புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.
இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.
அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.
நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.
இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.
அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.
நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள் என்னென்ன?
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துவரும் நிலையில் நீரழிவு நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டை மட்டும் மேற்கொண்டால் அந்த நோயிலிருந்து விடுபட்டு விடலாம் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ வாழைத்தண்டு நெல்லிக்காய் வெந்தயம், பாகற்காய் கோவக்காய் கீரை வகைகள் ஆகியவற்றை உணவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்
மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவில் வறுத்து எடுத்து பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வெண்ணீரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் நடைப்பயிற்சி சைக்கிள் நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழ பழகிக் கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
பல் பாதிப்பு ஏற்படுமா?
பல் பாதிப்பு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் அதன் காரணமாக பல் நோய் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்தாலும் கூடினாலும் பிரச்சனை தான் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்துக்கொண்டால் பல் நோய் உட்பட எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த தவறினால் பல்லில் உள்ள கிருமிகள் காரணமாக பல்நோய் வரும் என்பதும் எனவே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சர்க்கரை நோயாளிகள் தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
முழுவதுமாக குணமடைய முடியுமா?
சர்க்கரை நோய் வந்தவர்கள் ஆயுள் முழுவதும் அந்த நோய்க்கு சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பிரபல மருத்துவர் ஒருவர் சர்க்கரை நோய் குறித்த இந்த சந்தேகத்தை தீர்த்து உள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் முழுவதுமாக குணமாவது என்பது மிகவும் குறைந்த அளவே சாத்தியம் என்றும் சர்க்கரை நோயின் தன்மையை குறைத்து கொண்டு இருக்கலாமே தவிர முழுவதுமாக குணமாக வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இன்சுலின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் செயல்படாத தன்மை காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் என 2 வகை சர்க்கரை நோய் இருப்பதாகவும் இதில் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு நேரம் தவறாமல் சாப்பிடுதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் சர்க்கரை நோயை குறைக்க முடியுமே தவிர முழுவதுமாக குணமாவது என்பது வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?
சர்க்கரை நோய் என்பது கிட்டத்தட்ட இந்தியர்கள் அனைவருக்குமே வந்து விட்டது என்பதும் ஏராளனாப மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சர்க்கரை என்பது நோய் அல்ல என்றும் அது ஒரு குறைபாடு தான் என்றும் உணவு பழக்கவழக்கம் மற்றும் ரெகுலரான உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை வென்று விடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
1. காலை உணவு மிக மிக அவசியம். நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை காலை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்
2. நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
3. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். தினசரி காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.
4. அடிக்கடி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பிஸ்தா சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டால் பிரச்சினை வரும் என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு சத்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பாதாம், பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்றும் குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் பசி உணர்வைக் கட்டுபடுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும் தன்மை அதற்கு உள்ளது என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தா சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 கிராம் வரை தினமும் பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தாவை எடுத்துக்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை விட ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது மிகவும் ஆபத்தானது. எனவே சர்க்கரையின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது
உடல் சோர்வு அடிக்கடி சிறுநீர் கழித்தல் உள்பட ஒருசில அறிகுறிகள் சர்க்கரை அதிகரித்ததன் அறிகுறி என்றால் சர்க்கரை நோய் குறைவதற்கான அறிகுறிகள் சரியாக உணவு உண்ணாமல் இருத்தல் புரதச் சத்து இல்லாத உணவை உண்ணுதல் இன்சுலின் போட்டுவிட்டு சாப்பிடாமல் இருத்தல் ஆகியவை காரணங்களாக உள்ளன
இந்த நிலையில் திடீரென சர்க்கரை குறைந்ததாக தெரிந்தால் உடனடியாக இனிப்பு வகை ஏதாவது சாப்பிடவேண்டும். சாக்லேட் அல்லது மிட்டாய்களை உடனடியாக சாப்பிடலாம் அல்லது ஜூஸ் அருந்தினால் சக்கரை அளவு ஓரளவு அதிகரிக்கும்
சர்க்கரையின் அளவு குறைந்தால் சிலருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சர்க்கரை நோய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அவ்வப்போது மருத்துவரிடம் சென்று சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
பச்சை வாழைப்பழம் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டாலும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பச்சை வாழைப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கும் நிலையில் பச்சை வாழைப்பழம் வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது என்றும் அது மட்டுமின்றி உடலில் சுரக்கும் அமிலங்கள் காரணமாக ஏற்படும் குடல் புண் அல்சர் ஆகியவற்றை தீர்த்து வைக்கும் என்று கூறப்படுகிறது
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பச்சை வாழைப்பழங்களை சாப்பிடலாம் என்றும் அதில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்றும் அதில் அதிக ஆற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது
சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?
உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை பொறுத்துதான் வருகிறது.
உடல் உழைப்பு அதிகம் இருந்த நம் முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் சாதத்தை வடித்து சாப்பிடுவதோடு அதில் செய்யப்படும் கஞ்சியையும் உண்டு வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் குக்கரில் செய்யப்படும் உணவில் ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது. இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குளுக்கோஸை அதிகமாக்கிவிடுகிறது.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும். ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.
கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.
சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும். பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது. வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.
முக்கியமாக சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதை அறிவது அவசியமாகும்.
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் ஆவாரம் பூ
“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது.
எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.
இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.
நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.
சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும்.
நீரிழிவையும் இதயநோயையும் தரும் “பரோட்டா”
பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன
Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிபிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
உலக அளவில் ஆறில் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக உடல் பருமனாகும் ஆபத்திருப்பதாக சர்வதேச மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய அதிகப்படியான உடல்பருமன் காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் முதல், டயபடீஸ் எனப்படும் ஆயுள் முழுவதும் நீடிக்கும். நீரிழிவுநோய் வரை பல்வேறு வகையான நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே உலக அளவில், குறிப்பாக பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும், இந்தியா போன்ற வேகமாக பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த அதிகரித்த உடல்பருமன் என்பது மிகப்பெரும் சுகாதார பிரச்சனையாக மாறிவருகிறது. இந்த அதிகரித்த உடல்பருமன் என்பதன் பின்னணியில் மரபணுக்காரணிகள் இருப்பதாக ஏற்கெனவே சில ஆய்வாளர்கள் தெரித்துள்ளனர். எப்டிஓ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குறிப்பிட்ட மரபணுவின் சில ரகங்கள் இருப்பவர்களுக்கு மற்றவர்களைவிட வயிறு பெரிதாக இருப்பதாக ஏற்கெனவே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இருக்கும் ஆய்வாளர்கள் இந்த தொடர்புக்கான காரணியை கண்டறிந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மனிதர்களின் பசியைத்தூண்டும் நொதிமத்தின் பெயர் க்ரெலின். பசியைத்தூண்டும் இந்த க்ரெலின் என்கிற நொதிமத்தை இந்த எப்டிஓ என்கிற மரபணுக்கள் சிலருக்கு அதிகம் சுரப்பது தான் அவர்களை அதிகம் சாப்பிடத் தூண்டுவதாகவும், அதன் விளைவாக அவர்கள் அதிக பருமனும் உடல் எடையும் உள்ளவர்களாக மாறுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்கள் அனைவரிடமுமே இந்த எப்டிஓ மரபணுக்கள் இருக்கின்றன. மனிதக் கரு உருவாகும்போது தந்தையிடமிருந்து ஒரு பகுதி எப்டிஓ மரபணுவும் தாயிடமிருந்து ஒருபகுதி எப்டிஓ மரபணுவும் குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது.
இதில் ஏதாவது ஒருபகுதி எப்டிஓ மரபணுவில் குறைபாடு இருந்தால் பெரிய பிரச்சனையில்லை. ஒருவேளை தாய் தந்தையிடமிருந்து குழந்தைக்கு அளிக்கப்படும் இரண்டு எப்டிஓ மரபணுக்களின் பகுதிகளுமே குறைபாடு உடையவையாக இருந்தால் இரண்டு குறைபாடுடைய எப்டிஓ மரபணுவின் பகுதிகளுடன் பிறக்கும் குழந்தைக்கு இயற்கையிலேயே பசியைத்தூண்டும் க்ரெலின் நொதிமம் அதிகம் சுரக்கும் என்பதால் அந்த குழந்தைகள் கூடுதலாக சாப்பிடக்கூடிய இயல்புடன் இருக்கும் என்றும் இதுவே பிற்காலத்தில் அதிக உடல் எடை பிரச்சனையாக மாறும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு பசியைத்தூண்டும் நொதிமமான க்ரெலின் சுரப்பை குறைக்கவல்ல புரோட்டீன் சத்து அதிகம் இருக்கும் உணவுகள் சாப்பிடக் கொடுப்பது அவர்களின் உடல் எடையை குறைக்க உதவும் என்றும் இவர்கள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறும் சென்னையில் இருக்கும் மருத்துவ நிபுணர் கவுசல்யாநாதன், புரதச்சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதன் மூலம் தேவைக்கதிகமான உடல்பருமனுடன் இருப்பதை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|