புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
5 Posts - 1%
prajai
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10தமிழக செய்திகள்  - Page 6 Poll_m10தமிழக செய்திகள்  - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக செய்திகள்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 4:48 pm

First topic message reminder :

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளது.


கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம்,  1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத்  இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.

டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 1:41 am

கோவையில் சட்டவிரோத விளம்பர பலகையை சாலையோரம் நிறுவியபோது சாரம் சரிந்து, தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தமிழகத்தில் விளம்பர பலகைகளை, 15 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இருந்த விளம்பர பலகைகளுக்கு, இப்போதைய தி.மு.க., அரசு உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனுமதித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட விபத்தில், நேற்று முதல் சம்பவம் கோவையில் நடந்து, அநியாயமாக மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன.

வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் சாலை சந்திப்புகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு மிக அருகாமையில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என, ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பு விதிகளிலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மீறி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றி, தினமும் அறிக்கை சமர்ப்பிக்க, மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நுாற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. நீலாம்பூர் மற்றும் சின்னியம்பாளையம் பகுதியில் சில பலகைகள் அகற்றப்படவில்லை. கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அவிநாசி செல்லும் பிரதான சாலையின் இருபுறமும், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, 'மெகா சைஸ்' விளம்பர பலகைகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றவில்லை.இச்சூழலில், கோவையில் இருந்து அவிநாசி நோக்கி செல்லும் சாலையில், கருமத்தம்பட்டி எல்லையில், வெள்ளாண்டிபாளையம் செல்லும் வழி, பள்ளக்காடு தோட்டம் என்ற பகுதியில், விவசாயி ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், சேலத்தைச் சேர்ந்த பழனிசாமி, மாவட்ட நிர்வாக அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக, ஒரு வாரமாக, விளம்பர பலகை வைப்பதற்கான பணிகளை துவக்கினார்.

இரும்பு ஆங்கிள்கள் வெல்டிங் செய்யும் பணியை, சேலத்தைச் சேர்ந்த ராஜா கவனித்து வந்தார். இப்பணியில், சேலம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில், ஏற்கனவே, 70 அடி உயரத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த உயரத்தையும் கடந்து, அதிகமான உயரத்தில் விளம்பர பலகைகள் வைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.நேற்று மூன்று தொழிலாளர்கள் இரும்பு சாரத்தின் மீது ஏறி விளம்பர பிளக்ஸ் பேனர்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். மற்ற நால்வரும் கீழே நின்றிருந்தனர். பிற்பகல், 3:30 மணியளவில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போதும் கூட, இரும்பு சாரத்தில் இருந்து இறங்காமல் விளம்பர பலகை பொருத்தும் பணியில் அத்தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

திடீரென, விளம்பர பலகை சரிந்ததில் அத்தொழிலாளர்கள் கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாயினர்.

இரும்பு ஆங்கிள்களுக்கு இடையே, சேலம் பொன்னாம்பேட்டையை சேர்ந்த சேட்டு, 39, என்பவர் சிக்கினார். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கருமத்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த தொழிலாளர்கள், சேலம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த குணசேகரன், 52, குமார், 40, சேகர், 45, என, தெரியவந்தது. அனுமதியின்றி விளம்பர பலகை பொருத்தியதும் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தில், விதிமுறையை மீறி, அலட்சியமாக செயல்பட்ட அனைவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மட்டுமின்றி சென்னையிலும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் புற்றீசல் போல முளைத்துள்ளன; இந்த விளம்பர பலகைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிமாக இருக்கும் என, கூறப்படுகிறது.

கோவை போன்று சென்னையிலும், உயிரிழப்பு நேரிடும் முன் தமிழக அரசு விழிப்பது அவசியம்.

சடலங்கள் மீட்பு


விபத்து நடந்த இடத்தில் இரும்பு ஆங்கிள்கள் அறுத்தெடுக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டது. போலீசார் பொதுமக்களுடன் இணைந்து, பலியான தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டன.
கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தையல் நாயகி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.


விளம்பர பேனர் சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரர் பழனிசாமி கைது செய்யப்பட்டு உளளார். மேலும் அவர் (02 ம் தேதி) கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து விளம்பர உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்பற்ற நகராட்சி கமிஷனர்'நோட்டீஸ்' கொடுத்த கலெக்டர்


விளம்பர பலகை சரிந்து மூவர் உயிரிழந்த தகவல், கோவை கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக, கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் முத்துசாமி விளக்கம் கேட்டபோது, 'சம்பவம் நடந்த இடம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தது அல்ல; திருப்பூர் பகுதி' என, அலட்சியமாக பதிலளித்திருக்கிறார்.சம்பவ இடம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தது என கருமத்தம்பட்டி போலீசார் உறுதிப்பட கூறியதும், கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணனை தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டது. அவரும், 'நாங்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருக்கிறோம். கோவை மாவட்ட எல்லையில், அனுமதியின்றி புதிதாக அமைத்த விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்' என, தெரிவித்தார்.

கோபமடைந்த கலெக்டர், கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனரை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். மேலும், 'விளம்பர பலகைகளை அகற்றச் சொல்லி, பலமுறை எச்சரிக்கை செய்தும் இதுவரை எடுக்காமல் இருந்தது ஏன்' என, விளக்கம் கேட்டு, நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.

புதுப்பாலம் பிரிவில் இருந்து வெள்ளாண்டிபாளையம் செல்லும் வழியில், 70 அடி உயரத்துக்கும் அதிகமாக விளம்பர பலகை வைக்கும் பணி ஒரு வாரமாக நடந்தது. நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. விளம்பர பலகை வளைந்து கீழே சரிந்தது. அருகில் இருந்த உயரழுத்த மின் அழுத்த கம்பியில் உரசியதால், சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் தடைபட்டது. இனியும் இதுபோன்று விளம்பர பலகைகள் வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. இவ்விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சிவகுமார்,வெள்ளாண்டிபாளையம், கோவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 1:25 am

மயிலாடுதுறை: மர்மமாக இறந்துகிடந்த இருவர்... `டாஸ்மாக் மதுவே காரணம்' - குற்றம்சாட்டும் உறவினர்கள்!



மயிலாடுதுறை அருகே இரும்பு பட்டறை ஒன்றில் மர்மமான முறையில் இரண்டு பேர் உயிரிழந்துகிடந்த நிலையில், அவர்கள் அருகே குடித்த காலி மதுப்பாட்டில் ஒன்றும், மூடி திறக்காமல் மதுவுடன் இருந்த குவார்ட்டர் பாட்டில் ஒன்றும் இருந்திருக்கின்றன. டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே இருவர் இறப்புக்கும் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிகுருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலைப் பார்த்து வந்தார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றவர்கள், சிறிது நேரத்திலேயே பட்டறைக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பழனிகுருநாதன், பூராசாமி ஆகிய இருவரும் கடைக்குள் மயங்கிக் கிடந்திருக்கின்றனர். அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பார்த்தபோது, அவர்கள் மயங்கிக் கிடந்த இடத்துக்கு அருகில் காலி குவார்ட்டர் பாட்டில் ஒன்றும், மூடி திறக்காத குவார்ட்டர் மது பாட்டில் ஒன்றும் இருந்திருக்கின்றன.

அதையடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த இறந்தவர்களின் உறவினர்கள், ``டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்ததாலேயே இருவரும் இறந்திருக்கின்றனர். அவர்களின் இறப்புக்குக் காரணம் டாஸ்மாக் மதுதான்" எனக் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்ததுடன், டி.எஸ்.பி சஞ்ஜீவ் குமார் தலைமையில் இரும்பு பட்டறையிலிருந்த மதுப்பாட்டிலையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் பேசுகையில், ``இரண்டு பேரின் குடும்பத்திலும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களின் உடம்பில் நோய் பாதிப்பு எதுவும் இல்லை. வேலை முடிந்த பிறகு டாஸ்மாக் பாரில் மது வாங்கிக் குடிப்பது அவர்களது வழக்கம்.

வீட்டு வாசலில் உட்கார்ந்து எல்லோரிடமும் சந்தோஷமாகப் பேசிவிட்டுப் பட்டறைக்குச் சென்றவர்கள் இறந்துகிடந்திருக்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு பேரும் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்திருக்கின்றனர். அந்த மதுவில்தான் ஏதோ பாய்சன் இருந்திருக்கிறது. அதுவே இரண்டு பேர் இறப்புக்கும் காரணம். போலீஸார் இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் மறைப்பது, எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது" என்றனர்.

தஞ்சாவூரில் அரசு டாஸ்மாக் கடை அருகே இருந்த அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில், கடை திறப்பதற்கு முன்பு மது வாங்கிக் குடித்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு மதுவில் சயனைடு கலந்திருந்தே காரணம் எனச் சொல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இரண்டு பேரின் இறப்புகான காரணத்தை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்துவிட்டு, இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மதுவில் பாய்சன் இருந்ததே அவர்களின் இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தரப்பில், ``விசாரணை முடிவில்தான் இரண்டு பேரின் இறப்புக்கான காரணம் என்னவென்று முழுமையாகத் தெரியவரும்" என்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 1:27 am

ஜனாதிபதி வரவில்லை: கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கும் ஸ்டாலின்



சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ரூ.240 கோடியில் செலவில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில், 1,000 படுக்கை வசதியுடன் தயாராக உள்ளது. கடந்த 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது.

ஆனால், திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதால், அவரால் இந்நிகழ்வுக்கு வர இயலாது என்று ரத்து செய்யப்பட்டது.

மேலும், வேறு ஒரு தேதியில் குடியரசு தலைவர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினே திறந்து வைப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 23, 2023 6:28 pm

இளைஞரை ஓட ஓட துரத்திய திருநங்கைகள்: திருவண்ணாமலையில் பரபரப்பு



திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் அரை நிர்வாணத்தில் ஓடினார். அவரை திருநங்கைகள் சூழ்ந்துகொண்டு உருட்டுக் கட்டையால் தாக்கினார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நடந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின்பேரில் போலீசார் விரைந்துவந்து திருநங்கைகளிடம் தர்ம அடி வாங்கிய இளைஞரை மீட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் கஞ்சா வியாபாரியான விக்னேஷ் என்பது தெரியவந்தது. கஞ்சா வியாபாரியான விக்னேஷ் அங்குள்ள திருநங்கைகளிடம் பழகிவந்துள்ளார்.

இந்த நிலையில் சுஜாதா என்ற திருநங்கையிடம் காசு கேட்டு நச்சரித்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார். அவரை மற்ற திருநங்கைகள் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருநங்கைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழக செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக