புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:54 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
74 Posts - 47%
heezulia
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
65 Posts - 41%
prajai
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
5 Posts - 3%
Ammu Swarnalatha
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%
Jenila
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%
jairam
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%
M. Priya
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
108 Posts - 50%
ayyasamy ram
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
9 Posts - 4%
prajai
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
8 Posts - 4%
Jenila
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
4 Posts - 2%
Rutu
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%
jairam
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_m10Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 18, 2023 9:32 pm

Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Main-qimg-8009479d43fe3a5cfded86374db2a4dc


Dr ரேணுகா ராமகிருஷ்ணன் அப்போது 16 வயது. கும்பகோணம் மகாமகக் குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தப் பகுதியைக் கடந்து போகும் எல்லோருமே மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றனர். அவர்கள் முகத்தில் அருவருப்பு தெரிந்தது. ‘புண்ணியமே போச்சு. குளத்தை முழுக்க சுத்தம் பண்ணணும்’ என்று சிலர் முணுமுணுத்தனர். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். அந்த இடத்தை நோக்கி ரேணுகா வேக வேகமாகச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி மனதைப் பதைபதைக்கச் செய்தது.

மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்று அங்கலாய்த்தார்களே தவிர, யாருக்கும் இறந்துகிடந்த மனிதர்மீது கொஞ்சம்கூடப் பரிதாபம் வரவில்லை. காரணம், இறந்து கிடந்தவர் கைகால் விரல்கள் சூம்பிப் போன ஒரு தொழுநோயாளி.

படிக்கட்டில் வேக வேகமாக இறங்கிய ரேணுகா, தன் துப்பட்டாவை எடுத்து அந்தப் பெரியவரின் உடல்மீது போட்டு மானம் காத்தார். அங்கே கூட்டமாகக் கூடி நின்றிருந்த அனைவரும் ரேணுகாவை விநோதமாகப் பார்த்தார்கள். ‘யாராவது உதவி பண்ணுங்களேன். இவரை இங்கிருந்து தூக்கிட்டுப் போயிடலாம்’ என்று அங்கே நின்றிருந்தவர்களிடம் ரேணுகா கோரிக்கை வைத்தார். ஒருவரும் முன்வரவில்லை. சிலர் விலகிப் போனார்கள். ‘உனக்கெதுக்கும்மா வேண்டாத வேலை...’ என்று சிலர் இலவச அறிவுரை வழங்கினார்கள். `இறந்த பிறகு யாருக்கும் இப்படியெல்லாம் அவமரியாதை நிகழக் கூடாது’ என்று ரேணுகாவின் மனம் விசும்பியது. தானே எப்படியாவது அந்தப் பெரியவரின் உடலுக்கான இறுதிக் காரியங்களையெல்லாம் நிகழ்த்திவிடலாம் என்று முடிவெடுத்தார். அதுவரை இறந்த ஒருவரின் உடலை ரேணுகா அவ்வளவு பக்கத்தில் பார்த்ததுகூட இல்லை. ஆனால், மனித சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை, ரேணுகாவுக்குள் உத்வேகத்தைக் கொடுத்தது. ரிக்‌ஷாக்காரர் ஒருவர் உதவ முன்வந்தார். ‘கையில துணியைச் சுத்திட்டு வாங்க. தூக்கி அந்த ரிக்‌ஷாவுல வையுங்க போதும்’ என்று சுற்றியிருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார். சில மனிதர்கள் கைகொடுத்ததால் ரிக்‌ஷாவில் பெரியவரின் பிணம் ஏற்றப்பட்டது. ரேணுகா இடுகாட்டுக்குச் சென்றார்.

‘இது மத்தவங்க காரியம் பண்ற இடம். தொழுநோயாளி பொணத்துக்கெல்லாம் இங்கே காரியம் பண்ண முடியாது’ என்று மனசாட்சியே இல்லாமல் அங்கே அனுமதி மறுத்தார்கள். ரேணுகா கலங்கவில்லை. அந்தப் பெரியவரைத் தன் மடியில் ஏந்திக்கொண்டார். ரிக்‌ஷா மேலும் பல மைல்கள் தள்ளி உள்ள இடுகாடு ஒன்றை அடைந்தது. அங்கே மனிதநேயமிக்க வயதானவர் ஒருவர் இருந்தார். ரேணுகா நடந்ததைச் சொன்னார். ‘என்கிட்ட பத்து ரூபாதான் இருக்கு. உதவி பண்ணுங்க தாத்தா!’ என்று மனம் கலங்கிப் பேசினார். ‘சின்னப்பொண்ணு நீ! எவ்ளோ பெரிய விஷயம் பண்ணியிருக்கே...’ என்று ரேணுகாவைப் பாராட்டிய அந்த மனிதர் அங்கே காரியம் பண்ண அனுமதித்தார். இதையடுத்து இறுதிக் காரியங்கள் அனைத்தையும் ரேணுகாவே முன் நின்று செய்தார். தண்ணீர்ப் பானை உடைக்கப்பட்டபோது, அந்த இடுகாட்டு மனிதரின் கண்கள் கலங்கியிருந்தன.


எல்லாம் முடிந்ததும் ரேணுகா வீடு திரும்பினார். ராணுவ அதிகாரியான அவரின் தந்தையிடம், ‘அப்பா, நான் இடுகாட்டிலிருந்து வர்றேன்’ என்று நடந்த எல்லாவற்றையும் கூறினார். இதைக் கேட்டதும், ‘மிகப்பெரிய காரியம் செய்திருக்கிறாய். ஆனால், இப்போதைக்கு வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம். சொன்னால் எல்லோருக்கும் புரியவும் செய்யாது’ என்று அக்கறையுடன் சொன்னார் ரேணுகாவின் தந்தை. அப்போது ரேணுகாவின் மனதில் பெரும் லட்சிய விதை ஒன்று விதைக்கப்பட்டதாக உணர்ந்தார். `நிச்சயமாக மருத்துவம் படிக்க வேண்டும். இந்தச் சமுதாயமே புறக்கணிக்கும் தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்ய வேண்டும்’ என்பதே அந்த லட்சியம். ரேணுகாவின் கண்களில் அன்னை தெரசா புன்னகைத்தார்.

கும்பகோணத்தில் வளர்ந்த ரேணுகாவுக்கு, சிறு வயது முதல் டாக்டர் விளையாட்டு என்றால் அத்தனை பிரியம். தான் ஒரு டாக்டராகவும் மற்ற குழந்தைகளுக்கு ஊசி போடுவதுபோலவும் விளையாடுவது அவருக்குப் பிடித்திருந்தது. வளர வளர அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. மகாமகச் சம்பவம் ரேணுகாவின் வைராக்கியத்தை அதிகரித்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ரேணுகாவுக்கு பாண்டிச்சேரி ஜிப்மரில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. தொழுநோய் சிகிச்சைகளுக்கான சிறப்புப் படிப்பை முடித்துவிட்டு, சருமநோய் மருத்துவராக வெளியே வந்தார்.

சருமநோய் மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்தாலும், தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கிக்கொண்டார். சுமார் ஒரு வருட காலம் மருத்துவர்கள் இல்லாத கிராமங்களுக்குச் சென்று சேவை செய்துவந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். தொழுநோயாளிகளைத் தொட்டால் தொழுநோய் ஒட்டிக்கொள்ளும் என்ற மூடநம்பிக்கை, சமூகத்தில் இப்போதும் இருக்கிறது. தொழுநோயாளிகள் பலரே தங்களை யாரும் நெருங்காத வண்ணம் முடங்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடிச் சென்று, உரிய சிகிச்சைகள் அளித்து, அன்புடன் பேசி, அரவணைத்து, ஆறுதல் சொல்லி, அவர்களைத் தேற்றுகிறார் ரேணுகா. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எனச் சமுதாயமே புறக்கணித்தாலும், `உங்களுக்கு நான் இருக்கிறேன்’ என்று தொழுநோயாளிகளின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்கிறார். அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார். ஆம், அந்த நோயாளிகள் ரேணுகாவை அன்னை தெரசாவின் மறு உருவமாகவே பார்க்கிறார்கள்.

சென்னை ஷெனாய் நகரில் இயங்கிவரும் `ஜெர்மன் லெப்ரசி அண்ட் டிபி ரிலீஃப் அசோசியேஷன்’ (German Leprosy and TB Relief Association)-ல் டாக்டர் ரேணுகா, தொழுநோயாளிகளுக்காகத் தொடர்ந்து சேவையாற்றிவருகிறார். தமிழகமெங்கும் பல்வேறு தொழுநோயாளிகள் குடியிருப்புகளுக்குச் சென்று மருத்துவச் சேவை செய்கிறார். பல்வேறு ஊர்களில் இலவச தொழுநோய் முகாம்களையும் தொடர்ந்து நடத்திவருகிறார். ‘தொழுநோய் இல்லாத இந்தியா’ என்று அறிவிக்கப்பட்டாலும், உண்மையான கள நிலவரம் அப்படி இல்லை. தொழுநோயாளிகளுக்கென தம் வாழ்வை அர்ப்பணித்துவரும் டாக்டர் ரேணுகா போன்றோரால்தான் தொழுநோய் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது மற்றும் சமூக சேவைக்கான பல்வேறு விருதுகள் என்று ஏராளமான கௌரவங்கள் டாக்டர் ரேணுகாவுக்குக் கிடைத்திருக்கின்றன. 28 ஆண்டுகள் மருத்துவச் சேவையை நிறைவு செய்திருக்கும் டாக்டர் ரேணுகாவுக்கு லட்சியம் ஒன்று இருக்கிறது.

‘தொழுநோயாளிகளுக்கான இலவச மையம் ஒன்றை அமைக்க வேண்டும். என் வாழ்வின் இறுதிவரை அவர்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஆசை. எனக்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களும் தொழுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கென தொடர்ந்து சேவையாற்ற முன்வர வேண்டும். சமூகம் புறக்கணிப்பதுபோல, மருத்துவர்களும் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. தொடுதலால் தொழுநோய் பரவாது என்பதற்கு நானே வாழும் உதாரணம்!’ என்கிறார் டாக்டர் ரேணுகா.......

நந்தினி M -தமிழ் கோரா Dr ரேணுகா ராமகிருஷ்ணன், 1571444738 Dr ரேணுகா ராமகிருஷ்ணன், 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Vikatan%2F2022-11%2F8bcae576-180b-4ef9-8191-dc5f04f51cce%2FWhatsApp_Image_2022_11_26_at_11_49_57_PM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
டாக்டர் ரேணுகா.
----------------------------------


மாநிலமெங்கும் தொழுநோயாளிகள் குடியிருப்புகளைத்
தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
மருத்துவச் சேவையில் 35 ஆண்டுகளைத் தொட்டிருக்கும்
இவருக்கு `சேவை தேவதை' விருது வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதியரசி பிரபா ஸ்ரீ தேவன் இவ்விருதினை
அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
-
நன்றி- கி.ச.திலீபன் (அவள் விகடன் 29-11-2022 )
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 26, 2023 10:11 pm

டாக்டர் ரேணுகா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.



Dr ரேணுகா ராமகிருஷ்ணன், Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக