புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
29 Posts - 34%
prajai
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
3 Posts - 4%
Jenila
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
1 Post - 1%
jairam
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
7 Posts - 5%
prajai
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
6 Posts - 4%
Jenila
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
4 Posts - 3%
Rutu
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
2 Posts - 1%
viyasan
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_m10பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 1:26 am

புனித பைபிளின் பழைய ஏற்பாடு. அதுலே ஓர் அழகான காட்சி.

தேவாதிதேவன் சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிறார். வானவர்கள்லாம் அவர் முன்னாடி நின்னுக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு நடுவிலே சாத்தானும் வந்து நிக்கிறான்.

இறைவன் சாத்தானைப் பார்த்து சொல்றார் :

"நம்முடைய ஊழியனாகிய யோபுவைக் கவனிச்சியா? மாசற்றவன் - நேர்மையுள்ளவன் - கடவுளுக்கு அஞ்சி நடக்கறவன் - தீமையை விலக்கி நடக்கறவன் - அவனை மாதிரி வேறே யாரும் உலகத்திலே கிடையாது!" அப்படிங்கறார்.

"அவன் என்ன ஆதாயமில்லாமலா உங்களுக்குப் பயந்து நடக்கிறான். அவனையும் - அவன் வீட்டையும் - அவன் உடைமைகளையும் நீங்க காப்பாத்தறீங்க... அவன் என்ன செய்தாலும் அதை நீங்க ஆசீர்வதிக்கிறீங்க. அவனுடைய உடைமைகளை உங்க கையாலே தொட்டுப் பாருங்க... அப்ப அவன் உங்களை, முகத்துக்கு நேரா பழிக்கிறானா இல்லையா பாருங்க!" - அப்படின்னான் சாத்தான்.

இந்த யோபுங்கறவர் யார்ன்னா ஊன் நாட்டைச் சேர்ந்தவர். மாசில்லாதவர். அவருக்கு 7 புதல்வர்கள்... 3 புதல்விகள்... அவருக்குச் சொந்தமாக இருந்தது 7000 ஆடுகள்... 3000 ஒட்டகங்கள்... 500 ஏர்மாடுகள்... 500 கழுதைகள்... அவர்கிட்டே ஏகப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க.

கடவுள்கிட்டே எதிர்வாதம் பண்ணின சாத்தான் நேரா இந்த 'யோபு'கிட்டே வந்தான். அவன் வந்த நேரம் இவர் வீட்டுலே விருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். அப்போ ஒரு ஊழியன் அவசரமா ஓடி வந்து அவர்கிட்டே சொல்றான்:

"ஐயா... நம்ம எருதுகளையும் கழுதைகளையும் சபேயர் வந்து ஓட்டிக்கிட்டுப் போயிட்டாங்க..."ங்கறான். இவன் சொல்லி முடிக்கறதுக்குள்ளே இன்னொருத்தன் ஓடிவந்தான். "ஐயா கடவுளின் நெருப்பு வானத்துலேயிருந்து விழுந்து நம்மகிட்டே இருந்த ஆடுகளையும் - வேலைக்காரங்களையும் எரிச்சுட்டுது...ங்கறான். இதுக்குள்ளே இன்னொருத்தன் ஓடிவந்து...

"ஐயா 'கல்தேயர்' கூட்டமா வந்து நம்ம ஒட்டகங்களை ஓட்டிக்கிட்டுப் போயிட்டாங்க..." - அப்படிங்கறான். இன்னொருத்தன் வந்து,

"ஐயா... உங்க பிள்ளைகளும் பெண்ணுங்களும் உங்க பெரிய அண்ணன் வீட்டுலே இருந்த சமயம் சூறாவளிக்காற்று வந்து... வீடு இடிஞ்சி... அவங்க எல்லாரும் இறந்துட்டாங்க!" -ங்கறான்.

இவ்வளவும் கேட்டதும் அப்புறமும் 'யோபு' சொல்றார்...

"நிர்வாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிர்வாணியாகவே திரும்பிப் போவேன். ஆண்டவர் அளித்தார்.... ஆண்டவர் எடுத்துக் கொண்டார்... அவரது திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக!" அப்படின்னார்.

இதுலே ஒரு விஷயம் பாருங்க... அவருக்கு இந்த அளவுக்குக் கஷ்டம் வந்த பிறகும் கடவுளை குறை சொல்லலே!

கடவுள் சாத்தானைப் பார்த்து சொன்னான்:

"பார்த்தியா... இன்னமும் அவன் குற்றமற்றவனாகவே நிலைச்சிருக்கிறான்!" அப்படின்னார்.

சாத்தான் பார்த்தான்: "அப்படி இல்லே... உடைமைகள்தானே போச்சு... உயிர் ரொம்பப் பெரிசு... நீங்க உங்க கையை ஓங்கி அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்க... அந்த வினாடியே அவன் உங்களை பழித்துப் பேசுவான்!" - அப்படின்னு சவால் விட்டான்.

"இதோ அவன் உன் கையில் இருக்கிறான். அவன் உயிரை மட்டும் நீ விட்டுடு!" -ன்னார்.

சாத்தான் உடனே புறப்பட்டு போனான். யோபுவின் உச்சந்தலையிலேயிருந்து உள்ளங்கால் வரைக்கும் புண்களை உண்டாக்கிபுட்டான்.

'யோபு ஒரு குப்பை மேட்டுலே உக்கார்ந்துகிட்டு ஒரு ஓடு எடுத்து உடம்பு பூரா சுரண்டிக்கிட்டிருக்கிறார். இந்த அலங்கோல நிலையை அவர் மனைவி பார்க்கறாங்க...

"இன்னமும் உங்க மாசற்ற தன்மையிலே நிலைச்சிருக்கப் போறீங்களா? பேசாமே கடவுளை பழிச்சிப் பேசிவிட்டு செத்துப் போயிடலாமே!" - அப்படிங்கறாங்க. இப்பவும் 'யோபு' சொல்றார்:

"என்ன இப்படி பேசறே! நாம் கடவுளின் கையிலிருந்து நன்மையைப் பெறலாம்...! தீமையை மட்டும் பெறக்கூடாதா?" அப்படின்னார்.

சாத்தான் தலைகுனிஞ்சான். இறைவன் யோபுவைப் பார்த்தார்.... இழந்தது பூராவையும் திரும்பக் கொடுத்தார். ஆசீர்வதித்தார். 'பற்றுக பற்றற்றான் பற்றினை...'ன்னு சொல்றாங்கள்ளே... அதை அப்படியே கடைபிடிப்பவர் 'யோபு'!

தென்கச்சி கோ. சுவாமிநாதன்



பற்றுக... பற்றிலானை! - தென்கச்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக