புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
30 Posts - 55%
heezulia
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 2%
jairam
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
12 Posts - 4%
prajai
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
3 Posts - 1%
jairam
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_m10பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள் (3) - சொ.ஞானசம்பந்தன்


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 13, 2010 9:50 am

3. எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை.

குதிர் என்பது நெல்லைச் சேமிப்பதற்காகக் களிமண்ணால் செய்த பெரிய கூடு. மரப்பத்தாயம் போன்றது. ஆனால் உருளை வடிவம். அதனுள் ஓர் ஆள் இறங்கி நிற்க இயலும்.

கடன் தந்தவர் வருவதைக் கண்ட ஒருவர், தாம் ஒளிந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று தம்முடைய குழந்தையிடம் எச்சரித்துவிட்டுக் குதிருக்குள் பதுங்கிக் கொண்டாராம். அந்தப் பிள்ளையோ, வந்தவர் எதுவும் கேட்பதற்கு முன்பே புத்திசாலித்தனமாய் பேசுவதாய் எண்ணி, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே!" என்றதாம். இதைக் கேட்டவுடனே உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டார் வந்தவர்.

ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைப்பதாய்க் கருதித் தன்னையறியாமலே போட்டு உடைத்துவிடுகிற அப்பாவித்தனத்தைக் குறிக்க இப்பழமொழி உதவுகிறது.

4. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள், குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும் அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா ஆயினர்.

தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பொன் செய்யும் மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும் (அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.

வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்

என்று அவர் பாடியுள்ளார்.

இதன் பொருள் : தழலில் - தீயில். இரதம் வைத்து - இரசம் வைத்து (அதாவது பாதரசம் பயன்படுத்தி). ஐந்து உலோகத்தையும் - ஐம்பொன் எனப்படுகிற செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, (சிறுஅளவில்) தங்கமாகிய ஐந்து உலோகங்களையும். வேதித்து - வேதியியல் முறைப்படிப் பொன்னாக மாற்றி. விற்றுண்ணலாம்- விற்றுச் செல்வம் சேர்க்கலாம்.

சிறிய அளவில் பொன், பெரிய அளவில் மற்ற உலோகங்கள் சேர்த்து எல்லாவற்றையும் தங்கமாக்க எண்ணுவது பேராசை அல்லவா?

ரசவாதிகளை நோக்கி யாரோ ஓர் அறிவாளி கூறிய உபதேசந்தான் இந்தப் பழமொழி.

"பொன் செய்யும் மருந்து தேடிப் படாத பாடுபடுகிறீர்களே! நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் பேராசை மேன்மேலும் பொன் வேண்டும் என்று தூண்டுமாதலால் மன நிறைவு ஒருக்காலும் ஏற்படாது. போதும் என்ற மனத்தைப் பெறுங்கள். உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழலாம்" என்ற அவரது புத்திமதி ரசவாதிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே எக்காலத்தும் பொருந்துகிற பொன்னுரையாகும்.

சில பழமொழிகள் தவறாக உருமாறிப் பிழைப்பொருள் தருகின்றன. அப்படிப்பட்ட இரண்டைப் பார்ப்போம்.

1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முயல்பவரே வைத்தியர். அவரை கொலைகாரராகச் சித்திரிக்கிறதே இது! இதன் திருத்தமான வடிவம் எது?

சிலருடைய கருத்து, 'ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்பது. வேரைக் கண்டால் வைத்தியரா?

“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்பதே சரி.

மூலிகை, மரப்பட்டை, இலை, வேர் முதலியவற்றைச் சித்த மருத்துவர் மருந்தாகப் பயன்படுத்துகிறார். வேரைக் கொன்றவர் என்பது வேரைப் பிடுங்கிப் பயன்படுத்தியவர் என்று பொருள்படும். ஆயிரம் வேரைப் பயன்படுத்தினாலும் அரை வைத்தியர்தான். முழுமையடைவதற்கு மேன்மேலும் புதுப்புது வேர்களைப் பயன்படுத்தவேண்டுமென்று, மருத்துவத்தில் முன்னேற ஊக்குவிக்கிற பழமொழி இது.

வேரைக் கொல்லுதல் என்பது பொருந்துமா என்றால் பொருந்தும். "இளைதாக முள்மரம் கொல்க" என்ற குறளில் 'மரம் கொல்லுதல்' என்ற தொடரைக் காண்கிறோம்.

2. தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்கக் கூடாது.

இதன் சரியான பொருளைக் கண்டறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் முயன்றிருக்கிறார். ஊருணியொன்றின் கரையில் இருந்த கல்லில், "தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்கக்கூடாது" எனச் செதுக்கியிருந்ததைப் படித்துத் தம் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிழைத்தல் என்பதற்குப் பிழை செய்தல், கெடுத்தல் என்பது பழைய பொருள்.தாய்க்குக் கெடுதல் செய்தாலும் தண்ணீரின் தூய்மையைக் கெடுக்கக்கூடாது என்று பழமொழி அறிவுரை கூறுகிறது.

இந்த விவரங்களைத் 'தாயார் கொடுத்த தனம்' என்ற தம் நூலில் கவிஞர் தெரிவித்திருக்கிறார்.

பழமொழியும், சொலவடையும் ஒன்றுதானா? இல்லை என்பார் சிலர். கிண்டல் தொணிக்கும் பழமொழியே சொலவடை என்று கூறுகிற அவர்கள்,

“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.“

“துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம்.”

“அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரம் கருக்கரிவாள்.”

என்று உதாரணங்கள் சொல்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட பழமொழிகள் மிக மிகக் குறைவு. ஆகையால் அவற்றுக்குத் தனிப்பெயர் தேவையில்லை.

சொலவடை என்பது நெல்லை மாவட்ட வழக்கு, பழமொழி பொதுவழக்கு எனக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளைவிடத் தமிழில்தான் பெரும்பாலான பழமொழிகள் எதுகை மோனை பெற்றுச் செவிக்கு விருந்தளிக்கின்றன என்பதை எண்ணி நாம் பெருமிதங்கொள்ளலாம்.

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Aug 13, 2010 3:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக