புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
45 Posts - 56%
heezulia
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
24 Posts - 30%
mohamed nizamudeen
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
cordiac
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
172 Posts - 55%
heezulia
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Barushree
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_m10சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 2:29 am

First topic message reminder :

ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கறீர்களா! சிவராத்திரியன்று இரவில் கண்விழித்து ஒரு ஜாமத்துக்கு 16 தடவை வீதம் கீழ்க்கண்ட 11 பாடல்களையும் படியுங்கள். சிவராத்திரி கழிந்ததும், தினமும் காலையில் நீராடி, சனிப்பெயர்ச்சி காலம் நீங்கும் வரை நெய் விளக்கேற்றி ஒருமுறை படியுங்கள். சனியால் ஏற்படும் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும். திருநள்ளாறு நள்ளாற்றீஸ்வரர் குறித்து ஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள் இவை.


1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி
ஆகம் ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம் பெருமான் மேயது நள்ளாறே!


2. தோடுடைய காதுடையன் தோல் உடையன் தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.


3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி அணியிழை ஓர்
பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே!


4. புல்கவல்ல வார்சடை மேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி
பல்கவல்ல தொண்டர் தம் பொற்பாத நிழல் சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே!


5. ஏறுதாங்கி ஊர்திபேணி ஏர்கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறு தாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே!


6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தம் அடியார்கட்கெல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே!


7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி விண்கொள் முழுவதிர
அஞ்சிடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே!


8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண் நீறு ஆடுவது அன்றியும் போய்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர்பால் மதியும் சூடி
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே!


9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்ட உடனே ஒடுக்கி
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணம் ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே!


10. மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய் என்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே!


11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞான சம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே!



சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 8:09 pm

nandhtiha wrote:பெரு மதிப்புக்குரிய சிவா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருநள்ளாற்றுப் பதிகத்தின் பொருளை எனக்குத் தெரிந்த வரையில் பதிவிடுகிறேன். குற்றம் குறை கண்டவர்கள் தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


1. போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன்
கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

உலகத்து அடியார்க்கு ஞானம் வைராக்யம் என்ற இருவகை தத்துவங்களையும் அளிக்க வல்ல இரு நிறைவான ஆபரணங்களை அணிந்த நகில்களை உடைய உமையவளை இடப் பாகமாகக் கொண்டவனும் பசிய (குளுமையான) கண்களையும் வெண்மையான காளையை தன் ஊர்தியாகக் கொண்டவனும் நாகத்தை இடுப்பில் ஞாணாகக் கொண்டு நான் மறைகளை இடைத்துணியாகவும் கொண்ட நம் இறைவனாகிய சிவ பெருமான் எழுந்தருளி உள்ள இடம் திரு நள்ளாறு


2.தோடுடைய காதுடையன்
தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன்
பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ
டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தோடுடைய காதுடையன் அம்மை பாகத்தே உள்ள இடச் செவியில் தோடணிதன் காதினை உடையவன் என்றே பொருள் கொண்டனர். (நான் சிறிது மாறு படுகின்றேன். தோடுடைய செவியன் என்று ஆரம்பித்த முதற் பதிகம் சீகாழி தோணியப்பரைக் குறித்துத்தான், பசியால் அழுத சம்பந்தரின் குரல் கேட்டு இடப் பக்கம் அமர்ந்துள்ள இறைவியைப் பால் கொடுக்கும் படி இறைவன் பணிக்க அம்மையும் அவ்வாறே செய்தனள். நல்ல நூல்களைக் கேட்காத செவிகள் துளைக்கப் படாத செவிகளே என்பார் வள்ளுவதேவரும், அடியார்களின் குறைகளைக் கேளாத செவிகளும் தோட்கப் படாத செவிகளே ஆகும். ஆனால் தாயினும் சாலப் பரிந்து இன்னல் களையும் எம் பெருமான் செவிகள் துளைகள் உள்ளவை மட்டுமல்ல பொன்னால் அலங்கரிக்கப் பட்ட தோடுகளையும் உடையவன் என்றே நான் பொருள் கொள்கிறேன். சைவப் பெருந்தகைகள் சிறியவளாகிய அடியாள் எழுதும் இதில் பிழைக் காணுவாராயின் “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ” என்ற கம்பன் வாக்குப் படி மன்னித்தருள்க) புலி மற்றும் யானையின் தோலை ஆடையாக அணிந்தவனும், பெருமை பொருந்தியதும் அமரில் வெல்வதுமாகிய காளையை ஊர்தியாக உடையவனும் கீழ் மேலாக உள்ள உலகங்களோடு எழு பரவைகளாலும் சூழப் பட்டுள்ள இவ்வுலத்தை தனது ஆட்சியின் கொண்டு எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய எம்பெருமான் விரும்பி உறைவது நல்லோர் நாடும் திரு நள்ளாறே ஆம்.


528 ஆன்முறையா லாற்றவெண்ணீ
றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம்
பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ்
சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான்
மேயது நள்ளாறே.

நல் ஆவினத்திலிருந்து முறையாகச் செய்யப் பட்ட திரு நீற்றை மேனி முழுதும் அணிந்தவனும், மங்கல அணிகளை அணிந்துள்ள உமையம்மையை இடப்பாகத்தில் ஏற்றவனும், தன்னடியார்கள் வணங்கத் தக்க திருவடிகளை உடையவனும் , மான் மழு மூவிலைச் சூலம் முதலியவற்றைத் தம் திருக்கைகளில் ஏந்தியவனும், நான்கு வேதங்களுள் தலையாக எண்ணப் படும் யஜுர் வேதத்தின் நடு நாயகமாக உள்ள ஸ்ரீருத்ரத்தின் நடுப் பொருளாக உள்ள பஞ்சாட்சரப் பெருமானாகிய நஞ்சணி கண்டன் உறைவது திரு நள்ளாறே.

3. புல்கவல்ல வார்சடைமேற்
பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை
மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற்
பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான்
மேயது நள்ளாறே.

திரிபுரம் எரித்த விரி சடையின் மேல் கங்கைத் திருநதியையும் கொன்ற மாலையையும் வளர் பிறையையும் தாங்கி அடியவர் தொழத் தன் அடிநிழல் தரும் பெருமானாகிய ஆலவாய் அண்ணல் அமர்ந்திருப்பது திரு நள்ளாறே.


4 ஏறுதாங்கி யூர்திபேணி
யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர்
ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த
மார்பினில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான்
மேயது நள்ளாறே. 1.049.5

ஆனேற்றைக் கொடியாகவும் ஊர்தியாகவும் ஏற்று பொலிவுற்ற இளம் பிறை மற்றும் கங்கை யாற்றினையும், பைங்கண் அரவினையும் தாங்கி மணம் பொருந்திய திரு நீற்றுப் பூச்சால் விளங்கும் திரு மார்பில் முப்புரி நூல் துலங்கும் திருமேனியுடைய எம் இறைவனான சிவபெருமான் உறைவது திரு நள்ளாறே


5 திங்களுச்சி மேல்விளங்குந்
தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன்
என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந்
தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தேவர்களும் எம்பெருமானே என்று தம் தலையால் வணங்கும் பெருமை பொருந்தி மதிசூடிய எம் தேவா என்று அவன் திருவடியைத் தம் சென்னி தாழ்த்தி வனங்கும் அடியார்கள் போற்றும் ஏற்றம் கொண்ட எம்பிரான் தங்குமிடம் திரு நள்ளாறே




6 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி
விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோ ராடல்பாடல்
பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித்
திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

வெம்மை பொருந்திச் சுடர் விட்டெரியும் எரியினைக் கையிலேந்தி உம்பருலகும் அஞ்சிடத் தான் வேண்டிப் பெற்ற தமிழ்ப் பாடலுடன் (என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே –திருமந்திரம். தன்னையே தமிழாக்க வேண்டுமென்பதே இறைவனின் திருவுள்ளம். தான் உண்ட நஞ்சுக்கு தமிழே நன் மருந்து என்றறிக) ஆடல்வல்லான் என்ற தன் பெயருக்கேற்றபடி நடனம் ஆடியும் திங்களைச் சென்னியிலும் உண்ட ஆலத்தைத் தன் கண்டத்துள்ளும் நிறுத்திய நம் இறைவன் விரும்பி உறைவது திரு நள்ளாறே.

7 சிட்டமார்ந்த மும்மதிலுஞ்
சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ
றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர்
பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான்
மேயது நள்ளாறே.

மேருவை வில்லாக்கி மாதவனை அம்பாக்கி முப்புரத்தை எரித்து, திரு நீற்றினை விருப்போடு பூசி, தலைப் பட்டம் என்ற ஓர் அணியையும் சூடி அதன் மேல் பாலினை ஒத்த வெண்மதியினைச் சூடி திரு நடம் புரியும் பெருமான் உறைவது திரு நள்ளாறே.

8 உண்ணலாகா நஞ்சுகண்டத்
துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல்
ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென்
றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே.

எவராலும் அருந்த முடியாத அரு நஞ்சாம் ஆலத்தை உண்டு அதனைத் தம் கழுத்தளவில் நிறுத்தி அறம் பிழைத்தார் யாரும் அணுக ஒண்ணாத தலைமைப் பிரானும் தீச் சுடரைப் போன்ற அழகிய திருவுருவம் கொண்டவனும் திருமாலும் பிரம்மனும் நினைக்கவும் அரிதாகி வருத்தமுறச் செய்தவனும் ஆன நம் சிவ பெருமான் மேவி அமர்ந்த இடம் திரு நள்ளாறே.

9 மாசுமெய்யர் மண்டைத் தேரர்
குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி
யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி
மும்மதிளும் முடனே
நாசஞ்செய்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

அழுக்கடைந்த மேனியும் மண்டை ஓட்டை உண்கலமாகக் கொண்டு திரிந்து அறநெறி விலகிச் செல்பவர்களும் பேச்சினில் மட்டும் இனிமை கொண்டவருமாகிய சாருவாகர்களின் பேச்சை மெய்யென்று எண்ணி நெறி வழுவாதீர் என்று ரீங்காரத்தால் எச்சரிக்கும் வண்டுகள் விரும்பிப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி முச்சோவினை ஒரு சேர அழித்து அமரர்களைப் புரந்தருளிய எம் பெருமான் சிவநாதன் அவாவுற்று அமர்ந்த இடம் திரு நள்ளாறே.


10 தண்புனலும் வெண்பிறையுந்
தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி
ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல்
பத்தும் இவைவல்லார்
உண்புநரங்கி வானவரோ
டுலகில் உறைவாரே.

எல்லோரும் போற்ற எழில் மதியையும் கங்கையையும் தன் திரு முடியில் சூடி திரு நள்ளாற்றில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானை நல்லதோர் நட்பும் பல்லோர் ஏத்தும் பண்பும் நிறைந்த அடியார்கள் வாழும் சீகாழித் திருப்பதியில் அம்மையின் பாலருந்தி அருந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இந்தப் பதிகத்தை அன்புடன் உள்ளமுருக இசைக்க வல்லவர் ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என்ற மூவகைத் துன்பத்தினின்றும் விடுபட்டு அமரருலகில் நிலையான வாழ்வு பெறுவர்,

திருச் சிற்றம்பலம்


மிகவும் அற்புதம் அக்கா!

எளிதில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் பொருளுரை எழுதியதற்கு மிக்க நன்றி! என்றும் உங்களுக்கு எம்பெருமான் சிவபெருமானின் அருள் கிட்ட வேண்டுகிறேன் அக்கா!

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 678642 சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 678642 சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 678642 சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 678642



சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக