புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
48 Posts - 45%
heezulia
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
3 Posts - 3%
jairam
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
2 Posts - 2%
சிவா
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
1 Post - 1%
Manimegala
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
14 Posts - 4%
prajai
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
6 Posts - 2%
jairam
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
4 Posts - 1%
Jenila
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
4 Posts - 1%
Rutu
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_m101961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1)


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Feb 26, 2011 9:53 am



ஆக்கம்: டி.பி.எஸ். ஜெயராஜ்

“ இப்படியாக அடக்கியாள்பவர்களின் வன்முறையினால் ஒடுக்கப் பட்டவர்களின் வன்முறையற்ற போராட்டம் அமைதியாக்கப் பட்டது சிங்கள குறுகியவாதத்தின் ஆயுத பலம் தமிழர்களின் அகிம்சா வாதத்தை நசுக்கியழித்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தியான நிகழ்வு தமிழ் தேசியப் போராட்டத்தின் மிக முக்கியமான அரசியல் அனுபவத்திற்கு தொடக்கம் குறித்தது.அந்த அனுபவம் தமிழர்களுக்குப் போதித்தது வன்முறையற்ற நீதியான போராட்டத்தின் சக்தியால், இனத் துவேசமானதும் மனிதத்தன்மையையும் நாகரிகப் பழக்க வழக்கங்களினதும் எல்லா ஒழுங்கு நெறிகளின் தரங்களையும் தாண்டி நிற்கும் அடக்கியாளும் வன்முறையான இராணுவ சக்தியை உட்கொள்ள முடியாது என்பதை. இந்த நிகழ்ச்சியில் அடக்குமுறையாளர்கள் ஊக்குவித்த கருத்தானது,இராணுவ பயங்கரவாதம்தான் தமிழர்களின் கோரிக்கைக்கும் மற்றும் வன்முறையற்ற தன்மையை அடித்தளமாகக் கொண்ட தமிழர்களின் அரசியல் கிளர்ச்சிக்குமான ஒரே பதில்,மேலும் துப்பாக்கிக் குழல்களின் முன்பாக அது பலவீனமானதும் கையாலாகானதுமான ஒரு கட்டமைப்பு” – அன்ரன் பாலசிங்கம்

“விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்” எனும் நூலில் இருந்து.

பெப்ரவரி 20 1961 இழந்த உரிமைகளை மீளப் பெறுவதற்காக உருவான ஸ்ரீலங்கா தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த ஒரு நாளில்தான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி (எப்.பி) என அழைக்கப்படும். இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ஐ.ரி.ஏ.கே) உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வன்;முறையற்ற நேரடிப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தது.

வருடக்கணக்காக நடந்துவந்த தமிழ் போராளிகளின் கொடூரமான ஆயதப் போராட்டம், இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் இயல்பாகவே இத்தகைய வன்முறை நிறைந்தது என்கிற ஒரு எண்ணத்தை தோற்றுவிக்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தமிழர்களின் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணமான விடயங்களைப் புறந்தள்ளி இந்தப் பிரச்சனை சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஒரு விடயம் மட்டுமே எனச் சித்தரித்துக் காட்டக்கூட இந்த வன்முறையைப் பரிமாறியிருக்கலாம். இதில் மறக்கடிக்கப்பட்டு,அவகணிக்கப்பட்டு அல்லது வசதிப்படி கவனிக்காமல் விடப்பட்ட உண்மை என்னவென்றால்,மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவில் தமிழர்களின் அரசியல் போராட்டமானது அடிப்படையில் வன்முறையற்றதும் ,மகாத்மா காந்தி எனும் வன்முறைக்கு எதிரான மாபெரும் பரிசுத்தவானால் தெளிவாக எடுத்துக் கூறப்பட்ட வன்முறையையோ இரத்தம் சிந்துவதையோ முற்றாகத் தவிர்க்கும் அகிம்சை எனும் அறவழிக் கொள்கையை கடைப்பிடித்து நடத்தப்பட்டு வந்தது என்பதை.

இதில் பலராலும் விவாதிக்கப்பட்டு வருவது, தமிழர்களின் வன்முறையற்ற போராட்டம் தோல்வியுற்ற படியாலேயே வழக்கத்திலிருந்து வரும் அரசியல் வியாதியை குணப்படுத்துவதற்கு தோன்றிய ஒரு வழிதான் விரக்தியுற்ற தமிழ் இளந் தலைமுறையினரைத் துப்பாக்கிகளைத் தூக்க வைத்தது என்று.

இதன் தகுதிகள்; அல்லது இந்த விவாதம் எவ்வாறிருப்பினும் 20ம் நூற்றாண்டின் கடைசி முக்கால் பகுதி; ஸ்ரீலங்காத் தமிழர்களால் நடத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளால் நிறைந்து இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஹர்த்தால், சத்தியாக்கிரகம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபவனிகள், ஊர்வலங்கள், திரளான பிரச்சாரங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், துக்க தினங்கள், சட்டமறுப்புகள், புறக்கணிப்புகள் என்று அந்நாட்களில் தமிழ் அரசியலில் ஒழுங்கான சம்பவங்களாக இருந்தன.

இந்த வன்முறையற்ற அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களின் உச்சக்கட்ட அடையாளமாகவிருந்தது 1961 பெப்ரவரி 20ல் நடத்தப்பட்ட மிகப் பெரிய சத்தியாக்கிரக இயக்கம்தான்.

ஸ்ரீலங்காத் தமிழர்கள் எல்லோருமே பெருமைப் படக்கூடிய அந்த நிகழ்ச்சியினால்அடைந்த வெற்றி சிறிய,ஆயுதம் ஏந்தாத பாதுகாப்பில்லாத மக்களின் அர்ப்பணிப்புடன் ஐக்கியப்பட்ட முயற்சியினால் கொழும்பின் நிருவாக இயந்திரத்தை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இராணுவத்தின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் வரை இயங்காமல் முடக்கிய சம்பவம்தான்.

முன்னறிவிப்பு

ஆயுதப் படையினரை ஈடுபடுத்தியது, தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வட மாகாணத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தை அதிகரித்து இராணுவமயமாக்கலை தீவிரமயமாக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு ஒரு விதமான முன்னறிவிப்பு ஆகும்.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆயுதப் படையினரின் பிரசன்னனம் எங்கும் படர்ந்து பரவியுள்ளது.

ஒரு அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் அந்த மாகாணங்களில் மறுக்கப் பட்டதாகவும் அழிக்கப் பட்டதாகவும் உள்ளது.

1961 சத்தியாக்கிரகம் அதன் வன்முறையற்ற அடிப்படைத் தன்மைக்கு அப்பால் தமிழ் அரசியலின் எதிர்காலப் பாடங்களுக்கான அறிகுறிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்களின் அமைதியற்ற தன்மை சாத்தியமான இராணுவ அதிகரிப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்சார வேளையில் குடியியல் சட்டமறுப்பு நடவடிக்கையாக அரம்பிக்கப்பட்ட சமாந்தர தபால்சேவைகள் போன்றவை எதிர்காலத்தில் மலரப்போகும் பிரிவினைவாதத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டின. வருந்தத் தக்க விதமாக இந்த முழு முயற்சிகளுக்கும் பலனற்ற விதத்தில் 1960 ஜூலை மாதத்தில் நடந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழரசுக் கட்சி ஒரு தேர்தல் கூட்டை வைத்துக் கொண்டதன் பயனாக திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா அதிகாரத்துக்கு வந்திருந்தார்.

அந்த நேரான தன்மைக்கு மாறாக நிகழ்வுகள் மோசமான திருப்பத்தை அடைந்தன, ஒரு வருடத்துக்குள் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் பிரதான அரசியற் கட்சிகள் ஒருவரை ஒருவர் முட்டாளாக்கிக் கொண்டனர். இந்த அரசியல் முறிவின் விளைவாக எதிர்வாத அரசியல் 1961 ஆண்டின் சத்தியாக்கிரகத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

முக்கியத்துவம்

இந்த விவகாரங்களின் தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின், தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தை விழுத்துவதிலும் மற்றம் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முக்கியமான பாத்திரத்தை வகித்த 1960 மார்ச் மற்றும் ஜூலையில் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களையும் பற்றி ஆழமாக அலச வேண்டிய தேவை உள்ளது.

தமிழரசுக் கட்சியை தன்முழு சக்தியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கத் தூண்டியது எது? மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – தமிழரசுக் கட்சி உறவு முறிவடைவதைத் தூண்டியது எது? என்பன பற்றிய முன்னேற்றங்களை இது சம்பந்தமாக விபரமாக பரிசீலிப்பது பயனுள்ளது.

1961 சத்தியாக்கிரகம் மேடையேற்றப் பட்டதன் பின்னணியை முற்றாகப் பாராட்ட வேண்டுமாயின் கடந்து போய்விட்ட அந்த நிகழ்வுகளை ஆராய்வது இந்தக் கட்டத்தில் மிகவும் அவசியம்.

பல மறைபுதிரான அரசியல் பேரங்கள் 1960 மார்ச் மற்றும் ஜூலை தேர்தல்களுக்கு இடையே நடந்தேறின. இந்தக் காட்சி மாற்றங்களுக்குப் பின்னால் தமிழரசுக் கட்சி மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது. 1961 சத்தியாக்கிரகத்தை நடத்த வேண்டிய அரசியல் சூழலுக்கு வழியமைத்த காரணத்தைக் கண்டறிய வேண்டுமாயின் இந்தச் சம்பவங்களை மிக நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் எதிர்க் கட்சியான தமிழரசுக் கட்சியும் சத்தியாக்கிரக கொந்தளிப்பின்போது காட்டிய வேகமும் பிடிவாதமுமான சூழலை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் 1960 மார்ச்க்கும் ஜூலைக்கும் இடையே நடந்த அரசியல் ஊடல்களையும் கூடல்களையும் நன்கு பரிசீலித்தால் மட்டுமே முடியும்.

செப்டம்பர் 1959 ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டது சுயாதீனச் சிந்தனையாளரான டபிள்யு. தகநாயக்கா பிரதமராக வருவதற்கு வழிகோலியது. எப்படியாயினும் அவரது பதவியின் ஆயுள் குறுகியதாகி 1960 மார்ச் மாதத்தில் புதிய தேர்தல்கள் நடைபெற்றன. முதல்தடவையாக் பருத்தித்துறை தொடக்கம் தெவிநுவர வரையான நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றன.

பாராளுமன்றத்திலுள்ள ஆசனங்களின் தொகை 101 லிருந்து 157 ஆக அதிகரிக்கப் பட்டது. இதில் 6 ஆசனங்கள் நியமன அங்கத்தவர்களுக்கும் மிகுதி 151 ஆசனங்களும் 145 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களுக்குமாக இருந்தது.தேர்தல் தொகுதிகளான, கொழும்பு தெற்கு, அக்குறணை,மட்டக்களப்பு,மற்றும் மூதூர் ஆகியவை இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும்,கொழும்பு மத்தி மூன்று அங்கத்துவத் தொகுதியாகவும் இருந்தன.

பிரச்சாரம்

1953 ல் அரசியலில் இருந்து சுயமாக ஓய்வு பெற்றிருந்த டட்லி சேனநாயக்கா 1957 ல் அரசியலுக்கு மறுபிரவேசம் செய்தார்.1960 தேர்தல்களில் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சீ.பி.டீ.சில்வா தலமை ஏற்றிருந்தார்.

பண்டாரநாயக்காவின் விதவை சிறிமா தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரதான மேடைக்கு வரவில்லை ஆனால் கடைசி நேரத்தில் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

பிரதமர் பதவிக்காக எதிர்பார்க்கப்பட்ட மற்றவர்கள் மகாஜன எக்ஸத் பெரமுன (எம்.ஈ.பி) கட்சியைச் சேர்ந்த பிலிப் குணவர்தன,லங்கா சமசமாஜக் கட்சியை (எல்.எஸ்.எஸ்.பி) சேர்ந்த கலாநிதி.என்.எம்.பெரேரா, மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபந்து அரசாங்கப் பிரதமராகிய லங்கா பிரஜாதந்திரவாதி பெரமுனயைச்(எல்.பி.பி) சேர்ந்த விஜயானந்த தகநாயக்கா ஆகியோராவர். முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது அது ஒரு தொங்கு பாராளுமன்றமாக அமைந்தது. ஐதேக 50 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தன. எல்.எஸ்.எஸ்.பி மற்றும் எம்.ஈ.பி ஆகியவை தலா 10 ஆசனங்களைப் பெற்றிருந்தன.மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. புதிய பாராளுமன்றத்தின் ஆட்சிபீட அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்கியது.

தமிழரசுக்கட்சி வடமாகாணத்தில், காங்கேசன்துறை, வட்டுக்கோட்டை, நல்லூர், சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில் ஊர்காவற்றுறை, கோப்பாய், கிளிநொச்சி, மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, திருகோணமலை, மற்றும் மூதூர் ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலக ஐதேக மீது ஒருவித பக்கச்சார்பு கொண்டபடியால் பாராளுமன்றில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற காரணத்தைக் காட்டி புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி டட்லி சேனநாயக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.எப்படியாயினும் நிலையான அரசை நிறுவுவதற்குத் தேவையான பெரும்பான்மையை டட்லியால் உருவாக்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

ஆறு நியமன உறுப்பினர்கள் பிரதமரால் நியமிக்கப் படடிருந்தும் சில சுயேச்சைகள் மற்றும் எல.பி.பியில் இருந்து கட்சி தாவிய சிலரின் ஆதரவு இருந்தும் கூட 157 அங்கத்தவர்களில் டட்லியிடமிருந்தவர்கள் 60 – 61 பேர்களே. ஆனால் தமிழரசுக்கட்சியின் 15 அங்கத்தவர்களின் ஆதரவை பெற முடியுமாகவிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்கும் ஆனால் ஐதேக யின் தலைவர் மேலும் சில சுயேச்சை அங்கத்தவர்களின் ஆதரவை சேகரிக்க முடியுமென்பதிலும் சில சிறிய கட்சிகளை உடைத்து ஆசைகாட்டி அங்கத்தவர்களைப் பெறமுடியும் என்பதில் நன்னம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

செல்வநாயகம்

இப்படியாக செல்வநாயகத்தின் ஆதரவு நிiயான அரசாங்க மொன்றை அமைக்க சேனநாயக்காவுக்கு மிக அவசியமாக தேவைப்பட்டது. அதே போல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கும்படி கோரப்பட்டால் அதற்கும் தமிழரசுக்கட்சியின் ஆதரவு சரிசமனாகத் தேவைப்படும்.

எனவே வெற்றியாளரான செல்வநாயகம் பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்தார். அரசியலில் அவர் மிகமிக வேண்டப்பட்டவராக இருந்தார். பிரபலமான மனிதர்களாகிய முன்னாள் பிரதமர் சேர் ஜோண் கொத்தலாவல,முன்னாள் அரச சபா அங்கத்தவர் சேர் அருணாசலம் மகாதேவா,ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சேர் எட்வர்டு; ஜெயதிலக, முன்னாள் நீதியமைச்சரும் செனட்சபைத் தலைவருமான சேர் லலித ராஜபக்ஸ ஆகியோர் செல்லநாயகத்துடன் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து கொண்டு ஐதேக சார்பாக டட்லி சேனநாயக்காவுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம்; ஐதேக, தனக்கு எதிராகப் போட்டி போட முடியாத ஒரு துருப்புச் சீட்டு கைவசம் இருந்தது. அதுதான் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவும் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் ஜூன் 1957ல் கைச்சாத்திட்ட பண்டா – செல்வா அல்லது பி – சீ ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது, வடக்கில் ஒரு பிரதேச சபையும் கிழக்கில் இரண்டு பிரதேச சபைகளும் ஒன்றிணையத் தக்க பிரிவுகளுடன் அமைப்பது.மேலும் நீதிமன்றத்திலும் நிருவாகத்திலும் சாத்தியமான அளவுகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது, மேலும் குடியேற்றங்களுக்கு எல்லைக் கோடுகளை அமைப்பது என்பன.

இந்த பி – சீ ஒப்பந்தத்துக்கு ஐதேக வினாலும் புத்த மத குருமாரின் ஒரு பகுதியினரிடமிருந்தும் கிளம்பிய எதிர்ப்பினால் பண்டாரநாயக்கா அதை தன்னிச்சையாக நிராகரிக்க வேண்டிய நிலைக்கு வற்புறுத்தப் பட்டார்.


இரத்மலானையில் வந்திறங்கிய செல்வநாயகத்துக்காக ஒரு எதிர்பாராத விருந்தாளி காத்திருந்தார். அது வேறுயாருமல்ல முன்னாள் மலையகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராமானுஜன் என்பவர்தான். அவர் அங்கே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியாக வந்திருந்தார். அந்த நேரத்தில் டட்லி சேனநாயக்கா தமிழ் தோட்டத்தொழில் தலைவர் எஸ்பி வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தார், வளங்களை உடைய தொண்டமான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழரசுக்கட்சியுடன் ஒரு பொதுவான இணக்கப் பாட்டை எட்டியிருந்தது, அதாவது ஸ்ரீலங்காத் தமிழ் கட்சி பதவியிலிருக்கும் எந்த அரசாங்கத்துடன் பேரம் பேசும் போது மலையகத் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த இணக்கப்பாடு.அதன்படி இரண்டு கடசிகளிடையேயும் அரசியல் உறவு ஏற்பட்டிருந்தது. ராமானுஜன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து ஒரு எதிர்பாராத விருந்தாளியை சந்தித்துச் செல்லும்படி செல்வநாயகத்தை வற்புறுத்தினார். செல்வநாயகமும் அதற்கு இணங்கினார்.அங்கு தொண்டமானுடன் அவருக்காகக் காத்திருந்தது கல்வியாளரான கலாநிதி.பதியுதீன் மகமூத்.

கலாநிதி.பதியுதீன் மகமூத் பின்னாளில் திருமதி. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகக் கடமையாற்றினார். பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கு மிக நெருங்கியவரான அவர் சிறிமாவை சுறுசுறுப்பான அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய பாத்திரங்களாக இருந்தவர்களில் ஒருவர்.

பண்டா – செல்வா ஒப்பந்தம்

கலாநிதி.பதியுதீன் மகமூத், செல்வநாயகத்திடம் n;சான்னது, தமிழரசுக் கட்சி ஐதேக வுக்கு ஆதரவளிக்காமல் விலகியிருக்குமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு புத்துயிரளிக்கவும், காணி மற்றும் குடியேற்றங்களில்அதிக அதிகாரங்களுடன் கூடிய பிரதேச சபைகளை அமைப்பதற்கும் தயாராகவுள்ளது என்று. அவர் மேலும் உறுதியளித்தது,தமிழை நிருவாக மற்றும் சட்ட கோளங்களில் அமல்படுத்த தேவையான முற்போக்கான சலுகைத் திட்டங்களை. கூர்மதியாளரான மகமூத் சுட்டிக் காட்டியது பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஐதேக யால் தமிழரசுக் கட்சிக்கு வழங்க முடியாது என்பதை.

இதன்படி செல்வநாயகம், டட்லி சேனநாயக்காவுடன் பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டபோது பண்டா – செல்வா ஒப்பந்தத்தைப் பற்றிய அறிவை அதன் பிரதான வாயிலாகப் பலப்படுத்திக் கொண்டார்.அதைத்தவிர டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சியுடன் பேரம்பேசத் தொடங்கு முன்னரே அதன் ஆதரவு தனக்கிருப்பதாக தேசாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக வெளியான பூரணமற்ற ஊடகச் செய்திகளால் தமிழரசுக் கட்சி சற்று வெறுப்புக் கொண்டிருந்தது.

டட்லி சேனநாயக்காவுடனான கலந்துரையாடல்களில் தமிழரசுக் கட்சித் தலைவர் நான்கு விரிவான கோரிக்கைகளை வாய்மொழியாகச் சமர்ப்பித்தார்.

முதலாவது: பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மனக் கணக்கு போடப்பட்டிருந்த நில உரிமை மாற்றம் மற்றும் அபிவிருத்தி அதிகாரத்துடன் கூடிய பிரதேச சபைகளை நிறுவுதல்.
இரண்டாவது:நிருவாகத்திலும்,நீதி மன்றுகளிலும் தமிழ் மொழிக்குச் சம உரிமை.
மூன்றாவது: மலையகத் தமிழர்கள் இழந்துள்ள பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமைகளை வழங்கத் தக்க விதத்தில் விரைவான விரிவாக்கமுள்ள பதிவுகளை மேற்nகொள்ளத் தக்கதாக 1948ம் ஆண்டு இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் இல.18 ஐத் திருத்தியமைத்தல்.
நான்காவது:ஆறு நியமன அங்கத்தவர்களில் நான்கினை மலையகத் தமிழ் பிரதிநிதிகளுக்கு வழங்குதல்.
தேவைப்பட்டால் இந்தக் கோரிக்கைகளில் சிறிதளவு விட்டுக் கொடுப்பிற்கு தமிழரசுக் கட்சி தயாராக உள்ளதாகவும் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரசவ வேதனை போன்ற துயரத்தை தணிக்க டட்லி சேனநாயக்கா நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வாராயின் தமிழரசுக் கட்சி ஐதேக வுக்கு ஆதரவு வழங்கத் தயார் என செல்வநாயகம், டட்லி சேனநாயக்காவிடம் தெரிவித்தார்.

சேனநாயக்கா,செல்வநாயகத்திடம் விசாரித்த கோரிக்கைகளை தட்டிக் கழிக்காமலேயே கூட்டம் முடிவுற்றது. அடுத்த கூட்டம் மார்ச் 26 ந்திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திரும்பவும் வேகமாக இயங்கி டட்லியை பின்தள்ளியது.

பீலிக்ஸ். ஆர். டி. பண்டாரநாயக்கா

மார்ச் 23ல் செல்வநாயகத்திடம் ஒரு இளம் விருந்தாளி வந்திருந்தார். அது தொம்பே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மருமகனான பீலிக்ஸ். ஆர். டி. பண்டாரநாயக்கா. திறமையான இளம் சட்டவாளரான அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் கருதப்பட்டார் ,பீலிக்ஸின் தந்தையான உயர் நீதிமன்ற நீதிபதி செல்வநாயகத்தின் நெருங்கிய நண்பராவார்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவுக்கும் மற்றும் செல்வநாயகத்திற்கும் இடையே 1957ல் ஏற்படுத்தப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தொடர்ந்து பின்பற்றப் படும்.அந்த ஒப்பந்தம் முற்றாக நடைமுறைப் படுத்தப் படுவதாகவும் பிரதேச சபைகள் நிறுவப்படும் என்றும் பீலிக்ஸ் செல்வநாயகத்துக்கு உறுதியளித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது சிம்மாசனப் பிரசங்கத்தில் இதைப்பற்றிய கொள்கை விளக்கம் ஒன்றையும் வழங்கும் என்று பீலிக்ஸ் செல்வாவுக்கு மேலும் சொன்னார்.

சேனநாயக்கா, செல்வநாயகத்தை மார்ச் 26ல் சந்தித்த போது ஐதேக யின் தலைவர் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு சம்மதிப்பதில் தனக்குள்ள கஷ்டத்தைப் பற்றி விளக்கினார். சாத்தியப் படுமானால் கோரிக்கைகளின் வீரியத்தை சற்றே குறைக்கும்படி அவர் செல்வநாயகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழரசுக் கட்சியால் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் சம அந்தஸ்து கோரிக்கையை கைவிட முடியும் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிருவாக மற்றும் சட்டக் கோளங்களின் நியாயமான பயன்பாட்டுக்காகத் தமிழை ஒரு அரச கரும மொழியாக மாற்றும் சில விதிகளை அமல் படுத்தினால் தமிழரசுக் கட்சி திருப்திப்படும் என்று செல்வா டட்லியிடம் தெரிவித்தார்.மலையகத் தமிழ் பிரதிநிதிகளின் கோரப்பட்;ட நான்கு பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி தயாராக இருந்தது.

எப்படியாயினும் தமிழரசுக் கட்சி மற்ற இரண்டு கோரிக்கைகளான பிரதேச சபைகள் மற்றும் பிரஜாவுரிமைச் சட்டம் ஆகியவற்றில் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை. எனவே சேனநாயக்கா தமிழரசுக் கட்சியின் இறுதிக் கோரிக்கைகளை எழுத்து மூலம் தரும்படி கோரினார். அது அன்றைய தினமே நடந்தேறியது.

மார்ச் 27 ந்திகதி சேனநாயக்கா, செல்வநாயகத்திடம் தொடர்பு கொண்டு ஐதேக நியமித்த அங்கத்தவரை சபாநாயகராகத் தெரிவு செய்வதற்கு ஆதரவு வழங்கும்படி கோரினார். கட்சி தனது ஆதரவினை எதிர்கட்சிக்கு வழங்குவதற்கு சம்மதித்துவிட்டது எனக்கூறி செல்வா அதை நிராகரித்து விட்டார்.

அதன் தொடர்ச்சியாக எதிர்கட்சி வேட்பாளர் ரி.பி. சுபசிங்க அரசாங்க வேட்பாளர் சேர் அல்பட் பீரிசினை தோற்கடித்தார்.

சேனநாயக்கா, செல்வநாயகத்தை திரும்பவும் மார்ச் 27 மாலையில் சந்தித்தார்..

(தொடரும்)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 9:56 am

உங்களின் அனைத்துப் பதிவுகளும் வேலை வாய்ப்புப் பகுதியில் இடம்பெற்று வருகிறது. நேற்றுதான் அனைத்தையும் சரியான பகுதிகளுக்கு மாற்றினேன்! மீண்டும் ஒரு பதிவு இப்பகுதியில் வேண்டாம் கண்ணன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



1961 தமிழ் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவு (பகுதி 1) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக