புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 34%
prajai
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

First topic message reminder :

முதல் உலகப்போர்


இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.


முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:21 am

இன்னும் 50 மைல் தூரம்தான் பாக்கி. விரைவில் மாஸ்கோ வீழ்ந்து விடும் என்றே எல்லோரும் நினைத்தனர். மாஸ்கோவில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். நகரமே காலியாகிக் கொண்டிருந்தது. ஊரை விட்டு பத்திரமான இடங்களுக்கு செல்லுமாறு மந்திரிகளுக்கு ஸ்டாலின் கட்டளையிட்டார். ஆனால் அவர் மட்டும் ஊரை விட்டு வெளியேறாமல், தன் மாளிகையிலேயே தங்கியிருந்தார்!

இந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு இயற்கை கை கொடுத்தது. ரஷியாவில் அது மழை காலம். கடும் மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி வீரர்கள் திணறினார்கள். கடும் குளிர் வேறு. உணவு இல்லை; மாற்று உடை இல்லை. ஆயிரக்கணக்கான ஜெர்மனி வீரர்கள், குளிர் தாங்க முடியாமல் பிணமானார்கள். பட்டினியால் செத்தவர்கள் ஏராளம். தொற்று நோயினால் கணக்கற்றவர்கள் மடிந்தனர்.

மழையில் நனைந்துபோன துப்பாக்கி குண்டுகள், வெடிக்காமல் சதி செய்தன. ரஷிய வீரர்கள், கடும் குளிரை தாங்கி பழக்கப்பட்டவர்கள். எனவே, "இதுதான் சமயம்" என்று ஜெர்மனி படையை விரட்டி விரட்டி தாக்கினார்கள். மாஸ்கோவுக்கு 20 மைல் தூரம் வரை முன்னேறிய ஜெர்மனி படையினர், "உயிர் தப்பினால் போதும்" என்று, பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை ரஷிய வீரர்கள் ஓடஓட விரட்டினார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:21 am

போர் டைரி:

1939 செப். 1: போலந்து மீது ஜெர்மனி படையெடுத்தது.

செப். 3: ஜெர்மனி மீதான போர் பிரகடனத்தை இங்கிலாந்தும், பிரான்சும் வெளியிட்டன.

செப். 5: போரில் அமெரிக்கா நடு நிலை வகிக்கும் என்று ஜனாதி பதி ரூஸ்வெல்ட் அறிவித்தார்.

செப். 7: பிரான்ஸ் நோக்கி ஜெர் மனி படைகள் விரைந்தன.

செப். 17: போலந்தை ஜெர்மனி கைப்பற்றியது.

அக். 31: போரில் ரஷியா நடுநிலை வகிக்கும் என்று, ரஷிய வெளி விவகார மந்திரி மாலடோவ் அறிவித்தார்.

நவ. 4: போரில் அமெரிக்கா நடுநிலை வகித்தாலும், இங் கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஆயுதங்களை விற்றது.
ஹிட்லரை கொல்ல முயற்சி

நவ. 8: ஹிட்லர் மீது குண்டு வீசப் பட்டது. அதில் அவர் மயிரிழை யில் தப்பினார்.

நவ. 24: ஹிட்லருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய செக்கசுலோவக்கியா நாட்டைச் சேர்ந்த 130 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:23 am

இரண்டாம் உலகப்போர் (போரில் அமெரிக்கா...)


அமெரிக்க வசம் இருந்த "பெர்ல் ஹார்பர்" மீது ஜப்பான் நடத்தியவிமானத் தாக்குதல் 1941-ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி. அன்றுதான், உலகப் போரில் எதிர் பாராத திருப்பம் ஏற்பட்டு, வரலாறே மாறியது. அதுவரை உலகப் போரில் அமெரிக்கா கலந்து கொள்ளாமல், மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் உள்ள "பெர்ல்" துறைமுகத்தை தாக்கியது. (பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஹவாய் தீவு) அந்தத் பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பான் விமானத்தாக்குதலில் அழிந்தன. 3 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்காபோரில் குதித்தது.


ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ரஷியா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஓரணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின.

இதனால் யுத்தம் தீவிரம் அடைந்தது. 1942 பிப்ரவரி 15-ந்தேதி பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியது. அங்கிருந்த இங்கிலாந்து ராணுவம், ஜப்பானிய ராணுவத்திடம் சரண் அடைந்தது. "சூரியன் அஸ்தமிக்காக ராஜ்ஜியம்" என்று புகழ் பெற்றிருந்த இங்கிலாந்து, சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரண் அடைய நேரிட்டது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:23 am

சிங்கப்பூருக்கும், மலாயாவுக்கும் இடையே உள்ள கடலின் நீளம் ஒரு மைல்தான். சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களில் பலர், கடலில் நீந்தி, மலாயாவுக்குத் தப்பிச் சென்றனர். 54 நாள் நடந்த கடும் போருக்குப்பின் மலாயாவையும் ஜப்பான் கைப்பற்றியது. அங்கு இங்கிலாந்து தரப்பில் 25,000 பேர் மாண்டனர். ஏராளமான ஆயுதங்களும் அழிந்தன. ஜப்பானுக்கு ஏற்பட்ட உயிர் சேதம் 5 ஆயிரம் மட்டுமே. ஜப்பான் படைகள் பர்மாவையும் (தற்போதைய மியான்மீர்) தாக்கின. பர்மா தலைநகருக்கு 40 மைல் தூரத்தில் உள்ள பெகு என்ற நகரம், ஜப்பானியர் வசம் ஆகியது. பர்மாவில் இருந்த இங்கிலாந்து ராணுவத்தினர், திறமையானவர்கள் அல்ல. எனவே, அவர்களை ஜப்பானியர் எளிதாக முறியடிக்க முடிந்தது.

தற்போதைய இந்தோனேஷியா அக்காலத்தில் "டச்சு கிழக்கிந்திய தீவுகள்" என்று அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. டச்சு போர்னியோவில் பெட்ரோல் கிணறுகள் இருந்தன. எனவே, அந்த நாட்டையும் கைப்பற்ற ஜப்பான் முடிவு செய்தது. ஜப்பான் பாரசூட் படையினர், போர்னியோவுக்குள் குதித்து, அந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்தியத் தீவுகளிலும், போர்னியோவிலும் இருந்த டச்சு படையினர் சரண் அடைந்தனர். இந்த நாடுகளில் சுமார் ஒரு லட்சம் பேர்களை, ஜப்பான் ராணுவத்தினர் "போர்க்கைதி களாக" கைது செய்தனர்.

1942 ஏப்ரல் 1-ந்தேதி, இலங்கை மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. பெர்ல் துறைமுகத்தை தாக்கிய ஜப்பான் கடற்படை தளபதி அட்மிரல் நாகுமோ தலைமையில் இந்த தாக்குதல் நடந்தன. ஜப்பான் தாக்குதல் நடத்தப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட இங்கிலாந்து, முன் எச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:24 am

கொழும்பிலும், முக்கிய கடற்படை தளமான திரிகோண மலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களை, பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவிட்டது. கொழும்பு மீது பறந்த ஜப்பான் போர் விமானம், அங்கு தாக்குதல் நடத்த எதுவுமே இல்லாததால், குண்டு வீசாமல் திரும்பியது. அப்போது, கடலில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதன் மீது குண்டு வீசி அதை மூழ்கடித்துவிட்டு, ஜப்பான் விமானம் திரும்பிச் சென்றது. இலங்கை தீவாக இருந்ததால், ஜப்பான் தனது தரைப் படையை அங்கு அனுப்ப இயலவில்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:24 am

போர் டைரி 1940:

ஜன. 8: இங்கிலாந்தில் உணவு ரேஷன் அமலுக்கு வந்தது.

ஏப். 9: டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது.

ஏப். 30: பெர்ல் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா மே 10: போரை சரிவர சமாளிக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப் பட்டதால் இங்கிலாந்து பிரதமர் சேம்பர் லைன் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, புதிய பிரதமராக சர்ச்சில் பதவி ஏற்றார்.

மே 28: ஜெர்மனியிடம் பெல்ஜியம் சரண் அடைந்தது.

ஜுன் 14: ஜெர்மனியிடம் பிரான்சு சரண் அடைந்தது.

ஜுலை 24: இங்கிலாந்துக்கு நவீன போர் விமானங்களை கொடுக்க அமெரிக்கா முன் வந்தது.

ஆக. 19: இங்கிலாந்து வசம் இருந்த சோமாலிலாந்தை, ஜெர்மனி கைப்பற்றியது. லண்டன் மீது தாக்குதல்.

ஆக. 27: இங்கிலாந்து நாட்டின் 20 நகரங்கள் மீது ஜெர்மனி விமானங்கள் தாக்குதல் நடத்தின.

செப். 7: லண்டன் நகரத்தின் மீது ஜெர்மனி விமானங்கள் குண்டு மாரி பொழிந்தன.

செப். 27: ஜெர்மனியுடன் சேர்ந்து, ஜப்பான் போரில் ஈடுபட்டது.

அக். 28: கிரீஸ் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது. நவ. 3: இங்கிலாந்து மீது குண்டு வீசிய ஜெர்மனி விமானங்களை, இங்கிலாந்து பீரங்கிகள் சுட்டுத்தள்ளின. இதுவரை 2,433 ஜெர்மனி விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்" என்று இங்கிலாந்து அறிவித்தது.

நவ. 5: அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ரூஸ் வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:26 am

இரண்டாம் உலகப்போர் (இந்திய எல்லையில் ஜப்பான்.. )


உலகப்போரில், இங்கிலாந்து படையில் இந்தியர்கள் பங்கு கொண்டார்கள். போர் முனையில் வீர தீரச் செயல் களில் ஈடுபட்டார்கள். இந்தியா மீது ஹிட்லருக்கு ஒரு கண் இருந்தது. இந்திய மக்கள் இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்தி வந்தனர்.

உலகப் போரின் போதும், இந்தப் போராட்டம் நீடித்த ஜெர்மனியை அடக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் மூவரும்சந்தித்துப் பேசினர்.

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.

அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:26 am

பர்மாவைக் கைப்பற்றிக் கொண்ட ஜப்பான் ராணுவம், 1944 மார்ச் மாதத்தில் இந்தியாவை நோக்கித் திரும்பியது. மார்ச் 30-ந்தேதி இம்பால் நகரத்தை முற்றுகையிட்டது. (இம்பால் நகரம் இப்போது மணிபுரி மாநிலத்தில் உள்ளது). இம்பாலில் இருந்த இங்கிலாந்து படையில் இந்தியர்களும் இருந்தார்கள். அவர்கள் ஜப்பானியரை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர்.

இதனால் இம்பால் நகருக்குள் ஜப்பான் படை Žழைய முடியவில்லை. ஆனாலும், எப்படியாவது இம்பாலைப் பிடித்துவிட்டு, இந்தியாவுக்குள் Žழைந்து விடவேண்டும் என்ற உறுதியுடன் ஜப்பானியர் 2 மாத காலம் முற்றுகையிட்டனர். இந்த சமயத்தில், இம்பாலுக்குள் சிக்கியிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள், மருந்துகள் முதலியவற்றை பிரிட்டிஷ் விமானங்கள் கொண்டு வந்து போட்டன.

ஆனால் முற்றுகையிட்டிருந்த ஜப்பானிய படைகளுக்கு உணவுப் பொருள்களோ, மருந்துகளோ கிடைக்காததோடு, வெடி பொருட்களும் தீர்ந்துபோய் விட்டன. இதன் காரணமாக, ஜப்பான் படைகள் தோல்வியைத் தழுவின. இம்பாலை தாக்கிய ஜப்பான் வீரர்கள் எண்ணிக்கை 85 ஆயிரம். அவர்களில் பெரும் பான்மையோர் போரில் பலியாகிவிட, மீதிப்பேர் பின்வாங்கிச் சென்றார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:27 am

ஏற்கனவே மாஸ்கோவை கைப்பற்ற முயன்று, ரஷியாவிடம் மூக்கறுபட்ட ஹிட்லர், ரஷியாவை எப்படியாவது அடிபணியச்செய்ய எண்ணி, ஸ்டாலின் கிராட் நகரைத் தாக்குமாறு தன் படைகளுக்குக் கட்டளையிட்டார். 1942 ஜுலை மாதத்தில், ரஷியாவில் உள்ள ஸ்டாலின் கிராட் நகரத்தை ஜெர்மனி படைகள் சூழ்ந்து கொண்டன. ஆனால், ரஷிய மக்கள் அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். சுலபமாக ஸ்டாலின் கிராடை கைப்பற்றி விடலாம் என்று ஜெர்மன் படைகள் நினைத்தது பகல் கனவு ஆயிற்று. அவர்களுக்கு உணவுப்பொருள்களும், மருந்துகளும் கிடைக்கவில்லை. இதனால் ஜெர்மனி வீரர்கள், ஒரு விநாடிக்கு 7 பேர் செத்து விழுந்ததாக மதிப்பிடப்படுகிறது.

1943 ஜனவரி 31-ந்தேதி ஹிட்லர், "எக்காரணம் கொண்டும் ஜெர்மனி தளபதியாக இருப்பவர் சரண் அடையக்கூடாது. அதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்" என்று, ஸ்டாலின் கிராடில் இருந்த பீல்டுமார்ஷல் வான் பவ்லஸ் என்பவருக்கு தகவல் அனுப்பினார். ஆனால், தளபதி பவுலஸ் சுமார் 1,00,000 ஜெர்மனி ராணுவத்தினருடன் சரண் அடைந்தார்.

ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு 1943 நவம்பர் 26-ந்தேதி, பாரசீக நாட்டில் டெஹ்ரான் நகரில் நடந்தது. உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த ஹிட்லரை முறியடிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:27 am

ரஷியாவைப் பிடித்து விடலாம் என்று நினைத்த ஹிட்லர் தோல்வி அடைந்தார். ஆப்பிரிக்காவை கைப்பற்ற நினைத்த ஹிட்லரின் நண்பரான இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் தோற்றுப் போனார். அவருக்கு உதவுவதற்காகச் சென்ற ஜெர்மனி ராணுவத்தினர் 2 லட்சம் பேர் சரண் அடைந்தனர். ஜெர்மனி கைப்பற்றியிருந்த ரஷிய பகுதிகளை மீட்க, ரஷியப் படைகள் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தின. அதில் ஒரு லட்சம் ஜெர்மனி வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியின் ஏராளமான டாங்கிகளும், பீரங்கிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போரில் ஜெர்மனி படைகளுக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக