புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 20%
Manimegala
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்


   
   

Page 2 of 27 Previous  1, 2, 3 ... 14 ... 27  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 2:15 am

First topic message reminder :

ஈழநூல்
71
நூல்
ஆவியுலகத்தாரோடு என் அனுபவம்
ஆசிரியர்
நவரத்தினம்
மின்னூலாக்கம்
இ. பத்மநாப ஐயர்
மின்பதிப்பு ஈழநூல்
ஆவியுலகத்தாரோடு என்
அனுபவம்

நவரத்தினம்

------------------------------------

ஆவியுலகத்தாரோடு
என் அனுபவம்

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமமாய்
நிறைவாய்
நீங்காச்
சுத்தமுமாய்த் துரமுமாய்த் சமீபமுமாய்த் துரிய
நிறை சுடராய்
எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்
நின்ற ஒன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தை செய்வாம்
-தாயுமான
சுவாமிகள்


முகவுரை

இந்தியாவின் பழமையான பண்பாட்டின்மீது உள்ள
விருப்பம், இது காறும் எனது குடும்ப வி~யமாகக் கருதியிருந்த சில சொந்த அனுபவங்களை
வெளியிடும்படி என்னைத் தூண்டியுள்ளது. அறியப்படாத பிரிந்த ஆவிகளின் உலகங்களைப்பற்றி
ஆராய்ச்சி நடத்தும் பலருக்கும், மரணத்தின் பின் வாழ்வைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள
சொந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த எனது அனுபவங்கள் உதவி புரியும்.

நான்
இறந்தவர்களுடன் பேசியதைப்பற்றிய முழு விபரங்களையும் குறித்துவைக்கவில்லை. அவைகளில்
அநேகம் என் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. ஆவியுலக ஆராய்ச்சி நடத்துபவர்களுக்கு
உதவி புரியக்கூடிய பொது வி~யங்களை மட்டும் பின்வரும் பக்கங்களில் விபரிப்பதற்கு
நான் முயற்சித்துள்ளேன்.

ஆவியுலகத்தில் என் பிரிந்த உறவினர்களுடன்
தொடர்புகொள்ள 1943-ம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்திலிருந்து எனக்கு உதவி புரிந்த
பேராவி, 1948-ம் வருடம் ஆனி மாதத்தில் உதவி செய்யாது விட்டது. ஏறக்குறைய ஒன்றரை
வருடங்களாக ஆவியுலகிலுள்ள என் உறவினர்களுடன் பேச முடியவில்லை. பின்னர்,
இறைவருளினால் 1950-ல் வேறோர் பேராவியின் உதவியைப் பெறக்கூடியதாய் இருந்தது.
“பிரிந்த ஆவிகளைப்பற்றிய எனது பரிசோதணைகள்” (ஆல நஒpநசiஅநவெள றiவா னுநியசவநன ளுழரடள)
என்ற எனது ஆங்கிலப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட சில ஆவியுலகத் தொடர்புகளை
இப்புத்தகத்தில் சேர்த்துள்ளேன்.

தேசீய உளநூற் கூட்டுறவை ஸ்தாபித்தவரான
திரு. ~hடெஸ் மன்ட் (ஆச. ளூயற னுநளஅழனெஇ குழரனெஉச ழக வாந ஐவெநசயெவழைழெயெட ஐளெவவைரவந
கழச Pளலஉhiஉயட சுநளநயசஉh) என்பவராலும், பல்கலைக் களகங்களின் வௌ;வேறு
விரிவுரையாளர்களாலும், இப்புத்தக வாசகர்களாலும் அனுப்பப்பட்ட நல்ல குறிப்புக்கள்
ஆவி சம்பந்தமாக எனக்குள்ள ஆர்வத்தை ஸ்திரப்படுத்தியுள்ளன.

இதைப் புத்தக
ரூபமாக வெளியிடுவதற்கு உதவிபுரிந்ததற்காக கொழும்பு வீரகேசரி
அச்சியந்திரசாலையாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகாசி,
1951. ஊ. ளு.
நவரத்தினம்.
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 2:50 am

வருகிறார்கள்.இனி பெருங்கரடி (துருவம்)உலகம் அமைதியில் வாழும். "

பண்டைக்கால மதங்களைப் போல இறப்புக்குப் பிந்தைய வாழ்வு பற்றியும்....ஏன் நித்திய வாழ்வு பற்றியும் கூட உறுதி மொழிகள் அளிக்கப்படுவதால் சிறுபிள்ளைத்தனமான அற்புதங்களுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள்.

ஜே.பி.எஸ் ஹால்தேன் என்னும் பிரித்தானிய அறிவியலாளர் நித்திய வாழ்வு பற்றிய ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறார்.அவர் ஆர்வம் செலுத்திய பல துறைகளுள் மக்கள்தொகையின் மரபீனித்துறையும் அடங்கும் என்பதோடு அத்துறையின் முன்னோடிகளிலொருவர் ஆவார். மிகத் தொலைவானதொரு எதிர் காலத்தில் தாரகைகள் ஒளியிழந்து அண்டவெளி முழுதும் குளிர்ந்து ஒரு மெல்லிய வாயு படரும் என அவர் யூகித்தார்.இருந்த போதிலும்,நாம் நீண்ட காலம் காத்திருந்தால்

அந்த வாயுவின் அடர்த்தியின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்கலாம்.நீண்டதொரு காலப்போக்கில் நமது பிரபஞ்சம் போன்ற ஒன்றை மறு படைப்பு செய்வதற்கு இந்த ஏற்றத்தாழ்வுகள் போதுமானதாக இருக்கும்.இந்தப் பிரபஞ்சம் அளவற்ற பழமை வாய்ந்தது எனின் அப்படிப்பட்ட மீளுருவாக்கங்கள் பலப்பலவாக இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எண்ணற்ற பால் வெளிகள், தாரகைகள்,தாவரங்கள்,உயிரினங்கள்கொண்ட அளவற்ற பழமை வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் உங்களோடும் உங்களை நேசித்தவர்களோடும் இதே போன்ற ஒரு பூமி தோன்றி உங்கள் அனைவரையும் இணைத்து வைக்கும்.என்னல் எனது பெற்றோர்களை சந்திக்க முடியும்.அவர்களுக்குத் தெரிந்திராத பேரக்குழந்தைகளை அறிமுகப் படுத்த முடியும்.இப்படி எல்லாம் ஒரு முறை மட்டும்தான் நிகழும் என்பதில்லை.அளவற்ற முறைகள் இவ்வாறு நிகழும்.

இருந்த போதிலும் மதங்கள் வழங்குவதைப் போன்ற ஆறுதல் அல்ல இது.இந்த நேரத்தில்,அதாவது நானும் எனது வாசகர்களும் பகிர்ந்து கொள்ளும் இந்த நேரத்தில்,என்ன நடந்தது என்பதை நம்மில் ஒருவராலும் நினைவு கூற முடியவில்லை என்றாலும்,உடலளவில் மீண்டும் எழுவது என்பது என் காதுகளில் மட்டுமாவது முழுமையாக ஒலித்துக் கொண்டிருக்கும். .இந்த சிந்தனையில் அளவற்றது என்பதன் பொருளை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.ஹால்தேனின் சித்தரிப்பின்படி பிரபஞ்சங்கள் இருக்கும்,உண்மையில் அவை எண்ணற்றதாக இருக்கும்.அவற்றின் முந்தைய பல சுழற்சிகள் பற்றிய நினைவுகளை நமது மூளை

முழுமையாக இருத்தி வைத்திருக்கும் இன்னும் இருப்பில் வர இருக்கின்ற எல்லா பிரபஞ்சங்களைப் பற்றிய நினைவுகளும்(இன்னும் என்பது ஒரு முறைதான் என்று பொருள்படாது,எண்ணற்ற முறை எனவாகும்.) இந்த சுழற்சியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அத்தனையும் தாண்டி முன் செல்லும் துயரங்களாகவும் பயங்கரங்களாகவும் உறுதி செய்யப்படும்.திருப்தி என்பதோ நமதருகில் இருக்கிறது_அது மட்டுப்பட்டதாகஇருந்த போதிலும்.

நாம் எந்த மாதிரிப் பிரபஞ்சத்தில் வசிக்கிறோம்? காலப்போக்கில் பிரபஞ்சம் விரிவடைவதை மாற்றியமைக்கப் போதுமான அளவு பொருள்(Matter)இருக்கிறதா?வெற்றிடங்களில் எற்படும் மாற்றங்களின் குணாம்சம் எப்படி இருக்கிறது? என்ற பல குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிப்பதில்தான் ஹால்தேனின் ஆறுதல் வார்தைகள் நிலைநிற்க முடியும்.இறப்புக்குப்பின் உயிர் வாழும் ஆழ்ந்த விருப்பம் உள்ளவர்கள்;அண்ட கோளவியல்(cosmology),கதிரியக்க ஆற்றல் அலை வீச்சின் ஈர்ப்பு சக்தி,அடிப்படைத்துகள் அறிவியல் மற்றும் வரம்பு கடந்த கணிதம் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் எனத்தோன்றுகிறது.

அலெக்சாந்த்ரியாவின் பண்டைய தேவாலயப் பாதிரியாரன கிளமண்ட் என்பார் கிரேக்கர்கள் பற்றிய தனது விளக்க உறையில் (இது 00190 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) பல தெய்வ வழிபாட்டுப் பண்டைய முறையின் நம்பிக்கைகளை வஞ்சப்புகழ்ச்சியாய் தோன்றும் விதத்தில் மறுதலித்தார்: "வளர்ந்த மனிதர்களை இத்தகைய கதைகளைக் கேட்க அனுமதிப்பதில் இருந்து நாம் விலகி நிற்கிறோம். தேம்பி அழுதால் கூட நமது குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் புராணக்கதைகள் சொல்லும் பழக்கம் இல்லை."

நமது காலத்தில் கடுமை குறைந்த வறையறைகளை நாம் வைத்திருக்கிறோம்.சாந்தாக்ளாஸ்,ஈஸ்டர் பன்னி டூத்·பேரி போன்ற கதைகளை அவை உணர்ச்சிகரமாக இருக்கின்றன என்பதால் குழந்தைகளுக்குச் சொல்கிறோம்.ஆனாலும் அவர்கள் வளரும் முன்னரே தவறான கருத்துகளையும் அய்யங்களையும் போக்கி விடுகிறோம்.ஏன் இப்படிப் பின் வாங்குகிறோம்? ஏனெனில்,வயது வந்தவர்கள் என்ற நிலை வரும்போது,இந்த உலகம் எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் தான்குழந்தைகளின்

நலன் அடங்கி இருக்கிறது.இன்னமும் சாண்டாக்லாஸ் பற்றி நம்பும் வயது வந்தவர்கள் பற்றி காரணகாரியத்தோடு நாம் கவலைப் படுகிறோம்.

சமயங்களை வலியுறுத்தும் தத்துவ வித்தகர் டேவிட் ஹ்யூம் எழுதினார்:

"இத்தகைய விஷயங்களில் தங்கள் மனதில் எழும் அய்யங்கள் பற்றி தமது சொந்த மனசாட்சியுடன்

கூட இசைந்து போக மனிதர்கள் துணிவதில்லை.கண் மூடித்தனமான நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

தங்களது உண்மையான அவநம்பிக்கையை மறைத்து நேரடியான மத வெறியால் ஆணையிட்டுச் சொல்கின்றனர்."

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 2:55 am

ஆவிகள் உலகம்

எல்லார்க்கும் இருக்குற ஒரு பொதுவான கேள்விதான்.நம்ம எல்லாம் செத்ததுக்கு அப்புறம் எங்க போறோம்? இதுக்கு ஒவ்வொரு மதத்திலேயும் ஒரு நம்பிக்கையை அடிப்படையா வச்சு சொல்றாங்க.இறந்த பிறகு இன்னொரு உலகம் இருக்கு.அங்க நமக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும்,அதுவும் நம்ம இந்த உலகத்துல செஞ்ச நன்மை தீமைகளை பொறுத்து அப்படினு.

அமெரிக்க நாட்டுல இத பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.ஒரு இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதரை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து விளைவை பார்க்கும்பொழுது அவருடைய ஆத்மா கண்ணாடி பெட்டியின் ஓரத்தில் ஒரு விரிசலோடு சென்றிருக்கிறது.அந்த ஆத்மா மனித உடலின் எந்த பாகத்தின் வழியாக போகிறது என்ற கேள்விக்கு நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நம்முடைய உச்சந்தலையில் உள்ள ஒரு சிறு பள்ளத்தின் வழியாக என்று விடை கிடைக்கிறது.

ஆராய்ச்சி முடிவானது சில ருசிகரமான தகவல்களையும் தருகிறது.இறந்த ஆத்மாக்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை பின் ஆவியாக உருவெடுத்து நிறைவேற்றிக்கொள்கின்றது .அதிலும் நல்ல ஆத்மா,தீமை ஆத்மானு இரண்டு பிரிவுகளாம்.ஆவிகள் உல‌கினை பற்றிய ஆராய்ச்சியை கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.அதில் ஆவிகளுக்கும் மாந்த்ரீகர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டெனவும்,அவர்கள் செய்யும் சில விசேஷ பிராத்தனைகள் மூலம் குடும்ப பிளவு,குடும்ப இணைப்பு,செயலிழக்கசெய்வது போன்றவற்றை வெகு சுலபமாக செய்யலாம் என்பதை காட்டினார்கள்.இதனை ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்ளவே செய்தனர்.

ஆக கடவுள் இருக்கிறார்னு சொல்றவங்க இந்த ஆவி உலகத்தயும் ஒத்துக்குறாங்க.முடிவாக‌ யாருக்கும் கெடுத‌ல் செய்யாம‌லும்,நல்ல‌ க‌ட‌வுள் ப‌க்தியும் ,வளமான யோகா ப‌யிற்சியும் இருக்கும் ஒருவ‌னை எந்த ஒரு தீய‌ ச‌க்தியும் தொட‌ இய‌லாது என்ப‌து என் க‌ருத்து.(ஆவிக‌ள்‌ ப‌த்தி ந‌ம‌க்கு தெரிஞ்ச‌த‌ எழுதுனா "அட‌ பாவி" ங்குறானுங்க‌!)

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 2:58 am

கண்ணதாசனின் ஆவி எழுதிய பாடல்!

மெய்யோடு பொய்யாக ஊர் தூ‌ங்கும் நேரம்
இருளோடு ஒளியிங்கு போர் செய்யும் காலம்
கோட்டானும் சாத்தானும் இரை தேடும் ஜாமம்
இருந்தாலும் இறந்தாலும் பொல்லாதது ஏமம்..

இரா படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை எழுதியவர் மறைந்த கவியரசர் கண்ணதாசன் என்றால் நம்ப முடிகிறதா? என்ன விவகாரம் என்பதை சொல்லும் முன் இரா படம் பற்றி ஒரு சின்ன அவுட்லைன்.

ஆவி உலகம் பற்றி ஆராய முணாறு ப‌ங்களாவுக்கு செல்கிறார் ஒருவர். அ‌ங்கு அவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவர் மரணத்துக்கு என்ன காரணம் என்று போகிறது கதை.

இந்தப் படத்துக்காக மேலே உள்ள பாடலை கண்ணதாசனின் ஆவியை வரவழைத்து எழுதி வாங்கினார்களாம். ‌சி.எம். ரத்தினசாமி என்ற மீடியத்தின் துணையுடன் இதனை சாதித்ததாக கூறினார்கள் படத்தின் இயக்குனர்கள். (இராவை 3 பேர் இணைந்து இயக்குகிறார்கள்).

கண்ணதாசன் முடிக்காமல்விட்ட இயேசு காவியத்தை ரத்தினசாமியை வைத்துதான் முடித்தார்களாம். அவர்தான் இந்தப் பாடலையும் கண்ணதாசனின் ஆவியுடன் தொடர்பு கொண்டு எழுதி வா‌ங்கினாராம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:17 am

21. உலவும் ஆவிகள்

இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.

அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமானபதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்!

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:18 am

1

இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர்,இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும்ந ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல, இறந்தவருடைய வாக்கே ன்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார். “தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே” என்றுபார்த்தார். ‘உருது’ ஒரு வார்த்தையும் தெரிஆத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில்பதில் வரவே ஆபிஞரும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபிசரும் விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்உ அறிவித்து விட்டாள். அதன்படி அவர்க வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார் ஆனதால் நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் கல்ல முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

2

மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில், அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத்திலிருந்து பல அரிய விஷயங்களை அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். ஒரு நாள் அவருடைய சட்டைப்பையில் போட்டு வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன் திருடியிருக்கலாம் என்று கருதி அவனைக் கடுமையாக்க்கோபித்து அடித்துவிட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்ததன்னுடைய கொழுந்தியாளோடுபேசியது காணாமற் போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும் பேசியதாகவும், அந்த ரூபாய் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக்க்குறைவாக அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக்கொண்டதாகவும், அந்த வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப் பாவத்தைப்போக்குவதற்கு அவனிடம் உணைமையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அந்தப்படியே நடந்து கொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள் நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்த கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:18 am

3

இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தைநீக்கல்:ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள புகழூரிலே ஒரு நாள் இரவு 1 மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆவி உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்0 தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன்தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன் அவனுடையமனைவியின் உடல் நிலை விஈயமாகவும் அவளூடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும் நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத்தயவு செய்து கூட்டிக் கொண்டு வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாராம்.இரவில் 1 மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன் தூங்கிக்கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால் விழித்துக்கொண்டிருக்கும்பொழுது தெருவாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன் வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதன்படி ஒரு வேலைக்காரனை அனுப்பி, ‘அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்; விழித்திருந்து உடனே கதவண்டை யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி வா; அல்லவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டிற்கு சன்று லேசாக்க் கதவைத் தட்ட, அவர் எழுந்து வந்து யாரென்று கேட்டு வ்வரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்து விட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம் அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம், ‘கவலைப்பட வேண்டாம், மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும் ; பிறக்கப்போவது ஆண்குழந்தை’என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எலா நலங்களும் உண்டாவதற்கு மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில இடையூறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை உற்சாகப்படுத்திஅனுப்பிவிட்டார்
.

பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரசவன் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம்.

இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம். இதனை உபமானமாக்க் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம் நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்க முடியும் என்பதை யாவரும் உய்த்து உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

4

இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம்முடிக்கச் செய்தல்:ஒருநாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர், அம்மைய நாயக்கனூருக்குத்தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற தம்தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்படியே அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி உலகத்தில் இருந்த மூத்த மகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் வந்திருப்பதாக அறிவித்தார்.அந்த அண்ணாவைப்பேச்ச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப் புத்தூரில் படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல் கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன் முன், அவனை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய், வேற் பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு வந்திருக்கிற காரிலேயே, நேராக்க் காட்டுப்புத்தூருக்குப் போய் அங்குள்ள தம் மகனைக்கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்பட வில்லை. தாம் மதுரையில் அநேகரைக் காக்க வைத்து விட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக அம்மையநாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப் போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர போவதாகவும் பதில் அறிவித்தார்.

ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப் புத்ததூருகுச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல் கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைப்பற்றித்தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி, தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு, அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.

அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார் சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு அறிவித்தது போல், படித்துக்கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று, கால தாமதமில்லாமல் கல்யாணமும் செய்துவிட்டார். நாங்களும் அக் கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.

ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக் கண்காணித்து வருகிறார்ர் என்பதும், அதற்கு இன்னது செய்ய வேண்டுமென்று அறிவிக ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிற தல்லாவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின் காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம் நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ளவும், இச்சம்பவன் உள்ளத்தைத்தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத்தூண்ட முடியாதன்றோ!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:28 am

சென்ற நூற்றாண்டின் இறுதிவரை இறந்தபின் என்ன நடக்கிறது எனபது பற்றிப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் பெருவாரியான மக்கள், விஞ்ஞானம், காலம் காலமாக ஆவி பற்றியும் ஆத்மா பற்றியும் தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைச் சிதைக்கின்றன எனக் கருதினார்கள். ஆவி உலகம் பற்றி நம்பிக்கை பெருகியது. இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள மக்கள் ஊடகங்களைத் துணை தேடலானார்கள். அவர்கள் இன்னமும் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதில் திட நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

1882ல் ஒரு உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டு இறப்புக்குப் பின் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் துவங்கின. ஆனால் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான நம்பும்படியான ஆதாரம் எதுவும் கிட்டவில்லை. 1926ம் ஆண்டு, Sir William Barrett என்ற ஆராய்ச்சியாளர், 'இறக்கும்போது புலப்படும் தோற்றங்கள்' (Deathbed Visions) என்ற தனது புத்தகத்தில், இறப்பவர்கள், இறப்பதற்குமுன், வேறொரு உலகத்தைக் காண்கிறார்கள், இறந்தவர்களுடன் பேசுகிறார்கள்” என்று சொல்கிறார். இறக்கும்போது இசையையும் அவர்கள் கேட்டதாகவும், உடலைவிட்டு ஆவிபிரிவதைக் காண முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால் இன்று வளர்ந்துவரும் மருத்துவ உலகில், இறக்கும் நிலையில் ஏற்படும் அனுபவங்கள் என்பவை அரிதாகவே இருக்கின்றன. முன்பெல்லாம், இறக்கும் தருவாயிலிருப்பவர்களைச் சுற்றி நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள்; தேவையான மருத்துவ வசதிகள் இருக்காது . இன்றோ பலருக்கு மருத்துவ மனையில் தான் உயிர் பிரிகிறது.- உயிர் பிரியும்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். உற்றார் உறவினர் யாருமின்றி தனித்து மருத்துவவமனையில் இறப்பவர்களுக்கு இந்தமாதிரியான அனுபவம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதையே இது காட்டுகிறது.,

1975ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர், இறக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:29 am

பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடி, மிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். .இந்தச் சந்தேகங்களுக்கு விரைவிலேயே தீர்வு கிட்டியது. ஒரு இருதய நோய் நிபுணர் இறக்கும் தறுவாயிலிருந்த 2000 பேர்களிடம் பேசிய 20 வருட அனுபவம், மூடி கூறுபவை சரியென்று சான்றுரைக்கின்றன என்கிறார். சைப்ரஸிலிருந்து ஒரு பெண் எழுதும் அனுபவமொன்று மூடி கூறுவது சரியாயிருக்கலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நாலாவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன். பிறகு... நான் ஒரு இருண்ட இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.

இதற்குப்பிறகு சில ஆண்டுகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Kenneth Ring என்பவர் 1980ல் சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்த 102 பேரிடம் விவரங்கள் சேகரித்தார். அவற்றில் 50 சதவிகிதத்தினர் அடைந்த அனுபவத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் அடைந்த அனுபவங்களை, கென்னத் ரிங் 'அமைதி, உடலைவிட்டு உயிர் பிரிவது, ஒரு இருட்டு சுரங்கப்பாதையை அடைவது, வெளிச்சத்தைக் ககாண்பது, ஒளியை அடைவது' என ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். இதற்கடுத்த பகுதிகள் வெகு சிலராலேயே உணரப்பட்டன. எனவே, இறப்பின் போது காணும் காட்சிகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை அவர் கண்டார்.

இறப்பின் விளிம்பில் என்ன நடக்கிறது என்று ஆராயும் போது கலாசாரப் பின்னணியையும் கருத்தில் கொள்ளவேண்டுமா என்ற வினா எழுகிறது. கலாச்சார வேறுபாடு இல்லை என்று நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் கூறினாலும், மத அடிப்படை இந்த விஷயங்களை விவரிப்பதில் இடைப்படுகிறது என்பது தெளிவாகிறது. குழந்தைகளிடம் கூட சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இறப்பின் விளிம்பில் மரணமடைந்த தங்கள் நண்பர்களையே காண்கிறார்கள் என்பது ஆச்சரியப் படவைக்கும் விஷயம் . இதற்குக் காரணம், அவர்களது நண்பர்கள் வியாதிகளின் காரணமாக மரணமடைவதென்பது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதுதான். சிறுவயதுகளில் யாரும் நோயின் காரணமாக அதிகம் இறப்பதில்லை.

இறப்பிற்கு முன் ஏற்படும் அனுபவத்தைப் பெறுவதற்கு சாவின் விளிம்புவரை செல்லவேண்டுமா என்பது ஒரு கேள்வி - "இல்லை" என்பதுதான் இதற்கான பதில். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், மிகவும் களைப்பாக இருப்பவர்கள், மற்றும் சாதாரணமாக உழைப்பவர்களிடம்கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப்போல உண்மையானதாகவே தோற்றமளிக்கின்றன. ஒரு சுரங்கப் பாதைக்குள் போவதுபோலத் தெரியும் அனுபவம், ஒரு கற்பனைத் தோற்றமாகத் தெரிவதில்லை.- உடலுக்கு வெளியிலிருந்து நம்மைப் பார்ப்பதாகக் காணப்படும் இத்தோற்றம் உண்மையிலேயே நடப்பதாகவே தோன்றுகிறது.

சாவின் விளிம்பிற்குச் செல்லும் எல்லாருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் எத்தகைய மனிதர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்படக்கூடும்? மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த அனுபவங்கள் ஏற்படும் என்றும் சொல்வதற்கில்லை. இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலர் எல்லாரையும் போல பின்புலனும், மனதளவில் ஆரோக்கியமானவர்களுமாகவே இருக்கிறார்கள்.

இதைத்தவிர வரவேற்கவேண்டிய ஒரு விஷயம், இந்த அனுபவம் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள் போட்டி, பொறாமை, பேராசை போன்ற குணங்களிலிருந்து விடுபட்டு, மற்றவர்களின் நலனில் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள். இறக்கும் தருவாயில் என்ன நடக்கிறது எ?ன்பது பற்றிய ஆராய்ச்சி, இந்த மனமாற்றத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. எந்த ஆராய்ச்சியும் இதற்கு விடை காணாமல் முழுமையாய் இருக்க முடியாது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 3:35 am

சந்தனக்கடத்தல் வீரப்பனின் முடிவை முன் கூட்டியே கூறிய ஆவி ஜோதிடர் பிணமாகத்தான் கிடைப்பான் என 2001ல் கூறிய அதிசயம்


சந்தன கடத்தல் வீரப்பனை உயிருடன் பிடிக்க முடியாது. அவன் போலீசாரின் கையில் பிணமாகத்தான் கிடைப்பான்என சிவகாசியைச் சேர்ந்த ஆவிஜோதிடர் கடந்த 2001ம் ஆண்டே கூறியுள்ளார். அதன்படி தற்போது நடந்துள்ளதாக அச்ஜோதிடர் தினபூமி செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

இதுபற்றிய சுவையான பர..பரப்பு விபரம் வருமாறு:_


ஜோதிடத்தில் பலவகை உண்டு. கிளிஜோதிடம், குடுகுடுப்பைகாரன் ஜோதிடம், நாடி, ஓலை, என பலவகைபடும் இதில் ஆவி ஜோதிடமும் ஒரு வகை எந்த ஜோதிடத்தை நம்பு ஒரு கூட்டம் இருந்தால் அதனை மறுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும் ஆனால் ஆவி ஜோதிடத்தின் மூலம் பின்னால் நடந்த பல அரசியல்நிகழ்வுகளை முன் கூட்டியே ஓர் ஆவி ஜோதிடம் கூறியுள்ளார்.


அவர்தான் சிவகாசி பூவநாதபுரம் காலேஜ் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவவீரரான எம்.ஜி.ராஜா. இவர் பல வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்த தனது மகன் சரவணகுமார் என்ற சிறுவனின் ஆவி மூலம் (மீடியாவாக) தன்னை மயக்கநிலையில் ஆட்படுத்தி பல வருடங்களாக முன்கூட்டியே பின்னால் நடக்க போகும் சம்பவங்களை பல ஆவி தொடர்பு புத்தகங்களுக்கு எழுதி உள்ளார். அவர் முன் கூட்டியே எழுதியவைகளில்
குறிப்பாக நடந்த விசயங்கள் வருமாறு:_

தமிழக முதல்வர் ஜெயலலிதா பல சோதனைகளை கடந்து மீண்டும் முதல்வர் ஆவார் என திமுக ஆட்சியின்போது கூறியுள்ளார். மேலும் 17.4.99ல் வாஜ்பாய் அரசு கவிழும், எனவும், சந்தன வீரப்பனால்கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் ஆபத்தின்றி வருவார் என கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இ.காங்கிரஸ் ஆட்சியை பிடித்தாலும் சோனியா பிரதமர் ஆக மாட்டார். என தன் மறைந்த தனது மகனின் ஆவி மூலம் பேசி வெளி உலகிற்கு கூறினார். மேலும் பல சம்பவங்களை இவர் கூறி அதன்படி நடந்துள்ளதாக கூறுகிறார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தற்போது வீரப்பன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து எம்.ஜி.ராஜா கடந்த 2001ல் ஜூலை மாதம் வெளியான ஆவிகள் 2001ல் ஜூலை மாதம் வெளியான ஆவிகள் உலகம் மாத இதழில் நான் சொன்னவைக்கும் பலித்தன என ஓர் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பல உண்மைகளை எழுதி அதில் வீரப்பனை பிடிப்பதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். வீரப்பனை உயிருடன் பிடிக்க முடியாது. சரணடையவும் மாட்டான். பிணமாகத்தான் கிடைப்பான். இறப்புக்கு பின்னர் வீரப்பனின் ஆவி காட்டில் நீண்ட காலம் தவித்து அலையும் என கூறியுள்ளார்.


ஆவிஜோதிடர் ராஜா முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோனியா ஆகியோரின் பாராட்டுதலையும், பல விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவி மூலம் ஜோதிடர் எம்.ஜூ.ராஜா 2001ல் கூறிய விசயம் 2001 அக்டோபர் மாதம் பலித்தது உண்மையிலேயே ஓர் அதிசயம்தானே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 17, 2009 5:44 am

ஆவிகள் உலகம் பற்றி நம் ஆவிகள் உலகத் தலைவர் ரூபன் மிக அழகான கட்டுரை படைத்துள்ளார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 27 Previous  1, 2, 3 ... 14 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக