புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
3 Posts - 2%
jairam
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
1 Post - 1%
சிவா
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
16 Posts - 4%
prajai
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
7 Posts - 2%
jairam
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_m10தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 27, 2011 7:18 pm

சில ஆண்டுகளுக்கு முன் சாயக் கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாயநீர் கழிவுக் குட்டையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பற்றியும், “தற் கொலைக்களன்” என்று சாயக் கழிவைக் குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக்களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில்தான் அதிகம் என்பதைப் புள்ளி விபரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற் கொலை முயற்சிகளும், மாதத்திற்கு 50 தற்கொலை சாவுகளும் பதிவாகின்றன. சென்றாண்டில் 495 தற் கொலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாண்டின் முதல் ஆறுமாதத்தில் 350 பேர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 20 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவரே அதிகம். அதிலும் ஆண்கள் அதிகம்.

(முகூர்த்த நாட்களில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் திருமணங்கள்-தன்னிச்சையாக நாலைந்து யுவதிகளும், யுவன்களும் வந்து ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். - மற்றும் திருப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் நடைபெறும் இளம் வயதினரின் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தற்கொலை விகிதத்திற்கும் வெகு சம்பந்தம் உண்டு. இதைத் தவிர சர்ச் நடவடிக்கைகள் தனி கவனம் பெறுகின்றன. மத மாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் திருமண பந்தங்கள் அமைந்திருக்கின்றன.)

தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! 08slide41

10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரமாகி விட்டது திருப்பூர். இதில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வந்த தொழிலாளர்களும், வந்துபோகும் மக்களும் அடங்குவர். வெளியூர் என்பது வெளி மாவட்டங்கள் என்று 5 வருடம் முன்பு இருந்த நிலை மாறி ஒரிசா, பீகார் போன்ற வேலை வாய்ப்பு மிகவும் குறைந்த மாநிலங்களும் இதில் அடக்கம். நேபாளம் சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் இங்கு சிலது உண்டு.

திருப்பூர் வேலை வாய்ப்புகளுக்கான ஒரு சொர்க்கம் என்று நம்பி இங்கு படையெடுக்கிறார்கள். வேலை வாய்ப்பும் அதிக சம்பளமும் என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை ஆதாரங்களுக்கான செலவு என்பது இந்த அதிகப்படியான சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கிறது. வீட்டு வாடகையும், தண்ணீர் போன்றவைகளுக்காகச் செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் நல்ல காற்றோட்டத்துடனும், ஓரளவு தண்ணீர் வசதியுடனும் வாழ்ந்தவர்கள் இங்கு புறாக்கூடு, குருவிக் கூடு வீடுகளில் வாழும் நிலை. பொதுக்கழிப்பறைகூட அதிகம் இல்லாத தெருக்கள் குப்பையால் நிரம்பி வழிகின்றன. பாலீத்தின் பொருட்களின் உபயோகம் அபரிமிதமாக இருக்கிறது. சாலை விரிவாக்கங்களால் மரங்கள் பிரதான சாலைகளில் அருகி விட்டன. அதனால் 5 டிகிரி வெப்பம் அதிகரித்தே மிக வெப்பமான நகரமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்குப் பல சமயங்களில் வேலை நிரந்தர மின்மையும், வேலை வாய்ப்பின்மையும் பணத்தட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.

இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும், அதற்கான வட்டியும் அவர்களை மீளச் செய்வதில்லை. ஊரில் இருப்பவர்கள் சொர்க்கபுரிக்குச் சென்றிருக்கும் தங்களின் குடும்ப நபரின் வருமான சேமிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது கடன் வாங்குவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்தக் கடனிலிருந்து மீள்வது சிரமமாகிவிடுகிறது. அதிகப்படியான உழைப்பை எதிர்பார்க்கிற நகரம் இது. எட்டு மணிநேர உழைப்பு என்பது இங்கு அமலாக்கப்படுவதில்லை. குறைந்தது 10 மணி நேர ஷிப்ட் என்பதே நடைமுறையில் உள்ளது. அதிக நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் என்பது 10 மணி நேரத்தைத் தாண்டும்போதுதான் சாத்தியமாகிறது

தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! 300ed2b2b1a611ddab82000

அதிக நேர உழைப்பு என்பது மனித உடலை இயந்திரமாக்கி, வயதையும், நோய்களையும் கூட்டி விடுகிறது. பனியன் கம்பெனியில் வேலை செய்கிறவன் 40 வயதிற்கு மேல் வேலை செய்ய உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றிருப்பதில்லை. கடன் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபட தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதிலும் தன் சேமிப்பைச் செலவிடுகிறான். ஒற்றை பெற்றோர் முறையிலான தொழிலாளியாய் ஆண் இங்கு வந்து வேலை செய்து வருமானம் ஈட்டும்போது பெண் ஊரில் இருந்துகொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும், வருமானமில்லாத நிலத்தையும் பார்த்துக் கொண்டிருப்பாள் அல்லது ஆண் ஊரில் இருந்துகொண்டு பெண்ணை வேலைக்கு அனுப்புவதும் பெருமளவில் நடக்கிறது. ஊரில் கணவன் சிறு விவசாய நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருப்பான். குடும்பத்தை தாயுமானவனாக இருந்து காத்துக் கொண்டிருப்பான். பெண் இங்கு வந்து சம் பாதித்து மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பாள். ஒற்றைப் பெற்றோர் முறையிலான இவ்வகைத் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும்போது சுதந்திரமாய் உணர்கிறார்கள். ஜாதி உணர்வைப் புறம் தள்ளி விட்டு இயல்பாய் இருக்கிறார்கள். அதிக நேரம் குறிப்பாய் இரவிலும் தொழிற்சாலையில் இருக்கும் கட்டாயத்தால் எதிர்ப்பால் தொழிலாளர்களுடனான பேச்சும், பழக்கமும், தொடர்பும் பாலியல் தொடர்புகளாக மலர்கின்றன..

தொழிற்சாலை சூழலில் தனிமைப்பட்டுப் போயிருக்கிற தொழிலாளிக்குப் பாலியல் தொடர்பு சகஜமும், இயல்புமாகிறது.. இது ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும் உளவியில் ரீதியான சிக்கல்களை ஆரம்பம் முதலே தந்து விடுகிறது. இந்த சிக்கல் தொடர்கதையாகி குற்ற நடவடிக்கைகளுக்கும், கொலைகளுக்கும் வழி வகுக்கின்றன. திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளும், கொலை விகிதங்களும் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

வெளியில் இருந்து வரும் தொழிலாளி தன்னை தொழிலாளியாகக் கருதுவதில்லை, அதற்கான உரிமைகளையும் கோருபவனாக இல்லை. மழை பெய்தால் ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம் என்ற கனவில் பலர் இருக்கிறார்கள் அல்லது ஊரில் தாங்கள் பார்த்த வேலைக்குத் தடங்கல் இல்லை என்று தெரிகிற போது வெளியேறுபவர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான நேர உழைப்பால் அசதி மற்றும் ஓய்வின்மை அவனை வெளியேறத் துடிக்கிறவனாக்குகிறது.

தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Sdfasdfasdfasdfasdfasdf

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 27, 2011 7:19 pm

தொழிற்சாலையில் பிரச்சினை என்று வருகிறபோது தொழிற்சங்கங்களை அணுகுவதை விட தொழிற் சாலையின் நிர்வாகிகளையோ, புரோக்கர்களையோ அணுகி தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது ஏதுவாக இருக்கிறது. மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை இருக்கும். மீதமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுவும், மூன்றாம்தரப் படங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. தொழிற்சங்கத்தினர் அவனை அணுகுவதுகூட சிரமமாக இருக்கிறது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நல்ல பூங்காக்களோ (இருக்கும் ஒரே பூங்கா மாசடைந்த நொய்யலின் ஓரம் சாயக்கழிவு துர் நாற்றங்களை வீசிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. பெயர் பிருந்தாவன். பெயரில் என்ன இருக்கிறது.) இல்லை. மாவட்டம் என்று ஆகி விட்டாலும் மாவட்டத்திற்கான மைய நூலகமோ இல்லை. மிகக் குறைந்த கொசுக்கடி நூலகங்களே உள்ளன. அதிகப்படியான மதுபானக் கடைகளும்,( 100) அதிக பெட்ரோல் பங்குகளும் உள்ள நகரம். குடிநீருக்காக கால்கடுக்க குடும்பப் பெண்கள் நிற்கவேண்டிய நிலை. மூன்று குடி நீர் திட்டங்கள் நிறைவேறி விட்டன. அதிலும் பிரைவேட் பப்ளிக் பார்ட்னர் திட்டம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவானி தண்ணீர் திட்டம் ஒரு வகையில் தோல்வியே. குடி நீருக்காக மக்கள் பணம் தருவதைக் கட்டாயமாக்கும் திட்டம் இது.

இன்னும் இருபது ஆண்டுகளுக்குப்பின் திருப்பூர் மக்கள் தொகை இருபது லட்சத்தை தாண்டும் என்ற புள்ளிவிபரத்தை முன் வைத்து செயல்படும் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. சாயத்தால் நொய்யல் ஆற்றையும் , மண்ணையும் மாசுபடுத்தி விட்டோம். அதைச் சுத்தம் செய்யலாம் வாருங்கள் என்று ஏற்றுமதியாளர்கள் பெரிய பெரிய பேனர்கள் போட்டு தங்கள் குற்ற உணர்வை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில். நொய்யலைச் சுத்தம் செய்கிறோம் என்று நகரத்தின் மையத்தில் சிறிய பகுதியைச் சுத்தம் செய்திருக்கிறார்கள் வளம் என்ற ஏற்றுமதியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள். 1000 அங்கீகரிக்கப்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்காக எரியூட்டப்படும் மரங்களும், அவற்றின் சாம்பலும்,துண்டு பனியன்களை வீட்டு உபயோகத்திற்காக எரியூட்டப்படும் கழிவும், சாயக்கழிவும் பெரும் அபாயங்களாக மாறி உள்ளன

தினசரி இங்கு விற்கப்படும் கொசுவர்த்தி நிவாரணி சுருளும், திரவபுட்டியின் எண்ணிக்கையும் தமிழ் நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கப்படுவதில்லை. சாயப்பட்டறைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு முறையில் நிவர்த்தி செய்ய 30 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. 200 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் வைத்துள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உப்பின் அளவு அபரிமிதமாக இருப்பதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு எற்படுகிறது. சாயக்கழிவுகளைக் கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கலைஞருக்கு நன்றி தெரிவித்து பேனர்களும், தட்டிகளும் நகரம் முழுவதும் காணப்பட்டன. சாதாரண தொழிலாளி திருப்பூருக்கு சாயப்பிரச்சினையிலிருந்து விடிவு வந்து விட்டதென்று கலைஞரைப் புகழ்ந்து நெகிழ்ந்து போய் கிடந்தான். சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பும் மீறி அது நிறைவேறப்போவதில்லை. தொழிற்சங்கவாதிகளும், அரசியல் தலைவர்களும் ஏற்றுமதியாளர்களாகவும், பனியன் வியாபாரிகளாகவும் உள்ள சூழல் எந்த சுற்றுச் சூழல் சார்ந்த நம்பிக்கைக்கும் இடம் தருவதில்லை. தொழிற்சங்கக் கல்வியோ, அரசியல் கல்வியோ தொழிலாளிக்குத் தரமுடியாத நிலையில் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன.

வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதும் போவதுமான ஊரில் வேலை பல சமயங்களில் நிரந்தரமில்லாதாகி விடுகிறது. இது தரும் பாதுகாப்பின்மை அவனைப் பயத்திற்குள்ளாக்கி விடுகிறது. அவன் நிரந்தர தொழிலாளியாக இல்லாமல் பீஸ்ரேட் செய்கிறவனாக, காண்ட்ராக்ட் ஊழியனாக மாறிய நிரந்தரத்தன்மை இங்கு அவனைப் பாதுகாப்பில்லாதவனாக்கி விடுகிறது. குடும்பத்தினருடன் அவன் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. குடும்பத்திலும் அந்நியனாகவே இருக்கிறான்..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 27, 2011 7:21 pm

தற்கொலை நகரமாகும் திருப்பூர்!!!! Image2535

சமூக மனிதனாக அவன் நடமாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து விட்டது. கலாச்சாரத் தளத்தில் அவனின் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது. முந்தின தலைமுறை படிப்பறிவை நிராகரித்துவிட்டு குழந்தைத் தொழிலாளியாக வளர்ந்ததன் பலனை திருப்பூரின் இன்றைய கேளிக்கை நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரக் குடும்ப அமைப்புகளும், குற்ற நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து மீண்டு அவன் சக மனிதனாகவோ, சக தொழிலாளியாகவோ சமூகத்தில் தன்னைப் பிணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இந்த சூழல்கள் அவனைச் சோர்வுள்ளவனாக, மனரீதியாக பாதிப்படைந்துள்ளவனாக அவனை மாற்றி விட்டது. இதுவே அவனைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்நியச் செலாவணி தரும் டாலர் சிட்டி என்ற அடைமொழி மாறி தற்கொலை நகரம் என்றாகி விட்டது. வணிக நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரமும், கலாச்சார அந்நியமாக்கலும் இதைத்தவிர வேறு எதையும் ஒரு தொழில் நகரத்தில் வாழும் மனிதனுக்குத் தந்து விடாது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி தந்திருக்கும் நிரந்தர போனஸ் இது....

நன்றி : உயிர்மை நாளிதல்...
சுப்ரபாரதி மணியன்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக