by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
DMK Files - திமுக கோப்புகள்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலையும், வெளியிட்டார்.
இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:
ஜெகத்ரட்சகன்
₹.50 ஆயிரத்து ,219.37 கோடி
எ.வ.வேலு
₹.5,442.39 கோடி
கே.என்.நேரு
₹.2,495.14 கோடி
கனிமொழி
₹.830.33 கோடி
கலாநிதிமாறன்
₹.12,450 கோடி
டிஆர் பாலு
₹.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
₹.579.58 கோடி
கலாநிதி வீராசாமி
₹.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி
₹.581.20 கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு
₹.1,408.94 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
₹.1,023.22 கோடி
உதயநிதி
₹.2,039 கோடி
சபரீசன்
₹.902.46 கோடி
மொத்தம் ₹.1,343,170,000,000 (₹.1,34,317 கோடி)
மாணிக்கம் நடேசன் and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
திமுக சொத்து பட்டியல் தொடர்பாக சிபிஐ-யில் புகார் அளிக்க உள்ளேன்: அண்ணாமலை
திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அடுத்த வாரம் சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன் என்று பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த வாரம் சிபிஐயிடம் புகார் அளிக்க உள்ளேன். சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.
திமுகவைச் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்பட போவதில்லை. நான் குற்றஞ்சாட்டிய நிறுவனங்கள் எதுவும் என்னுடையதல்ல என திமுகவைச் சார்ந்த எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம். 100 ஆண்டு வாழப் போவதில்லை இன்றோ, நாளையோ மரணம் தழுவுவது உறுதி, எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக அமைச்சா்கள், நிா்வாகிகளின் சொத்து, ஊழல் பட்டியல் ஏப். 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்தப் பட்டியலை அவர் நேற்று வெளியிட்டார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அண்ணாமலை அறிவிப்பால் அ.தி.மு.க., அதிர்ச்சி
அ.தி.மு.க., - பா.ஜ., இடையிலான கூட்டணியில், அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வரும் நிலையில், 'தமிழகத்தை ஆண்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அனைவருடைய ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியது, அ.தி.மு.க., தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இரு கட்சிகளும் தனித்து களம் இறங்கின.
அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியது. இதை பழனிசாமி தரப்பு விரும்பவில்லை.
இது, இரு கட்சிகள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இரு கட்சியினரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்திய நிலையில், இரு கட்சியிலும் கூட்டணியை விரும்புவோர், மோதலை சரி கட்டினர். எனினும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க., தலைவர்களுக்கும் இடையே, உறவு சரியாக இல்லாத நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று, தி.மு.க., தலைவர்களின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்களை வெளியிட்ட அண்ணாமலை, 'லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த, அத்தனை கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்' என்றார்.
அ.தி.மு.க., பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், தமிழகத்தை ஆண்ட கட்சிகளில், தவறு செய்தவர்கள் சொத்து பட்டியல், ஊழல் விபரம் வெளியிடப்படும் என, அண்ணாமலை அறிவித்திருப்பது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழகத்தில், ௫ வயது சிறுமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், மற்ற வயதுள்ள பெண்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்? பெண் காவலரை, தி.மு.க., இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், பாலியல் ரீதியாக சீண்டியதும், திராவிட மாடல் ஆட்சியில் தானே.
'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், மனித குலத்திற்கே அவமானச் சின்னம். அப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம்' என்கிறார் முதல்வர்.
முதல்வரின் எச்சரிக்கையை, தி.மு.க., பிரகஸ்பதிகள், கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதற்கு சரியான உதாரணம், விருத்தாசலம் சம்பவம்.
தவறு செய்த, தி.மு.க.,வினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதால் மட்டும், பரிகாரம் தேடி விட்டதாக எண்ண முடியாது... தி.மு.க., அமைச்சர்களே, அடிதடியில், கல் வீச்சில் இறங்கும் போது, சாதாரண வார்டு கவுன்சிலர், அடாவடியில் ஈடுபடுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை!
தி.மு.க., கவுன்சிலரால், ௫ வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு, எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் பலன் தரப் போவதில்லை. அந்தச் சிறுமி வடித்த கண்ணீரும், பட்ட வேதனையும், தி.மு.க., மாடல் அரசுக்கு விடுத்த எச்சரிக்கை மணியாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அன்று மதுரையில், முன்னாள் பிரதமர் இந்திராவை, தி.மு.க., ரவுடிகள் கொடூரமான முறையில், ரத்தம் சிந்தும் வகையில் தாக்கியதை, இப்போதும் யாராலும் மறக்க முடியாது. வயது வித்தியாசம் பாராமல், பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதில், திராவிடச் செம்மல்கள் கைதேர்ந்தவர்கள் என்பதையே, தமிழகத்தில் நடக்கும் பாலியல் கொடுமைகள் கட்டியம் கூறுகின்றன.
தி.மு.க., அமைச்சர்களும், நிர்வாகிகளும் கூட்டும் ஏழரைகளால், தன் துாக்கத்தை இழந்து தவிக்கும் முதல்வர் ஸ்டாலின், சிறுமியருக்கு, தி.மு.க.,வினர் கொடுக்கும் பாலியல் தொல்லைகளை கேட்டு, இன்னும் எத்தனை நாட்களுக்கு துாக்கமின்றி தவிக்கப் போகிறாரோ... பாவம்!'
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
காரணம் தமிழக பிரதான ஊடகங்கள் பல தங்கள் ஊழலை மறைக்க பல அரசியல்வாதிகளால் நடத்தபடுபவை அவை அப்படித்தான் இருக்கும்
மக்களும் இதனால் அந்த ஊடகங்களில் விளம்பரம், சினிமா, சீரியல் என்பதோடு நிறுத்துகின்றார்கள், மனது கனத்திருந்தால் அந்த டிவிக்களை பார்த்து சிரிக்கின்றார்கள்
உதாரணத்துக்கு அண்ணாமலை அந்த பரபரப்பு அறிக்கையினை தரும்போது சில ஊடகங்களில் ஊறூகாய் செய்வது எப்படி என சீரியசாக விளக்கி கொண்டிருந்தார்கள், சில ஊடகங்கள் ஆன்மீகம் பேசிகொண்டிருந்தன, சில ஊடகம் கோலம்போடுவது எப்படி என சொல்லிகொண்டிருந்தன
இதனால் மக்கள் வாய்விட்டு சிரித்தார்கள், இவ்வளவுதான் தமிழக ஊடகங்கள்
திமுகவினர் பலர் மேல் அண்ணாமலை கைகாட்டிய நிலையில் அவர்கள் வாயே திறக்கவில்லை மாறாக அந்த பட்டியலில் இல்லா ஆர்.எஸ் பாரதி மட்டும் குதித்துகொண்டிருந்தார்
அதற்கும் காரணமிருக்கலாம்
தனக்கு பின் அரசியலுக்கு வந்த உதயநிதி, அன்பில் மகேஷ் , துரைமுருகன் பையனுக்கெல்லாம் பல்லாயிரம் கோடி சொத்து அறிவிக்கபட்ட நிலையில் நீண்டகால தொண்டரான தனக்கு அப்படி சொத்து இல்லையே எனும் ஏக்கத்தில் சீறியிருக்கலாம்
தன் கட்சியினை பழிவாங்க அவர் இன்னும் பல விஷயங்களை செய்யலாம்
அண்ணாமலை இந்த பட்டியலை ஊழல் பட்டியல் என சொல்லவில்லை மாறாக திமுகவினர் குவித்த இமாலய சொத்தும் அதற்கான மூலபணம் எங்கிருந்து வந்தது எனும் கேள்வி ஒன்றையே அவர் எழுப்பியிருக்கின்றார்
அந்த அந்நிய நிதி 200 கோடி ஸ்டாலினுக்கு கொடுக்கபட்டதுதான் விஷயம்
இதுபற்றி வாய்திறக்க வேண்டியவர் ப.சிதம்பரம், காரணம் அன்றைய மத்திய நிதி அமைச்சராக அவர் சம்பந்தபட்ட விவகாரம் இது
ஆக விவகாரம் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வெடிவைக்கும் நோக்கிலும் செல்கின்றது, காங்கிரசார் இதனாலேதான் மகா அமைதி
அண்ணமலையின் அறிக்கை எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்பதெல்லாம் அரசியல் அறிவற்றவர்க்கள் சொல்வது
அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இதன் வீரியம் அதிகம், ஓசைபடாமல் சுனாமி போல அது தாக்கும் போதுதான் விஷயம் தெரியும்
அதுவரை கடல் பதுங்கிவிட்டது வற்றிவிட்டது என கடலோரம் விளையாடுபவர்கள் ஆடட்டும், அவர்களை நினைத்து பரிதாபடுவதைவிட ஒன்றும் செய்யமுடியாது
#பிரம்ம_ரிஷியார்
திமுக நிர்வாகிகள் மீது அவதூறு குற்றச்சாட்டு: அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு
பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
திமுக ஊழல் பட்டியலை ஏப்ரல் -14ம் தேதி அறிவிக்கப்போவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி திமுக நிர்வாகிகள் சிலரது சொத்து மதிப்பை வெளியிட்டு, இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இது திமுகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அடுத்த வாரம் சிபிஐ இடம் புகார் அளிக்க உள்ளேன். திமுகவைச் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்படப் போவதில்லை. இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிடத் தயாராக இருக்கிறோம்’’ எனத் தெரிவித்து இருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில், "திமுக நிர்வாகிகள் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இழப்பீட்டுத் தொகையாக அண்ணாமலை ரூ.500 கோடி வழங்க வேண்டும். 48 மணி நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்’’ என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'எங்களுக்கு யாரும் பங்காளிகள் கிடையாது; ஊழல் என்று வந்துவிட்டால் எல்லோரும் பகையாளிகள்தான்'
திருச்சி: 'எங்களுக்கு யாரும் பங்காளிகள் கிடையாது; ஊழல் என்று வந்துவிட்டால் எல்லோரும் பகையாளிகள்தான்' - அண்ணாமலை பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ஊழல் என்று வந்துவிட்டால் நண்பர்கள், அண்ணன் - தம்பி என்றெல்லாம் பார்க்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட ஊழல் பட்டியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன்.எங்களுக்கு இங்கே யாரும் பங்காளிகள் கிடையாது.எங்களுக்கு எல்லோருமே பகையாளிகள்தான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பா.ஜ.க. பகையாளிகளாகத்தான் பார்க்கும்.
147 தான் என்னுடைய கைக்கடிகாரத்தின் சீரியல் நம்பர். மேடையில் படிக்கும் போது உடனே படித்துவிட்டேன். தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை நான் வெளியிட்டேன். ஆனால் எனக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.கவினர் இதுவரை ஒருவர் கூடச் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 150 நிறுவனங்களை நாங்கள் சொல்லி உள்ளோம். நான் ஓனர் இல்லை என்று யாரும் சொல்லவில்லை.
அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினும் நோபில் ஸ்டீலில் நேரடியாக உள்ளனர். நோபல் ஸ்டீல் கம்பேனியின் இயக்குநராக இல்லை என்று உதயநிதி இதுவரை கூறவில்லை. மணி லாண்டரிங் செய்து முதல்வர் ஆயிரம் கோடி கொண்டு வந்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ.யிடம் புகார் செய்ய உள்ளோம்
டெக்னிக்கல் ஆடிட்டிங் தான் நாங்கள் கேட்பது. பழைய ஜாதகம் அல்ல. நான் இது வரை எந்த பணமும் கொள்ளையடிக்கவில்லை. இங்கு ஒவ்வொரு அமைச்சர்களும் 10 உதவியாளர்கள் வைத்திருக்கிறார்கள். 100 வேலை ஆட்களை வைத்து பணி செய்கின்றனர். அவர்களுக்குச் சம்பளம் எப்படி வழங்குகிறார்கள் ? என்னுடைய வங்கி ஸ்டேட்மெண்ட்டை 12 வருடமாக ஓப்பனாக நான் கொடுத்துள்ளேன். என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கும் சம்பளம் நண்பர்கள் தான் கொடுக்கின்றனர்.
2024 பாராளுமன்ற தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்துத்தான் இருக்கும். அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும்" என்றார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கூட்டணி இல்லை என்றால் கொத்தித்தவர்களில் ஒருவர் கூட இந்த திமுகவின் சொத்துகுவிப்பு விவகாரத்தில் வாயே திறக்கவில்லை
என்னவாக இருக்கலாம்
ஒருவேளை அண்ணாமலை 3ம் பாகம் வீடியோ வெளியிட்டால் அதில் இவர்கள்தான் இருப்பார்களோ என்னவோ? அந்த பயம் நிச்சயம் இருக்கலாம்
ஆக, இவ்வளவு காலம் கூட்டணி வச்சி.. ஹே ஹேஹ்ஹே ஹேஹே...... "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..." |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
‘அதிமுக கூட்டணியிதான் இன்னும் பாஜக உள்ளது’ - ஜெயக்குமார்.
- இது என்னமாதிரி நகைச்சுவை?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian wrote:அண்ணாமலை சொல்வதற்கு எல்லாம் பதில் கூறவேண்டியதில்லை! - எடப்பாடி.
‘அதிமுக கூட்டணியிதான் இன்னும் பாஜக உள்ளது’ - ஜெயக்குமார்.
- இது என்னமாதிரி நகைச்சுவை?
இதுபோன்ற பேச்சுக்கள் ஒரு மனிதனை உளவியல் ரீதியாக வீழ்த்தும் ஆயுதம். ஆனால் இந்த திராவிட தந்திரங்களை கரைத்துக் குடித்தவர் அண்ணாமலை என்பதை இன்னும் அறியாமல் பிதற்றுகிறார்கள்...
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள்(1.09GB)- தரைவிறக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்