புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
54 Posts - 49%
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
12 Posts - 2%
prajai
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:10 pm

First topic message reminder :



இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார்.
-ஆசிரியர்


ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.

அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.

விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள் குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.

இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது அவசியமாகும்.

இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!

அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:30 pm

இந்த வேளையில் அந்நியத் தளங்களை அகற்றுதல், அந்நியக் கொடி இறக்கல், இலங்கையின் முழுமையான சுதந்திரத்திற்கு வழிகோலுதல், சமதர்மச் சமுதாயம் காணல், இந்தியாவுடனான நட்பு போன்ற கொள்கைகளை முன்வைத்த பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்தை விஞ்சும் வகையில் இருபத்து நான்கு மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன்~என்ற மொழிக் கொள்கையை முன்வைத்தார். இதைப் பிரசாரப்படுத்தப் புத்த குருமார்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், சிங்கள ஆசிரியர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் முன்வந்து செயல்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அப்பொழுது நகரவாசிகளையும், ஆங்கிலம் படித்த நடுத்தர வர்க்கத்தினரையும் மையமாகக் கொண்டு இடதுசாரி இயக்கங்கள் இயங்கி வந்தன. இடதுசாரி இயக்கத்தினர் அக்கறை காட்டி வந்த தொழிலாளர் இயக்கங்கள் கூட, நடுத்தர வர்க்கங்களாலேயே செயல்பட்டன. இதை நன்கு உணர்ந்த பண்டாரநாயக்காவின் இயக்கம் கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது அரசியல் இயக்கத்தில் ஒன்றிணைத்துக் கொண்டது. இதை முற்றுப் பெறச் செய்ய, தனிச் சிங்களமென்ற இனவாத எழுச்சியும் அவரால் உபயோகப்படுத்தப்பட்டது.

1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை இடதுசாரிகள் எதிர்த்துப் பேசி வாக்களித்தனர். சிலர் வாய்விட்டுக் கதறினர். ஒரு மொழியென்றால் இரு நாடுகள் மலரும்~என்று கொல்வின் ஆர்.டி. சில்வா நாடாளுமன்றத்தில் அழுதபடியே உரக்கக் கூறினார்.

சட்டம் நிறைவேறிய அந்த வாரத்திலேயே இடதுசாரித் தலைவர்களின் இல்லங்கள், அலுவலகங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன.

இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான என்.எம். பெரேரா என்பவரை, "என்.எம். பெரேரா வன முல்லே வோட் இல்லே' என்று சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன.

தேர்தலின் மூலம் சிங்களவரின் வாக்குப் பெறுவதானால் மொழிச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்று இடதுசாரிக் கட்சிகள் உணர்ந்து, தங்கள் கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல பின்வாங்கின. மொழி சமன் மட்டுமின்றி சிங்களப் பேரினவாதமும் இடதுசாரிக் கட்சிகளின் உள்ளேயும் தலையெடுத்தது. இடதுசாரிக் கட்சிகளால் அமைக்கப்பட்ட கூட்டணி பதவிக்கு வந்ததும் தமிழ்மொழியை ஒரு தேசியமொழியாக ஏற்கும் நிலையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மார்க்சிய, லெனினிச கோட்பாடுகள் கைவிடப்பட்டன. இதன் விளைவாக இடதுசாரிகளும் இனவழிச் சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய இடதுசாரிக் கிளைகள் நிலைகுலைந்து பொதுமக்கள் தொடர்பற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டன.

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆளுகைக்கு வந்தபோது இடதுசாரிக் கட்சிகள் சம்பள உயர்வு கோரி மேற்கொண்ட பெரிய போராட்டம் 40,000 அரசு ஊழியரின் தொழிலைப் பறித்தது. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும், அரசுக்கெதிராக இடதுசாரிகளால் தம் மத்தியில் ஐக்கியமற்ற நிலையில் தமிழின விடுதலைப் போராட்டத்திற்குக் குறிக்கோள் கொண்ட ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தந்து, வென்றெடுக்கப்படாத நிலையில் பலவீனப்பட்டு இடதுசாரிகள் இயக்கம் தற்போது விளங்குகிறது.

இதன் வரலாற்றில்-ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புச் சக்திகளிடையே ஐக்கிய முன்னணி உருவாகியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டுள்ளது. இதற்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்பாளர் மத்தியில் ஒற்றுமையின்மை நிலவியதால் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:31 pm

16. சர்வஜன வாக்குரிமைச் சட்டம்

ஆரம்பத்தில் சிங்கள மற்றும் தமிழ் மேட்டுக்குடியினர் கூட்டாக இருந்தே இந்திய வம்சாவளியினருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தியர் மூலதன ஆதிக்க எதிர்ப்பிலும், இந்திய நிர்வாகிகளை வெளியேற்றுவதிலும் அவர்கள் தீவிரம் காட்டினர்.

நகர்ப்புறத்துத் தமிழ்த் தொழிலாளர்களை நகர்ப்புற நிறுவனங்களில் இருந்து வெளியேற்றுவதில் இவர்கள் ஆர்வம் காட்டினார்களே தவிரத் தோட்டத் தொழிலாளர்களை அல்ல. காரணம், சிங்கள - தமிழ் தோட்ட அதிபர்கள் தோட்டத் தொழிலாளர் வெளியேற்றத்தை விரும்பவில்லை என்பதுதான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் குறைந்த கூலிக்குத் தோட்டத் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதும் காரணம்.

இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக உணரலாம். தொழிலாளர் இறக்குமதிக்கு உரிமம் வழங்குவதை நிறுத்தும் பிரேரணையை பெரேரா (Perera) பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதைத் தோல்வி அடையச் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அரங்கில் நுழைவதற்கும் தடைகளை உருவாக்கினார்கள். 1920-இல் சட்ட நிறுவன சபைக்கு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் தேர்வு ஆவதை இவர்கள் எதிர்த்தனர். 1929-இல் சர்வஜன வாக்குரிமை (டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசு) வழங்க முன்வந்த ஆணையினையும் எதிர்த்தனர். அதன் உச்சகட்டமாக 1947 பொதுத் தேர்தலில் ஏழு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொழிலாளர் மத்தியில் உள்ள செல்வாக்கின் பலத்தால் 17 இடதுசாரி உறுப்பினர்களும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் கை ஓங்குவதும் இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாவதும் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. அரசியல் அரங்கில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.

தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை வெளியேற்றும் கோஷம் தீவிரமானது என்பது மட்டுமல்ல, அதனால் அறிவு ஜீவிகளும், மத்தியதர வகுப்பினரும் பாதிப்பு அடைந்தனர். உதாரணமாக~போக்குவரத்து அமைச்சர் எட்டாயிரம் இந்தியர்களுக்கு வேலைநீக்க நோட்டீஸ் அனுப்பினார். (ஆதாரம்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சரித்திரம்-இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கருத்தரங்கக் கட்டுரை).

இந்த இனவாதச் செயல்பாட்டின் விளைவாக முதன் முதலில் 1931-ஆம் ஆண்டு சர்வ ஜன வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகையில், யாழ் பகுதியில் இருக்கும் இடதுசாரி இளைஞர் இயக்கம் முதன் முதலில் ஒரு போராட்டத்தை நடத்தியது.

இதன் தலைமையில் யாழ் பகுதியில் தேர்தல் நிராகரிப்பு இயக்கம் தீவிரமாக உருவானது.

ஆனால் அதே நேரத்தில் அந்தத் தேர்தலில் மலையக மக்கள் பங்கேற்றனர். ஏனெனில், அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் மலையக மக்கள் வாக்குரிமை பெற்றனர். நடேசய்யர், பெரியசுந்தரம், வைத்திலிங்கன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பெரியசுந்தரம் தொழில் அமைச்சர் ஆனார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:31 pm



இலங்கையின் பிரபலமான அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்


1. லங்கா சமசமாஜக் கட்சி (L S) (S P))–1935 இடதுசாரி - என்.எம். பெரேரா

2. கம்யூனிஸ்ட் பார்ட்டி (CP)~1942 இடதுசாரி - பீட்டர் கெனமன்.

3. ஐக்கிய தேசியக் கட்சி (U N P) 1947 வலதுசாரி - டி.எஸ். சேனநாயக்கா.

4. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்~1944, 1947 - ஜி.ஜி. பொன்னம்பலம்.

5. மக்கள் ஐக்கிய முன்னணி~1956 - இடதுசாரி -பிலிப் குணவர்த்தனா.

6. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி~(S L F P)-1951- நடுநிலைக்கட்சி - வலதுசார்பு - எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா.

7. தமிழரசுக் கட்சி~(சமஷ்டிக் கட்சி) (F.P) - 1953 - சா.ஜே.வே. செல்வநாயகம்.

8. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்~(C W C)~ 1950 - செü. தொண்டமான்.

9. நவலங்க சமசமாஜக் கட்சி~(NLSSP)~1968-இடதுசாரி~வாசுதேவ நாணயக்காரா.

10. ஜனதா விமுக்தி பெரமுன (JVP) (மக்கள் விடுதலை முன்னணி) - 1971-இடதுசாரி~உரோகண விஜய வீரா.

11. தமிழர் விடுதலைக் கூட்டணி~(TULF)~1972- வலதுசாரி - சா.ஜே.வே. செல்வநாயகம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:32 pm

17: முதலாவது சிங்களவர்-தமிழர் கலவரம்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போக்குவரத்து அமைச்சர் நாலாயிரம் தமிழர்களை இந்தியாவிற்கு அனுப்பிய நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தியர் பிரச்னையைப் பேசுவதற்காக மகாத்மா காந்தி தனது தூதுவராக ஜவாஹர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்புகிறார் (1939).

ஆனால், இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வராமல் தோல்வி அடைகிறது. அப்போது நேரு பல்வேறு தொழில் துறைகளில் இருந்த இந்தியர்களை அழைத்து, இலங்கை இந்தியர்களுக்கான ஒரு காங்கிரûஸ உருவாக்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

இதையொட்டி உருவானதுதான் இலங்கை இந்திய காங்கிரஸ். இது கொழும்பில் உருவாகிப் பின்னர் மலையகத்தில் அறிமுகமாகிறது. இது கட்சியோ, தொழிற்சங்கமோ அல்ல. நேரு வருவதற்கு முன் எஸ். தேசாய் தலைமையில் இருந்த இலங்கை இந்தியர் சங்கமும் வள்ளியப்பச் செட்டியாரின் தலைமையில் இருந்த இந்திய சேவா சங்கமும் இணைந்ததொரு அமைப்பாகும்.

ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதம் இந்திய வணிகக் குழுவை வெளியேற்றுவதற்காக மட்டுமே முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது தென் கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் இந்திய வணிக நிறுவனங்களிலும், நிர்வாகத்திலும் தமிழர்களின் கை மேலோங்கி இருந்தது. ஆனால் இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவானபின் சிங்களவர் மத்தியில் ஓர் அச்சம் வேரூன்றியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையை சிங்களவர் மயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க அவர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

அப்போதிருந்த இந்திய வம்சாவளியின் சில பிரிவுகள்:

1. கொழும்பை மையமாகக் கொண்ட, மலையகத் தொடர்பு அற்ற, இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வியாபாரிகள்.

2. மலையகத்தில் வணிகத் துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டோர். இவர்கள் இந்தியாவின் தொடர்பைத் துண்டித்துத் தோட்ட உரிமையாளர்களாக ஒரு சமூகச் சக்தியாக இருக்கின்றனர். முற்போக்கான தேசிய வாதம் இவர்களிடம் இருந்தது. ஒரு கட்சியாக உருவாகாமல் தொழிற்சங்கமாகவே இது உருவாகியது. மலையகத் தமிழரின் தேசிய இயக்கமாக இத்தொழிற்சங்கம் மாறியது.

3. இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்.

இவ்வகையான கலவையே இலங்கை இந்தியக் காங்கிரஸôக ஆரம்பத்தில் இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி (மசட)

1944-இல் சோல்பரிக் கமிஷன் ஆட்சியதிகாரத்தை மாற்றுவதற்கான சிபாரிசினைச் செய்கிறது. அதுவரை சிங்களவர்களுக்கென்று அமைப்பு ஏதுமின்றி இருந்தது. சோல்பரிக் கமிஷனின் ஆலோசனையின் பேரில் ஓர் அமைப்பாக மாறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

முதலாவது பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அவசர அவசரமாக இக்கட்சி பிறப்பெடுத்தது. இலங்கைத் தேசியக் காங்கிரஸ், பண்டாரநாயகாவின் சிங்கள மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து இக்கட்சி உருவாகிறது.

1940-இல் இலங்கை மக்களின் வாழ்விடத் தெரிவுத் தகைமை பதிவு செய்யும் முறை கண்டிப்பாக அமலாக்கம் நடந்ததாலும், 1939-இல் இருந்ததைவிட 1943-இல் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் சமூகரீதியில் சிங்களவர்கள் வளர்ச்சி பெற்றார்கள்.

தமிழர்களின் பங்களிப்பைக் குறைக்கும் வகையில் தமிழர்களுக்கு எதிராக ஓர் அரசியல் கட்சி வடிவத்தில் தங்களை ஸ்தாபனப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்சிதான் மேற்சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி.

அரசியலில் தங்களுக்குள்ள உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவானதே இக்கட்சி.

1947-இல் இதையொட்டிய தேர்தல் வருகிறது. தேர்தலில் 7 மலையகப் பிரதிநிதிகள் வெற்றி பெறுகின்றனர். 20 தொகுதிகளில் மலையகத் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தனர். இதை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சியானது கம்யூனிஸத்திலிருந்து புத்தத்தைப் பாதுகாப்பது என்ற புதிய கோஷத்தை முன்வைத்து இனவாதத்தைத் தூக்கிப் பிடித்தது.

ஆனால், அதையும் மீறி மலையகத் தமிழர்களின் எண்ணிக்கையால் இடதுசாரிக் கட்சிகள் வெற்றி பெறுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:33 pm


தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயகா கோபம் அடைகிறார். அதன் விளைவாக மூன்று சட்டங்களை உடனடியாக இயற்றுகிறார். அவைகள்:


1. குடியுரிமைச் சட்டம்~1948.

2. இந்திய-பாகிஸ்தானிய குடியிருப்புச் சட்டம்~1949.

3. தேர்தல் சட்டத்திருத்தம்~1948.

இவைகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களாகும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWP)

1950-இல் உருளவல்ல என்ற இடத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரை வெளியேற்றி, அந்த நிலத்தை சிங்களவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்கள் போராடுகின்றனர். இப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிங்களவர்களின் செயல்களைக் கண்டித்தும் பிற தோட்டங்களின் அனைத்துத் தொழிலாளர்களும் போராட ஆரம்பிக்கின்றனர்.

சிறு அளவில் ஆரம்பித்த போராட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவில் விரிவடைகிறது. இதற்கு இலங்கை இந்தியக் காங்கிரஸ் தலைமை ஏற்கிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாகப் பெயர் மாற்றம் அடையப் பெற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸôக மாறியது. மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை இது பிரதிபலித்தது.

இடதுசாரிகள், ஒருபக்கம் வளர்ந்து வரும் சிங்களவர்களின் இன உணர்வைப் பார்க்காது, அதன் விளைவால் ஏற்பட்ட மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை நிராகரித்ததன் மூலம், பெருமளவிலான தொழிலாளர்கள் இடதுசாரி அணியிலிருந்து விலகி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பின் அணி திரளத் தொடங்கினர். அந்தச் சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வினைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரே அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. அதனாலேயே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதன் தலைமையின்கீழ் திரண்டனர். இந்தக் காங்கிரஸின் தலைவராக நீண்ட பல ஆண்டுகளாக செü. தொண்டமான் இருந்து வந்தார்..

இலங்கைத் தொழிலாளர் கழகம்

1962-இல் தமிழரசுக் கட்சியின் அங்கமாக இலங்கைத் தொழிலாளர் கழகம் தமிழர்கள் மத்தியில் இது உருவாகியது. மறைந்த நாகநாதன் தலைமையில் திவானந்த சுந்தரம் செயலாளராகப் பொறுப்பு ஏற்றார்.

நிர்வாகத் திறன் படைத்த தொழிற்சங்கம் என்பது அன்றையக் காலக் கட்டத்தில் மிகத் தேவையான ஒன்றாக இருந்ததால் இது பெருமளவிற்கு வளர வாய்ப்பு இருந்தது.

1960-இல் தமிழரசுக் கட்சி ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கமாக வளர்ந்தது. பலவகையான போராட்டங்களை தமிழர்களுக்கு ஆதரவாக, சிங்கள இன வாதத்திற்கு எதிராக இது கட்டமைத்தது. சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்த எதிர்ப்பில் இது செல்வாக்கு அடைந்தது. 1965-இல் சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தைத் திருத்தத்தோடு ஏற்றுக்கொண்டு டட்லி சேனநாயகா அரசில் (U.N.P.) பங்கேற்றனர்.

திரும்பவும் ஸ்ரீமாவோ ஆட்சிக்கு வந்தபின் அவரது சுதந்திரக் கட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி இலங்கைத் தொழிலாளர் கழகம் செல்வாக்கு பெற்றது. 1958-இல் முதலாவது சிங்களவர்~தமிழர் கலவரம் வெடித்தது. 1956-இல் இருந்துவந்த சிங்கள இனவாதத்தின் வெளிப்பாடாகத் தனிச் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்த்துதான் தமிழர்களின் போராட்டம் வெடித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:34 pm

18: புதிய அரசியல் சட்டம்

இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச் சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது.

வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் ஆறுமுகநாவலர் எடுத்தார். சட்ட நிரூபண சபைக்கு பொ. இராமநாதன் நியமனத்திற்காக ஆளுநருக்கு எழுதினார். இதன்மூலம் 50 ஆண்டுகள் தமிழர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பொ.இராமநாதனுக்கு கிடைத்தது. ஆனாலும் பொ.இராமநாதன் ஆறுமுகநாவலரின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்தது. மாறாக, இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தை நிறுவி ((Ceylon National Association)) அதன் தலைவராக அரசமைப்பு சீர்திருத்தத்திற்கும் அதன்மூலம் அதிக உள்ளூர் பிரதிநிதிகளை அரசியல் நிர்ணய சபையில் அங்கத்தினர்களாக்க பெரிதும் பாடுபட்டார். 13 ஆண்டுகள் பதவி வகித்த பொ.இராமநாதனுக்குப் பிறகு அவரது சகோதரர் பொ.குமாரசாமி வந்தார். இவரின் பதவிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு புகைவண்டி இருப்புப் பாதையை அதிகரிக்கப் பெரிதும் முயன்றார்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "ஹிந்து ஆர்கன்' மற்றும் அதன் தமிழ் பதிப்பான "இந்து சாதனம்' மட்டுமே தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகக் கட்டுரைகள், தலையங்கங்களை எழுதின. உதாரணமாக, இந்து சாதனம் நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கத்தின் ஒருபகுதி வருமாறு:

""நாம் ஒன்றிணையவில்லை. நாம் பிரிந்து நிற்கிறோம். மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் கடினம். ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புகளினால் நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்னைகளை எமது மக்கள் ஒன்று கூடிக் கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் நாம் சரணளித்துவிட்டு, சித்த சுவாதீனம் இழந்தவராய் நிற்கிறோம்'' இவ்வகை எழுத்துக்கள் மக்களை எழுச்சியுறச் செய்தன.

1905-ஆம் ஆண்டு இறுதியில் "யாழ்ப்பாணச் சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து 1906-இல் வெளியான "ஹிந்து ஆர்கனி'ல், ""தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அரசின் முன்வைத்து தீர்க்கும் விதமாக யாழ்ப்பாணச் சங்கம் உருவாகியுள்ளது. இது பூரண ஒற்றுமையுடனும், முழுமனதோடும், சாதி சமய பாகுபாடுகளின்றிச் செயற்படுமானால், அரசியல் அரங்கத்தில் அது பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மாத்திரமின்றி, சமூக நிலைகளிலும் பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் - ஒற்றுமையே பலம்.'' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.

இதேவேளையில் முத்துக்குமாரசாமியின் மகனாகிய கலாநிதி ஆனந்த குமாரசாமி 1906-இல் யாழ்ப்பாணம் வந்தார். அவர் தனது ஆங்கிலேய தாயாருடன் லண்டனில் வளர்ந்தவர். சைவ பரிபால சபை சார்பில் 1906 மே 14-இல் இந்துக் கல்லூரியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது நன்றியுரையில், ""தமிழ்க் கலாசாரம், பாரம்பரியங்கள் என்பனவற்றைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேற்கத்திய கலாசாரத்தை யாரும் பின்பற்றக்கூடாது. தமிழரின் கலாசார அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இதை தமிழர்களுக்கு எனது வலியுறுத்தலாகக் கூறிக்கொள்கிறேன்'' என்றார்.

* யாழ்ப்பாணத் தமிழர் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கும்பகோணம் கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஜேம்ஸ் ஹென்ஸ்மன். இவர் தலைவராகவும், வழக்கறிஞர்கள் ஹோமர் வன்னியசிங்கம், எஸ்.காசிப்பிள்ளை உப தலைவர்களாகவும் இருந்தனர். ஜேம்ஸ் ஹென்ஸ்மன் தலைசிறந்த ஆங்கிலப் பேராசிரியர் ஆவர். பின்னாளில் "வெள்ளி நாக்குத் தமிழர் ஸ்ரீநிவாசசாஸ்திரி' என்று போற்றப்பட்ட-‘Silver Tongue Srinivasa Sastry’ வரின் குரு. ஹென்ஸ்மனுக்கு இரு புதல்வர்கள். அவர்கள் இருவரும் சென்னையிலேயே பணிபுரிந்தனர். அவர்களும் ஹென்ஸ்மன் என்றே அழைக்கப்பட்டனர். அந்த ஹென்ஸ்மனில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து அரும்பணியாற்றிய காரணத்தால், அவரது பெயரில் தியாகராயநகரில் ஹென்ஸ்மன் சாலை என்று ஒரு சாலைக்குப் பெயரிடப்பட்டது. இன்று அந்த சாலை கண்ணதாசன் சாலை என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

பின்னர் சமூக சீர்திருத்த சங்கம் (1906), ஐக்கிய நாணயச்சங்கம் (1913), யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம் (1918), திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் (1920), மட்டக்களப்பு சங்கம் (1920). முல்லைத்தீவு மகாஜன சங்கம் (1921) ஆகியவை உருப்பெற்று யாழ்ப்பாணச் சங்கத்துக்கு உதவியாகவும், ஆலோசனை கூறுகிற அமைப்புகளாகவும் அமைந்தன.

1921 ஆகஸ்டு 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தமிழர் மகாஜன சபை, தமிழர்களின் பிற்கால அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:35 pm

இந்தப் பின்னணியில் தமிழர் அரசியல் அமைப்புகளைப் பார்ப்போம்:

இலங்கைத் தமிழரசுக் கட்சி:

தமிழர்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் 1949-இல் இது உருவாகிறது.

தன்னுடைய தனித் தன்மையையும் பல பிரிவுத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் இது பிரதிபலித்துப் பலமுனைச் செயல்பாடுகளால் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான ஒரு கட்சியாக இது உருவானது.

சிங்கள வெறிக்கும் இனவாதத்திற்கும், பதில் கூறக் கூடிய வகையில் இது செயல்பட்டது. அதை நேருக்கு நேர் நின்று எதிர்த்தது. பரவலான மக்கள் இயக்கங்கள் அனைத்தையும் கட்டி எழுப்பியது.

தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக 1956-இல் உடனுக்குடன் ஒரு மிகப்பெரிய சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தியது.

இந்த எதிர்ப்பின் விளைவாகப் பணிந்த அரசாங்கம் கடைசியில் இந்தத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுவே சரித்திரப் புகழ்பெற்ற பண்டாரநாயக்கா~செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

காரணம், சிங்களர்களும், புத்த பிக்குகளும் அணி திரண்டு தீவிரமாக அதை எதிர்த்தனர்.

இதுபற்றி அன்றைய டெய்லி நியூஸ் கருத்துக் கூறுகையில், 200 அரசியல் பிக்குகள், 15,000 மக்கள் திரண்ட ஓர் ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கலந்துகொண்டு இதைக் கண்டித்துப் பேசுகின்றனர். ஜெயவர்த்தன புத்த பிக்குகளின் இந்தக் கண்டனக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கண்டியை நோக்கிப் பாத யாத்திரை செல்கிறார். இந்த ஒப்பந்தத்தைத் தூக்கி எறிய அரசை வலியுறுத்துவதற்காக இப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சில மந்திரிகளும் கூட இந்த ஒப்பந்தத்தைக் கண்டிக்கின்றனர்.

மந்திரிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம் பிரதம மந்திரியின் வீட்டுக்குச் சென்று ஒரு மனுவை அளிக்கின்றது.

இந்த வகுப்புவாத நாடகத்தின் விளைவாகக் கடைசியில் இந்த ஒப்பந்தம் தூக்கி எறியப்படுகிறது.

அதிலிருந்து தொடர்ந்து 1958, 1961 வகுப்புக் கலவரங்களும், மோதல்களும் உருவாகின்றன. இது 1965 வரை தொடர்கிறது.

இதற்கிடையில் தமிழரசுக் கட்சி தலைமையிலான சிவில் ஒத்துழையாமை இயக்கம் (1961) மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும்.

பின்னர் 1965-இல் ஆட்சி மாற்றம். ஐக்கிய தேசிய முன்னணி U.N.P. அரசு ஏற்படுகிறது. சிங்களவர்கள் சில சலுகைகளைத் தமிழர்களுக்கு அளித்து ஒரு கூட்டுறவுத் தந்திரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக மாவட்ட சபைகளை உருவாக்கும் செல்வா-டட்லி ஒப்பந்தம் உருவாகியது. ஆனால் இந்த அமைதிச் சூழ்நிலை அதிக நாள் நீடிக்கவில்லை. சிங்கள இனவாதிகள் இதையும் அனுமதிக்கத் தயாராக இல்லை.

இதைத் தொடர்ந்து 1968-இல் தமிழரசுக் கட்சி அரசோடு ஒத்துழைக்காது வெளியேறியது. பின் 1970-இல் திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீமாவோ (சுதந்திரக் கட்சி) ஆட்சிக்கு வந்தன.

ஸ்ரீமாவோவின் ஆட்சிக் காலமான 1970-77-இல் நாடும் முழுவதும் கொந்தளிப்புகளும், குமுறல்களும், அரசு அடக்குமுறைகளும் மிகுந்த ஒரு காலமாகும்.

அப்போது இடதுசாரிக் கட்சிகளும் அரசில் பங்கேற்கின்றனர். சிங்கள இனவாதத்தின் முன்னே இடதுசாரிகளின் வேடம் அம்பலப்பட்டு அவர்களும் இனவாத நீரோட்டத்தில் கலந்து கரைந்து விடுகின்றனர். (லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி முதலியன)

1972-இல் ஸ்ரீமாவோ அரசு, இலங்கையைக் குடியரசாக அறிவித்தது. சிறுபான்மையருக்குப் பாதுகாப்பு அளித்த பழைய அரசியல் சட்டத்தின் 29-ஆவது ஷரத்தை நீக்கியது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி மற்றும் சில கட்சிகள் இந்த அரசியல் சட்ட மோசடியை எதிர்த்தும், தங்களின உரிமைகளைப் பேணவும், அரசோடு பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகின்றன. (1971)

அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகின்றது. கடைசியில் சிங்கள மொழியை ஆட்சி மொழி ஆக்கியும், புத்த மதத்திற்கு விசேஷ அந்தஸ்து அளித்தும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. (1972).

* Sir, in the volume of ‘‘Connected Constitutional Papers‘‘ referred to by the Hon.Member for Kandy he would see that right at the very beginning, as early as 1909 or 1908 when several of us would not have been able to lisp in the English language, the Jaffna Association, under the Presidency of Mr.James Hensman, was asking for the introduction of the elective principle and for a degree of responsible governement in this country. Here you have the case of a Tamil Association that admittedly gave a lead to the political movement in this country. Happily Sir, that revered old man, who has given to India the Right Hon. Srinivasa Sastri, is yet spared to the Tamils of Ceylon in their day of travail; he is yet alive, and this is the message Mr.Hensman in the evening of his life, having seen all the various political facets, all the various political evolutions both in India and in Ceylon sent from his retirement in Jaffna. -Speech delivered in the State Council on the Reforms Dispatch by G.G.Ponnambalam M.Sc.

* (கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர்')

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:36 pm

19: தமிழர் விடுதலைக் கூட்டணி!

அப்பொழுது புதிய புனரமைப்பு, சமூகத்தின் தேவையாக மாறியது. ஒருபக்கம் அப்பட்டமான சிங்களப் பேரினவாதம் சட்ட வடிவத்தில் வெளிப்பட்டது. மறுபக்கம் சிங்களக் குண்டர்களின் தலைமையில் சிங்களவர்களை அணி திரட்டி மதச் சிறுபான்மையினரை ஒடுக்கக் கூடிய வடிவம் ஓர் உச்சகட்ட அந்தஸ்தை அடைந்தது. அதுமட்டுமல்லாது அரசு இயந்திரமான போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் மூலமும் இனவாத அடக்குமுறையை நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை உருவானது.

ஆக இந்த மூன்று வடிவங்களையும் ஒருங்கே கையில் எடுத்துக்கொண்டு புத்தமதம், அரசு அங்கீகாரத்துடன் களத்தில் முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகியது.

புறநிலையில் இந்தத் தவிர்க்க முடியாத விளைவுகள் தமிழ் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கின.

தமிழ் அரசியல் சக்திகள் தங்களை ஒருங்கிணைந்த நிறுவன வடிவில் நிலைப்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் தேசிய சுதந்திரத்திற்கான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கட்டமைக்க நெருங்கி வந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது:


திருகோணமலையில் 1972-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தமிழர்கள் அனைவரும் ஒரு மாநாட்டினை நடத்தினர். இதில் மிக முக்கியமான மூன்று கட்சிகள் பங்கேற்றன.

ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தொண்டைமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆகியவை இம்மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தன.

இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் கூட்டணியை அன்று உருவாக்கின.

தமிழ் மக்களின் தேசியத் தனித்தன்மையை நிலைநாட்டவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் போராடுவது என்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இது சுயாட்சியையே முன்வைத்தது. சத்தியாக்கிரக வடிவில் வன்முறையற்ற போராட்டங்களைக் கட்டமைக்க அது முடிவு செய்தது. எப்படி இருந்தபோதிலும் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றில் இந்த ஐக்கியப்பட்ட நிலை ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும்.

இதனுடைய அடுத்த கட்டமாக, சுதந்திரக் கட்சி ஆட்சியின் அடக்குமுறையை ஒருபுறமும், இளைஞர்களுடைய அதிருப்தியையும் வேதனையும் மறுபக்கத்திலும் இந்த அமைப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலைதான் இந்த அமைப்பு வலுவாக வேரூன்றக் காரணமானது. 1976-இல் தமிழர் கூட்டணி இளைஞர்களின் வேகத்தின் முன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக (ப.ம.க.ஊ.) தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.

இதன் தலைவர்களாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம், செü. தொண்டமான், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வட்டுக்கோட்டையில் 1976-இல் நடந்த இம் மாநாடு தேர்வு செய்தது.

அம் மாநாட்டில் தொண்டமான் நேரடியாகப் பங்கேற்கவில்லை. இம் மாநாடு தனி நாட்டுக் கோஷத்தையும் வலியுறுத்தியது. தனி நாடு மலையகத் தமிழர்களுக்குத் தீர்வாக அமையாது என்று தனது கருத்தை மாநாட்டிற்கு எழுத்துபூர்வமாக அனுப்பி வைத்தார் தொண்டமான். அதனைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டதை அடுத்து, தொண்டமான் தொடர்ந்து கூட்டுத் தலைவர் பதவியை வகித்தார்.

1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் பங்கேற்றது. தமிழ் ஈழம் அமைக்க தமிழ் மக்கள் ஆணையிட்டனர். தேர்தலின் முடிவில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக தொண்டமான் யாரும் எதிர்பாராத நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து, அமைச்சர் ஆனார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:36 pm


தமிழ் இளைஞர் பேரவை:


1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வையும், அவர்கள் மலையக மக்கள் மீது காட்டிய ஆர்வத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் கண்ணோட்டமோ, சுயநல வெறியோ இன்றி நேர்மையாக இளைஞர் பேரவையைச் சார்ந்த 10 இளைஞர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம் மேற்கொண்டனர்.

இவர்களின் ஒரே நோக்கம் மலையக மக்களின் வாழ்நிலையைப் புரிந்து கொள்வதுதான். இவ்வாறு பயணம் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரே காலம் சென்ற சிவகுமாரன் ஆவார்.

மலையக மக்கள் பட்ட கஷ்டங்களையும் கலவர காலத்தில் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் அரசின் அடக்குமுறை விளைவுகளையும் நேரில் பார்த்த சிவகுமாரன் ""தமிழர்களின் பிரச்னைக்குத் தனி நாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆயுதப் போராட்டமே அதற்குத் தீர்வு'' என்ற கருத்தைப் பெற்றார். அதையே இளைஞர் பேரவைமுன் அவர் வைத்தார். 1973 நவம்பரில் மலையகப் பகுதியில் அம் மக்கள் வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர்களும் கலந்துகொண்டார்கள்.

இதை அடுத்து 1976-இல் மலையக மக்களின் போராட்டத்தில் சிவனு லட்சுமணன் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் நடத்திய வேலைநிறுத்தம், நிதி சேகரிப்பு இயக்கம் குறிப்பிட்டாக வேண்டிய இளைஞர் பேரவையின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆகும்.

இளைஞர் பேரவையின் இந்த நடவடிக்கைகளுக்கு அச்சாணியாக இருந்தவர்கள் இந்தப் பத்து இளைஞர்களும்தான்.

இத்தகைய நிகழ்ச்சிகள் யாவும் மலையகத்திற்கும், வடபகுதிக்கும் இடையில் நல்லுறவுப் பாலம் அமைக்கும் ஆரம்ப முயற்சிகளாக இருந்தன. இந்தச் சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துத் தீவிர வன்முறைத் தாக்குதல்களை நடத்தும் போக்கு வெளிப்பட்டு வேகமடையத் தொடங்கியது. இந்த வேகம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்துத் தனி நாடு கேட்கும் போராட்ட இயக்கமாக வளர்ச்சி பெற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:37 pm

20: திட்டமிட்ட புறக்கணிப்பு!

தேயிலைத் தோட்ட தமிழ்ப்பெண் தொழிலாளிகள். ஆங்கிலேயர்கள் 1948 பிப்ரவரி 4-இல் இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்தனர். அதன்பின் இலங்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கொள்கைகளால் மிகவும் பாதிப்புக்குள்ளான சமூகம், தமிழ்ச் சமூகமே. இவர்களைப் பொருளாதார அடிப்படையில் பிரித்துப் பார்க்கையில்:-

1. இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள்.

2. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் சொத்தும் தொழிலும் கொண்ட தமிழர்கள்.

3. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் வளர்ந்து வந்த தொழில் நிறுவனத்தினைக் கொண்ட தமிழர்கள்.

4. வர்த்தக நிதி நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.

5. மலையகத் தோட்ட உரிமையாளர் மற்றும் அவர்களோடு நெருக்கமாக உறவுகொண்ட தமிழர்கள்.

6. சிறு வியாபார நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.

7. விவசாயத்தைத் தொழிலாகக்கொண்ட தமிழர்கள்.

8. மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள்.


இந்த எட்டு வகைத் தமிழர்களும் பொருளாதார நிலையில் மிகவும் மேலான வசதி கொண்டவர்களே. ஆனால் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய தமிழர்களை வரிசைப்படுத்தினால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் (குடியுரிமையற்றவர்கள்), விவசாயக் கூலித் தமிழர்கள், அரசு மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், நகர்ப்புறங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனப் பிரிக்க முடியும்.

பிற இனங்களின் மீது சிங்களவர் எதிர்ப்பு கொள்ளும் நிலை 1930-இல் தீவிரமடைந்த காலத்தில் வர்த்தகத் துறையின் மீது அவர்கள் கவனம் திரும்பியது. வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இதில் நிறைவு பெற முடிந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற உடனே பல பொருளாதாரத் திட்டங்கள் உருவாயின. இதன் மூலம் கல்வி மற்றும் நிர்வாக அமைப்புகளில் பணியாற்றும் நடுத்தரத் தமிழ் வர்க்கம் பாதிப்புக்குள்ளானது.

அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள் யாவும் சிங்களவர் பகுதிக்கே சென்றன. உதாரணமாக, குருவில்லாவில் நிறுவப்பட்ட இரும்புத் தொழிற்சாலை; களனியில் உள்ள டயர்த் தொழிற்சாலை; கல்ஓயாவில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; நாத்தாண்டியாவில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; எம்பிலிபிட்டியாவில் உள்ள காகிதத் தொழிற்சாலை; கண்டி, வியாங்கொடை, துல்கிரியா ஆகிய இடங்களில் அமைந்த பெரிய பஞ்சாலைகள்; சப்புகஸ்கந்தையில் உள்ள உரத் தொழிற்சாலைகள்; நித்தமடிவை, பிரியந்தலையில் உள்ள பீங்கான் தொழிற்சாலை; களனியில் உள்ள தொழில்பேட்டை; அனுப்பிட்டியாவில் உள்ள உரத்தொழிற்சாலை; புத்தளம், காலியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை ஆகிய அனைத்துத் தொழிற்சாலைகளும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியிலேயே உள்ளன.

பண்டாரநாயக்காவின் ஆட்சியில் இந்திய நிர்வாகிகளின் ஆதிக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. 1977-லிருந்து 82 வரை 50 மில்லியன் டாலர் நிதி உதவிகள் அந்நிய நாட்டிலிருந்து பெறப்பட்டபோதிலும், தமிழர் வாழ் மாவட்டங்களுக்கு எந்தப் புதிய தொழிற்சாலையும் கிடைக்கவில்லை. கடந்த அறுபதாண்டு காலமாக இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தனி நபர் மூலதனச் செலவீடு ரூ.313. அதே நேரத்தில் தேசிய அளவிலான மூலதனச் செலவீடு 656 ரூபாயாகும்.

யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதும், அவ்விடங்களில் குறிப்பாக மன்னாரில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனம் உருவாக்கவும், மேலும் பல எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை நடத்துவதற்காகவும் ரஷியக்குழு சிபாரிசு செய்திருந்தபோதிலும் அவை கிடப்பில் போடப்பட்டன.

அதேபோன்று 1960-இல் உலக வங்கி, தீவு முழுவதும் ஆய்வு செய்து துணுக்காய் பூநகரிப் பகுதிகளில் மிகப் பெரிய சர்க்கரை ஆலையை நிறுவச் சிபாரிசு செய்ததோடு அதற்கு நிதி உதவி செய்யத் தயாராக இருந்ததாகக் கூறிய போதிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக