புதிய பதிவுகள்
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
10 Posts - 24%
M. Priya
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
4 Posts - 4%
Baarushree
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
3 Posts - 3%
Rutu
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_m10ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 10 Feb 2023 - 20:14

ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும் -2-10-15

திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் விஷ்ணு. இவர் திருநெல்வேலியில் உள்ள சட்டவிரோத குவாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி அதிபர்கள் ஆளுங்கட்சி முக்கியப் புள்ளிகளை அணுகினார்கள். அந்த முக்கியப் புள்ளி நேரடியாக கலெக்டர் விஷ்ணுவுக்கு குவாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அழுத்தம் கொடுத்தார். விஷ்ணு அதற்கு உடன்படவில்லை. ஆட்சியின் மேலிடத்திலும் விஷ்ணு மேல் புகார் கொடுத்தார். அவரின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்த கலெக்டர் விஷ்ணு, சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் வெட்டி எடுக்கப்படும் கற்களால் ஏற்கனவே அந்த பகுதியில் உயிரிழப்பு நடந்துள்ளது. எனவே, இதை நாம் தமிழர் கட்சி அரசியலாக்குகிறது என நோட் போட்டு சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளுக்கு 360 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள் குவாரி அதிபர்கள். நோட்டீஸ் கொடுக்காமல் குவாரி மீது நடவடிக்கை எடுத்தது தவறு என வழக்கில் தீர்ப்பு வந்தது. உடனடியாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதே குவாரிகளை மூட உத்தரவிட்டார் விஷ்ணு.

விஷ்ணு கலெக்டராக தொடர்ந்தால் நாங்கள் தொழில் நடத்த முடியாது என குவாரி அதிபர்கள் ஆட்சி மேலிடத்திடம் முறையிட, சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாற்றத்தில் விஷ்ணு மாற்றப்பட்டார். விஷ்ணுவை போலவே பொதுமக்களிடம் நன்மதிப்பு பெற்றவர் தென்காசி கலெக்டராக இருந்த ஆகாஷ். இவர் குற்றாலம் பகுதியில் மிகப்பெரிய சுற்றுலா விழாக்களை மக்கள் ஒத்துழைப்போடு பிரம்மாண்டமாக நடத்தினார். அத்துடன் குற்றாலத்திலிருந்து கால்வாய் வெட்டி தங்களுடைய தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளை ஏற்படுத்திய ஓட்டல் அதிபர்களின் சட்டவிரோத வேலைகளுக்கு முடிவு கட்டி செயற்கை அருவிகளை இழுத்து மூடினார். அத்துடன், தலையாரி போஸ்டிங்குகளை வெகு வேகமாக எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையாக நிரப்பினார். இது தென்காசி தி.மு.க. அரசியல்வாதிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த கலெக்டர் ஆகாஷையும் நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் மாற்றினார்கள். அவருக்குப் பதிலாக டி.ரவிச்சந்திரன் என்பவரை தென்காசி கலெக்டராக நியமித்தார்கள். இதை எதிர்த்து தென்காசி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக இருப்பவர் கிருஷ்ண சரோஜ் தாகூர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்தது போல சூளகிரி அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அதில் ஒரு இளைஞரை கிருஷ்ண சரோஜ் தாகூர் லத்தியாலும் காலாலும் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. எருது விடும் விழாவுக்கு முறையாக அனுமதி தரவில்லை என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜல்லிக்கட்டு, கள்ளக்குறிச்சி போல பரபரப்பாக போலீசுக்கு எதிராக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை மணிக்கணக்காக மறித்து நடந்த இந்தப் போராட்டம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்து கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்தி இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்த கிருஷ்ண சரோஜ் தாக்கூர் தமிழகத்திலேயே மிகச்சிறந்த சட்டம் ஒழுங்கு அதிகாரி என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளால் பாராட்டப்படுபவர். ஆனால், இவர் எப்பொழுதும் சட்டம் ஒழுங்கு பணிகளை ஒழுங்காகக் கவனிப்பதில்லை. சூளகிரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரளுவார்கள். அவர்கள் எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சாலைமறியலில் ஈடுபடுவார்கள் என்பதை கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே உளவுத்துறை கவனிக்கத் தவறியது. இது உளவுத்துறையின் தோல்வி என அறிக்கை விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு தோல்விக்குப் பிறகும் கிருஷ்ண சரோஜ் தாக்கூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துரைமுருகனுக்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதி கலெக்டர்களுக்கும் ஒத்து வராது. சமீபத்தில் இந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற முதல்வர், இந்தப் பகுதி கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் என்கிற புகார் தலைமைச் செயலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருந்தவர் உமாநாத் ஐ.ஏ.எஸ்.. இவர் இப்பொழுது முதல்வரின் செயலாளராக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையில் கடுமையான ஊழல்களைச் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் துறையில் இருந்த உமாநாத் முதல்வரின் செயலாளராக வந்துவிட்டார். இதுவரை விஜயபாஸ்கர் மீது உமாநாத் தலைவராக இருந்த தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷனில் நடந்த ஊழல்கள் பற்றி ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தற்பொழுது நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் அரவிந்த் என்பவரை தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமித்துள்ளார்.

இதுதான் ஊழலை மறைக்கும் நடவடிக்கை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நியாயமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். தவறான அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

நக்கீரன்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 10 Feb 2023 - 21:45

பலரை சந்தோஷப்படுத்த ஒரு சிலரை மாற்றவேண்டி இருக்கு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 10 Feb 2023 - 22:04

“இதுதான் #ஊழலை #மறைக்கும் #நடவடிக்கை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நியாயமாக நடவடிக்கை  எடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். தவறான அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.” -

கூடாது
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 10 Feb 2023 - 22:08

காரணம் யாவரும் அறிந்ததே  புன்னகை புன்னகை புன்னகை  ??? !!!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக