புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:32 am

First topic message reminder :

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு - Page 2 Vivekananda



விவேகானந்தர் யார் ?

அப்போதைய வங்காளத்திலே பழமை மிகுந்த க்ஷத்ரிய குடும்பத்திலே விசுவநாதருக்கும், புவனேசுவரிக்கும் மகனாகப் பிறந்த நரேந்திரர் ஒரு ஞானக் குழந்தை எனப் பிறர் கருதும் விதத்தில் வித்தியாசமாக வளர்ந்தார்.

அனைத்து உயிர்களிடத்தும் இறைவன் குடி கொண்டிருக்கிறார் என்று ஆன்மீகத் தத்துவார்த்தம் கூறுவார்களல்லவா, அந்தத் தத்துவத்தை வாழ்வின் அடிப்படையாக கொண்டிருந்தாரோ என்னவோ நரேந்திரரின் இளம் பருவத் தோழர்களாகத் திகழ்ந்தவை ஒரு பசு, ஆடு, குரங்கு, மயில், புறா, இரண்டு மூன்று சீமைப் பெருச்சாளிகள் ஆகிய உயிரினங்களே!

நரேந்திரர் என்றைக்குமே அதிகாரம் செய்யும் தலைவனாகவே இருக்க விரும்பினார். தம்மை ஒரு குதிரை வண்டிக்காரனாக் கற்பனை செய்துகொண்டு கற்பனைச் சாட்டையைச் சொடுக்கி வீசி கற்பனைக் குதிரைகளை விரட்டுவார். அவருக்குப் பிடித்தமான விளையாட்டு ராஜா - மந்திரி விளையாட்டுதான். விளையாடும்போது இவர் எப்போதுமே ராஜாவாகத் தான் இருப்பார். சக தோழர்கள் அனைவருமே எப்போதும் மந்திரிகள்தான்.

நரேந்திரருக்கு பிரமிப்பூட்டும் வகையில் நினைவாற்றல் அமைந்திருந்தது. விளையாட்டப் பிள்ளையாக இருந்த காலத்தில் சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றிருந்த உறவினரான முதியவர் ஒருவர் இருந்தார் அவர் மடியில் அமர்ந்தவாறே மற்றவர்களிடம் அவர் உரையாடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கேள்வி ஞானமாகவே சமஸ்கிருத மொழி இலக்கணத்தை மனப்பாடம் செய்துவிட்டார்.

பள்ளியில் வகுப்பறையில் மட்டுமே ஆசிரியர் போதிப்பதைக் கவனிப்பார். வீட்டில் பாட புத்தகங்களைப் புரட்டிக்கூட பார்க்கமாட்டர். தேர்வுக் காலத்தில் தேர்வுக்கென தனியாகப் படிக்கும் வழக்கம் அவரிடம் இல்லை. ஆனால் தேர்வு முடிவு வெளிவந்த பிறகு அவர் முதல் மாணவனாகத் தேறியிருப்பது தெரியும்.

நரேந்திரர் எஃப்.ஏ. (F.A.) வகுப்பு படிக்கும் போது இந்திய வரலாறு அவருக்குப் பாடமாக இருந்தது. வகுப்புப் பாட நூல் என்ற எல்லையைக் கடந்து பாரத தேசத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதை மிகவும் அக்கறையுடன் படித்தார். அத்துடன் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த தர்க்க சாஸ்திர நூல்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தார். பி..ஏ. (B.A.) வகுப்பு படிக்கும் போது இங்கிலாந்து நாட்டு வரலாற்றையும், மற்ற மேலைநாட்ட வரலாறுகளையும் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. வெறும் பள்ளிப் பாட நூல்கள் என்றில்லாமல் உலக நாடுகள், உலக மக்களின் வாழ்க்கை ஆகியவை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் ஆர்வத்தடன் அந்த நூல்களைப் பயின்றார்.

இவ்வாறு பள்ளிப் படிப்பு காலத்திலேயே உலக நாடுகள் - மக்கள் பற்றி சரியாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால்தான் பிற்காலத்தில் அவர் ஆன்மீக வழியில் இறங்கிச் செயல்பட்டபோது தேச பக்தியும், தெய்வ பக்தியும் அவரது லட்சிய நோக்குடன் இணைந்து நின்றன. தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்தாலும் அன்னியர்களால் பல வகையிலும் சுரண்டப்பட்டு வறுமையுற்றுக் கிடந்தாலும் ஆன்மீக வல்லமையில் பாரதத்துக்கு இணையாக உலக நாடுகள் எதுவுமே இல்லை என்பதை அவர் உணர்ந்தார். பின்னாளில் பாரத தேசத்தின் ஆன்மீக வளத்தை உலகறியச் செய்து பாரதத்தை தலைநிமிரச் செய்த அரும் சாதனை பள்ளிக் கல்வி காலத்தில் அவர் பெற்ற உலகியல் அறிவுதான் அடிப்படையாக இருந்து உதவியது என்று கூறவேண்டும்.

மனவலிமைக்கு உடல் திண்மையும், உடல் உறுதியும் அவசியம் என்பதை நரேந்திரர் உணர்ந்திருந்தார். அதனால் தீவிரமாக உடற்பயிற்சியை இளமைப் பருவத்தில் முக்கியமான கடமையெனக் கைக்கொண்டிருந்தார். சிலம்பம், வாள் பயிற்சி, மல்யுத்தம் ஆகிய போர்க் கலைகளில் அவர் நல்ல பயற்சியும். தேர்ச்சியும் பெற்றிருந்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:50 am

அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்

சுவாமி விவேகானந்தர் பாரத தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து மக்கள் மத்தியில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பணஉதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.

சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?

சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.

சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் விளங்கிக் கொண்டார்.

மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.

பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.

மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என விளித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.

சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 2:51 am


சுவாமி விவேகானந்தர் தமது சொற்பொழிவைத் தொடர்ந்தார்.


.. .. .. .. உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.

அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.

பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.

சென்னை நகரத்தில்தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும்வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.

தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீரவு காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.


சுவாமி விவேகானந்தரைச் சரண் அடைந்து கதி மோட்சம் பெறுவோமாக.


ஈகரை தமிழ் களஞ்சியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக