புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
21 Posts - 38%
சிவா
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Manimegala
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
jairam
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_m10திருவள்ளுவர் பக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பக்கம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:16 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


திருக்குறள் பயன்

மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
மதுரை இளங்குமரனார்

திருக்குறள் செம்பொருள் நுகர்வு

"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்"
"நன்றின்பால் உய்ப்ப தறிவு"

திருக்குறள் முழக்கங்கள்

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்"
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை"
"திருக்குறள் நம் மறை"



திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் ஒப்பற்ற ஓர் உலகம்; அவர், வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு, அவ்வுலகுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்து, ஒப்பற்ற ஒரு நூலை ஆக்கிய பெருமகனார்.

திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றியவர்; தமிழகத்தில் வாழ்ந்தவர்; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்', 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்னும் இத்தகைய பெருநெறி பற்றியவர். இறைமை முதல் எல்லாம் பொதுமைக் கண் கொண்டு நோக்கியவர்: மாந்தரைத் தெய்வ நிலைக்கு ஏற்றும் மாணெறி படைத்த தெய்வர்.

திருவள்ளுவர் பன்மொழிப் புலமையர்: தம் காலத்து வழங்கிய நூற் பரப்புகளையெல்லாம் கண்டவர்; உலகியல், உயிரியல், உணர்வியல், உடலியல், குடியியல், படையியல், பொருளியல், தொழிலியல், அரசியல், மருத்துவ இயல், அருளியல், மெய்யியல் முதலாம் பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர்.

திருவள்ளுவர் இயற்கை இன்ப இல்வாழ்வை ஏற்று, அறவழி நின்று, பொருளீட்டி, இன்பந்துய்த்து, அறிவறிந்த நன்மக்களைப் பெற்று, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு குடும்பக் கடமையும் நாட்டுக் கடமையும் நானிலக் கடமையும் சீருறச் செய்து சிறந்த செவ்வியர்.

சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும், அறிவறிந்த நன்மக்கட்பேறு தம் பெற்றோரினும் இப்பேருலகுக்குப் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர்.

பெருமூதாளராக இலங்கிய நிலையில் தம் உண்மையறிவும் படிப்பறிவும் பட்டறிவும் மெய்யுணர்வுமாகிய எல்லாம் உலகை உய்விக்குமென்னும் அருளுள்ளத்தால் திருக்குறளை உலகுக்குத் தந்து தெய்வமாப் புகழ் எய்திய இறைமையர்.

இவை வள்ளுவ வழிக் கண்டவை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:23 pm

உலகப் பெருஞ் சான்றோர்கள் உரைப்பன:

திருக்குறளை பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று உள்ளத்தில் எழுந்த ஆர்வமேயாம்.

-காந்தியடிகள்

வள்ளுவர் தம் குறளில் எளிய உயரிய வாழ்க்கையை இயல்பாகச் சிந்தித்துள்ளார். மாந்தன் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய கடமைகள் உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தரும் விடைகள் பெருந்தன்மையுடையன; அறிவுக்குப் பொருந்துவன. இத்தகைய உயரிய அறிவு நிறை முதுமொழிகளை உலக இலக்கியங்கள் எவற்றினும் காண இயலாது.

-ஆல்பர்ட்டு சுவைசர்.

திருக்குறளை நன்றாய்க் கற்பவர்களுக்கு வேறு கல்வி வேண்டியது இல்லை என்பது என் துணிவு. பேரறிஞர் மெக்காலே பிரவுவின் புத்தகக் களஞ்சியம் முழுவதையும் விட இவ்வியப்புக்குரிய நூல் ஒன்று மட்டும் சாலச் சிறந்தது என்றும், மாந்தர் இனத்திற்கு மிக நன்மை பயக்கக் கூடியது என்றும் எண்ணுகிறேன்.

தமிழர்களாகிய நாம் நம்முடைய பழந்தமிழ் நாகரிகத்தை எல்லாம் இழந்து வருவதாகப் பகர்கிறோம். பொருநை காவிரி முதலிய ஆறுகளையோ திருக்கோயில்களையோ அரண்மனைகளையோ பிற வளங்களையோ இழக்க நேர்ந்தாலும் திருக்குறளை இழக்க மாட்டோம்.

-எம். எசு. மைக்கேல்.

ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலகமக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையே தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார். இவ்விரிந்த உணர்வால் மற்றை மனு முதலிய நூல்களில் கூறப்பெறும் கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது.

-அறிஞர் துறு.

இன்பத்துப்பாலை அனைவரும் குற்றமற்ற முறையில் படித்து இன்புறுமாறு எழுதப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது.

-போப் ஐயர்.

திருக்குறள் அமைப்பு வகையாலும் பாவகையாலும் வட மொழி தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்தியங்கும் தனிப் பெருமையுடையது.

-இராபர்ட்டு கால்டுவெல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:23 pm

திருக்குறள் மேலும் விரிந்துரைக்க இயலாத கட்டுத்திட்ட அமைப்புடையது. அது சீரிய பளிங்குக்கல் பரப்பு. அதன் ஒரு சிறு கல்லின் அமைப்பிலோ வடிவிலோ வண்ணத்திலோ சிறியதொரு மாற்றம் செய்தாலும் அப்பரப்பின் முழுதுறு அழகும் பழுதுறும். குறள் தூய செந்தமிழால் இயன்றதொரு நூல். நல்லொழுக்கமே விளை நிலமாய் அமைந்த ஒரு நாட்டிலன்றி இத்தகைய நூல் தோன்றாது.

-முனைவர் இலாசரசு.

திருக்குறள் வழங்கும் செவ்விய இன்பம் இத்தகையது என்று எந்த மொழி பெயர்ப்பாலும் ஒரு சிறிதாயினும் கொடுக்க இயலாது. திருக்குறள் உண்மையாகவே வெள்ளியால் செய்யப்பெற்ற எழிற்பேழையில் இட்டு வைக்கப்பெற்ற பொன் ஆப்பிள் பழம் போன்றது ஆகும்.

-முனைவர் கிரெளல்.

ஒரு நாள் வழக்கப்படி திருக்குறள் படித்தபோது 'தாமின் புறுவதுலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' எனக் குறள் ஒன்று தென்பட்டதும், இதைப் பார்த்தது தமிழர்கள் திருக்குறளைப் படித்துச் சுவைப்பதுபோல் உருசியக்காரர்களும் படித்துச் சுவைக்குமாறு ஏற்பாடு செய்யலாமா என்று நினைத்துக் கொண்டேன்.

-எம். அந்திரோனவ்.

திருக்குறளை ஓதி உணர்ந்தால் அல்லது எவனும் தமிழறிந்தவன் என்று கூறிக் கொள்ள முடியாது.

-பிரடெரிக்கு பின்கட்டு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:24 pm

வள்ளுவத்தின் வான்புகழ்

தால்சுதாய் 1906-இல் 'இந்து ஒருவருக்கு எழுதப்படும் கடிதம்' என்பதை எழுதியுள்ளார். அதில் திருக்குறளை 'இந்துக்களின் குறள் (The Hindu Kural) என்கிறார். அதில் தம் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவை இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் ஆகும். குறட்பாக்களைக் குறிப்பிடுவதுடன் விளக்கவுரையும் வரைகின்றார். இக்குறட்பாக்கள் தால்சுதாயின் இன்னாசெய்யாமை (அகிம்சை)க் கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவதைப் பற்றிய அவருடைய சிந்தனைக்கு உரமாக அமைந்தன. தால்சுதாயின் இக் கடிதத்தினால்தான் காந்தியடிகள் திருக்குறளை அறிந்து கொண்டு, ஏரியல் என்பார் மொழி பெயர்த்த பிரெஞ்சு மொழி பெயர்ப்பு நூலைப் படித்து அதன் சிறப்புணர்ந்தார்.

"உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

என்னும் குறளைக் காட்டி "இதைவிடத் தெளிவாக இறப்பைப் பற்றிக் கூற இயலுமா?" என வினாவுகிறார்.

இங்கர்சால் என்னும் பகுத்றிவாளர் திருக்குறளிடத்துப் பேரீடுபாடு கொண்டு இருந்தார். திருவள்ளுவருடைய கட்டற்ற சிந்தனைப் போக்கும், அறிவை முதன்மையாகப் போற்றும் பண்பும் இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

"அறிவு அற்றம் காக்கும் கருவி" (321)

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (453)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (424)

என்னும் குறட்பாக்களை இங்கர்சால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

-சான்றோர் கண்ட திருவள்ளுவர் 328

"இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து"

என்னும் பாடலைச் செருமானிய அறிஞர்கால் கிரெளல் என்பவர் அறிந்தார். அதன் பொருள் ஆழத்திலும் கலை அழகிலும் ஈடுபட்டுத் திருக்குறளை முழுமையாகக் கற்றார். பின்னர் 1754-இல் செருமானிய மொழியிலும் 1856-இலத்தீன் மொழியிலும் திருக்குறளை மொழி பெயர்த்தார்.

உருசிய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுத்துளையாச் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அரு நூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும்.

விக்டோரியாப் பேரரசியார் தம் மறை நூலைப்போலப் போற்றி வைத்திருந்த நூல் திருக்குறள். காலையில் கண்விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளைக் கொண்டு இருந்தார் என்பது அவரது பெருநிலைச் சான்றாவதுடன் திருக்குறளின் பெருமைச் சான்றுமாகும்.

இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைத்துப் போற்றப்படும் திருநூல் திருக்குறள் ஆகும் என்பர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:25 pm

திருக்குறளால் தோன்றிய நூலகம்

தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த சரபோசி மன்னர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அப்படியே கல்கத்தாவில் இருந்த அரசப் பேராளரைக் கண்டு மகிழ்ந்தார். அரசப் பேராளர் திருக்குறளை ஆங்கில மொழி பெயர்ப்பு வழியாகக் கற்றிருந்தவர். அதனால் தமிழ்ப் பகுதியில் ஆட்சி நடத்தும் சரபோசியின் வழியே திருக்குறளைப் பற்றி அறிய விரும்பினார்.

அதுவரை அதைப் பற்றி அறியாதிருந்த சரபோசி, "நான் ஊர் போய்ச் சேர்ந்ததும் அப்புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்" என்று விடை பெற்றுக் கொண்டார். அதன் பின்னரே தமிழ்ச் சுவடிகளைத் தொகுக்கத் தொடங்கினார். 'சரசுவதி மால்' என்னும் கலைக் கருவூலம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தது இத் தூண்டலேயாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 17, 2010 5:18 pm

திருக்குறளைப்பற்றி நாங்கள் அறிந்திடா பல தகவல்களைத் தொகுத்தளித்த சிவாவுக்கு தமிழ்வணக்கம்....! நன்றி சிவா..! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 26, 2010 7:50 am

இது எப்படி என் கண்களில் இத்தனை நாள் படாமல் இருந்தது என்று தெரியவில்லையே. இது போன்ற படைப்புகள் நம் ஈகரையை இலக்கிய தரமுள்ளதாகவும் ஆக்கும். இது வரை நான் அறியாத பல தகவல்களை அள்ளித்தந்த சிவாவுக்கு என் அன்னைத் தமிழ் சார்பில் நன்றி.

”இணையத் தெருவெங்கும் தமிழ் முழக்கம் முழங்கச் செய்வீர்”
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 26, 2010 11:13 am

Aathira wrote:
”இணையத் தெருவெங்கும் தமிழ் முழக்கம் முழங்கச் செய்வீர்”
[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 11:39 am

எனக்கும் தேவை படகூடிய ஒன்றுதான் அண்ணா தகவலை தந்ததுக்கு நன்றி



[You must be registered and logged in to see this image.]

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Mar 26, 2010 11:42 am

அறியா தகவல்களை அறிய செய்தமைக்கு மிக்க நன்றி தோழர்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 12:31 pm

வான் புகழ் வள்ளுவனை பற்றி நான் தெரிய சொன்னிர்கள் .........
நன்றி............

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக