புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
64 Posts - 58%
heezulia
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
106 Posts - 60%
heezulia
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_m10பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Jul 06, 2010 11:30 pm

First topic message reminder :

பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு



“All mothers are great but my mother is the greatest”
என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா
பேசியதாக ஞாபகம்.

“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி
கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும்
எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை
தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.

“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும்.
எனில்,

“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப்
பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை
இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.

தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து
வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது
மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன்
மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத்
தக்கதாகும்.

தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள்
கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி,
விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக
உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.

“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது,
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும்
‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.

முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது
தொடர்ந்தா? சாத்தியமா?

சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின்
அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.

பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப
நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு
வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச
ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும்
பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’
“தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில்
அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான
விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.

அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய
தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின்
விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும்,
மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின்
விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.

உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை
அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை
கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார்.
“ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள்.
இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது
தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில்
மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.

“வெள்ளி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365
ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன
பெயரிட்டு அழைக்கலாம்.

1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக
பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும்,
சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன்
அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள்
“சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு
நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில்
அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும்
பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும்
காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.

ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும்
வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன
செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.

இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள்.
இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை
கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும்
தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு
குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள்
எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற
கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன்.
பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும்
சொல்கிறார்.

பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை
மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த
ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக்
காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத்
தவறியிருக்கிறோம்.

படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு
சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க
வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும்
சேர்த்துதான்.

அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது
யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள
சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.

( "கல்கி" யில் வெளி வந்த கட்டுரை )
_______________________________________________


வேதமுத்து
வேதமுத்து
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010

Postவேதமுத்து Sat Jul 24, 2010 11:36 pm

இரா.எட்வின் wrote:பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு



“All mothers are great but my mother is the greatest”
என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா
பேசியதாக ஞாபகம்.

“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி
கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும்
எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை
தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.

“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும்.
எனில்,

“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப்
பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை
இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.

தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து
வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது
மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன்
மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத்
தக்கதாகும்.

தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள்
கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி,
விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக
உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.

“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது,
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும்
‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.

முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது
தொடர்ந்தா? சாத்தியமா?

சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின்
அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.

பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப
நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு
வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச
ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும்
பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’
“தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில்
அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான
விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.

அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய
தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின்
விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும்,
மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின்
விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.

உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை
அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை
கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார்.
“ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள்.
இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது
தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில்
மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.

“வெள்ளி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365
ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன
பெயரிட்டு அழைக்கலாம்.

1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக
பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும்,
சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன்
அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள்
“சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு
நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில்
அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும்
பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும்
காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.

ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும்
வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன
செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.

இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள்.
இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை
கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும்
தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு
குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள்
எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற
கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன்.
பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும்
சொல்கிறார்.

பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை
மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த
ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக்
காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத்
தவறியிருக்கிறோம்.

படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு
சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க
வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும்
சேர்த்துதான்.

அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது
யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள
சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.

( "கல்கி" யில் வெளி வந்த கட்டுரை )
_______________________________________________

பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 25, 2010 11:07 am

வேதமுத்து wrote:
இரா.எட்வின் wrote:பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு



“All mothers are great but my mother is the greatest”
என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா
பேசியதாக ஞாபகம்.

“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி
கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும்
எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை
தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.

“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும்.
எனில்,

“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப்
பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை
இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.

தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து
வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது
மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன்
மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத்
தக்கதாகும்.

தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள்
கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி,
விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக
உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.

“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது,
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும்
‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.

முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது
தொடர்ந்தா? சாத்தியமா?

சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின்
அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.

பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப
நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு
வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச
ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும்
பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’
“தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில்
அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான
விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.

அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய
தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின்
விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும்,
மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின்
விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.

உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை
அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை
கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார்.
“ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள்.
இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது
தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில்
மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.

“வெள்ளி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365
ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன
பெயரிட்டு அழைக்கலாம்.

1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக
பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும்,
சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன்
அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள்
“சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு
நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில்
அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும்
பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும்
காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.

ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும்
வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன
செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.

இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள்.
இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை
கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும்
தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு
குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள்
எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற
கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன்.
பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும்
சொல்கிறார்.

பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை
மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த
ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக்
காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத்
தவறியிருக்கிறோம்.

படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு
சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க
வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும்
சேர்த்துதான்.

அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது
யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள
சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.

( "கல்கி" யில் வெளி வந்த கட்டுரை )
_______________________________________________

பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196 பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 677196

நன்றி வேதமுத்து

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jul 25, 2010 11:28 am

நல்ல கட்டுரை எட்வின். அவர்களாவது தங்கள் மொழியை
காப்பாற்றி கொள்ள என்று ஒரு விழாவை தமிழகத்தில்
நடத்துகிறார்கள். ஆனா நாம்?



பாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Uபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Dபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Aபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Yபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Aபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Sபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Uபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Dபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 Hபாகவதமேளா -- புதுப்பிக்கப் படும் பொறுப்புணர்வு - Page 2 A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 25, 2010 12:02 pm

உதயசுதா wrote:நல்ல கட்டுரை எட்வின். அவர்களாவது தங்கள் மொழியை
காப்பாற்றி கொள்ள என்று ஒரு விழாவை தமிழகத்தில்
நடத்துகிறார்கள். ஆனா நாம்?

இந்த வலிதான் என்னை இதை எழுத வைத்தது.

எழுதியது கொஞ்சம்தான் சுதா.

தீபா
தீபா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 25/07/2010

Postதீபா Wed Aug 04, 2010 7:19 pm

வெறியற்ற ஆழமான உணர்வே மொழி வளர்க்கும். மிக அருமை

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Aug 05, 2010 10:22 pm

தீபா wrote:வெறியற்ற ஆழமான உணர்வே மொழி வளர்க்கும். மிக அருமை

சரியாய் சொன்னீர்கள். நன்றி தீபா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக