புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_m10ஸ்ரீமத்பகவத்கீதை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீமத்பகவத்கீதை


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:43 pm

ஸ்ரீமத்பகவத்கீதை - அர்ஜுந விஷாத யோகம்

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா॥

அத ப்ரதமோத்யாய
அர்ஜுந விஷாத யோகம்

த்ருதராஷ்ட்ர உவாச


தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥

(திருதராஷ்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருட்ஷேத்திரத்தில் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:44 pm

ஸம்ஜய உவாச।

த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥

(சஞ்ஜயன் கூறினார்: மன்னனே, பாண்டுவின் புதல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆசிரியரை அணுகிப் பின்வருமாறு பேசலானான்.)

பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

(ஆசிரியரே, துருபதகுமாரனான உங்கள் சீடனால் மிகத் திறமையாக அணிவகுக்கப்பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனையைப் பாருங்கள்.)

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।
யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥

(இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த மகாரதர்களும் இருக்கின்றனர்.)

த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥

(த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித் குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த, பலமிக்க போர்நாயகர்களும் இருக்கின்றனர்.)

யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥

(வீரனான யுதாமன்யு, பலமிக்க உத்தமௌஜன், மற்றும் சுபத்ரையின் புதல்வன், திரௌபதியின் குமாரர்கள் இவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே சிறந்த ரதப்போர் வீரர்கள்.)

அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥

(அந்தணரில் சிறந்தவரே, எனது சேனையை நடத்தும் தகுதி வாய்ந்த தலைவர்களை நீர் அறியும்படி கூறுகின்றேன்.)

பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥

(எப்போதும் போரில் வெற்றிகாண்பவரான தாங்களும், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், ப+ரிசிரவஸ் என்ற சோமதத்தனின் குமாரன் போன்ற பெரும் வீரரும் இருக்கின்றீர்கள்.)

அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥

(எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற வீரர்கள் பிறரும் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பலவிதமான ஆயுதங்களை உடையவர்களாயும், போர்க்கலையில் மிகத் தேர்ந்தவர்களாயுமிருக்கின்றனர்.)

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥

(பாட்டனார் பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது பலம் கணக்கிலடங்காதது. ஆனால் பீமனால் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக் கூடியதாக இருக்கின்றது.)

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥

(படை அணிவகுப்பின் முக்கியமான போர்முனை நிலைகளிலிருந்து கொண்டு நீங்களெல்லோரும் பாட்டனார் பீஷ்மருக்குப் பாதுகாப்புக் கொடுப்பீர்களாக.)

தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥

( பிறகு குருவம்சத்தின் பெருவீர முதியவரும், போர் வீரரின் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனைபோன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்வைக் கொடுத்தார்.)

தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:।
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥

(அதன்பின் சங்குகள், குழல்கள், முரசுகள், பறைகள், கொம்புகள், இவை ஒரே சமயத்தில் முழக்கப்பட, அவ்வதிர்வு கிளர்ச்சியை எழுப்புவதாக இருந்தது.)

தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ।
மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥

(மறுதரப்பில், வெண்புரவிகள் ப+ட்டிய மிகச் சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை முழக்கினர்.)

பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥

(பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்ச்சஜன்யத்தை முழக்கினார். அர்ஜுனன் தனது தேவதத்தத்தையும், பெருந் தீனிக்காரனும், வீர சாகசங்களைப் பரிபவனுமான பீமன் பௌண்ட்ரமெனும் பெரும் சங்கையும் முழக்கினர்.)

அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:।
நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥

காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:।
த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥

த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே।
ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥

(குந்தியின் புதல்வனான மன்னன் யுதிஷ்டிரன் அநந்தவிஜயமெனும் சங்கையும், நகுலனும் ஸஹாதேவனும் ஸ{கோஷம், மணிபுஷ்பகமெனும் சங்குகளையும் ஒலித்தனர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் போர்வீரனான சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், வெற்றி கொள்ளப்படாதவனான ஸாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் பெரும் பலம் பொருந்திய, சுபத்ரை மகனான அபிமன்யு போன்றவர்கள் தத்தம் சங்குகளை முழங்கினர்.)

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்।
நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥

(சங்கொலிகளின் பல்வேறு முழக்கங்கள் பேரொலியாக எழுந்து ப+மியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறலாயின.)

அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:।
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥

ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே।

(மன்னனே, அந்த நேரத்தில், ஹனுமான் கொடியை உடைய தேரிலமர்ந்திருந்த பாண்டு மகன், அர்ஜுனன், திருதராஷ்டிரரின் மகன்களை நோக்கி அம்பெய்யத் தயாராக வில்லை ஏந்தி, ரிஷிகேசனான ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிப் பின்வருமாறு கூறலானான்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:44 pm

அர்ஜுந உவாச।

ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥

யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥

(அர்ஜுனன் கூறினான்: அழிவற்றவரே! போர்புரியும் ஆவலுடையவராய் இங்கு அணிவகுத்துள்ளவரில், நான் எவரோடு இந்தப் பெரும் போர் முயற்சியில் பொருத வேண்டும் என்று பார்க்கும்படியாக, எனது தேரைச் செலுத்தி இரு படையினருக்கு நடுவே நிறுத்துவீராக.)

யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:।
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥

(திருதராஷ்டிரனின் கெடுமதியுடைய மகன் துரியோதனனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு இங்கு போர்புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்கட்டும்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:45 pm

ஸம்ஜய உவாச।

ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத।
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥

(ஸஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவனே, அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனது மிகச் சிறந்த தேரை இருதரப்புச் சேனைகளின் நடுவே செலுத்தி நிறுத்தினார்.)

பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்।
உவாச பார்த பஷ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி॥ 1.25 ॥

(பீஷ்மர், துரோணர், மற்றும் பல உலகத் தலைவர்களின் முன்னிலையில், ~~பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்|| என்று ஹ்ருஷீகேசர் கூறினார்.)

தத்ராபஷ்யத்ஸ்திதாந்பார்த: பித்ருநத பிதாமஹாந்।
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ருந்புத்ராந்பௌத்ராந்ஸகீம்ஸ்ததா॥ 1.26 ॥

ஷ்வஷுராந்ஸுஹ்ருதஷ்சைவ ஸேநயோருபயோரபி।

(இருதரப்புச் சேனைகளிடையே அங்கு தந்தைமாரும், பாட்டனார்களும், ஆசிரியர்களும், மாமாக்களும், சகோதரர்களும், மகன்களும், பேரன்களும், நண்பர்களும், மாமனார்களும் மற்றும் பல சன்மை விரும்பிகளையும் போர்க்களத்தில் கூடியிருக்கக் கண்டான் அர்ஜுனன்.)

தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்॥ 1.27 ॥

க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்।

(குந்திமகனான அர்ஜுனன் அந்த நண்பர்களையும், உறவினர்களையும் கண்டபின், பரிவால் நிறைந்து இவ்வாறு கூறலானான்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:45 pm

அர்ஜுந உவாச।

த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்॥ 1.28 ॥

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி।

(அர்ஜுனன் கூறினான்: என் அன்புக்குரிய கிருஷ்ணா, போரிடும் உணர்வோடு என்முன் கூடியுள்ள எனது நண்பரையும், உறவினரையும் கண்டு என் உடல் நடுங்கி வாய் உலர்வதாக உணர்கிறேன்.)

வேபதுஷ்ச ஷரீரே மே ரோமஹர்ஷஷ்ச ஜாயதே॥ 1.29 ॥

காண்டீவம் ஸ்த்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே।

(என் உடல் முழுதும் நடுங்குகின்றது. மயிர்க்கூச்செறிகின்றது. என் வில்லான காண்டீபம் கைகளிலிருந்து நழுவுகின்றது. என் சருமம் எரிகின்றதே.)

ந ச ஷக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந:॥ 1.30 ॥

நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேஷவ।

(இனியும் இங்கு என்னால் நிற்க முடியாது. என் மனம் குழம்புகின்றது. நான் என்னையே மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுணங்களையே நான் காண்கின்றேன்.)

ந ச ஷ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே॥ 1.31 ॥

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச।

( சொந்த உறவினரை இப்போரில் கொல்வதால் என்ன நன்மை வருமென்பதை என்னால் காணமுடியவில்லை. இதிலே பெறக்கூடிய வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.)

கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா॥ 1.32 ॥

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச।
த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச॥ 1.33 ॥

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:।
மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா: ஷ்யாலா: ஸம்பந்திநஸ்ததா॥ 1.34 ॥

ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ அபி மதுஸூதந।
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே॥ 1.35 ॥

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜநார்தந।

(அரசுகளும், இன்பமும், ஏன் வாழவே கூட, யாருக்காய் அவைகளை நாம் விரும்புவோமோ அவர்களே இந்தக் களத்தில் போர்புரியத் தயாராயிருக்க, என்ன பலன் தரப்போகின்றன? மதுசூதனரே, ஆசிரியரும், தந்தையரும், பிள்ளைகளும், பாட்டனார்களும், மாமன்களும், மாமனார்களும், பேரன்களும், மைத்துனரும், பிற உறவினரும் தங்கள் வாழ்வையும், செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, நான் வாழ்வேனாயினும் இவர்களைக் கொல்ல நான் ஏன் விரும்பவேண்டும்? இந்த ப+மி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்பதாயினும், உயிர்களையெல்லாம் காப்பவரே, நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:46 pm

பாபமேவாஷ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:॥ 1.36 ॥

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்।
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ॥ 1.37 ॥

(இவ்வாறான ஆக்ரமிப்பாளரைக் கொல்வதால் நமக்குப் பாபமே வந்து சேரும். எனவே திருதராஷ்டிரர் மக்களையும், நண்பரையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. திருமகளின் கணவரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?)

யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோபஹதசேதஸ:।
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்॥ 1.38 ॥

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும்।
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர்ஜநார்தந॥ 1.39 ॥

(ஜனார்த்தனரே! பேராசையால் உந்தப்பட்டு, நண்பருடன் கலகம் செய்வதிலும், குலநாசம் செய்வதிலும் இந்த மனிதர் பாவமெதையும் காணவில்லையாயினும், குற்றமென்றறிந்த நாமேன் இச்செயல்களில் ஈடுபட வேண்டும்?)

குலக்ஷயே ப்ரணஷ்யந்தி குலதர்மா: ஸநாதநா:।
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ அபிபவத்யுத॥ 1.40 ॥

(குலம் அழிவடைவதால் நித்தியமான குலவறம் கெடுகின்றது. இதனால் வமசத்தில் மீந்திருப்பவர் அறமற்ற பழக்கங்களில் ஈடுபடுவர்.)

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:।
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:॥ 1.41 ॥

(குலத்தில் அறமின்மை தலையெடுக்கும்போது, கிருஷ்ணரே, குடும்பப் பெண்கள் களங்கப்பட, பெண்மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது.)

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச।
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:॥ 1.42 ॥

(தேவையற்ற ஜனத்தொகை பெருகுவதால் குடும்பத்திற்கும் குலப்பண்பாட்டை அழிப்போருக்கும் நரகநிலை உருவாக்கப்படுகின்றது. அதுபோன்ற சோரம் Nபுhன குலங்களில் முன்னோருக்கு உணவும் நீரும் அளிக்கும் கருமாதிகள் நடப்பதில்லை.)

தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:।
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஷ்ச ஷாஷ்வதா:॥ 1.43 ॥

(குடும்பப் பண்பாட்டை அழிப்பவரின் தீய செயல்களால், எல்லாக் குலவறங்களும், குடும்ப நலச் செயல்களும் அழிவுறுகின்றன.)

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந।
நரகே நியதம் வாஸோ பவதீத்யநுஷுஷ்ரும॥ 1.44 ॥

(மக்களைக் காக்கும் கிருஷ்ணரே, குலப் பண்பாட்டைக் கெடுப்பவர் நரகத்தில் சதா வாழ்வதாக சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.)

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்।
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:॥ 1.45 ॥

(ஐயகோ! அரச போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உந்தப்பட்டுப் பெரும் பாவங்களைப் புரிய நாம் தயாராவது என்ன விந்தை?)

யதி மாமப்ரதீகாரமஷஸ்த்ரம் ஷஸ்த்ரபாணய:।
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத்॥ 1.46 ॥

(திருதராஷ்டிரர் மக்களுடன் போர்புரிவதை விட, ஆயதமின்றியும், எதிர்ப்புக் காட்டாமலும் அவர்களால் நான் கொல்ல்ப்படுவதையே சிறந்ததாகக் கருதுவேன்.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:46 pm

ஸம்ஜய உவாச।

ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஷத்।
விஸ்ருஜ்ய ஸஷரம் சாபம் ஷோகஸம்விக்நமாநஸ:॥ 1.47 ॥

(ஸஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன் போர்க் களத்தில் இவ்வாறு மொழிந்த பின் வில்லையும் அம்புகளையும் ஒருபுறம் எறிந்து விட்டு, மனம் கவலையால் நிறைய, தேரில் அமர்ந்து விட்டான்.)

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோ அத்யாய:॥ 1 ॥

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:48 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்விதீயோ அத்யாய:। ஸாங்க்யயோக:


ஸம்ஜய உவாச।

தம் ததா க்ருபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:॥ 2.1 ॥

(ஸஞ்ஜயன் கூறினான்: பரிவும், கவலையும் நிறைந்து கண்ணீர் ததும்ப அமர்ந்துவிட்ட அர்ஜுனனைப் பார்த்து மதுஸ{தனரான ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.)

ஸ்ரீபகவாநுவாச।

குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥

(முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.)

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥

(ப்ருதாவின் புத்திரனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:49 pm

அர்ஜுந உவாச।

கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதந।
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந॥ 2.4 ॥

(அர்ஜுனன் கூறினான்: மதுவை அழித்தவரே (கிருஷ்ணரே), எனது வந்தனைக்குரிய பீஷ்மர், துரோணர் முதலியோர்களை போரில் எதிர்த்து எவ்வாறு அம்புகளுடன் தாக்குவேன்?)

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே।
ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்॥ 2.5 ॥

(எனது ஆசிரியர்களான பெரு மக்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட பிச்சையெடுப்பது மேல். அவர்கள் பேராசை கொண்டவர்களாயினும் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால் நாம் குருதிக்கறை படிந்த இன்பங்களை அனுபவிப்வராவோம்.)

ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தே அவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:॥ 2.6 ॥

(எது சிறந்ததென்றும் நாம் அறியோம். அவர்களை நாம் வெல்லுதலா அல்லது அவர்கள் நம்மை வெல்வதா. யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அந்த திருதராஷ்டிரர் மக்களே நம் முன்பு போர் செய்யத் தயராக நிற்கின்றனரே.)

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:।
யச்ச்ரேய: ஸ்யாந்நிஷ்சிதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தே அஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்॥ 2.7 ॥

(இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்தவனாயிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று தெளிவாக்கும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். உம்மிடம் புகலிடம் கொண்ட சீடன் யான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.)

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்।
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்॥ 2.8 ॥

(என் புலன்களை வறட்டுகின்ற இந்தத் துன்பத்தைப் போக்கடிக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகத்துத் தேவர்களைப் போல இவ்வுலகை எதிரொருவரின்றி ஆளும் அரசைப் பெறினும் இதை என்னால் அழிக்க முடியாது.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 3:49 pm

ஸம்ஜய உவாச।

ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரம்தப:।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ॥ 2.9 ॥

(ஸஞ்ஜயன் கூறினான்: எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன் இவ்வாறு கூறி, ~~கோவிந்தா! நான் போரிடேன்|| என்று கூறிப் பேச்சற்று அமர்ந்தான்.)

தமுவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸந்நிவ பாரத।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:॥ 2.10 ॥

(பரத குலத் தோன்றலே, அவ்வமயம், இரு தரப்புச் சேனைகளுக்கிடையே, துயரத்தால் பீடிக்கப்பட்டமர்ந்திருந்த அர்ஜுனனனைப் பார்த்து, புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.)

Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக