புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
by ayyasamy ram Today at 9:33 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
TI Buhari |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
manikavi |
| |||
ரேவதி2023 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
TI Buhari |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.
இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.
இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் என்ன நடக்கும்? மக்கள் வைத்திருக்கும் ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை என்ன செய்வது?
பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.
செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபருக்கு பிறகு செல்லாது - ஆர்பிஐ இதற்கு சொல்லும் விளக்கம் என்ன?
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செலுத்த பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கவும், அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும்/அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா?
ஆமாம். ஒரே நேரத்தில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ₹20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ஆர்ஓக்கள்) உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும்.
2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரையிலான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.
₹2000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?
ஆமாம். ₹2000 ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?
ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ₹2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம்.
கணக்குகளில் டெபாசிட் செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டபூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.
மாற்றக்கூடிய ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு செயல்பாட்டு வரம்பு உள்ளதா?
பொதுமக்கள் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக பரிவர்த்தனைகள் (BCs) மூலம் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?
ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ₹4000/- என்ற வரம்பு வரை பரிவர்த்தனை செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?
ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23, 2023 முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கியின் கிளைகளில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹20,000/- வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக ₹20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். ₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.
ரூ. 2000 டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இது முற்றிலும் இவலசமாக வழங்கப்படும் சேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவரால் உடனடியாக ₹2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு வங்கி ₹2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார்தாரர் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் (RB) கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் இந்த புகார் பக்கம் உள்ளது.
பணமதிப்பிழப்புக்கு பிறகு அறிமுகமான ரூ. 2000 நோட்டுகள்
2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த அடுத்த சில மாதங்களில், அதாவது 2016, நவம்பர் மாதம் 8ஆம் தேதி, திடீரென ஒரு நாள் இரவு பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சியில் தோன்றி இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கையை பணப்பிழப்பு அறிவிப்பு என்று அழைக்கப்பட்டது.
மேலும், பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் 500 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் பல ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் 2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று 2021ஆம் ஆண்டில் அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் ஆக இருந்த அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.
இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.
இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சில கேள்விகளும் பதில்களும்
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் என்ன நடக்கும்? மக்கள் வைத்திருக்கும் ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை என்ன செய்வது?
பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.
செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபருக்கு பிறகு செல்லாது - ஆர்பிஐ இதற்கு சொல்லும் விளக்கம் என்ன?
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செலுத்த பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கவும், அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும்/அல்லது மாற்றும் வசதியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ளதா?
ஆமாம். ஒரே நேரத்தில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ₹20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ஆர்ஓக்கள்) உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும்.
2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் செப்டம்பர் 30, 2023 வரையிலான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.
₹2000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலை நீடிக்குமா?
ஆமாம். ₹2000 ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை சாதாரண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாமா?
ஆம். பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ₹2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அவற்றைப் பணமாக பெறலாம். இருப்பினும், செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும்/அல்லது மாற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மக்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம்.
கணக்குகளில் டெபாசிட் செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்.
₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டபூர்வ / ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.
மாற்றக்கூடிய ₹2000 ரூபாய் நோட்டுகளுக்கு செயல்பாட்டு வரம்பு உள்ளதா?
பொதுமக்கள் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக பரிவர்த்தனைகள் (BCs) மூலம் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?
ஆம், கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ₹4000/- என்ற வரம்பு வரை பரிவர்த்தனை செய்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
எந்த தேதியிலிருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?
ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23, 2023 முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கியின் கிளைகளில் இருந்து ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவர் அல்லாதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹20,000/- வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக ₹20,000/-க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். ₹2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த டெபாசிட்டுகளுக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.
ரூ. 2000 டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இது முற்றிலும் இவலசமாக வழங்கப்படும் சேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்ய முற்படும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவரால் உடனடியாக ₹2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு வங்கி ₹2000 ரூபாய் நோட்டை மாற்ற / டெபாசிட் செய்ய மறுத்தால் என்ன நடக்கும்?
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர் / பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி அளித்த பதில்/தீர்மானத்தில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றாலோ, புகார்தாரர் ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த மத்தியஸ்தர் திட்டத்தின் (RB) கீழ் புகார் அளிக்கலாம். புகார் மேலாண்மை அமைப்பு இணையதளமான cms.rbi.org.in என்ற முகவரியில் இந்த புகார் பக்கம் உள்ளது.
பணமதிப்பிழப்புக்கு பிறகு அறிமுகமான ரூ. 2000 நோட்டுகள்
2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த அடுத்த சில மாதங்களில், அதாவது 2016, நவம்பர் மாதம் 8ஆம் தேதி, திடீரென ஒரு நாள் இரவு பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சியில் தோன்றி இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கையை பணப்பிழப்பு அறிவிப்பு என்று அழைக்கப்பட்டது.
மேலும், பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் 500 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் பல ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளில் 2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று 2021ஆம் ஆண்டில் அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் ஆக இருந்த அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
பிபிசி
’2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவது ஏன்?’-அண்ணாமலை விளக்கம்
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவது ஏன்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.70 லட்சம் கோடியாக இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, தற்போது ரூ.3.60 லட்சம் கோடியாக மாறியுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் புழக்கம் தற்போது மிகக் குறைவாக இருக்கிறது. தற்போது முற்றிலுமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இது பண மதிப்பு இழப்பு கிடையாது.
நமது பண பரிவர்த்தனையை, டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற வேண்டும். உலகில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல பிரதமர் முயற்சித்து வருகிறார். தேர்தலின்போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பதுதான் திமுகவின் ஸ்டைல். 2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கட்டி வைத்திருக்கிறார்கள். எனவேதான் முதல்வர் கோபப்படுகிறார்.
கர்நாடகாவில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என கூறியுள்ளனர். கர்நாடகாவில் ஆரம்பமே குழப்பமாகத்தான் இருக்கிறது. சென்னை மெட்ரோ பணியில் நடந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியுள்ளோம். சிபிஐ நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்’’என அவர் தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.2000 வாபஸ் குறித்து, 500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்’’எனத் தெரிவித்து இருந்தார்.
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபப்படுவது ஏன்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.70 லட்சம் கோடியாக இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, தற்போது ரூ.3.60 லட்சம் கோடியாக மாறியுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் புழக்கம் தற்போது மிகக் குறைவாக இருக்கிறது. தற்போது முற்றிலுமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இது பண மதிப்பு இழப்பு கிடையாது.
நமது பண பரிவர்த்தனையை, டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற வேண்டும். உலகில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல பிரதமர் முயற்சித்து வருகிறார். தேர்தலின்போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பதுதான் திமுகவின் ஸ்டைல். 2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கட்டி வைத்திருக்கிறார்கள். எனவேதான் முதல்வர் கோபப்படுகிறார்.
கர்நாடகாவில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என கூறியுள்ளனர். கர்நாடகாவில் ஆரம்பமே குழப்பமாகத்தான் இருக்கிறது. சென்னை மெட்ரோ பணியில் நடந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியுள்ளோம். சிபிஐ நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்’’என அவர் தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.2000 வாபஸ் குறித்து, 500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்’’எனத் தெரிவித்து இருந்தார்.
டாஸ்மாக்கில் வாங்கப்படும் ரூ2000 நோட்டு: தமிழக அரசு குறித்து தமிழிசை விமர்சனம்
மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து கேள்விக்கு.கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும் என்று பதில் சொல்ல மறுப்பு தெரிவித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பை, டாஸ்மக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கிக்கொள்ளுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது சிரித்தபடி கிண்டல் அடித்து பேசியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் யுவா சங்கமம் மேற்குவங்க மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
பிரதமர் முயற்சியினால் கல்வி அமைச்சகம் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகளை இங்கு அனுப்புகின்றனர். இது நல்ல அனுபவமாக இருக்கிறது. தெலுங்கானாவில் கூட நாளை மறுநாள் நான் மாணவர்களை சந்திக்கின்றேன். வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் போது மாநிலத்தை பற்றியும், இங்குள்ள கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்து கொண்டு நாமெல்லாம் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
புதிய கல்வி கொள்கை வகுப்பறையில் இருந்து உலக அரங்கில் மாணவர்களை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு எவ்வளவு நன்றாக படிக்கின்ற மாணவர்கள் இருந்தாலும், உலளவில் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால் உலக அளவில் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. கஸ்தூரி ரங்கன் போன்ற வல்லுநர்களால் பல லட்சம் பேரிடம் இருந்து இதுபோன்ற உணர்வுகளையும், குறிப்புகளையும் வாங்கி பெரிய குழு அமர்ந்து இந்த தேசத்துக்கு என்ன, எப்படி வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துதான் புதிய கல்வி கொள்கையை வரையறை செய்துள்ளனர்.
பல மாநிலங்களோடு நம்மை தொடர்பு படுத்துவதற்கும், நமது தாய்மொழியில் ஆரம்ப கல்வியை பெறுவதற்கும் இந்த புதிய கல்வி கொள்கை தேவைப்படுகிறது. இன்றைக்கு காலை உணவை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சில மாநிலங்கள் சொல்கின்றனர். புதிய கல்வி கொள்கையில் அது இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை நீங்கள் நடைமுறைப்படுத்தும் போது அதில் காலை உணவு குறித்து இருக்கிறது.
அதுபோல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தான் குழந்தைக்கு நல்ல எதிர்ப்பு சக்தி வரும். புதிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது. ஆரம்ப கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும், அப்போது தான் இன்னும் அறிவு வளர்ச்சி வரும் என்கிறது. கல்வித்துறையில் மேலும் பல முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு புதிய கல்வி கொள்கை மிகவும் உதவி கரமாக இருக்கிறது. புதிய கல்வி கொள்கை அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது அல்ல.
கல்வியாளர்களால் பலரின் கருத்துக்களை வாங்கி ஏற்படுத்தப்பட்டது. அதனால் இதன் நல்லவற்றை எடுத்து மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை. கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதில் கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும்.
நல்ல முயற்சிக்காகத்தான் எல்லாம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பை, டாஸ்மக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கிக்கொள்ளுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது. என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து கேள்விக்கு.கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும் என்று பதில் சொல்ல மறுப்பு தெரிவித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பை, டாஸ்மக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கிக்கொள்ளுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது சிரித்தபடி கிண்டல் அடித்து பேசியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் யுவா சங்கமம் மேற்குவங்க மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
பிரதமர் முயற்சியினால் கல்வி அமைச்சகம் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகளை இங்கு அனுப்புகின்றனர். இது நல்ல அனுபவமாக இருக்கிறது. தெலுங்கானாவில் கூட நாளை மறுநாள் நான் மாணவர்களை சந்திக்கின்றேன். வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் போது மாநிலத்தை பற்றியும், இங்குள்ள கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்து கொண்டு நாமெல்லாம் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
புதிய கல்வி கொள்கை வகுப்பறையில் இருந்து உலக அரங்கில் மாணவர்களை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு எவ்வளவு நன்றாக படிக்கின்ற மாணவர்கள் இருந்தாலும், உலளவில் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால் உலக அளவில் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. கஸ்தூரி ரங்கன் போன்ற வல்லுநர்களால் பல லட்சம் பேரிடம் இருந்து இதுபோன்ற உணர்வுகளையும், குறிப்புகளையும் வாங்கி பெரிய குழு அமர்ந்து இந்த தேசத்துக்கு என்ன, எப்படி வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துதான் புதிய கல்வி கொள்கையை வரையறை செய்துள்ளனர்.
பல மாநிலங்களோடு நம்மை தொடர்பு படுத்துவதற்கும், நமது தாய்மொழியில் ஆரம்ப கல்வியை பெறுவதற்கும் இந்த புதிய கல்வி கொள்கை தேவைப்படுகிறது. இன்றைக்கு காலை உணவை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சில மாநிலங்கள் சொல்கின்றனர். புதிய கல்வி கொள்கையில் அது இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை நீங்கள் நடைமுறைப்படுத்தும் போது அதில் காலை உணவு குறித்து இருக்கிறது.
அதுபோல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தான் குழந்தைக்கு நல்ல எதிர்ப்பு சக்தி வரும். புதிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது. ஆரம்ப கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும், அப்போது தான் இன்னும் அறிவு வளர்ச்சி வரும் என்கிறது. கல்வித்துறையில் மேலும் பல முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு புதிய கல்வி கொள்கை மிகவும் உதவி கரமாக இருக்கிறது. புதிய கல்வி கொள்கை அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டது அல்ல.
கல்வியாளர்களால் பலரின் கருத்துக்களை வாங்கி ஏற்படுத்தப்பட்டது. அதனால் இதன் நல்லவற்றை எடுத்து மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை. கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதில் கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும்.
நல்ல முயற்சிக்காகத்தான் எல்லாம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பை, டாஸ்மக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கிக்கொள்ளுவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது. என தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுவை அளவாக குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு பயக்காது: சேலம் ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மது தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த வாரம் கள்ளச் சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கியது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மதுபானம் தொடர்பாக பேசியது சர்ச்சையாகி உள்ளது . அவர் பேசியதாவது, ” கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும். டாஸ்மாக்கில் முறைபடுத்தப்பட்ட நேரத்தில் விற்பனை நடக்கிறது என்றால், அங்கே கிடைக்கும் மது ஒரு வகையான செயல்முறைக்கு உற்படுத்தப்பட்ட மது. இதனால் டாஸ்மாக்கில் கிடைக்கும் மதுவை அளவாக குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது. இதுபோல விழிப்புணர்வு இல்லாமல் தவறான வழியில் சென்று, தனக்கும் தனது குடும்பத்திற்கும், அரசுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளத்தில், மாவட்ட ஆட்சியரின் கருத்தை பதிவு செய்து, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மது தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த வாரம் கள்ளச் சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கியது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மதுபானம் தொடர்பாக பேசியது சர்ச்சையாகி உள்ளது . அவர் பேசியதாவது, ” கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும். டாஸ்மாக்கில் முறைபடுத்தப்பட்ட நேரத்தில் விற்பனை நடக்கிறது என்றால், அங்கே கிடைக்கும் மது ஒரு வகையான செயல்முறைக்கு உற்படுத்தப்பட்ட மது. இதனால் டாஸ்மாக்கில் கிடைக்கும் மதுவை அளவாக குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது. இதுபோல விழிப்புணர்வு இல்லாமல் தவறான வழியில் சென்று, தனக்கும் தனது குடும்பத்திற்கும், அரசுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார்.
*டாஸ்மாக் மது உடலுக்கு தீங்கில்லாதது* – சேலம் மாவட்ட ஆட்சியர்.மாவட்ட ஆட்சியர் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். சுத்தம்..விடிஞ்சிரும் pic.twitter.com/c5cYEb49KP — ![]() ![]() |
இந்நிலையில் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளத்தில், மாவட்ட ஆட்சியரின் கருத்தை பதிவு செய்து, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் மது உடலுக்கு தீங்கில்லாதது* – சேலம் மாவட்ட ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்….![]() இனிமேல் சாராய பாட்டிலில் மது உடலுக்கு,வீட்டுக்கு,நாட்டுக்கு தீங்கில்லாதது என்று கூட போடுவார்கள்…. pic.twitter.com/L0Edq88EPZ — karuppusamy.Nk (@KaruppusamyNk) May 20, 2023 |
தமிழக கூட்டுறவு வங்கிகள்- டாஸ்மாக் மூலமாக ரூ 2000 நோட்டுகள்: மத்திய நிதி அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில், “நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரையிலும் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையும் தமிழக மக்கள் முழுமனதாக வரவேற்கிறார்கள். செப்டம்பர் மாதத்துக்கு பின்னரும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவும், விரிவாக ஆராய்ந்து துல்லியமான திட்டமிடல் படி எடுக்கப்படுகிறது. தி.மு.க. அரசியல்வாதிகள் பண மோசடி மற்றும் ஊழல் செய்வதில் புதிய முறைகளை கண்டுபிடிப்பவர்கள்.
இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில், “நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரையிலும் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையும் தமிழக மக்கள் முழுமனதாக வரவேற்கிறார்கள். செப்டம்பர் மாதத்துக்கு பின்னரும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவும், விரிவாக ஆராய்ந்து துல்லியமான திட்டமிடல் படி எடுக்கப்படுகிறது. தி.மு.க. அரசியல்வாதிகள் பண மோசடி மற்றும் ஊழல் செய்வதில் புதிய முறைகளை கண்டுபிடிப்பவர்கள்.
மூத்த அமைச்சர் ஒருவர் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் சம்பாதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். தி.மு.க அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த 2,000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் டாஸ்மாக் மூலமாக மாற்றுவார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே இதுபோன்ற ஆதாரங்கள் மூலமாக அதிகப்படியாக வரும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் உன்னிப்பாக கவனித்து, கண்டுபிடிக்கவேண்டும். இதை கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். |
2,000 ரூபாய் நோட்டின் சிக்கலான வரலாறு: செப்டம்பர் காலக்கெடு குழப்பத்தை அதிகரிப்பது ஏன்?
ரூ.2,000 கரன்சி நோட்டை நிறுத்துவதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு அதன் குறைபாடுள்ள அறிமுகம் மற்றும் அதன் அர்த்தமற்ற இருப்புக்கு முடிவுரையைக் கொண்டுவருகிறது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஒருபுறம், 2000 ரூபாய் நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது, மேலும் இது காலக்கெடுவைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், மற்ற இடங்களில், இந்த நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும் என்று கூறுகிறது.
அக்டோபர் 1ஆம் தேதி ரூ.2000 நோட்டின் நிலை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2000 ரூபாய் நோட்டை மாற்றுவதை ரிசர்வ் வங்கியே நிறுத்தினால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பொதுவெளியில் சட்டப்படி செல்லுமா? பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு ஒருவர் இதை இன்னும் பயன்படுத்த முடியுமா? அதை மக்கள் ஏற்க மறுக்க முடியுமா?
இதில் எதுவுமே உண்மை இல்லை என்றால், காலக்கெடு வைத்து என்ன பயன்?
2000 ரூபாய் நோட்டின் சிக்கலான வரலாற்றின் சுருக்கமான மறுபரிசீலனை இங்கே.
1. ரூ.2000 நோட்டு அறிமுகமானது ஒரு யோசனையாக சுயமுரணாக இருந்தது. பணமதிப்பு நீக்கம் (உயர்மதிப்பு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்) மூலம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரதமர், இந்த உயர் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளில்தான் கறுப்புப் பணமும், பயங்கரவாதத்திற்கான பணமும் அதிகம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த தர்க்கத்தை மீறி ரூ.2000 கரன்சி நோட் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மை என்னவெனில் பெரும்பாலான கறுப்புப் பணம் தங்கம் அல்லது சொத்து போன்ற பிற சொத்துக்களில் சேமிக்கப்பட்டுள்ளது, பணமாக அல்ல. ரிசர்வ் வங்கியே இதைப் பற்றி பதிவு செய்துள்ளது.
2. 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்வதில் குளறுபடிகள் இருந்தன. ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 24 (2) இன் கீழ் இந்த நோட்டுகள் முதலில் “அறிவிக்கப்பட்டன”. ஆனால் அது தவறான பிரிவு என்று விரைவில் உணரப்பட்டது. ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 24(1) தான், அறிவிப்பில் தேவையான மாற்றங்களை கட்டாயப்படுத்தி, ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியது. இந்த நோட்டுகள் வெவ்வேறு அளவுகளில் இருந்ததால், தற்போதுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பொருத்த முடியவில்லை; இது அனைத்து ஏ.டி.எம்களையும் மீண்டும் அளவீடு செய்ய கட்டாயப்படுத்தியது மற்றும் முழு நாடும் முடிவற்ற வரிசையில் நிற்கும் போது “பணமதிப்பு” நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்தியது.
3. ரூ.2000 நோட்டுகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. ஆச்சரியப்படுவதற்கில்லை, அவை எளிதில் நகலெடுக்கப்பட்டன. நவம்பர் 26, 2016 முதல், போலியான 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய செய்திகள் வந்தன. பழைய ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக மாற்றுவதற்கு எளிதாக இருந்ததும், நவம்பர் 8 அன்று நாடு அந்த அதிர்ச்சிக்கு ஆளாகியதற்கு ஒரு முக்கிய காரணம்.
4. கடைசியாக, ரூ. 2000 நோட்டு பணத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றில் தோல்வியடைந்தது: பணத்திற்கு மூன்று அடிப்படைப் பாத்திரங்கள் உள்ளன, இதைப் படிக்கும்போது ஒருவர் தனது சமையலறை தோட்டத்தில் வளர்க்கும் அழகான முட்டைக்கோசுக்கு எதிராக ரிசர்வ் வங்கி வெளியிட்ட கரன்சி நோட்டை நினைத்துப் பாருங்கள். முதலாவதாக, அது ஒரு மதிப்புமிக்க சேமிப்பாக இருக்க வேண்டும்.
அதாவது ரூ.100-ன் மதிப்பு ஒரு நாளிலிருந்து இன்னொரு நாளிலும் ரூ.100 ஆக இருக்கும். ஒரு முட்டைக்கோஸ் கரன்சி நோட்டை விட மிக வேகமாக மதிப்பை இழக்கிறது. இரண்டாவதாக, அது கணக்கின் ஒரு அலகாக இருக்க வேண்டும். அதாவது புதிய மடிக்கணினியின் விலையை கரன்சி நோட்டின் அடிப்படையில் குறிப்பிடலாம், ஆனால் முட்டைக்கோசின் அடிப்படையில் அல்ல.
மற்றும் மூன்றாவது, அது பரிமாற்ற ஊடகமாக இருக்க வேண்டும். 100 ரூபாய் நோட்டை எளிதாக பேனாவாக மாற்றிக் கொள்ளலாம். மூன்றாவது பாத்திரத்தில் தான் ரூ.2000 நோட்டு மிகவும் மோசமாக தோல்வியடைந்தது, குறிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்கத்தில்.
ஏனென்றால் சந்தையில் அனைவரிடமும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன, ஆனால் யாரும் அதை உடைத்து பொருட்களை வாங்க பயன்படுத்த முடியாது. குறிப்பாக ஒரு காலத்தில், பரிமாற்ற ஊடகமாக இது மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது, மற்றும் ஒரு பொருளாதாரத்திற்கு, சிறிய மாற்றங்கள், பெரும்பாலும் ரூ 500 மற்றும் ரூ 100 க்குக் கூட பொதுவானவை.
2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 20,000 ரூபாய்க்கு மேல் மாற்றக்கூடாது என ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்துள்ளது. அதாவது, இந்த நோட்டுகளில் ஒருவர் ரூ.2 லட்சத்தை சேமித்து வைத்திருந்தால், அதாவது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக, தங்கள் சொந்தப் பணத்தின் முழு மதிப்பையும் திரும்பப் பெற அவர்கள் 10 முறை வரிசையில் நிற்க வேண்டும் (முழு நாட்டில் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஒன்றுக்கு வெளியே).
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியர்களிடையே ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காகப் பரவலாகக் காணப்பட்டதால், இந்தியர்கள் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும் என்று அரசாங்கம் இப்போது எதிர்பார்ப்பதில் ஆச்சரியமில்லை.
எங்கு பார்த்தாலும் 2000 ரூபாய்.. ஒரே நாளில் பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியே வரும் அதிசயம்..
கடந்த சில ஆண்டுகளாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் 2000 ரூபாய் நோட்டை கண்ணில் கூட பார்க்காத நிலையில் நேற்று ஒரே நாளில் ஏகப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வெளியே வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க் உள்பட பல கடைகளில் நேற்று பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டைதான் கொண்டு வந்ததாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாற்ற முடியாது என்பதால் கோடி கணக்கில் 2000 ரூபாய் நோட்டை பதுக்கியவர்கள் ஏஜென்ட்கள் மூலம் பொதுமக்களிடம் கொடுத்து அதை கடைகளில் மாற்றி வருவதாக கூறப்படுகிறது.
2000 ரூபாய் மாற்றி கொடுத்தால் ஆயிரம் ரூபாய் கமிஷன் என்று கூறப்பட்டுள்ளதாகவும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் அந்த பணத்தை மாற்றி பதுக்கல்காரர்களின் ஏஜண்டுகளிடம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை காவல்துறையினர் விசாரணை செய்தால் மட்டுமே தெரிய வரும்.
மொத்தத்தில் 2000 ரூபாய் நோட்டை சில ஆண்டுகளாக கண்களிலேயே பார்க்காத மக்களிடம் நேற்று சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
2000 ரூபாய் கொடுத்ததால் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்..!
பெட்ரோல் போட்ட பின் 2000 ரூபாய் கொடுத்ததால் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பங்க் ஊழியர் போட்ட பெட்ரோல் உறிஞ்சி எடுத்த சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 2000 ரூபாய் நோட்டு பெறப்படும் என்றும் பேருந்து மற்றும் ரயில்களிலும் டிக்கெட் எடுக்க 2000 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட பிறகு 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார். ஆனால் அந்த நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் ஊழியர் வேறு நோட்டு தருமாறு கூறினார்
தன்னிடம் வேறு நோட்டு இல்லை என்று வாகன ஓட்டி கூறியதை அடுத்து போட்ட பெட்ரோலை வாகனத்தில் இருந்து அந்த பங்க் ஊழியர் உறிஞ்சி எடுத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி கவர்னர்
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்தவித நிபந்தனமும் இல்லை என கூறப்பட்ட நிலையில் தற்போது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்பத் தருவதாக அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களிலும் டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, 50 ஆயிரத்துக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம் என ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் டிக்கெட் பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரயில் டிக்கெட் எடுக்க பயணிகள் 2000 ரூபாய் நோட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை அடுத்து வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் ஒருவர் ஒரு நாளுக்கு பத்து எண்ணிக்கையில் மட்டும் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் தனியார் கடைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் 2000 ரூபாய் நோட்டை செப்டம்பர் 30ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு 2000 ரூபாய் நோட்டை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை
» பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றித் தராததால் ரிசர்வ் வங்கி முற்றுகை
» பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றித் தராததால் ரிசர்வ் வங்கி முற்றுகை
» பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2