புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_m10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_m10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_m10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_m10சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 11, 2011 10:15 pm

மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் என இத்தாவரம் பெயர் பெற்றுள்ளது. இதன் இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இந்தியா முழுவதும் வீட்டின் வேலிகளின் ஓரங்களில் பற்றி படர்ந்திருக்கும் இந்த கொடி குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் நன்கு செழித்து வளரும்.

“சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”

என்று சங்க இலக்கத்தியத்தில் முடக்கற்றானைப்பற்றி கூறப்பட்டுள்ளது.

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடும் என்று இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்

முடக்கற்றான் இலையில் அதிக அளவு ஈரப்பதமும் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவு சத்து, தாது சத்து, சக்தி கலோரி முதலியவை அடங்கியுள்ளன.

சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் 11mudakkatran3300

சுகப்பிரசவம் ஏற்பட

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. இன்றைய சூழலில் சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாகி வருகிறது. சிசேரியன் மூலம் மகப்பேறு மருத்துவ மனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்டது. பண்டைய காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையை பயன்படுத்தியுள்ளனர். இதன் இலையை நன்கு அரைத்து பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ ஏற்படாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டிகளும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.

முடக்குவாத பிரச்சினை

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நாள் பட்ட மூட்டு வழிகளுக்கும் விடிவு ஏற்படும். இதன் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது போன்றவை நீங்கும்.

பாரிச வாயு நீங்கும்

மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் ’பாரிச வாயு’ எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும். இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

மூலநோய் குணமடையும்

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கல் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

முடி உதிர்வதை தடுக்கும்

வாரம் ஒரு முறை முடக்கற்றான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்; முடி கொட்டுவதும் நின்று விடும்; இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .அதிகப் பணச்செலவில்லாத வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்;

- தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 11, 2011 10:29 pm

என் அம்மா அடிக்கடி முடக்கதன் தோசை செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும்,
சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு
சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு
கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாத‌ர‌ண‌த்
தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால்,
க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.

நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 11, 2011 10:37 pm

கே. பாலா wrote:என் அம்மா அடிக்கடி முடக்கதன் தோசை செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும்,
சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு
சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு
கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாத‌ர‌ண‌த்
தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால்,
க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.

நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.





நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் .. நான் முன்னோர்கள் எதையுமே ஒரு காரணமாகத்தான் செய்துயிருக்கிறார்கள் .. அவர்களுக்கு இது மூலிகை என்று முன்னாடியே தெரிந்துயிருக்கிறது .

பாஸ்ட் பூட் கலாச்சாரத்தல் இளைய தலைமுறையினர் இந்த மாதிரி உணவை தவிர்த்துவீட்டார்கள் ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 11, 2011 11:08 pm

உண்மைதான் பாலாஜி. முன் தலைமுறையினரிடம் இருந்த உடல் வலு இப்போது இல்லை.

நாக்கின் சுவைக்கு அடிமையாகி , ஆரோக்கியத்தை பறிகொடுத்து விட்டோம் என்பதுதான் உண்மை
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 11, 2011 11:37 pm

கே. பாலா wrote:உண்மைதான் பாலாஜி. முன் தலைமுறையினரிடம் இருந்த உடல் வலு இப்போது இல்லை.

நாக்கின் சுவைக்கு அடிமையாகி , ஆரோக்கியத்தை பறிகொடுத்து விட்டோம் என்பதுதான் உண்மை

உண்மைதான் நாம் உண்ணும் உணவில் கூட கலப்படம் , மற்றும் விஷதன்மை உள்ளது .

ஆப்ப்லில் கூட புற்றுநோய் உருவாக்கும் மெழுகு தடவுகின்றனர் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 12, 2011 1:05 am

நானும் சாப்பிட்டு இருக்கிறேன்..
ஆனால்
தற்போது நகரங்களில் முடகத்தான் கீரை கிடைப்பதில்லை..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 12, 2011 1:30 am

அரியத் தகவல். நன்றி ஜி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 12, 2011 9:20 am

மகா பிரபு wrote:அரியத் தகவல். நன்றி ஜி.

நன்றி பிரபு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக