புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_m10புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னைவனத்துப் புலி - அமரர் கல்கி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:01 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]



முகவுரை


திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. எனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என் காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டுவிடுகிறதாக இல்லை. அவன் கேட்க விரும்பவில்லை என்று சொன்ன வார்த்தையையே ஓயாமல் அவன் காது செவிடுபடும்படி டமாரம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "இப்படி எத்தனையோ விசுவாமித்திரர்களைப் பார்த்து விட்டோ ம்!" என்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய நண்பர் கூட்டத்தில் சந்திரசூடன் அகப்பட்டுக் கொள்ளும் போது, "ஒருவேளை நான் புத்தி தடுமாறிக் கலியாணம் செய்து கொண்டாலும் இந்திய தேசத்தின் ஜனத் தொகையை மட்டும் பெருக்க மாட்டேன்" என்று சில சமயம் சொல்வதுண்டு, சொல்வதுடன் நின்று விடாமல் அவன் கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான இலக்கியங்கள், அதே விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் அப்பட்டமாகச் சொல்லும் நூல்கள், இவற்றையெல்லாம் வாங்கிப் படித்தும் வந்தான்.

அத்தகைய சந்திரசூடன் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அதிலும் ஏற்கெனவே குழந்தை உள்ள ஒரு பெண்மணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றால் அவனை அறிந்தவர்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கித் தத்தளிப்பது இயல்பேயல்லவா?

அத்தகைய பரிகாசத்துக்கிடமான காரியத்தை அவன் செய்ய முன் வந்ததன் காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டதிலும் அவ்வளவு வியப்பில்லை அல்லவா?

திருமணக் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவனைக் கண்டுபிடித்து நேருக்கு நேர் கேட்டுவிடுவதென்று பலரும் துடியாயிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடைசியாக அவனை ஒரு நாள் கையும் மெய்யுமாகப் பிடித்து, "அப்பனே! இந்த விபத்தில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்றேன். "சொல்லாவிட்டால் நீர் விடப் போகிறீரா? ஏதாவது கதையும் கற்பனையுமாக சேர்த்து எழுதித் தள்ளிவிடுவீர், அதைக் காட்டிலும் நானே சொல்லிவிடுவது நல்லது" என்றான்.

"அப்படியானால், கதை எழுதுவதற்குத் தகுதியானது என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டேன்.

"எல்லாம் கதையினால் வந்த விபத்துதான்! முழுக் கதை கூட அல்ல; பாதிக் கதையினால் வந்த ஆபத்து. 'தீபம்' என்னும் மாதப் பத்திரிகையில் பாதிக் கதைப் போட்டி ஒன்று நடத்தினார்களே? ஞாபகம் இருக்கிறதா?" என்றான் சந்திரசூடன்.

ஆம்; அது என் ஞாபகத்தில் இருந்தது.

'தீபம்' பத்திரிகையில் அத்தகையப் போட்டி ஒன்று சில காலத்துக்கு முன்பு நடத்தினார்கள். ஓர் இதழில் 'விமான விபத்து' என்ற தலைப்புடன் ஒரு பாதிக் கதையை வெளியிட்டார்கள். அதைப் பூர்த்தி செய்யும்படி வாசக நேயர்களைக் கேட்டு கொண்டிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு வரும் பிற்பகுதிக் கதைகளில் சிறந்ததைப் பத்திரிகையில் வெளியிடுவதுடன் அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பரிசு பெற்ற பிற்பகுதிக் கதையும் மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

கதையை அச்சமயம் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தேன். ஓர் ஆகாச விமானம் பிரயாணப்பட்டுச் சென்றது; ஆனால் குறித்த இடத்துக்குப் போய்ச் சேர வில்லை. பிரயாணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டது. எங்கேயோ மேற்குமலைத் தொடரில் மனித சஞ்சாரத்துக்கு அப்பாற்பட்ட இடத்தில் விழுந்து எரிந்து போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. இதுதான் கதையின் முக்கிய சம்பவம். இம்மாதிரி ஒரு துர்ச்சம்பவம் உண்மையாகவே சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, "ஆமாம்; அந்தப் பாதிக் கதைப் போட்டிக்கும் உன் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

சந்திரசூடன் அந்தச் சம்பவம் இன்னதென்பதை விவரமாகச் சொல்லித் தீர்த்தான். சொல்லாமற் போனால் யார் விடுகிறார்கள்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:16 pm

"இந்த விஷயத்தை தங்களிடம் கிரஹிப்பதற்குள், புன்னைவனத்துப் புலியைக் கூடப் பிடித்துவிடலாம் என்று ஆகி விட்டது. இந்த ஊருக்குத் தாங்கள் வந்ததே அந்த உத்வேகத்துடன் தான் என்று சொல்லுங்கள்!"

"ஆம், ஐயா! எனக்கு உதவி செய்ய முடியுமா?"

"ஒரு சிநேகிதியின் குழந்தைக்காகத் தாங்கள் செய்துவரும் தியாகத்தை நினைக்கும் போது எனக்கு இது 'கலியுகம்' என்றே தோன்றவில்லை. 'சத்திய யுகம்' பிறந்துவிட்டதோ என்று நினைக்கிறேன். ஆனால் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். பண்ணையாரின் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கரைக்க வேண்டும். மனோஹரிடம் நீங்கள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையென்பது நிச்சயம்தானே?"

"நிச்சயந்தான். இரண்டு மூன்று தடவை சொல்லலாமா என்று எண்ணிப் பிறகு தயங்கி நிறுத்திக் கொண்டு விட்டேன்."

"இனியும் சொல்ல வேண்டாம், பண்ணையாரைப் பார்ப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்தவர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்."

"பண்ணையார் உயில் எழுதுவது பற்றி யோசிக்கிறார் என்கிறீர்களே? அதை நினைத்தால் கவலையாயிருக்கிறது..."

"அதே காரணத்துக்காகத்தான் நானும் சொல்கிறேன். உயில் விஷயமாகப் பண்ணையார் என்னிடந்தான் யோசனை கேட்கிறார். இந்தக் குழந்தையின் உரிமையைப் பாதுகாப்பது என் பொறுப்பு!" என்றான் சந்திரசூடன்.

மற்றும் சில தினங்கள் சென்றன. இந்த நாட்களில் சந்திரசூடன் அடிக்கடி பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவதில் அதிக நேரம் செலவிட்டு வந்தான்.

இடையிடையே வேட்டையாடுவதற்கு மலை மேலும் போய்க் கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரத்தில் சலிப்பு அடைந்துவிட்டான். புலியோ அவர்கள் கண்ணில் சிக்காமலே இருந்துவந்தது. மற்ற சிறிய பிராணிகளைச் சுட்டு கொல்லுவதில் சந்திரசூடனுக்குச் சிரத்தையிருக்கவில்லை.

மனோகரனுடன் தினந்தோறும் வந்த சாயபுவுடன் சந்திரசூடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அப்துல் ஹமீது வாயைத் திறக்கிற வழியாக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்வான்.

சாயபு வேட்டையில் ரொம்பக் கெட்டிக்காரனா என்று மனோகரனைச் சந்திரசூடன் ஒரு நாள் கேட்டான். "அவன் முகத்திலே கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தெரியவில்லையா? ஒரு தடவை ஒரு சிறுத்தைப் புலி அவன் பாய்ந்து விட்டது. அதனுடன் மல்யுத்தம் செய்து ஜயித்தான். அந்தப் போரில் புலி அவனுடைய இரண்டு கன்னங்களையும் பிறாண்டி விட்டது. அப்படியும் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. இந்த ஊர் புலியைக் கண்டு பிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதில் அவன் என்னைவிடத் துடியாயிருக்கிறான். ஆனால் புலி தென்பட்டால் என்னிடம் தான் சொல்லவேண்டும் என்றும் அவன் துப்பாக்கியில் கையை வைக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறேன். இத்தனை நாள் மலைமேல் அலைந்துவிட்டு, புலியை இன்னொருவன் சுடுவதற்கு விடுவேனா?" என்றான் மனோகரன்.

"அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. புன்னைவனத்துப் புலி தங்களுக்குச் சொந்தமா, என்ன? அதுவும் பண்ணையார் சங்கரசேதுராயரின் சொத்தா? என் கண்ணில் அகப்பட்டால் நான் சுடுவேன்" என்றான் சந்திரசூடன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:16 pm

அன்று மலைமேல் அவன் மற்ற இருவரையும் விட்டுப் பிரிந்து, "நான் வேறு பக்கம் போய்ப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான். மலைமேல் ஓரிடத்தில் புதர்கள் மனிதனை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வேளை புலி மறைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகையால் சந்திரசூடன் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு போனான். எதிரிலும் இரண்டு பக்கமும் பார்த்தானே தவிர, பின்புறத்தில் பார்க்கவில்லை. திடீரென்று அந்த நிசப்தமான மலைப் பிரதேசத்தில் சாயபுவின் குரல் 'புலி! புலி' என்று கூச்சலிட்டது. அதே சமயத்தில் பின்னால் புதர்களில் சலசலப்புக் கேட்டது. சந்திரசூடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஆம்; புதர்களுக்கு மத்தியில் புலி மறைந்து வந்து கொண்டிருந்தது. புலியின் முகம் தெரியவில்லை. ஆனால் உடம்பின் கோடுகல் தெரிந்தன. சந்திரசூடன் எவ்வளவோ துணிச்சல் உள்ளவனாயினும் அச்சமயம் வெலவெலத்துப் போனான். எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோ ம் என்ற எண்ணம் அவனுக்கு அத்தகைய வெலவெலப்பை உண்டாக்கிற்று. அன்றைக்கென்று அவன் இன்னொரு காரியத்தையும் அலட்சியம் செய்து விட்டான். துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டித்து தயாராக வைத்திருக்கவில்லை. புலியோ வெகு சமீபத்தில் வந்திருந்தது. ஆகையால் ஓடித் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவு செய்த அதே சமயத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. புதருக்குள் மறைந்து வந்து கொண்டிருந்த புலி திடீரென்று இரண்டு கைகளை நீட்டி அக்கைகளில் வைத்திருந்த துப்பாக்கியினால் அவனை நோக்கிக் குறி பார்த்தது. இது என்ன கனவா, மனப்பிரமையா, ஜால வித்தையா என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசிப்பதற்கு நேரமும் இருக்க வில்லை. ஓட்டம் பிடிப்பது ஒன்றுதான் அவன் செய்யக் கூடியதாயிருந்தது, அவ்வளவுதான் 'ஓ!' என்று அலறிக் கொண்டு வழி கண்ட இடத்தில் விழுந்தடித்து ஓடினான். துப்பாக்கிக் குண்டு அவனுக்குச் சமீபமாகப் பாய்ந்து சென்று ஒரு மரத்தைத் தாக்கியதைக் கண்டான். அவனுடைய ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாயிற்று. குடல் தெறிக்க ஓடி மலையிலிருந்து கீழே இறங்கினான். மனோன்மணியின் வீட்டை அடைந்த பின்னர் தான் நின்றான்.

மனோன்மணி வீட்டில் இருந்தாள். "என்ன? என்ன?" என்று ஆவலுடன் கேட்டாள். மூச்சு வாங்கல் நின்ற பிறகு, இனிமேல் நான் வேட்டையாடப் போக மாட்டேன்! போகமாட்டேன்!" என்றான்.

மனோன்மணி ஒன்றும் புரியாதவளாய், "ஒரு வேளை இன்று புலியைப் பார்த்தீங்களோ?" என்று கேட்டாள்.

"ஆமா, பார்த்தேன்! அது ரொம்பப் பொல்லாத புலி" என்றான் சந்திரசூடன்.

"அது பொல்லாத புலி என்று தான் தெரியுமே? எத்தனை ஆடு மாடுகளை அடித்துக் கொன்றிருக்கிறது? இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேட்டைக்கு போயிருக்கக் கூடாது!" என்றாள் மனோன்மணி.

"ஆடு மாடுகளை அடித்துக் கொல்வதோடு அந்தப் புலி நின்றால் பாதகமில்லை. மனிதர்களையும் தாக்க வருகிறது!" என்றான் சந்திரசூடன்.

"மனிதர்களைக் கண்டால், அதுவும் வேட்டையாட போகும் மனிதர்களைக் கண்டால், புலி பிரதட்சணம் செய்து நமஸ்காரம் பண்ணுமா?"

"அப்படிப் பண்ண வேணும் என்று நான் சொல்லவில்லை. எல்லாப் புலிகளையும் போல் மனிதன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. இந்தப் புலி கையில் துப்பாக்கி எடுத்துச் சுட வருகிறது!"

புலியைக் கண்ட கிலியினால் இவருக்கு ஏதாவது மூளைக் கோளாறு வந்து விட்டதோ என்ற பாவத்தோடு சந்திரசூடனை மனோன்மணி பார்த்தாள். அப்புறம் வேறு பேச்சு எடுத்தாள். சந்திரசூடனும் பின்னர் மூளைத் தெளிவுடன் பேசினான்.

"நான் இன்றைக்கு மதராஸ் புறப்பட்டுப் போகிறேன். பண்ணையாரின் உயில் எழுதும் காரியமாகத்தான் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்றாள்.

"எந்த விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்று கேட்டாள் மனோன்மணி.

"பொதுவாக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். குழந்தை ராஜ்மோகன் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்" என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:17 pm

"உண்மைதான், வரவர, மனோகரின் நடத்தையில் முரட்டுத்தனம் அதிகமாகி வருகிறது. அது மட்டும் அல்ல, அவருடன் வரும் சாயபு ஒருநாள் குழந்தையின் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நகர்ந்து விட்டான். அது வேற எனக்கு கவலையாயிருக்கிறது."

"நானும் ஒரு நாள் அதைக் கவனித்தேன், சாயபுவிடம் கேட்டு விட்டேன். 'இந்தக் குழந்தையின் காலில் ஏதோ ஊனம் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் மலையாள வைத்தியம் வரும். அதனால், காலைக் குணப்படுத்த முடியுமா என்று பார்த்தேன்' என்றான். அவனுடைய பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை."

"மொத்தத்தில் இந்த ஊரில் இருக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது. பண்ணையாரைப் பார்க்க முடியாது என்றோ, பார்த்துப் புண்ணியமில்லை என்றோ ஏற்பட்டால், இந்த ஊரைவிட்டுச் சீக்கிரத்தில் போய் விட விரும்புகிறேன்" என்றாள் மனோன்மணி.

"அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள், நான் திரும்பி வந்ததும் ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் சந்திரசூடன்.

இந்தச் சமயத்தில் மனோகரும் வந்து சேர்ந்தான். சந்திரசூடனைப் பார்த்து இடி இடி என்று சிரித்தான். "இத்தனை நாளைக்குப் பிறகு புலி கண்ணுக்குத் தென்பட்டது. அதை அப்படிக் கூச்சல் போட்டு விரட்டி விட்டீரே? அப்பப்பா! என்ன ஓட்டம்! என்ன ஓட்டம்! புலி வேட்டைக்குச் சரியான ஆள் நீர் தான்!" என்று சொல்லி விட்டு மனோகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:17 pm

சந்திரசூடன் மதராஸுக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துப் புன்னைவனத்துக்குத் திரும்பி வந்தான். அதற்கு முதல் நாள் புன்னைவனத்தில் ஒரு விசேஷம் நடந்தது என்று அறிந்தான். மலைமேலுள்ள கோயிலில் இரண்டு நாள் உற்சவம் நடந்தது. அதற்காகத் திரளான ஜனங்கள் மலைமேல் ஏறிச் சென்றார்கள். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். புலியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தபடியால் அனேகர் தடிகள், ஈட்டிகள் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் சென்றார்கள். இந்தத் தடபுடலினால் பயந்துதானோ என்னமோ, புலி பட்டப் பகலில் கீழே இறங்கி வந்து விட்டது. நடுச் சாலையில் ஒரு மாட்டின் மீது பாய்ந்து கொன்றது. இந்த விஷயம் பரவி விடவே உற்சவத்துக்கு வந்திருந்த ஜனங்களில் பலர் கூச்சலிட்டுக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார்கள். தைரியசாலிகள் தடிக் கம்புகளையும் ஈட்டிகளையும் வேல்களையும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்க ஓடி வந்தனர். மனோகரும் துப்பாக்கியை எடுத்து வந்தான். அதற்குள் புலி 'காபரா' அடைந்து ஓடிவிட்டது. புலியைப் பார்த்தவர்கள் அதற்கு ஒரு கால் ஊனம் என்றும், நொண்டி நொண்டி நடந்தது என்றும் சொன்னார்கள்.

'புலி அடித்த மாட்டை அங்கேயே விட்டு வைத்திருந்தால் திரும்பவும் புலி வரும்' என்று அனுபவசாலிகள் சொன்னதன் பேரில் அப்படியே செய்தார்கள். நாலாபுறத்திலும் காவலும் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையிலேதான் சந்திரசூடன் திரும்பி வந்தான். ஹோட்டலில் மேற்கூறிய விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். துப்பாக்கியைக் குண்டு போட்டுக் கெட்டித்துக் கையில் எடுத்துக் கொண்டான். முதலில் மனோன்மணி வீட்டுக்குப் போனான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டாள் என்று தெரிந்தது. குழந்தை ராஜ்மோகன் 'சமர்த்து மாமா'வைப் பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டான். மழலை மொழிகளில் முதல் நாள் ஊருக்குள் புலி வந்ததைப் பற்றியும் கூறினான்.

"மாமா! எனக்குப் புலி பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. அம்மாவோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்கிறாள். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ப் புலி காட்டறேளா, மாமா!" என்றான்.

"ஆகட்டும், ஆகட்டும்! அந்தப் பொல்லாத புலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலிலேயே கட்டிப் போட்டு விடுகிறேன்" என்று சொன்னான் சந்திரசூடன்.

பிறகு அவன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். அவரிடம் தனியாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் பெரிய அனுபவசாலியான வக்கீல்களுடன் கலந்தாலோசித்து எழுதிக் கொண்டு வந்திருந்த உயில் நகலைப் படித்துக் காட்டினான். அவருக்கும் அது திருப்தி அளித்தது. ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குச் சீக்கிரம் சென்று ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்துவிடவேண்டுமென்றும் அதுவரையில் யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் என்றும் பண்ணையார் கூறினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:17 pm

இதற்குள் ஊரில் ஏதோ அல்லோலகல்லோலம் நடக்கிறது என்பதற்கு அறிகுறியான கோஷங்கள் எழுந்தன. "புலி திரும்பி வந்திருக்கிறதாம்!" என்று வீட்டு வேலைக்காரர்கள் சொன்னார்கள். சின்ன எஜமானர் முன்னமே துப்பாக்கி சகிதமாகப் போயிருப்பதாகவும் தெரிவித்தார்கள். சந்திரசூடனும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். "ஜாக்கிரதை, ஐயா ஜாக்கிரதை! நம்ம முரட்டுப் பிள்ளையையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்!" என்று பண்ணையார் சொல்லி அனுப்பினார்.

சந்திரசூடன் பண்ணையார் வீட்டை விட்டு வெளியேறிக் கூச்சல் அதிகமாகக் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றான். கிட்டத்தட்ட தபாலாபீசை நெருங்கிய போது ஒரு விந்தையான காட்சியைக் கண்டான். அது விந்தையான காட்சிதான்; அதே சமயத்தில் மிகப் பயங்கரமான காட்சியும்தான்.

பிரசித்தி பெற்ற 'புன்னைவனத்துப் புலி' கடைசியாக அவன் முன்னால் தரிசனம் அளித்தது. புலி மரம் ஏறும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆயினும் இந்தப் புலி வளைந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஜனங்கள் கூச்சல் போட்டுக் கொண்டு நாலாபுறமும் துரத்தவே அந்தக் காயம்பட்ட கிழப்புலி வேறு வழி இன்றித் தென்னை மரத்தின் மேல் பாய்ந்து ஏறிக் கொண்டது போலும்! புலி ஏறிய தென்னை மரத்தின் ஒரு பக்கம் மனோகரனும், அவனுடைய உதவியாளனாகிய ஹமீதும் நிற்பதைச் சந்திரசூடன் கண்டான். மனோகரன் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். தென்னை மரத்தின் இன்னொரு பக்கத்தில் - பயங்கரம்! பயங்கரம்! மனோன்மணியின் வீட்டு வாசற்புற மதில்மேல் குழந்தை ராஜ்மோகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். குழந்தை எப்பேர்ப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது, பார்த்த அதே க்ஷணத்திலேயே சந்திரசூடனுக்குத் தெரிந்து விட்டது. மனோகரின் துப்பாக்கிக் குண்டு புலியின் மேல் பட்டாலும் சரி, அல்லது படாவிட்டாலும் சரி, புலி மறுபக்கமாகப் பாய்ந்தால் குழந்தையின் கதி அதோகதிதான்! இவ்வளவு விஷயங்களையும் சில விநாடி நேரங்களில் மனத்தில் கிரகித்துக் கொண்ட சந்திரசூடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று குழந்தையை அணுகினான். குழந்தை, "மாமா! மாமா! புலி புலி!" என்று உற்சாகமாகக் கூவியதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அப்படியே தூக்கி எடுத்துக் கொண்டு மதில் சுவருக்கு அந்தப்புறத்தில் குதித்தான். அவன் குதித்த அதே சமயத்தில் குண்டு ஒன்று அவர்களுக்குச் சமீபமாகத் தலைக்கு மேலே சென்று மனோன்மணியின் வீட்டுச் சுவரில் பாய்ந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:18 pm

சந்திரசூடன் குழந்தையை அப்படியே கீழே விட்டு விட்டு பக்கத்திலிருந்த மதில் வாசல் வழியாக வெளிவந்தான். புலி இன்னமும் தென்னை மரத்தின் மேல் தான் இருந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தன் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டான். அவன் சுட்ட குண்டு புலியின் மீது பாய்ந்தது என்று தெரிந்து கொண்டான். உடனடியாக இன்னும் இரண்டு மூன்று துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கேட்டது. புலி கீழே தடால் என்று விழுந்தது. ஒரு துள்ளுத் துள்ளி எழுந்திருக்கப் பார்த்து மறுபடியும் தள்ளாடி விழுந்தது. பயங்கரமான ஓர் உறுமல் உருமி விட்டுப் பிராணனை விட்டது.

மறுநிமிடம் ஜனக் கூட்டம் புலியைச் சூழ்ந்து கொண்டது. சந்திரசூடனும் புலிக்கு அருகில் சென்றான். அதற்குள் அங்கே வந்திருந்த மனோகரன் இவனைக் கண் பார்வையினாலேயே சுட்டு விடுகிறவனைப் போல் பார்த்து, "செத்த பாம்பை அடிக்கிற சூரர் உம்மைப் போல் கண்டதில்லை. நான் மூன்று குண்டு போட்டுப் புலியைக் கொன்ற பிறகு, நீ எதற்காக அதைச் சுட்டீர்?" என்று கோபமாகக் கேட்டான்.

"அதனால் என்ன! மூன்றோடு, நாலு! செத்த புலியில் பங்கு கேட்க நான் வரவில்லை; புலியைக் கொன்ற பெருமை முழுவதும் தங்களுக்கே இருக்கட்டும்!" என்றான் சந்திரசூடன்.

"ஒருவர் குறி வைத்த வேட்டையின் பேரில் இன்னொருவர் சுடுவது சட்ட விரோதம் தெரியுமா?"

"வேட்டை சம்பந்தமான சட்டம் ஒன்றும் எனக்குத் தெரியாது, ஸார்! தயவு செய்து மன்னிக்கவும்."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:18 pm

"மன்னிக்கவாவது மண்ணாங்கட்டியாவது? குறி பார்த்துச் சுடவாவது உமக்குத் தெரிகிறதா? மயிரிழை தவறியிருந்தால், குண்டு என் பேரில் அல்லவா பாய்ந்திருக்கும்?"

"அடடா! அப்படியா! ரொம்ப ரொம்ப வருந்துகிறேன். போனது போயிற்று. இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள்!" என்று சொல்லிவிட்டுச் சந்திரசூடன் அங்கிருந்து மெள்ள நகர்ந்தான்.

செத்த புலியை ஜனங்கள் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போனார்கள். புலியைச் சுட்டுக் கொன்ற வீரன் மனோகரனுக்கு மாலை சூட்டி அவனையும் ஊர்வலத்தின் முன்னணியில் அழைத்துச் சென்றார்கள். தமுக்கு தம்பட்ட முழக்கங்களும், "மனோகரனுக்கு ஜே!" என்ற கோஷமும் வானை அளாவின.

புலி ஊர்வலம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு சாயபு மட்டும் தனியாக நிற்பதைச் சந்திரசூடன் பார்த்தான். அவனை அணுகிச் சென்று, "நல்ல வேலை செய்தாய், சாயபு!" என்றான்.

"நல்ல சமயத்திலே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினீங்க!" என்றான் சாயபு.

"நானா காப்பாற்றினேன்? நீயல்லவா உன் எஜமானை நல்ல சமயத்தில் அசக்கிவிட்டு குறி தவறச் செய்து காப்பாற்றினாய்?"

அப்துல் ஹமீது அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

"அன்றைக்கு மலைமேல் 'புலி புலி' என்று கத்தினாயே? அது எனக்கு எச்சரிக்கை செய்வதறகாகத்தானே? உண்மையைச் சொல்?" என்று சந்திரசூடன் கேட்டான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:19 pm

"நம்ம சின்ன எஜமானும் ஒரு சிறு குழந்தைங்க. சில சமயம் விளையாட்டுப் புத்தி வந்திடுங்க! எஜமான் கிட்டச் சொல்லாதேங்க, ஸாமி! நம்ப பிளைப்புப் போயிடப் போவுது!"

"இதோ பார், சாயபு! வெறுமனே வேஷம் போடாதே! நீ பிழைப்புக்காக இவரிடம் வரவில்லை. வேறு காரியார்த்தமாக வந்திருக்கிறாய்? உள்ளதைச் சொல்லு" என்றான் சந்திரசூடன்.

அப்துல் ஹமீது திருதிருவென்று விழித்தான்.

சந்திரசூடன் அவன் காதோடு, "நீ ஸி.ஐ.டி.யைச் சேர்ந்தவன், இல்லையா?" என்றான்.

ஹமீது கண்களை ஒரு சிமிட்டுச் சிமிட்டி, "நீங்க என்னைவிடப் பெரிய ஸி.ஐ.டி.யாக இருக்கீங்களே!" என்றான்.

"உன் பேரில் இன்னொரு குற்றம் இருக்கிறது. 'தீபம்' பத்திரிகையில் கதை எழுதிப் பரிசு வாங்கியது நீதானே?"

சாயபு ஆச்சரியக் கடலில் முழுகியவனாய், "உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரிந்தது?" என்று கேட்டான்.

"சென்ற வாரம் மதராசுக்குப் போயிருந்தபோது 'தீபம்' காரியாலயத்துக்குச் சென்று கொஞ்சம் ரகளை செய்தேன். பத்திரிகாசிரியரைப் பார்த்து, 'பரிசு பெற்றவரின் புனைப் பெயர் மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். விலாசம் கொடுக்கவில்லை. உங்கள் பரிசுத்திட்டமே வெறும் மோசடி!' என்றேன். மனுஷர் பயந்து போய்ப் பரிசு பெற்றவன் பெயர், விலாசத்தைக் கொடுத்ததுடன், உம்முடைய கடித்தத்தையும் காட்டினார்."

"அடே! நம் குட்டு வெளியாயிட்டே? யாரிடமும் சொல்லாதீங்க! நம்ம தமிழ் நடை எப்படி இருந்ததுங்க?"

"தமிழ் நடை நன்றாய்த்தானிருந்தது. ஆனால் கதை முடிவுதான் மோசம். கலியாணத்தில் கொண்டு போய் முடித்திருக்கக்கூடாதா?"

இச்சமயத்தில் சாயபு, "அதோ!" என்றான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பண்ணையார் வந்து கொண்டிருந்தார். சந்திரசூடன், "சரி! இன்னொரு தடவை நாம் சந்திக்க வேண்டும், தெரிகிறதா?" என்றான்.

இருவரும் உடனே பிரிந்து போனார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:19 pm

சந்திரசூடன் நேரே மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். அதற்குள் மனோமணியும் அங்கே வந்திருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தின் பலகணி வழியாகப் புலி தென்னை மரத்தில் ஏறியதையும் பிறகு நடந்தவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட திகிலின் படபடப்பு இன்னும் முழுவதும் போகவில்லை. குழந்தையைக் கட்டி அணைத்து ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையும் மழலைச் சொல்லில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

சந்திரசூடனைப் பார்த்ததும் மனோன்மணியின் கண்ணில் கண்ணீர் ததும்பியது.

"எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். குழந்தையைக் காப்பாற்றினீர்கள். தங்களுக்கு எந்த விதத்தில் நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை" என்று தட்டுத் தடுமாறிக் கூறினாள்.

"நன்றி சொல்வதற்குக் காலம் வரும்; அப்போது சொல்லுகிறேன்" என்றான் சந்திரசூடன்.

"குழந்தை இப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தான், தெரியுமா? நீங்கள் புலியை இவன் வீட்டுக்குக் கொண்டு வருகிறேன் என்றீர்களாம். அப்படியே செய்து விட்டீர்களாம். அந்த முரட்டு மாமா அநியாயமாய்ச் சுட்டுக் கொன்று விட்டாராம்!"

இதற்குள் ராஜ்மோகன், "மாமா! எனக்கு ஒரு புலியும் துப்பாக்கியும் வாங்கி தரேளா?" என்று கேட்டான்.

"ஆகட்டும் பாப்பா! உனக்குப் புலியைக் கண்டால் பயமாயில்லையா?" என்றான் சந்திரசூடன்.

"எனக்குப் புலிகிட்டப் பயமில்லை. பூனை கிட்டத்தான் பயம்!" என்றான் ராஜ்மோகன்.

"மலைமேல் உங்களைத் துப்பாக்கியால் சுடப் பார்த்தது என்கிறீர்களே? அதன் பொருள் இன்று தான் விளங்குற்று! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னதன் காரணமும் இப்போதுதான் புரிகிறது!" என்றாள் மனோன்மணி.

"ஆமாம்; இன்னும் இரண்டு மூன்று நாள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உயில் தயாராகி விட்டது. ரிஜிஸ்டராவது தான் பாக்கி. உயில் ரிஜிஸ்ராகி இந்தப் பையனை அவனுடைய தாத்தாவிடம் சேர்ப்பித்து விட்டால்..."

"அது முடியும் என்று நினைக்கிறீர்களா?"

"தாங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் முடியும்?"

"ஐயோ! அப்புறம் நான் என்ன செய்வேன்?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 4:20 pm

"செய்வது என்ன? யாராவது மனசுக்குப் பிடித்தவனைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு எப்போதும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பது!"

மனோன்மணி தயங்கித் தயங்கி, "தாங்கள் இவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். ஆனால் தங்களிடம் நான் முழு உண்மையையும் சொல்லவில்லை!" என்றாள்.

"ஓஹோ! உண்மையில் இன்னும் கொஞ்சம் பாக்கி வைத்திருக்கிறீர்களா?"

இச்சமயம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதிசயத்திலெல்லாம் அதிசயம்! பண்ணையார் சங்கரசேதுராயர் வந்து கொண்டிருந்தார்.

மனோன்மணி பதறிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள். குழந்தை ராஜ்மோகன் அவளைக் கட்டிக் கொண்டு எழுந்திருப்பதைத் தடை செய்ய முயன்றான்.

"உட்காரு, அம்மா, உட்காரு! இந்தக் குழந்தை இன்று பிழைத்தது புனர்ஜன்மம்!" என்றார் பண்ணையார்.

"பல விதத்தில் அதற்கு இன்றைக்குப் புனர்ஜன்மந்தான்! உட்காருங்கள்!" என்று சந்திரசூடன் நாற்காலியைக் காட்டி உபசரித்தான்.

பண்ணையார் உட்கார்ந்து, "வீதி முனையில் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்! கரணம் தப்பினால் மரணம் என்று இருந்தது. புலி இந்த வீட்டுப் பக்கம் பாய்ந்திருந்தால்! அல்லது துப்பாக்கிக் குண்டு தவறிப் பட்டிருந்தால்...? ஓய்! உம்மை என்னவோ என்று நினைத்தேன். வெகு தைரியசாலி! நீர் அப்படிப் பாய்ந்து ஓடிக் குழந்தையை எடுத்திராவிட்டால்...?" என்றான்.

"எல்லாம் கடவுளுடைய செயல்! நம்மால் என்ன இருக்கிறது?" என்றான் சந்திரசூடன்.

"கடவுளும் மனித ரூபத்தில்தானே காரியம் செய்ய வேண்டியிருக்கிறது? நானும் என் மனையாளும் இந்தச் சாலையில் உலாவ வரும் போதெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்ப்போம். 'இம்மாதிரி ஒரு குழந்தை நம் வீட்டில் வளரக் கூடாதா?' என்று என் மனையாள் ஜபம் செய்வாள்."

சந்திரசூடன், "இந்தக் குழந்தையையே வளர்த்தால் போகிறது" என்று முணுமுணுத்தான்.

"என்ன சொன்னீர்?" என்று கேட்டார் பண்ணையார்.

"ஒன்றுமில்லை. உலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது என்றேன்."

"நூற்றில் ஒரு வார்த்தை! பாப்பா! இங்கே வா! என்னிடம் வா! தாத்தாவைக் கண்டால் உனக்குப் பயமாயிருக்கிறதா" என்றார் பண்ணையார்.

"அவன் புலியைக் கண்டே பயப்படவில்லையே?" என்று சொன்னான் சந்திரசூடன்.

"எனக்குப் பூனைகிட்டத்தான் பயம். புலி கிட்டப் பயமில்லை" என்று சொன்னான் ராஜ்மோகன்.

"உனக்குப் புலி மொம்மை வாங்கித் தருகிறேன். என்னிடத்தில் வா" என்றார் பண்ணையார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக