புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
31 Posts - 55%
heezulia
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
17 Posts - 3%
prajai
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணை மூடிய இந்தியா Poll_c10கண்ணை மூடிய இந்தியா Poll_m10கண்ணை மூடிய இந்தியா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை மூடிய இந்தியா


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 25, 2010 2:03 pm

தூதர் நாடகத்தின் அடுத்த காட்சி கடந்த வாரத்தில் அரங்கேறியது!

‘இலங்கை தமிழர் நிலைமை குறித்து அறிய, ஒரு சிறப்புத் தூதரை அனுப்புங்கள்’ என்று தமிழக முதல்வர் கருணாநிதி வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவை அந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங். இலங்கை செல்வதற்கு முன்னதாக சென்னைக்கு வந்து முதல்வரைச் சந்தித்து ஆலோசனையும் கேட்டுச் சென்றார். நான்கு நாட்கள் இலங்கையில் இருந்து திரும்பி உள்ள நிருபமா ராவின் பயணம் குறித்து கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிக்கையாளரிடம் கேட்டபோது, “இதனால் மைனசு அளவுதான் பயன் இருக்கும் அண்ணா!” என்று சொன்னார்.

வவுனியாவின் செட்டிகுளம் மாணிக் பாம், கிளிநொச்சி, ஓமந்தை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை ஒன்றரை நாட்களில் 1,100 கி.மீ தூரம் பயணம் சென்று பார்த்தேன்” என்று நிருபமா ராவ் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், எந்த இடத்தில் எத்தனை மணி நேரம் பார்த்தார், யார் குரலை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டார் என்பதெல்லாம் ஏமாற்றமாகத் தான் இருக்கிறது.

யாழ்ப்பாணம் நூலகக் கூடத்தில் நிருபமாவை நேருக்கு நேராகப் பிடித்துக்கொண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார் வரலாற்றுத் துறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம். அவர் பேசி முடித்ததும், அவரது தொலைப்பேசி எண்ணை இராணுவத்தினர் வாங்கிக் கொண்டார்களாம். அந்த அளவுக்குக் கோபத் தீ பறந்திருக்கிறது அவரது பேச்சில். “இந்திய – இலங்கை உடன்பாடு ஏற்படுவதில் இந்திய அரசாங்கம் முக்கியப் பங்காற்றியது. ஆனால், அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதுபற்றி உங்களுக்கு கவலையே இல்லை. அதைவிட, யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயல்பட்டவிதம் எம் மக்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது. யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி பொதுமக்களை இந்தியா காப்பாற்றும் என்று நினைத்தேன். ஆனால், இந்திய அரசு அதனைச் செய்யவே இல்லை” என்று குற்றம் சாட்டிய சிற்றம்பலம், “இறுதித் தருணங்களில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்களைக் கொலவதற்கு அதுதான் காரணமாக அமைந்தது.

யுத்தத்துக்குப் பிறகாவது எங்களுக்கு ஏதாவது சமாதானம் செய்துவைக்க இந்தியா பங்காற்றும் என்று நினைத்தோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்க இலங்கையை வலியுறுத்துவீர்கள் என்று ஓர் ஆண்டு காலம் எதிர்பார்த்தோம். ஆனால், அதையும் செய்யவில்லை. இந்த விடயத்தில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இந்தியா வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.” என்று அவர் பொரிந்துக்கொண்டே செல்ல, அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தார் நிருபமா ராவ். கோபத்தைத் தூண்டும் வார்த்தைகளை சிற்றம்பலம் சொல்லும்போது, பதில் சொல்ல தனது நாற்காலியின் நுனிக்கு வந்தார், பின்னர் அமைதியாகிவிட்டாராம்.

“இலங்கைத் தமிழர் நலனில் இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துதான் வந்திருக்கிறது. நான் உங்களுக்குச் சொல்வது, இனி வரும் சந்ததியினரின் நலத்தைக் கருத்தில் கொண்டு எதிர் காலத்தைப் பாருங்கள்!” என்று பதில் அளித்துவிட்டு, நிருபமா யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பியிருக்கிறார்.

பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாகச் சில விளக்கங்களை அவரால் சொல்ல முடியவில்லை என்றாலும், மறுநாள் இந்திய இல்லத்தில் தன்னைச் சந்திக்க வந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசிய நிருபமா, “தமிழர்களுக்கு நன்மை செய்யவே இந்தியா நினைக்கிறது. ஆனால், இந்தியா வேகமாகச் செயல்பட முடியாத அளவுக்குச் சில தடைகள் உள்ளன. 1987-ம் ஆண்டு இலங்கையை அழைத்து ஒப்பந்தம் போட்டது மாதிரியான நிலைமை இப்போது இல்லை. இலங்கை அரசாங்கம் இன்றைக்கு மூன்றில் இரண்டு பங்கு பலம்கொண்ட்தாக இருக்கிறது. அதை நான் நினைத்த மாதிரி எல்லாம் நடத்தமுடியாது!” என்று கையை விரித்துவிட்டாராம் நிருபமா.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் முக்கியமான பிரிவு… பெரும்பான்மைத் தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்க வேண்டும் என்பதாகும். ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு தாக்கல் செய்த வழக்கில், இலங்கை உச்ச நீதிமன்றம் அந்தப் பிரிவுக்குத் தடை விதித்துவிட்டது. எனவே, இந்திய – இலங்கை ஒப்பந்தமே உடைந்து நொருங்கிவிட்டதாகத்தான் அர்த்தம். நிருபமாவிடம் இதைச் சுட்டிக்காட்டிய ஜனதா மக்கள் முன்னணிச் செயலாலர் நல்லையா குமர குருபரன், “வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது இந்தியா பெற்ற குழந்தை. அதை இந்தியாதான் ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும்!” என்று சொல்ல, “அதற்கு 22 வயதாகிவிட்டது. அது தன்னால் வளர்ந்துவிடும்!” என்று கிண்டல் அடித்திருக்கிறார் நிருபமா.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் அமைப்பினர், சில கோரிக்கைகளையாவது இந்தியா நிறைவேற்றித் தர வேண்டும் என்று கெஞ்சியுள்ளனர். “உயர் பாதுகாப்பு வளையங்களைப் படிப்படியாக அகற்றியாக வேண்டும். தமிழர் வாழும் பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் குடியமர்த்தி வருவதைத் தடுக்க வேண்டும். பொதுமக்கள் அமைதியாக வாழ, சிவில் நிர்வாகம் செயல்படத் துவங்கவேண்டும். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டுவசதிகள் இல்லை. மீன் பிடித்து வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் தமிழ் மீனவருக்கு படகும் வலையும் வழங்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார்களாம்.

“இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்தியா சார்பில் முடிந்த அளவு உதவிகள் செய்வோம். அழிந்துபோன வீடுகளைக் கட்டித் தருவோம். மொத்தம் 50,000 வீடுகளைக் கட்டித்தரன் இந்தியா திட்டமிட்டு உள்ளது. முதல்கட்டமாக 1000 வீடுகள் வடக்கு மாகாணத்தில் அமைக்கும் வேலைகளை தொடங்கப் போகிறோம். வீட்டின் அளவு, வரைபடத்தை விரைவில் தயாரிப்போம். இதில், 1000 வீடுகள் கிழக்கு மாகாணத்தில் அமையும். இந்தியா இதையெல்லாம் நேரடியாகச் செய்ய முடியாது. இலங்கை அரசாங்கத்தின் மூலம்தான் செய்ய முடியும். சுமார் இரண்டரை இலட்சம் பேர் இருந்த முகாம்களில் இப்போது 28000 பேர் தான் இருக்கிறார்கள். நீங்கள் சொன்ன மற்ற விடயங்கள் குறித்து அதிபரிடம் பேசுவேன்!” என்று பதில் அளித்திருக்கிறார் நிருபமா.

இவை அனைத்தும் தமிழர் பகுதியில் நடந்தவை. ஆனால் கொழும்பு பேச்சுவார்த்தைகள் வேறுவிதமாக இருந்ததாக இலங்கைப் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. நிருபமாவை பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் இராசப்க்சே தலைமையில் வெளிவிவகாரத்துறை, உயர் கல்வி, நீர்ப்பாசனம், மீன் பிடித்தல் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த் அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய விவரங்களை ‘வீரகேசரி’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ‘பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் செயல்பாட்டில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர்கள் நன்றி கூறியதாக’ அந்தப் பத்திரிக்கைக் கூறுகிறது. அடுத்து, அதிபர் மகிந்தாவை நிருபமா சந்தித்தபோது, “இலங்கையில் இந்தியத் தொழில் அதிபர்களின் முதலீட்டு ஆர்வம் அதிகமாகி வருகிறது. இந்தியாவின் முன்னணித் தொழில் அதிபர்கள் இங்கு வந்து தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளார்கள்!” என்று அதிபர் சொன்னாராம். “இடம் பெயர்ந்த மக்களைக் குடியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை எனக்குத் திருப்தி அளிப்பதாக உள்ளது!” என்று நிருபமா ராவ் சொன்னதாக அதிபர் மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இதை எல்லாம்வைத்துப் பார்க்கும்போது, நிருபமா ராவின் பயணம் இப்போதைக்குக் கறாரான எந்த வாக்குறுதியையும் வாங்கித் தருவதாக அமையவில்லை. “கருணாநிதியைச் சமாதானப்படுத்த ஏதாவது ஒரு நடவடிக்கையைக் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை மன்மோகன் சிங் செய்கிறார். அதில் ஒன்றுதான் இது. அடுத்ததாக, வெளியுறவுத் துறை அமைச்சர் எச்.எம்.கிருசுணா விரைவில் இங்கு வருவார்” என்று சொல்கிறார்கள் கொழும்பில் இருக்கும் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள்.

இதில் புரியாத ஒரு விடயம் இருக்கிறது. ‘ இந்தியாவும் இலங்கையும் சகோதரிகள் மாதிரி. இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது!” என்று சொல்லியிருக்கிறார் நிருபமா ராவ்.

அது என்னவாம்?

இந்த கட்டுரை சென்ற வார ஆனந்த விகடனில் திரு.ப.திருமவேல்ன் என்பவரால் எழுதப்பட்டது





ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 25, 2010 2:05 pm

முதல்ல இந்த தூதர்களை அடிக்கணும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 2:15 pm

நம்ம தலைவர்களை சொல்லணும் மத்தவங்களை குறை சொல்லி ஒன்னும் ஆகபோறதில்லை

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Oct 25, 2010 2:25 pm

maniajith007 wrote:நம்ம தலைவர்களை சொல்லணும் மத்தவங்களை குறை
சொல்லி ஒன்னும் ஆகபோறதில்லை

என் இந்த கோல வெறி காந்தி பிறந்த மண் இது .5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சியை மாறும் அதிகாரம் உள்ளது உங்கள் கையில் .அதனை பயன்படுத்துங்கள் .அதுதான் சிறந்த வழி .இந்த கோபம் வேண்டாம் நண்பரே


ராம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 2:55 pm

rarara wrote:
maniajith007 wrote:நம்ம தலைவர்களை சொல்லணும் மத்தவங்களை குறை
சொல்லி ஒன்னும் ஆகபோறதில்லை

என் இந்த கோல வெறி காந்தி பிறந்த மண் இது .5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சியை மாறும் அதிகாரம் உள்ளது உங்கள் கையில் .அதனை பயன்படுத்துங்கள் .அதுதான் சிறந்த வழி .இந்த கோபம் வேண்டாம் நண்பரே


ராம்

இல்லை அண்ணா மீண்டும் மீண்டும் திருடர்களே வருகிறார்கள் இலவசத்தில் மயங்கி நமது சுயத்தை இழந்துவருகிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக