புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:00 pm

First topic message reminder :

இந்தக் கட்டுரை ஜகத்குரு ராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தை முன்னிட்டு தினமலரில் வெளிவந்தது. இதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 HppFuRE


சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:04 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 IL9KUKN

ராமானுஜர் வைஷ்ணவத்தை நிலைநாட்டிய பெரும் ஆச்சாரியர். ராமகிருஷ்ணர், ராமானுஜர் இருவருமே விஷ்ணுவின் பிரசித்தி பெற்ற இரு பெரும் அவதாரங்கள். ராமானுஜரின் பெற்றோர்களான காந்திமதி, கேசவர் தம்பதியருக்குப் பல ஆண்டுகள் மகப்பேறு இல்லை. எனவே கேசவர் தம் மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஒரு வேள்வி நடத்தினார். அப்போது பெரு மாள் கேசவரின் கனவில் தோன்றி, உலகினரை உய்விக்கத் தாமே அவரது மகனாக அவதரிக்கப் போவதாக அறிவித்தார். அவ்விதமே ஸ்ரீபெரு ம்புதூரில் பிறந்த குழந்தையிடம் விஷ்ணுவின் சின்னங்கள் இருக்க, அதற்கு ராமானுஜன் என்று பெயரிடப்பட்டது. ராமகிருஷ்ணரும் இவ்விதமே ÷ தான்றினார். அவரது தந்தையான சுதிராம் 1835-ஆம் ஆண்டு கயைக்குச் சென்று, தம் மூதாதையர் நலனுக்காக சிராத்தம் செய்தார். இரவில் கயையி லுள்ள விஷ்ணுமூர்த்தியான கதாதரப் பெருமாள் அவன் கனவில் தோன்றி, தாமே அவரது மகனாகப் பிறப்பதாகக் கூறினார். இவ்விதம் பிறந்த குழந்தைக்கு கதாதரர் என்றே பெயர் வைக்கப்பட்டது. ராமகிருஷ்ணர், ராமானுஜர் ஆகிய இருவருமே பல குருமார்களிடம் பயின்றனர். ராமானுஜர் முதலில் காஞ்சிபுரத்தில் யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் வேதாந்தம் கற்றார். அவர் தீவிரமான அத்வைதி. ராமானுஜரோ தீவிர விஷ்ணு பக்தர். எனவே குருவுக்கும் சீடருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

சாந்தோக்ய உபநிஷதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ - இந்த மந்திரத்திற்கு யாதவப் பிரகாசர், கப்யாஸம் என்பதற்குக் குரங்கின் பின்புறம் என்று கூறப்பட்ட நேரடிப் பொருளைக் கூறி, அந்தப் பொன்னிறமான புருஷனின் கண்கள், குரங்கின் பின்புறத்தைப் போல் சிவந்த இரு தாமரை மலர்களை ஒத்திருந்தன என்று உரை செய்தார். பகவானின் திருக்கண்களுக்கு, குரங்கின் பின்புறத்தையா உவமையாகக் கூறுவது ? அது அபசாரம் என யாதவப் பிரகாசருக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அத்வைத வேதாந்தத்தின்படி உயர்ந்தது, தாழ்ந்து ஆகிய அனைத்தும் பிரம்மமே! இந்த உவமையைக் கேட்ட ராமானுஜர் பதைபதைத்துப் போனார். பக்தரான அவரது காதுகள் கூசின, கண்களில் நீர் வடிந்தது.; பிறகு குருவின் அனுமதி பெற்று, ராமானுஜர் கப்யாஸம் என்பதை வேறுவிதமாகப் பிரித்து அதற்கு, சூரியனின் கதிர்களால் மலர்ந்த என்று பொருள் கூறினார். அந்த இடத்திற்கு அப்புருஷனின் கண்கள். சூரியனில் உள்ள பொன்னிறமான கதிர்களால் மலர்ந்த தாமரைகள் போல் அழகாக இருந்தன என்று பொருள் கூறினார். உடனே யாதவப்பிரகாசர், நீ கூறுவது நேரடி அர்த்தமல்ல. சுற்றி வளைத்துப் பெறப்பட்ட பொருள் என்றார். இ ருந்தாலும் அவர், வேதாந்தத்திற்கு விளக்கம் சொல்வதில் ராமானுஜருக்குத் தனித் திறமை இருந்ததை அறிந்தார்.

பிற்காலத்தில் ராமானுஜர் புகழ்பெற்ற வைஷ்ணவ ஆச்சாரியராகத் தலையெடுத்தார். அப்போது குருவான யாதவப் பிரகாசர் அத்வைதத்தைக் கைவிட்டு, வைஷ்ணவராகி ராமானுஜருக்கே சீடரானார். இது குறித்து ராமகிருஷ்ணர் இவ்விதம் கூறினார் : ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர். அவரது குருவோ சுத்த அத்வைதி. அவர்கள் ஒத்துப் போகவில்லை. ஒருவரது வாதத்தை மற்றொருவர் நிராகரிப்பார்.

தொடரும்....





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:05 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 RC6dJae

அது எப்போதும் நடப்பதுதான். இருப்பினும் குருவிற்குச் சீடன் தம்முடையவனே ஆவான். யாதவப் பிரகாசர் தமது சீடரான ராமானுஜரிடமிருந்து பாடம் கற்றது ÷ பாலவே, அத்வைத குருவான தோதா புரியும் தமது சீடரான ராமகிருஷ்ணரிடமிருந்து பலவற்றைக் கற்றார். தோதாபுரி ஆதிபராசக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. காளிதேவியின் சிலை மேல் ராமகிருஷ்ணருக்கு இருந்த பக்தியை அவர் மூடநம்பிக்கை என்று கருதினார். குருதேவர் ராமகிரு ஷ்ணர் காலையிலும் மாலையிலும் கைகளைத் தட்டிக் கொண்டு, இறைவனின் திரு நாமங்களை உரக்கச் சொல்வார். அப்போது தோதாபுரி, கைகளால் தட்டி சப்பாத்தி தட்டுகிறாயா, என்ன? என்று அவரைக் கேலி செய்வார். காளி தேவி தோதாபுரிக்குப் பாடம் கற்பிக்கத் திருவுளம் கொண்டாள். ÷ தாதாபுரிக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இறுதியில் அவர் கங்கையில் மூழ்கி உயிரை விடத் தீர்மானித்தார். ஆனால் என்ன அதிசயம் ! அவர் க ங்கையில் இறங்கி மூழ்குவதற்குப் போதுமான நீரில்லை!

உடனே தோதாபுரி, இது எல்லாம் வல்ல மகாமாயையின் திருவிளையாடல் ! என உணர்ந்து சக்தியை ஏற்றுக் கொண்டார். காளி கோயிலுக்குச் சென்று வணங்கினார். இவ்விதம் குருவான தோதாபுரி, சீடரான ராமகிருஷ்ணரிடமிருந்து பிரம்மமும் சக்தியும் ஒன்றே ! என்பதை உணர்ந்தார். ராமகிரு ஷ்ணர், ராமானுஜர் ஆகிய இருவருமே விக்கிரக ஆராதனையை மிகவும் ஆதரித்தவர்கள். ராமானுஜர் நிலை நாட்டிய வைஷ்ணவ சமயத்தில் விஷ்ணுவின் விக்கிரக வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமலை ஸ்ரீநிவாசர் போன்ற மூர்த்தியர் வைகுண்டத்ததிலிருந்து நேரடியாக பூலோகத்திற்கு வந்திறங்கிய அர்ச்சாவதாரங்களாகப் போற்றப்படுகின்றனர். ஓர் இறைவனின் அவதாரம் மறைந்த பிறகு, அவரது சக்தியும் அருளும் திவ்ய மூர்த்தங்கள் மூலம் தேக்கி வைக்கப்பட்டு, பின் வரும் தலைமுறைகளுக்கு சேர்க்கப்படுகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் இந்து விக்கிரக ஆராதனையை வெளி நாட்டினர் இகழ்ந்தனர். அப்போது ராமகிருஷ்ணரோ விக்கிரக வழிபாட்டின் பயனை விளக்கி மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல; அவை ஆன்மிக விழிப்புணர்வுடைய இறைவனின் திருவுருவங்களே என்று நிலைநாட்டினார். மக்களிடம் பக்தியைப் பரப்புவதே சாதி வேற்றுமைகளைக் களைவதற்கான வழி என்று ராமகிருஷ்ணர் கூறினார். உண்மையான பக்தர்கள் சாதி ÷ வற்றுமைகளைப் பார்ப்பதில்லை. வைஷ்ணவத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ராமானுஜர் முக்கியமான இடத்தை அளித்தார். ராமானுஜரின் காலத்திற்குப் பிறகே, ஆன்மிகத்தின் கதவு அனைவருக்கும் திறக்கப்பட்டது என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:11 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 S37CFT6


பக்த லட்சணம்!

ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ர ங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார்.

ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க... ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்! ஒருநாள் அவனிடம் பேசினால்தான் என்ன? எனக் கேட்டார். உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள்? என்றார். சாமி, கிரு ஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே... அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க ÷ வண்டும்! என்றான். அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார் ரங்கநாதர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்க லே எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்கப் பார்த்துக்குவீங்க சாமி என்றான். இதனைக் கேட்ட ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார். உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப் பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள்.
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 PKJoRmn





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:13 am

சிஷ்யனால் மீண்ட சொர்க்கம்!

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 TkXnr8u
திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷர மந்திரம் கற்க வேண்டி, ராமானுஜர் சென்றார். நம்பிகளைச் சந்தித்து தன் இஷ்ட பூர்வத்தைத் தெரிவித்தார். நம்பிகள், பிறகு பார்க்கலாம் என்று ராமானுஜரை திருப்பி அனுப்பிவிட்டார். இதுபோல் 18 முறை சொல்லி, ராமானுஜரின் பொறுமையையும் உறுதியையும் சோதித்தார் நம்பிகள். ராமானுஜரும் அசராமல் திரும்பத் திரும்ப வந்து நம்பிகளைச் சந்தித்து ரஹஸ் யார்த்தத்தை கேட்டறிய விரும்பினார். இறுதியில், ராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டு, இந்த ரஹஸ்ய மந்திரத்தை எவருக்கும் கூறலாகாது என்றார் நம்பிகள்.

ஆனால், ஆசையுள்ளவர்கள் இந்த மந்திரத்தினால் நன்மை அடையும் பொருட்டு அருகில் இருந்த சவுமிய நாராயணர் கோயில் தளத்தின் மேல் ஏறி நின்று மக்களை அழைத்து, அந்த உபதேசத்தை வெளியிட்டார் ராமானுஜர். ஆச்சார்யரின் உத்தரவை மீறினால் தமக்கு நரகம்தான் என்பதையும் மீறி, அன்பர்கள் நன்மை பெற வேண்டும் என்பதே ராமானுஜரின் விருப்பம்.

சில காலம் சென்றன. ராமானுஜரின் பரம சிஷ்யர் கூரத்தாழ்வான், ராமானுஜரை விட்டுப் பிரியாமல் வாழ்ந்து வந்தார். கூரத்தாழ்வானின் ஆச்சார்ய பக்தியை அளவிட்டுக் கூற முடியாது. சிவ பக்தனான சோழ மன்னன், ராமானுஜரின் வைஷ்ணவ பிரச்சாரத்தை விரும்பாமல், அவரை தண்டிக்க விரும்பினான். ஆனால் கூரத்தாழ்வான் தானே ராமானுஜர் என்று கூறி, தண்டனையை ஏற்றுக்கொண்டு தமது இரு கண்களையும் இழந்தார்.

ஒருநாள் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்டுக் கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். முடியுடைவனாவர் முறை முறை எதிர்கொள்ள என்கிற பாசுரத்தில் முன்னாலே பரமபதம் சென்றவர்கள். பிற்பட்டு வருபவர்களை எதிர்கொண்டு உபசரித்து வரவேற்பர். என்று அருளிச் செய்ததை ஆழ்வான். உடையவர் ராமானுஜருக்கு பிற்பட்டு நாம் பரமபதம் செல்ல நேர்ந்தால் உடையவர் அங்கிருந்து நம்மை வரவேற்று உபசரிக்கும்படியும், அதனால் நமக்கு அபசாரம் விளையுமாதலால் நாமே பரமபதத்துக்கு முன்னே செல்ல முற்பட வேண்டும் என்று எண்ணி, நம்பெருமாள் முன்பு சுலோகங்களைச் சொல்லி உருக்கமாக உபாசனை செய்து விண்ணப்பம் செய்தார்.

பெருமாளும் திருவுளம் செய்து உமக்கு வேண்டியதைக் கேளும் தருகிறோம் என்று கூறி நிர்பந்திக்க, இந்த அழுக்குடம்பை விடுவித்து, நித்ய விபூதியான வைகுண்டத்தைத் தந்தருளவேணும் என்று பிரார்த்தித்தார். இந்த வரம் விட்டு வேறே வேண்டிக்கொள்ளும் என்று பெருமாள் சொல்ல, அடியேன் வேண்டியதை தந்தருள வேணும் என்று ஆழ்வானும் பிரார்த்திக்க பெருமாளும் உமக்கும், உம்முடைய திருநாமம் சொல்பவருக்கும், உம்முடைய சம்பந்தம் பெற்றவர்க்கும் மேல் வீடு தந்தோம் என்று திருவாய் மலர்ந்தருளி, திருப்பரிவட்டமும், பூந்தண்டு மாலையும், திருக்கை மலர்ந்தும் பிரசாதித்து விடை கொடுத்து அனுப்பினார்.

ஆழ்வான் திருநாட்டுக்கு வரம் பெற்றதை ராமானுஜர் கேட்டறிந்து மனம் வேதனைப்பட்டாலும், உம்முடன் சம்பந்தம் உடையவர்களுக்கும் மோக்ஷம் தந்தோம் என்று நம்பெருமாள் கூறியதைக் கேட்டறிந்த ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகளின் கட்டளையை மீறினதால் கிடைத்த நரகம் ஆழ்வானோடு சம்பந்தம் கொண்டதால் மோட்சம் பெற நமக்கும் வழி கிடைத்தது ஆழ்வான் அநுக்ரகத்தால்தான் என்று களித்து மகிழ்ச்சி அடைந்தார்.

எம்பெருமானுக்கு அடிமை செய்திருப்பதைவிட ஆச்சார்யனுக்கு அடிமை செய்து கொண்டிருப்பதே மிகச் சிறந்தது என்பது, இதுபோன்ற மஹாபுருஷர்களால் நாம் அறிந்து கொள்வது நாம் பெற்ற பேறு!


ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 NwNCJRS

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:15 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 IHKbiGp

திக்கெல்லாம் திருவாய்மொழியின் பெருமøயினைப் பேசிய எம்பெருமானார் ராமானுசரின் ஆயிரமாவது ஆண்டு இது. பிரம்ம சூத்திரத்துக்குப் பேருரை, பகவத் கீதைக்குப் பேருரை, வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், சரணாகதி கத்யம், திருவரங்க கத்யம், திருவைகுந்த கத்யம், நித்யகிரந்தம் ஆகிய நூல்களை வடமொழியில் அருளிச்செய்த எம்பெருமானார். தமிழில் ஏன் எதுவும் எழுதவில்லை எனும் கேள்வி. இதுவரையில் பதில் கிடைக்காமல் கிடக்கிறது.

ஆனால், எம்பெருமானாரின் வாழ்வைக் கூர்ந்து நோக்கியவர்கள், உடையவர் ஈரத்தமிழின் முழு வடிவமாக வாழ்ந்ததை நன்கறிவர். இயலும் பொருளம் இசையத் தொடுத்து, இன்கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் ராமானுசன் எனும் திருவரங்கத்து அமுதனாரின் வரிகளைப் படித்தவர்கள், இதனை நன்குணர முடியும். எம்பெருமானார் திருமலை நம்பியிடம் ராமாயணம் பாடம் கேட்டவர். திருமலையாண்டனிடம் திருவாய்மொழி பயின்றவர். ஆளவந்தாரின் மூன்று கட்டளைகளில் ஒன்று, திருவாய்மொழியின் பெருமையைத் திக்கெங்கும் பரப்ப வேண்டும் என்பதாகும். இச்சூழ்நிலையில் எம்பெருமானார் எவ்வாறு தமிழைக் கைவிட முடியும்? தமிழ்தான் எப்படி எம்பெருமானாரைக் கைவிடும்?

எம்பெருமானாரைப் பாற்கடலில் பையத்துயின்ற பரமன் இவ்வுலகத்துக்கு வருவித்தமைக்கொரு காரணம் உண்டு. ஆளவந்தார் நோய்ச் சார்த்திக் கிடந்த பொழுது, விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டுவதற்கும். நிலைபெறுவதற்குமாக ராமானுசரை பெருமாள் இவ்வுலகுக்கு வருவித்தார். எதிராசருக்கு முன்பு பிரம்ம சூத்திரத்துக்கு வியாக்யானம் எழுதியவர்கள் தர்க்கத்தோடு எழுதாமல், குதர்க்கமாக எழுதினார்கள். வேதத்துக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் விரிவுரை எழுதியவர்கள். முன்னோர்கள் எந்த அளவை, எந்தப் பிராமணத்தைக் கொண்டு விளக்கம் சொன்னார்களோ, அதிலிருந்து வழுவாமல் சொல்ல வேண்டும் என எழுதிப் போந்தனர். ஆனால், எம்பெருமானார், மேற்குறித்த நூல்களுக்கு விரிவுரை செய்பவர்கள் முன்னோர்கள் வகுத்த அளவுகோலைப் பெருக்கியும் பிரமாணத்தை விரிவுபடுத்தியும் வலிவோடும் பொலிவோடும் செய்ய வேண்டும் என்றார்.

ஸ்ரீவைணவத்துக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் எதிராக விரிவுரை செய்தவர்கள் அனைவரும் வட மொழியிலேயே எழுதியமையால், எம்பெருமானாரும் வடமொழியிலேயே எழுத வேண்டியது காலத்தின் கட்டாயமாயிற்று. அவர்கள் தமிழில் எழுதியிருப்பார்களேயானால், உடையவரும் தமிழிலேயே எழுதியிருப்பார். ஆறாயிரப்படிக்குத் திருக்குறுகைப் பிரான் பிள்ளானும், மூவாயிரப்படிக்குப் பெரியவரச்சான் பிள்ளையும் உரை எழுத முடியும். ஆனால், பிரம்ம சூத்திரத்துக்கும் பகவத் கீதைக்கும் எம்பெருமானார் மட்டுமே விளக்கவுரை எழுத முடியும். அதனால், அந்த அரிய பணியைத் தாம் எடுத்துக்கொண்டு உரிய பணியைச் சீடர்களிடம் விட்டு விட்டார்.

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 JxYe1gc

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:16 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 DGEpEfB

வேதங்களுக்கு விரிவுரை இயற்றியதுபோல், திருவாய்மொழிக்கு ஏன் விரிவுரை எழுதவில்லை என்பதற்கொரு காரணத்தைப் பெருமானாரே பகன்றிருக்கிறார். ராமானுசர் தம் சீடராகிய திருக்குறுகைப்பிரான் பிள்ளாளை அழைத்து, திருவாய்மொழிக்கு, ஆறாயிரப்படி, எனும் உரை செய்யுமாறு பணித்தார். ஆசாரியனுடைய பணியை நிறைவேற்றியபின், பெருமானாரே அப்பணியைச் செய்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்ற ஐய வினாவைத் திருக்குறுகைப்பிரான் எழுப்பினார்.

அதற்கு எம்பெருமானார் அளித்த பதில், ஈரத் தமிழின் கொள்கலனாய் எம்பெருமான் இருந்தமையைப் புலப்படுத்தும், யான் ஆறாயிரப் படியை எழுதியிருப்பேனேயானால், ராமானுசரே உரை எழுதிய பின், இனி நாம் என்ன எழுதுவது என்று எல்லோரும் திருவாய்மொழியைக் கைவிட்டு விடுவார்கள். அதனால் நீ எழுதியதுதான் சரி என்று அருளினார்.

வேத, வேதாந்தங்களுக்கு விளக்கவுரை எழுதுவது ஞானத்தின் வயப்பட்டு எழுத வேண்டும். திருவாய் மொழிக்கு உரை எழுதுவதென்பது உணர்வு வயப்பட்டும், அனுபவத்தின் முதிர்ச்சியோடும் எழுதப்பட்ட வேண்டிய ஒன்றாகும். எனவே, ஞானத்தின் வயப்பட்டு எழுத வேண்டிய பாஷ்யத்தைத் தாமே வடமொழியில் செய்தார். அனுபவத்தோடும் உணர்வோடும் திருவாய்மொழி ஈட்டுரையைத் தம் சீடர்களிடம் தந்தார்.

நாதுமுனிகள் நாலாயிரத்தையும் தொகுத்து வகுத்துத் தந்தவர் என்றாலும், அவருடைய காலத்தில் திவ்யப்பிரபந்தம் நாடெங்கும் பரவவில்லை. ஆனால் எம்பெருமானார் அவதரித்த பிறகு, திருவாய்மொழி வடநாடு முழுமையும் பரவியது. நேபாளத்திலும் இன்று பல்லாண்டு, பல்லாண்டு ஓதப்பெறுகின்றது. திருவரங்கத்திலும் திருப்பதியிலும் திருவாய்மொழி ஓதப்பட வேண்டும் என்று செயல் திட்டம் வகுத்தவர் எம்பெருமானார்.

ராமாயாணப் பேருரைகள் நிகழ்கின்ற இடங்களில் எல்லாம் அனுமன் மறைந்து நின்று, ராமபிரான் பெருமைகளைக் கேட்பான் என்பது மரபு வழிச் செய்தி. அது போன்று திருவாய்மொழி மொழியப்படும் இடங்களில் எல்லாம் எம்பெருமானார் மறைந்து நின்று கேட்பார் என்பது ஐதீகம். எம்பெருமானாருடைய வாழ்வு முழுவதுமே, பிழிந்தெடுத்த தமிழ்ச்சாறாகவே அமைந்தது எனலாம்.

உடையவர் பகற்பொழுதெல்லாம் பிரம்ம சூத்திரப் பேருரையில் ஆழ்ந்திருப்பாராம். இரவுப் பொழுதில் திருவாய்மொழி பாராயணத்தில் மூழ்கியிருப்பாராம். இரவு அமுது செய்தபின் பள்ளிக் கட்டிலில் அமர்ந்து, சந்தை சொல்ல வாராயோ என அழைப்பாராம். (சந்தை சொல்லுதல் என்றால், ஒரு குழுவினர், உயர்வற உயர்நலம் உடையவன் எவன் என ஒலிக்க, அடுத்த குழுவினர், எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் என ஓரடியைத் திரும்பத் திரும்பச் சொல்லல் ஆகும்.)

உடனே சீடர்கள் குழுவாகப் பிரிந்து திருவாய் மொழியின் பாசுரங்களைச் சொல்லச் சொல்ல அதனைக் கேட்டுப் பெருமானார் புளகாங்கிதம் அடைவாராம். இரண்டாம் சந்தையின்போது திருவாய்மொழியில் உருகி அவருடைய எலும்புகள் நைந்துருக ஆரம்பித்து விடுமாம். மூன்றாம் சந்தையின்போது பாசுரங்களைக் கேட்கக் கேட்க அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கிவிடும். அதனைப் பக்கத்தில் இருக்கும் சீடர்கள், வழிகின்ற கண்ணீரை மேலாடையில் ஏந்துவார்களாம்.

எம்பெருமானார் வடமொழி வாசலில் உடலை வைத்தார். திருவாய்மொழி மடியில் தலையை வைத்தார். பாவேந்தர், திருவாய்மொழியான தேனிருக்க எனப் பாடினார். இவ்வாறு தமிழை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், எதிராசர் ஆகிய உடையவர் ஆகிய எம்பெருமானார் எம்பெருமானாரின் தமிழ் ஈரத்தமிழ் மட்டுமன்று; வீரத்தமிழும் ஆகும்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:18 am

முரட்டு பக்தி!
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 Z2JgMU6
ராமானுஜரின் இளைய தாயார் தீப்திபதியின் மகன் கோவிந்தன். இவருடைய செயல்கள் யாவும் வெளிப்பார்வைக்கு வித்தியாசமானதாகத் தோன்றும். ஆனால், அவை பக்தியின் உத்தம இலக்கணங்கள்!

ஒருமுறை கோவிந்தன், தனது இடது கையில் பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு வலது கையினால் அதன் வாயினுள் தோண்டித் துருவிக் கொண்டிருப்பதை ராமானுஜர் கண்டார். வலியினாலும், வேதனையினாலும் அந்தப் பாம்பு துடிதுடித்தது. கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தப் பாம்பு, கோவிந்தனின் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடியது. கோவிந்தா, அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்ததால் நீ தப்பித்தாய், அந்தப் பரிதாபமான ஜீவனை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கி விட்டாய் என்று கடிந்து கொண்டார் ராமானுஜர்.

அண்ணா, அந்தப் பாம்பு எதையோ விழுங்கிய போது அதன் அடித்தொண்டையில் ஒரு முள் மாட்டிக் கொண்டு துடிதுடிக்கக் கண்டேன். அதன் வேதனையைக் கண்டுதான் இவ்வாறு செய்தேன் என்றார் கோவிந்தன். ஸ்ரீராமானுஜர் பெரிய திருமலை நம்பியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, குருவுக்குப் படுக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார் கோவிந்தன். குருவின் படுக்கையில் கோவிந்தன் படுத்து எழுவதை ராமானுஜர் கண்டு கோபம் கொண்டு, என்ன ஒரு அபச்சார காரியம் செய்துவிட்டாய் கோவிந்தா? குருவின் படுக்கையில் படுத்து எழுந்தால் நரகம் நிச்சயம் என்பது தெரியாதா? என்று கடிந்து கொண்டார். குருவின் படுக்கை அவருக்கு சுகமாக உள்ளதா என்பதை சோதிக்கவே இப்படிப் படுத்து எழுந்தேன் அண்ணா. இச்செயல் அவரது சுகத்தை நிச்சயப்படுத்துமானால், அதற்காக நான் நரகத்தில் நித்திய வாசம் செய்யவும் தயார் என்றார் கோவிந்தன்! தனது சகோதரன் கோவிந்தனின் எளிமையையும், பணிவையும் உணர்ந்த ராமானுஜர், அவனைத் தவறாக எடை போட்டதற்கு வருந்தினர்.

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 LsVm9QJ




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 11:19 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 LPjoXLj




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 09, 2024 1:09 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 103459460 ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 6 3838410834

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக