புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
7 Posts - 4%
prajai
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
7 Posts - 4%
Jenila
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
jairam
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
kargan86
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
11 Posts - 4%
prajai
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
9 Posts - 4%
Jenila
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_m10சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 9:22 pm

First topic message reminder :

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!



சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2021 10:26 pm

நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க, நம்ம வீட் டுக்குப் புதுசு, வெளி ஆளுங்கதான். அவங்களுக்கு நம்ம வீட்டோட அமைப்பு தெரியாது. சாப்பிட்ட எலையைக் கையில தூக்கிட்டு அத எங்க போடறதுன்னு தெரியாம முழிப்பார். அந்த எலையில இருந்து ஏதாவது ஒழுகித் தரையில கோலம் போடும். அவருக்குத் திண்டாட்டமா போயிடும். ‘சைய்! சாப்பாடு ஏற்பாடு பண்ணினவன், இந்த எலைய எடுக்க ஒரு ஆளை ஏற்பாடு பண்ணித் தொலைச்சுருக்கக் கூடாதா?’னு நெனைப்பார். இது கூடாதுனுதான், விருந்தாளிங்க சாப்பிட்ட எலையை, அவங்க எடுக்கக் கூடாது. நாம அன்ன தானம் செஞ்ச புண்ணியம் அவங்களுக்குப் போயி டும்னு பெரியவங்க அழகா சொல்லி வெச்சாங்க.

இதே மாதிரி விருந்துனு சொல்லி பல பேரு கூடி ஒண்ணா சாப்பிடும்போது, ஒரு ஆளு பளிச்சுனு சாப்டுட்டு அவசர அவசரமா எழுந்து கை கழுவ ஓடக் கூடாது. அது பந்தியில இருக்கற மத்தவங்கள அவமானப்படுத்தற மாதிரி ஆயிடும்!

சாப்பாட்டுப் பந்தியில பலர் சாப்பிடறோம். நம்ம பக்கத்துல உக்காந்து சாப்பிடறது யாருன்னு நமக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது, நான் அவன அவமானப்படுத்துறதுலியோ அல்லது அவன் என்னை அவமானப் படுத்துறதுலியோ என்ன அர்த்தம்? அதுவுமில்லாம அவனும் நானும் சொந்தமா பந்தமா? எதிர் காலத்துல ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கூடிக் குலாவிக்கப் போறோமா என்ன? இப்பிடியெல்லாம் நெனச்சு, தேவையில்லாம வாதம் பண்ணக் கூடாது. சாப்பாட்டுப் பந்தியில ஒரு ஆள் மட்டும் சட்டு புட்டுனு சாப்பிட்டு எழுந்தான்னா, மொதல்ல அவனுக்குக் கை கழுவுற எடம் தெரியாது.

அடுத்தது, அவன் கையில இருந்து, எச்சில் சோத்துப் பருக்கையோ, சாப்பாட்டுத் துணுக்கோ அடுத்தவன் எலையில விழுந்தா பிரச்னைதான்.

இந்த மாதிரி காரணங்களுக்காகத்தான், பெரியவங்க அப்பிடிச் சொல்லி வெச்சாங்க. இதை புரிஞ்சுக்காம நம்ம இஷ்டத்துக்குக் கன்னாபின்னானு நடந்துக்கிறது அபத்தம். ஒரு விஷயத்தை எதுக்காகச் சொல்லி வெச்சிருக்காங்க, ஏன் பண்னி வெச்சிருக்காங்கன்னு புரிஞ்சுக்காம இருக்கிறது தப்பு. அதைத் தப்பா புரிஞ்சுட்டு நம்ம இஷ்டத்துக்குக் கன்னாபின்னான்னு செய்றதும் அபத்தம்!’’ என்ற தாத்தா அதற்கான உதாரணத்தையும் சொன்னார்:

‘‘சில ஊர் கோயில் கோபுரங்கள்லியும் தேரிலயும் கன்னாபின்னான்னு பொம்மைங்க வெச்சுருக்கிறதைப் பார்த்திருக்கலாம். இத தப்புன்னு நாப்பது நாப்பத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னால தெளிவா தீர்மானமே போட்டுருக்காங்க. அப்ப ‘ஆகம சில்ப மகாநாடு’ நடந்துச்சு. கோயில் கோபுரம் விமானம் தேர்கள்ல செஞ்சு வெச்சுருக்கற ஆபாச உருவங்களப் பத்தின விஷயத்தையும் பேசினாங்க. இந்த மாதிரி உருவங்கள் இருக்கணுங்கறதுக்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. இது தோஷம். கோயில் விமானங்கள்ல சாமி வடிவங்களும், கோபுரங்கள்ல புராணக் காட்சிகளும் இருக்கணும். திருப்பணி செய்யும்போது, இதை மனசுல வெச்சுக்கிட்டு, ஆபாச வடிவங்கள நீக்கிடணும்னு முடிவு பண்ணினாங்க.

‘அப்ப, தேருகள்ல இப்பிடி இருக்குதே!’னு கேள்வி வரலாம். அற்புதமான தத்துவத்த சொல்ல வந்தது, தேரும் அதோட அமைப்பும். நாம போய் அதுல கன்னா பின்னானு செஞ்சு வெச்சா, முன்னோர்களா பொறுப்பு? இனி, தேரு அமைப்பப் பத்தியும், அதுல ஏன் இப்பிடி வந்துச்சுனும் பாக்கலாம்’’ என்ற தாத்தா அதைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.




சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 27, 2021 2:03 pm

காத்திருக்கிறோம்.
அணுஅணுவாக படிப்போம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக