by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்
ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.
பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.
பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா
சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்
அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அதிபர் பதவி விலக முடிவு?
ஆப்கனில் பல மாகாணங்களை கைப்பற்றி வரும் தலிபான் #பயங்கரவாதிகள், தலைநகர் காபூலுக்குள், அனைத்து பகுதிகளில் இருந்தும் நுழைந்தனர். இதனால், அரசு அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் வெளியேறினர். அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக அதிபர் மாளிகையில் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிபர் #அஷ்ரப்_கனி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் பதவி விலகுவார் எனவும், பின்னர் #தலிபான் பிரதிநிதிகள் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தை 1991ல் கைப்பற்றிய தலிபான், 2001ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டது.
கடும் சண்டை
அதன்பின், ஆப்கனில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியுள்ளது. கடந்த மூன்று வார சண்டையில் 13 மாகாணங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது.
கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை தலிபான் தீவிரவாதிகள் இன்று (ஆக., 15) கைப்பற்றினர். அந்த நகரை சண்டையிடாமலே கைப்பற்றியதாக தெரிவித்து உள்ளனர். ஆப்கனில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
தொடர்ந்து, கடும் மோதலில் ஈடுபட்ட தலிபான்கள் #காபூல் நகருக்குள் அனைத்து பகுதிக்குள் இருந்தும் நுழைந்தனர். அங்குள்ள கனக்கன், குராபாத் பாக்மான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். இதனால், அங்கு இரு தரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், தாக்குதல் நடத்த விருப்பமில்லை; வலுக்கட்டாயமாக நகரை கைப்பற்ற விரும்பவில்லை எனவும், அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலிபான்கள் கூறியுள்ளனர்.
அதற்காக தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள், #ஆப்கன்_அதிபர் மாளிகையில் அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆப்கன் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், காபூல் நகரில் தாக்குதல் நடத்தப்படவில்லை. அதிகார மாற்றம் அமைதியாக நடக்கும். நகரின் பாதுகாப்பை பாதுகாப்பு படையினர் உறுதி செய்வார்கள் என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க தூதரகத்தில் இருந்தும் ஊழியர்கள் வெளியேறி உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்த மாத இறுதிக்குள் ஆப்கனில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள அமெரிக்கா, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அங்குள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக தற்போது பணியில் உள்ள 3 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதனை 5 ஆயிரமாக அதிகரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், தலிபான்கள் மீது ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1350048Dr.S.Soundarapandian wrote:மத வெறி தாண்டவம் ஆடுகிறது!
இதை எப்படி மதவெறி எனக் கூற முடியும்? அங்கு இருப்பது ஒரே மதம் தானே? மற்றோரு மதத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல் தானே மதவெறி? {சரியா எனக் கூறவும்)
பெண்ணடிமைத்தனம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியர்களை அழைத்து வர ஆப்கானிஸ்தான் சென்ற ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளுடன் இந்தியாவிற்கு புறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர காபூல் விரைந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என அனைவரையும் அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக காபூலில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதற்காக செயற்கைகோளை அழிக்கும் ஏவுகனைகளையா அவர்களால் ஏவமுடியும்?
இதனால் மிக எளிதான வழியினை கண்டுவிட்டார்கள், ஆம் காபூல் தெருக்களை டயர்களாலும் இன்னும் பல பொருட்களாலும் எரித்து பெரும் புகையினை கிளப்பிவிட்டுவிட்டார்கள்
மிக பெரிய கரும்புகையில் நகரம் சிக்க, அமெரிக்க சாட்டிலைட்டுகள் திணறுகின்றன, அமெரிக்க விமானங்களும் தடுமாறுகின்றன
இது என்னவகை தாக்குதலோ தெரியவில்லை, இன்னும் எவ்வளவு தாக்குதல் உத்தி உண்டோ என்பதும் பகீர் என்கின்றது
பின்லேடனிடம் இருந்து இதையெல்லாம் குகை போட்டு கற்றிருப்பார்கள் போலிருக்கின்றது
அமெரிக்க வீரர்களும் ராஜதந்திரிகளும் இன்னும் பிரிட்டானியர் உள்ளிட்டோர் காபூலில் சிக்கி கொள்ள, மிக பெரிய புகைமூட்டம் அங்கே கிளம்பியிருக்கும் நிலையில் காட்சிகள் மிக மிக உக்கிரமாகின்றன
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிபர் அஷ்ரப் கானி ராஜினாமா செய்ததாகவும், கத்தாரில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வரும் முஹம்மது அப்துல் கானி பரதர் எனும் தாலிபான் தலைவர் ஆப்கன் சென்று பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பாவம் பெண்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீம் பிழைக்குமா அல்லது
மதக்கோட்பாடுகளுக்கு விரோதமானது என தடை செய்யப்படுமா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை #தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், #ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த நிலையில் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில் அதிபர் அஷ்ரப் கனி, #தஜிகிஸ்தான் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இடைக்கால அதிபராக #அலி_அமகது_ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#காபூல் சுற்றி வளைக்கப்பட்டதால் விமானம் மூலம் #அஷ்ரப்_கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசுப்படைகள் சரணடைந்ததால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார்-இ-ஷெரிப்பின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பிறகு தாலிபான் ஜலாலாபாத்தை கைப்பற்றியுள்ளது. ஜலாலாபாத் நகரமும் தாலிபான் வசம் சென்ற பிறகு, தற்போது காபுல் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பெரிய நகரமாக இருந்தது.
ஆனால், தற்போது வந்துள்ள செய்திகளின் படி, காபூல் நகரத்தையும் தாலிபான்கள் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற #சபாநாயகர் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காபூலில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றதாக அல்ஜசீராவில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான செய்திகள், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி சிறிது நேரத்தில் பதவி விலகக் கூடும் என கூறப்படுகிறது.
தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் தலைநகரை எல்லா பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து உள்ளே நுழையத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் இராணுவம் அவர்களை தடுக்க முயன்ற போதிலும் பலன் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தலிபான் செய்தித் தொடர்பாளர் காபூலை பலவந்தமாக கைப்பற்ற விரும்பவில்லை என்று கூறியுள்ளார். முன்னதாக, இன்று கிழக்கு நகரமான ஜலாலாபாத்தையும் தாலிபான் கைப்பற்றியது. இது தவிர, குனார் மாகாணத்தின் அசதாபாத் நகரத்தின் தலைநகரம் மற்றும் பக்திகா மாகாணத்தின் தலைநகரமும் தலிபான் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமையன்று, தலிபான்கள் முக்கிய நகரங்களான #மஸார்-இ-ஷெரீப் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ள மைமானா நகரங்களையும், நாட்டின் கிழக்கு பகுதியில் கார்டெஸ் மற்றும் மெஹ்தர்லாம் ஆகிய நகரங்களையும் கைப்பற்றியதாக அறிவித்தனர். மே மாதத்தில் சண்டை தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை 20 க்கும் மேற்பட்ட மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|