புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
சிவா
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
1 Post - 8%
Rutu
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:02 pm

First topic message reminder :


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!


.....................................................................


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"


"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"




இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்



"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"



என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.



மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.



எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தீர்ப்பு வழங்கினார். "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" அறுதியிட்டுக் கூறினார்.



உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் "தேவபாஷை" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் "தந்தை மொழி" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.



பாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது.



"...............................................பெண்ணரசின்

மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"




வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே!



"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போல -நிலாவொளி

முன்பு வரவேணும் - அங்கு

............................................................

பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண் வேணும் -

எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும் ........"




தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது? தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்? அதனை நம்ப முடிகிறதா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:50 pm

அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழைத் தமிழ்மறை என்கிறார் திருமுருக கிருபானந்தவாரியார். திருப்புகழ் மிக மின இனிமையானது. சர்க்கரை, பாகு செய்து தானே உதிர்ந்த மாம்பழம், மாதுளம் பழம், திராட்சைப்பழம், பாலப்பழம், தோடம்பழம், மாதுளம்பழம், திராட்சைப் பழம், பலாப்பழம் முதலிய பழங்களைப் பிழிந்து அதில் நெய்யும் பாலும் விட்டுக் காய்ச்சி இறக்கிவைத்த இளஞ் சூட்டில் கொல்லிமலைத் தேனையும் விட்டுக் கிண்டி வைத்தால் அது எப்படியிருக்குமோ அதைவிடத் திருப்புகழ்; மதுரமானது.

"எதிரும் புலவன் வில்லிதொழ
எந்தை உனக்கந் தாதிசொல்லி
ஏழைப்புலவர் செவிக்குருத்தோ
டெறியுங் கருவி பறித்தெரிந்த
அதிருங் கடல்சூழ் பெரும்புவியில்
அறிந்தார் அறியார் இரண்டுமில்லார்
ஆரும் எனைப்போல் உனைத்துதிக்க
அளித்த அருண கிரிநாதன்
உதிருங் கனிகை நறும்பாகில்
உடைத்துக் கலந்து தேனைவடித்
தூற்றி யமுதி னுடன்கூட்டி
ஒக்கக் குழைத்த ருசிபிறந்து
மதுரங் கனிந்த திருபுகழ்ப்;பா
மாலை புனைந்தான் வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே!"
(திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்)


திருமுருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கும் மதாணி (ஆபரணம்) ஆகும். அவருடைய திருமார்பில் விளங்கும் கடம்ப மலர் மாலை மணக்குமாறு தெளிக்கின்ற தமிழ்ப் பன்னீரும் ஆகும்.

"உரைபெற வகுத்தருணை நகரிலொரு பக்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ் மாணிக்ரு பாகரனும்"


"பலபல பைம்கொன் பதக்கமாரமும்
அடிமை சொலுஞ்சொல் தமிழ்ப்ப னீரொடு
பரிமளமிஞ்சக் கடம்ப மாலையு மணிவோனே."


வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், உபநிடதம், மருத்துவம், யோகம், இசை, முதலியன எதுவும் வேண்டாம் அவை யாவும் திருப்புகழில் நிறைந்துள்ளது. அதனால் ஓசை நயங்களும் தாளகதிளும் குவிந்திருக்கும் திருப்புகழைக் கற்பார்க்கு வேதம் முதலிய எல்லா வித்தைகளையும் கற்ற பயன் உண்டாகும் என ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.

"வேதம்வேண் டாம்சகல வித்தைவேண் டாங்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம் - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் றுள்போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்"


அருணகிரிநாதரைப் போலவே திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் தமிழ் தெய்வமொழி என்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:51 pm

"தொண்டர் நாதனைத்தூதிடை விடுத்தது முதலை
உண்டபாலனை அழைத்தது எலும்பு பெண் ணுருவாக்
கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்"


எலும்பு பெண்ணுருக் கொண்டதும், மறைக் கதவு திறந்ததும் கன்னித் தண்டமிழ்ச் சொல்லோ அல்லது வேற்று மொழிச் சொல்லோ கூறுங்கள் என்று கடாவுகிறார் பரஞ்சோதி முனிவர் .

திருச்செந்தூரில் பழைமையான செந்தமிழால் ஆகிய கவிமாலைகளை தரித்துக் கொண்டிருக்கும் செந்தில் குமரன் சந்தத்தோடு நீளமாகக் கோடி கோடியாக எந்நேரமும் பாடிப் பாடி அழிந்து போகின்ற மனிதர்களின் வீட்டு வாசல் தோறும் அவர்களைத் தேடிக்கொண்டு உழன்று அவமே அலையா வண்ணம் திருவருள் புரிய வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழின் சந்தத் தமிழைச் சுவைக்குமாறு அந்தப் பாடலை முழுமையாகவே தருகிறேன்.

"முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடியுழலாதே

முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதிலேயெப் போது வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார முடிமேலே

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரணசூர சூறைக் கார
செந்தில்நகர் வாழு வாண்மைக்கார பெருமாளே


(திருப்புகழ் - திருச்செந்தூர்)


முந்து தமிழ் என்பது வடமொழிக்கும் தென்மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானேயாவர், வடமொழியைப் பாணினிக்கும், தென்மொழியை அகத்தியர்க்கும் சிவபெருமான் அருளிச் செய்தார் என்பது ஐதீகம். சிவபெருமான் இந்த இரு மொழிகளிக் வடிவாக விளங்குகின்றார். சிவபெருமான் ஆசிரியராதலால் தமிழ் தொன்மையுடையது எல்லா மொழிக்கும் முதன்மையுடையது எனினும் அமையும்.

"ஆரியமுஞ் செந்தமிழும் ஆனான் கண்டாய்" என அப்பர் பாடுவது ஈண்டு கவனிக்கத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:55 pm

"சோகாந்தகாரம் கெடத் தமிழாய்வந்து துலங்கிற்றே"

அருணகிரிநாதர் வரலாறு பலருக்குத் தெரிந்ததே. அவரது அருமை பெருமைகளையும் அவர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களையும் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. இருந்தும் அவரது வரலாறுபற்றிய குறிப்புகள் எதுவும் போதியளவு கிடைக்கவில்லை.

"அதலசேடனாராட" எனத் தொடங்கும்திருப்புகழில் "பிரபுட தேவமாராயன்" எனவரும் குறிப்பினால் இவர் விஜயநகர அரசர்களுள் ஒருவனாக விளங்கியிருந்த பிரபுடதேவராசன் என்னும் மன்னனின் காலத்தில் இருந்தவர் என்பது புலப்படுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள் இம் மன்னன் கி.பி.1450-ல் அரசோச்சியதாகக் கல்வெட்டுக்களைக் கொண்டு ஆராய்ந்து கூறுகின்றனர்.

அருணகிரிநாதர் தனது இளமைக் காலம்பற்றி அவரே ஒளிவுமறைவின்றிப் பாடியிருக்கிறார். ஒன்றல்ல பல திருப்புகழ்;ப் பாடல்களில்.

"விடமடைசு வேலை யமரர்படை சூலம்
விசயன் விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேது மறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீன னிவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே"

பதவுரை

விடம் அடைசு வேலை - நஞ்சு பொருந்திய கடலும்
அமரர்படை - தேவர்படையும்
சூலம் - சூலமும்
விசயன் விடுபாணம் - அருச்சுனன் விடுகின்ற அம்பும்
எனவேதான் விழியும் - சமானம் என்று சொல்லக்கூடிய கண்களும்
அதிபாராவிதமும் உடைமாதர் - கனத்த கொங்கைகளையுடைய பெண்களின்
வினையின் விளைவு ஏதும் அறியாதே - சாகசத் தொழிலால் விளையும்
துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது
கடி உலவு பாயல் - வாசனை மிக்க படுக்கையில்
பகல் இரவு எனாது - பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்
கலவிதனில் மூழ்கி வறிதாய - மோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த
கயவன் - கீழ்மகனும்
அறிவு ஈனன் இவனும் - அறிவில் குறைந்தவனும் ஆகிய அடியேனும்
உயிர் நீடு - உயர்வு நீண்ட
கழல் இணைகள் சேர - இரண்டு திருவடிகளையும் சேர்ந்து இன்புற
அருள்வாயே - திருவருள் நல்கீர்


நோயினால் வாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள விரும்பியபோது அவரை செந்தமிழ்த் தெய்வமாகிய முருகன் தடுத்தாட்கொண்டார் என்று அவரே சொல்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:57 pm

டுத்தாட்கொண்ட முருகன் "நம் புகழைப் பாடுதி" என்று கேட்க "பெருமானே! மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை "ஏடெழுதா முழு ஏழை யாகிய அடியேன்" எங்ஙனம் பாடுவேன்" என்னலும் "முத்தைத் தருபக்தித் திருநகை" எனத் தொடங்கும் திருப்புகழ் வரியை எடுத்துக் கொடுத்து "பாடுக" என்று அருளினார். இதனை அருணகிரிநாதரே சொல்லியிருப்பதில் இருந்து அவ்வுண்மை தெளிவாகின்றது.

"எழுமையும் எனைத்தனது
கழல்பரவு பக்தன்என
இனிது கவி பாடிடப்
பிரசாதித்த காவலன்"


அருணகிரிநாதரின் திருப்புகழ் எதுகை மோனை நிரம்பி வழியும் சித்திர கவித்துவம். வகை வகையான சந்த பேதங்கள் அமைந்து படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையான ஓசை நலம் மிகுதியாக உடையது. தமிழ் உண்மையிலேயே ஒரு இனிமையான மொழி என்பதற்கு அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் அருமையான எடுத்துக்காட்டு.

காலத்தின் கோலத்தால் பிறமொழிக் கலப்பு திருப்புகழில் கூடுதலாகக் காணப்பட்டாலும்தமிழின் சுவை குறையாதவாறு திகட்டுகிறது. திருப்புகழ் அருணகிரிநாதரின் காலத்திலேயே நான்கு திசைகளில் உள்ளவரும் கேட்டும் பாடியும் போற்றியும் மகிழ்ந்தனர் என அவரே பாடியிருக்கிறார்.

இத்தகைய புகழ்வாய்ந்த திருப்புகழைப் பாடும்படி தமக்கு அருள்செய்த திருமுருகனை யான் எப்பொழுதும் மறக்க மாட்டேன் என அருணகிரிநாதரே நவில்கிறார்.

"பச்சிம தட்சிண உத்தர திக்குள
பக்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்திர கவித்துவ சந்தம் மிகுந்த
திருப்புகழைச் சிறிது அடியேனும்
செப்பன வைத்து உலகிற் பாலத்
தெரிசித்த அனுக்கிரகம் மறவேனே"


"பக்கரை விசித்ரமணிபொற்கலணை யிட்டநடை
பட்சியெனும் உக்ரதுர கழுநீபக்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பாட்டொழிய
பட்டுருவ விட்ருள்கை வடிலேலும்
திக்கது மதிக்க வரு குக்குடமும் ........................
....................................................................................
வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பன எனக்கருள்கை மறவேனே"


எனவும்

"எட்டிரண்டும் அறியாத என் செவியில்
எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென
எட்டிரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே"


தாளநுட்பங்களும், அழகிய பற்பல சொற்றொடர் அடுக்குகளும் கொண்ட திருப்புகழைப் பாடி முருகனை வழிபடுதல் சிறந்த உபாசனை எனக் கருதப்படுகிறது.

"வாக்கிற்கு அருணகிரி வாதவூரர் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நற்கீரர் தேவர், நயத்திற்குச் சுந்தரனார்
சொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல்"


என்பதால் வாக்கு வல்லமையில் அருணகிரிநாதர் மிகவும் சிறப்பு வாய்ந்த அவருக்கு வேறு யாரும் இணையில்லை என்பது தெளிவாகிறது. வாக்கிற்கு அருணகிரி மட்டுமல்ல கருணைக்கும் அருணகிரி என இன்னொரு பழம்பாடல் அவரைப் போற்றிப் பாராட்டுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:58 pm

"காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி
ஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி
கூழுக்குஇங்கு அவ்வைஎனக் கூறு"


அருணகரிநாதர் திருப்புகழ் மட்டுமல்ல, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். வேதாந்த சித்தாந்த சமரச ஞானியாகிய தாயுமான சுவாமிகள்-

"ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்?"


என்று அருணகிரிநாதரை வியந்து புகழ்ந்து போற்றுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மேலும்-

"கந்தர் அனுபூதி பெற்றுக்
கந்தர் அனபூதி சொன்ன
எந்தை அருள் நாடி
இருக்கும் நாள் எந்நாளோ?"


தமிழ்க் காதல் என்று வரும்போது நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தர் வாயெல்லாம் தமிழ் மணக்கத் திருப்புகழ்பாடிய அருணகிரிநாதர்" இந்த இருவரில் யார் காதல் பெரிது என்ற மலைப்புத் தோன்றுகிறது.

தமிழ்ஞான சம்பந்தரது தமிழ்க் காதல்பற்றி முன்னரே எழுதியுள்ளேன். சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களின் தொகை 4,196 ஆகும். இதில் 147 இடங்களில் "தமிழ் ஞானசம்பந்தன்" "முத்தமிழ் விரதன்" என்று தன்னைத் தமிழோடு சேர்த்துச் சொல்லி தமிழ்மொழிக்கு ஏற்றம் கொடுத்திருக்கிறார்.

ஞானசம்பந்தருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரும் இறையருள் கைவரப் பெற்றதாலேயே தமிழ்ப் பாடல் பாடியவர்கள்.

ஞானசம்பந்தர் தனது தந்தையைக் காணாது அழுதபோது உமை சிவஞானமாகிய பாலை உவந்தளித்து ஊட்ட, ஆளுடைய பிள்ளையார் ஞான நாட்டம் கைவரப் பெற்றார் என்பர். சிவஞானம் மட்டுமல்ல அவருக்கு செந்தமிழ் ஞானமும் ஊட்டப்பட்டது என தண்டபாணி சுவாமிகள் நயம்பட அந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறார்.

"சீகாழி ஊர்த்தடம் பொய்கைக் கரையில்
சிறிது அழுத வாகாரும் சேய்க்கு உமை நல்கிய பாலின்
மதுரம் - அன்பர்"


அன்று சீர்காழி திருக்குளக்கரையில் உமை நல்கிய சிவஞான அமுதத்தையுண்ட சம்பந்தரினி வாய்மலரில் பிறந்தவை செய்வத் தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்கள். எனவேதான் "அப்பாலின் மதுரம் தமிழாய் வந்து துலங்கிற்று" என தண்டபாணி சுவாமிகள் வியந்துரைக்கிறார்.

உமை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அதே காட்சியை சேக்கிளாரும் தனது மனக்கண்ணால் கண்டு உளமுருகிப் பாடுகிறார்.

"கண்மலர்கள் நீர்ததும்பக் கைமலர்களால் பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய் மணிஅதரம் புடைதுடிப்ப
எண்ணிமறை ஒலிபெருக எவ்வுயிருங் குதூகலிப்பப்
புண்ணியங்கள் றனையவர்தாம் பொருமி அழுதருளினார்"
(பெரியபுராணம்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:02 am

அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா!

திருப்புகழ் தமிழ்மறை என திருமுருக கிருபானந்தவாரியார் திருப்புகழுக்கு எழுதிய விரிவுரையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார். தெய்வ மணமும் செந்தமிழ் மணமும் ஒருசேர மணக்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ் திருமுறையில் சேர்க்கப்பட வேண்டும்.

பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. அருணகிரிநாதர் காலத்தால் அவருக்குப் பிந்தியவர். ஆன காரணத்தினால்தான் திருப்புகழ் சேர்க்கப்படவில்லை. திருப்புகழை பன்னிரு திருமுறையோடு சேர்த்து பதின்மூன்று திருமுறையாக ஆக்க வேண்டும். திருப்புகழ் திருக்கோவில்களில் இப்போது படிக்கப்படுகிறது. எனவே அதனைத் திருமுறையில் சேர்ப்பதற்கு தடையேதும் எழ வழியில்லை.

திருப்புகழில் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பாடல்களின் தொகை 1,307 ஆகும். இந்த 1,307 பாடல்களில் 1008 வெவ்வேறு சந்தங்களை சித்திரத்தமிழில் அற்புதமாக அமைத்துப் பாடி இசைத் தமிழ் வளர்ச்சிக்கு அருணகிரிநாதர் பேருதவி செய்திருக்கிறார்.

"கும்பகோணப் பெருமானே! செஞ்சொல் சேர் சித்திரத்தமிழால் உன் செம்பொனார்வத்தை பெறுவேனோ?" என்று தான் சித்திரத்தமிழில் பாடும் விருப்பத்தை அருணாகிரிநாதரே தெரிவித்திருக்கிறார்.

திருப்புகழ் பாடல்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகள் (திருப்பரங்குன்றம், திருச்சீர் ஆலைவாய் (திருச்செந்தூர்), திருஆவின்குடி, திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர்சோலை) எனச் சிறப்புப்பெற்ற திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் முருகன் மீது பாடப்பெற்றவை ஆகும்.

அருணகிரிநாதரின் திருப்பாதங்கள் படாத முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இல்லையென்றே கூறலாம். இமயம் முதல் குமரிவரை அவரது பாதங்கள் முருகனைத் தேடி ஓடிஆடி அலைந்தன. அவரது திருவாய் பாடி மகிழ்ந்தது. அதற்கு அப்பாலும் ஈழநாட்டின் திருத்தலங்களான திருக்கோணேசுவரம், திருக்கேதீச்சுவரம், கதிர்காமம் சென்று தேன் தமிழில் திருப்புகழ் பாடி மகிழ்ந்தார். கதிர்காமக் கந்தனை "கதிர்காம வெற்பில் உறைவோனே"

"வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உடையோனே"என விழித்துப் பாடுகிறார். .

"அகரமும் ஆகி அதிபனும் ஆகி
அதிபனும் ஆகி அகமாகி
அயன் என வாகி அரி என வாகி
அரன் என வாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி
இனிமையும் ஆகி வருவோனே!
இரு நிலம் ஈதில் எளியனும் வாழ
எனது முன்; ஓடி வர வேணும்!
மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ் களி கூறும் வடிவோனே!
வனமுறை வேடன் அருளிய பூசை
மகிழ் கதிர் காமம் உடையோனே!
செக் கண சேகு தகு திமி தோதி
திமி என ஆடும் மயிலோனே!
திரு மலி வான பழ முதிர் சோலை
மலை மிசை மேவும் பெருமாளே!


அருணகிரிநாதரது தமிழ்ச் சொல்லாட்சியின் அழகையும், இனிமையையும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலிலும் கண்டு மகிழலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:03 am

"தஞ்சந் தஞ்சஞ் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சந் துரையே
அருள் தந்தென் இன்பந்தரு வீடது தருவாயே!"


அனுமனை அவர் வர்ணிக்கும் அழகும் அருமையும் அபாரம்.

"இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள் இலெங்கணும்
இலங்கென - முறையோதி- இடுங்கனல் குரங்கு"


எப்படி "இலங்கு" என்ற சொல்லை வைத்து அருணகிரிநாதர் சிலம்பம் ஆடியிருக்கிறாரோ அதேபோல் திருமந்திரத்திலும் திருமூலர் "விளக்கு" என்ற சொல்லை வைத்து சிலம்பம் ஆடி தமிழ் விருந்து படைத்திருக்கிறார். அந்தத் திருமந்திரம் இது.

"விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே!"


அருணகிரிநாதரது சந்தநடைக்கு திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நல்ல சான்று.


"குயில்மொழிக் கயல்விழித் துகிர் இதழ்ச் சிலைநுதல்
சரிமுகத்து இளநகைக் கனகுழல் தனதிரிக்
கொடி இடைப் பிடிநடைக் குறமகள் திருவினைப் -புணர்வோனே"


திருமுருகன் தெய்வீக திருநடனம் செய்யும் திருவுருவக் காட்சியினை அருணகிரிநாதர் காண விரும்பிச் சந்தத் தமிழில் பாடுகிறார்.

"தண்டைஅணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைத்து நின்று அன்பு போலக்
கண்டு உள கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும் சிந்துவேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்டபகிர் அண்டமும்
பொங்கியெழ வெங்களம் கொண்டபோது
பொன்கிரி யெனச்சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூரக்
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்
கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே
கொங்கை குறமங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!"


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:04 am

தண் - குளிர்ந்த, கழல்-திருவடி, பரிந்து - அன்புடன், இன்பம்- மகிழ்ச்சி, சந்தொடம் - மகிழ்ச்சி, கடம்பு - ஒருவகை மரம், சந்தம்-அழகு, மகிடம்- கிரீடம், கஞ்சமலர்- தாமரைமலர், சந்திர நிறம் - அழகிய நிறம், சந்தியாவோ- முன்னே வரமாட்டாவோ? புண்டரிகர் -பிரமன், அண்டம் - உலகம், பகிரண்டம்- வெளி அண்டம், வெங்களம் -போர்க்களம், புண்டரிகர் தந்தை- பிரமனின் தந்தை திருமால், உண்டிடும் -நுகரும், கும்;பமுனி -குடத்தில் பிறந்த முனிவர் (அகத்தியர்), தம்பிரான் - கடவுள்.

திருப்புகழில் தான் இளமையில் பரத்தையர் மஞ்சமே தஞ்சமெனக் கிடந்து உழன்ற தன்னை ஆட்கொண்ட முருகனை வாழ்த்தியும், முருகன் புகழ்பாட தனக்கு தெய்வீக ஆற்றல் படைத்த அரிய தமிழை அளித்ததற்கு நன்றி நவின்றும், பெருவாழ்வு வாழ அருள் செய்க! சிவஞானத்தை அருள் புரிக! சகல செல்வங்களையும் தருக! என அருணகிரிநாதர் இறைஞ்சுகிறார்.

சரண கமலாயத்தை அரை நிமிட நேர(ம்) மட்டில்
தவ முறை தியானம் வைக்க அறியாத
சட(ன்) கசட(ன்) மூட(ன்) மட்டிபவ வினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ? இவ்வேளை செப்பு!
கயிலைமலை நாதர் பெற்ற குமரேசனே!
கடக புயல்மீது ரத்னமணி அணி பொன்மாலை செச்சை
கமழும் மணமார் கடப்பம் அணிவோனே!
தருணம் இது ஐயா! மிகுந்த கமைதுறு நீள் சவுக்கிய
சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு
தகமை சிவஞானம் முத்தி பரகதியும் நீ கொடுத்து
உதவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா!
அருணதள பாத பத்மம் அது நிதமே துதிக்க
அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா!
அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மீது உதித்த
அழக! திருவோகத்தின் முருகோனே!


நெய் பூசிய வடித்த வேலை உடையவனே!
ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன்
திருவடிகளை நாள்தோறும் துதிக்க
அருமையான தமிழை நீ எனக்க அளித்தாய்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:06 am

"என்நெஞ்சத்து உள் இருந்து, இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து"

மலரும் மணமும் போல், நீலவானும் நிலவும் போல் சைவமும் தமிழும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதன, சைவத்தால் தமிழ் என்றும், தமிழால் சைவம் என்றும் சைவம் இன்றேல் தமிழில்லை, என்ற ஒரு கருத்து பலரிடையே நிலவுகிறது. இப்படிச் சொல்பவர்கள் அல்லது நினைப்பவர்கள் தமிழுக்கு வைணவம் தந்த வளத்தையும், வனப்பையும், சிறப்பையும் அறிந்திலர் போல் தெரிகிறது.

சைவமும் தமிழும் ஒன்றென்று சைவர்கள் முழங்கினாலும் தமிழன்னை திருக்கோயில்களின் கருவறைக்கு வெளியே உள் வீதியில்தான் நிறுத்தப்பட்டுள்ளாள். கருவறைக்குள் தமிழ் அன்னை புகுந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று பெரும்பாலான சைவர்கள் நினைக்கிறார்கள்.

வேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானாலேயே அருளப்பெற்றவை என்பது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். தேவார ஆசிரியர் மூவரும் "அரன் ஆகமம்" "அண்டர்தமக்காக ஆகம நூல் மொழியும் ஆதியை" "ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெருமானே" எனக் குறிப்பிடுகிறார்கள்.

இருந்தும் வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது என்பது சைவ சித்தாந்திகளின் நிலைப்பாடு. ஆகமம்பற்றி முதலில் கூறும் தமிழ் நூல் திருமூலரின் திருமந்திரம் ஆகும். திருமந்திரத்தை ஆகமம் என்றே திருமூலர் குறிக்கிறார். இதனை "சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே" என்று அவர் குறிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

திருமூலர் வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை திருமந்திரத்தில் (2329-2331) விளக்கியுள்ளார். 'சைவ' என்னும் அடைமொழியைச் சேர்க்காமல் ஆகம முறையையே 'சித்தாந்தம்" என திருமந்திரம் (2344) விளக்குகிறது. "சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்" என்கிறார் அருணந்தி. "இறைவனே ஆகமம்" என்கிறார் மணிக்கவாசகர். "வேதாந்தத்தின் தெளிவாம் சைவசித்தாந்தம்" என்று உமாபதிசிவம் கூறுகிறார்.

பூசையை அடிப்படையாகக் கொண்ட வேதம் சாராத தமிழரின் இறைவழிபாட்டு முறைகளே ஆகமம் ஆகும். ஆரியரின் வேதம் சார்ந்த வேள்விச் சடங்குகளை நிகமம் எனக் குறிப்பிடுவர்.

இன்று ஆகமத்துடன் நிகமத்தையும் கலந்து திருக்கோயில்களில் பூசையையும் வேள்விச் சடங்குகளையும் செய்கின்றனர்.

குன்றக்குடி அடிகளார் போன்றோர் வேதத்தை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு பன்னிருதிருமுறையையே வேதமாகக் கொள்கிறார்கள். ஆகமத்தில் பன்னிரு திருமுறைக்கு ஏற்புடையவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை தள்ளிவிட வேண்டும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.

ஆனால் வைணவம் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை தமிழ்மறையாகவே போற்றிக் கொண்டாடுகிறது. ஆரிய வேதத்தை வியாசர் போன்ற முனிவர்களுக்கு இறைவன் அருளியதுபோல, வேதங்களை ஆழ்வார்கள் மூலம் தமிழில் அருளினார் என்ற கோட்பாடு வைணவத்தில் நிலவுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:08 am


"ஆரண நான்கின் பொருளை, ஆழ்வார்கள் ஆய்ந்து அடைவே
அன்புடனே அம்புவியோர் அனைவரும் ஈடுஏற என்று
நாரணனார் தாள்களிலே நாலாயிரம் தமிழால்
எண்ணி உரை செய்தவற்றை"
(தேசியப் பிரபந்தம்)


என்றும்

"அந்தமிழால், நற்கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள்
இந்த உலகில், இருள்நீங்க - வந்துதித்த
மாதங்கள், நாங்கள்"


(உபதேச ரத்னமாலை)
என்றும்

"சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன், எழில் குருகை நாதன்" (உபதேச ரத்தினமாலை)


என்றும் மணவாள மாமுனிகள் அருளிய கூற்றுக்களாலும் வேதத்தின் உட்கருத்தை ஆராய்ந்து ஆழ்வார்கள் அதனைச் செந்தமிழால் அருள் செய்தார்கள் என்பதை வேதாந்த தேசிகர் அருளிய கூற்றுக்களாலும் அறியலாம்.


ஆழ்வார்கள் நாவிலிருந்து பாசுரங்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றையும்


"மறப்பிலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை
உறுப்பல இன்கவி சொன்ன உதவிக்கே"
(திருவாய்மொழி 7-9-9)


"என்நெஞ்சத்து உள் இருந்து, இங்கு இருந்தமிழ் நூல்
இவை மொழிந்து"
(திருவாய்மொழி (10-6-4)

என்றும்

"பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்"
(பெரிய திருமொழி 2-8-2)

என்றும் கூறி அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் நாலாயிரமும் நற்றமிழால் இறைவனே தம்மைக் கருவியாகக் கொண்டு பாடுவித்தான் என்று ஆழ்வார்கள் கூறியிருக்கிறார்கள்.

@நக்கீரன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக