் அவனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு கிளம்பினாள்.
நானும் இன்னும் கொஞ்சம் கூட பிரமிப்பு அடங்காத மீராவும் மீண்டும் எங்கள் அறைக்குத் திரும்பினோம். திரும்பும் வழி இல் நான் கண்டவை ....இது தவிர சொர்கம் வேறு இருக்கிறதா என்ன என்று எண்ணும்படி இருந்தது.
தொடரும்.....
'ம்ம்.. ஒன்றும் பிரச்சனை இல்லை மா. தாராளமாக நீ இங்கு இருக்கலாம். உன் கணக்கில் நிறைய வரவு இருக்கிறது. இங்கு மேலும் நீ புண்ணியம் சம்பாதிக்கலாம். பொறுமையாக செலவு செய்யலாம். எப்பொழுது இது போதும் என்று தோன்றுகிறதோ, அப்பொழுது அடுத்த பிறவி பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்' என்றான்.
'இங்கு நான் செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது. அதிகம் பேர் இங்கு இருப்பதேயே விரும்புகிறார்கள். எனவே, எனக்கும் நீ உதவினார் போல இருக்கும். உன்னைப் போல VIP யாக வருபவர்களை நாங்கள் உபயோகித்துக்கொள்ள, வேலைக்கு வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. எனவே, தாராளமாய் நீ இங்கிருக்கலாம், எங்களுக்கு உதவலாம்' என்றான்.
‘எனக்கு அதெல்லாம்விட முக்கியமானது நீ தான். மறுமுறை உன்னை இழக்க நான் விரும்பவில்லை' என்றேன். ‘அதற்காகவே நான் இங்கிருப்பேன் ' என்று புன்னகைத்தேன். பிறகு, ‘சரி நான் கிளம்பட்டுமா’ என்று கேட்டேன். "ம்ம்.. ஒருமுறை எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து விட்டு வா. மேலும் ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று தோன்றினால் சொல் உடனே செய்யலாம் "..என்றான். இங்கே கூட நிறைய சமைக்க வேண்டும் தானே, நான் அங்கு போய் ஏதாவது உதவி செய்கிறேன் என்றேன். ‘இங்குமா No problem, எதுவேண்டுமானாலும் செய்’ என்றான்.
சிரித்தவாறே...ஆமாம் டா, என் கையைப்பார் கரண்டியைப்போல ரேகை ஓடுகிறது, நான் அன்னபூரணி தெரியுமா? என்றேன்.
பிறகு, 'எனக்கு அந்த அம்யூஸ்மென்ட் பார்க்கெல்லாம் பார்க்க வேண்டாம். திருப்பதி பெருமாளைத்தான் சேவிக்கணும். அதுவும் ஜருகண்டி இல்லாமல், 1 வாரம் 10 நாள் அங்கேயே உட்கார்ந்து கொண்டு எல்லா சேவைகளையும் பார்க்கணும். அலுக்க அலுக்க என்றேன்."... நான் அவ்வாறு சொன்னதுதான் தாமதம். "என்னது ?...திருப்பதி பெருமாளா ?...இங்கேயா?..." என்றான் ... " ஆமாம் எல்லாம் இருக்கு என்றாயே, அவர் இல்லையா?” என்றேன் ஏமாற்றமாய் .... 'இல்லை' என்றான்.
அவன் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தன. ‘அடாடா...முதலில் நான் அதை கவனிக்கிறேன். நீ எதோ தபோவனம், கோவில் என்றெல்லாம் சொன்னதும் நான் உடனே 108 திவ்யதேசங்களையும் இங்கே நிம்மதியாய் சேவிக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ..." என்று மேலும் பேசுவதற்குள் ...'ஹேய், நீ இதையே இங்கு செய்யலாம்டி"...என்று சந்தோஷமாய் கூவினான். எனக்கு இத்தனை நாள் தோன்றவே இல்லையே இது' என்று சந்தோஷமாய் சொன்னான்.
நான் ஏற்பாடு செய்கிறேன். தத்ரூபமாய் அங்குள்ளது போலவே இங்கும் செய்யலாம். சந்தோஷமாய் எல்லோரும் சேவிக்கலாம். இன்னும் இங்கிருந்து நீ கிளம்பவே இல்லை, அதற்குள் இத்தனை பெரிய ப்ரொஜெக்ட்க்கு வழி சொல்லிவிட்டாய்..போ..போய் நன்கு சுற்றிப் பார். என்னென்ன தோன்றுகிறதோ, அவளிடம், அது தான் உன் மீராவிடம் சொல்லு. அவள் குறித்து வைத்துக் கொள்வாள்.
பிறகு நாம் டிஸ்கஸ் செய்யலாம்...சந்தோஷம் தானே” என்று கேட்டான். மீராவை நிமிர்ந்து பார்த்து கண்களாலேயே உத்தரவிட்டான். அவளும் தலையை ஆட்டினாள். நானும் மிகவும் சந்தோஷமாய் தலையை ஆட்டினேன். திருப்பதி லட்டு, வடை, தோசை என்று சொல்லிக்கொண்டே போன என்னைக் என்னை கையமர்த்தி, எல்லாம் உண்டு போ என்றான்.
நான் கீழே விழுந்து அவனை சேவித்து விடை பெற்றேன். எத்தனை எத்தனை வருடங்களாகிறது உன்னை சேவித்து...என்ன ஒன்று இப்பவும் நீ அப்படியே இருக்கிறாய், நான் தான் கிழவியாகிவிட்டேன்' என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். எனக்கு பொன்னியின் செல்வனில் கரிகாலன் , வந்தியத்தேவனிடமும் பல்லவ இளவலிடமும் பேசும்போது சொல்வாரே. 'எப்பொழுதும் இளமையாக இருக்கவேண்டும் என்றால் , இளவயதில் இறக்கவேண்டும். நம்மில் யாருக்கு அவ்வாறு கொடுத்து வைத்துள்ளதோ' என்று... அது தான் நினைவுக்கு வருகிறது இப்பொழுது. இள வயதில் நீ போய்விட்டதால் அப்படியே இருக்கிறாய், என்னைப்பார் கிழவியாகிவிட்டேன் என்று சிரித்தேன்.
அப்பொழுது தான் ஒன்று நான் கவனித்தேன், நான் கீழே விழுந்து சேவித்தே பல வருடங்கள் ஆகிவிட்டன, என் இடுப்பு வலியால். இங்கு எனக்கு அந்த உபாதை இல்லாததால் நன்றாக விழுந்து சேவிக்க முடிந்தது. ஆஹா, இதை நாம் கவனிக்கவே இல்லையே என்றும் தோன்றியது. அது தான் இங்குள்ள பெரியவர்கள் ஜாலியாக விளையாடுகிறார்கள். உடல் உபாதை , மூப்பு இரண்டும் இல்லாவிட்டால் என்ன குறை நமக்கு? மூப்பு கூட தேவலாம், இந்த உடல் உபாதைகள் தான் மிக மோசம் என்று தோன்றியது எனக்கு.
"ஹலோ!" என்று என் முகத்தின் முன்னே சொடுக்கு போட்டான் என் மாமா. எங்கே கனவுலகில் சஞ்சரிக்கிறாய்? என்றான்... ஓன்றும் இல்லை, நான் கிளம்புகி றேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். மீராவும் அவனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு கிளம்பினாள்.
நானும் இன்னும் கொஞ்சம் கூட பிரமிப்பு அடங்காத மீராவும் மீண்டும் எங்கள் அறைக்குத் திரும்பினோம். திரும்பும் வழி இல் நான் கண்டவை ....இது தவிர சொர்கம் வேறு இருக்கிறதா என்ன என்று எண்ணும்படி இருந்தது.
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் பின்னுட்டமே வரவில்லை.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் மீராவுடன் பேசிக்கொண்டே நடந்தேன். “அதனால் தான் அந்தக் காலத்தில் மரம் நடுங்கள், குளம் வெட்டுங்கள் என்றல்லாம் சொன்னார்கள் போல இருக்கிறது. அந்த மர நிழலில் அமர்பவர்கள்," ஆஹா, எந்த புண்ணியவான் நாட்டாரோ, அவர் நல்லா இருக்கட்டும், இந்த வெயிலுக்கு எத்தனை இதமாக இருக்கிறது" என்று சொல்லும் பொழுது அது நமக்கான ஆசீர்வாதமாகவும் புண்ணியக் கணக்காகவும் மாற்றுகிறது போலிருக்கு.
அதேபோல வீட்டில் யாராவது நிறைமாசமாக இருக்கிறார்கள் என்றால், ஊர் கோடி இல் சுமைதாங்கி கல் நடுவார்களாம் அந்தக் காலத்தில் இது வழக்கமாக இருந்து இருக்கிறது. சுமையை சுமந்து வருபவர்கள் அதை அந்தக் கல்லின் மேல் இறக்கிவைத்து , ‘ஹப்பாடா' என்று பெருமுட்டுச்சுவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களாம். அது போல இந்த பெண்ணும் தன் குழந்தை சுமையை நிம்மதியாக இறக்கி வைக்க வேண்டும் என்று அப்படி செய்வார்களாம். அவர்களின் வாழ்த்து இவர்களின் வம்சத்தைக் காக்குமாம். சொல்வார்கள்” .
முடிந்தால் சத்திரம் கட்டுவது, அங்கே அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்வது என எத்தனையோ செய்யலாம். இது புரிந்தால் நம் பூமி இல் மனிதர்கள் எத்தனை எத்தனை சுலபமாக புண்ணியங்களை சம்பாதிக்கலாம்.. அதெல்லாம் விடுத்து ஏதேதோ செய்துவருகிறார்கள்.. யார் இவர்களை திருத்துவது? "...ஹும்”… என்று சொல்லியவாறே அங்கும் இங்கும் பார்த்தபடி நடந்தோம்.
“சின்ன வயதில் நான் ஒரு கதை கேட்டுள்ளேன் மீரா, ஒரு வயதானவர் தினமும் அரிசி விற்பாறாம். அதை எப்படிக் கூவுவாராம் தெரியுமா?... " அரிசி வாங்கலையோ அரிசி"... என்று சொல்வாராம். ஒருநாள் அப்படி வீதி இல் சென்றுகொண்டிருக்கும் பொழுதே அவர் கீழே விழுந்து இறந்து போனாராம். அவரின் ஆத்மாவை எடுத்து செல்ல எமகிங்கரர்கள் வந்தார்களாம்.
ஆனால் அவர்களுக்கு முன்னே அங்கே சிவ கணங்களும் வைகுந்தத்தில் இருந்து அடியார்களும் வந்து அந்த ஆத்மாவை எடுத்து செல்ல உரிமை கோரிக் கொண்டிருந்தார்களாம்... ஏன் தெரியுமா?... அந்த தாத்தா சொன்னதை அவர்கள் இப்படி காதில் வாங்கி இருக்கிறார்கள்...அதாவது " ஹரி சிவா என் கலையோ " என்று அவர் சொன்னதாக காதில் வாங்கிக்க கொண்டு, இருவரும் வந்துவிட்டார்களாம். அதாவது நாம் நேரடியாக கடவுள் நாமத்தை சொல்லாவிட்டாலும் கூட கருணை மிகுந்த இறைவன், இதையெல்லாம் கூட கணக்கெடுத்துக் கொண்டு நம்மைக் காத்து ரக்ஷிக்கிறான் என்று சொல்வார்கள். எத்தனை கருணை பார் அவருக்கு. அதனால்தான் நான் இன்று இங்கு இருக்கிறேன் என்று கண்கள் பனிக்க சொன்னேன். மீரா ஆதரவாக என் கைகளை பிடித்துக் கொண்டாள் .
பாகவதத்தில் வரும் அஜாமிளன் கதையும் நமக்கு சொல்வது இதைத்தானே. அவன் தன் மகனைக் கூப்பிட்டான், ஆனால் நாராயண சேவகர்கள் அவன் நாராயணனையே கூப்பிட்டதாக எண்ணி அவனைக் கூட்டிக்கொண்டு போக வந்தார்கள். “…
இப்படி ஏதேதோ பேசியவாறு நான் மீராவுடன் நடந்து வந்தேன். மனதில் தோன்றியதையெல்லாம் பேசினேன். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதா இல்லையா என்றல்லாம் கூட நான் யோசிக்கவில்லை. பாவம், அவள் பேசாமல் கேட்டுக்கொண்டே வந்தாள்.
அங்கு ஓரிடத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் வயது முதிந்தவர்களும் சிறிய குழந்தைகளும் மிக மிக சந்தோஷமாய் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நம் உலகத்தில் அம்யூஸ்மென்ட் பார்க் என்று சொல்வோமே அது போல அங்கு நிறைய இருந்தது. வித விதமான ரைடுகள். கொஞ்சம் நின்று அதைப் பார்த்தோம். பிறகு, இது போல பார்க்குகளை சுற்றிப்பார்க்க, சின்ன சின்ன கிளாஸ் ஆல் ஆன ஒரு அறை போல இருந்தது. முன்பு நாங்கள் வந்து இறங்கியது போன்றது. அதில் நாங்கள் ஏறிக்கொண்டோம். அது அழகாக பறந்தது. எனவே, எங்களால் சுலபமாக எல்லாவற்றையும் பார்வை இட முடிந்தது. வேறு சில தேவதைகளும் அவ்வாறு பறந்தவாறே அங்குள்ளவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊரு போலீஸ் போல.
நான் முன்பே சொன்னது போல மூப்போ உடல் உபாதைகளோ இல்லததால், அவர்களால் குழந்தைகளுக்கு சமமாக விளையாட முடிந்தது. அதில் அந்த குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷம். செயற்கை ஊற்றுகள் , செயற்கை கடல் அலைகள், நீரில் முழ்கி விளையாடும் விளையாட்டுகள், யானைகளுடன் தண்ணீரில் நடக்கும் விளையாட்டுகள், வித விதமான படகு சவாரி, நாமே கூட அந்த வாட்டர் ஸ்கூட்டர்களை எடுத்து ஓட்டலாம். படகின் பின்னே பலூனில் பறக்கலாம் என பல விதமான நீர் விளையாட்டுகள்.
அடுத்து ஒரு இடத்தில் மலை ஏறும் போட்டி நடந்து கொண்டிருந்தது. நிறைய பேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். அடுத்து வித விதமான மேரிகோ ரவுண்டு, ஜெயண்ட் வீல் போல நிறைய இருந்தன.
தொடரும்.....
அதேபோல வீட்டில் யாராவது நிறைமாசமாக இருக்கிறார்கள் என்றால், ஊர் கோடி இல் சுமைதாங்கி கல் நடுவார்களாம் அந்தக் காலத்தில் இது வழக்கமாக இருந்து இருக்கிறது. சுமையை சுமந்து வருபவர்கள் அதை அந்தக் கல்லின் மேல் இறக்கிவைத்து , ‘ஹப்பாடா' என்று பெருமுட்டுச்சுவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களாம். அது போல இந்த பெண்ணும் தன் குழந்தை சுமையை நிம்மதியாக இறக்கி வைக்க வேண்டும் என்று அப்படி செய்வார்களாம். அவர்களின் வாழ்த்து இவர்களின் வம்சத்தைக் காக்குமாம். சொல்வார்கள்” .
முடிந்தால் சத்திரம் கட்டுவது, அங்கே அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்வது என எத்தனையோ செய்யலாம். இது புரிந்தால் நம் பூமி இல் மனிதர்கள் எத்தனை எத்தனை சுலபமாக புண்ணியங்களை சம்பாதிக்கலாம்.. அதெல்லாம் விடுத்து ஏதேதோ செய்துவருகிறார்கள்.. யார் இவர்களை திருத்துவது? "...ஹும்”… என்று சொல்லியவாறே அங்கும் இங்கும் பார்த்தபடி நடந்தோம்.
“சின்ன வயதில் நான் ஒரு கதை கேட்டுள்ளேன் மீரா, ஒரு வயதானவர் தினமும் அரிசி விற்பாறாம். அதை எப்படிக் கூவுவாராம் தெரியுமா?... " அரிசி வாங்கலையோ அரிசி"... என்று சொல்வாராம். ஒருநாள் அப்படி வீதி இல் சென்றுகொண்டிருக்கும் பொழுதே அவர் கீழே விழுந்து இறந்து போனாராம். அவரின் ஆத்மாவை எடுத்து செல்ல எமகிங்கரர்கள் வந்தார்களாம்.
ஆனால் அவர்களுக்கு முன்னே அங்கே சிவ கணங்களும் வைகுந்தத்தில் இருந்து அடியார்களும் வந்து அந்த ஆத்மாவை எடுத்து செல்ல உரிமை கோரிக் கொண்டிருந்தார்களாம்... ஏன் தெரியுமா?... அந்த தாத்தா சொன்னதை அவர்கள் இப்படி காதில் வாங்கி இருக்கிறார்கள்...அதாவது " ஹரி சிவா என் கலையோ " என்று அவர் சொன்னதாக காதில் வாங்கிக்க கொண்டு, இருவரும் வந்துவிட்டார்களாம். அதாவது நாம் நேரடியாக கடவுள் நாமத்தை சொல்லாவிட்டாலும் கூட கருணை மிகுந்த இறைவன், இதையெல்லாம் கூட கணக்கெடுத்துக் கொண்டு நம்மைக் காத்து ரக்ஷிக்கிறான் என்று சொல்வார்கள். எத்தனை கருணை பார் அவருக்கு. அதனால்தான் நான் இன்று இங்கு இருக்கிறேன் என்று கண்கள் பனிக்க சொன்னேன். மீரா ஆதரவாக என் கைகளை பிடித்துக் கொண்டாள் .
பாகவதத்தில் வரும் அஜாமிளன் கதையும் நமக்கு சொல்வது இதைத்தானே. அவன் தன் மகனைக் கூப்பிட்டான், ஆனால் நாராயண சேவகர்கள் அவன் நாராயணனையே கூப்பிட்டதாக எண்ணி அவனைக் கூட்டிக்கொண்டு போக வந்தார்கள். “…
இப்படி ஏதேதோ பேசியவாறு நான் மீராவுடன் நடந்து வந்தேன். மனதில் தோன்றியதையெல்லாம் பேசினேன். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதா இல்லையா என்றல்லாம் கூட நான் யோசிக்கவில்லை. பாவம், அவள் பேசாமல் கேட்டுக்கொண்டே வந்தாள்.
அங்கு ஓரிடத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் வயது முதிந்தவர்களும் சிறிய குழந்தைகளும் மிக மிக சந்தோஷமாய் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நம் உலகத்தில் அம்யூஸ்மென்ட் பார்க் என்று சொல்வோமே அது போல அங்கு நிறைய இருந்தது. வித விதமான ரைடுகள். கொஞ்சம் நின்று அதைப் பார்த்தோம். பிறகு, இது போல பார்க்குகளை சுற்றிப்பார்க்க, சின்ன சின்ன கிளாஸ் ஆல் ஆன ஒரு அறை போல இருந்தது. முன்பு நாங்கள் வந்து இறங்கியது போன்றது. அதில் நாங்கள் ஏறிக்கொண்டோம். அது அழகாக பறந்தது. எனவே, எங்களால் சுலபமாக எல்லாவற்றையும் பார்வை இட முடிந்தது. வேறு சில தேவதைகளும் அவ்வாறு பறந்தவாறே அங்குள்ளவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊரு போலீஸ் போல.
நான் முன்பே சொன்னது போல மூப்போ உடல் உபாதைகளோ இல்லததால், அவர்களால் குழந்தைகளுக்கு சமமாக விளையாட முடிந்தது. அதில் அந்த குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷம். செயற்கை ஊற்றுகள் , செயற்கை கடல் அலைகள், நீரில் முழ்கி விளையாடும் விளையாட்டுகள், யானைகளுடன் தண்ணீரில் நடக்கும் விளையாட்டுகள், வித விதமான படகு சவாரி, நாமே கூட அந்த வாட்டர் ஸ்கூட்டர்களை எடுத்து ஓட்டலாம். படகின் பின்னே பலூனில் பறக்கலாம் என பல விதமான நீர் விளையாட்டுகள்.
அடுத்து ஒரு இடத்தில் மலை ஏறும் போட்டி நடந்து கொண்டிருந்தது. நிறைய பேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். அடுத்து வித விதமான மேரிகோ ரவுண்டு, ஜெயண்ட் வீல் போல நிறைய இருந்தன.
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடலுக்கு அடி இல் கண்ணாடி சுரங்கம் போல் அமைப்பு உள்ளது. அதில் போனால் நீர் வாழ் உயிரினங்களை பார்க்கலாம். சிங்கப்பூர் துபாய் போன்ற இடங்களில் பார்த்திருக்கிறேன் இப்படி. அருமையாக இருக்கும்.
அடுத்து, நிறைய உணவகங்கள் இருந்தன. அவற்றில் வித விதமான உணவுகள் இருந்தன. நிறைய குளிர் பானங்கள், ஐஸ்கிரீம்கள் என்று எல்லாமே இருந்தன. சளி தும்மல் இருமல் ஜுரம் என்று எதுவுமே வராது என்பதால் யாரும் துளிக் கூட கவலையே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் பார்க்கவே நன்றாக இருந்தது.
ஒரு இடத்தில் பனி மழை பொழிவது போன்ற அமைப்பு. அங்கேயே அதற்கான உடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்து கொண்டு உலாவலாம். பனி சறுக்கலாம். பல்வேறு விளையாட்டுகள் விளையாடலாம். அங்கே குறுக்கும் நெடுக்கும் பென்குயின்கள் விளையாடுகின்றன. அவைகளுக்கு உணவு கொடுக்கலாம்.
இவைகளை எல்லாம் பார்த்தால் ஏதோ டூரிஸ்ட் ஸ்பார்ட் போல இருந்தது. இவர்கள் எல்லோரும் குறை ஒன்றும் இல்லாமல் இப்படியே இருக்கட்டும் என்று வாழ்த்த மனம் வந்தது.
அடுத்தது, இந்த ஆட்ட படங்களுக்கு நேர் எதிராக மிகவும் சாந்தமாக இருக்கும் இடம் வந்தது. அதாவது தபோவனங்கள். அங்கு ம் நிறைய பேர் இருந்தார்கள். ஒரு 2000 வருடங்கள் முன்பு போய்விட்டதைப் போல ஒரு எண்ணம் உண்டானது.
நான் இது போன்ற குடில்களை மஹாபாரதம் மற்றும் இராமாயண சிரியல்களில் பார்த்திருக்கிறேன். சில தமிழ் படங்களிலும் பார்த்துள்ளேன். சிலர் யோகிகளைப்போல அமர்ந்து இருந்தார்கள், சிலர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள், வேறு சிலர் அங்குள்ள செடி கொடிகளை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். பூக்களை பறித்து மாலை கட்டிக்கொண்டிருந்தார்கள்.இனிமையாக பகவான் நாமாவளிகளை பாடிக்கொண்டிருந்தார்கள். அங்கு சின்ன கோவிலும் இருந்தது. அதையும் பராமரித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு கூட்டமும் அங்கு இருந்தது.
அடுத்த இடத்தில், முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் உபன்யாசம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்த உபன்யாசகர்களுள் இவர்தான் முதன்மையானவர். என் சின்ன வயதில் இவர் உபன்யாசங்கள் நிறைய கேட்டுள்ளேன். மறுபடி அவரைப் பார்க்க மிகவும் சந்தோஷமாய் இருந்தது. எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் போனது..இவர் இங்கே எப்படி என்று... ஏனென்றால் அவர் நிச்சயம் வைகுந்தத்தில் கோவிந்தாவிடம் தானிருப்பார் என்று நான் நம்பி இருந்தேன். அத்தனை புண்ணியவான் அவர் எப்படி இங்கே என்று எனக்கு குழப்பமாய் இருந்தது. மீராவைப் பார்த்தேன். அதற்கு அவள் ‘இது ஹாலோ கிராம் அம்மா’ என்று சொன்னாளே பார்க்கணும்.
ஆஹா, அருமை அருமை என்று மிகவும் சந்தோஷித்தேன். “இந்த அரங்கத்தின் வாயிலில் ஒரு போர்டு பார்த்தீர்கள் அல்லவா, அதில் நீங்கள் அடுத்து என்ன காலட்ஷேபம் கேட்க விரும்புகிறீர்கள் என்று எழுதி வைக்கவேண்டும். நிறைய பேர் எதைக் கேட்கிறார்களோ அதை இங்கே வைப்பார்கள்" என்று சொன்னாள். இப்பொழுது பாகவதம் சப்தாகம் நடந்து கொண்டிருந்தது அங்கு. நிறைய பேர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் .
தொடரும்.....
அடுத்து, நிறைய உணவகங்கள் இருந்தன. அவற்றில் வித விதமான உணவுகள் இருந்தன. நிறைய குளிர் பானங்கள், ஐஸ்கிரீம்கள் என்று எல்லாமே இருந்தன. சளி தும்மல் இருமல் ஜுரம் என்று எதுவுமே வராது என்பதால் யாரும் துளிக் கூட கவலையே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் பார்க்கவே நன்றாக இருந்தது.
ஒரு இடத்தில் பனி மழை பொழிவது போன்ற அமைப்பு. அங்கேயே அதற்கான உடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்து கொண்டு உலாவலாம். பனி சறுக்கலாம். பல்வேறு விளையாட்டுகள் விளையாடலாம். அங்கே குறுக்கும் நெடுக்கும் பென்குயின்கள் விளையாடுகின்றன. அவைகளுக்கு உணவு கொடுக்கலாம்.
இவைகளை எல்லாம் பார்த்தால் ஏதோ டூரிஸ்ட் ஸ்பார்ட் போல இருந்தது. இவர்கள் எல்லோரும் குறை ஒன்றும் இல்லாமல் இப்படியே இருக்கட்டும் என்று வாழ்த்த மனம் வந்தது.
அடுத்தது, இந்த ஆட்ட படங்களுக்கு நேர் எதிராக மிகவும் சாந்தமாக இருக்கும் இடம் வந்தது. அதாவது தபோவனங்கள். அங்கு ம் நிறைய பேர் இருந்தார்கள். ஒரு 2000 வருடங்கள் முன்பு போய்விட்டதைப் போல ஒரு எண்ணம் உண்டானது.
நான் இது போன்ற குடில்களை மஹாபாரதம் மற்றும் இராமாயண சிரியல்களில் பார்த்திருக்கிறேன். சில தமிழ் படங்களிலும் பார்த்துள்ளேன். சிலர் யோகிகளைப்போல அமர்ந்து இருந்தார்கள், சிலர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள், வேறு சிலர் அங்குள்ள செடி கொடிகளை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். பூக்களை பறித்து மாலை கட்டிக்கொண்டிருந்தார்கள்.இனிமையாக பகவான் நாமாவளிகளை பாடிக்கொண்டிருந்தார்கள். அங்கு சின்ன கோவிலும் இருந்தது. அதையும் பராமரித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு கூட்டமும் அங்கு இருந்தது.
அடுத்த இடத்தில், முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் உபன்யாசம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்த உபன்யாசகர்களுள் இவர்தான் முதன்மையானவர். என் சின்ன வயதில் இவர் உபன்யாசங்கள் நிறைய கேட்டுள்ளேன். மறுபடி அவரைப் பார்க்க மிகவும் சந்தோஷமாய் இருந்தது. எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் போனது..இவர் இங்கே எப்படி என்று... ஏனென்றால் அவர் நிச்சயம் வைகுந்தத்தில் கோவிந்தாவிடம் தானிருப்பார் என்று நான் நம்பி இருந்தேன். அத்தனை புண்ணியவான் அவர் எப்படி இங்கே என்று எனக்கு குழப்பமாய் இருந்தது. மீராவைப் பார்த்தேன். அதற்கு அவள் ‘இது ஹாலோ கிராம் அம்மா’ என்று சொன்னாளே பார்க்கணும்.
ஆஹா, அருமை அருமை என்று மிகவும் சந்தோஷித்தேன். “இந்த அரங்கத்தின் வாயிலில் ஒரு போர்டு பார்த்தீர்கள் அல்லவா, அதில் நீங்கள் அடுத்து என்ன காலட்ஷேபம் கேட்க விரும்புகிறீர்கள் என்று எழுதி வைக்கவேண்டும். நிறைய பேர் எதைக் கேட்கிறார்களோ அதை இங்கே வைப்பார்கள்" என்று சொன்னாள். இப்பொழுது பாகவதம் சப்தாகம் நடந்து கொண்டிருந்தது அங்கு. நிறைய பேர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் .
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதே போல பல அரங்கங்கள் இருந்தன ஒவ்வொன்றிலும் ஒவ்வொருத்தர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்கள். பார்க்க பரவசமாய் இருந்தது எனக்கு. அங்கிருந்து நகரவே மனம் வரவில்லை. ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடியாது என்று தோன்றியதால் எங்கள் அறையை நோக்கி நடக்கும்பொழுது குறுக்கிட்டவைகளை மட்டும் பார்த்துக்கொண்டே அறைக்கு வந்து சேர்ந்தோம். நிதானமாக ஒவ்வொன்றாக முழுவதும் பிறகு தான் பார்க்கவேண்டும்.
எனக்கு அடுத்த உணவு காத்துக் கொண்டிருந்தது. நான் சாப்பிடும்போது மீராவும் அவளின் உணவைக் கொண்டுவந்தாள். இருவரும் உண்டோம்.
நான் மீராவிடம் கேட்டேன், " மீரா இங்குள்ளவர்கள் எப்படி உணவு உண்கிறார்கள்? ஏதும் கட்டுப்பாடு உண்டா அல்லது எல்லாமே உண்ணலாமா?" என்றேன். அதற்கு அவள் இல்லை என்று தலை அசைத்தாள். பிறகு சொன்னாள்," இல்லை அம்மா, அதற்கும் புண்ணியக் கணக்கு வேண்டும். நீங்கள் அதிலிருந்து தான் எல்லாவற்றையுமே பெறமுடியும். நம் தலைவர் சொன்னார் அல்லவா, இவர்கள் எல்லோருக்கும் தங்களின் பாவ புண்ணியக் கணக்கு தெரியும் என்று, அது தான் இது. இங்கு தங்குமிடம், உணவு, இந்த பொழுது போக்குகள் என எல்லாவற்றுக்கும் புண்ணிய கணக்கு தேவை என்றாள் . அவர்கள் பார்த்து பார்த்து தான் செலவு செய்வார்கள். சில இடங்களில் அதாவது அந்த தபோ வனங்களில் பிக்ஷை உண்டு. அது பிரீ தான்" என்று சொன்னாள் .
"மீரா, உனக்கு சம்மதம் என்றால் என் கணக்கை பார்க்கலாமா, அல்லது திருப்பதி பற்றி பேசலாமா, அல்லது உணவுக்கு கூடத்திற்கு சென்று பார்த்து வரலாமா" என்றேன்.
"இது எதுவுமே வேண்டாம் அம்மா, கொஞ்சம் ஓய்வு எடுங்கள். இங்கு வந்ததில் இருந்து நீங்கள் ஓய்வு எடுக்கவே இல்லை. எனவே கொஞ்சம் ஓய்வு எடுங்கள். நான் என்னுடைய வேலை கொஞ்சம் இருக்கிறது அதைப் பார்க்கிறேன்". என்று அன்பாக சொன்னாள்.
"ம்ம்.. சரி, ஆனால் என்னுடைய அம்மா அப்பா, பாட்டி தாத்தா எல்லோரையும் எங்கே எப்படி பார்ப்பது மீரா?" என்றேன். அவள் சிரித்தவாறே, ‘அவசரப்படா தீர்கள் ....அந்த திவச நாளில் அவர்கள் இங்கு கூடும் பொழுது தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள்.....அப்பொழுது, உங்களை அறிமுகம் செய்து வைப்பார்கள்" என்றாள்.
'ம்ம்.. சரி' என்று சொல்லிவிட்டு நான் படுத்துக் கொண்டேன். மீரா கம்ப்யூட்டர் இல் தன் வேலைகளை பார்க்கத்துவங்கினாள்.
தினமும் ஒரு இடமாக பார்வை இட்டுக்கொண்டிருந்தோம் நாங்கள். நடு நடுவே கோவில் வேலைகளிலும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். ஒருநாள் நான் மீராவைக் கேட்டேன்,” இந்த சொர்கம் நரகம் என்று சொல்கிறார்களே அதை நாம் இன்னும் பார்க்கவே இல்லையே?” என்று கேட்டேன்.
அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், " அப்படி எதுவும் தனியாக இல்லை. நாம் ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துக் கொள்ளும் முறை இல் தான் சொர்க்கமும் நரகமும் உண்டு"......." ம்ம்.. இப்பொழுது இங்கே பாருங்கள் என்று சொல்லி ஒரு ஜன்னலைக் காட்டினாள். அதன்முலம் நாங்கள் அந்தப்பக்கம் உள்ளதைப் பார்க்க முடிந்தது. அது ஒரு உணவுக் கூடம். எங்கும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. உணவுககைகள் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடாமல், பசி பசி என்று கத்திக் கொண்டிருந்ததர்கள். எல்லாவற்றையும் போட்டு உருட்டிக் கொண்டிருந் தார்கள். 'என்ன மீரா இது ?" என்றேன்... நீங்கள் கேட்ட நரகம் இது தான்' என்றாள் .
தொடரும்....
எனக்கு அடுத்த உணவு காத்துக் கொண்டிருந்தது. நான் சாப்பிடும்போது மீராவும் அவளின் உணவைக் கொண்டுவந்தாள். இருவரும் உண்டோம்.
நான் மீராவிடம் கேட்டேன், " மீரா இங்குள்ளவர்கள் எப்படி உணவு உண்கிறார்கள்? ஏதும் கட்டுப்பாடு உண்டா அல்லது எல்லாமே உண்ணலாமா?" என்றேன். அதற்கு அவள் இல்லை என்று தலை அசைத்தாள். பிறகு சொன்னாள்," இல்லை அம்மா, அதற்கும் புண்ணியக் கணக்கு வேண்டும். நீங்கள் அதிலிருந்து தான் எல்லாவற்றையுமே பெறமுடியும். நம் தலைவர் சொன்னார் அல்லவா, இவர்கள் எல்லோருக்கும் தங்களின் பாவ புண்ணியக் கணக்கு தெரியும் என்று, அது தான் இது. இங்கு தங்குமிடம், உணவு, இந்த பொழுது போக்குகள் என எல்லாவற்றுக்கும் புண்ணிய கணக்கு தேவை என்றாள் . அவர்கள் பார்த்து பார்த்து தான் செலவு செய்வார்கள். சில இடங்களில் அதாவது அந்த தபோ வனங்களில் பிக்ஷை உண்டு. அது பிரீ தான்" என்று சொன்னாள் .
"மீரா, உனக்கு சம்மதம் என்றால் என் கணக்கை பார்க்கலாமா, அல்லது திருப்பதி பற்றி பேசலாமா, அல்லது உணவுக்கு கூடத்திற்கு சென்று பார்த்து வரலாமா" என்றேன்.
"இது எதுவுமே வேண்டாம் அம்மா, கொஞ்சம் ஓய்வு எடுங்கள். இங்கு வந்ததில் இருந்து நீங்கள் ஓய்வு எடுக்கவே இல்லை. எனவே கொஞ்சம் ஓய்வு எடுங்கள். நான் என்னுடைய வேலை கொஞ்சம் இருக்கிறது அதைப் பார்க்கிறேன்". என்று அன்பாக சொன்னாள்.
"ம்ம்.. சரி, ஆனால் என்னுடைய அம்மா அப்பா, பாட்டி தாத்தா எல்லோரையும் எங்கே எப்படி பார்ப்பது மீரா?" என்றேன். அவள் சிரித்தவாறே, ‘அவசரப்படா தீர்கள் ....அந்த திவச நாளில் அவர்கள் இங்கு கூடும் பொழுது தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள்.....அப்பொழுது, உங்களை அறிமுகம் செய்து வைப்பார்கள்" என்றாள்.
'ம்ம்.. சரி' என்று சொல்லிவிட்டு நான் படுத்துக் கொண்டேன். மீரா கம்ப்யூட்டர் இல் தன் வேலைகளை பார்க்கத்துவங்கினாள்.
தினமும் ஒரு இடமாக பார்வை இட்டுக்கொண்டிருந்தோம் நாங்கள். நடு நடுவே கோவில் வேலைகளிலும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். ஒருநாள் நான் மீராவைக் கேட்டேன்,” இந்த சொர்கம் நரகம் என்று சொல்கிறார்களே அதை நாம் இன்னும் பார்க்கவே இல்லையே?” என்று கேட்டேன்.
அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், " அப்படி எதுவும் தனியாக இல்லை. நாம் ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துக் கொள்ளும் முறை இல் தான் சொர்க்கமும் நரகமும் உண்டு"......." ம்ம்.. இப்பொழுது இங்கே பாருங்கள் என்று சொல்லி ஒரு ஜன்னலைக் காட்டினாள். அதன்முலம் நாங்கள் அந்தப்பக்கம் உள்ளதைப் பார்க்க முடிந்தது. அது ஒரு உணவுக் கூடம். எங்கும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. உணவுககைகள் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடாமல், பசி பசி என்று கத்திக் கொண்டிருந்ததர்கள். எல்லாவற்றையும் போட்டு உருட்டிக் கொண்டிருந் தார்கள். 'என்ன மீரா இது ?" என்றேன்... நீங்கள் கேட்ட நரகம் இது தான்' என்றாள் .
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'புரியவில்லை' என்றேன் '...புன்னகையுடன் அடுத்த ஜன்னலை காட்டினாள். அங்கு இருந்த மிகப்பெரிய உணவு மேசை மேல் பலவிதமான உணவுகள் இருந்தன, எல்லோரும் சிரித்து பேசிக்கொண்டு உணவு உண்டுக்கொண்டிருந்தார்கள். எங்கும் ஆனந்தமான சூழல் நிலவியது. எனக்கு வாஸ்த்தவமாகவே ஏதும் புரியவில்லை.
அதைப்பார்த்ததும் அவளே விளக்கினாள் . “இரு அறைகளில் உள்ளவர்களுக்கும் ஒரே உணவு தான் பரிமாறப் பட்டுள்ளது. ஆனால் என்ன ஒன்று அவர்களால் தங்களின் கைகளை மடக்க முடியாது. அதாவது உணவை எடுத்து தங்கள் வாயில் போட்டுக்கொள்ள முடியாது.
எனவே, முதலில் நீங்கள் பார்த்தவர்கள் உணவை எடுத்து கைகளை மடக்காமல், அண்ணாந்து , வாயில் போட்டுக்கொள்ள முயன்று சாப்பிடமுடியாமல் கிழே சிந்தி, கஷ்டப்படுகிறார்கள். பசி இல் கத்தி கலாட்டா செய்கிறார்கள்.
அதே, இங்குள்ளவர்கள் , அடுத்தவர்களுக்கு அவர்களின் தட்டுகளில் உள்ள உணவை ஊட்டி விட்டார்கள். அவர்கள் இவர்களுக்கு அப்படியே செய்தார்கள். எல்லோரும் நிம்மதியாக உணவு உண்டார்கள். இதைப்போலத்தான் எதுவுமே, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அதைப்பொறுத்துத்தான் நம் சந்தோஷமும் சோகமும்." என்றாள் .
இப்பொழுது எனக்கு நன்கு புரிந்தது. சிரித்தவாறே தலையை ஆட்டினேன்.
அடுத்தநாள் "அம்மா நீங்கள் எதிர் பார்த்த நாள் வந்துவிட்டது" என்று தெரிவித் தாள் அவள். " ஆஹா, நான் என் அம்மா, அப்பா, பாட்டி தாத்தாவை பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ந்தேன். நான் இல்லாமல் பூலோகத்தில் அவர்கள் என்ன கஷ்டப்பட்டார்களோ இந்த ஒரு வருடத்தில் என்றும் எண்ணிக்கொண்டேன்.".... மறுநாள் காலை இல் நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு சென்றோம். முன்பு நான் பார்த்த அதே அறைதான். கண்ணாடித் தடுப்புகள் மூலம் அடுத்த அறை இல் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியும். ஸ்ரார்த்தம் ஆரம்பித்ததும் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தார்கள், நான் ஆவலாய் அம்மா என்று கத்தினேன். மீரா சொன்னாள் ,' நீங்கள் கூப்பிட்டால் அவர்களுக்கு கேட்காது. உங்களை அவர்களுடன் சேர்க்கும் வரை யார் வந்துளளர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது அம்மா"... என்றாள்.
" ம்ம்.. சரி இத்தனை நாள் பொறுத்து விட்டுவிட்டேன் ஆச்சு இன்னும் கொஞ்ச நேரம் தானே, அமைதி காக்கிறேன் மீரா" என்றேன். "மேலும் மீரா, பாரேன் எங்க அம்மா என்னைவிட இளமையாய் இருக்கிறார்கள்"என்று புன்னகைத்தேன்.
அடுத்து அப்பா வந்தார். அடுத்து பாட்டி , தாத்தா..... நான் இதுவரை பார்த்தே இராத என் அப்பாவைப் பெற்றவர்கள். கையெடுத்து கும்பிட்டேன் அவர்களை. திடீரென்று அவர்கள் அனைவரும் மங்கலானார்கள். எனக்கு அவர்களைத் தெரியவில்லையே மீரா... என்று சொன்னேன். பக்கத்தில் பார்த்தால் மீராவையும் காணவில்லை. மிகவும் பதட்டமானேன். என்ன ஆயிற்று... மீரா, மீரா என்று கத்தினேன்...
யாரோ என்தோளைப் பிடித்து உலுக்கினார்கள்.” என்ன ஆச்சு மா?”... “மீரா மீரா, பாட்டியை பார்த்தேன் ஆனால் பேச முடியவில்லை, மறைந்துவிட்டர்களே என்?... சொல்லு மீரா, இல்லாவிட்டால் மாமாவைக் கூப்பிடு... ப்ளீஸ்” என்றேன் .
யாரோ மீண்டும் என்னை உலுக்கி, " அம்மா, அம்மா , என்ன உளறுகிறாய்?... ஏதாவது கெட்ட கனவா?... ஏது பாட்டி தாத்தா ?... என்றாள் .... என்ன, இவளும் செத்துப் போய்விட்டாளா?...
"ஐயோ, நீயும் செத்துவிட்டாயா?"... என்றேன் நான்... அவள் சுத்தமாக பயந்து போய், "அப்பா அப்பா சீக்கிரம் வாயேன்...அம்மா என்னன்னவோ உளறுகிறா "... என்று என் பெண் மீரா கத்தினாள். சட் என்று எனக்கு விழிப்பு வந்தது. பார்த்தால் நான் என் படுக்கை அறை இல் இருந்தேன். இது எப்படி சாத்தியம், நான் தான் செத்துப் போய்விட்டே னே ....
தொடரும்....
அதைப்பார்த்ததும் அவளே விளக்கினாள் . “இரு அறைகளில் உள்ளவர்களுக்கும் ஒரே உணவு தான் பரிமாறப் பட்டுள்ளது. ஆனால் என்ன ஒன்று அவர்களால் தங்களின் கைகளை மடக்க முடியாது. அதாவது உணவை எடுத்து தங்கள் வாயில் போட்டுக்கொள்ள முடியாது.
எனவே, முதலில் நீங்கள் பார்த்தவர்கள் உணவை எடுத்து கைகளை மடக்காமல், அண்ணாந்து , வாயில் போட்டுக்கொள்ள முயன்று சாப்பிடமுடியாமல் கிழே சிந்தி, கஷ்டப்படுகிறார்கள். பசி இல் கத்தி கலாட்டா செய்கிறார்கள்.
அதே, இங்குள்ளவர்கள் , அடுத்தவர்களுக்கு அவர்களின் தட்டுகளில் உள்ள உணவை ஊட்டி விட்டார்கள். அவர்கள் இவர்களுக்கு அப்படியே செய்தார்கள். எல்லோரும் நிம்மதியாக உணவு உண்டார்கள். இதைப்போலத்தான் எதுவுமே, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அதைப்பொறுத்துத்தான் நம் சந்தோஷமும் சோகமும்." என்றாள் .
இப்பொழுது எனக்கு நன்கு புரிந்தது. சிரித்தவாறே தலையை ஆட்டினேன்.
அடுத்தநாள் "அம்மா நீங்கள் எதிர் பார்த்த நாள் வந்துவிட்டது" என்று தெரிவித் தாள் அவள். " ஆஹா, நான் என் அம்மா, அப்பா, பாட்டி தாத்தாவை பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ந்தேன். நான் இல்லாமல் பூலோகத்தில் அவர்கள் என்ன கஷ்டப்பட்டார்களோ இந்த ஒரு வருடத்தில் என்றும் எண்ணிக்கொண்டேன்.".... மறுநாள் காலை இல் நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு சென்றோம். முன்பு நான் பார்த்த அதே அறைதான். கண்ணாடித் தடுப்புகள் மூலம் அடுத்த அறை இல் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியும். ஸ்ரார்த்தம் ஆரம்பித்ததும் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தார்கள், நான் ஆவலாய் அம்மா என்று கத்தினேன். மீரா சொன்னாள் ,' நீங்கள் கூப்பிட்டால் அவர்களுக்கு கேட்காது. உங்களை அவர்களுடன் சேர்க்கும் வரை யார் வந்துளளர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது அம்மா"... என்றாள்.
" ம்ம்.. சரி இத்தனை நாள் பொறுத்து விட்டுவிட்டேன் ஆச்சு இன்னும் கொஞ்ச நேரம் தானே, அமைதி காக்கிறேன் மீரா" என்றேன். "மேலும் மீரா, பாரேன் எங்க அம்மா என்னைவிட இளமையாய் இருக்கிறார்கள்"என்று புன்னகைத்தேன்.
அடுத்து அப்பா வந்தார். அடுத்து பாட்டி , தாத்தா..... நான் இதுவரை பார்த்தே இராத என் அப்பாவைப் பெற்றவர்கள். கையெடுத்து கும்பிட்டேன் அவர்களை. திடீரென்று அவர்கள் அனைவரும் மங்கலானார்கள். எனக்கு அவர்களைத் தெரியவில்லையே மீரா... என்று சொன்னேன். பக்கத்தில் பார்த்தால் மீராவையும் காணவில்லை. மிகவும் பதட்டமானேன். என்ன ஆயிற்று... மீரா, மீரா என்று கத்தினேன்...
யாரோ என்தோளைப் பிடித்து உலுக்கினார்கள்.” என்ன ஆச்சு மா?”... “மீரா மீரா, பாட்டியை பார்த்தேன் ஆனால் பேச முடியவில்லை, மறைந்துவிட்டர்களே என்?... சொல்லு மீரா, இல்லாவிட்டால் மாமாவைக் கூப்பிடு... ப்ளீஸ்” என்றேன் .
யாரோ மீண்டும் என்னை உலுக்கி, " அம்மா, அம்மா , என்ன உளறுகிறாய்?... ஏதாவது கெட்ட கனவா?... ஏது பாட்டி தாத்தா ?... என்றாள் .... என்ன, இவளும் செத்துப் போய்விட்டாளா?...
"ஐயோ, நீயும் செத்துவிட்டாயா?"... என்றேன் நான்... அவள் சுத்தமாக பயந்து போய், "அப்பா அப்பா சீக்கிரம் வாயேன்...அம்மா என்னன்னவோ உளறுகிறா "... என்று என் பெண் மீரா கத்தினாள். சட் என்று எனக்கு விழிப்பு வந்தது. பார்த்தால் நான் என் படுக்கை அறை இல் இருந்தேன். இது எப்படி சாத்தியம், நான் தான் செத்துப் போய்விட்டே னே ....
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்படி என் பெண், என் கணவர் இங்கே இருக்க முடியும்?... ஸோ, நான் கண்டது கனவா என்ன ?...மிகவும் குழப்பமாக இருந்தது...தலையை வலித்தது. இதற்குள் என் கணவரும் மகனும் ஓடிவந்தனர் ," என்ன ஆச்சு?..ஒரு படம் ஒழுங்கா பார்க்க விடமாட்டீங்களே?" என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
என் நிலையைப் பார்த்ததும். ‘என்னடி ஆச்சு?’ என்று கேட்டார். மகள் விளக்கினாள் . பேசாமலே மலங்க மலங்க விழித்த என்னை, " என்ன ஆச்சு மா, நீ தான் அந்தப்படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து படுத்தியே, அப்புறம் என்ன?" என்று அன்பாய்க் கேட்டார். “அதற்குள் தூங்கி, கனவு வேறா? "... என்றார்.
" சும்மா கனவு இல்லப்பா, கெட்ட கனவு" என்றாள் என் மகள். பாட்டி எங்கே தாத்தா எங்கே, அன்பான தன் மாமா எங்கே , நீயும் செத்துட்டியா என்றெல்லாம் கேட்டாளா, நான் பயந்து விட்டேன்” என்றாள்.
அதற்குள் என் மகன் தண்ணீர் கொடுத்தான். "ம்ம்...இப்போ பேசு, என்று சொன்னார் என் கணவர்.நான் என்னத்தை சொல்ல? "இல்லை, அந்த Web Serial பார்த்துவிட்டு வந்து படுத்தேனா, அது தான் அதேபோல கனவும் வந்தது போல இருக்கு. ஆனால், நான் அவர்களைப்போல யோசிக்காமல், நம் முன்னோர்களை பார்த்தது போல இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறே தூங்கிப்போனேன். அதன் விளைவு தான் அப்படிப்பட்ட கனவு என்று நினைக்கிறேன். அதை பொறுமையாக யோசித்து, கொஞ்சம் மெருகேற்றி சூப்பர்க் கதையாக எழுதிவிடுகிறேன். அதை, நாளைக்கு காலை இல் நீங்க படிக்கலாம்; படித்துவிட்டு சொல்லுங்கள்"...என்றேன்.
இத்தனை தெளிவாக நான் பேசியதும்" அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இரண்டே மணிநேரத்தில் அவர்கள் அடுத்த படத்தை முடிக்கும் முன் நான் இந்தக்கதையை ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டேன். என் மாமாவை , என் முன்னோர்களை ஒருசேர பார்த்துவிட்டு வந்த நிம்மதி எனக்குள் பரவியது. ஏதோ ஒரு ஆங்கிலப்படம் இத்தனை தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தது. என்னால் அந்த நிகழ்வை ஒரு கனவு என்று ஒதுக்க முடியவில்லை. ஒருவேளை அப்படி ஒரு உலகம் இருந்தது என்றால் எனக்கு அங்குதான் போகவேண்டும் என்று தோன்றியது. நோய் , மூப்பு தொல்லை இல்லாமல் சந்தோஷமாய் விரும்பியதை செய்துக் கொண்டு இருப்பது இந்த உலகில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
என் நிலையைப் பார்த்ததும். ‘என்னடி ஆச்சு?’ என்று கேட்டார். மகள் விளக்கினாள் . பேசாமலே மலங்க மலங்க விழித்த என்னை, " என்ன ஆச்சு மா, நீ தான் அந்தப்படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து படுத்தியே, அப்புறம் என்ன?" என்று அன்பாய்க் கேட்டார். “அதற்குள் தூங்கி, கனவு வேறா? "... என்றார்.
" சும்மா கனவு இல்லப்பா, கெட்ட கனவு" என்றாள் என் மகள். பாட்டி எங்கே தாத்தா எங்கே, அன்பான தன் மாமா எங்கே , நீயும் செத்துட்டியா என்றெல்லாம் கேட்டாளா, நான் பயந்து விட்டேன்” என்றாள்.
அதற்குள் என் மகன் தண்ணீர் கொடுத்தான். "ம்ம்...இப்போ பேசு, என்று சொன்னார் என் கணவர்.நான் என்னத்தை சொல்ல? "இல்லை, அந்த Web Serial பார்த்துவிட்டு வந்து படுத்தேனா, அது தான் அதேபோல கனவும் வந்தது போல இருக்கு. ஆனால், நான் அவர்களைப்போல யோசிக்காமல், நம் முன்னோர்களை பார்த்தது போல இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறே தூங்கிப்போனேன். அதன் விளைவு தான் அப்படிப்பட்ட கனவு என்று நினைக்கிறேன். அதை பொறுமையாக யோசித்து, கொஞ்சம் மெருகேற்றி சூப்பர்க் கதையாக எழுதிவிடுகிறேன். அதை, நாளைக்கு காலை இல் நீங்க படிக்கலாம்; படித்துவிட்டு சொல்லுங்கள்"...என்றேன்.
இத்தனை தெளிவாக நான் பேசியதும்" அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இரண்டே மணிநேரத்தில் அவர்கள் அடுத்த படத்தை முடிக்கும் முன் நான் இந்தக்கதையை ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டேன். என் மாமாவை , என் முன்னோர்களை ஒருசேர பார்த்துவிட்டு வந்த நிம்மதி எனக்குள் பரவியது. ஏதோ ஒரு ஆங்கிலப்படம் இத்தனை தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தது. என்னால் அந்த நிகழ்வை ஒரு கனவு என்று ஒதுக்க முடியவில்லை. ஒருவேளை அப்படி ஒரு உலகம் இருந்தது என்றால் எனக்கு அங்குதான் போகவேண்டும் என்று தோன்றியது. நோய் , மூப்பு தொல்லை இல்லாமல் சந்தோஷமாய் விரும்பியதை செய்துக் கொண்டு இருப்பது இந்த உலகில் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- lakshmi palaniபண்பாளர்
- பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018
கதை அருமை கிருஷ்னாம்மா. கடைசிவரை சுவையாக இருந்தது படிக்க. முடிவில் எல்லாம் கனவு. நன்றி.
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|