புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
1 Post - 20%
Manimegala
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
11 Posts - 4%
prajai
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
9 Posts - 4%
Jenila
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
2 Posts - 1%
jairam
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_m10காமராஜர் பையில் சில்லறை - சாவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜர் பையில் சில்லறை - சாவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:18 am

பல்வேறு தலைவர்கள் தங்களது பல்லேறு தனித்தன்மைகளால் என்னை வியக்க வைத்திருக்கிறார்கள் என்றாலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமை அவற்றில் தலையாய இடம் வக்கிறது.

அவரிடம் எப்போதுமே எனக்கு ஆழ்ந்த அன்பும், மரியாதையும் உண்டு. பலமுறை நான் டெல்லிக்குப் பயணம் செய்தது அவருடன்தான். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்ததும் அவருடன் தான். அந்தக் காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் அவருடைய எளிய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.

அவரது ஆடம்பரம் என்று எதையாவது சொல்லவேண்டும் என்றால் மூன்றுவேளை கதர்ச் சட்டை மாற்றுவதை மட்டுமே சொல்ல முடியும். சட்டை எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும்.

காரில் சுற்றுப் பயணம் போகும்போது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்க்குச் சில்லறை நாணயங்களாக மடியில் கட்டிவைத்துக் கொள்வார்.

'எதுக்கு இவ்வளவு சில்லறை உங்களுக்கு?' என்று கேட்டால் 'போகிற வழியில் கார் நின்னுச்சினா, பிச்சை எடுக்கிறவங்க காரை சூழ்ந்துக்குவாங்க. காசு போட்டால் போயிடுவாங்க, அதுக்குத்தான்' என்பார். கையில் கடிகாரம்கூடக் கட்டுவதில்லை. கேட்டால், 'என்னைச் சுற்றித் தான் எப்பவும் யாராவது இருப்பாங்களே... டைம் கேட்டா சொல்லிட்டுப் போறாங்க... தனியா நான் வேற ஏன் கட்டிக்கணும்னேன்...' என்பார்.

ஒரு சமயம் நான் அவரிடம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு தீபாவளி நெருக்கத்தில் அவருடன் டெல்லி போயிருந்த போது தமிழ்நாடு கெஸ்ட்ஹவுஸில் அவர் தங்கியிருந்த அறையிலேயே என்னையும் தங்கவைத்தார். இரவு தூங்கப்போகும் முன் எனது 'வாஷிங்டனில் திருமணம்' புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவர் அதை முடித்துவிட்டுத் தூங்கும்வரை என்னால் விழித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நான் தூங்கிப் போய்விட்டேன். வெகு நேரத்திற்குப் பின் அவர் என்னைத் தட்டி எழுப்பினார்.

'என்ன இப்படி குறட்டை விடறீங்க... நானே குறட்டை விடுகிறவன்தான்... நீங்க என்னையும் மிஞ்சிட்டீங்க... உங்க குறட்டைச் சத்தம் என்னைத் தூங்கவிடாது போலிருக்கு. பக்கத்து ரூம்ல போய்ப் படுத்துக்குங்க' என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்த நேரத்திலும் மறக்காமல், 'கதையைப் படிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கு' என்று பாராட்டத் தவறவில்லை.

ஏதோ குறட்டை விஷயத்திலாவது பெருந்தலைவர் காமராஜரை மிஞ்சமுடிகிறதே என்று எனக்குள் பெருமை!

எப்போதும் பயணத்தின் போது அவருடன் ஒரு பெட்டி வரும்.

டில்லியில் நான் அவருடன் தங்கியிருந்த போது எனக்குள் உள்ளுர ஒரு குறுகுறுப்பு. அந்தப் பெட்டிக்குள் அப்படி என்னதான் இருக்கும்? என் நிருபர் புத்தி என்னைக் குடைந்து கொண்டிருந்தது!

இவரோ பிரமச்சாரி. எளிய வாழ்க்கை. ஒருநாள் அந்தப் பெட்டியைத் திறந்து சோதனை போட்டுவிடவேண்டியதுதான் என்று என் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

ஒருநாள் அவர் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போயிருந்தார். திரும்பிவர நேரமாகும் என்று தெரிந்தது.

அந்த நேரத்தில், ஒரு இரும்புச் சட்டத்தின் உதவியுடன் அந்தப் பெட்டியின் பூட்டை உடைத்துத் திறந்து விட்டேன்.

உள்ளே,

ஜான் கந்த்தர் எழுதிய 'இன்ஸைட் ஆ·ப்ரிக்கா' புத்தகம், திருக்குறள், காண்டேகர், கம்பராமாயணம், மூன்று கதர்ச் சட்டைகள், ஒரு சேவிங்ஸெட், இரண்டு வேட்டி, மேல் துண்டு நாலு.

நான் இவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் காமராஜன் உள்ளே வந்து விட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

'என்ன... என்ன... என்ன... பாக்கறீங்க?' அவர் வருவதற்குள் என் துப்பறியும் வேலையை முடித்துவிடவேண்டும் என்ற முயற்சியில் தோற்றுப் போய், கைகால் வெலவெலத்து, அவர் முன்னால் அசடு வழிந்து எதையோ உளறிக் கொட்டினேன்.

ஒரு கணத்தில் எல்லாம் புரிந்து விட்டது அவருக்கு.

'அடடே! கேட்டா நானே பெட்டியைத் திறந்து காட்டியிருப்பேனே! நல்ல பெட்டியைப் பாழாக்கிட்டீங்களே!...' (அது ஒன்றும் அப்படி நல்ல பெட்டியில்லை. பழசுதான்!)

'இல்லை... பூட்டை சரிப்படுத்திடலாம் என்று நான் சொன்னதும், அவர் பூட்டையும் பெட்டியையும் அப்படி இப்படி அசைத்துப் பார்த்துவிட்டு 'ம்... சரியா வராது... கீழே தீனதாயள் இருப்பார். அவர் கிட்ட சொல்லி சரி செய்யச் சொல்லுங்க!' என்று கூறிவிட்டு, சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்.

பெருந்தலைவர் மரணச் செய்தி கிடைத்தவுடன் நான் ஒரு பூ மாலையுடன் திருமலைப்பிள்ளைத் தெருவுக்குப் பறந்தோடிப் போய், கண்ணீர் சிந்தியபடி அவருக்கு என் இறுதி அஞ்சலியைச் செலுத்திவிட்டுத் திரும்பினேன். செய்தி தீவிரமாகப் பரவாததால் கூட்டம் சேரவில்லை. போலிஸ் உயர் அதிகாரி நண்பர் பரமகுருவும், காமராஜரின் உதவியாளர் வைரவனும் மட்டுமே கண்கலங்கி நின்று கொண்டிருந்தார்கள்.

பின்னர் நண்பர் ராசாராம் அவர்கள் சொன்ன செய்தி காமராஜர் மீது எனக்கிருந்த மதிப்பை - அவரது எளியவாழ்கை மீது நான் கொண்டிருந்த வியப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது.

அதாவது, காமராஜன் இறந்த அன்று அவரது பீரோவைத் திறந்து பார்த்தார்களாம்! அதில் வெறும் அறுபத்தேழு ரூபாய் மட்டுமே இருந்ததாம்!

இப்போதெல்லாம் என்னைப் பொறுத்தவரை என் தேவைகளை மிகவும் எளிதாக்கிக் கொண்டிருக்கிறேன். பயணம் போகும் போது வேட்டி, சட்டை தவிர வேறு எந்த டாம்பீகமும் கிடையாது.

காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களைப் பார்த்து பார்த்து என்னையுமறியாமல் எனக்குள் வளர்ந்து விட்ட பழக்கம் அது.


சாவி



காமராஜர் பையில் சில்லறை - சாவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 12:24 am

அரியதொரு தலைவர் தான் அண்ணல் காமராஜர்..! பகிர்வுக்கு நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Nov 21, 2010 6:50 am

அவர் முதல்வராக இருந்தபோது கலவி, விவசாயம், தொழிற்சாலை இவற்றைத்தன் கண் எனக்கருதி முக்கண்ணனாகத் திகழ்ந்தார்.9ஆண்டுகாலம் பதவியில் சேவை செய்து, உண்மையில் சேவை மட்டுமே, 9 அணைகள் கட்டப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இரு மலைகளுக்கிடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்து வீணாகிக் கொண்டிருந்ததாம். ஒரு கிராமவாசி ஒரு தபால் அட்டையில் இது குறித்து முதல்வருக்கு கடிதம் போட்டாராம். ஒரு வாரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி வந்து அவரைக் கூப்பிட்டு
விசாரித்துவிட்டு ஆறே மாதத்தில் அங்கு தடுப்பணை கட்டப்பட்டதாம். பதவி மேல்துண்டுதான். கொள்கைதான் வேட்டி. பதவியை எப்போது வேண்டுமானாலும் துாக்கி எறிவேன் என்று அடிக்கடி சவால் விடும் தலைவர்களைப் பார்க்கிறோம். ஆனால் கட்சிக்காக தன் முதல்வர் பதவியை துறந்தவர்.
இந்த மழைக்காலத்தில் முறையாகப் பராமரிக்கப்படாமல் நீர் நிலைகளில் தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருப்பதை தினமலர் செய்தித்தாளில் பார்த்து கர்மவீரரைப்போன்ற முதல்வர் இல்லையே என்று ஏங்கத்தான் முடிகிறது.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 9:52 am

தலைவர் காமராஜர போல இன்னொருவர் பிறக்கவே முடியாது.சொத்துக்காக நாட்டை விற்கும் தலைவர் கூட்டம்
இவரது கால் துசுக்கு கூட வர மாட்டார்கள்




காமராஜர் பையில் சில்லறை - சாவி Uகாமராஜர் பையில் சில்லறை - சாவி Dகாமராஜர் பையில் சில்லறை - சாவி Aகாமராஜர் பையில் சில்லறை - சாவி Yகாமராஜர் பையில் சில்லறை - சாவி Aகாமராஜர் பையில் சில்லறை - சாவி Sகாமராஜர் பையில் சில்லறை - சாவி Uகாமராஜர் பையில் சில்லறை - சாவி Dகாமராஜர் பையில் சில்லறை - சாவி Hகாமராஜர் பையில் சில்லறை - சாவி A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 10:09 am

அதாவது, காமராஜன் இறந்த அன்று அவரது பீரோவைத் திறந்து பார்த்தார்களாம்! அதில் வெறும் அறுபத்தேழு ரூபாய் மட்டுமே இருந்ததாம்!

கர்மவீரர் காமராஜர் எங்கே...கருணாநிதி எங்கே... காமராஜர் பையில் சில்லறை - சாவி 740322

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக